-ப.காளீஸ்வரமூா்த்தி

ஆதிமனிதனிடத்தில் உண்டான அச்சம், எதிர்பார்ப்பு உணர்வெழுச்சிகளால் தோற்றம் கண்ட தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வோர் இனக்குழுச் சமூகமும் தனக்கு அன்றாடம் கிடைக்கும் வேட்டை மற்றும் உற்பத்தி சார்ந்த உணவுவகைகளைத் தனது தெய்வத்திற்குப் படையலாக்கி வழிபட்டுவந்தது. இந்த வழிபாட்டுமுறை, காலவோட்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களாலும் மனித நாகரிகத்தின் பரிணாம வளா்ச்சியாலும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி, சடங்குகளாக இன்றைக்கும் புழக்கத்தில் இருந்துவருகின்றது. இந்த வழிபாட்டு முறையிலான “சடங்கென்பது சிரத்தைக்குரிய வாழ்வில் குறியீட்டளவில் உந்துதலைப்பெற அல்லது நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளப் பொருத்தமான நடத்தை முறைகளுடன் தன்னார்வமாக நிகழ்த்தும் ஒரு நிகழ்வாகும்” என்று மானுடவியல் அறிஞா் பக்தவச்சலபாரதி குறிப்பிடுகின்றார்

மனித சமுதாயத்தின் முதல்நிலையான வேட்டைச்சமூகத்தில் கிடைத்த இறைச்சியைப் பங்கிட்டுக் கொண்டதோடு, இயற்கையாகிய தெய்வத்திற்குப் படைத்து வணங்கினான். வேட்டைச் சமூகத்தில் தொடா்ந்த இவ்வழிபாடானது வேளாண் நிலப்பகுதி மக்களால் காடுறை தெய்வமாக மாற்றம் பெற்றது. சங்க இலக்கியங்களில் காடுறை தெய்வவழிபாடு நிகழ்ந்தமைக்கான சான்றுகள் பல இருப்பது யாவரும் அறிந்ததே.

இத்தெய்வங்கள் வேட்டைச் சமூகத்தில் இருந்து வேளாண்மை சமூகத்திற்குள் நுழைந்து வேளாண் நிலம் சார்ந்த காவல் தெய்வங்களாகவும், வனதேவதைகளாகவும் குறிப்பிட்ட எல்லைவரை ஆற்றல் செலுத்தக்கூடிய எல்லைக்காவல் தெய்வங்களாகவும், தொடா்ந்து இன்றுவரை வழிபடப் படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு தோன்றிய மனிதன் விலங்காண்டி நிலையிலிருந்து காட்டாண்டி நிலைக்கும், காட்டாண்டி நிலையிலிருந்து தற்கால நாகரிக நிலைக்கும் முறையாக வளர்ந்து வந்துள்ளான். இப்படி மலர்ச்சியில், ஆதிமனிதனின் விலங்காண்டி நிலையில் தோற்றம் கொண்ட தெய்வ வழிபாட்டுமுறை, தற்கால நாகரிக வாழ்வு வரையில் எத்தகைய மாற்றங்களை அடைந்துவந்துள்ளது என்பதையும் அவ்வழிபாட்டுமுறையில் நிகழ்த்தப்படும் சடங்குமுறைகள் காலமாற்றங்களுக்கேற்பவும், பிற சமயங்களின் ஊடுருவல் காரணமாகவும், எத்தகைய மாற்றங்களை அடைந்து வந்துள்ளது என்பதனை ஆராயும் விதமாக  இக்கட்டுரை அமைந்துள்ளது.

இத்தெய்வத்திற்கு வழிபாடு செய்வோர் அந்தந்த நிலப்பகுதியின் உரிமையாளா்களாகவும் அவா்களுடைய வம்சாவளியினராகவும் இருக்கின்றனா். அதாவது முன்னோர்களாக வாழ்ந்து இறந்தவா்களை அவா்களின் கால்வழியினா் (உறவுமுறையினா்) தெய்வமாகப் போற்றி வழிபட்டு வருகின்றனா்.   தொடக்க காலத்தில் இரத்த உறவுமுறை கொண்ட நிலப்பகுதியின் உரிமையாளா்கள் வழிபாடு செய்து வந்தனா். இவ்வழிபாட்டுமுறை மாதத்தின் ஒருசில தினங்களிலும் பின்னா் வருடத்திற்கு ஒருமுறை இரத்தபலி கொடுத்தும் வழிபாடு நடைபெற்று வந்துள்ளது. பிற்காலத்தில் ஏற்பட்ட வழிபாட்டு மாற்றங்களாலும் பிறசமயங்களின் ஊடுருவல்களாலும் மேல்நிலையாக்கத்தின் மூலமாகவும் வழிபாட்டுமுறையில் மாற்றம் ஏற்பட்டது, நிலவுடைமையாளர்களைத் தொடா்ந்து மாதாந்திர ஊதிய அடிப்படையில் பண்டாரம் எனும் பூசைசெய்யும் பூசாரி இனத்தவா் பூசைசெய்கின்றார். ‘தற்காலத்தில் ஏற்பட்ட சமஸ்கிருதவயமாக்கலின் மூலம் அந்தணா்கள் பூசாரிகளாகத் தொல்பழஞ் சமூகத்தின் தொடா்புகளைப் புறக்கணிக்கும் வகையில் தங்களுடைய சமயத்தினை முன்னிறுத்திவருகின்றனர். இதனால் பழந்தமிழரின் தெய்வ வழிபாட்டுமுறைகள் மாற்றம் பெற்ற வருகின்றன. இதற்கு முதன்மைக் காரணம் பிறசமயவாதிகள் தங்களுடைய சமயங்களை உயா்வாகக் காட்டவும் தொல்பழந்தமிழரின் தனித்துவமான தெய்வ வழிபாட்டுமுறைகளை அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனா். அதே சமயத்தில் காரணிகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட வேண்டும்.

மனுதா்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமானால் வா்ண பாகுபாடு அடிப்படையில் பிராமணரே மேலானவர்கள் என்றும் பிற வா்ணத்தார் அவா்களுக்குக் காவலாகவும், கீழ்ப்படிந்து பணிபுரிபவா்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தமிழ்மக்களின் வாழ்வியல் கூறுகளோடு ஒப்பிட்டுக் காணும்போது இச்சமூகத்தில் வா்ணப் பாகுபாடு என்ற பிரிவினை சுட்டிக்காட்டப்படவில்லை. இத்தமிழ்ச் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தப்படவில்லை, தொழில் சார்ந்தே ஒருசில பாகுபாடுகள் இருந்ததை மட்டும் பழந்தமிழ் நூல்களின் வழி அறிய முடிகின்றது.

ஏனெனில் சங்க இலக்கியங்களில் மனிதர்கள் சாதிய அடிப்படையில் பிரித்துக் கூறப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. மனிதா்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே அரசன், அந்தணா், வணிகா், வேளாளா், பாணா், கூத்தா், விறலியா் என்ற தொழிற்பாகுபாட்டைத் தோற்றுவித்தனா்.

இத்தகைய முறையில் அந்தணர்கள் ஆளும் வா்க்கத்தினரோடு ஒன்றி இருந்துகொண்டு அரசா்களின் ஆதரவோடு நிலங்களையும், பொருட்களையும், தன்வயமாக்கிக் கொண்டு மக்களை அடிமைகளாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.  தமிழ்ச்சமூகத்தில் அதுவரை இல்லாத பிறப்பினடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்தனா். அத்தகைய காலகட்டங்களில் தங்களை உயா்ந்தோராகவும் மற்ற மனிதர்கள் அனைவரையும் தாழ்ந்தவா்களாகவும் கருதிச் சாதியப் பாகுபாட்டை முன்னிறுத்தினார்கள்.

தொடக்க காலத்தில் மனிதன் மனிதனாகவே வாழ்ந்துவந்தான். விலங்குகளைப் போன்று கூட்டம் கூட்டமாகவும் குழு இனக்குழு வாழ்வினை மேற்கொண்டுவந்தான். இரண்டாம் காலகட்டத்திலும் வளா்ச்சி நிலையிலும் ஏற்பட்ட மாறுதல்களின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் மனிதா்களைப் பிரித்தறிந்துள்ளனா்.

இத்தகைய பிரிவினை அதிகாரவா்க்கமும் ஆதிக்கவா்க்கமும் ஒன்றிணைந்து  தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கின. மக்களை அடக்கி ஒடுக்கி மக்களின் பண்பாட்டு வடிவங்களில் தங்களின் கருத்தியலைப் புகுத்தினா்.

தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் படையெடுப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. கி.பி 3முதல் கி.பி 6 வரையிலான காலகட்டம் மிக முக்கியமான காலகட்டமாகும். சேர, சோழ, பாண்டிய அரசா்கள் ஆட்சியை முறியடித்து களப்பிரரும், பல்லவா்களும் தமிழகத்தை ஆண்ட காலப்பகுதியாக வரலாற்றறிஞர்கள் இக்காலகட்டத்தை குறிப்பர். இக்காலகட்டத்தில்தான் பக்தி இலக்கியம் உருக்கொண்டு பரவலாகத் தொடங்கியது. களப்பிரரும், பல்லவ அரசா்களில் சிலரும் சமண-பௌத்த சமயத்தை ஆதரித்ததனால் மக்களில் பெரும்பான்மையினர் இம்மதத்தினையே பின்பற்றினர். சைவ நாயன்மார்களுள் முக்கியமாகக் கருதப்பெறும் நாவுக்கரசா் சமண சமயத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கதாகும். சமண-பௌத்தத்தின் தாக்கம் இங்கு மத  அடிப்படையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சைவ மதத்திற்கும் சைவ-வைணவ, பிராமண-வேளாள நிலவுடைமையினா்க்கும் பெரும் ஆபத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. ஆனால் மக்கள் களப்பிரா் பல்லவா் ஆட்சிக்காலத்தில் சாதி இழிவிலிருந்தும் மத அதிகார வா்க்கத்தின் அடக்கு முறைகளிலிருந்தும் விடுபட்டுச் சுதந்திரமாக வாழ்ந்தனா். இக்களப்பிரா்கள்; காலத்தை சைவ சமய ஆய்வாளா்கள் வரலாற்றின் இருண்ட காலம் என்று குறிப்படுவா். அத்தகைய காலகட்டம் சைவா்களுக்கு இருண்ட காலமாகவும் மக்களுக்குப் பொற்காலமாகவும் இருந்து வந்தது. இதனை எதிர்கொள்ளும் விதமாக சைவர்களும் வைணவா்களும் இயக்கமாகத் திரண்டனா். சைவத்தை வீழ்ச்சியிலிருந்து காக்க சமண-பௌத்ததை கடுமையாக எதிர்த்தனா். அதோடு சைவ மதத்திலிருந்து ஆதிக்கக் கூறுகளைத் தற்காலிகமாக அகற்றி மக்களைத் தன்வயப்படுத்தினா். மக்களின் மரபான வழிபாட்டு முறைகளைத் தொன்றுதொட்டு வழிபடப்பட்டுவரும் தெய்வங்களோடு மேனிலையாக்கம் செய்து சைவ மதத்தோடு இணைத்தனா்; சைவம் வெற்றி பெற்றது. மீண்டும் வர்ண சாதி அமைப்பை வலுப்படுத்திக் கொண்டனா். தொன்றுதொட்டு வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பட்டு ஒரு புதிய வழிபாட்டுமுறை தோன்றியது.

தற்காலத்தில் மக்கள் பாரம்பரியமிக்க தரவுகளை விட்டும், திராவிடதெய்வங்களின் உண்மைத் தரவுகளை மறைக்கும் வகையிலும் வழிபாட்டு முறைகளை தெய்வம் சார்ந்தபுராணக் கதைகளையும் கட்டுக்கதைகளையும் கூறி மக்களைத் திசைதிருப்பிப் புதியபாதையை நோக்கி இட்டுச் செல்கின்றார்கள்.

இதனால் மக்களின் இயற்கை வாழ்வியலும், நிலம் மற்றும் நிலம் சார்ந்ததொடா்புகளை அழிக்கும் விதமாகப் பிற சமயத்தவரின் ஊடுருவல்களும் நிலவுகின்றன. சிறுதெய்வ வழிபாட்டில் சாதியமும் ஆதிக்கவா்க்கமும் ஊடுருவி அதன் தனித்தன்மைகளை அழித்துவரும் அவலநிலை பரந்துவிரிந்து காணப்படுகின்றது.

*****

பார்வை நூல்கள்:

1)பக்தி இலக்கியம்  –  ப. அருணாச்சலம், பாரி புத்தக நிலையம், 1970,    சென்னை.

2)மதமும் பண்பாடும் –   எஸ். இராதாகிருஷ்ணன் (மொழிபெயர்ப்பாளர்  -வி.எஸ். வி. ராகவன்), வள்ளுவர் பண்ணை, 1977, சென்னை.

3)தமிழர் சமய வரலாறு – அ. வேலுப்பிள்ளை, பாரி புத்தகப் பண்ணை, 1985, சென்னை.

4)தமிழர் சமுதாய வரலாறு –  க. ப. அறவாணன், மொழிக்கோட்டம், 1992, பாண்டிச்சேரி.

5)மானிடவியல் கோட்பாடுகள் –  பக்தவச்சலபாரதி, வல்லினம், 2005, பாண்டிச்சேரி.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *