Blog

  • ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) – பகுதி 2

    ஆப்ரஹாம் லிங்கன்

    (வரலாற்றுத் தொடர் நாடகம்)

    பகுதி 2

    ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    (1809-1865)

    காட்சி 4 பாகம் -1

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹூக் (Burnet Hook) ஆகியோர்.

    இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது.  ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாடுகிறார்..

    வில்லியம் ஸீவேர்டு: (வந்து கொண்டே)  இன்று முக்கியச் செய்தி ஏதேனும் இருக்கிறதா ?

    எட்வின் ஸ்டான்டன்:  ஆமாம் ! மிக முக்கியத் தகவல் ! மகிழ்ச்சி தரும் தகவல் ! நமது ஐக்கியப் படைகளுக்கு வெற்றி ! மாபெரும் வெற்றி !  நமது ஜெனரல் ஜியார்ஜ் மெக்கிலாலன் தென்னகத்தின் ஜெனரல் ராபர்ட் லீயின் படைகளை ஆன்டியெட்டம் (Antietam) என்னும் இடத்தில் முறியடித்தார்.  படு தோல்வி அவருக்கு ! பலத்த வீழ்ச்சி தென்னவருக்கு ! இனியவர் மீண்டு எழ முடியாது என்று தெரிகிறது !  அலையடிப்பு இப்போது திரும்பி விட்டது !

    மாண்ட்கொமரி பிளேர்: (ஸ்டான்டனைப் பார்த்து) பிரஸிடெண்ட்டைக் கண்டு பேசினீரா ?

    ஸ்டான்டன்:  பிரஸிடெண்டுடன் பேசிய பிறகுதான் இங்கு வருகிறேன் !

    கிடியான் வெல்லெஸ்:  பிரஸிடெண்ட் என்ன சொன்னார் ?

    ஸ்டான்டன்:  வெற்றிச் செய்தி கேட்டுப் பெரு மகிழ்ச்சி அடைந்தார் !  அவர் கூறியது : கடேசியில் கடவுள் நம் மேல் கருணை பூண்டார்.  நமது குறிக்கோள் நேர்மையானது என்பதற்குக் கடவுள் சாட்சியாக நின்றார் ! வெற்றி நமது நேர்மையை நிரூபித்தது என்று பூரித்தார் ! இங்கு வந்து கொண்டிருக்கிறார்.

    பர்னெட் ஹூக்:  அடுத்து அவரது “பூரண விடுதலைச் சட்டம்” (Emancipation Law) உரையை முழக்கப் போகிறார் !  என் கருத்து : அந்த அறிவிப்பு தவறு என்பது !  இப்போது அறிவித்துப் பிரசிடெண்ட் தனது பெயரைக் கறைப்படுத்திக் கொள்வார் !  அமெரிக்க மக்களின் வெறுப்பைத் தேடிக் கொள்வார் !  அதை நாம் நிறுத்த வேண்டுமே !

    ஸீவெர்டு:  இதுவரையில் நாம் கற்றுக் கொண்டது என்ன ?  நம்மவரில் உன்னத மனிதர் பிரசிடெண்ட் என்பது !  நம்மைப் புறக்கணித்து அவரது போக்கிலே அவர் சென்றாலும் அவர் வெற்றி அடைவதைக் காண்கிறோம் !  அவர் ஒரு தீர்க்கதரிசி !  இது என் அனுபவம் !

    பர்னெட் ஹூக்:  நாட்டில் எங்கும் அவரை வெறுப்பவர் அதிகமாகி விட்டார் என்பது நானறிந்து கொண்டது !

    பிளேர்:  அமெரிக்காவை நேர்மையான திசையில் இழுத்துச் செல்பவர் பிரசிடெண்ட் ஒருவர்தான் ! அதில் எந்த சந்தேகமும் இல்லை எனக்கு !

    பர்னெட் ஹூக்:  அவருக்கு எதிராய்ப் பலர் கிளம்பி இருக்கிறார் என்பது ஒற்றர் மூலமாக நான் அறிந்தது !

    ஸீவேர்டு:  ஆனால் அந்த எதிர்ப்பு நிச்சயம் இங்கில்லை !

    பர்னெட் ஹூக்:  நானிதைச் சொல்ல அருகதை அற்றவன் !  நான் கேட்கிறேன் !  பூரண விடுதலைச் சட்டம் என்றால் என்ன ?  எனக்குப் புரிய வில்லை.  நாம் போரிடுவது அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாப்பதற்கு !  அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தை உகந்த காலத்தில் கொண்டு வருவதுதான் நல்லது.  இப்போது பூரண விடுதலையை அவரது தனிப்பட்ட வேட்கையாய்க் காட்டிக் கொள்வது சரியா ?  அமெரிக்க ஐக்கியம் முதலில் நிலைநாட்டப்பட வேண்டும் !  அதற்குப் பிறகுதான் கறுப்பருக்குப் பூரண விடுதலை கிடைக்கும் !  விடுதலை என்றால் எனக்குப் புரிகிறது !  பூரண விடுதலை என்றால் எனக்குப் புரியவில்லை !  உங்களுக்குப் புரிகிறா ?  எனக்குக் குழப்பமாக உள்ளது !

    ஸீவேர்டு:  பர்னெட் !  நீவீர் சொல்வது தவறு !  அவருக்குச் சிறிதும் குழப்பமில்லை !  குழப்ப மெல்லாம் உம்மைப் போன்று புரியாதவருக்கு !  அவர் பல தடவை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.  அமெரிக்க ஐக்கியமே அவரது முதல் மூச்சு !  அடிமைத்தன ஒழிப்பைப் பற்றி அவரது கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை !  பிரிந்து போன அமெரிக்க ஐக்கியம் இப்போது இறுக்கிக் கட்டப் படப் போகிறது !  அவரது அடுத்த மூச்சு விடுதலை அளிப்பு !  விடுதலைச் சட்டம் !  சுடச்சுட விடுதலை அறிவிப்பை முழக்க முற்படுவது அவரது கடமை !  விடுதலையில் பாதி விடுதலை என்பது கிடையாது !  பூரண விடுதலை என்பது எனக்குப் புரிகிறது !  உமக்கு அவரது முன்னைப் பேச்சு நினைவிருக்கிறதா ?  “அடிமைகளில் எவரை விடுவிக்காமல் போனாலும் சரி நான் அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாப்பேன் !  எல்லாக் கறுப்பரையும் விடுவிப்பதால் ஐக்கியம் பாதுகாக்கப்படும் என்றாலும் நானதைச் செய்து முடிப்பேன் !  சிலரை விடுவித்துப் பலரை விடுவிக்காமல் போனாலும் சரி நான் ஐக்கியத்தைக் காக்கச் செல்வேன்.” இப்படிச் சொன்னார்.  பிரசிடெண்ட் மிகவும் தெளிவாக இருந்தார் ! இருக்கிறார் !  அவரது அசையாத தீர்மானம் இப்போது : அடிமை நீக்குச் சட்ட அறிவிப்பு !  அதில் கால தாமதம் செய்ய மாட்டார் !  அவரை யாரும் நிறுத்த முடியாது !

    பர்னெட் ஹூக்:  எனக்குப் புரிகிறது அது !  ஆனால் அதை வேறு விதமாகச் செய்யக் கூடியவரும்  இருக்கிறார் என்பது என் கருத்து.

    பிளேர்:  அவரெல்லாம் இவரைப் போல் தீர்க்க தெரிசனத்துடன் செய்ய மாட்டார் என்பது என் கருத்து.

    எட்வின் ஸ்டான்டன்:  எனக்கும் பிரசிடெண்ட் அறிவிப்பு மீது பூரண உடன்பாடில்லை !  ஆனால் அவர் ஒருவரது போக்குதான் நேர்மையாகத் தெரியுது எனக்கு !  இந்த இக்கட்டான கட்டத்தில் இடர்களை ஏற்றுக் கொண்டு நெஞ்சம் தளராமல் நிமிர்ந்து நின்று போரைத் திறமையாக நடத்தி வருகிறார்.  இப்போது அதன் நற்பலனை எல்லாரும் அனுபவிப்பார் !  ஐக்கியப் பிணைப்புக்கு வெற்றி !  அடிமைக் கறுப்பருக்கு விடுதலை !  ஒரு கல்லில் விழுபவை இரு கனிகள் ! அவரது குறிக்கோள் நிறைவேறி வருகிறது !  நேர்மையான குறிக்கோள் !

    unnamed (2)

    பர்னெட் ஹூக்:  ஆனாலும் போர் முடிந்து தோரணம் கட்டுவதற்குள் பூரண விடுதலை அறிவிப்பை விடுவிக்க வேண்டுமா ?

    வெல்லெஸ்:  அறிவிக்கப் போவது உமக்கு நிச்சயமாகத் தெரியுமா ?

    பர்னெட் ஹ¥க்:  ஆமாம் !  இன்று அவர் அறிவிக்கப் போகிறார் நிச்சயம் !  அவரது கைப்பிரதி என் கண்களில் பட்டது !

    வெல்லெஸ்:  அப்படியானல் அவருக்கு என் ஆதரவு உண்டு !  அறிவிப்பில் தவறில்லை !

    ஸீவேர்டு:  மிஸ்டர் ஸ்டான்டன் !  ஜெனரால் ராபர்ட் லீயின் படைகள் யாவும் வீழ்ந்து விட்டனவா ?

    ஸ்டான்டன்:  இன்னும் முடிய வில்லை !  ஆனால் அவரது படையில் பலர் மடிந்தனர் ! சிலர் ஓடிப் போயினர் !  ஒரு சிலர் களத்தில் இன்னும் காலூன்றிப் போரிடுகிறார் !  எந்த சமயத்திலும் அவர் சரணடைந்து வெள்ளைக் கொடியைக் காட்டலாம் !  தென்னகத்தின் பெரிய ராணுவத் தளபதி ராபட் லீ நமது சாதாரணத் தளபதி மெக்லாலனிடம் தோல்வி அடைந்தார் !

    ஸீவேர்டு:  பாராட்டுத் தந்தி அனுப்புனீரா ?  அமெரிக்க யூனியனுக்கு மாபெரும் வெற்றியல்லவா ?

    ஸ்டான்டன்:  பிரஸிடெண்ட் தந்தி முதலில் சென்றது !  அடுத்தது எனது வாழ்த்துத் தந்தி !

    (அப்போது பணியாள் வந்து பிரசிடெண்ட் லிங்கன் வருவதை அறிவிக்கிறான்.  அனைவரும் அமைதியாக வாசலை நோக்குகிறார்.  ஆப்ரஹாம் லிங்கன் அறைக்குள் நுழைகிறார்.  அனைவரும் எழுந்து நிற்கிறார்.)

    காட்சி -4 பாகம் -2

    unnamed (3)

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. லிங்கன் வந்ததும் எல்லா அரசாங்க உறுப்பினரும் எழுந்து நின்று குட் மார்னிங் சொல்லி வந்தனம் தெரிவிக்கிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: குட் மார்னிங் எல்லோருக்கும். உட்காருங்கள்.

    வில்லியம் ஸீவேர்டு: நல்ல செய்தி எங்கள் காதில் விழுந்தது மிஸ்டர் பிரசிடெண்ட் !

    unnamed (4)

    Civil War Picture

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! முதன்முதல் வெற்றிக்கண் நம் பக்கம் திரும்பியுள்ளது ! நான் பாராட்டுத் தந்தி கொடுத்திருக்கிறேன் ஜெனரல் மெக்லாலனுக்கு ! தென்னகத்தின் பராக்கிரமசாலி ஜெனரல் ராபர்ட் லீயைத் தோற்கடித்தது சாதாரணச் செய்தி இல்லை ! அதுவோர் மகத்தான செய்தி ஸீவேர்டு ! அமெரிக்க வரலாறு மாறப் போகிறது ! அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லப் போகிறேன் இப்போது.

    பர்னெட் ஹூக்: நான் காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் அறிவிப்பைக் கேட்க !

    ஆப்ரஹாம் லிங்கன்: முதலில் வேடிக்கை நடிகர் மிஸ்டர் ஆர்டிமஸ் வார்டு (Mr. Artemus Ward) அறிவிப்பைக் கூறுகிறேன். (பையிலிருந்து ஓர் அச்சுத் தாளை எடுத்து வாசிக்கிறார்)

    “யுடிகாவில் (Utica) மேலிடத்துக் கொந்தளிப்பு”

    எட்வின் ஸ்டான்டன்: (லிங்கனை இடைமறித்து) மிஸ்டர் பிரசிடெண்ட் ! முதலில் அரசாங்கப் பிரச்சனையைக் கேட்க வேண்டும் நாங்கள் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) சரி பேசுவோம் அரசாங்கப் பிரச்சனையை !

    unnamed (5)

    Civil War Soldiers

    ஸீவேர்டு: மெக்லாலன் ராபர்ட் லீயை விரட்டிக் கொண்டு போகிறார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படித்தான் தோன்றுகிறது. முதன்முதல் ராபர்ட் லீயிக்குத் தோல்வி ! ஜெனரல் மெக்லாலன் தீரத்தனம் இப்போது தெரிகிறது ! ஆனாலும் ராபர்ட் லீ முற்றிலும் முறியடிக்கப்பட வேண்டும் ! நிச்சயம் முடிவின் துவக்கம் உதயமாகி விட்டது ! மெக்லாலனால் முடியா விட்டால் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட்டை (General Ulysses Grant) நாம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் போர் முடியத் தாமதமாகும் ! தவறில்லை அந்த முடிவெடுத்தாலும் !

    மாண்ட்கொமரி பிளேர்: ஜெனரல் கிரான்ட் மிகவும் குடிப்பார் அல்லவா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: என்ன பிராண்டு குடிப்பார் என்று சொல்வீர் ? அவருக்கு வண்டியிலே சில பாரல்கள் அனுப்பி வைக்கிறேன் ! அவர் கால்வைத்த இடமெல்லாம் வெற்றிகள்தான் ! ஜெனரல் என்றால் அவர்தான் உண்மையான ஜெனரல் !

    பர்னெட் ஹூக்: வேறு ஏதோ அறிக்கை விடப் போவதாகச் சொன்னீர்களே மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! சில வாரங்களுக்கு முன் ஸீவேர்டிடம் முதல் பிரதி எழுத்தறிக்கையைக் காட்டினேன் ! அதை அரசாங்க அறிவிப்பாக வாசிக்க வேண்டும் நான் !

    பர்னெட் ஹூக்: அதன் சாராம்சம் என்ன வென்று கூறுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அறிவிப்பு !

    unnamed (6)

    Sumter Fort

    பர்னெட் ஹூக்: (வெல்லெஸிடம் மெதுவாக முணுமுணுத்து) நான் முன்பே சொன்னேன் அல்லவா ? எல்லாரும் கேட்கலாம் இப்போது. (லிங்கனைப் பார்த்து) இப்போது என்ன அவசரம் அந்த அறிவிப்புக்கு ? எல்லாருக்கும் தெரிந்ததே ! இந்த கொடிய போரே அதற்காகத்தானே நடக்கிறது !

    ஆப்ரஹாம் லிங்கன்: இப்போது அறிவிக்கத் தேவையில்லை என்பது உமது கருத்து ! கேட்டுக் கொண்டேன் அதை ! ஆனால் தருணம் வந்து விட்டது கோமான்களே ! அறிவிக்கும் தருணம் வந்து விட்டது ! அடிமைகளை விடுவிக்கும் தருணம் வந்து விட்டது ! ஆயிரமாயிரம் கால் விலங்குகள் அறுக்கப்படும் காலம் வந்து விட்டது ! எனக்குத் தெரிகிறது அந்தத் தருணம் ! உங்களுக்குத் தெரியாவிட்டால் என்ன ? எனக்குத் தருணம் வந்து விட்டது ! நான் காத்திருக்க முடியாது ! நூற்றுக் கணக்கான வருடங்களாய் இந்த விடுதலைத் தருணத்துக்கு ஆயிரமாயிரம் கறுப்பு அடிமைகள் காத்திருக்கிறார்கள் ! ஆனால் நான் காத்திருக்க முடியாது !

    கிடியான் வெல்லெஸ்: முழு அறிவிப்பையும் முதலில் வாசித்துக் காட்டுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.

    ஆப்ரஹாம் லிங்கன்: தருணம் வந்துவிட்டது ! இந்த நேரத்தை நாம் நழுவ விடக் கூடாது ! வரலாறு உருவாகும் தருணம் ! வாசிக்கிறேன் கேட்பீர் !

    “நம் இறைவனின் நன்னாளான இந்த ஜனவரி முதல் தேதியில் (1863) அறிவிக்கப் படுகிறது இது. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் அடிமைகளாய்க் கட்டுப்பட்டுள்ள கறுப்பருக்கும், அமெரிக்க ஐக்கியத்துக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்து கொண்டோருக்கும் இந்த அறிவிப்புக்குப் பிறகு நிரந்தர விடுதலை.”

    இன்னும் மூன்று மாதக் காலம் உள்ளது இந்த அறிவிப்பு நடப்பதற்கு ! மேலும் இந்த அரசியல் நியதிக்குப் பல உப அறிவிப்புகள், நிபந்தனைகள், தண்டனைகள் இன்னும் எழுதப்பட இருக்கின்றன. மேலும் தென்னகக் கோமான்களுக்கு இழப்பீடு, கறுப்பருக்கு நிதி உதவி, இடவசதி, நிலவசதி ஊழிய வசதி, கல்வி வசதி ஆகியவையும் விளக்கமாக எழுதப்பட வேண்டும்.

    unnamed (7)

    பர்னெட் ஹூக்: (முந்திக் கொண்டு) நானிந்த அறிவிப்பை இந்த சமயத்தில் நீங்கள் வெளியிடுவதை எதிர்க்கிறேன். உள்நாட்டுப் போர் முடிந்து இன்னும் புகை மண்டலம் அடங்க வில்லை. அதற்குள் என்ன அவசரம் ? வெற்றி முழுவதும் பெற்ற பிறகு அறிவித்தால் என்ன ? இது நமது ஐக்கியத்தை இன்னும் முறிக்குமே தவிர மேலும் இணைக்காது ! தென்னவர் மனப்புண் ஆறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் ! அதற்குள் அடிமைகளை நீக்குவது வெந்த புண்ணில் ஈட்டியைப் புகுத்துவது போலிருக்கும் !

    வெல்லெஸ்: எனக்கும் புரிய வில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் ! எதற்காக இப்பொது திடீரென இந்த அறிவிப்பைத் திணிக்க வேண்டும் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: இது எனது புதிய திணிப்பு அறிக்கை இல்லை ! இந்த பிரிவினைப் போரைத் துவக்கி வைத்த காரணியை வேரோடு பிடுங்க வேண்டும் ! அதுதான் என் குறிக்கோள் ! நான் உயிரோடு உள்ள போதே இதைச் செய்து முடிக்க வேண்டும் ! வேறெவருக்கும் இதைச் செய்யத் துணிவில்லை ! உறுதியில்லை ! ஊக்கமில்லை ! இரும்பு சூட்டோடு கனிந்துள்ள போதே அதை அடித்து வடிவமைக்க வேண்டும் ! இந்தத் தருணமே தக்க தருணம் என்று என் ஆத்மா என்னைத் தூண்டுகிறது !

    பர்னெட் ஹூக்: ஆறு மாதங்களுக்கு முன் “நியூ யார்க் டிரிபியூன்” (New York Tribune) தெளிவான ஓர் அறிவிப்பை வெளியிடும்படி உங்களை வற்புறுத்திய போது நீங்கள் அவரை உடனே இகழ்ந்தீர்கள் ! நினைவிருக்கிறதா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: நன்றாக நினைவில் உள்ளது ! ஆனால் அது சரியான தருண மில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் ! போருக்கிடையே என்ன நேரப் போகுதென அறியாத சமயத்திலே அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை ! இந்தக் கொள்கையில் நீங்கள் எல்லாம் என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

    unnamed (8)

    ++++++++++++

    “முன்னொரு முறை நான் சொல்லியதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ‘நான் எடுத்துக் காட்டிய பல்வேறு முறைகளில் எந்த விதத்திலும் அடிமைத்தன ஏற்பாடுகள் தவறான தென்று கருதாத ஒருவன் நம்மிடையே இருப்பானாகில் அவன் அமெரிக்க மண்ணில் தடம் வைக்கத் தகுதியற்றவன். அவன் நம்மோடு சேர்ந்து வாழக் கூடாது. அடிமைத்தன ஏற்பாடுகள் நம்மிடையே இருப்பதைப் புறக்கணிப்பவன், அதைத் திருப்தியான முறையில் அரசியல் ஆட்சி நியதி நெறிப்படி நீக்குவதில் உள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ளாதவன் நமது அரங்கில் இருப்பானாகில் அவன் நமது அமெரிக்கத் மண்ணில் தடம் வைக்கத் தகுதியில்லாதவன்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீ·பென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

    “அடிமைத்தன ஒழிப்பைத் தவறாகக் கருதும் மனப்போக்கு பரவி வரும் இந்தச் சமயத்தில், நான் சொல்கிறேன் : இதுவரை இந்த அடிமைத்தனக் கொடுமை போல் வேறு ஏதாவது நமது அமெரிக்க ஐக்கியத்தைச் சீர்குலைக்கப் பயமுறுத்தி யுள்ளதா ? நாம் பற்றிக் கொண்டுள்ள முக்கியமான இதய இச்சை என்ன ? நமது உரிமைச் சுதந்திரம் ! எதிர்கால வாழ்வு வளம் ! அந்த இரண்டையும் பயமுறுத்தி வருவது அடிமைத்தன வைப்பு என்பது தவிர வேறில்லை என்று உங்களுக்குத் தெரிகிறதா ?

    ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீஃபென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

    நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது ! அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ! ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை ! அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ! ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ! அது சில நாட்களுக்கு முன்பு ! ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு !

    ஆப்ரஹாம் லிங்கன் (செப்டம்பர் 17, 1862)

    unnamed (9)

    (செப்டம்பர் 17, 1862)

    காட்சி -4 பாகம் -3

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹஃக் (Burnet Hook) ஆகியோர்.

    இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. பெரு வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. அரசாங்க உறுப்பினருடன் லிங்கன் “அடிமைகள் விடுதலை அறிவிப்பு” வெளியீடு பற்றிப் பேசுகிறார். தர்க்கம் முடிந்து அவர்கள் யாவரும் போன பிறகு பர்னெட் ஹ¥க் மட்டும் தனியே நின்று லிங்கனுடன் வாதாடுகிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: நன்றாக நினைவில் உள்ளது ! ஆனால் அது சரியான தருணமில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் ! போருக்கிடையே என்ன நேரப் போகுதெனத் துடிக்கும் சமயத்திலே விடுதலை அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை ! கொள்கை ஒன்றைப் பின்பற்றி நிலைநாட்டுவது என் பொறுப்பு. தவறான தருணத்தில் வெளியிட்டு மக்கள் அதைப் புறக்கணிபதற்கு இல்லை ! அப்படிச் செய்வது தேசக் கடமை ஆகாது. நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது ! அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ! ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை ! அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ! ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ! அது சில நாட்களுக்கு முன்பு ! ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு ! மேரிலாண்டிலிருந்து எதிர்ப்புக் கலகவாதிகள் துரத்தப்பட்ட பின் வெற்றி நம் பக்கம் என்பது உறுதியாகி விட்டது ! அந்த வெற்றிப் புத்தொளியோடு, பலிவாங்கப் பட்ட யூனியன் அடிமை ஒழிப்பையும் உடனே அறிவிக்க வேண்டும் என்று என் ஆத்மா உந்தியது ! அந்த உறுதி மொழியை நான் முன்பு எடுத்துக் கொண்டது எனக்கும் என்னைப் படைத்தவனுக்கும் ! புரட்சிக்காரர் விரட்டப் பட்டதும் நான் அந்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் ! ஆதலால் உமது தடைமொழியை நான் நிராகரிக்கிறேன் ! உமது தனிப்பட்ட எதிர்ப்புக் கருத்துக்களை மதித்துக் கொண்டு நானிந்த முடிவெடுக்கிறேன். இந்த முடிவுக்கு நீங்கள் யாவரும் உடன்பாடு தெரிவிக்க வேண்டும் என்று நான் மன்றாடிக் கேட்கிறேன்.

    unnamed (10)

    பர்னெட் ஹ¥க்: (சட்டென) இது ஆவேச அறிவிப்பாகத் தெரியுது எனக்கு. சிந்தித்து வெளியிடும் அறிவிப்பாய்த் தோன்ற வில்லை எனக்கு.

    லிங்கன்: (தொடர்ந்து) மற்றுமொரு கருத்தைச் சொல்கிறேன். இந்தப் பிரச்சனையில் மற்றவர் என்னை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றெனக்குத் தெரியும். ஆனால் அரசியல் நியதிப்படி என்னை உடன்பட வைத்துப் பொதுமக்கள் ஆதரவையும் பெற்று என் ஆசனத்திலிருந்து அமர்ந்து கொண்டு அவர் செய்ய வேண்டும் ! மகிழ்ச்சியோடு நான் அவருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால் இப்போது என் ஆசனத்தில் அமர்ந்து அதைச் செய்வோர் யாரு மிருப்பதாகத் தெரிய வில்லை. தேர்ந்தெடுத்த முடிவைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டியது என் கடமை ! அதை நான் செய்தே தீர வேண்டும்.

    ஸ்டான்டன்: சிந்தித்து முடிவு செய்ய சில நாட்கள் தாமதப் படுத்துவீரா மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    சேஸ்: இப்போது அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நமது முதற் கடமை.

    unnamed (11)

    பர்னெட் ஹஃக்: அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு !

    லிங்கன்: சீமான்களே ! வரலாற்றிலிருந்து நாம் தப்பிக்க ஓட முடியாது. நமக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் நம்மை யாரும் மறக்கப் போவதில்லை ! தனிப்பட்டோருக்குப் பொதுநபர் மதிப்பளிக்க மாட்டார். அடிமைகளுக்கு விடுதலையை அறிவிக்கும் போது நாம் விடுபடுவோருக்கு சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். ஒன்று நாம் நேர்மையோடு அடிமைகளைக் காப்பாற்றுவோம் அல்லது வேதனையோடு நாம் இறுதியில் இழந்து போவோம் !

    (லிங்கன் எழுந்து நின்று அடிமைகள் விடுதலை அறிவிப்பு வெளியீட்டுத் தாளை மேஜை மீது வைத்துக் கையொப்பமிட்டு “ஜனாதிபதி முத்திரை” இட்டு ஒரு பெருமூச்சு விடுகிறார்.)

    “அடிமைகள் யாவரும் இந்த விடுதலை அறிவிப்புக்குப் பிறகு என்றும் சுதந்திர மனிதர்.” சீமான்களே உங்கள் யாவரது உடன்பாடுகளை நான் வரவேற்கிறேன். எதிர்பார்க்கிறேன்.

    (எல்லா அரசாங்க அதிகாரிகளும் எழுந்து நிற்கிறார். ஸீவேர்டு, வெல்லெஸ், பிளேர் மூவரும் லிங்கனுக்குப் புன்முறுவலுடன் கைகுலுக்கி வெளியேறுகிறார். ஸ்டான்டன், சேஸ் லிங்கனுக்குத் தலைவணங்கிப் பின்பற்றிச் செல்கிறார். பர்னெட் ஹ¥க் ஒன்றும் செய்யாமல் நேர்நோக்கி விரைகிறார்)

    unnamed (12)

    லிங்கன்: மிஸ்டர் ஹஃக் ! சற்று நில்லுங்கள் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் !

    பர்னெட் ஹஃக்: (போனவர் திரும்பி நின்று) சொல்லுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    (எல்லாரும் போன பிறகு லிங்கன் பேசுகிறார்.)

    லிங்கன்: உட்காருங்கள் மிஸ்டர் ஹஃக் ! நமது உரையாடல் இன்னும் முடியவில்லை !

    (ஹஃக் நாற்காலியில் உட்காருகிறார்)

    லிங்கன்: ஒருவர் உடன்பாடில்லாத ஒன்றைச் சொல்லிய பிறகு அதை மீண்டும் கூற வேண்டும் என்று வற்புறுத்துவது அவரை அவமானப்படுத்தத்தான் என்று நான் நினைக்கிறேன். அது பலன் அளிக்கும். ஆனால் அத்தனை எளிதாக என்னை யாரும் அவமானப் படுத்த முடியாது. எனக்கு இங்கு எதிர்ப்புக்கள் இருப்பது தெரியும் !

    பர்னெட் ஹஃக்: என்ன ? உங்களுக்கு எதிர்ப்பா ? எங்கே அமெரிக்க நாட்டிலேயா ?

    லிங்கன்: இல்லை ! அரசாங்க உறுப்பினருக்குள்ளே !

    பர்னெட் ஹஃக்: எதிர்ப்பென்று நான் கருத வில்லை ! அதைக் குறைகூறல் என்று சொல்வேன் !

    லிங்கன்: எதற்காகக் குறை கூறுகிறார் ? என் வழிகளைத் திருத்தவா ? அல்லது என்னை அடுத்து வராதபடிக் கவிழ்த்தவா ?

    பர்னெட் ஹஃக்: சரியாகச் சொன்னீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! அதுதான் !

    லிங்கன்: முதலில் நீவீர் ஏன் அப்படிச் சொல்ல வில்லை என்னிடம் ?

    பர்னெட் ஹஃக்: மறைமுகமாகக் கூறினோம் !

    லிங்கன்: என் ஆசனத்தில் அமர்ந்து நீவீர் சிந்திக்க வேண்டும் !

    பர்னெட் ஹஃக்: அறிவிலோ திறமையிலோ நான் உங்களை மிஞ்ச முடியாது மிஸ்டர் பிரசிடெண்ட் ! ஆனால் குறை கூறுவோன் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது !

    லிங்கன்: நான் சொல்வது அதுவல்ல ! என் பொறுப்பைச் சுமந்து கொண்டு நீவீர் சிந்திக்க வேண்டும் என்பது என் ஆலோசனை !

    பர்னெட் ஹஃக்: நான் அந்தப் பொறுப்புக்குப் போட்டியிடத் தகுதியற்றவன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    unnamed (13)

    லிங்கன்: அப்படியானால் அறிவில்லாமல், திறமையில்லாமல், பொறுப்பில்லாமல்தான் நீவீர் என்னுடன் இதுவரைத் தர்க்கமிட்டு வந்தீரா ?

    பர்னெட் ஹஃக்: (கோபத்துடன்) பொறுப்பில்லாதவன் என்று என்னை அவமானப் படுத்துகிறீர் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: உமது தர்க்கப் போக்கு அதைத்தான் எனக்குக் காட்டுகிறது !

    பர்னெட் ஹஃக்: (மனமுடைந்து) அப்படியானல் நான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன் ! நன்றி உங்கள் ஆலோசனைக்கு ! நான் போகிறேன் !

    (பர்னெட் ஹஃக் ஆவேசமாய் எழுந்து கொண்டு விரைந்து போகிறார்)

    +++++++++++

    unnamed (14)

    “நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் ! கடவுள் எனக்கு அளித்திருக்கும் இந்த அபாயப் பணி உன்னதமானது ! எனக்கிருப்பவை இன்னும் சில நாட்களே ! எனது ஜனாதிபதிப் பதவி நாட்கள் மிகக் குறைவு ! ஆனால் நான் அதற்குள் முடிக்க வேண்டிய கடமைகள் அநேகம் ! எனக்குள்ள அதிர்ச்சிகள், மனத்துடிப்புகள் எனக்கு மட்டும் தெரியும் ! எனது தேசீயக் கண்ணோட்டம் நமது மூதாதையர் அமைத்த இந்த நாட்டைப் பிணைப்பதற்கே ! சுதந்திரமாய் வாழ விரும்பும் இந்த நாட்டு மக்களுக்கே ! அந்த மகத்தான பணியைப் போவதற்குள் நான் செய்ய வேண்டும். என்னைத் தடுக்க முயல்கிறீர் ! அந்த முறையில் நீவீர் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறீர் !”

    ஆப்ரஹாம் லிங்கன் (செப்டம்பர் 17, 1862)

    “இந்த ஆழமான போர் வேதனை விரைவாக மறைந்துவிடப் பரிவோடு நாம் நம்பிக்கை வைக்கலாம். அல்லது மெய்வருந்திப் பிரார்த்தனை செய்யலாம். ஆயினும் 250 ஆண்டுகளாய் நாம் கடுமையாக உழைத்துச் சேமித்த சொத்துக்கள் எல்லாம் பலனற்றுச் சிதைக்கப் படவும், சவுக்கடியில் சிந்திய குருதிக்கு ஈடாக வாள் மூலம் பலிவாங்கி இந்தப் போரை நீடிக்கவும் கடவுள் விரும்பினால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியது போல் இப்போதும் சொல்லப்பட வேண்டும்: ‘இறைவனின் நியாயத் தீர்ப்புகள் மெய்யானவை, நேர்மையானவை என்று.’

    ஆப்ரஹாம் லிங்கன், இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்புரை (மார்ச் 4, 1865)

    “கடவுள் சாதாரணப் பொதுமக்களைப் பெரிதும் விரும்புகிறார் ! அதனால்தான் அவர் பெருத்த எண்ணிக்கையில் அவர்களை உண்டாக்கி இருக்கிறார்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “அமெரிக்க எஜமானர்கள் தாமாகவே முன்வந்து தமது அடிமைகளை விடுவிக்கும் முன்பு ரஷ்யா முழுதையும் ஆளும் ஏகாதிபதி தன் கீரீடத்தைக் கீழே எறிந்துவிட்டு அதன் குடிமக்களுக்கு விடுதலையை அறிவித்திடுவார்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (1855)

    unnamed (15)

    (செப்டம்பர் 17, 1862)

    காட்சி -4 பாகம் -4

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர்.

    இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

    இப்போதைய காட்சி:

    உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. பெரு வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. அரசாங்க உறுப்பினருடன் லிங்கன் “அடிமைகள் விடுதலை அறிவிப்பு” வெளியீடு பற்றிப் பேசுகிறார். தர்க்கம் முடிந்து அவர்கள் யாவரும் போன பிறகு பர்னெட் ஹஃக் மட்டும் தனியே நின்று லிங்கனுடன் வாதாடி ஆத்திரப்பட்டுத் தன் பதவியை விட்டு விலகுகிறார்.

    unnamed (16)

    பர்னெட் ஹஃக்: (மனமுடைந்து) அப்படியானல் நான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன் ! நன்றி உங்கள் ஆலோசனைக்கு ! நான் போகிறேன் !

    (பர்னெட் ஹஃக் ஆவேசமாய் எழுந்து விரைவாகச் செல்கிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: (பொறுமையாக) மிஸ்டர் பர்னெட் ஹ¥க் ! ஆத்திரப்பட்டு எதுவும் செய்யாதீர். உங்கள் எதிர்ப்பு வாதத்தை நான் கேட்க விரும்பினேன் ! அதைக் கேட்டு நான் வருந்த வில்லை ! நீங்கள் ஏன் பதவி விலக்கம் செய்ய வேண்டும் ? என் மீது கோபப்பட்டு உங்கள் நல்ல பதவியை விட்டுவிடுவது பொறுப்பற்றது !

    பர்னெட் ஹஃக்: நான் முன்பே செய்ய நினைத்தேன். தருணம் கிடைத்தது இப்ப்போது ! உங்கள் மீது கோபமில்லை எனக்கு !

    ஆப்ரஹாம் லிங்கன்: பின் யார் மீது கோபம் ? எதற்காகச் செய்கிறீர் ?

    பர்னெட் ஹஃக்: உங்கள் மீது எனக்குக் கோபமில்லை ! உங்கள் போர்க் கொள்கை மீது கோபம் ! தென்னவரை வடபுறத்தார் தோற்கடித்து இப்போது அடிமையாக்கப் போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! பழைய அடிமைகள் விடுவிக்கப்பட்டு இப்போது புது அடிமைகள் உருவாக்குகிறீர் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) நல்ல விளக்கம் கொடுத்தீர் என் கொள்கைக்கு ? நான் பழைய அடிமைகளை விடுவித்துப் புது அடிமைகள் படைக்கிறேனா ?

    பர்னெட் ஹ¥க்: தென்னவர் தாமாகத் தம் அடிமைகளை விடுவிக்க வேண்டும் ! அமெரிக்க ஜனாதிபதி அதை அழுத்தமாகத் திணிக்கக் கூடாது !

    unnamed (17)

    ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) தென்னவரிடம் கேட்டு வந்து என்னிடம் சொல்வீரா எப்போது அவர் அடிமைகளுக்கு விடுதலை அளிப்பார் என்று ? வற்புறுத்தப் படாத எந்த உன்னத கொள்கைக்கும் விடிவு காலம் வராது ! கருணை யில்லாத மனிதர் உருமிக் கொண்டு எதிர்ப்பார். உள்நாட்டுப் போர் நிறுத்தப்படும் போது அடிமைகள் விடுவிக்கப்பட வேண்டும். அப்படி விடுதலை செய்ய அரசியல் நியதிகள் வடிக்கப்பட்டுச் சட்டங்களாய் எல்லா மாநிலங்களிலும் நிறுவப்பட வேண்டும். அது என் தலையாய கடமை ! அதைத் தடுக்க நீவீர் முயல்கிறீர்.

    பர்னெட் ஹஃக்: மிஸ்டர் பிரசிடெண்ட் ! இப்படித் தீவிரக் கொள்கை உடைய உங்கள் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது ! அதனால்தான் நான் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறேன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: சிலருடைய பேச்சில், போக்கில் துரோகம் காணப்படுகிறது.

    பர்னெட் ஹஃக்: துரோகம் செய்வோருக்கு எதிராய்ப் போரிடுகிறோம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை துரோகம் செய்வோரைத் தோற்கடிப்போம் ! நான் அவருடன் அமர்ந்து சமாதான உரையாடி அவரைத் திருத்த முயல்வேன்.

    பர்னெட் ஹஃக்: அவ்விதம் புரியும் அரசியல் தந்திரம் பலவீனமானது.

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை அது மனித நன்னம்பிக்கையில் செய்வது. அது மனித நேயத்தில் புரிவது. உம்மைப் பல நாட்களாய் நான் கவனித்து வருகிறேன். ரிப்பபிளிக்கன் கட்சியில் எனக்குப் பின்னால் நீவீர் சதிவேலை செய்து வருவது எனக்குச் தெரியும். என்னைக் குறைகூறுவது பற்றிக் கவலை இல்லை எனக்கு ! ஆனால் உமது சதிவேலைகள் நான் இரண்டாம் முறை பிரசிடெண்டாக வரக்கூடாது என்னும் குறிக்கோளில் நடக்கின்றன. நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் ! கடவுள் எனக்கு அளித்திருக்கும் இந்த அபாயப் பணி உன்னதமானது ! எனக்கிருப்பவை இன்னும் சில நாட்களே ! எனது ஜனாதிபதிப் பதவி நாட்கள் மிகக் குறைவு ! ஆனால் நான் அதற்குள் முடிக்க வேண்டிய கடமைகள் அநேகம் ! எனக்குள்ள அதிர்ச்சிகள், மனத்துடிப்புகள் எனக்கு மட்டும் தெரியும் ! எனது தேசீயக் கண்ணோட்டம் நமது மூதாதையர் அமைத்த இந்த நாட்டைப் பிணைப்பதற்கே ! சுதந்திரமாய் வாழ விரும்பும் இந்த நாட்டு மக்களுக்கே ! அந்த மகத்தான பணியைப் போவதற்குள் நான் செய்ய வேண்டும். என்னைத் தடுக்க முயல்கிறீர் ! அந்த முறையில் நீவீர் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறீர் ! இப்போது நடுக்கட்டத்தில் பொறுப்பற்றுப் பதவியை விட்டு விலகிச் செல்கிறீர் ! உம்மைத் தடுத்து நிறுத்துவேன் என்று எண்ண வேண்டாம் ! தாராளமாய் வெளியேறலாம் ! தயங்காமல் விலகிச் செல்லலாம் ! உம்மைப் போன்ற சங்கிலித் தொடர்பு வலுவுள்ள வடத்தை பலவீனமாக்கி விடும் ! நீவீர் போகலாம் !

    (பர்னெட் ஹஃக் வேகமாய் வெளியேறுகிறார். லிங்கன் மேஜை மணியை அடிக்கிறார். பணியாள் வருகிறான்.)

    unnamed (18)

    ஆப்ரஹாம் லிங்கன்: மிஸ்டர் ஹேயை உள்ளே வரச் சொல் ! (பணியாள் போகிறான். மிஸ்டர் ஹே நுழைகிறார். லிங்கன் ஷேக்ஸ்பியரின் “புயல்” (Tempest) நாடகத்தைக் கையில் எடுக்கிறார்.)

    மிகவும் களைத்துப் போய் உள்ளேன். நான் வாசிக்கும் அந்த வரிகள் உனக்குத் தெரியும். எங்கே அவற்றைப் படி ! மீண்டும் நான் கேட்க வேண்டும் (லிங்கன் நூலை ஹேயிடம் கொடுத்துச் சாய்வு நாற்காலில் ஓய்வாக அமர்கிறார்)

    மிஸ்டர் ஹே: (புயல் நூல் பக்கத்தை எடுத்து வாசிக்கிறார்)

    நம் நடிகர்களின் கூத்தாட்டம்

    இப்போது ஓய்ந்தது !

    நான் முன்னு ரைத்தது போல்

    எல்லாமே உணர்ச்சி மயம் !

    காற்றோடு கரைந்தது

    மெலிந்து போய் ! அந்தக்

    காட்சியின் வேரற்ற

    பின்னலாய்ப் போனது !

    பரம்பரைச் சொத்தாய் வந்திடும்

    முகில் தொடும் கோபுரங்கள்,

    மகத்தான மாளிகைகள்,

    மௌன ஆலயங்கள்,

    மாபெரும் பூகோளம் கூட

    மறைந்து போய்விடும் (ஒருநாள்) !

    இச்சிற்றுருவ

    அணிவரிசை மறைந்தது போல்

    எல்லாத் தளவாடமும்

    இடம் பெயர வேண்டும் !

    நாமதை ஒத்தவர் தாம் ! யாவும்

    கனவுகள் கட்டிய

    காட்சி போன்றவை !

    சின்னஞ் சிறிய நம்முடை

    வாழ்வினைச் சுற்றிலும்

    வட்ட மிட்டுள்ளது

    தூக்கம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! நாமதை ஒத்தவர்தான் ! கனவுகள் கட்டிய காட்சி மாளிகையில் நமது வாழ்வு சிறிதுதான் !

    +++++++++++

    நமது கடவுளின் ஆண்டான 1863 ஜனவரி முதல் தேதி முதலாக எந்த மாநிலத்திற்குள்ளும் அல்லது மாநிலமாக மதிக்கப்பட்ட பகுதிக்குள்ளும் அடிமைகளாக அடைபட்டிருப்போரும், அமெரிக்க ஐக்கிய நாடுகளை எதிர்த்துப் புரட்சி செய்த மக்களும் இனிமேல் விடுவிக்கப் படுகிறார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கமும், அதன் இராணுவமும், கடற்படையும் அந்த மக்களின் விடுதலையை ஏற்றுக் கொண்டு அவ்விதம் அவர்கள் மெய்யாக விடுவித்துக் கொள்ளும் முயற்சிகளைத் தடுத்துக் கட்டுப்படுத்த எந்த நடைமுறைகளையும் கையாளாமல் நிரந்தரமாய் நிலைநாட்டி வரும்.

    ஆப்ரஹாம் லிங்கன் (அடிமைகள் விடுதலை அறிவிப்பு) (ஜனவரி 1, 1863)

    “எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள். இப்போது நாம் அந்த தேசம் அல்லது அவ்விதம் உருவாகி உறுதியடைந்த ஒரு தேசம் நெடுங்காலம் பொறுத்துக் கொள்ளும் மாபெரும் ஓர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போரின் பெருங்களத்தில் நாமெல்லாரும் போராடச் சந்தித்தோம். அந்தக் களத்தில் ஒரு பகுதியை போரில் உயிர் கொடுத்தோருக்கு ஓய்விடமாய் அர்ப்பணித்துத் தேசம் நீடித்திருக்க முற்படுகிறோம். நாம் எல்லோரும் கூடி இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தகுதி உடையது.”

    ஆப்ரஹாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் உரைமொழி (நவம்பர் 19, 1863)

    unnamed (19)

    உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -1

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், ஆப்ரஹாம் லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிராண்ட், காப்டன் மாலின்ஸ், படைவீரன் டென்னிஸ் மற்றும் படைவீரன் வில்லியம் ஸ்காட்.

    இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு வேளாண்மைக் குடிசை.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். ஜெனரல் கிராண்ட் மேஜை முன்பாக அமர்ந்து காப்டன் மாலின்ஸோடு உரையாடுகிறார். கிராண்ட் வாயில் சுருட்டை ஊதிக் கொண்டு கையில் விஸ்கி பாட்டிலை வைத்திருக்கிறார். படைவீரன் டென்னிஸ் மேஜை ஓரத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான்.

    நேரம்: மாலை வேளை.

    ஜெனரல் கிராண்ட்: (மேஜை மீதிருக்கும் கடிகாரத்தைப் பார்த்தபடிப் பரபரப்புடன்) ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது. இதற்குள் ஜெனரல் மீடு (Major General Meade) செய்த முடிவு தெரிந்திருக்க வேண்டுமே ! (டென்னிஸைப் பார்த்து) டென்னிஸ் !

    டென்னிஸ்: (எழுந்து முன்வந்து) சொல்லுங்கள் ஸார்.

    unnamed (20)

    States that were keeping Slaves

    ஜெனரல் கிராண்ட்: இந்த தகவல் தாள்களை எல்லாம் காப்டன் டெம்பிள்மன்னிடம் (Captain Templeman) கொடுத்திடு. பிறகு கர்னல் வெஸ்டிடம் (Colonel West) கேள் : இருபத்தி மூன்றாம் படைக்குழு (Twenty Third Division) இன்னும் போர்க்களத்தில் ஈடுபட்டுள்ளதா வென்று, போகிற போது சமையல்காரரிடம் சொல் : பத்து மணிக்கு சூப்பைக் கொண்டு வரவேண்டும் எனக்கு என்று. நேற்று அனுப்பியது குளிர்ந்து போய் விட்டதென்று புகாரிடு ! இன்றாவது சூடாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்.

    டென்னிஸ்: அப்படியே சொல்கிறேன் ஸார் ! (வேகமாய்ப் போகிறான்)

    unnamed (21)

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! கொடு அந்த தளப்படத்தை (Map) ! (மாலின்ஸ் தளப்படத்தைக் கொடுக்கிறார்) (கிராண்ட் சில நிமிடங்கள் ஊன்றிப் பார்த்த பின்) எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை ! மேஜர் மீடு தூக்கிப் போனால் ஒழிய சில மணி நேரங்களில் முடிய வேண்டிய போரிது ! ஜெனரல் ராபர்ட் லீ பெரிய வீரர்தான் ! ஆனால் அவர்கூட இப்போது மீள முடியாமல் சிக்கிக் கொண்டார் ! (தளப்படத்தில் பென்சிலால் வட்டமிடுகிறார்)

    காப்டன் மாலின்ஸ்: ஜெனரல் ! இதுதான் தென்னவரின் இறுதி மூச்சு ! அவரது முதுகெலும்பு முறிந்தது ! அவர்கள் நம்மிடம் சரண் அடைவதைத் தவிர வேறு கதியில்லை ! இதுதான் இறுதி முடிவு !

    ஜெனரல் கிராண்ட்: (சிரித்துக் கொண்டு) ஜெனரல் ராபர்ட் லீ சரணடைந்தால் நாமெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போகலாம் !

    unnamed (22)

    Lincoln’s Famous Gettysburg Speech

    காப்டன் மாலின்ஸ்: கடவுளே ! மகத்தான நிகழ்ச்சியாக இருக்கும் ஜெனரல் !

    ஜெனரல் கிராண்ட்: அமெரிக்க வரலாற்று மகத்துமாக இருக்கும் ! ஒரே குண்டில் இரண்டு கோட்டைகள் வீழ்கின்றன ! பிரிந்த மாநிலங்கள் ஒருங்கிணையும் ! அடிமைக் கறுப்பருக்கு விடுதலை ! ஆனால் அதற்கு பெருத்த வெகுமதி அளித்தோம், ஆயிரக் கணக்கான உயிர்ப்பலிகள் !

    காப்டன் மாலின்ஸ்: என் மனைவி மகனை எல்லாம் சீக்கிரம் பார்க்கப் போகிறோம் என்பதை நினைத்தாலே இனிக்கிறது.

    ஜெனரல் கிராண்ட்: நீ சொல்வது உண்மை மாலின்ஸ் ! அடுத்த வாரம் என் மகன் பள்ளிக்கூடம் போகிறான். நானும் அவன் கூடச் சென்று பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வருவேன்.

    (டென்னிஸ் வருகிறான்)

    டென்னிஸ்: (சல்யூட் செய்து) ஜெனரல் ஸார் ! இருபத்தி மூன்றாம் படைக்குழு இன்னும் போர் புரிவதாகக் கர்னல் வெஸ்ட் கூறுகிறார் ! சமையல்காரர் வருத்தம் தெரிவித்தார் சூப் குளிர்ந்து போனதற்கு !

    ஜெனரல் கிராண்ட்: நன்றி டென்னிஸ் ! நீ போகலாம் ! (டென்னிஸ் போகிறான்) (மாலின்ஸைப் பார்த்து) அந்த துப்பாக்கிகளை இன்று பகலில் அனுப்பினீரா ?

    காப்டன் மாலின்ஸ்: ஆமாம் ஜெனரல் ! சொன்னபடி அனுப்பி விட்டேன்.

    unnamed (23)

    (அப்போது ஒரு பணியாள் வருகிறான்)

    பணியாள்: (சல்யூட் செய்து) பிரசிடெண்ட் லிங்கன் இங்கு வந்து கொண்டிருக்கிறார்

    (ஜெனரல் கிராண்ட், காப்டன் மாலின்ஸ் இருவரும் எழுந்து நிற்கிறார்கள். லிங்கன் உள்ளே நுழைகிறார். பின்னால் மிஸ்டர் ஹேயும் வருகிறார். லிங்கன் கரம் நீட்டி ஜெனரல் கையை முறுவலுலோடு குலுக்குகிறார். காப்டன் மாலின்ஸ் சல்யூட் செய்வதற்கு லிங்கன் பதில் சல்யூட் செய்கிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: என்னால் பொறுத்திருக்க முடியவில்லை ! போர் எப்படி நடக்கிறது ?

    (லிங்கன், கிராண்ட், மாலின்ஸ் மூவரும் நாற்காலியில் அமர்கிறார்கள்)

    ஜெனரல் கிராண்ட்: ஜெனரல் மீடு தகவல் அனுப்பியுள்ளார் : ஜெனரல் ராபர்ட் லீயும் அவரது படைகளும் முப்புறம் அடைபட்டு விட்டதாம். இன்னும் உள்ளது மூன்று மைல் தூரம்தான் ! அதுவும் குறுகிக் கொண்டே போகுது !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியால் போர் முடியப் போகுது ! கடவுளுக்கு நன்றி கூறுவேன் கோடி முறை !

    ஜெனரல் கிராண்ட்: இந்த மூன்று மைல் தூரப் போரில் ஏதாவது திடீர் மாறுதல் ஏற்பட்டால் ஒழிய வேறு சந்தேகம் இல்லை ! போர் ஓயப் போகுது உண்மை ! ஜெனரல் மீடு அனுப்பும் கடைசித் தகவலை எதிர்ப்பார்த்துள்ளேன் !

    unnamed (24)

    ஆப்ரஹாம் லிங்கன்: இனிமேல் எங்காவது போர் நடக்குமா ?

    ஜெனரல் கிராண்ட்: இன்றிரவு மட்டும் ஓரிரண்டு இடங்களில் நடக்கலாம் ! நடக்காமல் முடங்கி ஓய்ந்தும் போகலாம் ! ஆனால் ராபர்ட் லீக்குத் தெரியும் ! இனி ஒரு பலனும் அவருக்கு இல்லை ! சரண் அடைவதைத் தவிர ஜெனரல் லீக்கு வேறு வழியில்லை ! அடைப்பட்டு விட்டார் ! நமது முற்றுகையிலிருந்து அவர் இனிமேல் தப்பவே முடியாது !

    (பணியாள் வந்து ஒரு தகவல் தாளை ஜெனரல் கிராண்ட் கையில் தந்து விட்டுப் போகிறான்)

    ஜெனரல் கிராண்ட்: (முறுவலுடன்) நல்ல செய்தி ! திட்டமிட்டபடி நமது படையினர் முப்புறமும் சுற்றிக் கொண்டாராம் ! ராபர்ட் லீ சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை ! ஜெனரல் மீடு 10 மணி நேர அவகாசம் லீயிக்குக் கொடுத்திருக்கிறாராம் ! சரண் அடைய வேண்டும் ! அல்லது சாகத் துணிய வேண்டும் ! காலை ஆறு மணிக்குள் போரின் முடிவு தெரிந்து விடும் ! (அந்த தகவல் தாளை ஜெனரல் கிராண்ட் லிங்கனிடம் தருகிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: கடவுளின் கருணை நமது பக்கம் விழுகிறது. ஜெனரல் ராபர்ட் லீயை அடைத்து முற்றுகை செய்வது அத்துணை எளியதா ? ஜெனரல் மீடு பாராட்டுக்குரியவர் !

    ஜெனரல் கிராண்ட்: எனது சம்பவ நிரலின்படி இதுதான் இறுதித் தளப்போர் ! இனிமேல் எந்த இடமும் இல்லை !

    ஆப்ரஹாம் லிங்கன்: பயங்கர யுத்தம் ! நம் பக்கம் யாருக்கும் தண்டனை தர வேண்டுமா ?

    ஜெனரல் கிராண்ட்: ஆமாம் பிரசிடெண்ட் ! ஒரு குற்றவாளியைச் சுட வேண்டும் நாளை !

    unnamed (25)

    ஆப்ரஹாம் லிங்கன்: சுடுவதைத் தவிர்க்க முடியாதா ? யாரவன் ?

    காப்டம் மாலின்ஸ்: அவன் ஓர் அயோக்கியன் ! பெயர் வில்லியம் ஸ்காட் ! காலை சூரியோதயத்திற்கு முன் அவன் அத்தமித்துப் போவான் ! சுட்டுத் தள்ளும் குழு காலையில் அவனைச் சுட்டுத் தள்ளும் ! நாளை இந்நேரம் அந்த ஆளைக் காண மாட்டோம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: எங்கே இருக்கிறான் இப்போது ? செம்மையாக விசாரணை செய்தீரா ?

    காப்டன் மாலின்ஸ்: ஆமாம் பிரசிடெண்ட் ! ஜெயிலுக்குள் இருக்கிறான் ! காவல் செய்யும் போது தூங்கி விழுந்து நமது படைக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பளித்தவன் ! அவன் நாட்டுத் துரோகி !

    ஆப்ரஹாம் லிங்கன்: அவன் சாவதற்குள் நான் ஒருமுறை பேச வேண்டும் ! அழைத்து வாருங்கள் என்னிடம் !

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! அழைத்து வாருங்கள் துரோகி வில்லியம் ஸ்காட்டை !

    (காப்டன் மாலின்ஸ் விரைவாகப் போகிறார்)

    unnamed (26)

    +++++++++++++

    எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள். இப்போது நாம் அத்தேசம் அல்லது அவ்விதம் உருவாகிப் வலுப்பெற்ற ஒரு தேசம் நெடுங்காலம் பொறுத்துக் கொள்ளும் ஒரு பெரும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போரின் பெருங்களத்தில் நாமெல்லாரும் போராடச் சந்தித்தோம். அக்களத்தின் ஒரு பகுதியைப் போரில் உயிர் கொடுத்தோருக்கு ஓய்விடமாய் அர்ப்பணித்து நம் தேசம் நீடித்திருக்க முற்படுகிறோம். நாம் ஒருங்கே கூடி இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளளும் தகுதி உடையது.

    நாம் செய்ய வேண்டி எஞ்சியுள்ள உன்னத பணிகளை முடித்து விட நம்மை நாம் இங்கே அர்ப்பணித்துக் கொள்வோம். மேன்மையான தேச நேசமுடன் உயிர் கொடுத்தோர் மூலமாக எதற்குப் போராடித் தம்மை முழுமையாகக் கொடுத்தாரோ அக்கொடை வீணாகாமல் அதே காரணத்துக்காக நாமும் மிகுந்த நேசமுடன் தீர்மானம் செய்வோம். இந்த தேசம் கடவுளுக்குக் கீழ்ப் படிந்து குடிமக்களுடைய அரசாங்கம், குடிமக்களுக்காக அரசங்கம், குடிமக்கள் ஆளும் அரசாங்கம் என்பவை பூமியிலிருந்து அழியாது புதியதோர் சுதந்திரத்தைப் பிறப்பிக்கும்.

    ஆப்ரஹாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் பேருரை (நவம்பர் 19, 1863)

    unnamed (27)

    “யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் நாம் கவனமாய்க் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)

    உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -2

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், ஆப்ரஹாம் லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட், காப்டன் மாலின்ஸ், படைவீரன் டென்னிஸ் மற்றும் படைவீரன் வில்லியம் ஸ்காட்.

    இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு வேளாண்மைக் குடிசை.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். ஜெனரல் கிரான்ட் மேஜை முன்பாக அமர்ந்து காப்டன் மாலின்ஸோடு உரையாடுகிறார். கிரான்ட் வாயில் சுருட்டை ஊதிக் கொண்டு கையில் விஸ்கி பாட்டிலை வைத்திருக்கிறார். படைவீரன் டென்னிஸ் மேஜை ஓரத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான். மரண தண்டனை விதிக்கப்பட்ட படைவீரன் வில்லியம் ஸ்காட்டை விலங்கிட்டு லிங்கன் முன்பாக இழுத்து வருகிறார் படைக் காவவர் இருவர்.

    நேரம்: மாலை வேளை.

    unnamed (28)

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! அழைத்து வாருங்கள் துரோகி வில்லியம் ஸ்காட்டை !

    (காப்டன் மாலின்ஸ் விரைவாகப் போகிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: அவன் செய்த குற்றம்தான் என்ன ?

    ஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட் ! மன்னிக்க முடியாத குற்றம் ! மரண தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது அவனுக்கு ! நாளைக் காலை உதயத்தில் சுட்டுத் தள்ளும் பட்டாளம் அவனைச் சுட்டுக் கொல்லும்.

    ஆப்ரஹாம் லிங்கன்: தண்டனை கொடியதாகத் தெரிகிறது ! குற்றமென்ன செய்தான் கூறுவீர் ?

    ஜெனரல் கிரான்ட்: நேற்றுச் செய்த காவல் காப்பில் அவன் தூங்கிப் போய்விட்டான் ! கடமை உணராத கயவன் அந்தப் படைவீரன் ! அவனுக்கு மன்னிக்கத் தகுதியில்லாதவன் மிஸ்டர் பிரசிடென்ட் ! அத்தகைய மாந்தர் மன்னிக்கப் படுவதால் இராணுவத்தின் ஒழுக்க விதிகள் கறைபட்டு விடுகின்றன. அந்தச் சமயத்தில் பகைவர் யாராவது நமது இராணுவப் படை முகாமுக்குள் நுழைந்திருந்தால் என்னவாகும் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: ஏன் தூங்கிப் போனான் என்று விசாரித்தீரா ?

    ஜெனரல் கிரான்ட்: விசாரணையில் நானும் கலந்து கொண்டேன், மிஸ்டர் பிரிசிடென்ட் வில்லியம் ஸ்காட் இரட்டை வேளைப் பணி புரிய (Double Guard Duty) ஒப்புக் கொண்டான். காரணம் நோயில் விழுந்த அவன் தோழனுக்கு உதவி செய்ய ! அவன் காவற் கூண்டில் தூங்கிக் கிடந்ததைப் படைவீரர் சிலர் கண்டுபிடித்துப் புகார் செய்தனர் !

    ஆப்ராஹாம் லிங்கன்: மிஸ்டர் கிரான்ட் ! உமது நியாயத் தீர்ப்பு என்ன ? சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு தண்டனை கொடுக்க முடியாதா ?

    ஜெனரல் கிரான்ட்: மரண தண்டனையைத் தவிர்த்து வெறும் தண்டனை விதிக்கத்தான் நானும் முதலில் நினைத்தேன். இராணுவச் சட்டப்படிச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற விதியை முறிக்க விருப்பமில்லை எனக்கு ! போர் மும்முரத்தில் மிகச் சிக்கலான தருணம் ! நானே நமது இராணுவச் சட்டத்தை முறிக்கத் தயங்கினேன் ! நாளை காலை உதயத்திற்குள் கயவன் சுடப்பட வேண்டும். அதுதான் என் முடிவும் தீர்ப்பும் !

    ஆப்ரஹாம் லிங்கன்: போர் முடியும் தருவாயில் இன்னும் ஓர் உயிர் போக வேண்டுமா ? இனிமேல் யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை ! எங்கே அவன் ?

    காப்டன் மாலின்ஸ்: ஈதோ ! ஸ்காட்டை அழைத்து வருகிறார்.

    (கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்ட வில்லியம் ஸ்காட்டை இரு படைக் காவலர் இழுத்து வருகிறார். மரண நிழல் அவன் முகத்தில் தெரிகிறது. இருபது வயதுப் படை வாலிபன் லிங்கனைக் கண்டதும் விழிக்கிறான்.)

    unnamed (29)

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் பெயர் என்ன ?

    படைவீரன்: வில்லியம் ஸ்காட் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நான் யாரென்று தெரியுமா ?

    வில்லியம் ஸ்டாட்: தெரியும் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் வயதென்ன ? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் நீ ?

    வில்லியம் ஸ்காட்: இருபது ஸார் ! வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: உன்னை இராணுவக் குற்றவாளியாய்ச் சிறை செய்திருப்பதாக ஜெனரல் சொல்கிறார்.

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: காவல் காக்கும் கூடத்தில் நீ தூங்கினாயா ?

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: கடமைப் பணியில் தூங்கிப் போவது தீவிரக் குற்றம் தெரியுமா ?

    வில்லியம் ஸ்காட்: அதை நான் அறிவேன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நின்று கொண்டு காவல் புரியும் போது எப்படித் தூக்கம் வந்தது ?

    வில்லியம் ஸ்காட்: கண்விழிக்க முடியவில்லை ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: என்ன நீண்ட தூரம் கால்நடைக் காவல் புரிந்தாயா ?

    வில்லியம் ஸ்காட்: இருபத்தி மூன்று மைல்கள் நடந்தேன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நீ இரட்டை வேளைக் காவல் வேறு செய்தாயா ?

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !

    unnamed (30)

    ஆப்ரஹாம் லிங்கன்: யார் உனக்கு இரட்டை வேளைப் பணி கொடுத்தது ?

    வில்லியம் ஸ்காட்: யாரும் ஆணையிடவில்லை ஸார் ! நானே முன்வந்து செய்தேன் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஏன் அப்படிச் செய்தாய் ?

    வில்லியம் ஸ்காட்: வேலை செய்ய வேண்டிய என் தோழன் ஏனாக் ஒயிட் (Enoch White) நோயில் படுத்து விட்டான் ஸார். கடும் காய்ச்சல் அவனுக்கு ! நான் அவனுக்காக அவன் வேலையை எடுத்துக் கொண்டேன் ஸார். நாங்கள் இருவரும் வெர்மான்டைச் சேர்ந்தவர்கள் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: வெர்மான்டிலா நீ வசிக்கிறாய் ?

    வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் ! எங்களுடைய வயல் அங்கேதான் இருக்குது ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: இப்போது யாரந்த வயலை மேற்பார்வை செய்வது ?

    வில்லியம் ஸ்டாட்: என் தாயார் ஸார் ! என்னிடம் தாயின் படம் உள்ளது ஸார். (பையிலிருந்து ஒரு படத்தை எடுக்கிறான்.)

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் தாயிக்கு நீ செய்த குற்றம் தெரியுமா ? நீ நாளைக் காலையில் சுடப் பட்டுச் சாகப் போவது உன் தாயிக்குத் தெரியமா ?

    வில்லியம் ஸ்காட்: தாயிக்குத் தெரியாது ஸார் ! தாயிக்குச் சொல்லக் கூடாது ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: தாயிக்கு ஏன் தெரியக் கூடாது என்று சொல்கிறாய் ?

    unnamed (31)

    Fig. 6 The Beginning of the End

    வில்லியம் ஸ்காட்: நான்தான் சாகப் போகிறேன் நாளைக்கு ! அந்தச் செய்தியைக் கேட்டு என் தாய் சாகக் கூடாது ஸார் ! நான் உயிரோடு இருக்கிறேன் என்பது என் தாயுக்கு ஆயுளை நீடிக்கும் ஸார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா ? உன் தாய் சாக வேண்டியதில்லை ஸ்காட் ! . . . நீயும் சாக வேண்டியதில்லை ! ஒருவரைச் சுடுவதால் இருவர் ஏன் சாக வேண்டும் ?

    வில்லியம் ஸ்காட்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஸார் ? நான் குற்றவாளி. . . . ?

    ஆப்ரஹாம் லிங்கன்: யாரும் உன்னைச் சுடப் போவதில்லை நாளை !

    வில்லியம் ஸ்காட்: யாரும் என்னைச் சுடப் போவதில்லையா ஸார் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை ! இல்லை ! விடுதலை உனக்கு ! போ நீ சுதந்திர மனிதன் !

    வில்லியம் ஸ்காட்: (குப்பென அழுகையுடன்) நன்றி ஸார் ! நன்றி ஸார் ! (தரையில் மண்டியிட்டு அழுகிறான். மேலே கைகளைக் கூப்பி வணங்கிக் கண்களை மூடிக் கொள்கிறான்.)

    unnamed (32)

    Fig. 7 Lincoln’s Gettysburg Speech

    ஆப்ரஹாம் லிங்கன்: (காவலரை பார்த்து) அவிழ்த்து விடுங்கள் விலங்குச் சங்கிலியை ! அவனுக்கு விடுதலை ! அவன் பேச்சில் உண்மையைக் கண்டேன் ! அவன் கண் விழிக்க முடியாமல் போன காரணத்தை நம்புகிறேன் ! (ஜெனரல் கிரான்டைப் பார்த்து) அவன் குற்றத்தை நான் மன்னித்து விட்டதாக எழுதி நீக்கி விடுங்கள் ! ஸ்காட் ஒரு கடமை வீரன் ! அந்த நிலையில் எந்தப் படைக் காவலனும் தூங்கித்தான் போவான் ! இரட்டை வேளைக் காவல் புரியக் காப்டன் முதலில் அனுமதித்தது தவறு ! (காவலரைப் பார்த்து) ஸ்காட்டை ஜெனரல் மீடு இருக்கும் போர்க்களத்துக்குக் கூட்டிச் செல்வீர் ! சங்கிலியை நீக்குவீர் முதலில் ! ஸ்காட் சுதந்திர மனிதன் !

    (விலங்குச் சங்கிலிகளை நீக்கி விட்டுக் காவலர் வில்லியம் ஸ்காட்டை கௌரமாக அழைத்துச் செல்கிறார்)

    unnamed (33)

    ++++++++++

    “என் ஆரம்ப காலத்தில் ஜெரனல் ராபர்ட் லீ யிடமிருந்து இராணுவப் பயிற்சியில் நான் நிறைய கற்றிருக்கிறேன். அப்போது அவர் பயிற்சி அளிக்கும் படை வீரராய் இருந்தார். எங்கள் எல்லாரையும் விடப் பன்முறையில் உயர்ந்தவர் ராபர்ட் லீ ஒருவர்தான் ! பகைவர் ஆயினும் உயர்ந்த வீரர் அவர் ! இந்த ஒப்பந்த நிகழ்ச்சி எனக்கு மிக்க உணர்ச்சி பொங்குவதாய் இருக்கும் ! என் முன் தலை குனியும் ஜெனரல் ராபர்ட் லீயைக் காணவே என் கண்கள் கூச்சம் அடையும் ! வாய் பேசவே நாணும் ! கைகள் குலுக்கவே தயங்கும் ! கால்கள் நிற்கவே நடுங்கும் !”

    அமெரிக்க யூனியன் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட்

    “. . . தனிப்பட்ட உரிமைகளுக்கும், கொடைகளுக்கும் காரணமான கடவுளின் நியாயத்தைப் போற்றி நமது தேசத்தின் பிறழ்ந்த போக்கிற்கும், கீழ்ப்படியாமைக்கும் பாப மன்னிப்பு கேட்கட்டும் அவர்கள் (தென்னவர்) ! அத்துடன் வேதனை தரும் உள்நாட்டுப் போராட்டத்தில் விலக முடியாது பங்கெடுத்தவரால் விதவையானோர், அனாதியானோர், துக்கமடைவோர், துன்பப்படுவோர் ஆகியோருக்குக் கடவுள் கருணை காட்ட வழிபடட்டும் அவர்கள் ! மேலும் சமாதானத்தை அனுபவிக்கவும், சீரிய மனநிலை நிலவிடவும், ஐக்கியப் பண்பாடு அமைந்திடவும், கடவுளின் கரங்கள் தேசக் காயங்களை ஆற்றி விரைவில் மீண்டும் புத்துயிர் பெற மெய்வருந்திப் பிரார்த்திக்க வேண்டும் அவர்கள்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (அறுவடை நன்றிப் பொழுவுரை) (Proclamation of Thanksgiving) (அக்டோபர் 3, 1863)

    unnamed (34)

    “மாஸ்ஸசுசெட்ஸ் ஜெனரலின் இடத்தில் பணிபுரியும் அதிகாரி தான் தயாரித்த ஓர் அரசாங்கப் போர் அறிக்கையை எனக்குக் காட்டினார். போர்க்களத்தில் புகழோடு உயிரைப் பலிகொடுத்த ஐந்து புதல்வரின் அன்னை நீதான் என்பதை அந்த அறிக்கையில் நான் கண்டேன். அந்தப் பேரிழப்பின் சோகத்திலிருக்கும் உனக்கு நான் ஆறுதல் கூற முயலும் வார்த்தைகள் எப்படி வலுவிழந்து பலனற்றதாய் நேர்மையின்றி இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் உயிர் கொடுத்துப் பாதுகாத்த நமது குடியரசின் நன்றியைப் பரிவோடு உனக்குக் கூறாமல் என்னால் சும்மா இருக்க இயலாது. நமது மேலுலகப் பிதாவிடம் உனது பேரழப்பு வேதனையைக் குறைக்க நான் பிரார்த்திக்கிறேன். விடுதலைப் பலி பீடத்தில் உனது நேசப் புதல்வர் அனைவரும் உன்னதத் தியாகம் செய்த பெருமையை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (நவம்பர் 21, 1864)

    உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -3

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட், ஹே, மற்றும் காவலர் பணியாட்கள்.

    இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு தற்காலியக் கூடாரம்.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். போர்க்கூடாரத்தில் ஆப்ரஹாம் லிங்கனும் ஹேயும் தூங்கிக் கொண்டிருக்கிறார். பொழுது புலர்ந்து வெளுக்கிறது. பணியாள் சுடச்சுட ஆவி பொங்கும் கா·பியைச் சில பிஸ்கட்டுகளுடன் தட்டில் ஏந்தி வருகிறான். ஆப்ரஹாம் லிங்கன் மெதுவாக விழித்தெழுகிறார். பணியாள் மேஜையில் கா·பி, பிஸ்கட் தட்டை வைக்கிறான்.

    நேரம்: காலை வேளை.

    unnamed (35)

    Location of Surrender McLean House

    ஆப்ரஹாம் லிங்கன்: (விழித்து எழுந்து கொண்டு) குட் மார்னிங் !

    பணியாள்: குட் மார்னிங் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (பிஸ்கட்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு) நன்றி ! (பணியாள் போகிறான்). (ஹேயைப் பார்த்து) ஹே ! (சத்தமாக) ஹே ! எழுத்திடு ! உன் கா·பி ஆறிப் போகுது !

    ஹே: (எழுந்த வண்ணம்) குட் மார்னிங் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: குட் மார்னிங் ஹே ! கா·பியைக் குடிப்பீர் !

    ஹே: நன்றி மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: மணி என்ன ?

    ஹே: ஆறு மணி ஸார்.

    (அப்போது ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட் வேகமாக உள்ளே நுழைகிறார்)

    ஜெனரல் கிரான்ட்: குட் மார்னிங் மிஸ்டர் பிரசிடென்ட் ! குட் மார்னிங் ஹே !

    ஆப்ரஹாம் லிங்கன்: குட் மார்னிங் ஜெனரல் !

    ஹே: குட் மார்னிங் ஸார் !

    unnamed (23)

    ஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட்! நேற்றிரவு உங்கள் தூக்கத்தைக் கலைக்க நான் விரும்பவில்லை. ஜெனரல் மீடு ஒரு முக்கியத் தகவல் அனுப்பியிருந்தார். ஜெனரல் ராபர்ட் லீ காலை நான்கு மணிக்குப் போரை நிறுத்துவதாகச் சொல்லியிருக்கிறார். சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: (சற்று அமைதியாக இருந்து, கண்ணீருடன் பெருமூச்சு விட்டு) நான்கு வருடங்களாக நாமெல்லாரும் இந்த நம்பிக்கை தினத்துக்குத்தான் காத்திருந்தோம் ! மெய்யாக அந்த நாள் நம்மை நெருங்கும் போது எத்தனை எளிதாக வருகிறது ? ஜெனரல் கிரான்ட் ! நீங்கள் இந்த தேசம் பிரிந்து போகாமல் பிணைத்து விட்டதுதான் பெரிய செய்தி ! அமெரிக்க ஐக்கியத்தை நிலைநாட்டும் எனது கனவை நினைவாக்கிய போர் ஜெனரால் நீங்கள்தான் ! அடிமை கறுப்பருக்கு விடுதலை அளிக்க வேண்டும் எனது தீராத தாகத்தைத் தீர்த்தவர் நீங்கள்தான் ! அமெரிக்க வரலாற்றில் விடுதலை வீரரான உமது பெயர் வாழையடி வழியாக வந்து கொண்டே இருக்கும் ! உமது தளராதப் போர்த் திறமைக்கும், வெற்றிக்கும் எனது மனமார்ந்த நன்றி ! (கண்ணீருடன் கையை நீட்டி கிரான்ட் கரத்தைக் குலுக்குகிறார்.)

    ஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட் ! தேச ஐக்கியத்தைக் காப்பாற்றிய உங்கள் பெயர்தான் வரலாற்று முக்கியத்துவம் பெறும். ஜெனரல் ராபர்ட் லீ திறமைமிக்க ஒரு போர் வீரர் ! அவரிடம் இராணுவப் பயிற்சியைக் கற்றவன் நான் ! அவரை வீழ்த்த முடியுமா என்று நான் கலங்கியதுண்டு. என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையால்தான் நான் வெற்றி பெற்றேன் ! நீங்கள் அளித்த ஊக்கத்தால் எனக்கு இரட்டிப்பு வலுமை கிடைத்தது ! நான் மட்டும் தனியாக இந்த உள்நாட்டுப் போரை நடத்தியிருக்க முடியாது !

    unnamed (24)

    ஆப்ரஹாம் லிங்கன்: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) இப்போது எங்கே இருக்கிறார் ஜெனரல் ராபர்ட் லீ ?

    ஜெனரல் கிரான்ட்: ஜெனரல் லீ இங்கே வந்து கொண்டிருக்கிறார் ! அவருக்கும் முன்பாக நமது ஜெனரல் மீடு இங்கு வந்து விடுவார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஜெனரல் ராப்ர்ட் லீ ஒப்பந்தம் செய்ய எங்கே காத்திருப்பார் ?

    ஜெனரல் கிரான்ட்: மெக்லீன் மாளிகையில் அறை ஏற்பாடாகி இருக்கிறது மிஸ்டர் பிரசிடென்ட் ! ஜெனரல் ராபர்ட் லீயை நீங்கள் வரவேற்க வருகிறீர்களா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை ! இல்லை கிராண்ட் ! அது உங்கள் வேலை ! அதில் நான் குறுக்கிட விரும்பவில்லை ! போர்க்களத்தில் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டியது போர் புரியும் ஜெனரல் ! அரசியல்வாதிகள் அல்லர் ! ஜெனரல் ராபர்ட் லீயிடம் பரிவாக நடப்பீர் ! நமது பகைமைகள் இன்றுடன் நீங்கி விட்டன ! தேச ஐக்கியம் ஒன்றாகும் போது நமக்குள்ள விரோதங்கள் மறையட்டும்.

    ஜெனரல் கிரான்ட்: (தன் பையிலிருந்து அச்சடித்த ஒரு தாளை எடுத்து) ஈதோ ஒப்பந்த நகல் ! நான் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் படித்துப் பாருங்கள் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (தாளை வாங்கி நிபந்தனைகளைப் படிக்கிறார்) ஒப்பற்ற நிபந்தனைகள் ஜெனரல் கிரான்ட் ! நான் கூட இத்தனை பரிவுடனும், அழுத்தமுடனும் எழுதியிருக்க மாட்டேன். மேன்மையான ஒப்பந்தம் ! உங்களுக்கு மேதமை அளிக்கும் ஒப்பந்தம் ! (கிரான்டிடம் தாளைத் திருப்பிக் கொடுக்கிறார்)

    (அப்போது ஒரு பணியாள் சல்யூட் செய்து உள்ளே நுழைகிறான்.)

    பணியாள்: ஜெனரல் மீடு வந்திருக்கிறார் இங்கே !

    unnamed (25)

    ஜெனரல் கிரான்ட்: உள்ளே வரச் சொல் அவரை ! (பணியாள் போகிறான்.) (லிங்கனைப் பார்த்து) என் ஆரம்ப காலத்தில் ஜெரனல் ராபர்ட் லீ யிடமிருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அப்போது அவர் காப்டனாக இருந்தார். எங்கள் எல்லாரையும் விடப் பன்முறையில் உயர்ந்தவர் ராபர்ட் லீ ஒருவர்தான் ! பகைவர் ஆயினும் உயர்ந்த வீரர் அவர் ! இந்த ஒப்பந்த நிகழ்ச்சி எனக்கு மிக்க உணர்ச்சி பொங்குவதாய் இருக்கும் ! என் முன் தலைகுனியும் ஜெனரல் ராபர்ட் லீயைக் காணவே என் கண்கள் கூச்சம் அடையும் ! வாய் பேசவே நாணும் ! கைகள் குலுக்கவே தயங்கும் ! கால்கள் நிற்கவே நடுங்கும் !

    ஆப்ரஹாம் லிங்கன்: நான் மகிழ்ச்சி அடைகிறேன், ஜெனரல் கிரான்ட் போர் ஒப்பந்தத்தைத் தைரியமாய்ச் செய்கிறார் என்று !

    (அப்போது ஜெனரல் மீடு உள்ளே நுழைகிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: வாழ்த்துக்கள் ஜெனரல் மீடு ! செயற்தக்க செய்கை செய்தீர் ! பெறத்தக்க வெற்றியைப் பெற்றீர் ! பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ! (ஜெனரல் மீடின் கையைக் குலுக்குகிறார்)

    unnamed (36)

    +++++++++

    கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற உடன்பட மாட்டேன் ! ஆனால் இப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது : டச் நாட்டுக் கிராமத்தான் ஒருவன் தன் தோழனிடம் ஒரு சமயம் சொன்னானாம். “ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் போது வண்டியில் குதிரையை மாற்றக் கூடாது” என்று.

    ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போது (ஜூன் 9, 1864)]

    “நாம் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே. நாம் பகைவராக மாறிவிடக் கூடாது. உணர்ச்சி ஆவேசத்தில் நமக்குள் மனமுறிவு ஏற்பட்டாலும் நமது பாசமும் பந்தமும் அறுந்துவிடக் கூடாது. புதிரான நினைவு அம்புகள் ஒவ்வொரு போர்க் களத்திலிருந்தும், தேசீய இடுகாட்டிலிருந்தும் நீண்டு, அகண்ட இந்த நிலத்தில் உயிருடன் வாழும் ஓர் இதயத்தையும் தொடும். அந்தத் தடத்தை மனிதப் பண்பாட்டின் தெய்வீகம் மறுபடியும் தொடும் போது அமெரிக்க ஐக்கிய முழக்கத்தை ஓங்கி உயர்த்தி வலுப்படுத்தும்.

    ஆப்ரஹாம் லிங்கன், முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)

    என்னுடைய சித்தாந்த நியதியில் திடீர் நிகழ்ச்சிகள் (Accidents) என்று குறிப்பிடப்படும் சம்பவங்கள் கிடையா ! ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும். நிகழ்கால விளைவுக்குக் காரணம் கடந்த காலம் ! அதுபோல் எதிர்கால விளைவுக்குக் காரணம் நிகழ்காலம். இவை யெல்லாம் முடிவற்ற ஒரு தொடர்ச் சங்கிலியாக எல்லைக் குட்பட்ட நிலையிலிருந்து முடிவில்லா நிலைக்கு நீள்பவை.

    ஆப்ரஹாம் லிங்கன்

    unnamed (37)

    போர் முடிந்து சமாதான ஒப்பந்தம்

    (ஏப்ரல் மாதம் 1865)

    காட்சி -5 பாகம் -4

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், லிங்கனுக்குக் கீழ்ப் பணி செய்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிராண்ட், ஹே, மாலின்ஸ் மற்றும் காவலர் பணியாட்கள். சரணடையும் தென்னக ஜெனரல் ராபர்ட் லீ மற்றும் அவரது துணைத் தளபதிப் படை வீரர்கள்.

    இடம் : வெர்ஜினியா: போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு தற்காலியக் கூடாரம். பிறகு சாமாதான ஒப்பந்தம் செய்யும் மெக்லீன்ஸ் மாளிகை.

    இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடிந்து தென்னகத்தின் ஜெனரல் ராபர்ட் லீ தோல்வியுற்று முன்வந்து சரணடைகிறார். ஜெனரல் லீ சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மெக்லீன்ஸ் மாளிகையில் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. ஜெனரல் கிராண்டை ஒப்பந்தம் செய்ய விட்டு விட்டு லிங்கன் வாஷிங்டன் போகிறார்.

    நேரம்: பகல் வேளை.

    unnamed (38)

    Fig. 3 The Signing Ceremony of Surrender

    ஆப்ரஹாம் லிங்கன்: வாழ்த்துக்கள் ஜெனரல் மீடு ! செயற்தக்க செய்கை செய்தீர் ! பெறத்தக்க வெற்றியைப் பெற்றீர் ! பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ! (ஜெனரல் மீடின் கையைக் குலுக்குகிறார்)

    ஜெனரல் மீடு: (கையைக் குலுக்கியபடி) மிக்க நன்றி மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: போர் ஓய்ந்து விட்டதா ? அல்லது இன்னும் நடந்து கொண்டிருக்கிறதா ?

    ஜெனரல் மீடு: கடுமையாக சுமார் இரண்டு மணி நேரம் இன்று போர் நடந்தது ! அதோடு போர் ஓய்ந்தது ! மிஸ்டர் பிரசிடென்ட் ! போர் முடிந்தது !

    ஆப்ரஹாம் லிங்கன்: மிக்க நன்றி கடவுளுக்கு ! மிக்க நன்றி உங்களுக்கு ! இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் ஜெனரல் ராபர்ட் லீ தங்கி இருக்கிறார் ?

    ஜெனரல் மீடு: பக்கத்தில்தான் தங்கியிருக்கிறார் ஜெனரல் லீ ! மிஸ்டர் பிரசிடென்ட் ! நாம் குறிப்பிடும் இடத்தில் நம்மைச் சந்திப்பதாகவும் சொல்லித் தகவல் அனுப்பியிருக்கிறார். இன்று சரண்டைய நம்மிடம் வருகிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: நல்ல செய்தி ! நானொன்று கேட்க வேண்டும். வாலிபப் பையன் ஒருவன் உங்கள் இராணுவ முகாமுக்கு நேற்று வந்தானா ? அவன் பெயர் வில்லியம் ஸ்காட் !

    unnamed (39)

    ஜெனரல் மீடு: ஆமாம் மிஸ்டர் பிரசிடென்ட் ! வந்தவனை நேராக போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தோம் ! ஆனால் ஸ்காட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆனால் என்று ஏன் நிறுத்திக் கொண்டீர் ?

    ஜெனரல் மீடு: (வருத்தமோடு) ஸ்காட் எதிரிகளால் சுடப்பட்டு மாண்டான் மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (ஆர்வமோடு) என்ன ? போரில் கொல்லப் பட்டானா அந்த அப்பாவி வாலிபன் ? பாவம் அவன் அன்னை ! போர் முடிந்து தாயைக் காண ஆவலோடிருந்தான் ! இப்போது போர் முடியும் போது அவன் ஆயுளும் முடிந்தது !

    ஜெனரல் மீடு: ஆமாம் மிஸ்டர் பிரசிடென்ட் ! நீங்கள்தான் காப்பாற்றியதாகச் சொல்லி ஆனந்தம் அடைந்தான் அந்த வாலிபன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (வருத்தமுடன்) நமது ·பயரிங் ஸ்குவாடால் மாள வேண்டியன், பிழைத்துச் சென்று இறுதியில் போரிட்டு வீர மரணம் அடைந்தான் ! விநோதமான உலகம் இது ! போர்க் களத்தில் வீர மரணம் அடைய வேண்டும் என்று கடவுள் அவனைப் படைத்திருக்கிறார். (ஜெனரல் கிராண்டைப் பார்த்து) கிராண்ட் ! வில்லியம் ஸ்காட்டுக்கு வெறி விழாவில் வீரப் பதக்கம் அளிக்க வேண்டும் நீங்கள் !

    ஜெனரல் கிராண்ட் (பையிலிருந்த தாளில் வில்லியம் ஸ்காட் பெயரைக் குறித்து) மறக்க மாட்டேன் அந்த வாலிபனை மிஸ்டர் பிரசிடென்ட் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (ஜெனரல் மீடைப் பார்த்து) புரட்சிக்காரர் யாரும் உயிரோடு பிடிக்கப் பட்டுள்ளாரா ?

    ஜெனரல் கிராண்ட்: நூற்றுக்கு மேலாக இருக்கிறார் ! அவர்களைத் தூக்கில் போடவா அல்லது. ·பயரிங் ஸ்காவாட் சுட்டுத் தள்ளவா என்று யோசிக்கிறேன் !

    unnamed (21)

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை ! இல்லை ! இனி யாரையும் சுடவும் வேண்டாம் ! கயிற்றில் சுருக்கிடவும் வேண்டாம் ! எத்தனைக் கொடிய புரட்சிக்காரராக இருந்தாலும் சரி அவரை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்துங்கள் பயமுறுத்தி ! அது போதும் ! சிறைக் கதவுகளைத் திறந்து விடுங்கள் ! போர்க் கைதிகளைப் பயமுறுத்தி விரட்டி விடுங்கள் ! குட் பை கிராண்ட் ! சமாதான உடன்படிக்கை முடிந்த பிறகு விரைவில் வாஷிங்டனுக்கு வாருங்கள் ! போருக்குப் பிறகு தென்னக மாநிலங்களின் நிலையைக் கண்காணிப்பது பற்றி நான் உரையாட வேண்டும்.

    (கிராண்ட் கைகளைக் குலுக்கி விட்டு லிங்கன் வெளியே போகிறார். எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்கிறார். ஜெனரல் மீடு சல்யூட் செய்கிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (ஜெனரல் மீடைப் பார்த்து) யார் ஜெனரல் ராபர்ட் லீயுடன் இருப்பது ?

    ஜெனரல் மீடு: அவரது லெஃப்டினென்ட் ஜெனரல்தான் கூட இருப்பவர் ஸார் !

    ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! ஜெனரல் ராபர்ட் லீ மாளிகைக்கு வருவதை உடனே அறிவிக்க வேண்டும் நீ ! ஜெனரல் மீடு ! நீங்கள்தான் ஜெனரல் லீயை வரவேற்க வேண்டும் மாளிகையில் !

    மாலின்ஸ்: அவரது வருகையை அறிவிக்கிறேன் ஸார் !

    ஜெனரல் மீடு: ஜெனரல் லீயை நான் வரவேற்கிறேன் ஸார் !

    ஜெனரல் கிராண்ட்: சமாதான ஒப்பந்தம் எனது பெரிய பணி ! சரித்திர முக்கியத்துவம் பெறும் மகத்தான தேசப்பணி !

    unnamed (40)

    ஜெனரல் மீடு: ஆமாம் ஸார் ! இதற்குத்தான் நான்கு ஆண்டுகள் நாம் போராடினோம் ! ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்தோம் ! இந்த தருணத்துக்குத்தான் நாம் காத்திருந்தோம் !

    ஜெனரல் கிராண்ட்: நமது போராட்டத்தில் நியாயம் இருந்தது ! நாம் யாவரும் நமது குறிக்கோளை முழுமையாய் நம்பினோம் ! நமது வெற்றி உன்னதமானது ! நமது தீர்மானம் வலுவானது ! ஒரு பெரும் போர்த் தளபதியை வெல்லும் திறமை நமக்கு உண்டானது ! அத்தனை தகுதிகளும் ஆப்ரஹாம் லிங்கனால் கிடைத்தவை ! அவரது உயர்ந்த குறிக்கோள் வெற்றி ஈந்தது நமக்கு ! போருக்குத் தகுந்த காரணம் கிடைத்தது ! லிங்கனின் தளராத ஊக்கம் நமக்குக் கிடைத்தது ! நாம் எல்லாம் தலைநிமிர்ந்து வெற்றி நடைபோட வைத்த பெருமை லிங்கனைச் சாரும் !

    ஜெனரல் மீடு: ஆமாம் ஸார் ! பிரிந்து போன மாநிலங்களை சேர்த்த பெருமை பிரசிடென்ட் லிங்கனையே சாரும் !

    ஜெனரல் கிராண்ட்: உங்களுக்குத் தெரியுமா ? ரிப்பபிளிகன் கட்சியில் சில முட்டாள்கள் அடுத்த தேர்தலில் பிரசிடெண்ட் லிங்கனை நான் எதிர்த்து நிற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார் ! என் சுயப் பெருமை எனக்கு இருக்குது ! ஆப்ரஹாம் லிங்கன் உயிரோடு உள்ளது வரை அவர்தான் அமெரிக்காவின் பிரசிடென்ட் ! எனக்கும் உமக்கும் பிரசிடென்ட் ! நான் அவருக்குப் பிறகுதான் !

    மாலின்ஸ்: (உள்ளே வந்து கொண்டே) ஜெனரல் ராபர்ட் லீ மாளிக்கைக்கு வந்திருக்கிறார் !

    ஜெனரல் மீடு: ஜெனரல் கிராண்ட் ! நான் ஜெனரல் லீயை வரவேற்றுச் சமாதான உடன்பாடு ஏற்பாடுகளைச் செய்கிறேன்.

    unnamed (23)

    (ஜெனரல் மீடு சல்யூட் செய்து தனது உடைவாளை மாட்டிக் கொண்டு மாளிகைக்குப் போகிறார். ஒப்பந்த மாளிகையில் ஜெனரல் மீடு வரவேற்கிறார் தென்னகத்தின் ஜெனரல் ராபர்ட் லீ தன் உடைவாளுடன் உள்ளே நுழையும் போது. பின்னால் அவரது படையாட்கள் தொடர்கிறார். ஜெனரல் லீயின் முகம் சோகமாகத் தெரிகிறது. ஜெனரல் யுலிஸிஸ் கிராண்ட் தன் படைகளுடன் உள்ளே நுழைகிறார். ஜெனரல் கிராண்ட் கைதூக்கி சல்யூட் செய்ய ஜெனரல் ராபர்ட் லீயும் சல்யூட் பதிலுக்குச் செய்கிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (ஜெனரல் லீயை பார்த்து) ஸார் ! உங்கள் விஜயம் எனக்குப் பெரு மதிப்பாகத் தெரிகிறது ! உங்கள் வருகையால் நாங்கள் பெருமை பெறுகிறோம்.

    ஜெனரல் ராபர்ட் லீ: (பணிவுடன்) உங்கள் வெற்றியை நான் ஏற்றுக் கொள்கிறேன் ! எனது வலிமை குன்றவில்லை ! ஆனாலும் என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் ! நிபந்தனை யற்ற சரணம் என்பக்கம் ! நான் எந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள் ஜெனரல் கிராண்ட் !

    ஜெனரல் கிராண்ட்: (மேஜை மீதிருந்த பெரிய உறையிலிருந்து அச்சடித்த தாளை எடுத்து ஜெனரல் லீயிடம் கொடுக்கிறார்.) நிபந்தனைகள் எல்லாம் எளியவைதான் ! உங்களால் முடியாத வினைகள் அல்ல ! உங்களுடைய ஒப்புதலுக்கு ஏற்றவை என்பது என் அபிப்பிராயம் !

    ஜெனரல் ராபர்ட் லீ: (கையில் வாங்கிப் படித்த பிறகு) எல்லாம் பரிவோடு எழுதப்பட்டவை. ஒப்புக் கொள்கிறேன் அனைத்தையும் ! ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் !

    ஜெனரல் கிராண்ட்: அதனை ஆவலுடன் கேட்க எதிர்நோக்குகிறேன்.

    unnamed (41)

    Abraham Lincoln

    Who Saved the Nation

    ஜெனரல் லீ: எங்கள் ஆயுதங்களை எல்லாம் உங்கள் வசம் இன்றே இப்போதே ஒப்படைக்கிறோம் ! எங்கள் பீரங்கிகள் எல்லாம் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் இந்த அனுமதி மட்டும் வேண்டும் எனது குதிரைப்படை வீரருக்கு ! அவரது குதிரைகளை அவரிடமே விட்டுவிட அனுமதி அளியுங்கள் தயவு செய்து ! அந்தக் குதிரைகள் அவருக்குச் சொந்தமானவை ! அவரது சொந்த நிதியில் வாங்கிய குதிரைகள் அவை ! அரசாங்கக் குதிரைகள் அல்ல அவை !

    ஜெனரல் கிராண்ட்: எனக்குப் புரிகிறது ! அவரது குதிரைகள் அவருக்குத் தேவை ! அமைதிக் காலத்தில் வயல் வேலைக்களுக்குத் தேவை ! அவ்விதமே அவரது குதிரைகளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நான் சமாதான ஒப்பந்தத்தில் அவருக்கு அனுமதியை எழுத்தில் எழுதித் தருகிறேன்.

    ஜெனரல் லீ: உங்கள் நிபந்தனைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், (மேஜை மேல் இருக்கும் ஒப்பந்தத் தாள்களில் பல இடங்களில் தனது கையெழுத்தை இடுகிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (அதே தாள்களில் குதிரை வீரருக்கு விட்டுவிடும் குதிரைகள் பற்றி அனுமதி எழுதி அவரும் பல இடங்களில் கையொப்பம் இடுகிறார்.)

    (ஜெனரல் ராபர்ட் லீ தன் உடைவாளுடன் உறையை அவிழ்த்து ஜெனரல் கிராண்டிடம் மரியாதையாக ஒப்படைக்கிறார்.)

    ஜெனரல் கிராண்ட்: (உடைவாளை வாங்கி மீண்டும் ஜெனரல் லீயிடம் கொடுத்து) இந்த வாள் இருக்கும் இடத்திலே இருக்கட்டும். இது உங்கள் உரிமை வாள் !

    (ஜெனரல் லீ தன் உடைவாளை வாங்கிக் கொள்கிறார். இரு ஜெனரல்களும் சல்யூட் செய்து கைகுலுக்கிக் கொள்கிறார்கள். பிறகு ஜெனரல் லீ தனது ஒப்பந்தப் பிரதிகளை எடுத்துக் கொண்டு படையாட்களுடன் மாளிகையை விட்டு நீங்குகிறார்.)

    +++++++++

    unnamed (4)

    Lincoln Memorial

    Washington D.C.

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !

    கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை !

    தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !

    அருகில் துறைமுகம், ஆலய மணி கேட்கும் !

    வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !

    ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !

    ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !

    கப்பல் தளத்தில் சில்லிட்டுக் கிடக்கிறார் காப்டன் மரித்துப் போய் சரிந்து !

    வால்ட் விட்மன் (Walt Whitman) (1819-1892)

    (புல்லின் இலைகள்)

    +++++++++++++

    புயல் அடித்தது இரவிலே !

    ரோஜா இழக்கும் தன் பெருமை !

    மழைத்துளி பொழியும் !

    வேனிற் காலப் பரிதியின்

    ஒளிச்சுடர் மங்கும் !

    பனித்துளி கழுவின மலர்க் குமிழை !

    நன்றியும் புகழ்ச்சியும்

    நம் குருதியில் கலந்திடும்

    நறுமண ரோஜா மலராய் !

    ஜான் டிரிங்க்வாட்டர், நாடக ஆசிரியர்

    +++++++

    unnamed (42)

    “நான் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவன் அல்லன் ! புனிதக் கடவுளே எனக்குதவி செய் ! என் வாழ்வும், வளமும் ஆத்மாவும் தென்னவர்க்கே உரியது ! இந்த தேசம் வெள்ளைக்காரருக்காக உண்டாக்கப் பட்டது, கறுப்பனுக்காக இல்லை ! ஆ·பிரிக்கன் அடிமைத்தனத்தை நமது உன்னத வேளாண்மைக்காரர் அரசியல் கோட்பாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அது கடவுள் தன்னருமைத் தேசத்துக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்றாகக் கருதுவேன்.”

    ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) (1864)

    “யாங்க்கி ஏதேட்சை அதிகாரத்தில் இனங்கள் கலப்பாகி வெள்ளை அமெரிக்கா மானமிழந்து மூழ்கிப் போவதை விட லிங்கன் செத்து ஒழிவது மேலானது ! நமது இன்னல்கள் எல்லாவற்றுக்கும் காரணமானர் அவர்தான் ! கடவுள் அவரைத் தண்டிக்கவே என்னைக் கருவியாக்கி யுள்ளார்.”

    ஜான் வில்கிஸ் பூத்.

    +++++++++++

    unnamed (43)

    Lincoln Private Box

    உள்நாட்டுப் போரில் வெற்றி

    காட்சி -6

    (இறுதிக் காட்சி)

    (ஏப்ரல் 14 1865)

    (மூலத்திலிருந்து மாற்றி எழுதப்பட்டது)

    பங்கெடுப்போர் : ஆப்ரஹாம் லிங்கன், எட்வின் ஸ்டான்டன் (Secretary of War), மேரி லிங்கன், மிஸ் கிளாரா ஹாரிஸ், மேஜர் ஹென்றி ராத்போன், ஜான் வில்கிஸ் பூத்.

    இடம் : ·போர்டு தியேட்டர், வாஷிங்டன் D.C.

    இப்போதைய காட்சி: ·போர்டு நாடக அரங்கில் உயர் மட்டத்தில் இருக்கும் பால்கனிப் பெட்டி அறைகள். ஒன்றில் ஆப்ரஹாம் லிங்கனும் மிஸிஸ் லிங்கனும் அமரப் போகிறார். எட்வின் ஸ்டான்டன் மற்றும் மிஸ் கிளாரா ஹாரிஸ், ஹென்றி ராத்போன் அதே பெட்டி அறையில் இருக்கிறார். சுமார் 1000 பேர் நாடகக் கொட்டகையில் அமர்ந்து நாடகம் பார்க்கிறார்கள். நடக்கும் நாடகம் : நமது அமெரிக்கப் பங்காளி (Our American Cousin). நாடகம் நடக்க ஆரம்பித்து விட்டது.

    நேரம்: இரவு வேளை. (8:15 PM)

    unnamed (44)

    Lincoln Assassination

    In His Private Box

    தியேட்டர்

    நாடக மேடையில் நிஜ நாடகம் !

    மிஸ் கிளாரா ஹாரிஸ்: இன்று புனித வெள்ளிக்கிழமை (Good Friday). ஏசு நாதரைச் சிலுவையில் அறைந்த நாள் ! பிரசிடென்ட் லிங்கன் இன்று நாடகம் பார்க்க வருவதாகக் கேள்விப் பட்டேன். நாடகம் ஆரம்பித்து விட்டது ! இன்னும் அவர் ஏன் வரவில்லை ! நாடக அரங்கில் இன்று கூட்டம் அதிகம் !

    ஹென்றி ராத்போன்: ஆமாம் ! போர் முடிந்து விட்டது ! பொழுது போக்கத் திரளாக மக்கள் வந்ததில் ஆச்சரிய மில்லை ! ஏன் தாமதம் தெரியவில்லை ! நிச்சயம் இன்று நாடகம் பார்க்க வருவதாக லிங்கன் என்னிடம் சொன்னார்.

    (அப்போது கீழ்த் தளத்தில் தொப்பியால் முகத்தை மறைத்துக் கொண்டு ஒருவன் அங்கும் இங்கும் அலைகிறான். அவன் ஜான் வில்கிஸ் பூத் எனப்படும் நாடக நடிகன். பெண்டிரை மயக்கும் வசீகர குணம் பெற்றவன்)

    ஜான் வில்கிஸ் பூத்: (கடுகடு முகத்துடன்) இன்றே இறுதிக் காட்சி ! அது எனக்குத் தெரியும் !

    unnamed (45)

    Booth Running away after  Assassinating Lincoln

    நாடக பணியாளி: (சிரித்துக் கொண்டு) நீ நடிகன். உனக்கு டிக்கட் தேவையில்லை ! நீ எங்கும் போகலாம். ஆமாம் உனக்கென்ன தெரியும் ?

    வில்கிஸ் பூத்: இன்று லிங்கன் நாடக பார்க்க இங்கு வருகிறார் என்று காலையில் கேள்விப் பாட்டேன் ! வெற்றி பெற்ற அவருக்கு நேராக நானொரு வெகுமதி கொடுக்கப் போகிறேன் ! இந்த தினத்துக்காக நான் வெகு நாட்கள் காத்திருந்தேன்.

    நாடக பணியாளி: நீ அதிஷ்டசாலி ! நேராகப் பார்க்கும் யோகம் யாருக்குக் கிடைக்கும் ? ஆமாம் என்ன வெகுமதி அளிக்கப் போகிறாய் ?

    வில்கிஸ் பூத்: அது ரகசியம் ! அவரது இடம் எதுவெனத் தெரியுமா ?

    நாடகப் பணியாளி: (மேல் மட்ட பால்கனிப் பெட்டியைக் காட்டி) அதோ அந்த அலங்கார முதல் பெட்டிதான் பிரசிடென்டுக்காக சுத்தமாக்கப் பட்டுள்ளது. அமெரிக்கக் கொடியும் தொங்குகிறது பார் !

    வில்கிஸ் பூத்: நன்றி ! நான் போகிறேன் ! என் வேலை இன்று முடிந்தாக வேண்டும் ! இந்த வாய்ப்பு இனி கிடைக்கா தெனக்கு ! (திடீரெனக் கூட்டத்தில் புகுந்து மறைகிறான்)

    unnamed (46)

    Lincoln on Death Bed

    (April 14, 1865)

    (கூட்டத்தில் திடீரெனப் பரபரப்பு ! ஒருத்தி “அதோ பிரசிடென்ட் லிங்கன்” என்று எழுந்து கத்துகிறாள். நாடக அரங்குக்குள் மேரி லிங்கனுடன் காவலர் சூழ ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். எல்லாம் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். சிலர் “நீடு வாழ்க லிங்கன்” என்று கூட்டத்தில் கத்துகிறார் ! “ஒழியப் போகிறாய் நீ” என்று வில்கிஸ் பூத் முணு முணுக்கிறான். கூட்டத்தில் பாராட்டு ஆரவாரம் பன்மடங்கு பெருகுகிறது)

    ஆப்ரஹாம் லிங்கன்: (படிமேல் நின்று கொண்டு, பரவசமாய்) என்னருமை அமெரிக்க மக்களே ! உங்கள் பரிவான பாராட்டு என்¨னைப் பரவசப் படுத்துகிறது ! உங்கள் பாசம் என் நெஞ்சில் ஆழ்ந்து பதிகிறது ! இருள் மண்டிய நான்கு கடுமையான ஆண்டுகள் போராடி நாம் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஜெனரல் ராபர்ட் லீ நமது ஜெனரல் யுலிஸிஸ் கிராண்டிடம் சரணடைந்து இன்று நான்காம் நாள் ! இன்னும் ஒரே ஒரு தளத்தில் சிறு போர் நடந்து வருகிறது. ! அதுவும் சீக்கிரம் நிற்கும் நிச்சயம் ! நமக்கு முழு வெற்றி கிடைப்பது நிச்சயம் ! (மக்களின் ஆரவாரக் கைதட்டல்). பல்லாயிரக் கணக்கான போர் வீரர்களைப் பலி கொடுத்துப் பிரிந்த மாநிலங்களை மீண்டும் இணைத்தோம் ! தென்னவர் நமக்குப் பகைவர் அல்லர் ! சண்டை செய்தாலும் நமக்கவர் சகோதரர்கள் ! (மக்களின் ஆரவாரக் கைதட்டல்). இந்த நேரம் நான் சொல்ல வேண்டியது அதிகமில்லை ! நாட்டின் கொந்தளிப்பை யெல்லாம் நான் கட்டுப்படுத்தி விட்டேன் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது ! கொந்தளிப்புகள்தான் இப்போது என்னைக் கட்டுப்பாடு செய்கின்றன ! அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் கண்முன் வரும்போது நான் ஒரே நம்பிக்கையில் நிமிர்ந்து நிற்கிறேன் ! நாம் நமது அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றி விட்டோம் ! அந்தக் குறிக்கோளில் எனக்கு அசையாத நம்பிக்கை ! மேலும் ஒரு மாபெரும் மனிதத் தவறை நமது மாநிலங்களில் நீக்கப் போகிறோம் ! (மக்களின் பலத்த ஆரவாரக் கைதட்டல்). அந்த மகத்தான பணிக்கு என்னை பங்கேற்க வைத்த கடவுளுக்கு நான் பல்லாயிரம் முறை நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். (மக்களின் பலத்த ஆரவாரக் கைதட்டல்).

    (நடந்து கொண்டிக்கும் நாடக அரங்கத்தில் உள்ள நடிகரும் நாடக உரையாடலை நிறுத்தி லிங்கன் பேருரைக் கேட்டுக் கைதட்டுகிறார். நாடகம் முடியும் தருவாய். “இதுதான் கடைசி காட்சி” என்று ஓர் அறிவிப்பு மேடையில் கேட்கிறது ! ஆப்ரஹான் லிங்கனும் மேரி லிங்கனும் காவலர் சூழப் படியேறித் தமது பால்கனியில் அமர்கிறார். கடைசிக் காட்சி துவங்கிறது. சில நிமிடங்கள் கழித்து ஒரு காவலன் கழிப்பறைக்குச் செல்வதைக் கவனிக்கிறான் வில்கிஸ் பூத். அடுத்த காவலனிடம் தன் பெயர் அறிவிப்பு வில்லையைக் காட்டி, பிரசிடெண்ட் தன்னைக் காண வரச் சொன்னதாகப் பொய் சொல்லிச் சட்டென லிங்கன் இருக்கும் பெட்டிக்குள் நுழைகிறான். துப்பாக்கியை விரைவாக எடுத்து லிங்கனைக் குறிவைத்துத் தலையில் சுடுகிறான். லிங்கன் சத்தமின்றி முன்னே கவிழ்ந்து விழுகிறார். குருதி குப்பெனச் சிந்துகிறது ! மேரி லிங்கன் கணவர் முன் மண்டி யிட்டு அழுகிறார். வில்கிஸ் பூத் பெட்டியிருந்து முன்னே தாவி நாடக மேடையில் குதித்து காலில் காயப் பட்டு நொண்டி நொண்டி திரைக்குப் பின்னால் ஓடுகிறான். நாடக நடிகர்கள் ஒன்றும் புரியாது விழிக்கிறார் !)

    unnamed (47)

    Lincoln Casket

    கூட்டத்தில் ஒருவர்: (துப்பாக்கிச் சத்தம் கேட்டு) லிங்கன் சுடப்பட்டார் ! அதோ கொலைகாரன் ! பிடியுங்கள் ! பிடியுங்கள் ! கொல்லுங்கள் அவனை அதோ ஓடுகிறான் !

    (கீழே மக்கள் பீதி அடைந்து ஓடுகிறார் ! சிலர் வில்கிஸ் பூத்தை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.

    நாடகம் தடைப்பட்டு நடிகரும் பயந்து ஓடுகிறார். நாடக அரங்கில் பெரும் கொந்தளிப்பு)

    மிஸ் கிளாரா: டாக்டர் இருந்தால் வாருங்கள் பால்கனிக்கு ! (இரண்டு டாக்டர்கள் மேலே ஓடி வருகிறார்.) பிரசிடெண்டைக் காப்பாற்றுங்கள் ! (லிங்கன் பேச்சு மூச்சில்லாமல் தரையில் கிடக்கிறார் ! ஒருவர் தலையணை ஒன்றைக் குருதி சிந்தும் கழுத்தடியில் வைக்கிறார். குருதி பொங்கி ஓடுகிறது.)

    கூட்டத்தில் பலர்: தூக்கில் இடுங்கள் துரோகியை ! கொளுத்துங்கள் தியேட்டரை ! எரியட்டும் நாடகக் கொட்டம் !

    எட்வின் ஸ்டான்டன்: (கண்ணீர் பொங்க) மகத்தான கீர்த்தி பெற்றார் ! புவிக்குள்ளே முதன்மை யுற்றார் ! பணியை முடித்ததும் பாரை விட்டு நீங்குகிறார் ! விடை பெறாமல் விடை பெறுகிறார் !

    (மேரி லிங்கன் கதறிக் கதறி அழுகிறார்.)

    unnamed (48)

    முடிவுரை:

    ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.

    வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.

    unnamed (49)

    Lincoln Body at the

    White House

    ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.

    1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.

    unnamed (50)

    Lincoln Funeral Procession

    1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !

    அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”

    1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். உள்நாட்டுப் போரால் 630,000 பேர் இருபுறமும் பலியானார் என்று அறியப்படுகிறது. அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த நான்காம் நாள், ஆப்ரஹாம் லிங்கன் வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத்தால் (John Wilkes Booth) சுடப்பட்டு அடுத்த நாள் மரித்தார். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !

    பின்னுரை:

    ஆப்ரஹாம் லிங்கன் புனித வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 13, 1865) ·போர்டு தியேட்டரில் இரவில் சுடப்பட்டு மறுநாள் காலை 7:22 மணிக்குக் காலமானார். பிறகு லிங்கனின் சடலம் பெட்டியில் இடப்பட்டு பல இடங்களுக்கு இரயில் பயணத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. சென்ற இட மெல்லாம் அமெரிக்க மக்கள் திரள் திரளாய் வந்து கண்ணீர் சிந்தி வருந்தினார். மே 4, 1865 ஸ்பிரிங் ஃபீல்டு, இல்லினாய்ஸ், ஓக் ரிட்ஜ் அடக்கத் தளத்தில் லிங்கன் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கொலைகாரன் வில்கிஸ் பூத் தேடப்பட்டு ஏப்ரல் 26 1865 ஆம் தேதி காவலரால் சுட்டுக் கொல்லப் பட்டான். மற்றும் கொலைச் சதியில் பங்கெடுத்த நால்வருக்கு விசாரணை நடந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

    unnamed (51)

    Lincoln Sculpture

    At South Dakota

    (நாடகம் முற்றிற்று)

    ***************************

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    unnamed (52)

    மூலம் : வால்ட் விட்மன் (1819-1892) (புல்லின் இலைகள்)

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !

    கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை !

    தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !

    அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை !

    வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !

    ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !

    ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !

    கப்பல் தளத்தில் சில்லிட்டுக் கிடக்கிறார்

    காப்டன் மரித்துப் போய்க் கவிழ்ந்து !

    ஓ காப்டன் ! என் காப்டன் !

    எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !

    எழுவாய் ! கொடி பறக்கும் உனக்காக !

    சங்க நாதம் முழங்கும் உனக்காக !

    தோரணம், மலர் வளையம் உனக்காக !

    காத்திருக்கும் திரள் கடற் கரையில் !

    அழைப்பது மாந்தர் உன்னைத் தான் !

    ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !

    உன் தலைக் கடியில் என் கைகள் !

    இங்கு பாரீர் காப்டன் ! என்னரும் பிதாவே !

    கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !

    சில்லிட்டுக் கிடக்கிறீர் செத்த உடலாய் !

    மௌனமாகி விட்டார் என் காப்டன் !

    வெளுத்த இதழ்கள் ! முடங்கிய உடல் !

    பிதா என் கைத் தொடுகை உணர வில்லை !

    இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !

    பாதுகாப்பு நங்கூரம் கப்பலுக்கு ! பயணம் முடிந்தது !

    பயங்கரப் பயணத்தில் குறிக்கோள் வென்றது !

    கொண்டாடும் கடற்கரை ! ஆலய மணி ஓசை !

    தடுமாற்றம் துக்கம் என் கப்பல் தளத்தில் !

    சில்லிட்டு கிடக்கிறார் விழுந்தென்

    காப்டன் செத்த உடலாய்க் கப்பல் தளத்தில் !

    unnamed (51)

    **********

    ******************************

    ஆப்ரஹாம் லிங்கன் பொன்மொழிகள் (1809-1865)

    1. “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்”

    ஆப்ரஹாம் லிங்கன்

    2. “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    3. “உன்னத மனிதர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கிறாள் ஒரு மாது என்று என் பெயர் வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டும் ! உயர்ந்த மானிடர் ஒருவருடன் வாழ்ந்தேன் என்று வரலாறு என்னைப் போற்ற வேண்டும் ! அவர் எத்தகைய உன்னத மனிதர் என்று எனக்குத்தான் மற்றவரை விட நன்றாகத் தெரியும் ! இப்படிச் சொல்லும் போது எனக்குப் புல்லரிப்பு உண்டாகுது !”

    மேரி டாட் லிங்கன்

    4.  எனது அதிமுக்கிய பணி அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பது; அடிமைத்தனத்தை ஒழிப்பதோ அல்லது விட்டுவிடுவதோ அல்ல ! அடிமைகளை விடுவிக்க முடியாமல் போய் அமெரிக்க ஐக்கியத்தை மட்டும் காப்பாற்ற முடிந்தால் அதைச் செய்து முடிப்பேன். அடிமைகள் அனைவருக்கும் விடுதலை கிடைத்து ஐக்கியத்தைக் காப்பாற்ற முடிந்தாலும் அதைச் செய்து முடிப்பேன். சில அடிமைகள் மட்டும் விடுவிப்பாகி மற்றவர் விடப்பட்டு ஐக்கியத்தைக் காக்க முடிந்தாலும் அப்படியே செய்து முடிப்பேன். அடிமைத்தனத்தை நீக்கிக் கறுப்பருக்கு விடுவிப்புக் கிடைக்க முனைவது, அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாக்க எனக்குதவும் என்று நான் நம்புகிறேன். எதைத் தவிர்க்க வேண்டுமோ அதை நான் தவிர்ப்பேன், காரணம் அது அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாக்காது. நான் முனைந்து புரிபவை என் குறிக்கோளைப் பாதித்தால், என் போராட்டத்தைக் குறைப்பேன் ! நான் துணிந்து செய்பவை என் குறிக்கோளுக்கு உதவி செய்தால் என் போராட்டத்தைத் தீவிரமாகத் தொடர்வேன் !

    ஆப்ரஹாம் லிங்கன்

    5. “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.”

    6. “நான் அடிமையாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.”

    7. “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும் என்ற நம்பிக்கையில் உங்களை விட்டு நீங்குகிறேன் !”

    8. “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும் தவறான வினைபோல் குற்றமானது !”

    ஆப்ரஹாம் லிங்கன்

    9.  “எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர்கள் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (கெட்டிஸ்பர்க் பேருரை) (நவம்பர் 19, 1863)

    10. “கடவுளுக்குக் கீழ் ஒரு புதிய விடுதலை மறுமலர்ச்சி உருவாகி இந்தத் தேசம் மக்களுடைய அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்பது நிலைப்படப் போரில் செத்து மாய்ந்தவர் உயிர் அர்ப்பணம் வீணாகப் போகாது நாமெல்லாம் இங்கே உறுதியாகத் தீர்மானம் செய்வோம்.

    ஆப்ரஹாம் லிங்கன் (கெட்டிஸ்பர்க் பேருரை) (நவம்பர் 19, 1863)

    11.  “ஒருபோதும் அதற்கு முரண்பாடாக நான் எதுவும் கூறவில்லை. “சுதந்திரப் பேருரையில்” (Declaration of Independence) விளக்கியபடி, வாழும் தகுதி, விடுதலை உணர்ச்சி, இன்பத்தை நாடும் வேட்கை போன்ற எல்லா வித இயற்கை உரிமைகள் பெறுவதற்கு ஒரு நீக்ரோவுக்கு அருகதை கிடையா தென்பதற்கு எந்தக் காரணமும் இருக்க வில்லை. வெள்ளை மனிதனைப் போல் அவற்றை அனுபவிக்கக் கறுப்பு மனிதனுக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. பல முறைகளில் கறுப்பன் எனக்கு நிகரானவன் இல்லை என்று நீதிபதி டக்லஸ் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக நிறத்தில் இல்லை. ஒருவேளை ஒழுக்க நெறியிலும், கல்வி அறிவிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தான் விரும்பும் உணவைத் தன் கையால் எடுத்து உண்ணும் தகுதியில் எனக்குச் சமமானவன். நீதிபதி டக்ளஸ¤க்கும் சமமானவன்; உயிர்வாழும் மற்ற எல்லா மனிதருக்கும் சமமானவன்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    12.  “நாம் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே. நாம் பகைவராக மாறிவிடக் கூடாது. உணர்ச்சி ஆவேசத்தில் நமக்குள் மனமுறிவு ஏற்பட்டாலும் நமது பாசமும் பந்தமும் அறுந்துவிடக் கூடாது. புதிரான நினைவு அம்புகள் ஒவ்வொரு போர்க் களத்திலிருந்தும் தேசீய இடுகாட்டிலிருந்தும் நீண்டு, இந்த அகண்ட நிலத்தில் உயிருடன் வாழும் ஓர் இதயத்தையும் தொடும். அந்தத் தடத்தை மனிதப் பண்பாட்டின் தெய்வீகம் மறுபடியும் தொடும் போது அமெரிக்க ஐக்கியக் கூட்டு முழக்கத்தை ஓங்கி உயர்த்தி வலுப்படுத்தும்.

    ஆப்ரஹாம் லிங்கன், முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)

    13.  “நாமெல்லாம் சுதந்திரம் வேண்டும் என்று முழக்கி வருகிறோம். அந்தச் சொல்லை நாமெல்லாம் பயன்படுத்தும் போது ஒரே பொருளை மனதில் எண்ணுவது இல்லை. விடுதலை என்றால் தாம் விரும்பியபடி தமக்கும் தமது ஊழியத்துக்கும் செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர் சிலர். மற்றும் சிலர் பிறரையும் பிறரது ஊழியத்தையும் தாம் விரும்பியபடி நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவர். இவை இரண்டு சுதந்திரமும் வேறானவை மட்டுமல்ல. விடுதலை என்னும் ஒரே பெயரில் நிலவும் முரண்பாடான வெவ்வேறு செயல்கள். அவை விடுதலை என்னும் பெயரில் நடைபெறும் அடக்குமுறை என்பது எனது குறிப்பீடு.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஏப்ரல் 18, 1864)

    14.  மனத் திருப்தியற்ற என் தேச மக்களே ! தற்போதைய உள்நாட்டுப் போர்ப் பிரச்சனையைத் தீர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. என் கைகளில் இல்லை ! அரசாங்கம் உங்களைத் தண்டிக்கப் போவதில்லை. நேரடிராகத் தாக்குவோராய் நீங்கள் எண்ணப் படுவதற்கு உங்களிடம் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அரசாங்கத்தைச் சிதைப்பைத் தடுக்க நீங்கள் மேலுலகில் உறுதிமொழி எடுத்துப் பதிவு செய்யப்பட வில்லை. ஆனால் அரசாங்கப் பாதுகாப்புக்கும், அதன் நீடித்த நிலைப்புக்கும், அதற்காகப் போராடவும் நான் எல்லாருக்கும் மேலான உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.

    ஆப்ரஹாம் லிங்கன், [முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)]

    எங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டையின் (Fort Sumter) முற்றுகை தொடரும் ! அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் ! அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் ? அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா ? அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் ? காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை ! ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் ! அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா ? நீவீர் அதை இப்போது மறுக்க முடியாது.

    ஆப்ரஹாம் லிங்கன் (1862)

    “வரம்புமீறிய அரக்கத்தனம் (The Demon of Intemperence) மேதைகளின் குருதியையும், பெருந்தன்மையையும் உறிஞ்சுவதில் பேருவகை பெறுவதாகத் தெரிகிறது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 22, 1842)

    “கடவுளின் நியதியே (Will of God) மேலோங்கி நிற்கும். (அடிமைத்தன ஒழிப்பு) போட்டியில் ஒவ்வொரு கட்சியும் கடவுளின் நியதிப்படி நடப்பதாய் வாதாடுகிறது. இருதரப்பார் கருத்தும் தவறாக இருக்கலாம். ஆயினும் இரண்டில் ஒரு கட்சி நிச்சயம் தவறாக இருக்க வேண்டும். கடவுள் ஒரே சமயத்தில் ஒரே கருத்துக்கு ஆதரவாகவும், அதற்கு எதிர்ப்பாகவும் இருக்க முடியாது. இப்போதைய உள்நாட்டுப் போரில் கடவுளின் குறிநோக்கம் (Purpose) எந்த ஒரு கட்சியின் வினைப் போக்குக்கு வேறுபட்டு இருக்கலாம். ஆயினும் மனம்போல் செய்யும் மக்களின் நேரடிப் பங்கீடுகள் மட்டுமே கடவுளின் நியதியைப் பின்பற்றப் பயன்படுகின்றன.”

    ஆப்ரஹாம் லிங்கன், (செப்டம்பர் 2, 1862)

    “போர் ஒன்று வருமானால் அது அடிமைத்தனத்தை முன்னிட்டு இருக்காது ! தென்னகத்துக்கு அமெரிக்க ஐக்கியத்தின் மீது தேசப்பற்று இருக்குமானால் அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தைத் தவிர்க்க அரசியல் முறையில் தர்க்கமிட்டு முடிவு காணலாம். அவ்விதமின்றி நாட்டைத் துண்டாக்கும் உரிமையைத் தென்னகம் மேற்கொண்டால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாட்டுப் பிரிவினையைத் தடுத்து நாமதைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மாநிலமும் ஐக்கியத்தை ஒப்புக்கொண்டு நமது பிதாக்கள் உறுதி கூறியதை நிலைநாட்டவும், அமெரிக்க யூனியன் நிச்சயம் போரைத் துவக்கும். நாங்கள் நாட்டைப் பிரிக்க விட மாட்டோம். நாம் இருவரும் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே ! நாம் பகைவராய் மாறக் கூடாது ! உணர்ச்சி வசப்பட்டு மனமுறிவு ஏற்பட்டாலும் நமக்குள் இருக்கும் பந்த பாசம் முறியக் கூடாது !”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “பண்டைப் பண்பியல் (Conservatism) என்றால் என்ன ? அது புதுமைக்கும், முயலாததற்கும் எதிராகப் பண்டைத்தனத்தையும், முயன்றதையும் மட்டும் எடுத்துக் காட்டுவதா ?”

    ஆப்ரஹாம் லிங்கன் (கூப்பர் கல்வியகப் பேருரை, பிப்ரவரி 27, 1860)

    “என்னால் இந்த மாபெரும் வெள்ளை மாளிகையைத் தற்காலிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. உங்களுடைய எந்தக் குழந்தையும் என் தந்தையின் புதல்வனைப் போல் வந்திட நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதற்கு நானே ஒரு வாழும் சான்று.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 22, 1864)

    “நமது போராட்டத்தில் ஒருவேளை நாம் தோற்றுவிடலாம் என்று நிகழக்கூடிய ஒரு நினைப்பில், நியாயமென்று நாம் உறுதியாய் நம்பும் ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதிலிருந்து நாம் பின்வாங்கக் கூடாது. அது அச்சமூட்டி என்னை வலிவிழக்க வைக்காது.”

    ஆப்ரஹாம் லிங்கன், (டிசம்பர் 26, 1839)

    “நமது பழைய நற் கப்பலான அமெரிக்க யூனியனை, இந்தப் பயணத்தில் நாமெல்லாம் ஒன்று சேர்ந்து காப்பாற்ற வில்லை யானால், அடுத்ததோர் பயணத்தில் வேறெவருக்கும் முன்னின்று இயக்க ஒரு வாய்ப்புக் கிடைக்காது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 15, 1861)

    “மாஸ்ஸசுசெட்ஸ் ஜெனரலின் இடத்தில் பணிபுரியும் அதிகாரி தயாரித்த ஓர் அரசாங்கப் போர் அறிக்கையை எனக்குக் காட்டினார். போர்க்களத்தில் புகழோடு உயிரைப் பலி கொடுத்த ஐந்து புதல்வரின் அன்னை நீதான் என்பதை அந்த அறிக்கையில் நான் கண்டேன். இந்தப் பேரிழப்பின் சோகத்திலிருக்கும் உனக்கு நான் ஆறுதல் கூற முயலும் வார்த்தைகள் எப்படி வலுவிழந்து பலனற்றதாய் நேர்மையின்றி இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் உயிர் கொடுத்துப் பாதுகாத்த நமது குடியரசின் நன்றியைப் பரிவோடு உனக்குக் கூறாமல் என்னால் சும்மா இருக்க இயலாது. நமது மேலுலகப் பிதாவிடம் உனது பேரழப்பு வேதனையைக் குறைக்க நான் பிரார்த்திக்கிறேன். விடுதலைப் பலி பீடத்தில் நேசப் புதல்வரை உன்னதத் தியாகம் செய்த பெருமையை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (நவம்பர் 21, 1864)

    நான் அறியாதவன் அல்லன். அது நிச்சயம். எப்படி நியாயம் இருக்க முடியும் ? நீக்ரோக்களை அடிமையாய் வைத்திருப்பதை வெறுக்கும் ஒருவன் எப்படி வெள்ளை மாந்தருக்குள் கீழ் வகுப்பு இனத்தார் இருக்க உடன்படுவான் ? நமது சீர்குலைவு சீக்கிரமாய் முன்னேற்றம் அடைவதாகத் தெரிகிறது ! “எல்லா மனிதரும் சமமாகப் படைப்பானவர்” என்று முழக்கி ஒரு தேசத்தை நாம் உருவாக்க ஆரம்பித்தோம். இப்போது நாம் அதை மெய்யாக வாசிப்பது இப்படி: “எல்லாரும் சமமாகப் படைக்கப்பட்டவர், நீக்ரோக்களைத் தவிர !

    ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 24, 1855)

    அறியாதவன் என்று சொல்லப்படும் நான் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் போது மேற்கூறப்பட்ட அந்த வாசகம் இப்படி வாசிக்கபடும் : “எல்லாரும் சமமாகப் படைக்கப்பட்டவர் நீக்ரோக்களைத் தவிர, அன்னியரைத் தவிர, காத்தலிக் மதத்தாரைத் தவிர !” அந்த நிலை வந்தால் சுதந்திரத்தைப் பாசாங்கு இல்லாமல் வழிபடும் வேறெந்த நாட்டுக்காவது நான் புலம்பெயர்ந்து போய்விடுவேன். உதாரணமாக வஞ்சகக் கலப்பின்றிச் சுத்தமான ஏதேட்சை அதிகாரம் அரசாளும் ரஷ்யாவுக்கு போகலாம்;

    ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 24, 1855)

    என்னுடைய சித்தாந்த நியதியில் திடீர் நிகழ்ச்சிகள் (Accidents) எனப்படுபவை எவையும் கிடையா ! ஒவ்வொரு விளைவுக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்க வேண்டும். நிகழ்கால விளைவுக்குக் காரணம் கடந்த காலம் ! அதுபோல் எதிர்கால விளைவுக்குக் காரணம் நிகழ்காலமாக இருக்கும். இவையெல்லாம் முடிவற்ற ஒரு தொடர்ச் சங்கிலியாக எல்லைக் குட்பட்ட நிலையிலிருந்து முடிவில்லா நிலைக்கு நீளும்.

    ஆப்ரஹாம் லிங்கன்

    “என் மீது விழுந்த தாக்குதலுக்குப் பதில் தராது படிக்க மட்டும் நேர்ந்தால் இந்தக் கடையை மூடிவிட்டு வேறு பணிக்குப் போய்விடலாம். என்னால் கூடுமான வரை உன்னதப் பணியைச் செய்ய நான் முற்படுவேன். நான் மடிந்து போகும்வரை அப்படியே பணியாற்றி வருவேன். என் பணியின் விளைவுகள் பயனுள்ளதாயின், என் மீது தூற்றியவை புறக்கணிப்படும். ஆனால் அந்த விளைவுகள் தவறாக முடிந்தால், “நான் செய்தவை எல்லாம் ஒப்பற்றவை என்று பத்து தேவதைகள் பாராட்டினாலும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, அவருக்குக் கொடுப்பதிலும் அவர்களைப் பாதுகாப்பதிலும் நேர்மையாக நடந்து உரிமை உள்ளவருக்குச் சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். நாமந்த முயற்சியில் நேர்மையைக் காப்பாற்றலாம் அல்லது அவமதிக்கப்பட்டு உலகின் உன்னத நன்னம்பிக்கையை இழந்து போய்விடலாம். வேறு வழிமுறைகளால் வெற்றி அடையலாம். ஆனால் நமது குறிக்கோள் தோல்வி அடையக் கூடாது. நமது பாதை வெளிப்படையானது, அமைதியானது, பரிவு பந்தமுள்ளது. இம்முறையைப் பின்பற்றினால் உலகம் கைதட்டி நம்மை வரவேற்கும். கடவுள் நம்மை நிரந்தரமாய் ஆசீர்வதிப்பார்.”

    ஆப்ரஹாம் லிங்கன், (Second Annual Message to Congress, Dec 1, 1862)

    “இரு தரப்பாளரும் போர் மீது வெறுப்பைக் காட்டுகிறார். ஆனால் அவர்களில் ஒரு தரப்பாளர் தேசம் துண்டாகாமல் நீடிக்கப் போரிட முற்படுகிறார். அடுத்தவர் தேசம் நாசமாகட்டும் என்று போரை வரவேற்றுக் கொள்கிறார். ஆம் அந்தப் போரும் வந்தது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (Second Inaugural Address, March 4, 1865)

    “தனக்குள் எதிராகப் பிளவு பட்ட ஓர் அரசாங்க மன்றம் நிலைத்து நிற்காது. இந்த அரசாங்கம் பாதி விடுதலையிலும் பாதி அடிமைத்தனத்திலும் இயங்கிக் கொண்டு நிரந்தரமாக நிலைக்காது என்பது என் நம்பிக்கை ! நமது அமெரிக்க ஐக்கியம் முறிந்து போகும் என்று நான் எதிர்பார்க்க வில்லை ! நமது அரசவை மன்றம் வீழ்ச்சி அடைந்திடும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை ! ஆனால் அது துண்டாவது தடுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒன்று எல்லா மாநிலங்களும் சேர்ந்து விடுதலையை ஏற்கும் அல்லது மாறாக (அடிமைத்தனம் நிலவும்) மாநிலங்களாய் எல்லாம் வேறுபடும் !

    ஆப்ரஹாம் லிங்கன் [ஸ்பிரிங்ஃபீல்டு பேருரை, இல்லினாய்ஸ் ஜூன் 16, 1858]

    “எனது பதவி ஏற்புரை ஆற்றிய மாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறினேன் : எனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதிக்க உரிமை அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்துக் கைக்கொள்வதற்கும், சுங்கவரி, வருமான வரி வசூலிக்கவும் பயன்படுத்தப்படும். நமது கோட்டைகளை முடிந்த அளவு எந்த முறையிலும் வலுப்படுத்த வேண்டும் என்று நான் உடனே ஜெனரல் ஸ்காட்டுக்கு ஆணை இட்டது மேலும் உங்கள் பூரண சம்மதத்தை அப்போது பெற்றது. அதற்கு முற்றிலும் விதிவிலக்காக நீங்கள் இப்போது என்னை வற்புறுத்துவது : சம்டர் கோட்டை முற்றுகையை விட்டு நாம் விலக வேண்டும் என்பது !”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஏப்ரல் 1, 1861)

    “யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைக்கும் நாம் கவனமுடன் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)

    கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற உடன்பட மாட்டேன் ! ஆனால் இப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது : டச் நாட்டுக் கிராமத்தான் ஒருவன் தன் தோழனிடம் ஒரு சமயம் சொன்னானாம். “ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் போது வண்டியில் குதிரையை மாற்றக் கூடாது” என்று.

    ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போது (ஜூன் 9, 1864)]

    கடந்த காலக் கொள்கைகள் யாவும் நிகழ்காலக் கொந்தளிப்புப் பிரச்சனைக்குத் தகுதியுள்ளவை அல்ல. இந்தத் தருணம் நமக்குப் பேரளவு தொல்லை கொடுத்து வருகிறது. நாமும் அந்த அளவுக்கு உயர்ந்து ஓங்கி நிற்க வேண்டும். இந்த நமக்குப் பிரச்சனை புதியது. நாமும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். புதிய முறையில் போராட வேண்டும். நம்மை நாமே விடுவித்துக் கொண்டு பிரிவினையிலிருந்து நமது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

    ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் ஆண்டு காங்கிரஸ் தகவலுரை (டிசம்பர் 1, 1862)]

    நேர்மையே நமக்கு உறுதி அளிப்பது என்பதில் நாம் நம்பிக்கை வைப்போம். அந்த நம்பிக்கையில் இறுதிவரை நமக்குப் புரிந்த அளவு நமது கடமைகளைத் தீவிரமாய் நாம் செய்து முடிக்க வேண்டும்.

    ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 1860)

    “எந்த விதத்திலும் வெள்ளை இனத்துக்கும் கறுப்பு இனத்துக்கும் இடையே சமூக அரசியல் சமத்துவம் கொண்டு வருவதை நான் ஆதரிக்க வில்லை. கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்குவது, ஜூரராய் நியமிப்பது, உயர்ந்த பதவி அளிப்பது, வெள்ளையரைக் கலப்பு மணம் புரிவது ஆகியவற்றையும் நான் ஆதரிக்க வில்லை. இந்த இரண்டு இனங்களும் சமூக அரசியல் சமத்துவமோடு ஒருமைப்பாடுடன் வாழ முடியாதபடித் தடுக்கும் வேறுபாடுகள் பல உள்ளன. அப்படி அவர்கள் சேர்ந்திருக்க இயலாத நிலையில் வாழ நேர்ந்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் அமைப்பாட்டில்தான் வசிக்க முடியும் என்பது என் எண்ணம். வெள்ளை இனத்துக்குத்தான் உயர்ந்த நிலை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மற்றவர் கருத்துக்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். ஆனால் வெள்ளைக்காரனுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்படுவதால், நீக்ரோக்களின் உரிமைகள் அனைத்தையும் மறுக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”

    ஆப்ரஹாம் லிங்கன் (Fourth Debate with Stephen A Douglas at Charleston, Illinois) PP 145-146 [September 18, 1858]

    “ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (சுதந்திர அறிவிப்பின் போது) எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்று முழக்கினோம் ! ஆனால் இப்போது நாம் வேறொரு அறிவிப்பை ஆரம்பித்திருக்கிறோம் : அதாவது சில மனிதர் மற்றவரை அடிமையாக வைத்துக் கொள்வது சுய ஆட்சி அரசாங்கத்தின் புனித உரிமை என்று !”

    ஆப்ரஹாம் லிங்கன்

    “வடக்கரான அவர் (Stephen Douglas) இன வேறுபாட்டுக் கொள்கையில் தென்னவர்தான் ! சட்ட வாக்கெடுப்பில் அடிமைத்தன ஒழிப்பு வீழ்ந்தாலும் சரி அல்லது வென்றாலும் சரி அவர் கவலைப் படமாட்டார் ! ஆனால் பெரும்பான்மை யான வடக்கர் அடிமைத்தன முறையை ஆதரிக்க வில்லை. ஆப்ரஹாம் லிங்கனும் பெரும்பான்மையான வடக்கரும் அடிமைத்தன ஒழிப்புக்குப் பாதை வகுத்து அதையே ஓர் புனிதக் குறிக்கோளாகவும் கடைப்பிடித்தார்.”

    ஆப்ரஹாம் லிங்கனைப் பற்றி ·பிங்கில்மன் (Finkleman)

    (ஸ்டீஃபன் டக்லஸ் இல்லினாய்ஸ் டெமாகிராடிக் கட்சி -ஜனாதிபதிப் போட்டி அரசியல்வாதி)

    “கடவுள் உங்களைப் படைத்ததே அடிமைத்தனத்தை ஒழிக்கத்தானே ! உங்கள் பிறவிப் பயனை கறுப்பராகிய நாங்கள் அனுபவிப்போம் ! எங்களை விடுவிக்கப் போரில் உங்கள் மனிதர் மடிகிறார் ! தென்னக நரகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்து என்ன செய்யப் போகிறோம் ? எப்படி வாழப் போகிறோம் ? எங்க இனத்துக்கு அறிவில்லை ! படிப்பில்லை ! பணமில்லை ! தனியே வாழக் குடிசை இல்லை ! எப்படி வாழ்வோம் இனிமேல் ? அடிமையாய் உள்ள போது குடியிருக்க ஒரு குடிசையாவது இருந்தது ! உண்ண உணவாவது கிடைத்தது ! அங்கே அடிமையாய் வேலை செய்து பிழைத்தோம் ! இனி எங்கே வேலை செய்வோம் ? என்ன வேலை செய்வோம் ? தென்னகத்திலே நாங்கள் எப்படி வெள்ளையர் வீட்டருகே வாழ முடியும் ? அடிமையாய்ப் பிறந்தேன் ! அடிமையாய் வளர்ந்தேன் ! இனி விடுதலை மனிதனாய் எப்படி வாழ்வேன் ?”

    வில்லியம் கர்டிஸ் (லிங்கனிடம் உரையாடிய 72 வயது நீக்ரோ)

    “அமெரிக்கத் தேச அரசியல் அமைப்பு நியதிப்படி (National Constitution) முதல் ஜனாதிபதி பதவி பெற்று ஏற்புரை நிகழ்த்தி 72 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அந்த ஆண்டுகளில் 15 பல்வேறு புகழ்பெற்ற உன்னதக் குடிமாந்தர் அடுத்தடுத்துப் பதவி ஏற்று அரசாங்கத்தை ஆட்சி செய்தார்.  அநேக தேச இன்னல்களில் அவர்கள் கடந்து சென்று முடிவில் பெரு வெற்றி பெற்றார்.  நான் இப்போது அதே பணியை விசித்திரமான பேரிடர்களுக்கு இடையில் அரசியல் நியதிப்படி நான்கு ஆண்டுகளுக்குச்  செய்ய நுழைகிறேன்.  முன்பே இருக்கும் ஒரு தவறைப் பின்பற்றி இப்போது நம் தேசத்தின் ஐக்கியத்தைத் தகர்க்கச் சிலர் இங்கு தீவிரமாக முயன்று வருகிறார்கள்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (முதல் பதவி ஏற்புரை) (மார்ச் 4, 1861)

    “அமெரிக்க இராணுவப் படையில் 200,000 கறுப்பர்களைத் தேர்ந்தெடுக்க நான் முடிவு செய்திருக்கிறேன்.  அறிவு மிக்க அமெரிக்க நீக்ரோக்களுக்கும் படைவீரராக நமக்குப் பணிபுரிவோருக்கும் வாக்குரிமை அளிக்க விரும்புகிறேன்.  அவர்களைத் தவிர மற்ற எல்லாக் கறுப்பரும் வாக்குரிமை பெறத் தகுதி பெற்றவரே !  இவ்விதம் நான் லூயூசியானாவில் கூறியிருப்பது மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாகும்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உள்நாட்டுப் போர் வெற்றியைப் பாராட்டிப் பேசியது) (ஏப்ரல் 11, 1865) 

    “மிஸ்டர் லிங்கன் ஆற்றிய உரையில் இப்படிக் கூறினார் : ‘முதலில் இந்த அரசாங்கம் நமது மூதாதையப் பிதாக்கள் விட்டுச் சென்றபடி விடுதலை மாநிலங்களாகவும் அடிமை மாநிலங்களாகவும் நிரந்தரமாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ளாது ! ஒன்று எல்லா மாநிலங்களும் அடிமைத் தனத்தை விடுவிக்க வேண்டும். அல்லது எல்லா மாநிலங்களும் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த அமெரிக்க ஐக்கியம் நீடித்திருக்காது.”

    ஸ்டீஃபென் டக்லஸ் டெமாகிராட் போட்டியாளர் (அக்டோபர் 15, 1858)

    “நமது மூதாதையப் பிதாக்கள் இந்த அரசாங்கத்தைப் பாதி விடுதலையாகவும் பாதி அடிமைத்தனமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கருதியதாக ஸ்டீ·பென் டக்லஸ் அனுமானிப்பது உண்மை இல்லை. அடிமைத்தன வைப்புச் செம்மை யானது என்றும் அதை அரசியல் ஆட்சி நியதி முன் மொழிகிறது என்று டக்லஸ் அனுமானிப்பதாகத் தெரிகிறது. உண்மை என்ன வென்றால் நம்மிடையே இருந்து வந்த அரசியல் நியதியை அப்படியே அவர்கள் விட்டுவிட்டனர் என்பதுதான். அவ்விதம் விட்டுச் சென்றாலும் அநேக இடங்களில் உடன்பாடில்லாது இருந்ததை அவர்கள் தெளிவாகக் காட்டி இருக்கிறார்.”

    ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீஃபென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

    ***************************

    தகவல்

    Based on The Play

    Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)

    1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html 2. Chambers Encyclopedia (1968 Edition) 3. Encyclopaedia Britannica (1973 Edition) 4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition) 5. Britannica Concise Encyclopedia (2003 Edition) 6. The Oxford Dictionary of Quotations New Edition (1992) 7. The Wordsworth Dictionary of Quotations (1997) 8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961) 9. Lincoln The Unknown By Dale Carnegie (1959) 10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter [1958].

    11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)

    12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)

    13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)

    14. Freedom – A Novel of Abraham Lincoln & the Civil War By : William Safire (1988)

    15. The American Civil War – A History – By : Mark Saunders (1993)

    +++++++++++++++++

    Share
  • நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி

     

    [Giovanni Cassini]

    (1625-1712)

    சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

    “காஸ்ஸினி அறிவுத் தேடல் பயிற்சியில் வேட்கை மிக்கவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலைநோக்கிகள் மூலம் உளவும் கூர்மை யான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டு பிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.”

    டேடன் (Taton)

    “உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”

    ஐஸக் நியூட்டன்

    “கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”.

    காலிலியோ (1564-1642)

    முன்னுரை:    உலகின் முதல் பெளதிக விஞ்ஞானி என்று அழைக்கப் படும் இத்தாலியில் தோன்றிய காலிலியோ, அடுத்து பிரிட்டிஷ் கணித விஞ்ஞானி ஐஸக் நியூட்டன், டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ், இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி ஆகிய நால்வரும் ஐரோப்பாவில் வானியலைக் கணித வடிவில் விஞ்ஞானம் ஆக்கிய முக்கிய மேதைகள் ஆவார். அவர்கள் யாவரும் காபர்னிக்கஸ் கூறிய பரிதி மைய நியதியை [Sun-centered System] மெய்யாகக் கருதிப், பண்டைக் காலப் புவி மையக் கோட்பாடைப் [Earth-centered System] புறக்கணித்தவர் !

    காலிலியோ முதன் முதலில் வெள்ளியின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சியைத் தனது தொலை நோக்கியில் கண்டு பரிதி மைய நியதியை நிரூபித்துக் காட்டினார். பிற்போக்கான தொலை நோக்கியில் காலிலியோ முதலில் தவறாகப் புரிந்து கொண்டு கூறிய ‘நீள்கோளச் சனியைத்’ [Ellipsoidal Saturn], திருத்தி ஹியூஜென்ஸ் செம்மையான தனது தொலைநோக்கியில் சனிக் கோளைக் கண்டு, அதைச் சுற்றித் திடமான வளையங்கள் இருப்பதை முதலில் உலகுக்கு அறிவித்தார்!  அவருக்குப் பிறகு, காஸ்ஸினி அந்தக் கருத்தை மீண்டும் விருத்தி செய்து, சனியின் வளையங்கள் திடமானவை [Solid Rings] அல்ல வென்றும், அவற்றிடையே எண்ணற்ற இடை வெளிகள் உள்ளன வென்றும் எடுத்துக் கூறினார்.

    சூரிய மண்டலக் கோள்களில் நீர்வளம், நிலவளம், உள்நெருப்பு, காற்றுச் சூழ்வெளி யாவும் படைக்கப்பட்டு, அவற்றில் புல்லினம், உயிரினம், மானிடம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெறத் தகுதியுள்ள அண்டம் பூமி ஒன்றுதான்! ஆனால் எல்லாக் கோள்களிலும் எழில் மிகுந்த விந்தையாக, ஒளிமயமாக அநேக வளையல்கள் அணிந்தது சனிக்கோள் ஒன்று மட்டுமே!  பூமியின் விஞ்ஞான மேதைகள் அவ்வரிய சனிக்கோளை 400 ஆண்டு களுக்கும் மேலாக தொலை நோக்கி மூலமாகவும், விண்கப்பலை அண்ட வெளியில் ஏவியும் ஆராய்ந்து வருகிறார்கள்!  காஸ்ஸினியின் பெயரால் 1997 இல் ஏவப்பட்டுப் பயணம் செய்யும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் ஆகஸ்டு 2004 முதல் சனிக் கோளை அடைந்து அரிய தகவல் சேமித்து வருவதுடன் திட்ட மிட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்து  பத்தாண்டுகளுக்கு மேலாக உளவித் தகவல் அனுப்பிக் கொண்டு வருகிறது !

     

     

    காலிலியோ விண்வெளியில் கண்டுபிடித்தவை

    கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி’ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! பூமியைச் சுற்றி வரும் நிலவுக்குப் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி உண்டாகி முழுநிலவு, கருநிலவு தோன்றுவதுபோல், பரிதியைச் சுற்றி வருவதால்தான் வெள்ளிக் கோளுக்கும் பிறைத்தோற்றம் [Phase] ஏற்படுகிறது என்று எடுத்துக் காட்டியவர், காலிலியோ.

    அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் வரைந்து காட்டினார்! பரிதியின் சிவப்புத் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை’ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ! பிறகு 230 ஆண்டுகள் கடந்து நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

     

     

    சனிக்கோளை முதலில் தொலைநோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹியூஜன்ஸ் [Christiaan Huygens], தானமைத்த முற்போக்கு தொலைநோக்கியில் உற்று நோக்கி, அக்கருத்தைத் திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! காலிலியோவின் கண்களுக்கு வளையங்கள்தான் சனியை முட்டை வடிவத்தில் காட்டி யிருக்க வேண்டும்!

    காலிலியோதான் தனது தொலைநோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை’ [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீனின் தூதர்’ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

     

    கிரிஸ்டியான்†ஹியூஜென்ஸ் வானியல் கண்டுபிடிப்புகள்

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்தவரும் ஹியூஜென்ஸ் ஒருவரே!  ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.

    1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

    சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

    காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு ‘ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ [Donut Shape] என்றும் கூறினார்!  பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகிய வற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

    வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

    காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.  அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன.

     

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார்.  1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

    பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய ‘பரிதிக் கடிகாரத்தைச்’ [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார்.  பூதக்கோள் வியாழனுடைய பட்டைகளையும், புள்ளி களையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

    ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங்களை தொலை நோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப்படமாய் வரைந்து ‘விஞ்ஞானப் பேரவைக்குச் ‘ [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை ‘காஸ்ஸினி யின் வளைகோடுகள்’ [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!

    வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் ‘நோக்கியல் விஞ்ஞானம்’ [Optics], ‘திரவழுத்தவியல்’ [Hydraulics], ‘வரைப்படவியல்’ [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார்.  ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

    கியோவன்னி காஸ்ஸினியின் வாழ்க்கை வரலாறு.

    1625 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஜெனோவா [Genoa, Italy] என்னும் நகரில் ஜேகப் காஸ்ஸினி, ஜூலியா குரோவேஸி [Jacopo Cassini, Julia Crovesi] ஆகிய இருவருக்கும் பிறந்தார். பள்ளிப் படிப்பை அவர் வல்லெபோன் என்னும் ஊரில் முடித்த பின், கல்லூரிப் படிப்புக்கு ஜெனோவா நகருக்குச் சென்றார். கல்லூரியில் கவிதை, கணிதம், வானியல் துறைகளில் மிக்க ஆர்வம் காட்டித் தனது மேதமையை வெளிப்படுத்தினார், காஸ்ஸினி.


    முதலில் காஸ்ஸினி வானியலில் [Astronomy] மனது ஊன்றாமல் ஜோதிடத்தில் [Astrology] ஈடுபாடு மிகுந்து தேர்ச்சி பெற்றார்! ஆனால் ஜோதிட முன்னறிவிப்பில் [Predictions] அவருக்கு நம்பிக்கை யில்லை! அவரது ஜோதிட வல்லமையை மெச்சி, 1644 இல் பொலோனா நகரின் மேலவை உறுப்பாளி [Senator] மார்க்குவிஸ் மல்வாஸியா காஸ்ஸினியை அழைத்து, பொலோனாவில் கட்டப்படும் பன்ஸானோ வானோக்க கத்தில் [Panzano Observatory] பணி செய்யும்படி வேண்டினார். அப்போது காஸ்ஸினிக்கு வயது பத்தொன்பது! ஆனால் கல்லூரியில் அடுத்து நான்கு ஆண்டுகள் படித்து, ஒருவிதப் பட்டமும் பெறாமல் 1948 முதல் பன்ஸானோ நோக்ககத்தில் சேர்ந்து பணியாற்றினார்! காஸ்ஸினி நோக்ககத்திற்கு வேண்டிய ஆய்வுச் சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்கி அதை இயக்கத் துவங்கினார். இரண்டாண்டில் நோக்ககத்தை விருத்தி செய்து, செனட்டரின் பெரும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றார்.

    அப்போது புகழ் பெற்ற விஞ்ஞானிகளான பட்டிஸ்டா ரிக்கியோலி [Battista Riccioli], பிரான்ஸெஸ்கோ கிரிமால்டி [Francesco Grimaldi] போன்றோரிடம் தனிப்பட்ட முறையில், காஸ்ஸினி நிறையக் கற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும்தான் பின்னால் ‘ஒளித்திரிபைக்’ [Diffraction] கண்டு பிடித்தார்கள். செனட்டர் மல்வாஸியாவின் ஆதரவில் 1650 இல் பொலோனா பல்கலைக் கழகத்தில் வானியல், கணிதத் துறைகளின் பேராசிரியராகப் பதவி பெற்று, காஸ்ஸினி ஆசிரியராகவும் பணி செய்தார்.

    பிரென்ச் நாட்டுக் குடிநபரான விஞ்ஞானி காஸ்ஸினி

    பொலோனா நோக்ககத்தில் காஸ்ஸினி 1652 ஆண்டில் ஒரு வால்மீனைக் கண்டு அதன் நகர்ச்சியை ஓராண்டு காலம் பதிவு செய்து வெளியிட்டார். அக்காலங்களில் அவர் டைகோ பிராஹோ [Tycho Brahe] 1659 இல் பிறப்பித்த புவி மைய ஏற்பாடை [Earth-centered System] நம்பினார்! அதாவது நிலாவும், பரிதியும் பூமியைச் சுற்றிவர, மற்ற கோள்கள் [செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி] சூரியனைச் சுற்றுவதாகக் கூறிய டைகோ பிராஹோவின் கருத்தை ஏற்றுக் கொண்டார்! பிறகு அக்கருத்து பிழையான தென்று உணர்ந்து, காஸ்ஸினி காபர்னிகஸ்ஸின் [Copernicus] பரிதி மையக் கோட்பாடை ஒப்புக் கொள்ளும்படி நேரிட்டது!

    காஸ்ஸினியின் அண்டக்கோள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் பாராட்டப் பட்டன. 1668 இல் பிரான்ஸின் அரசர் பதினான்காம் லூயி [Louis XIV] அவர்களிடமிருந்து அரண்மனை விருந்தில் கலந்து கொள்ள, காஸ்ஸினிக்கு அழைப்பிதழ் வந்தது. பாரிஸில் வானோக்ககம் ஒன்று கட்டப்பட்டு அதன் தலைமைப் பதவி பெரும் வருவாயுடன் அவருக்காகக் காத்திருந்தது! பதினான்காம் லூயி 1671 இல் அளித்த பாரிஸ் வானோக்ககத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு, காஸ்ஸினி பிரென்ச் நாட்டின் குடிமகனாய் ஆனார். 1974 இல் ஜெனிவி டி லைஸ்டர் [Genevieve de Laistre] என்னும் ஓர் எழில்மாதை மணந்து பாரிஸில் நிரந்தரமாகக் குடியேறினார். 1677 இல் ஜேக்ஸ் காஸ்ஸினி [Jacques Cassini] என்னும் புதல்வன் அவருக்குப் பிறந்தான். தந்தையின் தடத்தில் நடந்து வானியல் விஞ்ஞானியாய்த் தேர்ச்சி பெற்றுத் தந்தை முதுமை அடைந்ததும், ஜேக்ஸ் காஸ்ஸினியே, பின்னால் பாரிஸ் வானோக்ககத்தின் தலைவர் பதவியைப் பெற்றார்!

    1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879)] கோடான கோடித் துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக்கோளைச் சுற்றி நிலை பெற முடிகிறது என்று கணித மூலம் 1857 ஆம் ஆண்டில், நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றித் திடவ வடிவு வளையமோ [Solid Ring], திரவ வாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் கவர்ச்சி விசையால் இழுக்கப் பட்டுத் தளத்தில் மோதி நொறுங்கி விடலாம் என்றும் ஜேம்ஸ் மாக்ஸ்வெல் கூறினார்!


    காஸ்ஸினியின் இறுதிக்கால வாழ்க்கை

    1695 இல் பதினெட்டு வயது மகன் ஜேக்ஸ¤டன் காஸ்ஸினி இத்தாலிக்குச் சென்றார். அங்கே உள்ள பல புவித்தள ஆய்வு நோக்குகளை [Geodesic Observations] இருவரும் பார்வை யிட்டனர். பொலோனாவுக்குச் சென்று தான் முப்பது ஆண்டு களுக்கு முன்பு ஆக்கிய சூரியக் கடிகாரத்தைக் காஸ்ஸினி செப்பணிட்டார். 1709 இல் மகன் ஜேக்ஸ் காஸ்ஸினி பாரிஸ் நோக்ககத்தில் சிறுகச் சிறுகத் தந்தையின் பணிகளை மேற்கொண்டார். தந்தையின் உடல்நிலை குன்ற ஆரம்பித்தது. குறிப்பாக கியோவன்னி காஸ்ஸினியின் கண்ணொளி மங்கிப் போய்க் கொண்டிருந்தது! இல்லச் சிறையில் [House Arrest] தள்ளப்பட்ட முதிய காலிலியோ பல்லாண்டுகள் விண்வெளி அண்டங்களையே பார்த்துப் பார்த்து ஒளியிழந்தது போல், காஸ்ஸினியின் கண்களும் அண்டக் கோள்களைக் கூர்ந்து பார்த்து ஒளி மங்கி 1711 இல் குருடாகிப் போயின! 1712 ஆம் ஆண்டு பாரிஸில் கியோவன்னி காஸ்ஸினி தனது 87 ஆம் வயதில் காலமானார்.

    கியோவன்னி காஸ்ஸினி பல்கலைக் கழகத்தில் எந்தப் பட்டமும் பெறாத வானியல் விஞ்ஞானி! அவர் ஒரு நியதிவாதி [Theoretician] அல்லர்! மேதமை மிக்க கூரிய வானோக்காளர் [Gifted Astronomical Observer]! காஸ்ஸினி 1667 இல் பிரான்ஸின் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர் [Member, Academie Royale des Sciences] ஆனார். 1672 ஆம் ஆண்டு பிரிட்டன் கியோவன்னி காஸ்ஸினியின் கணித விஞ்ஞானச் சாதனைகளைப் பாராட்டி, அவரை ராஜீயக் குழுவின் மதிப்பாளியாகக் [Fellow of Royal Society] கெளரவித்தது. முரண்பாடில்லாத அவரது உறுதியான, மெய்யான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நியூட்டனுக்கு முந்தி வாழ்ந்த வானியல் விஞ்ஞான மேதைகளுக்குள் உச்ச இடத்தை அவருக்கு நிச்சயம் அளிக்கின்றன!

    படங்கள் : நாசா

    தகவல்:

    1. Giovanni Domenico Cassini, Catholic Encyclopedia

    2. Giovanni Casinni, U.K. History of Mathematicians By: E.F. Robertson, J.J. O ‘Connor.

    3. Cassini, Giovanni Domenico, Astronomical Institutions

    4. Cassini I Gian Domenicao, Catalog of the Scientific Community

    5 Giovanni Cassini By : J. J. O’Connor & E. F. Robertson

    6. http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Cassini.html (Cassini Biography

    7. http://en.wikipedia.org/wiki/Giovanni_Domenico_Cassini (Wikipedia On Cassini) (Nov 21, 2010)

    **************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 11, 2014

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நான் கடவுளைக் கண்டேன்..

    கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்!

    உனக்கொரு தாய்போல்

    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?

    பொருத்தமான இசையால் இந்தப் பொன்னான வரிகளை நம் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கின்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாசத்தில் விளையும் உறவுகள் தாய் தந்தை மகன்.. இவற்றுள் ஒன்றை இழந்து தவிக்கும் இன்னொரு உறவு.. என்பதன் கொடுமை .. இருக்கின்ற உறவை பாராட்டி..சீராட்டி.. தாலாட்டும் தந்தை.. தன் மகன் நாளை வளரும் நாளை நோக்கி காத்திருக்கும் காட்சி..

    தன் வெண்கலக்குரலால் ஜீவனைத்தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பது தகவல்! கூடுதல் தகவல் என்ன தெரியுமா.. இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதே! வித்தியாசமான தோற்றத்தோடு ஏழிசை வேந்தர் திரையில் தோன்றி பாடியிருக்கும் தாலாட்டுப் பாடல் இது எனலாமா? வரிகளில் எல்லாம் ஸ்வரங்களை நிரப்பி நம் உள்ளம் தொடும் பாடல் தந்த மெல்லிசை மன்னரைப் பாராட்டலாமா? இந்தக் கருத்தை எழுத்தில் கொடுக்க.. இதுதான் உகந்ததென்று சொற்களை எல்லாம் பூக்களாக்கித் தந்தவரைப் புகழலாமா?

    நல்லதோர் பாடல் இது என்பதில் இருவேறு கருத்தில்லை! நாளும் தனது குரலால் நம் வாழ்வில் இணைந்த டி.எம்.எஸ். திரையில் தோன்றிப் பாடிய பாடல் என்கிற பெருமையால் இந்தப் பாடலும் நினைவில் நிழலாடுகிறதே!!

    நான் கடவுளைக் கண்டேன் என்
    குழந்தை வடிவிலே..
    அவன் கருணையைக் கண்டேன்
    கொஞ்சும் மழலை மொழியிலே..
    பால்வடியும் உன் முகத்தில்
    ஆயிரம் கனவு கண்டேன்
    நாளைவரும் நல்ல வாழ்வு எனும்
    அந்த நினைவில் வாழ்கின்றேன்
    உனக்கொரு தாய்போல்
    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?
    ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வரவேண்டும்
    கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
    நிறைந்தேபெறவேண்டும்.. அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
    கடல்போல் பெருகாதோ
    பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிபோல் உருகாதோ..

    மற்றுமொரு தகவல் இத் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன்
    ஏ எல். ராகவன் அவர்களும் நடித்திருப்பதோடு இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் என்பது நண்பர் ராகப்ரவாகம் சுந்தர் தரும் செய்தியாகும்.

    http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE

    கவிஞர் வாலி……..!

    கவிஞர் வாலி அவர்கள் கிருஷ்ண விஜயம் எழுதத் தொடங்கியபோது -கவியரசு கண்ணதாசன் பற்றி நன்றியுடன் தனது முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் கண்டு மெய்சிலிர்த்து – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரைந்த நன்றிமடல்!

    பெறுகை
    காவியக் கவிஞர் வாலி
    சென்னை

    கட்டி வெல்லப் பாடல்களை மெட்டுக்குள் கட்டிவைக்கும்
    வித்தகம் தெரிந்த கவிஞர் வாலி – நீவிர்
    கண்ணதாசன் தமிழ் போல் வாழி!

    கவியரங்கமானாலும் கலையரங்கமானாலும்
    நின் தமிழ் நாட்டியத்தில் நித்தில சுகமுண்டு!
    தொட்டால் பூ மலரும் என்கிற பல்லவியின் சுகம்
    தொடாதார் யாரிங்கே? உணராதார் எவரிங்கே?

    காதலின் லயஸ்வரத்தில் நுனிவிரல் படுகின்றபோது
    முதன் முதலில் உடலுக்குள் பாய்கிறதே மின்சாரம்!
    காவியமாய் திரைப்பாடலைச் செதுக்கி வைத்தவனே..
    நெஞ்சில் ஓவியமாய் நின் கை வண்ணங்கள் ஆயிரமே!

    ஆன்மீக நெறியில் வந்த அத்தனைக் குணங்களையும்
    அடம் பிடிப்பதுபோல் நீ பிடித்த காரணத்தால்
    ஆசிர்வாதங்கள் அனுகூலங்கள் அத்தனையும்
    ஆண்டவன் சந்நிதானத்தில் உனக்கும் நித்தமும் படி..

    எனவேதான் .. அவதாரபுருஷன் முதல் பாண்டவர் பூமியென்றும்
    ராமானுஜர் காவியமும் .. உன் பேனா முனையில்
    பூக்களைப்போல் பாகல் விரித்து பவனி வந்தன!

    ஆனந்த ஸ்வரங்களென அவதரித்த கவிநடையில்
    ஆனந்த விகடன் வாரஇதழ் வாய் மலர்ந்தது!
    அடுத்து ஒரு அறிவிப்பு.. கிருஷ்ண விஜயம்
    அடடா .. முதல் இதழ் நுகர்ந்தோம்!

    தேனெனத் தித்திக்கும் செந்தமிழ் மா புலவா – நீ

    யாரெனக் கூறியிருக்கும் நற்றமிழ் மரபு கண்டோம் !

    கண்ணனின் அவதாரம் பற்றிய – நின்

    கருத்துக் குவிப்பில் மின்னிடும் புண்ணியன் தோற்றம் !

    எடுத்து கொடுப்பவன் அவன்! எழுத வைப்பவன் அவன்
    என்னுள் இருப்பவன் அவன் ! இயங்க வைப்பவன் அவன்!
    என்று கண்ணனைச் சரணடைந்தே – நற்
    காவியம் துவங்கியுள்ளாய்! நன்று! நன்று!!

    தன்னிலே கண்ணன் வைத்து தன்னையே தாசெனன்று – இம்
    மண்ணிலே வாழ்ந்து மறைந்த மானுடக் கவிஞர்தம்மை
    எண்ணியே வரிகள் பலவும் வரைந்திட்ட வாலியே!
    இன்னமும் இம்மண்ணிலே ஈரம் இருப்பதற்கு சாட்சியென்போம்!

    மாமுனியின் தோற்ற்றம் உன்னில் வந்தமைக்கு காரணங்கள்
    பாபுனையும் ஆற்றல் உன்னில் சரணடையும் ரகசியங்கள்..
    தேன்மதுரக் கவிநயங்கள் நின் தெள்ளுத் தமிழின் துள்ளல்கள்
    பருகி மகிழக் காத்திருக்கும் பலகோடி நெஞ்சங்களுள்..
    நேரிலே உம்மோடு உரையாடி உறவாடும்
    உரிமை பெற்ற உள்ளங்கள் ..
    யாரென இன்னுமா தெரியவில்லை?
    கண்ணதாசன் தமிழ்ச் சங்க நண்பர்கள் (பம்மல்) நின்
    கைவிரல்களில் கண்கள் பதித்து முத்தமிட்டு நன்றி பகர்கிறோம்!

    அன்புடன்..
    காவிரிமைந்தன்

    Share
  • வார ராசி பலன் 13-01-2014-19-01-2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: இந்த வாரம் வெளியூரிலிருந்து வரும் உறவுகள் சந்தோஷத்தோடு, சிறு செலவுகளையும் சேர்த்தழைத்து வருவார்கள். முதியவர்கள் உணவு வேளைகளை தவற விடாமலிருப்பதோடு அதிகம் வெளியில் அலைவதையும் தவிர்த்து விடுதல் அவசியம். பொறுப்பில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலைகள் சீராக நடந்து கொண்டிருக்கும். பாராட்டை பெறக்கூடிய அளவிற்கு கலை நிகழ்ச்சிகள் கச்சி தமாய் நடந்தேறுவதால், கலைஞர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். .யோசித்து நிதானமா கச் செயல்படுத்தக் கூடிய எல்லா விஷயங்களும் விரும்பிய பலனைத் தரும் என்பதை பெண்கள் நினைவில் கொண்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    ரிஷபம்: கலைஞர்கள் தொழிலில் முழு கவனம் செலுத்தி வர, தங்களுக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பங்குதாரர்களுடன் ஆலோசித்து முடிவெடுக் கும் பழக்கத்தை கடைபிடித்தால், புதிய ஒப்பந்தங்கள் உங்கள் வசமாகும். இந்த வாரம் ஏதாவது ஒரு வழியில் பணம் செலவழியும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் சேமிப்புக்கு என ஒரு தொகை ஒதுக்கிவைத்தால் அவசர செலவுக்கு கை கொடுக்கும். மாணவர்கள் வேகம், வேகம் என்று செல்லும் போது விவேகத்தையும் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்திலும் வெற்றிதான். பணியில் இருப்பவர்களுக்கு தேடி வரும் புதுப்பொறுப்புகள் மூலம் உங்கள் அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.

    மிதுனம்: வியாபாரிகள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தாலும், அதன் மூலம் வரும் லாபம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.மாணவர்கள் வெளி வட்டார பழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைப்பது நல்லது. பெண்கள் வீணான சஞ்சலத்தையும், மனக்குழப்பத்தையும் மனதில் குடியேற விடாமலிருந்தால், திறமைகள் உங்கள் உயர்வுக்குக் கை கொடுக்கும். பணியில் இருப்போர் அலுவலக வட்டத்தில் அளவோடு பேசி வந்தால், வீண் தொந்தரவுகளை எளிதில் விலக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியின் ஊடே அதிக அலைச்சல், எரிச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.எனவே நிதானமாக செயல்படுவது நல்லது.

    கடகம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகளில் அகலக்கால் வைக்கா மலிருந்தால், நஷ்டம் என்பதிராது. இருந்த இடத்தில் இருந்து வேலை வாங்கிக் கொண் டிருந்தவர்கள் இந்த வாரம் ஓடியாடி உழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். வாழ் வில் இனிமையும், பெருமையும் தங்க வேண்டுமா? வாழ்க்கைத்துணை சொல்லும் ஆலோச னையை ஏற்றுச் செயல்படுங்கள். கல்வியின் மீது கல்வியின் மாணவர்களின் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த நலிவுகள் நீங்குவதால், பெண்கள் புதுத் தெம்புடன் வளைய வருவதோடு, விடுபட்ட வேலைகளை முடிக்கும் திறமும் கூடும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

    சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் இந்த வாரம் நெருக்கமான நபரை சந்தித்து அவர் மூலம் முக்கியமான காரியம் ஒன்றை சாதித்துக் கொள்வீர்கள்.பெண்கள் காரிய ங்களில், கவனமாக இருந்தாலும், சில எதிர்பாராத தொல்லைகளை சமாளிக்க வேண் டியிருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் எதிர்பார்த்த லாபமும், நல்ல பெயரும் கிட்டும். முதியவர்கள் உணவுப் பழக்க வழக்கம், தேவையான தூக்கம் இரண்டிலும் கவனமாக இருந்தால், உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கடிதம் மூலம் வரும் செய்திகள் சந்தோஷத்தை சுமந்து கொண்டு வரும். பெற்றோர்கள் கல்விக்கடன் பெற எடுக்கும் முயற்சி பலிதமாகும் .

    கன்னி: பெற்றோர்கள் எந்த ஒரு செயலையும், திறம்பட செய்யும் பிள்ளைகளை தக்க சமயத்தில் பாராட்டுங்கள். அது அவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களில் இறங்கும் முன் கடன் நிலவரத்தையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டால், காரியங்கள் நஷ்டமாகாது.பெண்கள் தெளிவான சிந்தனையோடும், தீர்க்கமான யோசனையோடும் செயல்படுவார்கள். மாணவர்கள் வரவு செலவுகளை வரைமுறைக்குள் வைத்தால், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய அவசியமிராது. மழைக் காலங்களில் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

    துலாம்: முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை முழுமையாக நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பாராட்டை எதிர்பாராமல், உறுதியாக உழைத்தால், அந்த உழைப்பே கௌரவமான பதவியில் உங்களை அமர வைத்து விடும். பெண்கள் குடும்பத்தில் பிறர் செய்யும் தவறுகளை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உறவுகளின் இனிமை மாறாமலிருக்கும்.மாணவர்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகி, தன்னம்பிக்கை அதிகரிப்பதால், சவாலான பணிகளில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த வாரம் உறவினர் வருகையால் மகிழ்ச்சியும், அதற்கேற்ற செலவுகளும் கூடும்.

    விருச்சிகம்:இந்த வாரம் கலைஞர்கள் வாழ்வில் திருப்பங்களுக்கும், விறுவிறுப்புக்கும் நிறைய இடமிருக்கும். பெண்கள் மனம் விரும்பும் போல் வீட்டை அழகு படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தல் ஆகியவற்றில் முனைப்புடன் இறங்குவீர்கள். மாணவர்கள் சில சிரமங்களைத் தாண்டி வேலைகளை முடிப்பார்கள். வேலை செய்யும் சூழல், அதிகாரிகளின் போக்கு ஆகிய வை சாதகமாக இருப்பதால், பணியில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை ,கசப்பான அனுபவம் ஆகியவை தலைகாட்டாமல் இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் ஏற்றமான நிலை காண்பர்.

    தனுசு:மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்தும், திட்டமிட்டும் செயல்பட்டால் எதிலும் வெற்றிதான்! போட்டிகள் மற்றும் பொறாமைகளின் நடுவே எதிர்நீச்சல் போட்டு கலை ஞர்கள் தங்கள் வய்ப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வர். இந்த வாரம் குடியிருக் கும் வீட்டை மாற்ற வேண்டிய நெருக்கடிக்கு சிலர் ஆளாகலாம். பெற்றோர்கள் பிள்ளைக ளைப் பற்றிய வீணான கவலை நீங்கும் வண்ணம், அவர்களின் செயல்பாட்டில் தெளிவு காணப்படும். பெண்கள் எந்த சமயத் தில் எதை செய்ய வேண்டும், எங்கு எப்படி பேச வேண்டும் என்பதை உணர்ந்தாலே குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவிராது. பணியில் உள்ளவர்கள் மறதியால் சிலவற்றிற்கு வீண் தண்டம் கட்ட வேண்டி யிருக்கும்

    மகரம்: நீடித்த கடன்கள் விலகுவதால் பெண்கள் மனதில் நிம்மதியும், முகத்தில் மகிழ்ச்சியும் மலரும். கலைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபடும் போது, எழும் தடை களைத் தவிர்க்க தீவிர முயற்சி, இதமான அணுகு முறை இரண்டையும் கடைப்பிடி த்தல் அவசியம். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும் என்பதை நினைவில் கொண்டால், பாடங்கள் சுமையாய்த் தோன்றாது. வியாபாரிகள் நிதி நிலவரத்தை கவனத்தில் கொண்டபின், காசோலைக ளை பிறர்க்கு வழங்குவது நல்லது. இந்த வாரம் வழிப் பயணங்களில் சிறு விரயங்களும் அதனால் மன வருத்தமும் உருவாகலாம்.

    கும்பம்: வியாபாரிகள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்களால் வரும் முழுமையான லாபத்தை பெறலாம். தினசரி பணிகளில் குழப்பங்கள் உருவாகாமலிருக்க பெண்கள் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் பல சலுகைகளில் சிலவை மட்டுமே நிறைவேறுவதால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். முதியவர்கள் சின்ன விஷயங் களுக்காக பிறர் மேல் சீறிப் பாய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப அமைதி குலையாது. வேலையின் பொருட்டு அடிக்கடி வெளியூர்களுக்கு செல்பவர்கள் ஒவ்வாமை தரும் உணவு வகைகளை ஒதுக்குவது நல்லது.

    மீனம்: மாணவர்கள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமலிருந்தால் சிந்தனை வளம் வற்றா மலிருக்கும் பெற்றோர்கள் செலவுக்கு போதிய பணம் தந்தாலும், பிள்ளைகள் பணம் செலவழிக்கும் வழியின் மீது கவனம் வைப்பது நல்லது.  வெளிவட்டாரத் தொடர்புகள் தங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவ்வளவு லாபகரமாய் இராதென்பதால், வியாபாரிகள் ஆடம்பரச் செலவு களைக் குறைத்துக் கொள்வது நல்லது. சளி, காய்ச்சல் ஆகியவைகளின் பாதிப் பில்லா மலிருக்க, பெண்கள் சுகாதாரமான குடி நீரை பயன்படுத்துதல் நலம். சுய தொழில் புரிபவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் வருகின்ற லாபம் குறையாமலிருக்கும்.

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 15

     

    சீதாயணம் நாடகப் படக்கதை – 15

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    jeya1

    jeya2

     

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7. http://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]​

    8. ​http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • சொர்க்க வாசல் ?!

    வாசலில் செம்மண் கோலமிட்டால் வருபவர்க்கு சொர்க்க வாசல்
    ஓசையில் மணியுடன் கதவுகள் திறந்தால் வந்த‌வர்க்கு சொர்க்க வாசல்
    வாவென் றழைக்க அன்பர்கள் இருந்தால் திறப்பவர்க்கு சொர்க்க வாசல்
    புன்னகை புரிந்து வந்தனங்கிடைத்தால் விருந்தினர்க்கு சொர்க்க வாசல்

    அன்புடன் வார்த்தை அருவிடப் பகிரும் வாயுமேயொரு சொர்க்க வாசல்
    பண்புடன் விருந்து பகிர்வுடன் அன்புச் சமைத்திடும் உள்ளம் சொர்க்க வாசல்
    அருசுவை யேற்று தொந்தியில் செரிமன் ஆகிடும் இல்லற சொர்க்க வாசல்
    அருமை உங்களின் சமையல் என்ற ஆசிகள் காதினில்! சொர்க்க வாசல்

    அழுதிடும் குழவியின் அரவங் கேட்டு சுரபிகள் திறப்பதும் சொர்க்க வாசல்
    தொழுதிடும் அடியார் குறைகளை கேட்டு வரங்கள் வருவது சொர்க்க வாசல்
    பழுதுடன் பிணிதனை நீக்கும் இலவச மருத்துவர் இல்லம் சொர்க்க வாசல்
    படிப்புடன் பண்புகள் கற்றுகொடுத்திடும் பள்ளிவாசலும் சொர்க்க வாசல்

    தாயகம் காப்போம் என்றே சேவைகள் தந்தவர் வாசல் சொர்க்க வாசல்
    ஆயுதம் யேந்தி கடும்பனி குளிரினில் ஆள்பவர் அடிகள் சொர்க்க வாசல்
    பாதகம் செய்வோர் திருந்திட சிறையின் வாசலும் அவர்க்கே சொர்க்க வாசல்
    சாதனைப் புரிவோர் மகத்துவந் தன்னைச் சாற்றும் காற்றும் சொர்க்க வாசல்

    ஏகாதசிதமில் ஆழ்வார் சுரங்களைப் பாடிமால் தரிசனம் சொர்க்க வாசல்
    தீராபசியினில் தீந்தமிழ்க்கவிதை ஆக்கும் கணினியில் சொர்க்க வாசல்
    தேன்மொழி யானதும் செம்மொழிசங்க மேடையுந்தானே சொர்க்க வாசல்
    மின்மொழி யாகிட வல்லமைத் தளத்தில் நுழைவதும் தானே சொர்க்க வாசல்

    Share
  • சிதையா நெஞ்சு கொள்!

    பவள சங்கரி

    சென்ற புதன் கிழமை 08.01.2014 அன்று மாலை ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழாவும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கென மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தார்த்தா பள்ளி தன் 28 ஆண்டு கால கல்வி அனுபவத்தை இப்பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்கள் மூலமாக மிக அழகாகத் தொகுத்து மூன்று நூல்களாக வழங்கியுள்ளது.

    bharathy 1

    பெற்றோர்களின் தூரக் கனவை நனவாக்க உதவும் நூல் – பாதை
    மாணாக்கர்களின் தடைகளைத் தாண்டி வர வழிகாட்டும் நூல் – பயணம்
    ஆசிரியர்கள் வெற்றியில் தேங்கிவிடாமல் செயலாற்ற ஊக்குவிக்கும் நூல் – சுவடு

    பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ. ஜெயபாரதி விழாவிற்கு தலைமையேற்க, பள்ளி முதல்வர் திருமதி ஞானம் ஆண்டறிக்கை சமர்பிக்க, துணை முதல்வர் கண்ணகி வரவேற்புரை ஆற்றினார்.

    bharathy3

    சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர், கவிஞர் அ. வெண்ணிலா அவர்களும், தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. கிருஷ்ண. வரதராஜன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நாட்டு நலப் பணித் திட்டங்களுக்குப் பெருமளவில் ஈடுபாடு காட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் இப்பள்ளியின் தனிப்பட்ட சிறப்பம்சமாக, சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லப்படும் மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு, கவனம் சிதறல், நினைவாற்றல் குறைபாடு, ஹைபர் ஆக்டிவ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிலரை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பயிலும் வகையில், அவர்களுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நிலையில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் இக்குழந்தைகளின் முன்னேற்றம் குறிப்பிடும்படி இருப்பது சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. மற்ற பள்ளிகளும் இது போன்ற பரிட்சார்த்த முறையை தொடர்வதால் கேள்விக்குறியாக இருக்கும் இப்படிப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதாக அமையலாம்.

    bharathy4

    குழந்தைகள் தங்களுடைய அருமையான நிகழ்ச்சிகள் மூலம் அழகாக அலங்கரித்த மேடையில் தாம் அதிகம் பேசி அவர்களின் மகிழ்ச்சியான நேரத்தைக் களவாட விரும்பவில்லை என்று கவிஞர் வெண்ணிலா ஆரம்பித்தாலும், மிக எளிதாக குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரையும் தம் கட்டுக்குள் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்! தாம் குழந்தைகளின் நிகழ்ச்சிகளைக் கண்டு, குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் நிகழ்ச்சி மூலம் உள்ளம் நெக்குருகி நிற்பதாக உணர்வு பொங்கக் கூறினார். அதற்காகப் பயிற்சியளித்த ஆசிரியை மற்றும் தாளாளர் ஜெயபாரதி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். பாரம்பரியம் மாறா நடவடிக்கைகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் சவாலாக ஏற்றுச் சாதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினார்.

    ”பெற்றோர்களே உங்கள் கனவை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். அவன் டாகடர் ஆவதும், என்ஜீனீயர் ஆவதும் அவன் கைகளில் விட்டுவிடுங்கள். குழந்தைகளை நம் எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் என்று எண்ணும் வழக்கத்தை மாற்றுங்கள். அவர்கள் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றார் போல அவர்கள் வாழ வழிகாட்டுங்கள்” என்று பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொடும் ஆசிரியர்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் அது குறித்த பாடங்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் பற்றிய ஆக்கப்பூர்வமான தன்னுடைய எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    ”குழந்தைகளே ஆம், இல்லை, வேண்டும், வேண்டாம் என்பதை தெளிவாகச் சொல்லிப் பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையின் வெற்றி. யாருக்காகவும் உங்களுடைய இலக்கில் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. பாதையில் தெளிவு இருந்தால் பயணத்தில் குழப்பம் இல்லாமல் முன்னேறலாம்” என்ற பொருள்படும்படியாக மிக உற்சாகமாக உரையாடினார்.

    bharathy 2

    “ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்வில் நிகழப்போகிறது மேஜிக்” என்று ‘மாயப் புத்தகம்’
    ஒன்றை அனு ராஜன் என்பவருடன் இணைந்து எழுதி சிறுவர் உலகை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கும் , தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளருமான திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் மிகச் சுவையாக, குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், கல்வியில் ஆர்வமும் ஏற்படும் வகையில் மிகச் சிறப்பாகவும் சொற்பொழிவாற்றினார்.

    ’மாயப் புத்தகத்தில்’ , ’இரண்டு ஓநாய்கள்’ என்ற குட்டிக் கதை.

    ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்

    “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒரு ஓநாய், அன்பு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்ல குணங்களை கொண்டிருக்கிறது. மற்றொன்று கோபம், அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற தீய குணங்களைக் கொண்டிருக்கிறது.

    மனிதனுக்குள் உள்ள இந்த இரண்டு ஓநாய்களும் எப்பொழுதும் சண்டையிட்டபடியே இருக்கின்றன” என்றவர் மாணவர்கள் ஆர்வமாகக் கவனிப்பதைப் பார்த்துவிட்டு, “உங்களுக்குள்ளும் இந்த இரண்டு ஓநாய்களும் இருக்கின்றன?” என்றார்.

    சட்டென்று ஒரு மாணவன் கேட்டான், “சார் இரண்டில் எந்த ஓநாய் ஜெயிக்கும்?”

    ஆசிரியர் புன்னகையுடன் சொன்னார், “எந்த ஓநாய்க்கு அதிகம் உணவு கொடுக்கிறாயோ அந்த ஓநாய்தான் ஜெயிக்கும்”

    pavala 2

    இராமருக்கு பாலம் கட்ட உதவிய சிறு அணில் போன்று, நூல்களின் உருவாக்கத்தின் என்னுடைய  உதவிக்காக எனக்கும் பரிசு கொடுத்து கௌரவித்த சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெ.ஜெயபாரதி அவர்களுக்கு நன்றி. இந்த மூன்று நூல்களும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பலனளிக்க வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    bharat

    bharath 12

    Share
  • மார்கழிப் பூவும் வைகுந்த வாசற்படியும்

    தமிழ்த்தேனீ

    மாதங்களில்  சிறந்தது  மார்கழி படிகளில் சிறந்தது  வைகுண்ட வாசற்படி

    “படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ”  என்று பாடிய

    குலசேகர ஆழ்வார்  இவரது பெருமை பேசும்போதெல்லாம்

    ‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது.

    ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்த பெரியாழ்வாரைப் போல, குலசேகராழ்வாரும் தன் பெண்ணை கொடுத்து, அரங்கனுக்கே மாமனார் ஆனார்! ‘‘ஸ்வசுரம் அமரவர்த்யம் ரங்கராதஸ்ய ஸாட்சார்’’ என்று பெரியாழ்வாரை சொல்வார்கள். அதாவது, ‘‘தேவர்களால் வணங்கப் பெற்ற, சாட்சாத் அரங்கனுடைய மாமனாரான பெரியாழ்வாரை வணங்குகிறேன்’’

    அரங்கனையே நாடவேண்டும் என்று கூறும்படியாக ‘இருளிரிய’ என்கிற 10 பாட்டுக்களால் வழங்கினார். எம்பெருமானை கண்ணனாக அனுபவித்து ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்று அருளிச் செய்ததன் மூலம் 5 ம் லட்சணத்தை வெளியிட்டார்.

     மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது.  தட்சிணாயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளையும் வைகுண்ட ஏகாதசியின் பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சூரியனுடைய சுற்று வட்டப் பாதையை  இரண்டு விதமாக பிரித்திருக்கிறார்கள்,  ஒன்று ஆடி மாதம் முதற்கொண்டு    ஆவணி ,புரட்டாசி  ,ஐப்பசி, கார்த்திகை  மார்கழி  மாதங்கள் சூரியனுடைய  சுற்று  தெற்கு  திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி  சஞ்சரிக்கும் காலம்  ,இதை தக்ஷிணாயணம்  என்று கூறுவர்.

    அதேபோல் தைமாதம் முதல் ,  மாசி, பங்குனி,சித்திரை, வைகாசி, ஆனிவரை  சூரியனின் சுற்று  வடக்கு திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சஞ்ஜரிக்கும்  காலம்

    ைபமுற்ற் ,உத்திராயணம் என்று சொல்வர்.   இப்படிப் பார்க்கும் போது ஆடி , புரட்டாசி ஆவணி ,  ஐப்பசியின் ,கார்த்திகை,  மார்கழி

     மார்கழி மாதம் 1ம் தேதி முதல்  10ம் தேதி வரை  பகல் பத்து , 11ம் தேதி முதல் 20 ம் தேதி வரை ராப்பத்து சுக்லபக்‌ஷ ஏகாதசியான 11ம் தேதி மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல்  (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும்.

    இந்த வைகுண்ட வாசல்  வழியாக பரமபத பெருமான் காட்சி கொடுப்பதும்  அப்போது  அவனை சேவித்து அந்த வைகுண்ட வாசற்படி வழியாக நாமும் வந்தால் பரம்பதமான ,வைகுண்டத்தை சொர்கத்தை நாமும் அடைவோம்.

     வைகுண்டத்தின் துவாரபாலகர்களாகிய  ஜெய விஜய  என்னும் இருவரும் வைகுந்த வாசலை  மூடினர். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு கலியுகத்தில் கலையுகத்திலே பாவங்கள் பெருகும் யாருமே வைகுந்த வாசலை அடையப் போவதில்லை ஆகவே மூடினோம் என்று பதிலுரைத்தார்கள்.

    ஶ்ரீமன் நாராயணன்  அப்படி இல்லை கலியுகத்திலே பாவங்கள் பெருகினாலும்  பக்தியும் ஆத்திகமும் புண்ணியங்களும்  பெருகும் அதனால் திறந்து வையுங்கள் வைகுண்ட வாயிலை என்று .இப்படி ஶ்ரீமன் நாராயணன்  அருளிய தினம் , மார்கழி மாத  சுக்லபட்ச ஏகாதசி  என்பது புராண வரலாறு ,ஆகவே  வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் உண்டு .

     அப்படி இருந்த நிலையில் கலியுகத்திலே முதன் முதலாக வைகுந்தம் ஏகியவர் நம்மாழ்வார்.   நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது.  என்னைத் தொடர்ந்து  தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில்  சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.

    திருமங்கை ஆழ்வாரின் திருப்பணியிலே மனம் மகிழ்ந்த அரங்கன்  அவர்முன்  தோன்றி  என்ன வரம் வேண்டும் என்று கேட்கவே  திருமங்கை ஆழ்வார்  நம்மாழ்வார் பரமபதம் அடைந்த  நாளான  மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருநாளாகக் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் .நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா  நடைபெற  அருள வேண்டும்  என்று வேண்டிக் கொண்டாராம்  அதை ரங்கநாதர் அருளினார். அதன்படித்தான்  ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

    பூலோக வைகுந்தம் என்னும் பேறு பெற்ற ஶ்ரீரங்கத்தில் இந்த வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெறும்,அது போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானின் கோயிலிலும் இன்னும் பல வைணவத் திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக்க் கொண்டாடப் படுகிறது

    வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம்.  இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி  அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

    புதுக்கோட்டையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருக்கும் திருமயம் திருத்தலத்தில் ஏகாதசி திதியையொட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் சந்நதி என்று தனியே கிடையாது. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு ‘முக்கோடி பிரதட்சண வாசல்’ திறப்பு விழா நடைபெறும். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனைத்  தரிசித்த பின்னர் வெளியில் வந்தால் காணப்படும் பிராகாரத்தை விமான பிரதட்சண பிராகாரம்’ என்பார்கள்.

    இந்த பிராகாரத்துக்கும் வேங்கடவன் அருள்புரியும் மூலஸ்தானத்துக்கும் நடுவில் ஒரு பிராகாரம் உள்ளது. இது திருமலையில் மட்டுமே உள்ள அபூர்வமான பிராகாரம். இப்பிராகாரத்தை  வலம் வந்தால் மகா புண்ணியம் கிட்டும். வேங்கடவனைத் தரிசித்து, வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்நபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை உள்ளது. இதற்கு இடப்பக்கம்  ஆரம்பித்து, மூலவரான வேங்கடாசலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்தை அடைகிறோம். இப்பகுதி, ‘முக்கோடி பிரதட்சண  பிராகாரம்’ ஆகும்.

    இந்தப் பிராகாரம் வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமித் திருநாள் முதல் துவாதசித் திருநாள்வரை திறந்திருக்கும். திருமலையில் முக்கோடி பிரதட்சணம், சொர்க்க வாசலுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை ‘விருச்சிக ஏகாதசி’ என்று போற்றுவர். குருவாயூர் கோயிலில் இந்த விழாவை பதினெட்டு நாட்கள்  கொண்டாடுவர். இதையொட்டி தீபஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சொர்க்க லோகம்போல் கோயில் காட்சி தரும். மேலும் ஏகாதசியன்று அதிகாலை 3-30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும்.

    விருச்சிக ஏகாதசியையொட்டி,  அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்கவாசல் வைபவத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலையில் 4-15 மணிக்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், சில கோயில்களில் சொர்க்க வாசல் கிடையாது; ஆனால், வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீ காட்ச பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. அங்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

    ஒன்று ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்; மற்றொன்று தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். எனவே, இங்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி கிடையாது. ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜர் அவதரித்ததால், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில், நித்ய சொர்க்க வாசல் திருத்தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள் வார்கள்.

    அவ்வேளையில் சொர்க்க வாசல் திறப்பதுபோல் இங்குள்ள மணிக்கதவை (சந்நதிக் கதவை) திறப்பர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணம் ரங்கநாதர் கோயிலில் தைப் பொங்கல் அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சாஸ்திர சம்பிரதாயப்படி வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது.

    பிரம்ம முகூர்த்தம்  அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

    சரணாகதி தத்துவம் :-

    மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

    மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

    மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன.மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

    மார்கழிப் பாடல்கள் :-

    திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த  இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன.

    மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

    நல்ல வாழ்க்கைத்துணை :-

    மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

    வாசல் நிறையும் கோலங்கள்.  மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர்.

    பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

    திருவாடிப் பூரத்தில் உதித்து மார்கழியில்  திருப்பாவை பாடிய எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா இந்த  மார்கழி மாதத்தில் . அதுவும் வைகுந்த ஏகாதசித் திருநாளில் .

    நல்ல வாக்கைத் துணை அரங்கனே என்றுணர்ந்து   அரங்க தோளில் சார்த்தும்போது அரங்கனுக்கு  எந்த உறுத்தலும் இருக்கக் கூடாதே என்று கவலைப்பட்டு ஒரு முறை தான் அந்த மாலையை அணிந்து தோஷமில்லாமல் இருக்கிறது என்று உணர்ந்து  அதன் பின்னே  அரங்கனுக்கு  மாலை சாற்றிய ஆண்டாள் போற்றிய மாதமல்லாவா மார்கழி மாதம்.

    ஆகவே இந்த மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசித் திருநாளில் விடியற்காலையில் எழுந்து குளித்து  திருக்கோயிலை  அடைந்து பரமபத வாசல் வழியே  நமக்கு அருளும் அவனைச் சேவித்து  பரமன் துதி பாடி  நாமும் அந்த வைகுந்தம் அடையும் நற்பேற்றைப் பெறலாமே.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • குறவன் பாட்டு-25

    குறத்தி நகரப்பெண் உரையாடல் (சென்ற வாரத் தொடர்ச்சி)

    குறத்தி:

    நெல்லிக் கனியை முழுதாய் நானும்,

    அள்ளிக் கைகளில் அன்புடன் தருகிறேன்!

     

    மாங்கனி களையும் உங்கள் மனம்படி,

    பாங்குடன் பிரித்து எடுத்துத் தருகிறேன்!

     

    எட்டுக் கட்டுக் கீரை எதற்கு?

    வீணாய் வாடிப் போகுமம்மா!                                                                                                     203

     

    நகரப்பெண்:

    எட்டுக் கட்டுக் கீரைகளை,

    எத்தனை நாட்கள் ஆனாலும்,

    கெட்டுப் போக விட்டிடாமல்,

    காக்கும் கருவுயில் வைத்திடுவேன்!                                                                                                            204

     

    குறத்தி:

    காக்கும் கடவுளை நானறிவேன்,

    காக்கும் கருவியை அறியேனே!

    அப்படி என்ன கருவியது?                                                                                                                                   205

     

    நகரப்பெண்:

    வந்ததும் கொடுத்த மோரினை நான்,

    அதிலே வைத்துத் தந்ததால் தான்,

    உந்தன் தாகம் தீர்ந்தது பெண்ணே!                                                                                                               206

     

    குறத்தி:

    காக்கும் கருவி என் தாகம்,

    தீர்த்ததை எண்ணி வியக்கின்றேன்,

    காக்கும் கருவி இல்லையம்மா, தாகம்

    தீர்த்தது உங்கள் கருணை அம்மா!                                                                                                               207

     

    நகரப்பெண்:

    சரிசரி நீயும் பேச்சு வாக்கில்,

    மலர்களைப் பற்றி மறந்த தேனோ?

    மலர் என்ன மலரைக் கொண்டுவந்தாய்?

    இப்போதாவது சொல் பெண்ணே!                                                                                                                  208

     

    குறத்தி:

    மறந்ததை, மறந்து மன்னித் திடுங்கள்,

    மலர்களில் சிறந்த மலர்களை எடுத்து,

    பாதியை மட்டும் சரமாய்த் தொடுத்து,

    மீதியை உதிரியாய்க் கொண்டு வந்தேன்!

     

    பவள மல்லிப் பூக்களை,

    உதிரியாகக் கொண்டு வந்தேன்!

     

    படர்ந்து நின்ற கொடியில் பூத்த,

    பச்சைக் கம்பு மல்லிகையை,

    சரஞ் சரமாய்த் தொடுத்து நானும்,

    சிரம மின்றி எடுத்து வந்தேன்!

     

    மகேசன் மார்பில் சூடிட,

    மலர்ந்து நின்ற அரளியை,

    வணங்கி நின்று கொய்துவந்தேன்!

     

    என் கணவன் எனக்காக,

    எடுத்து வந்த மலர்களிலே,

    எழில் மிகுந்த கமலத்தில்,

    இரண்டெடுத்துச் சூடிமீதி மலர்களை,

    எல்லோர்க்குமாய் எடுத்து வந்தேன்!                                                                                                            209

     

    நகரப்பெண்:

    நான் சூடிட மல்லிகையும், என்

    மணவாளன் மார்பில் சூடத் தாமரையும்,

    மகேசனின் மார்பில் சூடிட அரளியையும்,

    மங்கலமாய்த் தந்து செல் குறத்தி!                                                                                                               210

     

    குறத்தி:

    மல்லிகை சூடிய குழலும்,

    சந்தனம் சூடிய நுதலும்,

    புன்னகை சூடிய இதழும்,

    உங்களின் எழிலைப் பன்மடங் காக்கும்,

    அன்புடன் சென்று வருகிறேன் அம்மா!                                                                                                     211

    Share
  • மெளனத்தின் பாடல்

    இப்னு ஹம்துன்
    silenceimages

    சொற்கூச்சல் பொழுதுகளில்
    உன் மகத்தான பேரழகு வெளிப்படுகிறது.
    நேசத் தென்றல் வீசும் இதயங்களை
    வார்த்தைகளற்று வசீகரிக்கிறாய்.
    காலக் காற்று
    தலைமுடி கலைக்கையில்
    சற்றே சங்கடமாகவும் உணர்கிறாய்
    வார்த்தைகள் புதைந்த
    வெட்கத்தில் சம்மதம் கொள்கிறாய்
    முகிழ்க்கும் மோனப் பொழுதுகளில்
    ஒரு தவம் போல் நீள்கிறாய்
    வெளிப்படாத உன் குரலில் எப்போதும்
    ஒளி(ர்)ந்தபடியிருக்கிறது ஒரு கவிதை.

     

    அறியாமையின் நர்த்தனத்தை
    ஏளனப் பார்வையால் வீழ்த்தி
    மடிகறக்க எண்ணும் கரங்களுக்கு
    புறக்கணிப்பைப் பரிசளிக்கிறாய்.
    குறுமனப் பேய்கள் குதித்தாடுகையில்
    நீயே ஆயுதமாகி விரட்டி அடிக்கிறாய்.
    அவ்வப்போது நாற்றமெடுக்கும்
    ஆணவ நோய்க்கு மருந்துமாகி..
    பேசாப் பொருளின் ப்ரிய பொழுதுகளில்
    வாழ்வாங்கு வாழ்கிறாய்.

     

    பின்
    பேச்சுகள் வெடித்தெழும் ஒரு தருணம்
    ‘அமைதி’யாய் வாய்க்கும் ஒரு மரணம்.

    படத்துக்கு நன்றி

    http://forevernocturne.wordpress.com/volume-ii-issue-i-october-2011/silence/

    Share
  • கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..கவிஞர் மருதகாசி

    கவிஞர் மருதகாசி

     

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..

    நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!

    கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
    சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!

    எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!

    ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!

    பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!

    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
    கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!

    என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!

    திரைப்படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன்
    இசையமைப்பு – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடலாசிரியர் – மருதகாசி

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மையில்லாதது.. உண்மையில்லாதது
    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது..
    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
    கண்முன்னே தோன்றுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே (…)
    போடும் பொய்த்திரையைக் கிழித்துவிடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்..

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க..
    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
    உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை..
    பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி
    மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே..
    என்மனதை நான் அறிவேன்..என் உறவை நான் மறவேன்
    எதுவானபோதிலும் ஆகட்டுமே.. நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. என்றம் அதுவே என் மூலதனமாகும்

    http://www.youtube.com/watch?v=Y4uvAc9QKnE

     

    NEENAITHATHAI MUDIPAVAN****KANNAI NAMBATHE UNNAI**** M.G.R. & MANJULA

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்- எருமேலி கிராத சாஸ்தா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    ஐயனை மகரவிளக்கு ஜோதியாகக் காணப் பயணப்படும் பெருவழியின் நுழைவாயில் தலம் எருமேலி. இங்கு  வாவரைத் தொழுது, மேளதாள முழக்கங்களோடு ‘திந்தக்கத் தோம்’ என்ற ஜதியோடு அடியவர் நடனமாடி வர, கிராத (வேடன்) சாஸ்தாவாக அருள்பாலிக்கும் ஐயன் மீது எழுந்த திருப்புகழ். (நண்பர் வி.கே.நாராயணன் இதனைக் கல்யாணிராகத்தில் பாடுவார்)

    படிக்க, ரசிக்க..       

                               ஐயப்பன் திருப்புகழ்

    தனனதன  தனனதன தனதான  தானதன

     தனனதன  தனனதன தனதான  தானதன    

    தனனதன  தனனதன தனதான  தானதன         தனதான

    இரவுபகல் பகலிரவு எனமாறி மாறிஇரு

      பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை

      புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற             உழல்வேனை

    இருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்

      அபயமென மரணபய மணுகாம லேநினது

      சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை        தரவேணும்!

    அரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை

       அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை

       அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு         மணிமார்பா!

    அரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி

       சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு

       பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே!

    விரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை

       அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்

       கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய      சிவபாலா!

    விழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை

        உலவிவர், ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்

        நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ         அருள்வோனே!

    அரசு,மரு தகில்,கதலி  கமுகால் பலாவளர

       அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்

       அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்;    ஜதிகூறும்

    அதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி

       தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென

       எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர்         பெருமாளே!

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (6)

    ராமஸ்வாமி ஸம்பத்

    சபரி கூறியதுபோல் ரிச்யமுகத்தில் நல்மனம் படைத்த வானர வீரன் அனுமன் ராமன் வருகைக்காகக் காத்திருந்தான். அனுமன் வாயு புத்திரன். பதினொரு ருத்திரர்களில் ஒருவன். ராமாவதாரம் எடுக்கும் முன் திருமால் எல்லா தேவர்களையும் தன் காரியத்திற்கு உதவும் பொருட்டு பூமியில் பிறக்குமாறு பணித்தார். இதைக்கேட்ட பரமேஸ்வரன் வைகுண்டத்திற்கு ஏகி நாரணனிடம் “நானும் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் பரமாத்மா” என்றார். பரமபதநாதன் மலர்ந்த முகத்தோடு, “பரம்பொருளே! உங்கள் ஆசி ஒன்றே போதும்” என்றார்.

    “இல்லை இல்லை. நான் கட்டாயம் உங்களுக்கு உதவுவதற்கு பதினோராவது ருத்திரனாக அவதரிக்கப் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டார். அப்பரமனே அனுமனாக. வானர குலத்தைச் சேர்ந்த அஞ்சனாதேவிக்கு வாயு புத்திரனாக உதித்தார். பிறந்தவுடனே சூரியனை ஒரு பழமாகக் கருதி அதனை விழுங்கும் பொருட்டு அனுமன் வான்நோக்கித் தாவினான். சூரியனுக்கு ஆபத்தென இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கினான். நிலைகுலைந்து கீழே வீழ்ந்த அனுமனைக்கண்டு வாயு சினம் மேலோங்க மூவுலகிலும் காற்று இல்லாமல் செய்தான். இதனால் ஏற்பட்ட சீரழிவை நீக்க, பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் வாயுவை நாடினர். “என் மகனுக்கு உங்கள் சக்தியை அளித்தால்தான் என் கோபம் தணியும்” என்று வாயுதேவன் கூற அனைவரும் அவ்வாறே செய்ய அனுமன் மிக்க பலசாலியும் அறிவாளியுமானான். அவனுக்கு சூரியன்  ஆசானாகி வேதநெறிகளையும், ஏனைய சாஸ்திரங்களையும், நவவியாகரணங்களையும் கற்பித்தான். குருதக்ஷிணை அளிக்க முற்பட்ட அனுமனை நோக்கி, “நீ என் மகன் கிஷ்கிந்தை இளவரசன் சுக்ரீவனுக்கு அமைச்சனாகி சேவை புரி.  பின்னர் ஸ்ரீமந்நாராயணனின் அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவருக்கு துணையாகப் பணியாற்று” என்று ஆதவன் ஆணையிட்டான். அப்போதிலிருந்து ராமன் வருகையை எதிர்நோக்கியவாறே சுக்ரீவனின் அந்தரங்க அமைச்சனாகக் திகழ்ந்தான் அனுமன்.

    ரிச்யமுகத்தின் எல்லையை நெருங்கிய ராம லக்ஷ்மணர்களை  வானர இளவரசன் சுக்ரீவன் சாரணர்கள் மூலம் அறிந்து, ‘அவர்கள் வாலியின் கையாட்களாக இருப்பார்களோ’ என பயந்து அனுமனை அழைத்து, ”யாரோ வில்லேந்திய இருவர் நமது மலை நோக்கி வருகிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல் எனக்கு வேண்டும். ஒருவேளை அவர்கள் வாலியின் ஆட்களாக இருந்தால் அவர்களை இங்கு வராமல் தடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டான்.

    சுக்ரீவனை வணங்கி அனுமன் ஒரு அந்தணவேடம் பூண்டு ராம லக்ஷ்மணர் அருகே சென்றான். அவர்களது ஆக்ருதி அவனை வெகுவாகக் கவர்ந்தது. ‘இவர்களைப் பார்த்தால் வாலியின் ஆட்களாகத் தென்படவில்லை. இவர்கள் யாராக இருக்கும்?’ என சிந்தித்தவாறு,  அவர்களை நோக்கித் தன் இனிய குரலில் “கவ்வை இன்றாக நுங்கள் வரவு!” என்று முகமன் கூறி, மேலும் பேசலுற்றான்: ”வில்லேந்திய நீங்கள் ஒரு அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் உங்கள் சடைமுடிகளைப் பார்த்தால் துறவிகளோ என்றும் தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் ராஜரிஷிகளா … இல்லை தேவரிஷிகளா…? உங்கள் கனிவான பார்வையும் பொலிவு பொங்கும் முகங்களும் என்னைக் கிறங்க வைக்கின்றன. என்னைப் போலவே இந்த மலையில் உலாவும் விலங்குகளும் பறவைகளும் உங்களை வரவேற்பது போல ஆர்ப்பரிக்கின்றன. இப்பர்வதப் பொழில்களும் திடீரெனப் பூத்துக் குலுங்குகின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது துயர் இழையோடும் உங்கள் வதனங்கள் என் மனத்தைக் கலக்குகின்றன. நீங்கள் யார்? இக்குறிஞ்சிப் பகுதியில் எதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்?

    “மகாபலம் பொருந்திய கிஷ்கிந்தை வானர அரசன் வாலி தன் இளவலான சுக்ரிவனைத் தவறாகப் புரிந்துகொண்டு நாடு கடத்தியதோடல்லாமல் அவன் மனைவி ருமையையும் தன்வயமாக்கிக் கொண்டுவிட்டான். அச்சம் கொண்டு சுக்ரீவன் இங்கு தஞ்சம் புகுந்துள்ளான். ஏனெனில் மதங்க முனிவரின் சாபத்தால் வாலி இப்பகுதிக்கு வரமுடியாது; வந்தால் உயிர் இழப்பான். நான் வாயு பகவானின் புத்திரன். என் பெயர் அனுமன். சுக்ரீவனின் அமைச்சன். நீங்கள் யாரென்று இப்போது தெரிந்துகொள்ளலாமா?.”

    இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அனுமன் தன் உரையை முடித்தான்.

    உள்ளத்தை அள்ளும் இவ்வினிய சொற்களைக் கேட்ட ராமன் தன் இளவலிடம் “தம்பி, நாம் யார் உதவியைக் கேட்க விழைகிறோமோ, இறை அருளால் அவன் அமைச்சனே நம் முன் வந்திருக்கிறான். இப்படிப்பட்ட அமைச்சனைப் பெறுவதற்கு சுக்ரீவன் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இவன் சாதாரணமானவன் அல்லன். ரிக், யஜுர், ஸாம வேதங்களையும் மற்றும் பிற சாஸ்திரங்களையும் கசடறக் கற்றவனாகத் திகழும் இந்த சொல்லின் செல்வன் ஒரு நவவியாகரண பண்டிதனாகவும் இருக்கவேண்டும். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளை அளந்து நம் நிலையை இவனுக்கு உணர்த்தி நாம் சுக்ரீவனின் நட்பை நாடி வந்திருக்கிறோம் என்று சொல்” என்றான்.

    லக்ஷ்மணனும் தாங்கள் அயோத்தியை விட்டு நீங்கியது, நீண்ட வனவாசத்தில் ஸீதையைப் பறிகொடுத்தது, கபந்தன் மற்றும் சபரியின் அறிவுரைப்படி சுக்ரீவன் நட்பைக்கோரி வந்திருப்பது பற்றி விவரித்து, “இதோ இவர் தான் ராஜ்ய பட்டத்தைத் துறந்த ராமன். நான் அவர் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறினான்.

    ’ராமன்’ என்ற சொல்லை கேட்ட அனுமன் புளகாங்கிதம் அடைந்து, ‘தான் யாருக்காகக் இத்தனைக் காலம் காத்திருந்தோமோ அந்த தெய்வம் எதிர்பட்டுவிட்டது’ என மகிழ்ந்து, தன் அந்தண உருவை நீத்து சுயரூபத்தை அடைந்தான்.

    பின்னர் ராமன் அடிபணிந்து, “ஐயன்மீர், இம்முட்புதர் அடர்ந்த மலையில் தாங்கள் பயணிப்பது கடினம். ஆகவே, நீவிர் என் புஜங்களில் அமருங்கள். நான் உங்களை எம்மன்னன் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன்” என்றான் அனுமன்.

    (​தொடரும்)

    Share
  • அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஓவியம்

    சு.ரவி

    அகிலாண்டேஸ்வரி எண்ணெய் வண்ண ஓவியம்… பார்க்க, ரசிக்க

    AKILANDESWARI FINISHED 2

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…91

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்

    அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல். ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக புரட்டுவதை விட விரைவாக வாரங்கள் புரட்டப் படுகின்றனவோ எனும் வகையில் காலதேவன் தனது சக்கரங்களை விரைவாக உருட்டிக் கொண்டிருக்கிறான்.

    எந்த ஒரு வீடோ? அன்றி எந்த ஒரு நாடோ? என்றுமே பொருளார ரீதியாகவோ அன்றி வசதிகளின் தரத்திலே உயர்ந்து கொண்டே செல்வது என்பது நடைமுறையில் நடக்காத ஒன்று.

    அப்படி எதிர்பார்ப்பதுவும் யதார்த்தமாகாது.

    அதே சமயம் முன்னேற்றத்தை எதிர்பார்த்து அதற்காக உழைப்பதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பான அன்றாட நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் உத்வேகம் இருக்காது. முன்னேற்றத்திற்கான புதுவகையான கண்டு பிடிப்புகளுக்கான உந்துதல் இருக்காது.

    ஒரு நாட்டின் துருத வளர்ச்சிக்கும், இயற்கையான இயங்குதலுக்கும் அடிமட்டத் தொழிலாளியும் அவசியம் அதே போல அதியுயர் செல்வந்தனும் தேவை.

    என்ன எத்திசையை நோக்கிச் செல்கிறது இம்மடல் எனும் எண்ணம் எழுவது இயற்கை.

    ஓரிரு தினங்களுக்கு முன்னால் இங்கிலாந்துப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு தொலைக்காட்ச்சியில் பங்கு பற்றி தனட்ய்ஹு கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்தார்.

    அவற்றைச் செவிமடுத்துக் கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளிஅப் பற்றி எனது சிந்தனை படர ஆரம்பித்தது.

    அரசியல் எனும் அந்தக் குட்டைக்குள் குதிப்பவர்கள் அதைத் தமது தொழிலாகச் செய்கிறார்களா? இல்லை மக்களுக்கான சேவையாகச் செய்கிறார்களா? எனும் கேள்வி ஆழமாக என்னுள்ளத்தை ஊடுருவியது.

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் ஆனால் அம்மக்கள் சேவைக்கும் ஊதியம் கொடுத்தும் நிலைதானெர் உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.

    அது ஒரு தொழில் எனும் ரீதியில் பார்த்தால் கூட ஒரு மனிதனை அரசியலை நோக்கித் தள்ளிச் செல்வது என்ன ?

    மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் தூய்மையான எண்ணமா? அன்றி அப்பதவியால் அவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களா ?

    மிகவும் சிக்கலான கேள்வி ? இல்லையா !

    மகாத்மா காந்தி எனும் அந்த மாமனிதர் ஈடுப்பட்ட ரசியல் நிலைக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் நிலைக்கும் பலவிதமான வேறுபாடுகள் உண்டு.

    தனது நாடு தன் மக்களாளாலேயே ஆளப்பட வேண்டும் எனும் நியாமான உரிமைக்குரலை முன்னெடுத்து காந்தி தனது அர்சியலை நடத்தினார் அது முற்றுமுழுதாக அமக்கள் சேவையையே மனதில் கொண்ட நிலைப்பாடகா இருந்தது.

    ஆனால் இன்ரைய நிலையிஅல் மக்கள் தம்மைத் தாமே அளும் நிலையில் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசியலில் ஈடிபடும் அரசியல்வாதிகளின் மனதில் மக்கள் சேவை எத்தகிய இடைத்தை வகிக்கிறது என்பது கேள்விக்குறியே.

    எமது பின்புல நாடுகளை விட்டு நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் அரசியலைக் கண்ணோட்டம் விடும் போது அங்குகூட சந்தேகமே வலுப்பெறுகிறது.

    சில வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து அரசியல்வாதிகள் மத்தியில் அடித்த சூறாவளியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    பாரளுமன்ற உறுப்பினராக அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கு மேலாக அவர்களுக்கு அளிக்கப்படும் செலவீனச் சலூகைகளை பலர் தவராகப் பயன்படுத்து நியாயமற்ற வகையில் பணத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்ததும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மக்கள் மனதில் அரசியல்வாதிகளின் மீதிருந்த மதிப்பு கரைந்து போனதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

    சரி இவற்றிற்கும் பிரித்தானியப் பிரதமரின் தொலைக்காட்சிக் கருத்தாடலுக்கும் என்ன தொடர்பு? இதோ வருகிறேன். . . .

    இங்கிலாந்தி ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது,

    சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பவர்களது விகிதம் கூடிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

    இங்கேதான் பிரித்தானியப் பிரதமரின் பிரகடனம் மக்கள் நலனைச் சார்ந்ததா? இல்லை இன்னும் 15 மாதங்களில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமது கட்ச்சி அரசைமைத்துக் கொள்வதற்குச் சாதகமாக இருக்கும் ஒரு பிரகடனமா ? எனும் சந்தேகம் உள்ளத்தை உலுப்புகிறது.

    சரி ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் முக்கிய கடமை தனது பதவியை அர்ர்ர்ரசில் தக்க வைத்துக் கொள்வதே இதிலென்ன இடக்கு எனும் எண்ணம் சிலரின் மனதிலே எழலாம்.

    ஆனால் இங்கிலாந்துப் பிரதமர் தனது கட்சி 2015 இல் பதவிக்கு வந்தால் தான் பிரதமராக வந்தால் ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்பதற்காக நடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்,

    ஜரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிப்பதை பல முன்னனி தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் வேளையில் இத்தகையதோர் அறிவித்தல் எந்த நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்டிருக்கிறது ?

    மக்கள் சேவையா ?  மகேசன் சேவையா?  காலம் தான் விடையளிக்கும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share