குற்றமும், குறையும்
ரா.பார்த்தசாரதி
குற்றம் சொல்லவும், குறைகளை பேசவும் முற்றம் தேவையில்லை
வென்றவனை கண்டால் அதிர்ஷ்டம் என்று அலட்டிக் கொள்வர்
தோற்றவனை கண்டால் இது தேவைதானா என எகத்தாளம் பேசுவர்
உள்ளவனை கண்டால் கொள்ளை அடித்த பணம் என குற்றம் சொல்வர்
குற்றம் சொல்பவன் என்றும் தன்குறையினை நினைக்க மாட்டார்
கட்டின வீட்டிற்கு நம் முன்னே குறை சொல்பபவர்கள் இருப்பர்
வென்றவனை கண்டால் அதிர்ஷ்டம் என்று அலட்டிக் கொள்வர்
இல்லாதவனை கண்டால் பிழைக்கத் தெரியாதவன் எனக் கூறுவர் !
தப்பு செய்தவன் தண்டனை பெற்றால், சட்டம் சரியில்லை என்பர்
தப்பு செய்யாதவன் தண்டனை பெற்றால் சரியான நீதி என்பர்
பிழைப்பு தேடி பிற நாட்டிற்கு சென்றால் பேராசைக்காரன் என்பர்
உழைப்பைத் தேடி உள் நாட்டில் உலாவினால் ஊர் சுற்றி என்பர் !
ஊருக்கு உதவினால், ஊர் கழுதை என்று பட்டம் சூட்டுவர்
சும்மா இருந்தால் சோம்பேறி என்று முத்திரை குத்துவர்
பிறர் குறை காண்பவன், தன் குற்றம்,குறைகளை உணர மாட்டார்
இறைவனே புலவன் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தார் என்பர் !
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என யாவரும் நினைப்பதில்லை
குற்றம் கடிதலை பற்றி வள்ளுவன் கூறுவதை செவிசாய்ப்பதில்லை
இறுமாப்பு, சீற்றம், இழிந்தகுணம் இவை குற்றத்தின் தூண்டிலாகும்
குற்றங்களுக்கு அஞ்சி நடப்பவன் மனமே மாணிக்க கோவிலாகும் !