இந்திய அணுசக்தித் துறையில் ஹோமி பாபா, ராஜா ராமண்ணா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர், அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடைபெற்ற இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனையில் பங்களித்தவர். 25 ஆண்டுகள் இந்தத் துறையில் ஜெயபாரதன் எத்தகைய அனுபவங்களைப் பெற்றார்? இதோ அவரே சொல்கிறார்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்

  1. முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பு சோதனை : 1974 மே மாதம் 18

    இந்தியா கீழ்த்தள அணுகுண்டை 1974 மே மாதம் 18 இல் வெடித்தற்கு முன் அணுவியல் சாதனங்கள் பல, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வந்தன. அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு, அம்மூன்று நாடுகளும் வெகுண்டு அணுவியல் சாதனங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை. 1974 ஆண்டுக்குப் பிறகு அணுசக்தித் துறை விருத்தியில் பாரத நாடு தன் காலிலே நிற்கிறது! சில குறிப்பிட சாதனங்களை மட்டும் ஈரோப்பில் வாங்கிக் கொள்கிறது, இந்தியா. இவ்வாறு பல்துறைகள் இணைந்து முழுமை பெற்றுச் சீராய் இயங்கும் மாபெரும் அணுவியல் துறை அமைப்பகம், இந்தியாவைப் போல் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *