சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்

அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல். ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக புரட்டுவதை விட விரைவாக வாரங்கள் புரட்டப் படுகின்றனவோ எனும் வகையில் காலதேவன் தனது சக்கரங்களை விரைவாக உருட்டிக் கொண்டிருக்கிறான்.

எந்த ஒரு வீடோ? அன்றி எந்த ஒரு நாடோ? என்றுமே பொருளார ரீதியாகவோ அன்றி வசதிகளின் தரத்திலே உயர்ந்து கொண்டே செல்வது என்பது நடைமுறையில் நடக்காத ஒன்று.

அப்படி எதிர்பார்ப்பதுவும் யதார்த்தமாகாது.

அதே சமயம் முன்னேற்றத்தை எதிர்பார்த்து அதற்காக உழைப்பதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பான அன்றாட நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் உத்வேகம் இருக்காது. முன்னேற்றத்திற்கான புதுவகையான கண்டு பிடிப்புகளுக்கான உந்துதல் இருக்காது.

ஒரு நாட்டின் துருத வளர்ச்சிக்கும், இயற்கையான இயங்குதலுக்கும் அடிமட்டத் தொழிலாளியும் அவசியம் அதே போல அதியுயர் செல்வந்தனும் தேவை.

என்ன எத்திசையை நோக்கிச் செல்கிறது இம்மடல் எனும் எண்ணம் எழுவது இயற்கை.

ஓரிரு தினங்களுக்கு முன்னால் இங்கிலாந்துப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு தொலைக்காட்ச்சியில் பங்கு பற்றி தனட்ய்ஹு கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்தார்.

அவற்றைச் செவிமடுத்துக் கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளிஅப் பற்றி எனது சிந்தனை படர ஆரம்பித்தது.

அரசியல் எனும் அந்தக் குட்டைக்குள் குதிப்பவர்கள் அதைத் தமது தொழிலாகச் செய்கிறார்களா? இல்லை மக்களுக்கான சேவையாகச் செய்கிறார்களா? எனும் கேள்வி ஆழமாக என்னுள்ளத்தை ஊடுருவியது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் ஆனால் அம்மக்கள் சேவைக்கும் ஊதியம் கொடுத்தும் நிலைதானெர் உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.

அது ஒரு தொழில் எனும் ரீதியில் பார்த்தால் கூட ஒரு மனிதனை அரசியலை நோக்கித் தள்ளிச் செல்வது என்ன ?

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் தூய்மையான எண்ணமா? அன்றி அப்பதவியால் அவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களா ?

மிகவும் சிக்கலான கேள்வி ? இல்லையா !

மகாத்மா காந்தி எனும் அந்த மாமனிதர் ஈடுப்பட்ட ரசியல் நிலைக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் நிலைக்கும் பலவிதமான வேறுபாடுகள் உண்டு.

தனது நாடு தன் மக்களாளாலேயே ஆளப்பட வேண்டும் எனும் நியாமான உரிமைக்குரலை முன்னெடுத்து காந்தி தனது அர்சியலை நடத்தினார் அது முற்றுமுழுதாக அமக்கள் சேவையையே மனதில் கொண்ட நிலைப்பாடகா இருந்தது.

ஆனால் இன்ரைய நிலையிஅல் மக்கள் தம்மைத் தாமே அளும் நிலையில் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசியலில் ஈடிபடும் அரசியல்வாதிகளின் மனதில் மக்கள் சேவை எத்தகிய இடைத்தை வகிக்கிறது என்பது கேள்விக்குறியே.

எமது பின்புல நாடுகளை விட்டு நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் அரசியலைக் கண்ணோட்டம் விடும் போது அங்குகூட சந்தேகமே வலுப்பெறுகிறது.

சில வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து அரசியல்வாதிகள் மத்தியில் அடித்த சூறாவளியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

பாரளுமன்ற உறுப்பினராக அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கு மேலாக அவர்களுக்கு அளிக்கப்படும் செலவீனச் சலூகைகளை பலர் தவராகப் பயன்படுத்து நியாயமற்ற வகையில் பணத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்ததும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மக்கள் மனதில் அரசியல்வாதிகளின் மீதிருந்த மதிப்பு கரைந்து போனதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

சரி இவற்றிற்கும் பிரித்தானியப் பிரதமரின் தொலைக்காட்சிக் கருத்தாடலுக்கும் என்ன தொடர்பு? இதோ வருகிறேன். . . .

இங்கிலாந்தி ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது,

சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பவர்களது விகிதம் கூடிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

இங்கேதான் பிரித்தானியப் பிரதமரின் பிரகடனம் மக்கள் நலனைச் சார்ந்ததா? இல்லை இன்னும் 15 மாதங்களில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமது கட்ச்சி அரசைமைத்துக் கொள்வதற்குச் சாதகமாக இருக்கும் ஒரு பிரகடனமா ? எனும் சந்தேகம் உள்ளத்தை உலுப்புகிறது.

சரி ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் முக்கிய கடமை தனது பதவியை அர்ர்ர்ரசில் தக்க வைத்துக் கொள்வதே இதிலென்ன இடக்கு எனும் எண்ணம் சிலரின் மனதிலே எழலாம்.

ஆனால் இங்கிலாந்துப் பிரதமர் தனது கட்சி 2015 இல் பதவிக்கு வந்தால் தான் பிரதமராக வந்தால் ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்பதற்காக நடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்,

ஜரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிப்பதை பல முன்னனி தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் வேளையில் இத்தகையதோர் அறிவித்தல் எந்த நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்டிருக்கிறது ?

மக்கள் சேவையா ?  மகேசன் சேவையா?  காலம் தான் விடையளிக்கும்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *