உலக எழுத்தறிவு தினம்
-ரா.பார்த்தசாரதி
எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!
மனிதனாய்ப் பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
நாட்டில் எழுத்தறிவுபெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்
இதனைக் கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்!
பின்தங்கிய இனத்தவரும், பாட்டாளிகளும் எழுத்தறிவு பெறவேண்டும்
நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்
அதற்கான ஊடகங்களைக் கிராமங்கள்தோறும் ஏற்பட்டுத்த வேண்டும்
தாய்மொழியில் பயின்று கையொப்பம் இட அறியவேண்டும்!
எழுத்தறிவினைப் புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்
இரவு நேரப் பள்ளிகள் மூலம் முதியோர்க்கும் எழுத்தறிவிப்போம்
எழுத்தறிவின்மையை ஒழிக்க என்றும் நாம் பாடுபடுவோம் என
நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில்!
(செப்டம்பர் 8-ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.)