Blog

  • Journey of a Civilization – Indus to Vaigai – நூலறிமுகம்

    Journey of a Civilization – Indus to Vaigai – நூலறிமுகம்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓய்வு), அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் அற்புதமான ஆய்வுநூல், ’Journey of a civilization – Indus to Vaigai.’ ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் வெளியீடு இது.

    உலகின் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான சிந்துவெளி நாகரிகத்தின் நகர்வு குறித்த தம் பார்வையை இந்நூலில் மிகச் சிறப்பாகவும் விரிவாகவும் ஆவணப்படுத்தியிருக்கின்றார்  திரு. பாலகிருஷ்ணன் அவர்கள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மேற்கொண்ட தொடராய்வுகளின் விளைச்சலைத் தாங்கிநிற்கும் கருத்துக் கருவூலம் இந்நூல் எனில் மிகையில்லை.

    இந்நூலில் 17 பகுதிகள் (chapters) இடம்பெற்றுள்ளன. அவை குறித்து இக்கட்டுரையில் சிறியதோர் அறிமுகத்தைத் தமிழில் தந்திருக்கின்றேன்.

    1. மனிதப் பயணத்தின் தொடக்கம்: 

    இப்பகுதியில் மாந்தர்களின் தொடக்க கால வாழிடம், அவர்களது நகர்வுகளின் பாதை, நாடோடிகளாகவும் காட்டுவிலங்காண்டிகளாகவும் வாழ்ந்த தொடக்க கால மாந்தக்கூட்டம் கருவிகளை உருவாக்கி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் தேர்ந்து உற்பத்தியைப் பெருக்கி நிலைத்த வாழிடங்களில் வதியும் நாகரிகச் சமூகமாக வளர்ச்சி கண்டமை, மாந்தர்களின் மரபணு ஆராய்ச்சிகளில் கிடைக்கப்பெறும் உண்மைகள், அவை சிந்துவெளி நாகரிகத்தோடு பொருந்திவரும் தன்மை போன்றவை  ஆராயப்பட்டிருக்கின்றன.

    2.  வெண்கலக் கால நாகரிகங்கள் – உலகின் பழமையான நாகரிகங்கள்:

    வெண்கலக் காலகட்டத்தைச் சேர்ந்த உலகின் பழமையான நாகரிகங்களான சுமேரிய நாகரிகம், எலமைட் நாகரிகம், எகிப்திய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் ஆகியவை பற்றி இப்பகுதி பேசுகின்றது. குறிப்பாக, சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட விதம், அதன் அடிப்படைகள், அம்மக்களின் வாழ்வியல், நம்பிக்கைகள் போன்றவற்றை இங்கே நமக்கு அறியத்தருகின்றார் ஆசிரியர்.

     3. சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்கம், முடிவு குறித்து நீடிக்கும் புதிர்கள்:

    இப்பகுதியில் சிந்துவெளி நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்திலேயே தோன்றிய ஒன்றா? வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவை வந்தடைந்ததா? என்பது குறித்தும், சிந்துவெளி எழுத்துக்கள் திராவிடச் சார்புடையனவா? இந்தோ-ஆரியச் சார்புடையனவா? என்பது குறித்தும் பல்வேறு ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களும், இந்நாகரிகத்தின் அழிவு பற்றிய ஆய்வாளர்களின் கருதுகோள்களும் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

     4. சிந்துவெளி நாகரிகத்தின் திராவிடச் சார்பை வெளிப்படுத்தும்  கோட்பாடுகள்:

    சிந்துவெளி நாகரிகத்தின் திராவிடச் சார்பை வெளிப்படுத்தும் கோட்பாடுகளையும் அவற்றை வெளிப்படுத்தியிருக்கும் அறிஞர் பெருமக்களான இராபர்ட் கால்டுவெல், கமில் சுவெலபில், சுனிதிகுமார் சாட்டர்ஜி, ஹென்றி ஹீராஸ் பாதிரியார், அஸ்கோ பார்ப்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றோரின் விளக்கங்களையும் இப்பகுதியில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்தோடு, பார்ப்போலா, மகாதேவன் ஆகியோர் சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த சின்னங்கள் முத்திரைகள் எழுத்துக்கள் குறித்துத் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் ஈண்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

    5. இடப்பெயர்களின் இடப்பெயர்வு:

    மனிதர்கள் தாங்கள் இடம்பெயர்ந்தபோதெல்லாம் தாங்கள் வாழ்ந்த இடங்களின் பெயர்களையும் தம்முடனேயே பெயர்த்துச் சென்றிருக்கின்றனர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தோர் இங்கிலாந்தின் இடப்பெயர்களான பர்மிங்ஹாம் (Birmingham), இலண்டன் (London), ஷெப்பீல்டு (Sheffield) போன்றவற்றையும், தமிழகத்திலுள்ள திருநெல்வேலியிலிருந்து இலங்கை, யாழ்ப்பாணத்திற்குச் சென்றோர் திருநெல்வேலி என்ற பெயரையும் அங்குச் சூட்டியிருப்பதைப் சுட்டிக்காட்டும் ஆசிரியர், ஈதொத்த சான்றுகள் பலவற்றை எடுத்துக்காட்டி இக்கூற்றை உறுதிப்படுத்துகின்றார்.

    6. பழந்தமிழ்நாடும் சங்க இலக்கியமும் – மறைந்த சிந்துவெளியின் தொடர்ச்சி தமிழிலக்கியத்தில் வெளிப்படும் காட்சி:

    மறைந்த சிந்துவெளிப் பண்பாட்டின் தொடர்ச்சியைச் சங்க இலக்கியங்கள் தாங்கி நிற்பதனைச் சங்கப் பாடல்கள் வாயிலாக விரிவாகவும் தக்க சான்றுகளோடும் வெளிப்படுத்தியிருக்கின்றது இப்பகுதி. சங்க இலக்கிய ஆர்வலர்களுக்கு இப்பகுதி நல்விருந்தாக அமைவதோடல்லாமல், வரலாற்றுப் பின்னணியோடு தொடர்புடைய அதன் இன்னொரு முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது எனலாம்.

    7. திராவிடச் சார்புக்குச் சான்றாய்த் திகழும் சிந்துவெளி இடப்பெயர்கள்:

    கொற்கை, வஞ்சி, தொண்டி, கள்ளூர் போன்ற சங்க இலக்கிய இடப்பெயர்களும், நள்ளி, பாரி, பேகன், அதியன், அஞ்சி உள்ளிட்ட வேளிர்களின் பெயர்களும், மூவேந்தர்களின் பெயர்களும் சிந்துவெளிப் பகுதிகளில் (இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா) காணப்படுவதை நிலப்பட (map) ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் இப்பகுதியில் தந்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன்.

    8: திராவிட வடிவமைப்பில் (திராவிட மாடல்!) மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் விளங்கும் சிந்துவெளி நகரங்கள்:

    ஹரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கன், லோத்தல் உள்ளிட்ட சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் நிலத்தின் மேற்குப்பகுதி உயர்ந்தும் அவ்வுயர்ந்த பகுதியில் கோட்டைகளும், நிலத்தின் கிழக்குப்பகுதி தாழ்ந்தும், அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டிகள், பண்டசாலை போன்றவையும் அமைந்திருந்தமையை அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் புலப்படுத்தின. இவைபோலவே தமிழ்நாட்டிலும் மேற்குப்பகுதி உயர்ந்தும் கிழக்குப்பகுதி தாழ்ந்தும் இருப்பதோடு மேல், கீழ் என்ற சொற்கள் உயர்வு/சிறப்பு, தாழ்வு/இழிவு எனும் பொருளைக் குறிக்கும் வகையிலும் புழக்கத்திலிருப்பதை இலக்கியச் சான்றுகளோடும் நிலவியல் சான்றுகளோடும் இப்பகுதியில் நாம் அறிந்துகொள்கின்றோம்.

    9. சிந்துவெளி மக்களின் சிந்தை கவர்ந்த நிறம் திராவிடச் சிவப்பு:

    சுட்ட செங்கல், செம்பு, சுட்ட மண்ணாலான (Terracotta) சிவப்புநிற வளையல், சிவப்புநிறக் கலைப்பொருட்கள், சிவப்புநிறப் பானை என்று சிந்துவெளி அகழாய்வில் வெளிப்பட்ட பெரும்பான்மையான பொருட்கள் சிவப்பு வண்ணத்திலேயே கிடைத்திருப்பது சிவப்பு வண்ணத்தின்மீது சிந்துவெளி மக்களுக்கிருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது. சங்க இலக்கியத்திலும் சிவப்பு, செம்மை எனச் சிவப்போடு தொடர்புடைய சொற்களும் பெயர்களும் மிகுதி.  சிவப்பு நிறமுடைய சேயோனே மலைமக்களின் தெய்வம். செம்மை என்பது நிறத்தை மட்டுமல்லாது செங்கோல், செம்மொழி, செந்தமிழ், செம்புலம் என்று நேர்மையை/சிறப்பைக் குறிக்கும் சொல்லாகவும் தமிழ்நாட்டில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு சிந்துவெளி மக்கள் போற்றிய சிவப்பு, திராவிட/தமிழ்ப் பண்பாட்டிலும் நிறைந்திருப்பதை இப்பகுதி ஒப்புமையோடு விளக்குகின்றது.

    இந்தப் பகுதியின் உட்பிரிவுகளில் ஒன்றாக அமைந்திருக்கும் ”பானைத் தடம்” என்ற பிரிவானது, சிவப்பு, கருப்பு & சிவப்பு வண்ணத்தினாலான பானைகள் சிந்துவெளி அகழாய்வில் கிடைத்ததுபோலவே இராஜஸ்தான்,  குஜராத், மகாராட்டிரா போன்ற இடங்களிலும் தமிழ்நாட்டிலும் அகழாய்வில் கிடைத்திருப்பதையும், பானைகள் செய்யும் குயவனைக் ”கலஞ்செய் கோ”, ”வேட்கோ” என்று அரசனுக்கு நிகரான மரியாதையோடும், அறிவில் சிறந்தவனே எனும் பொருளில் ”முதுவாய்க் குயவ” என்றும் விளித்து எழுதப்பட்டிருக்கும் சங்கப் பாடல்களையும் எடுத்துக்காட்டிச் சிந்துவெளியில் தன் பயணத்தைத் தொடங்கிய பானையின் தடம் தமிழ்நாட்டில் நிறைவுறுவதைச் சுவைபடத் தெரிவிக்கின்றது; காலப்போக்கில் குயவர்கள் தம் சிறப்பினையிழந்து சாதியடுக்கில் கீழாக்கப்பட்ட அவலத்தையும் இப்பகுதி பேசத் தவறவில்லை.

    10. திராவிட குஜராத் – வேளிர்களின் நடைபாதை:

    நன்கு வளர்ச்சியுற்ற ஹரப்பா நாகரிகப் பகுதிகளாகக் கருதப்படுபவை குஜராத்திலுள்ள லோத்தல் (Lothal), டோலாவீரா (Dholavira), பெய்ட்டு துவாரகா (Beyt Dwarka) உள்ளிட்டவை. துவாரகையைத் ’துவரை’ என்று குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 201ஆவது பாடலில் வேளிர்களை அகத்திய முனிவர் துவரையிலிருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்த செய்தியைப் பதிவுசெய்திருக்கின்றார் சங்கப் பெரும்புலவரான கபிலர்.

    இடைச்சங்கத்தைத் தலைமையேற்று நடத்தியவன் ’துவரைக் கோமான்’ என்கின்றது இறையனார் அகப்பொருளுரை. அந்தத் துவரைக்கோமான் துவரையிலிருந்து இடம்பெயர்ந்த வேளிர்களுள் ஒருவனாக இருக்க வேண்டும்.

    சிந்துவெளி மக்களின் வணிகச் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்ந்தது சங்குகளை அறுத்து வளையல்கள் செய்வது. குஜராத்தில் லோத்தல் (Lothal), கோலா டோரா (Gola Dhora) போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுகளில் சங்குவளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டன. தமிழகத்திலுள்ள கொடுமணல், பொருந்தல் ஆகியவற்றில் நடந்த அகழாய்வுகளிலும் சங்குவளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் கிடைத்திருக்கின்றன. அமைப்பிலும் இவ்வளையல்கள் ஒன்றுபோல் இருக்கின்றன. இன்றும் குஜராத், இராஜஸ்தான் பகுதிகளில் வாழும் மகளிர் சங்கு வளையல்களை அணிகின்றனர். தமிழகப் பெண்கள்தாம் அவ்வழக்கத்தை விட்டுவிட்டனர்.

    ஒட்டகம், அத்திரி எனப்படும் கோவேறு கழுதை, சிங்கம் போன்ற, குஜராத்தில் வாழ்கின்ற, விலங்குகளைப் பற்றிய செய்திகள் சங்க நூல்களில் பலவிடங்களில் இடம்பெற்றிருப்பது அந்நிலப்பகுதிகளைத் தமிழ்மக்கள் அறிந்திருப்பதையே புலப்படுத்துகின்றது. சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள பெயர்களான ஓரி, போர், பாழி முதலியவை குஜராத்தில் இன்றும் இடப்பெயர்களாக இருப்பது தமிழ்மக்கள் ஒருகாலத்தில் வாழ்ந்த பகுதியாகவே குஜராத் இருந்திருக்கவேண்டும் என்பதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

    இவ்வாறு குஜராத், ’திராவிட குஜராத்’தாக விளங்குவதை இலக்கியம், அகழாய்வு, இடப்பெயர் போன்ற பல்வகைச் சான்றுகளோடு இப்பகுதி நமக்குத் தெரிவிக்கின்றது.

    11. திராவிட மகாராட்டிரா – பொன்படு கொண்கான நன்னன்:

    கொண்கானம் கிழானான நன்னன் குறித்த செய்திகளை இருபது சங்கப் பாடல்களில் நாம் காண்கின்றோம். அவன் ஆண்ட பகுதியை ஏழில்குன்றம் என்றும்  ’பொன்படு கொண்கானம்’  என்றும் குறிப்பிடுகின்றன சங்க நூல்கள். கொண்கானம் என்பது இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோவா, மகாராட்டிரா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்கும். மகாராட்டிராவில் சப்தசிருங்கி (ஏழில்குன்றம் எனப்பொருள்), பறம்பி (பறம்பு என்பதன் திரிபு), அரே (அரையம் என்பதன் திரிபு) போன்ற பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. ஏழில்குன்றத்துக் கொற்றவை என்று சங்கப் பாடல்கள் சுட்டும் தெய்வம் இன்று செங்கிருதக் கலப்பால் சப்தசிருங்கி துர்க்கையாகப் பெயர்மாற்றம் பெற்றுள்ளாள்.

    இன்றைய மகாராட்டிரா, ஆந்திரா, தெலங்கானாவின் சில பகுதிகளை கி.மு.1 முதல் கி.பி.2 வரை ஆண்ட சாதவாகனர்களை ’நூற்றுவர் கன்னர்’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றது சிலப்பதிகாரம். இவர்கள், சேரன் செங்குட்டுவனின் நண்பர்களாக இருந்ததையும் இந்நூல் தெரிவிக்கின்றது. ஹைதராபாத்தில் கண்டெடுக்கப்பட்ட சாதவாகனர் நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிராகிருதமும் மறுபக்கத்தில் தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருப்பது சாதவாகனர்களின் ஆட்சிப்பகுதியில் தமிழும் முதன்மை மொழிகளுள் ஒன்றாக இருந்ததைப் புலப்படுத்துகின்றது. நன்னன், சாதவாகனர் எனும் இரு மன்னர்களும் மகாராட்டிராவின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டிருக்கின்றனர் என்பதை நாம் மேற்கண்ட தரவுகள் மூலம் அறிகின்றோம்.

    12. கொங்கு மக்களிடமும் நகராத்தாரிடமும் காணப்படும் சிந்துவெளி நாகரிகத்தின் எச்சம் – ஒரு வரலாற்று ஆய்வு:

    கொங்குப் பகுதியான, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, காங்கேயத்திலுள்ள காளைகள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் காளைகளை ஒத்தவையாகப் பெருந் திமிலோடு (big hump) இருப்பவை. ஈரோடு கொடுமணலில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் சூதுபவள மணிகள் (Cornelian Beads), லேபிஸ் லசூலி எனப்படும் நீலவண்ணக் கற்கள் (Lapis lazuli), நீலமாணிக்கம், படிகம் போன்றவை கிடைத்துள்ளன. இவற்றில் சூதுபவளமும், லேபிஸ் லசூலிக் கற்களும் குஜராத் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவையெல்லாம் சிந்துவெளிப் பகுதிகளோடு கொங்கு மக்களுக்கிருந்த தொடர்பைத் தெரிவிப்பனவாய் அமைந்துள்ளன.

    நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வணிக வகுப்பைச் சேர்ந்தவர்கள். காரைக்குடிப் பகுதியில் வசித்துவரும் இவர்களின் முன்னோர் நாக நாட்டிலுள்ள கண்டியம் எனும் பகுதியிலிருந்து தமிழகத்தின் காஞ்சிக்கு வந்ததாகவும் அங்கிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்ததாகவும் அங்கு ஆட்சிசெய்த அரசன் செய்த கொடுமைகள் பொறுக்கமுடியாமல் அவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்ள, அவ்வேளையில் பாண்டிய அரசன் அவர்களுக்கு அடைக்கலம் தர முன்வரவே, பாண்டி நாட்டிலுள்ள இளையாத்தங்குடி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அம்மக்கள் குடியேறியதாகவும் அவர்களின் வரலாறு குறித்த தொன்மங்கள் தெரிவிக்கின்றன.

    நகரத்தார் ஊர்ப்பெயர்களோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான பெயர்கள் இப்போதும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இருக்கின்றன. இவைபோன்ற அருமையான ஆய்வுச்செய்திகள் பல இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

    13. சிலம்பின் பயணமும் தாய்த்தெய்வ வழிபாடும் – சிந்து முதல் வைகை வரை:

    சிலம்பு என்பது தமிழ்ச் சமூகம் நன்கறிந்த ஓர் அணிகலன். பத்தினித் தெய்வமாகக் கருதப்படும் கண்ணகியின் சிலம்பின் பயணமே சிலப்பதிகாரக் காப்பியமாக மலர்ந்தது. கண்ணகி, அம்மனாகத் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வணங்கப்படுகின்றாள். ஒலித்தல் எனும் பொருளை அடிப்படையாகக் கொண்ட சொல் சிலம்பு. சிந்துவெளிப் பகுதியான மொகஞ்சதாரோவைச் சேர்ந்த பெண்கள் சிலம்புகளை அணிந்திருந்தனர் என்று அறிக்கை அளித்திருக்கின்றார் சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்தியவரான சர் ஜான் மார்ஷல். ஹரப்பா நாகரிகத்திலும் சிலம்பின் பயன்பாடு இருந்தது தெரியவருகின்றது.

    தாய்த்தெய்வ வழிபாடு: தாய்த்தெய்வ வழிபாடு சிந்துவெளி மக்களிடம் இருந்திருக்கின்றது. அத்தி மரத்தில் நின்றகோலத்திலிருக்கும் பெண் தெய்வத்தையும், அவள் முன்பாகத் தலையை வெட்டிப் பலியிட வணக்கத்தோடு அமர்ந்திருக்கும் மனிதனையும் கொண்ட சிந்துவெளி முத்திரை இதனை உறுதிப்படுத்துகின்றது.

    பத்தினித் தெய்வமான கண்ணகியைப் போலவே தன் முலையை அரிந்துகொண்ட வீரப்பெண்ணை, ’பகுச்சரா மாதா’ எனும் தாய்த்தெய்வமாக வணங்குகின்றனர் குஜராத்தியர். 

    குஜராத்தியர் வழிபடும் மற்றொரு தாய்த்தெய்வம் குஜராத்தின் கிர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கங்கையம்மன். மகாராட்டிராவிலும் இந்தக் கங்கையம்மனுக்குக் கோயில்கள் உண்டு. கங்கையம்மன் சிலம்பணிந்தவளாக இக்கோயில்களில் காட்சிதருகின்றாள்.

    தாய்த்தெய்வங்களும் சிலம்பும் சிந்துவெளி தொடங்கி குஜராத், மகாராட்டிரா தமிழ்நாடு என்று பயணித்திருப்பது இவற்றுக்கிடையேயுள்ள தொடர்பைக் காட்டுகின்றது.

    14. புனிதமரமாய்க் கருதப்படும் வன்னியின் வேர்கள்:

    வன்னி மரமானது இராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் காணக் கிடைக்கின்ற மரமாகும். தமிழ்ப் பேரகராதி வன்னியை வன்னியர் எனும் இனத்தாரோடு தொடர்புபடுத்துகின்றது.

    வன்னிமரம் தமிழ்நாட்டில் பல சமூகத்தாராலும் புனித மரமாய் வணங்கப்படுவதோடு பல கோயில்களில் தல விருட்சமாகவும் விளங்கி வருகின்றது. மகாபாரதக் கதையில் பாண்டவர்கள் தம் அஞ்ஞாத வாசத்தின்போது ஆயுதங்களை ஓர் வன்னி மரத்தின்கீழ் மறைத்துவைத்திருந்து அஞ்ஞாதவாசத்தின் முடிவில் அவற்றை எடுத்துக்கொண்டார்கள்; அதுவரை அம்மரம் அவர்களின் ஆயுதங்களைப் பத்திரமாகப் பாதுகாத்தது என்ற செய்தி சொல்லப்படுகின்றது.

    இராஜஸ்தானில் ராணா எனப்படும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் சில முக்கியச் சடங்குகள் செய்வதற்கு முன்பாக வன்னிமரத்தைத் தொழும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த உடையார் எனும் அரச வம்சத்தாரும் வன்னியைப் புனிதமாகக் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் குலாலர்கள் என்றழைக்கப்படும் குயவர்கள் வன்னிமரத்தை வழிபடுபவர்களே.

    இந்துமதப் புராணங்களிலும் வன்னிமரம் பெண் தெய்வங்களோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது.

    சுடுமண்ணாலான வன்னிமரம், வன்னிமரத்தில் அமர்ந்திருக்கும் பெண் உருவம் போன்ற முத்திரைகள் சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ளன. இவை, வன்னிமரமானது சிந்துவெளி மக்கள் தொடங்கித் தமிழ்மக்கள் வரை பெரும்பாலோரால் புனித மரமாகக் கருதப்பட்டமைக்குச் சான்றாகின்றன.

    15. விளையாட்டோடு இணைந்த வாழ்க்கைமுறை:

    தமிழர் திருநாளோடு இரண்டறக் கலந்தது சல்லிக்கட்டு விளையாட்டு (bull vaulting). மதுரை மாவட்டத்தைச் சார்ந்த அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்களில் நடைபெறும் சல்லிக்கட்டு விளையாட்டுக்களை தமிழ்மக்கள் பெரும் ஆர்வத்தோடு கண்டுகளிப்பது வழக்கம். இவ்விளையாட்டின் தொடக்கத்தை நாம் தேடிச்சென்றால் அது சிந்துவெளி நாகரிகத்தில் சென்று அதுமுடியும். சிந்துவெளி அகழாய்வில் ஜீபு (Zebu bull) எனும் பெருந் திமில் கொண்ட காளையின் முத்திரைகளும், ஏறுதழுவும் விளையாட்டில் காளையால் பந்தாடப்படும் வீரர்களைக் கொண்ட முத்திரைகளும் கிடைத்துள்ளன.

    சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் ஏறுதழுவுதல் குறித்த விரிவான செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

    ஆரியர்களின் ரிக் வேதத்தில் இந்த ஜீபு காளை குறித்த எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானில் காளைகளுக்கான ஓட்டப் பந்தயம் இன்றும் நடைபெற்று வருகின்றது. இசுலாமபாத்திலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள பிண்டு சுல்தானி (Pind Sultani) என்ற இடம் இப்பந்தயத்திற்குப் பெயர்பெற்றது. தென்கேரளாவில் நன்கு உழுதவயல்களில் இரண்டு காளைகளை, அவற்றை ஓட்டுபவர்கள், மரப்பலகையால் இணைத்து ஓடச்செய்யும் விளையாட்டு (bull surfing game) ஒவ்வோராண்டும், அறுவடைக் காலத்துக்குப்பின் நடைபெறுகின்றது.

    16. உருளும் பகடைகள் – பண்டைய மக்களின் பொழுதுபோக்கு:

    சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த சுடுமண்ணாலான விளையாட்டுப் பொம்மைகள், விலங்குகளின் உருவங்கள், மண்ணால் செய்யப்பட்ட சிறிய வண்டிகள் ஆகியவை விளையாட்டிலும் – பொழுதுபோக்குகளிலும் அம்மக்களுக்கிருந்த ஆர்வத்தைக் காட்டுகின்றன. ”கிடைத்துள்ள விலங்கு உருவங்களில் குதிரைகள், போருக்கான தேர்கள் முதலியவை காணப்படாமை இம்மக்கள் போரின்மீது ஆர்வம்கொண்ட மக்களல்லர் என்பதைப் புலப்படுத்துகின்றது” என்கிறார் சிந்துவெளிப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட திரு. எர்னஸ்ட் மக்கே (Ernest  J. H. Mackay) எனும் தொல்லியல் ஆய்வாளர். 

    சுடுமண்ணாலான ஆறு பக்கங்கள் கொண்ட கனச்சதுர வடிவிலான பகடைகள் சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே முதன்முதலில் அறுபக்கக் கனச்சதுரப் பகடைகளைப் பயன்படுத்தியவர்கள் சிந்துவெளி மக்களே என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    வேதப் பண்பாட்டுக் காலத்தையும் சிந்துவெளியையும் ஒப்பிட்டு ஆய்ந்து தம் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கும் தொல்லியல் ஆய்வாளரான திரு. டி.என். ராய் (T.N. Ray)., வேத காலத்து மக்கள் பயன்படுத்திய பகடைகள் குறித்து அறிய அவர்களின் இலக்கியங்களில் போதிய தரவுகள் கிடைக்கவில்லை; எனினும், அவர்கள் சூதாட்டங்களுக்கு நான்கு பகடைக்காய்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது என்கிறார்.

    17. ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி – தமிழரின் தொப்புள்கொடி உறவு

    ஆதிச்சநல்லூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், கருப்பு & சிவப்பு மற்றும் கருப்புநிற முதுமக்கள் தாழிகள், எலும்புகளின் எச்சங்களோடு, அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றோடு, இரும்பு மற்றும் செம்பிலான பொருட்களும், செங்கல் சூளைகளும், மணிகளில் அணிகள் செய்யும் கொல்லரின் குடியிருப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    கீழடி: சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் எழுத்துப் பொறிப்புகளோடு கூடிய பானையோடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பானையோடுகளின் கழுத்துப்பகுதியின்கீழ் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற ஆட்பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. சங்க காலச் சமூகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டளவிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதை இந்த ஆய்வுகள் நமக்குத் தெள்ளிதின் புலப்படுத்துகின்றன.

    அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட கட்டுமானச் சுவர்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் இவற்றில் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக் கிடைக்கின்றன. இக்கட்டுமானங்கள் இத்தனை காலம் அழியாமல் வலுவோடு இருப்பதற்குத் தரமான இக்கட்டுமானப் பொருட்களே காரணம் என்பது தெரியவருகின்றது.

    இவ்வாறு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சுவையான தலைப்புகளில் அரிய கருத்துக்களைத் தாங்கிநிற்கும் இந்நூல், தொல்லியலாய்வு (archaeology), இலக்கியம் (literature), பெயராய்வு (onomastics), மொழியியலாய்வு (linguistics), பழைய நிகழ்வுகள் குறித்த நினைவுத் தொகுப்புகள் (corpus of collective memories) ஆகியவற்றின் அடிப்படையிலான ஆதாரங்களோடு நமக்கு அறியத்தருவது, இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் தோன்றி மறைந்த சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை நாம் இந்தியாவின் தென்கோடிப் பகுதியான தமிழ்நாட்டில் காணமுடிகின்றது என்பதே.

    நூலாசிரியர் திரு. ஆர். பாலகிருஷ்ணனின் வரிகளில் சொல்வதானால் ”சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே!”

    இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் இதனை வாசித்துப் புரிந்துகொள்வது தமிழ்மக்களுக்குக் கடினமாய் இருக்கலாம் எனக் கருதி இதனை, “ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை” என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றார் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன். விரைவில் இந்நூல் விற்பனைக்கு வரவிருக்கின்றது. அதுகுறித்த விவரங்களை இக்கட்டுரையிலுள்ள தமிழ் நூலட்டையில் காண்க!

    தமிழ்மக்கள் அனைவரும் படித்துப் பயனுற வேண்டிய – பெருமிதப்படவேண்டிய ஆய்வு நூலிது!

    *****

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 10

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 10

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • T M Soundararajan Salai

    T M Soundararajan Salai

    Baskar Seshadri

    Its officially done and its T M Soundararajan Salai now. The honour is made on the legend on a very apt day.

    Mylapore MLA, Councillor Amirdhavarshini and family members of the veteran Singer joined the occasion. Great Grandson of TMS was the attraction in the event. The age old House of the house was cleaned and a portrait was kept in his memory for the fans to pay tributes.

    Palraj Seen in the picture who honours Velu is the son of Shri Soundararajan. He had rendered thousands of songs in a career spanning well over fifty Years and at a particular time in Sixties He was the Voice of the Veteran MGR and Nadigar Thilagam.

    It may a surprise news to many to know that it was not for Sivaji or MGR he had sung more songs.

    It was For Jaisankar he had sung more songs which many may not be aware.

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-7

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-7

    மீனாட்சி பாலகணேஷ்

    ஈழத்தில் எழுந்த பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் முருகப்பெருமான் மீதுதான். இவற்றின் நயங்களைப் பின்வரும் சில பகுதிகளில் கண்டு மகிழலாம்.

    1. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்

    கதிர்காம பிள்ளைத்தமிழ் பற்றி முன்பொரு தொடரிலேயே (வல்லமை இதழில் வெளிவந்த குழவி மருங்கினும் கிழவதாகும்) எழுதியுள்ளேன். சிவங். கருணாலயப் பாண்டியப் புலவரால் இயற்றப்பெற்ற இது பல  வித்தியாசமான பருவங்களைக் கொண்டு சிறப்பான பாடல்களால் அமைந்தது. பதினான்கு பருவங்களுடன் பருவத்திற்கு மூன்றே பாடல்கள் கொண்டது. இருப்பினும் அங்கு காணாத சில செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.

    முருக வழிபாட்டிற்குரிய திருப்பதிகளுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றாலும் பெருமையோடு திகழ்வதே கதிர்காமமாகும். இத்திருத்தலத்தின் பெயர்க்காரணம் பற்றிய ஆராய்ச்சி முடிவுறாத ஒன்றாகும். கதிர்காம (கடரகாம) நகரத்தருகே புண்ணிய நதியாகிய மாணிக்க கங்கை பாய்ந்துகொண்டுள்ளது. ஈழத்து ‘மகாவம்சம்’ கதரகாமத்தின் புரணத்தை பலவாறும் விரித்துக் கூறுகின்றது. கி. மு. 3000க்கும் முன்பே இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பல சிங்கள அரசர்கள் வழிபட்ட குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அருணகிரிநாதர் பல பாடல்களை இப்பெருமான் மீது பாடியுள்ளார். இப்பிள்ளைத்தமிழை இயற்றிய ஆசிரியரும் இறைவன் திருவருளாலேயே இதனைப் பாடவியன்றது எனக் கூறியுள்ளார்.

    காஞ்சிபுரம் சிதம்பர முனிவராற் பாடப்பெற்ற ‘சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழி’ற் இத்தலத்தைப் பற்றிச் சிறப்பித்து எழுதப்பட்டதொரு செங்கீரைப்பருவப் பாடலைக் கண்டு மேற்செல்லலாம்.

    ‘ஆறுமுகத் தெய்வமே! மாணிக்க கங்கை எனும் ஆற்றில் நீராடி உன்னைப் பணியவரும் பூவுலக மக்களில் ஊமையானோர் பாடல்கள் பாடவும் குருடர்கள் கண்பார்வை பெறவும், மலடிகள் ஆகிய பெண்கள் பிள்ளைகள் பெறவும் நீ அருளுவாய். உன்னைக் ‘குமரா, வேலா’ என அழைக்கும் அன்பர்களை கரடி, புலி, யானை, சிங்கம் ஆகிய வனவிலங்குகள் அவர்கள் காலில் விழுந்து அஞ்சியோடச் செய்குவாய்.

    ‘ஆணிப்பொன் மண்டபத்தில் கச்சி எனும் காஞ்சியில் என்னை ஆண்டுகொண்டு என் உள்ளத்துப் பிணியைத் தீர்த்து முன்னே நிற்கும் ஆறுமுகத் தெய்வமே! புலோமசை வளர்த்த பெண்பிடியான தெய்வயானையின் கணவனே! நீ செங்கீரையாடியருளுக! தேவர்களோடு மனிதர்களும் பணிந்தேத்தும் கதிர்காம வேலவனே! செங்கீரையாடி அருளுவாயாக!’

    மாணிக்க நிறைகங்கை யாடியுன் னைப்பணிய
    வந்திடும் பூதலத்தோர்
    வாயூமர் பாடவும் குருடர்கண் பார்த்திடவும்
    மலடிகள்பின் மைந்தர்பெறவும்
    காணிற்கு மாரவே லாவென்னு மன்பரைக்
    கரடிபுலி யானைசிங்கம்
    காலிற்ப ணிந்தஞ்சி யோடவும் கந்தனே
    கண்கண்ட தெய்வமெனவே
    ஆணிப்பொன் முத்திமண் டபமேவு கச்சியினுள்
    அடியேனை யாண்டுகொண்டென்
    ஆகத்தில் வந்தபிணி தீர்ந்திடவு முன்னிற்கும்
    ஆறுமுக மெய்த்தெய்வமே
    சேணிற் புலோமசை வளர்த்தபெண் பிடிகணவ
    செங்கீரை யாடியருளே
    தேவரொடு மனிதர்பணி கதிர்காம வேலனே
    செங்கீரை யாடியருளே.

    கதிர்காமப் பிள்ளைத்தமிழ் மொத்தம் பதினான்கு பருவங்களையும் பருவத்திற்கு மூன்று பாடல்கள் வீதம் நாற்பத்திரண்டு பாடல்களையும் கொண்டு பொலிவது. காப்பு, செங்கீரை, மொழிபயிலல், உணவூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல் (அம்புலி), சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேருருட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் எனப் பதினான்கு பருவங்கள்.

    இவற்றுள் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் (கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்) ஆகிய அதிகப்படியான நான்கு பருவங்களையும் இந்த ஒரேயொரு ஆண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே காணவியலும். இப்பருவங்களின் விளக்கத்தையும் பாடல்களின் நயத்தையும் எனது முந்தைய தொடரான ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்பதில் காணலாம்.

    தாலாட்டல் எனும் பருவத்தின் ஒரு அழகான பாடலின் நயத்தை இப்போது காணலாம்.

    ‘கடல்நீரில் முளைத்த   (சூரபன்மனாகிய) மாமரம்  உன்னால் (முருகனால்) வெட்டி வீழ்த்தப்பட்டது. நீ சிவனாரின் நெற்றிக் கண் நெருப்பில் முளைத்தவன்; தத்துவ ஞானம் தழைத்தவன்; கற்பக மரம் போன்று வேண்டுவது அத்தனையும் தருபவன்; உனது திருவடிகளின் குளிர்ச்சியான நிழலையன்றி வேறெங்கும் நிற்பவர்க்குப் பிறவியால் வரும் துன்பங்களாகிய வெப்பம் தணியுமோ? அவர்கள் நீண்டநாட்கள் வாழ்வாரோ? நீ யார் நான் யார் என யார் (எவர்) அறிந்து, வேதம், உபநிடதம் என்னும் ஞானநூல்களை ஆராய்ந்து உணர்ந்து அனுபவித்துள்ளனரோ அவரே உன் பெருமையையும் உணர்வார். கதிர்காமக் கடம்பனே! கண்வளராய்,’ எனும் பாடலில், சொற்களைக் கூட்டும் அழகில் யாராரோ ஆராரோ எனத் தாலாட்டும் ஓசை நயம் போன்றே பலமுறை வந்து அழகு சேர்ப்பதனைக் காணலாம். மிகுந்த கருத்தாழம் நிறைந்த பாடல்.

    நீரின் முளைத்த மாவீழ
    நெருப்பின் முளைத்தின் னருடழைத்து
    நினைவு பூத்துப் புலங்காய்த்து
    நிறையப் பழுத்த கற்பகமே
    நேருன் னடித்த ணிழலன்றி
    நிற்பார் வெப்பந் தணிவாரோ!
    நெடுநாள் வானோர் வாழ்வாரோ?
    நீதா னாரோ? யாமாரோ?
    வோரின் னெனச்சொல் வடித்துணர்வா
    ருலவாப் பெருமை யாராரோ?
    வுணர்வார் கூற்றங் கொள்ளுங்கா
    லுற்றார் பெற்றா ராரரோ?
    காரின் மலருங் கதிர்காமக்
    கடம்பா! தாலோ தாலேலோ
    கலைமான் பாடக் கண்வளராய்
    கனியே! தாலோ தாலேலோ!

    இத்தகைய சொல்லாழமும் கருத்தாழமும் நிறைந்த பாடல்களைக் கொண்ட பெருமை உடையது இந்நூல்.

                                            ~~~~~~~~~~~~~~~

    2. இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்

    அடுத்து நாம் காணப்போகும் பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களால் இயற்றப்பட்டது.

    யாழ்ப்பாணத்தின் மத்தியில் உள்ள வயல்கள் செழித்த கிராமமே இணுவில் ஆகும். ‘இணையிலி’ எனும் பெயரே மருவி இணுவில் ஆகியதென்பர். இது 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோவில். இங்குள்ள முருகப்பெருமானின் ‘கந்தசாமி கோவில்’ என அறியப்படும் திருத்தலமே இணுவை / இணுவில் முருகன் கோவிலாகும்.

    இனி நூலின் நயங்களைப் பார்ப்போம். செங்கீரைப்பருவப் பாடலொன்று ஒரு அழகான கதையை விரிக்கின்றது. கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன் என்று கூறிய ஒரு புலவர்முன்பு (பொய்யாமொழிப்புலவர்) முருகன் பாலைக்காட்டில் தோன்றி, “என் பெயர் முட்டை,” எனக்கூறி அவரிடம் ஒரு பாடல் பாடச்சொல்லி, அப்பாடலில் குற்றமும் கண்டு, அவருடைய அகந்தையையும் அழித்தான். “வீதிதோறும் வீணை, வேய்ங்குழல், யாழ் இவைகளுடன் அடியார் தம் குரலை இணைத்து உன் புகழையே பாடுகின்றனர். இணுவை அழகனே, செங்கீரை ஆடியருளுக,” என வேண்டும் பாடல்.

    “கோழிபாடும் வாயாலே
    குஞ்சுபாட மாட்டேன்”என்று
    குமரனுன்றன் அடியவர்முன்
    கொக்கரித்த சிவகவியைப்
    பாழில்சுடும் வழியில்நல்ல
    பண்புமுட்டை என்றுநின்று
    பாடுவித்து முட்டையென்றே,
    பாட்டில்வேறு குற்றங்கண்டு
    ………………………………
    அம்மிணுவை உயிரழகா
    ஆடியருள் செங்கீரை!

    அருமையான பாடல் என ஒப்புக் கொள்கிறீர்களல்லவா?

    ஒரு சப்பாணிப்பருவப் பாடல், நாமறியாத கதையொன்றைக் கூறுகின்றது. இணுவைக்கோவிலில் முருகனின் திருவுருவம் வார்க்கப்பட்ட செய்தியை அது கூறுகின்றது.

    பதிகம், கோவை, கலிவெண்பா, பள்ளு, புராணம், பிள்ளைத்தமிழ், பாமாலை எனப்படுகிற பலவும் அள்ள அள்ளக் குறையாதபடி முருகா, உன்மீது இயற்றப்பெற்று இலங்குகின்றன. பண்டொருநாள், உன் திருவுருவை வார்க்க முயன்றபோது அதில் ஆறுமுகம் சரியாக அமையவில்லை. பின்பு அந்தணரின் மனைவியின் தாலியினை உருக்கி அதில் சேர்த்து மீண்டும் வார்த்திட அம்மூர்த்தம் மங்கள எழிலுடன் அமைந்தது. உன்னருள் கிடைத்தால் வாழ்வில் அனைத்தும் இன்பமே. நீ சப்பாணி கொட்டுவாயாக,” என வேண்டும் பாடல்.

    பதிகம், கோவை, கலிவெண்பா,
    பள்ளு, புராணம், பிள்ளைத்தமிழ்,
    பாமா லைபோற் பொன்கலங்கள்
    பலவும் அள்ளிக் குறையாத
    ……………………………………….
    அன்று வார்க்க வார்க்கஉரு
    அமையா ஆறு முகம்ஐயர்
    அகத்தாள் தாலி உருக்கியிட்டுப்
    புதிதாய் மீண்டும் வார்த்திடவே
    பொலிந்து மங்கள எழில்பூண்டு
    பூத்தாய் இணுவைப் பதியினிலே!
    …………………………………
    எழிலா கொட்டுக சப்பாணி! ( சப்பாணிப்பருவம்)

    இத்தகைய சுவையான பாடல்களைக் கொண்டமைந்தது இப்பிள்ளைத்தமிழ்.

                                            ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    3. கந்தவன கல்யாண வேலவர் பிள்ளைத்தமிழ்

    இந்த பிள்ளைத்தமிழ் நூல் சிலேடைக் கவிரத்தினம் க. கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டுள்ளது. பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம் (இவரும் பல பிள்ளைத்தமிழ் நூல்களை யாத்தவர்) அவர்களால் உரை எழுதப்பட்டுள்ளது.

    பொலிகண்டி கந்தவன கல்யாண வேலவர் ஆலயம் ஈழத்தில் வடமராட்சி பொலிகைப்பகுதியில் உள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் மாண்பையும் இத்தலம் பேசுகின்றது. இதிலிருந்து சில அருமையான பாடல்களைக் காண்போம். முதலில் வருகைப்பருவத்தினின்றும் ஒரு பாடல்.

    ஐம்புலன்களால் பிள்ளையின்பத்தை நுகரும் அற்புதமான பாடல். வாசம்வீசும் தாமரை மலர் போன்ற சிறிய அடிகள், முகம், தாமரையிதழ் போன்ற விழி இவற்றைக் கண்ணாற் கண்டு மகிழவும், (கண் – பார்த்தல்)

    கனிவாகப் பேசும் மழலைமொழியோடு தேன் சிந்தும் இசைபோன்ற கிண்கிணியின் அமுத ஓசையைச் செவியின்பத்தால் நுகரவும் வருவாயாக. (செவி – கேட்டல்)

    உன் தோள்களில் திகழும் கடம்பமாலையினின்றும் துளிக்கும் தெள்ளிய தேனை நான் சிறிது சுவைத்துப் பருகுமாறு வருக. (நா – சுவைத்தல்)

    இங்கு சிவந்த நிறம் கொண்ட செவ்வந்திப் பூவில் பிறக்கும் வாசத்தை நாம் முகர்ந்துவக்க வருவாயாக. (நாசி – நுகர்தல்)

    வீரக்கழலணிந்த தாமரைப்பாதத்தை நான் வருட வருவாயாக. (கை – வருடல்; உணர்வு)

    தென்றல் தவழும் கந்தவன முருகனே வருக! உமையம்மை தந்த தேவாமிர்தமே வருவாயாக.

    கந்தங் கமழும் கமலமெனும்
    கழலும் முகமும் விழியெழிலும்
    கண்ணாற் பருக வருகமதுக்
    கனியும் மழலை மொழியொடுதேன்
    சிந்தும் இசைக்கிண் கிணியமுதைச்
    செவியாற் பருக வருகபுயம்
    திகழும் கடம்புத் தெளிதேனைச்
    சிறிதே சுவைக்க வருகசெச்சை
    …………………………………………….
    ………………………… கந்தவன
    மதலாய்! வருக வருகவே! (வருகைப்பருவம்)

    அடுத்து அம்புலிப்பருவத்துப் பாடலொன்று. முருகனுக்கும் சந்திரனுக்குமுள்ள ஒப்புமையைக் கூறி, சந்திரனை முருகனுடன் விளையாட அழைப்பது. சாமம் எனும் உபாயத்தின் பாற்பட்டது.

    “சந்திரனே! நீ விண்ணில் ஆடி வருகிறாய்; முருகன் மயில்மீதேறி விண்ணில் ஊர்பவன். நீ பதினாறு கலைகளை உடையவன்; முருகனும் சகல கலா ஞான பண்டிதன். நீ மலைமேல் சஞ்சரிக்கிறாய்; முருகனும் குன்றுதோறாடுபவனாவான். கங்கை எனும் மெல்லியளாளை உன் கரத்தால் தீண்டுகிறாய்; இவனோ அக்கங்கையின் மடிமீதர்பவன். அவளால் அணைக்கப் படுபவன். நீ சிவபெருமானின் இடக்கண்ணானவன்; இவனோ அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். குளிர்ந்த ஒளியை நீ பரப்புகிறாய்; இவனும்  தண்ணருள் செய்பவன். உலகினைக் காத்தலாலும், காதலரிடையே காமப்போர் நிகழ்த்தலாலும், உலகைக் காத்து, அசுரருடன் போர்தொடுக்கும் முருகனுக்கு இணையானவன் நீ; நீ நட்சத்திரங்களுக்கு அதிபதி; இவனும் நவவீரர்களுக்குத் தலைவன்; உலகத்தோர் உன்னை மதி என்பர். இவனும் எல்லோராலும் மதிக்கப்படும் பெருமையுடையவன். ஆதலால் உலகம் வணங்கும் கந்தவனப்பதி குமரனுடன் விளையாட வருக,” என அழைக்கும்  சிறப்பான பாடல்.

    விண்ணாடி வருதலால் மலைமேல் நடத்தலால்
    விரிகலா நிதியென்கையால்
    மேதினியர் தொழுதலால் வேணிபடர் கங்கையென்
    மெல்லியற் கரந்தழுவலால்
    புண்ணியர்தம் கண்களில் ஒன்றினிற் றோன்றலால்
    பூக்குதண் ணொளி பரவலால்
    புவனம்பு ரத்தலாற் பூசலெழ வருதலாற்
    பூரணம் பெறவ ருதலால்
    ……………………………………………….
    அவனிதொழு கந்தபுரி தழையவரு மைந்தனுடன்
    அம்புலீ யாடவாவே. (அம்புலிப்பருவம்)

    சிறுபறைப் பருவத்தினின்றும் ஒரு பாடலைக் காண்போம்.

    புலவர்களின் சங்கத்தமிழ் முழக்கம் கேட்டு முருகனின் உள்ளத்துணர்வுகள் பொங்கி ஒலிக்கின்றன. அதற்கேற்ப சிறுபறையையும் முழக்க வேண்டும் பாடல்.

    “புகழ்வாய்ந்த சங்கப்புலவர் நக்கீரர், முருகன், மீனாட்சியம்மை ஆகியோரின் அருள்வெள்ளத்தில் மூழ்கித்திளைத்த குமரகுருபரர், தேவர்களும் போற்றும் சந்தக்கவிஞரான அருணகிரிநாதர், பகழிக்கூத்தர், தங்கக் கவிஞர்  பாம்பன் சுவாமிகள், உடுவைக்கவிஞன் சிவசம்புப்புலவர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகிய கவிஞர்களின் தமிழ் முழக்கம் பெரிதாக ஒலிக்கக்கேட்டு உனது உள்ளத்து உணர்வுகளும் பொங்கி ஒலித்ததுபோல, உனது சிறுபறையை முழக்குக குமரா,” எனும் பாடல்.

    விந்தைப் புலவன் சங்கத் தமிழோன்
    வியத்தகு கீரனருள்
    மேவும் புலவன் குருபர முனிவன்
    விண்ணவர் பரவவரும்
    சந்தப் புலவன் அருணைப் பதியான்
    தாழ்ப கழிக்கவிஞன்
    தங்கக் கவிஞன் பாம்பற் பெயரோன்
    …………………………
    முனிவரர் பணியும் பொலிகையின் மணியே!
    முழக்குக சிறுபறையே. ( சிறுபறைப்பருவம்)

    இத்தகைய சுவையான பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.

    (வளரும்)

    Share
  • Cycle – A life of Fortune

    Cycle – A life of Fortune

    Baskar Seshadri

    My Fascination for the bicycle was of high rage and since my teens till i shifted to two wheeler the liking of the same was too high- Bicycle to me was an Economical, easy maintainable and even a small boy of sixties like me who was in school could always use it at the drop of a hat.

    Though we had one at our home (Remember it was Rallis) the demand was too big for it as my father used to take it to Office.

    Of course we in life always had a choice or alternative in some form or the other. Its Hire Cycle. For semi educated like me it was HOUR Cycle and When i chanced upon this advertisement i drove back my memory to the lost decades. It was just fifty paisa or less than that for driving it for half an hour.

    Small boy like me who cannot have enough money could not afford to spend a lot and i always roam around the cycle shop to ensure that we don’t exceed the time. It was in such a cycle i used to go movies (all night show) to various theaters of old madras.

    I Still remember a long journey to Thiruporur in late seventies too. My father was a strict disciplinarian and he used to insist that i carry a kerosene lamp always till the invasion of the dynamo cycle.

    Today when i had a chance to drive a bicycle i could not drive at all for fifty meters. It was an asset to all the family of those days. It was this cycle which changed the fortune of life to many and i was one among them –Whether its BSA, Rallis or Hercules i love them always.

    For locals in Chennai around Mylapore it was Sambandam cycle a famous shop will always come to mind and for the whole of Madras it used to be BM Davey if i am right which had its showroom in Broadway.

    The advertisement featured here dated back to 1957 in a Tamil Magazine.

    Share
  • காலவெளி ஒரு நூலகம்

    காலவெளி ஒரு நூலகம்

    சி. ஜெயபாரதன், கனடா

    வானகம் எனக்கு போதி மரம்
    வைர முத்துவின் ஞான ரதம்
    வையகம்  மானிட ஆதி வரம்
    வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம்.

    காலவெளி எனக்கு ஓர் நூலகம்
    கடவுள் படைப்பி லக்கண நாடகம்
    ஐன்ஸ்டீன் கண்ட இறைப் பீடகம்
    அகரத்தில் தொடரும் மூல ஏடகம்.

    கற்பது எனக்கு முதற்படி
    காசினி அனுபவம் மேற்படி
    நிற்பது வள்ளுவர் சொற்படி
    நியூட்டன்  இயக்க நூற்படி.

    காலம் எனக்கோர் திசைகாட்டி
    காவியம் எனக்கு சீர் வழிகாட்டி
    ஞாலம் எனக்கோர் ஆலயம்
    ஞானம் என்போர் ஆயுதம்.

    Share
  • Gosh , I was on my Helmet – But To Remain within four Walls for a While

    Gosh , I was on my Helmet – But To Remain within four Walls for a While

    Baskar Seshadri

    This happened Yesterday Morning (25th March) around five thirty am when i was driving back to my home after a coffee at Saravana Bhavan on Dr Radhakrishnan Salai. When i was driving to take the TTK Road Flyover near Narada Gana sabha i came across bunch of dogs roaring and they were in the Process of Crossing to the eastern end. I thought i can cross over them and managed my driving as usual at the same normal speed but what had happened was Different.

    A new set of stray dogs from Sabha side entered the median hole and when i was caught unaware of this i bumped on one stuffy dog.  With no big injury it ran but i fell down on road. I could not get up for a minute and was afraid that some speeding vehicle may ram me. A Good samaritan and another gentleman came and lifted me to the kerb end and got me some water. I was in Terrible shock and pain and i had bruises on my right hand and right leg but nothing on left side. In a minute they left understanding i was normal. I asked one of them to check whether the vehicle was in working condition.

    He said yes and i slowly drove back and reached Mandaveli where my home is. I went to bed since i thought i should not disturb anyone. But the pain grew around Eight am and was taken to Isabel’s.  After routine medicine and injections i was given trips. I was advised to take a CT scan after few days if the pain do not recede on the right side of the chest. It was a Hairline crack and i was advised to take rest.

    With this current situation i cannot go out on my own, drive a vehicle or even a pick a piece paper from the Ground. I am on my medications. What i do is to sleep, eat or do something light whenever i can.

    After the coffee was over a second thought came to me and it told me to go towards Vivekananda College. But i did not heed to that and disobeyed it. Since i wore a Helmet, my head was saved, i think so.

    My Friendly Advice –

    1 If you come across bunch of dogs or any stray cattle on the road, please stop the Vehicle and allow them to pass

    2 Please always use Helmet even if you go to a shorter distance

    3 if you come across intruders of any kind, please slow down the vehicle as much as you can

    I still feel that i could have handled yesterday’s Situation Better. But I did not. Life is there to teach always

    Share
  • சிட்லப்பாக்கம் நீர்க்காகங்கள்

    சிட்லப்பாக்கம் நீர்க்காகங்கள்

    நூற்றுக்கணக்கான நீர்க்காகங்கள் கூட்டமாக மூழ்கி நீந்துகின்ற, நீரில் கோடு கிழித்துப் பறக்கின்ற அரிய காட்சி. சிட்லப்பாக்கம் ஏரியில் மீண்டும் கண்டேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பச்சைக் கிளி முத்துச் சரம்

    பச்சைக் கிளி முத்துச் சரம்

    பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ எனத் தேடுகிறீர்களா? இதோ இங்கே பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் நாலாயிரம்

    குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் நாலாயிரம்

    சென்னை, குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் கோவிலில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாராயணம். கண் குளிரப் பாருங்கள், செவி குளிரக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சக்கரங்களில் கோட்டம் எடுப்பது எப்படி?

    சக்கரங்களில் கோட்டம் எடுப்பது எப்படி?

    இருசக்கர வாகனங்களில் சக்கரங்களில் அவ்வப்போது நெளிவு ஏற்படும். அதை உடனே கவனித்துச் சரி செய்யாவிட்டால், ஓட்டுபவரைக் கீழே தள்ளிவிடும். சக்கரங்களில் நெளிவு ஏற்படுவது ஏன்? அதைச் சரிசெய்து, கோட்டம் எடுப்பது எப்படி? இதே தொழிலை முப்பது ஆண்டுகளாகச் செய்துவரும் ரகுமான் சொல்கிறார், கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும்  இல்லற விழுமியம்

    சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும் இல்லற விழுமியம்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010,

    வாழ்க்கையை அகவாழ்க்கை என்றும் புறவாழ்க்கை என்றும் தொல்காப்பியம் பிரித்துத் தருகிறது. அக வாழ்க்கையினைக் காதல் வாழ்க்கை என்றும் கற்பு வாழ்க்கை  என்றும் இரண்டாகக் காண்கிறோம். இந்த காதல், கற்பு (திருமணம்) என்னும் இரண்டினையும் உள்ளடக்கியதாக இல்லறத்தினைக் கருதலாம்.

    இல் வாழ்க்கை இனிய  இல்லற தருமத்தைக் கொண்டு சிறப்புடன் திகழ்கின்ற வாழ்க்கை ஆகும். இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் ஒருவன் செய்யத்தக்கன எதுவென்றும் செய்ய தகாதவை எதுவென்றும் கூறப்பட்டு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை மேம்படுத்திட வேண்டும் என்பதை உணர்த்துவது இல்லறம்  (நீரவன், 2009, 26) என்று இல்லறத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டுள்ளது. அதேபோல “குடும்பம் என்னும் அமைப்பு குடும்பத்தின் தலைவன், தலைவி என்னும் இருவரின் அன்புறவையே மூலக் கருவாகக் கொண்டு வளர்வது. சமுதாயமாக விரிவடைகின்ற குடும்பம் சிறக்க வேண்டுமானால் அதற்குத் தனிமனித ஒழுக்கத்தின் மேன்மை மிகவும் இன்றியமையாதது எனலாம்” (மகலாலிங்கம், ப., 2010, 35) என்னும் அடிகள் குடும்ப மேம்பாட்டுக் கருத்தினைத் தெரிவித்துள்ளன.

    சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையில் இல்வாழ்க்கைப் பண்பு மிகுதியாகக் கொண்ட மாந்தர்களுள் முதன்மையான மாந்தராகக் கண்ணகியைச் கொள்ள முடியும். தமிழ்ப் பண்பாட்டுடன் இணைத்து பேசப்படும் பெருமைபெற்ற மாந்தர் கண்ணகி ஆவாள். கண்ணகி கோவலனோடு கொண்ட இல்லறம் சிறப்பதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் கோவலனின் பெற்றோர். அதாவது மாசாத்துவானும் அவனது மனைவியும். அவர்களைக் குறித்து சிலப்பதிகாரம் வழி எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    மசாத்துவானும் அவரது மனைவியும்

    கோவலனின் தந்தையாகச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் மாந்தர் மாசாத்துவான். தரை வணிகத்தில் சிறப்புற்ற மாசாத்துவான் காப்பியத்தின் பல காதைகளில் இடம்பெற்றிருந்தாலும் முதன்மை மாந்தர்களுக்குத் துணைநிற்கும் துணைநிலை மாந்தர் என்னும் வகைமைக்குள் அடங்கும் பாத்திரம் ஆகும்.

    சோழ மன்னனின் பெருமைக்கு இணையான பெருமை கொண்டவன் என்றும் தான் ஈட்டிய பொருளால் பிறரைக் காத்து வாழும் நற்பண்பு கொண்டவன் என்றும் மாசாத்துவானைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்.

    “பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
    ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வதான்
    வருநிதி பிறர் காத்து மாசாத்துவான் என்பான்
    இருநிதிக் கிழவன்” (சிலம்பு-மங்கல வாழ்த்து, அடி: 31-34)

    என்னும் அடிகள் மங்கல வாழ்த்துப் பாடலில் மாசாத்துவானை அறிமுகம் செய்கின்றன.

    “மாசாத்துவான் என்னும் பெயர் குடிப்பெயர் என்று அரும்பத உரையாசிரியர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும் மாசாத்துவான் என்பான் என்றே கூறியிருத்தலால் அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமெனத் தோன்றுகிறது” (ஔவை. துரைசாமிபிள்ளை, 1942, 26) எனபதும் ஆராயத்தக்கது.

    தனிவாழ்க்கைக்கு அனுப்புதல்

    கண்ணகியும் கோவலனும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நாளில் மாசாத்துவானின் மனைவியானவள் கோவலனையும் கண்ணகியையும் தனி வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்குத் தேவையானவற்றை வழங்கினாள். கணவன், மனைவி என்னும் இல்வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்களுக்கென்று தனிப்பட்ட விருந்தினர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்று மகிழும் வாழ்க்கைக்கு அவர்கள் பழகிட வேண்டும் என்று அவர்களைத் தனி வாழ்க்கைக்கு அனுப்பினாள் என்று  இல்வாழ்க்கை தொடர்பான இடத்தில் மாசாத்துவானின் மனைவியைப் பற்றித் தெரிவித்துள்ளார் இளங்கோ.

    “தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
    வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழிநாள்
    வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
    மறப்பரும் கேண்மையோடு அறப்பரி சாரமும்
    விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
    வேறுபடு திருவின் வீறுபெறக் காண
    உரிமைச் சுற்றமோடு ஒரு தடின புணர்க”

    (சிலம்பு, மனையறம் படுத்த காதை, அடி: 82-88) எனும் அடிகள் இதனை உணர்த்துகின்றன.

    புறஞ்சேரி இறுத்த காதையில் கோவலனைக் கோசிகமாணி என்பவன் சந்திக்கிறான். அவன் மாதவி கொடுத்த கடிதத்துடன் கோவலனைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறான். கோவலனும் கண்ணகியும் புகாரைவிட்டுச் சென்ற பின்னர் மாசாத்துவானும் அவனது மனைவியும் பட்ட துன்பத்தை விவரிக்கிறான்.

    நாகமணி உமிழ்ந்த நாகப்பாம்பானது அந்த மணியை இழந்துபடும் துன்பத்தினைப் போல மாசாத்துவானும் அவனது மனைவியும் கோவலனைப் பிரிந்து வருந்தினார்கள் என்று தெரிவிக்கிறான். மேலும் உயிரை இழந்த உடல் இயங்குவதுபோல மாசாத்துவானின் உறவினர்கள் துன்பம் அடைந்தார்கள் என்று தெரிவிக்கிறான். ஏவளாளர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி, கோவலனைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு அனுப்பினான் மாசாத்துவான். கோவலனைப் பிரிந்த பூம்புகார் அடைந்த துன்பம் எதைப்போல் இருந்தது என்றால் தசரனது கட்டளையால் காட்டிற்கு இராமன் சென்றதும் அயோத்தி மக்கள் எவ்வாறு துன்பப்பட்டாகளோ அதைப்போன்று இருந்தது என்று கோசிகமாணி தெரிவிக்கிறான்.

    “இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
    அருமணி இழந்த நாகம் போன்றதும்
    இன்னுயிர் இழந்த யாக்கை என்ன
    துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்
    ஏவலாளர் யாங்கணும் சென்று
    கோவலன் தேடிக் கொணர்க எனப் பெயர்ந்ததும்
    பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
    அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த
    அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
    பெரும்பெயர் மூதூர் பெரும்பேறு உற்றதும்”

    (சிலம்பு-புறஞ்சேரி இறுத்த காதை, அடி: 57-66) எனும் அடிகளில் இதனை உணர்த்திய கோசிகமாணி, தான் கொண்டுவந்திருந்த மாதவியின் கடிதத்தை எடுத்து, கோவலனிடம் கொடுக்கிறான். அதனைப் படித்த கோவலன் மாதவியால் எந்தத் தவறும் இல்லை என்று உணர்கிறான். மாதவி கொடுத்திருந்த கடிதம் தனது தாய் தந்தையருக்கு ஆறுதல் அளிக்கும் என்று கருதியதால் அந்தக் கடிதத்தை அவன் தனது பெற்றோரிடம் கொண்டுபோய்க் காட்டுமாறு தெரிவிக்கிறான்.

    “மாசில் குரவர் மலரடி தொழுதேன்
    கோசிகமாணி காட்டெனக் கொடுத்து”

    (சிலம்பு – புறஞ்சேரி இறுத்த காதை, அடி: 98-99) என்று கோவலன் தெரிவிக்கும் இடத்தில் தனது பெற்றோரிடம் சொல்லாமல் பூம்புகாரை விட்டுப் பிரிந்ததை நினைத்து வருந்துகிறான். எனவே தனது பெற்றோரின் மலர்ப் பாதங்களை வணங்கித் தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது.

    மாசாத்துவான் பெருமை

    கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கோவலன் கண்ணகி இருவரும் சமணத் துறவியர் இருக்கும் பகுதிக்குச் செல்ல இயலாது. எனவே அவர்களைப் பிரிந்து செல்ல நினைத்த கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் யாரிடமாவது அடைக்கலப்படுத்த நினைக்கிறாள். அவ்வேளையில் மாதரி என்னும் இடைக்குல மடந்தையிடம் அடைக்கலப்படுத்தும் போது கோவலனின் தந்தையின் பெருமையினைக் கவுந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோவலனின் தந்தையின் பெயரைக் கேட்டால் மதுரை மாநகரத்தில் உள்ள பெருஞ்செல்வர்கள் அனைவரும் கோவலனை இன்முகத்துடன் வரவேற்று விருந்தினனாக அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்வதுவரை உன்னிடம் அடைக்கலப்படுத்துகிறேன் என்று தெரிவிக்குமிடத்தில் மாசாத்துவானின் வாணிகப் பெருமையையும் செல்வச் செழுமையையும் கவுந்தியடிகள் பெருமிதமாகத் தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது.

    “தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
    அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
    கருந்தடங்கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்”

    (சிலம்பு – அடைக்கல காதை, அடி:126-128) என்னும் அடிகள் இதனை உணர்த்துகின்றன.

    சேரன் செங்குட்டுவன் வட ஆரியர்களை வென்று இமயத்தில் கல்லெடுத்து அக்கல்லைக் கன விசயர்களைச் சுமக்கச் செய்து  கொண்டுவந்து கங்கைக்கரையில்  பாடி வீடமைத்துத் தங்கியிருந்தனர். அவ்வேளையில் அங்கே மாடலன் மறையோன் வருகிறான். மாடலன் மறையோன் கோவலனின் தந்தையாகிய மாசாத்துவானுக்கும் அவனது மனைவிக்கும் நிகழ்ந்தவற்றைத் தெரிவிக்கிறான்.

    “கோவலன் கொடுந்துயரெய்தி மாபெரும்
    தானமா வான்பொருள் ஈத்து ஆங்கு
    இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு
    அந்தர சாரிகன் ஆறைம்பதின்மர்
    பிறந்த யாக்கை பிறப்புற முயன்று
    துறந்தோர் தம்முன் துறவி எய்தவும்
    துறந்தோன் மனைவி மகன்துயர் பெறாஅள்
    இறந்து துயரெய்தி இரங்கிமெய்விடவும்”

    (சிலம்பு – நீர்ப்படைக் காதை, அடி:90-97) என்னும் அடிகன் இவற்றை உணர்த்துகின்றன.

    கோவலன் இறந்தான் என்ற செய்தியை அறிந்த மாசாத்துவான் மிகுந்த துன்பத்தினை அடைந்தான். அவன் ஈட்டிய செல்வத்தை எல்லாம் தானமாக வழங்கிவிட்டு அங்குள்ள இந்திர விகாரம் என்னும் தவப்பள்ளிக்குச் சென்று துறவறம் மேற்கொண்டான். அவ்வாறு மாசாத்துவான் துறவு மேற்கொள்ளும் போது அங்கே பிறப்பொழித்த முந்நூறு அந்தரசாரிகள் என்னும் துறவியர் இருந்தனர் என்பதையும் மகன் இறந்த துன்பத்தைத் தாங்க இயலாத மாசாத்துவான் மனைவி உயிர் துறந்தாள் என்பதையும் தெரிவித்தாள். இதன்மூலம் இல்லறத்தில் பெற்றோர் தமது குழந்தைகள் மீது கொள்ளும் பிணைப்பும் அற்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல கோவலனும் கண்ணகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் காலத்தில் அவர்களைத் தனி வாழ்க்கைதனை அமைத்துக்கொள்வதற்கு ஆவன செய்ததையும்  அறியமுடிகிறது. இவற்றையெல்லாம் நுணிகி ஆராயுமிடத்து தமது பிள்ளைகள் மகிழ்வையும் தாண்டி சமூக வாழ்வைச் சிறப்போடு பழகிட வேண்டும் என்கிற இல்லற விழுமியம் புலப்படுகிறது.

    உதவிய நூல்கள்

    1. சாமிநாதையர், உ.வே., (ப-ர்), இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சென்னை-90.
    2. துரைசாமிபிள்ளை, ஔவை.சு., முப்பெருங் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகார ஆராய்ச்சி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
    3. நீரவன், வள்ளுவமும் சமூக மேம்பாட்டுத் தத்துவங்களும், ராக் பப்ளிக்கேஷன்ஸ், சென்னை-94.
    4. மகாலிங்கம், ப., திரு.வி.க.வின் சமுதாய நோக்கு, செல்லம் பதிப்பகம், சென்னை – 83.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் வெளிப்படுத்தும்  இல்லற விழுமியம்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    Ø  கண்ணகியின் கணவன் கோவலனின் தந்தையாகிய மாசாத்துவான் பற்றி ஆசிரியர் இளங்கோவடிகள் தம் நூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூறியிருக்கும் செய்திகளைத்  மேற்கண்ட தலைப்பில் தொகுத்து வழங்கக் கட்டுரையாளர் முயன்றிருக்கிறார்.

    Ø  தலைவன் தலைவியின்றி இல்லறம் கடைபோகாதாதலின் “மாசாத்துவன் என்னும் ஆண்மகன் வெளிப்படுத்தும் இல்லறம்” என்பது தோன்ற தலைப்பிட்டிருப்பது மரபியல் முரணாகக் கருத ஏதுவாகிறது.

    Ø  கண்ணகியையும் கோவலனையும் இல்லறம் முழுமையடைதற் பொருட்டுத் தனிக்குடித்தனம் வைத்ததொரு செயலின்றி நேரடியாக அன்னார் பங்கு பெறும் எந்த இல்லற நிகழ்வும் அடிகளால் குறிக்கப் பெறவில்லை. தனிக்குடித்தனம் வைப்பதும் சங்க இலக்கிய மரபாகிவிடுமாதலான் மாசாத்துவானோ அவன் மனைவியோ தனித்துச் சுட்டுதற்கு உரியராகத் தோன்றவில்லை.

    Ø  காப்பியத் தலைமாந்தர்களின் தந்தை பெயர்களை ‘மாநாய்கன், மாசாத்துவான்’ எனக் குறித்த அடிகள் தாயர் பெயர்களைக் குறிக்கவில்லை

    Ø  “ஏவலாளர் யாங்கணும் சென்று கோவலன் தேடிக் கொணர்க எனப் பெயர்ந்ததும்”  மதுரை நகரத்தார் உணர்ந்த மாசாத்துவான் குடிப்பெருமையை மாதரியிடம் கவுந்தியடிகள் வெளிப்படுத்தியதும் கோவலன் கொலையுண்டது கேட்டு மாசாத்துவான் துறவறம் பூண்ட செயலும்,  மாசாத்துவானின் இல்லற விழுமியம் எனச் சுட்டல் பொருந்துமா என்பது தெரியவில்லை.

    Ø  “மாசாத்துவன் என்பது குடிப்பெயரா? இயற்பெயரா?” என்னும் ஆய்வு, கட்டுரைப் பொருளுக்குத் தொடர்புடையதாக இல்லை.

    Ø  ‘அதனைப் படித்த’ என்றெழுதும் கட்டுரையாளர், ‘எதைப்போல்’ என்றெழுதுவது சாரியை பற்றிய மயக்கத்தைக் காட்டுகிறது.

    Ø  “துன்பப்பட்டாகளோ’, ‘செல்வதான்’ ‘’நுணிகி’ என்பன போன்ற பிழைகளும், “இந்த காதல்’, ‘குறித்து சிலப்பதிகாரம்’, ‘இணைத்து பேசப்படும்’ ஆராயுமிடத்து தமது’ முதலிய இடங்களில் கண்ணுறும் சந்திப்பிழைகளும் தவிர்த்திருக்க வேண்டியன. .

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சிலப்பதிகாரத்தில் பெரும்பாலும் நோக்கப்படாத துணைப் பாத்திரமாகிய மாசாத்துவானைப் பற்றிய சில செய்திகளைத்  தற்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்..


    Share
  • Lake Development Front in Tamil Nadu

    Lake Development Front in Tamil Nadu

    Baskar Seshadri

    Tamilnadu Govt to Spend Rupees one Hundred Crores on Lake Development Front in Tamilnadu. CMDA Will Play the major role of a master in this and they had chosen Ten lakes in this Plan.

    The lakes will be developed better with all amenities Perumbakkam, Retteri, Mudichur, Madambakkam, Adambakkam, Ayanambakkam, Kolathur and Puzhal Lakes are chosen for this Project. Two other lakes are on the Waitlist.

    These lakes will be developed with Cycle Track, Gyms, Smart Cycle rentals, Open air theatre, Fishing spots, Miyawaki Forest Boating facilities and food are planned.

    The Process will start soon and it’s expected to be complete during the Current Monsoon Time of the Year (File Picture of Puzhal Lake).

    Share
  • Support Ilavarasi – She wants her son to Study well

    Support Ilavarasi – She wants her son to Study well

    Baskar Seshadri 

    Ilavarasi lives on South Canal Bank Road and she is eking out her living by not selling idlis or Podi. She is neither selling Appalam. But she does water washing of two wheelers and three wheelers. She lives in a small hut behind this wash shop and has few people to support her in this mission besides her brother. She is struggling hard to make out her living. She and her team are perfect in their works and they spend a good deal of time to clean the vehicle.

    Apart from this if there is any issue in the vehicle, she gets it fixed with the approval from the customer since there are two mechanic shops around her. She cleans the outer side of the car and three wheelers too. In case if you are not able to go there in person and wait for an hour, she is ready to engage her men to pick the vehicle and drop it back after the work is completed. she charges extra Rs Fifty for this extra service.

    She can cater to such needs in RA Puram, Mandaveli, Mylapore and Santhome. If for example if you are unable to move out still you can get the job done in two hours flat. your well cleaned vehicle will welcome you with a glittering wash once if you come out to see that.

    She lives with her blind mother and family. Ilavarasi is a Pleasing person and treats customers too well. Next time if you wish to clean your two-wheeler or a three-wheeler or a car Please think of this shop. This is on south canal Bank Road near Alphonso Ground.

    Please support her and ask not any discount. Your two Hundred Rupees goes to educate her son better. Let’s support her venture which she is doing for the past seven years and Let’s do our best to these type of small Business community who need help from us.

    She is part of this society and are related too all of us and we cannot decline her on her Career Mission.

    You can reach this shop on the Two Numbers mentioned in the Image.

    Share
  • சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்

    இந்திய அணுசக்தித் துறையில் ஹோமி பாபா, ராஜா ராமண்ணா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர், அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடைபெற்ற இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனையில் பங்களித்தவர். 25 ஆண்டுகள் இந்தத் துறையில் ஜெயபாரதன் எத்தகைய அனுபவங்களைப் பெற்றார்? இதோ அவரே சொல்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share