ரா.பார்த்தசாரதி

 

நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !

நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !

இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !

இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

 

தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !

உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்ததே !

பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !

மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றதே  !

 

என்று உன்னை ஸ்கைப்பிளும்,  ஹாங் ஹௌட்டில் காண்பேனோ

உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,

ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !

நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,

என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,

உனது  ஈமெயில், ஸ்கைப்பும்,ஹாங் ஹௌட்டிலும்

என்  உ டலைக் காட்டும்மா !

நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,

பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *