Tag: ரா. பார்த்தசாரதி

  • காதல் என்றால். . . ?!

    -ரா.பார்த்தசாரதி

    கண்ணும் கண்ணும்  கலப்பதா
    இருமனங்கள்  ஒன்றாவதா!

    இரு இதயங்கள் ஒன்றோடுஒன்று இணைவதா
    காதலித்த பெண்ணை நெஞ்சுக்குள் நினைப்பதா!

    அன்பையும் நெஞ்சத்தையும் அள்ளித் தருவதா
    நீரோட்டம் போல் இருவரிடையே  ஓடி வருவதா! 

    இரு உள்ளங்கள் ஒன்றோடுஒன்று  பந்தாடுவதா
    இருவர் நெஞ்சில் அழகாய்ப் பூப்பதா, சுமையாய்த் தாக்குவதா!

    கண்கள் பேசாமல்   ஒன்றோடுஒன்று  பேசுவதா
    வார்த்தைகள்  மௌனமாய் நிலைத்து  நிற்பதா!

    நிலவையும் மலரையும்  பாடச்  சொன்னேன்
    அதில் என் காதலியை நடமாடச்  செய்தேன் !

    காதலர்களின்  நினைவிற்கும், ஊக்கத்திற்கும்  ஒரு தினம்
    அதுவே  உலகெங்கும் கொண்டாடும் காதலர் தினம் !

     

    Share
  • எண்ணமும், சிந்தனையும்!

    -ரா.பார்த்தசாரதி 

    எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
    வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
    நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
    எழும்பியடங்கும்  அலைகளே உணர்த்தும்!

    மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
    இலைகளே அதன் பசுமையே  நமக்கு உணர்த்தும்!
    நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
    வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

    சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
    நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
    நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
    தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

    நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
    துணிந்தபின்  மனமும்  எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
    துயரமடைந்த  எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
    அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!  

    நமக்குள் தோன்றும்  எண்ணங்கள் ஆயிரம்  இருந்தாலும்
    நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
    தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம்  மிக்கவை நம் எண்ணங்கள்!
    நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !

    Share
  • புத்தாண்டே வருக 2015!

    -ரா. பார்த்தசாரதி

    puththandu

     

     

     

     

     

     

     

     

     

    கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான்
    புலரும் புத்தாண்டாய்ப் புதிதாய் உருவமெடுத்தான்!

    நதியால் இணைந்த  மாநில மக்கள்
    அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே!

    எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
    மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் புத்தாண்டே!

    சுயநலங்கள்  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல்
    அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே!

    தீவிரவாதம் ஒடுங்கிப்போகாதோ புத்தாண்டே
    வேற்றுமையில் ஒற்றுமை ஓங்காதோ புத்தாண்டே !

    நாட்டுக்கு நாடு மாநிலத்திற்கு மாநிலம்  சமாதானம்  மட்டும்
    தானமாய்க் கிடைக்காதோ புத்தாண்டே !

    ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
    ஏக்கத்தைத்  தீர்க்காதோ  புத்தாண்டே !

    பூமியெங்கும் அமைதி மட்டும்
    ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே!

     

    Share
  • மனிதனின் தேடல்!

    -ரா.பார்த்தசாரதி 

    தேடல் என்பது சுவாசம் போன்றது,
    ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும்
    ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்…
    கருத்தரித்த பெண்ணிற்குப் பிள்ளையின்
    முகம் தேடல்
    தந்தைக்கோ பணம் தேடல்
    பிறக்கும் வரை உலகம் தேடல்
    பிறந்த பிறகு உணவு தேடல்
    வளரும் வரைப் படிப்பு தேடல்
    வளர்ந்த பின்பு பட்ட பாடம்தான் தேடல்
    காதல் இல்லாதவனுக்குக் காதலி தேடல்
    காதல் வந்தவனுக்குக் கல்யாணம்  தேடல்
    பிறக்கும் போது அலுத்துக் கொண்டே  பிறந்த நாம்
    இறந்த பிறகு மற்றவர்க்கு அந்த அழுகையைக் கொடுத்துச் செல்கிறோம்…

    ஒரு மனிதன்
    இருக்கும் வரை அன்பைத் தேடுகிறான்…
    இறக்கும் வரை அரவணைப்பைத் தேடுகிறான்…
    இவ்விரண்டும் இல்லாதவன் அனாதையாகிறான்!

     

    Share
  • குழந்தைகள் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    குழந்தைகளை  வரமாகவும், குல விளக்காகவும் கொண்டாடும் நம் நாடு
    பெண் சிசுவை இரக்கமின்றிக் கொல்வதும் நம் நாடு
    பெண் குழந்தைகளைச் சுமையாக நினைப்பதும் நம் நாடு  Childrens
    காலப்போக்கில் இதனை மாற்றியதும்  நம் நாடு!

    ஆயிரம் கோடிச் சொத்துக்கள் இருந்தும் ஓர் வாரிசு இல்லையெனில்
    அச்சொத்துக்கள் யாரோ அனுபவிப்பர்
    இதனைக்கண்டு அவர்கள் சுற்றத்தார்களும் பரிதவிப்பர்
    இந்நிலைமை கண்டும் தத்து எடுக்கச் சிலர் தயங்குவர்!

    தத்து எடுப்பதில் என்றும்  தவறில்லை
    நன் முறையில் வளர்த்தால் கேடு இல்லை
    அனாதை  என்ற  சொல்லை  அகற்றிடுங்கள்
    அதுவே  உன் வாழ்க்கைக்கும்  வழிகாட்டி என உணருங்கள்! 

    குழந்தையும் தெய்வமும்  ஒன்று எனக்  கொண்டாடுகிறோம்
    பிரதமர் நேருவின்  பிறந்த நாளாகக் கொண்டாடுகிறோம் இந்நாட்டினிலே
    குழந்தைகளிடத்தில்   அவர் கொண்ட  அன்பினை  மறக்க முடியுமா?
    நம் நாட்டில் உள்ள  எல்லாக் குழந்தைகளும் அவரைப் போற்றிடுமே! 

    குழல் இனிது  யாழ் இனிது  என்ப தம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்  என்பது வள்ளுவன் வாக்கு
    குழந்தைச் செல்வம்  வாழ்க்கையின் இன்றியமையாத செல்வமே
    குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க இத்தினத்தில் சபதம் எடுப்போமே! 

     

    Share
  • தித்திக்கும் தீபாவளி!

    -ரா.பார்த்தசாரதி

    diwali

     

     

     

     

     

     

     

     

     

    மக்களுக்கு  மகிழ்ச்சியும் ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை
    எல்லோரும்  ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
    வாழ்த்துகளை நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளிப் பண்டிகை
    சந்தோஷமும் உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

    விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்துக் குளித்து
    மகிழ்வுடனே புத்தாடை உடுத்தி இனிப்பினைப் பகிர்ந்து
    பெரியவர்களிடம் வாழ்த்தும் நல்லாசியும் பெற்று
    ஊர் எங்கும்  ஒன்றாய்க் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

    நாட்டில் உள்ளவர்கள் பலவிதமாய்க் கொண்டாடும் தீபாவளி
    வடக்கே விளக்கு பூஜை எனக் கொண்டாடும் தீபாவளி
    இல்லத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி
    புன்சிரிப்புடன் மன நிறைவாய் வாழ்த்துப் பெறும் தீபாவளி !

    வெடியும் சரமும் மத்தாப்பும் கையில் ஏந்துவோமே
    வெடியின் சப்தமும் சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பினைக் காண்போமே!
    மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே
    சங்கு சக்கரம் புஸ்வாணப்  பூக்களின் சிதறலைக் கண்டு களிப்போமே!

    அசுரன்  நினைவாக நாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகின்றோம்
    மனித உருவில் உள்ள அசுரர்களை அழிக்க நாம் திட்டமிடுவோம்!
    பார்வையற்றவர்கள் விடுதிக்கும் முதியோர் இல்லத்திற்கும் செல்வோமே
    அவர்களுடன் இனிப்பினைப் பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!!

     

    Share
  • உலகத் தபால் தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    சிவப்பும் கருப்பும் நிறமுடைய பெட்டி
    உங்கள் கடிதங்களைத் தாங்கும் பெட்டி                                           Indian_Post_Box
    வேலையில்லாப் பட்டதாரிகள் எதிர்பார்க்கும் நண்பனாய் இருந்தேன்
    கல்லூரி மாணவனுக்கும் நான் ஒரு பாலமாய் இருந்தேன்

    காதலர்களுக்கு என்றும் ஒரு தூதுவனாய் இருந்தேன்
    நல்ல, கெட்ட  செய்திகளையும்   அறிவிப்பவனாய் இருந்தேன்
    சிறு சேமிப்புக்கு என்றும் துணையாய்  இருந்தேன்
    மழையிலும் வெயிலிலும் உங்கள் கடிதங்களைச் சுமந்து சென்றேன்

    காகிதம் மூலம் உங்கள்   கருத்துக்களை எடுத்துச் செல்பவன்
    பண்டிகை வந்தாலோ உங்கள் வாழ்த்துக்களை அனுப்பும் சேவகன்
    தந்திகளை ஒதுக்கிய நீங்கள் என்னை ஒதுக்கி விடாதீர்கள்!
    கணினி  வந்ததால் எங்களை நசுக்கிவிடாதீர்கள்!

    கணினி மூலம் கடிதங்களும் கருத்துக்களும்  பரிமாற்றமே
    கிராமத்திலும் நகரத்திலும் கணினியால் எங்களுக்கும் ஏற்றமே
    மக்கள்  எங்களை நண்பனாய், சேவகனாய்க் கருதுவதே நன்று
    எங்களை  உற்ற  சேவகனாய் நினையுங்கள் உலகத் தபால் தினத்தன்று!

     

    Share
  • காந்தி கல்லாகிவிட்டார்!

    -ரா. பார்த்தசாரதி

    உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன்   gandi
    நேர்மை எங்கே என்று எல்லோரிடத்திலும் கேட்பேன்
    எளிமை எங்கே எனத் தேடி அலைந்து கொண்டிருப்பேன்
    தூய்மை  எங்கே என மனம் குமுறித் துடித்துப்போவேன்

    சத்தியத்திற்கே ஒரு சத்தியசோதனையா என எண்ணிடுவேன்
    ’அகிம்சை’  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன்
    மனித நேயத்தை இந்நாட்டில் எங்கே என்று கேட்பேன்
    நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன்

    அன்று வெள்ளையரை வெளியேற்ற அமைதிப் போரைத் துவக்கினேன்
    இன்று மக்கள் தண்ணீருக்காகப் போராட்டத்தை நடத்துகிறார்களே
    எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே
    நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே

    நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின் விடுதலைக்காகவே
    இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே
    என்னைத் தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே
    என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே?

    என் மதிப்பு, என் தலை ரூபாய் நோட்டின் முகப்பிலே
    என் கொள்கைகள் எல்லாம் வீசப்படுகின்றதே தெருவிலே
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றேனே
    இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே!

     

    Share
  • நவராத்திரி

    ரா.பார்த்தசாரதி

    நங்கையருக்காகக்   கொண்டாடும்  ஒன்பதுநாள்   ராத்திரி
    பெண்களை  மதித்துக் கொண்டாடும் ராத்திரி,
    சிறு பெண்களையும், மற்ற பெண்களையும் போற்றும் ராத்திரி,
    பொம்மைகளை வைத்துக் கொண்டாடும் ராத்திரி!

    முதல் நாள் நவராத்திரி பூசை சிறுமியர்களுக்கே உரியதாம்,
    சுவாசினி எனும் மூத்த சுமங்கலிக்கும் உரியதாம்
    கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றின் தலைவிகளாம்
    கலைமகள், அலைமகள், மலைமகள் எனும் தெய்வங்களாம்!

    பெண்ணே  உலகில் சக்தியின்  வடிவமாகும்
    நாட்டையும், வீட்டையும், காக்கும் தெய்வமாகும்
    சக்திக்கு  இடப்பக்கம் அளித்தவர் அர்த்தனாரீஸ்வரராகும்
    பெண் தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடுவதே  நவராத்திரியாகும்!

    நவராத்திரி என்றாலே எல்லாப் பெண்டிருக்கும் ஓர் சுப ராத்திரி
    அலங்காரங்களும், பாட்டும், கேளிக்கையும் நிறைந்த ராத்திரி
    தொன்றுதொட்டுப் பெண்களுக்காகவே நடத்தப்படும் விழா
    பெண்மைக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்கட்டுமே இந்நவராத்திரி விழா!

    Share
  • உலக எழுத்தறிவு தினம்

    -ரா.பார்த்தசாரதி

    International-Literacy-Day1எண்ணும்  எழுத்தும்  கண்னெனத் தகும்
    எழுத்தறிவித்தவன்  இறைவன் ஆகும்
    கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
    கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!

    மனிதனாய்ப்  பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
    நாட்டில்  எழுத்தறிவுபெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
    பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்
    இதனைக் கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்!

    பின்தங்கிய  இனத்தவரும், பாட்டாளிகளும்  எழுத்தறிவு பெறவேண்டும்
    நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்
    அதற்கான ஊடகங்களைக் கிராமங்கள்தோறும் ஏற்பட்டுத்த வேண்டும்
    தாய்மொழியில் பயின்று கையொப்பம் இட அறியவேண்டும்!

    எழுத்தறிவினைப் புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்
    இரவு நேரப் பள்ளிகள் மூலம் முதியோர்க்கும் எழுத்தறிவிப்போம்
    எழுத்தறிவின்மையை  ஒழிக்க என்றும் நாம் பாடுபடுவோம் என
    நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில்!   

    (செப்டம்பர்  8-ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.)
     

     

    Share
  • ஆசிரியர் தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    teachers day

     

     

     

     

     

     

     

    மாதா, பிதா, குரு  
    மூவரும் கண்கண்ட தெய்வம்
    அன்பிற்கு அன்னை, அறிவுக்குத் தந்தை
    கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே!

    மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை
    இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே பெருமை
    மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி
    ஏணியாய் இருந்தவர்களுக்கு என்றும் ஆசிரியர் எனும் பதவியே!

    ஆசிரியர் பணி மகத்தான பணியன்றோ!
    அவர்களை நினைவுகொள்வது நமது கடமையன்றோ!
    ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே!
    அவர்தம் பிறந்தநாளே ஆசிரியர் தினமாக அறிமுகமானதே!

    அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை 
    அதிலும் தரமான கல்வியை அளிப்பதே நாட்டின் கடமை
    வாழ்க்கையில் கல்வி என்பது மனிதனின் இருகண்கள்
    கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதீர்கள்!   

    Share
  • சென்னையின் வயது 375!

    -ரா. பார்த்தசாரதி

    சென்னையின் வயது முன்னூற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் !
    இங்கே நாம் காணும் பல  வளர்ச்சிகள், காணப்படும்  அதிசயங்கள், கெட்டும்  பட்டிணம்  சேர்  என்ற  பழமையான  பழமொழிகள் பலதரப்பட்ட  மக்கள் வளர்ச்சி அடைந்ததற்கு எடுத்துகாட்டுக்கள் !

    சென்னைக்குத் தனிமொழி,
    நடிகர் ரஜனிக்கும் தனிவழி!
    தேன் மதுரத் தமிழ் எல்லா மொழியிலும்  இருப்பதுண்டு ,
    வாஞ்சைகொஞ்சும்  நெல்லைத் தமிழ்,
    மரியாதை மிளிரும் கொங்குத் தமிழ்,
    நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ், கலப்பு மிகுந்த சென்னைத் தமிழ்!

    சென்னைத் தமிழ் சற்றே வித்தியாசமாய் இருந்தாலும்
    பலதரப்பட்ட மொழியினரும், சமயத்தவர்களும் இருந்தாலும்,
    வேற்றுமையில் ஒற்றுமை இன்றும் இங்கே பரவி இருக்கின்றதே!

    பன்மொழிச் சொற்கள் கலப்பு, பல்வேறு இனம்,
    பலவிதக் கலாசாரத் தொடர்பு, இவையே சென்னையின் அடையாளம்!
    திரைப்படம் வாயிலாகச் சென்னைத் தமிழ் பல பகுதிகளில் பரிச்சயம்!
    இதுவே சென்னைத் தமிழ் உலாவிவரும் அதிசயம் !

    புராதனக் கோவில்கள், கலங்கரை விளக்கங்கள் !
    பழமை மிகுந்த மாளிகைகள்,  துறைமுகங்கள் !
    கன்னித் தமிழ் மாறா நூலகங்கள், உருவச்சிலைகள் !
    பாலங்கள், சிறந்த கடற்கரைகளும் காணப்படுகின்றதே!

    பல பிரபலங்களைச் சென்னை தன்னகத்தே கொண்டதே !
    கனகசபைப் பிள்ளை, பிரகாசம் பந்துலு, முத்துஸ்வாமி தீட்சதர்,
    கணிதமேதை ராமனுஜம், பாலசரஸ்வதி, மற்றும்
    இந்தியாவில் முதல் மருத்துவப் பட்டம் பெற்ற முத்துலட்சுமி ரெட்டி ! 

    நிறை பற்றிப் பேசினாலும் குறையில்லா நகரம்இல்லை !
    குப்பைக் கிடங்காய்க் கூவம் ஆற்றைச் சுத்தபடுத்த முடியவில்லை!
    புராதனக் கட்டிடங்கள் பல பராமரிக்கப்படவில்லை!
    சாலைகளும், போக்குவரத்தும் முறைப்படுத்தவில்லை !

    பாலங்கள் அதிகமானாலும், ஆங்காங்கே பள்ளங்கள் அதிகம்!
    உயரிய கட்டிடங்கள் அதிகமானாலும் உண்மைத்தரம் இல்லை !
    தொழிற்சாலைகள் வளர்ந்தாலும், தொழிலாளர்களின் நலன் இல்லை !
    அரசிடமும், அரசியல்வாதிகளிடமும்,
    லஞ்சம் தலைதூக்காமல் இல்லை !

    சென்னையில் கேளிக்கைப் பூங்காக்களும், மலர்ப் பூங்காக்களும் உள்ளதே!
    என்றும் இதை அமைதிப்பூங்காவாக ஆக்குவது நமது கடமையே !
    சென்னைவாசிகள் மனம்வைத்தால் இவைகள் என்றும் சாத்தியமே !
    நற்செயலால் நமது நகரத்தைச் சொர்க்கமாக்கக் கை கொடுப்போமே !

    Share
  • கீதையின் நாயகனே!

    -ரா. பார்த்தசாரதி

    தீமை செய்த காளிங்கன்மேல் நடனம் புரிந்தாய்!    krishna_arjuna
    வெண்ணை திருடும் கள்வனாய்த் திரிந்தாய் !

    இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர்குலத்தினைக் காத்தாய் !
    அவர்களுக்காக மலையையே குடையாகப் பிடித்தாய் !

    கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன் சென்று கம்சனை வதைத்தாய் !
    பெற்றவளையும், வளர்த்தவளையும்  வணங்கி நின்றாய்!

    பண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்குத் தூதுவனாய்ச் சென்றாய் !
    துரியோதனனுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரை கூறினாய் !

    போரே முடிவானதும் பாண்டவர்பக்கம் துணை இருந்தாய் !
    போரில் கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !

    தர்மத்தினால்  பாண்டவர்களைப் போரில் வெற்றிபெறச் செய்தாய் !
    அதர்மத்தை அழிக்கவே அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!

    ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால் நடந்திடச் செய்தாய் !
    ஜடவரதன் அம்புபட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய் !

    Share
  • எம்மொழியே செம்மொழி!

    -ரா. பார்த்தசாரதி

    இனிய  தமிழ் மொழியே நமக்கு அமுதம்!                   semmozhi tamil
    நமக்கு இன்பம் தந்ததாலே நல்லமுதம்!
    எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி!
    அருளாளர்களும், ஆழ்வார்களும் வளர்த்த மொழி!

    தமிழுக்கும் அமுதென்றுபேர் என்பார் பாரதிதாசன்!
    தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தேன் என்பார்
    தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்
    தமிழையும் தாயையும் புகழாமல் இருப்பவருண்டோ தரணியிலே?

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
    தேன்வந்து  பாயுது காதினிலே என்றார் பாரதியார்!
    செம்மொழி மாநாடு நடந்ததும் கோவையிலே,
    தமிழர்கள் கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே!

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!
    தமிழ் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை,
    தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
    எம் தமிழ்மொழியும், பெருமையுறுமே பாரினிலே!

    தமிழ் பரவும் வகை செய்திடுவோமே!
    கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
    அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே!
    எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

    தமிழ் தமிழென முரசு கொட்டவேண்டாம்!
    ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம்!
    தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு!
    பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

    எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே…
    இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே…
    வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு!
    அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்குத் தனிச் சிறப்புண்டு!

    ஆங்கிலப் பெயர்ப் பலகையினைத் தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
    அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே ஒரு சிறப்பன்றோ!
    தனியார்ப்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
    அறிவியலிலும், உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்                                                                                                                                                     வேண்டுமே!

    எம்மொழி, செம்மொழி  எனச் சொன்னால் போதாது!
    ஏற்றமிகு மாற்றங்கள் செய்திடல் வேண்டும்!
    மாற்றங்கள் செய்யப் பள்ளியும், கல்லூரியும் ஒருமைப்படவேண்டுமே!
    பாமரனும் படித்து  உவகை  கொள்ள வேண்டுமே!

    இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிறுவவேண்டும்!
    எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும்!
    தலைமுறைகள் பல கழிந்தோம் குறைகளைய வேண்டும்!
    எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர்! வாரீர்!

    Share
  • Human Life

    -Raa. Parthasarathy

    Happiness and Sorrow as waves on the Sea                      yacht-in-rough-sea
    We all Sailing on the above,
    It is stumbling as Yacht on the Sea,
    Good and bad never we foresee.

    Time and Tide never wait and See,
    Ups and downs in our Life of Sea,
    In the World of Instability, we expect Stability,
    We sail on the boat of faith, with Reliability.

    Share