-ரா.பார்த்தசாரதி

diwali

 

 

 

 

 

 

 

 

 

மக்களுக்கு  மகிழ்ச்சியும் ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை
எல்லோரும்  ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளிப் பண்டிகை
சந்தோஷமும் உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்துக் குளித்து
மகிழ்வுடனே புத்தாடை உடுத்தி இனிப்பினைப் பகிர்ந்து
பெரியவர்களிடம் வாழ்த்தும் நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும்  ஒன்றாய்க் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

நாட்டில் உள்ளவர்கள் பலவிதமாய்க் கொண்டாடும் தீபாவளி
வடக்கே விளக்கு பூஜை எனக் கொண்டாடும் தீபாவளி
இல்லத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி
புன்சிரிப்புடன் மன நிறைவாய் வாழ்த்துப் பெறும் தீபாவளி !

வெடியும் சரமும் மத்தாப்பும் கையில் ஏந்துவோமே
வெடியின் சப்தமும் சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பினைக் காண்போமே!
மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே
சங்கு சக்கரம் புஸ்வாணப்  பூக்களின் சிதறலைக் கண்டு களிப்போமே!

அசுரன்  நினைவாக நாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகின்றோம்
மனித உருவில் உள்ள அசுரர்களை அழிக்க நாம் திட்டமிடுவோம்!
பார்வையற்றவர்கள் விடுதிக்கும் முதியோர் இல்லத்திற்கும் செல்வோமே
அவர்களுடன் இனிப்பினைப் பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *