Blog

  • கன்னியாகுமரி ஓவியங்கள்

    கன்னியாகுமரி ஓவியங்கள்

    அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தின் அழகு திகழும் ஓவியங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கன்னியாகுமரியில் சூரிய உதயம்

    கன்னியாகுமரியில் சூரிய உதயம்

    கன்னியாகுமரியில் சூரியன் உதிக்கும் அழகிய காட்சி, இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குலசை முத்தாரம்மன் திருக்கோவில்

    குலசை முத்தாரம்மன் திருக்கோவில்

    தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில், பெரும் புகழ்பெற்றது. குலசை முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. 300 ஆண்டுகள் பழைமையான சக்தி தலம். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தசரா என அழைக்கப்படுகிறது.

    திருச்செந்தூர் – கன்னியாகுமரி சாலையில் அமைந்த இக்கோவில், திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    நேற்று இந்தக் கோவிலுக்குச் சென்று முத்தாரம்மனைத் தரிசித்தோம். இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 46

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 46

    -மேகலா இராமமூர்த்தி

    மைந்தன் பிரகலாதனைக் கொல்ல இரணியன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே, தானே தன் மைந்தனைக் கொல்வது என்ற முடிவோடு பிரகலாதனைத் தேடிவந்தான் இரணியன்.

    தந்தையைக் கண்ட பிரகலாதன், ”உன்னால் என்னைக் கொல்ல முடியாது! என்னுயிர் இவ்வுலகைப் படைத்த பரமன் வசப்பட்டது. அவன் சாணிலுமுள்ளான்; தூணிலுமுள்ளான்” என்று புகலவே, அதுகேட்டு நகைத்த இரணியன், ”அப்படியானால் உன் இறைவனை இங்குள்ள தூணில் காட்டு! இல்லையேல் உன்னை நானே கொன்று தின்பேன்!” என்றான் சீற்றத்தோடு.

    ”நான் ஏற்கனவே சொன்னதுபோல் நின்னால் கொல்லப்படுவதற்கு என்னுயிர் எளியதன்று! அந்தப் பெருமான் நீ தொட்டுக் காட்டும் இடந்தோறும் தோன்றானாயின் எனது உயிரை நானே மாய்த்துக்கொள்வேன்! அதற்குப் பிறகும் நான் உயிர்வாழ விரும்பினால் அந்தத் திருமாலுக்குரிய நல்ல தொண்டனாக மாட்டேன்” என்று சூளுரைத்தான் பிரகலாதன்.

    ”அப்படியா? நல்லது நல்லது” என்று ஏளனமாய்ச் சிரித்த இரணியன், தூணில் இறைவனைப் பார்க்கலாமே எனும் விருப்பத்தோடு இடிவிழுந்தது போன்ற வேகத்தோடு அருகிலிருந்த ஒரு தூணைத் தன் கையால் ஓங்கி அறைந்தான். அவ்வாறு அவன் அறைந்தவுடனே திசைகளைப் பிளந்துகொண்டு, அண்டமும் கிழியுமாறு, செந்நிறக் கண்களைக் கொண்ட, திருமாலாகிய நரசிங்கம் பெருஞ்சிரிப்புச் சிரித்தது.

    நசைதிறந்து இலங்கப் பொங்கி நன்று நன்று என்ன நக்கு
    விசைதிறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின் வென்றி
    இசைதிறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்
    திசைதிறந்து அண்டம் கீறச் சிரித்ததுஅச் செங்கட் சீயம்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6315)

    பெருமானின் சிரிப்பொலியைக் கேட்ட பிரகலாதன் மகிழ்ச்சி மீதூர ஆடினான்; பாடினான்; சென்னியில் கைகள் கொண்டு தொழுதான்; அழுதான்.

    சிரிப்பொலி செவியில் விழுந்ததும் இரணியன் தான் நின்ற இடத்திலிருந்து நகர்ந்து, ”தூணிலிருந்து சிரித்தவன் யாரடா? இச்சிறுவன் சொன்ன அரியோ? எனக்கு அஞ்சிப் புகுந்துகொண்டிருந்த கடல் போதாதென்று இந்தத் தூணையும் ஒளிந்துகொள்ளத் தேடினாயோ? என்னோடு போர்செய்ய விரும்புவாய் எனின் உடனே புறப்பட்டு வா!” என்றான்.

    இரணியன் போருக்கு அறைகூவல் விடுத்தவுடன் அந்தத் தூண் இரண்டாய்ப் பிளந்தது; அங்கே நரசிங்கம் தோன்றியது; தோன்றியவுடனே வளர்ந்து பேருருவம் கொண்டது; அதனால் உலக உருண்டையாகிய அண்டமும் விண்டது (பிளந்தது).

    நரசிங்கத்தின் வருகையைக் கண்ட இரணியன், உறையிலிருந்து வாளினை உருவித் தன் ஒரு கையில் ஏந்தி, மறு கையில் கேடயத்தைப் பிடித்தவண்ணம் சினத்தோடு வாய்மடித்து மேருமலைபோல் அதன் எதிர்நின்றான்.

    தந்தையின் போர்க்கோலம் கண்ட பிரகலாதன், “பெருமானை இத்தோற்றத்தில் கண்டபின்பும் அவன் ஆற்றலை நீ உள்ளத்தில் உணர்ந்திலை போலும்! சக்கரப் படையானை வணங்கு! உன் புன்மைகளைப் பொறுப்பான் அவன்!” என்று அறிவுறுத்தினான்.

    அதுகேட்ட இரணியன், ”நான் சொல்லும் இதனைக் கேள்! நீயும் மற்றவர்களுடன் பார்த்துக்கொண்டிருக்க, சினம் கொண்டெழுந்த கொலைத்தொழில் வல்ல இந்தச் சிங்கத்தின் ஒப்பற்ற தோள்களையும் தாள்களையும் வெட்டி வீழ்த்தி, உன்னையும் வாளால் துண்டித்துப் பின் என் வாளினைத் தொழுவதல்லாது பணிந்து வணங்குவதென்பது பெண்கள் ஊடல் புரியும் காலத்தும் என்னிடம் உள்ளதோ?” என்று வினவி அண்டங்கள் நடுங்கச் சிரித்தான்.

    கேள்இது நீயும்காணக் கிளர்ந்தகோள் அரியின் கேழில்
    தோளொடு தாளும்நீக்கி நின்னையும் துணித்துப் பின்என்
    வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல் மகளிர் ஊடல்
    நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6334)

    அதனைத் தொடர்ந்து நரசிங்கத்துக்கும் இரணியனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் இரணியனைச் சுற்றிவளைத்த மாயவனாகிய நரசிங்கப் பெருமான், அவன் மார்பைத் தன் நகங்களால் கீற உதிரவெள்ளம் உலகெங்கும் பரவியது. மாலைப் பொழுதினிலே இரணியனின் அரண்மனை வாயிலிலே தன் அழகிய மடிமீது அவனைக் கிடத்தி, நகங்களால் கீறியதால் ஏற்பட்ட குருதிப் பீறிட, அவன் வைரம் பாய்ந்த மார்பிலிருந்து தீயெழ, மார்பை இரு பிளவாகப் பிளந்து அவனைக் கொன்று வானவரின் இடுக்கண் தீர்த்தான்.

    ஆயவன் தன்னை மாயன் அந்தியின் அவன் பொன்
    வாயிலில் மணிக் கவான்மேல் வயிரவாள் உகிரின் வாயின்
    மீஎழு குருதி பொங்க வெயில்விரி வயிர மார்பு
    தீஎழப் பிளந்து நீக்கித் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6341)

    ”இரவிலும் பகலிலும் சாகக் கூடாது; வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் சாகக் கூடாது; மண்ணிலும் விண்ணிலும் சாகக் கூடாது; பறவை விலங்கு மனிதர் தேவர் அரக்கர்களால் சாகக் கூடாது; எந்தப் படைக்கலத்தாலும் சாகக் கூடாது” என்று பிரமனிடம் மிகச் சாதுரியமாக வரம்பெற்றவன் இரணியன். ஆகையால், இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத வகையில் மாலை நேரத்தில் வாயிற்படியில் மனிதனுமல்லாத விலங்குமல்லாத நரசிங்கத் தோற்றத்தில் படைக்கலத்தைப் பயன்படுத்தாது தன் நகங்களையே ஆயுதங்களாய்க் கொண்டு இரணியனைக் கிழித்துக் கொன்றான் நரசிங்கமாய் வந்த திருமால்.

    பின்பு பிரகலாதனை அருளோடு நோக்கிய நரசிங்கப் பிரான், ”என்றும் நீ சிரஞ்சீவியாய் வாழ்வாய்” என்று வாழ்த்தி, தேவர்களைக் கொண்டு அவனுக்கு முடிசூட்டுவிழா நடாத்தித் தன் கையாலேயே மணிமுடிசூட்டி மூவுலகுக்கும் அவனை அரசனாக்கினான்.

    இவ்வாறு இரணியன் வரலாற்றை, இரணியன் வதைப் படலத்தில், விரிவாக இராவணனுக்கு எடுத்துரைத்த அறிவிற் சிறந்த வீடணன், “எம் தலைவ! என் பேச்சினை உனக்கு நன்மை தருவது என்று கருதாது இகழ்ந்து ஒதுக்குவாயெனின் தீமை விளைதல் திண்ணம்” என்றான் உறுதிபட.

    வீடணன் கூறிய அறிவுரைகள் இராவணனின் செவிகளில் விழுந்தபோதிலும், அறநெறியினின்று திரிந்த சிந்தையனாகிவிட்ட அவன், அவற்றைத் தனக்கு உறுதிபயப்பவை எனக் கொள்ளவில்லை. மாறாக, வீடணனையே மீண்டும் சினந்துரைக்கலானான்.

    ”தன்னைப் பெற்றுவளர்த்த தந்தையின் உடலைத் தன் கண்ணெதிரிலேயே மாயவனாகிய திருமால் பிளந்திட, அதுகண்டு மகிழ்ந்த பிரகலாதனும் நம் பகைவனான இராமனுக்கு நட்புள்ளவனாகிய நீயும் சமமானவர்களே!

    சூழ்ச்சியால் தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பிரகலாதனைப் போல நீயும் நான் இராமனிடம் தோற்றபின் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எண்ணிக்கொண்டிருக்கின்றாய்; அது நடக்கின்ற காரியமா? இல்லை!

    என் பகைவர்களுக்கு நண்பனாகிவிட்ட நீயிருக்க எனக்கு வேறு பகை வேண்டுமோ?

    எனக்குப் பழிநேரும் என்பதால் உன்னைக் கொல்லமாட்டேன்; இதுபோன்ற அறிவுரைகளை எனக்குச் சொல்வதை நீ முதலில் நிறுத்து! இங்கிருந்து சீக்கிரமாய்ப் போய்விடு; என் கண்ணெதிரே நின்றால் நீ சாவாய்!” என்றான் நல்லறிவு நீங்கியவனும் அழிவினை அடையப் போகின்றவனுமான இராவணன்.

    பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை
    ஒழிசில புகலுதல் ஒல்லை நீங்குதி
    விழிஎதிர் நிற்றியேல் விளிதி என்றனன்
    அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6372)

    நமக்கு நல்லூழ் வரும் காலத்தில் நல்லறிவு தோன்றும்; தீயூழ் ஏற்படவிருக்கும் தருணத்திலோ உள்ள அறிவும் போய் நம்மைப் பேதையாக்கும். அதுவே இராவணன் விசயத்தில் நடந்தது. இதையே, ’பேதைப் படுக்கும் இழவூழ்’ என்பார் வள்ளுவப் பேராசான்.

    அதன்பின்னரும் அங்கிருக்க விரும்பாத வீடணன், அங்கிருந்து கிளம்பி விண்ணில் எழுந்துநின்று, ”அண்ணலே! உன் வாழ்வுக்கு ஏன் கேடு சூழ்கின்றாய்? அறநெறி தவறியவர்க்கு நல்ல வாழ்க்கை அமையுமோ? வீணாக உன் புத்திரர்கள், மித்திரர்கள், சுற்றத்தினர் என அனைவரையும் அழிக்க முற்படுகின்றாய். நான் எவ்வளவோ நல்லுரைகளை நவின்றும் அவற்றை நீ கேட்கவில்லை. ஆகவே, நான் உன்னைவிட்டு நீங்குகின்றேன்; என்னை மன்னித்துவிடு!” என்று இராவணனிடம் உரைத்துவிட்டு இலங்கையைவிட்டு நீங்க முற்படுகையில் நற்பண்பாளர்களும் வீடணனின் அமைச்சர்களுமான அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகியோர் அவனோடு இணைந்துகொண்டனர்.

    இலங்கையை நீங்கி எங்குச் செல்வது என்று புரியாமல் சிந்தித்திருந்த வீடணனிடம், ”வானரர்களோடு மனிதர்களான இராம இலக்குவரும் கடலின் அப்புறத்தில் தங்கியிருக்கின்றனர்; நாம் அவர்களிடம் போவோம்” என்று அவ் அமைச்சர்கள் கூறவே, அவர்களோடு புறப்பட்டு அக்கரையை அடைந்தான் வீடணன்.

    அங்கே கடற்கரையில் விளக்கொளி பரந்திருப்பதையும் அதில் வானரப் படைகள் நிறைந்திருப்பதையும் கண்டான்.

    ஒரு முடிவுக்கும் வர இயலாதவனாய்த் தவித்த வீடணன், “அறவழியில் நடப்பவர்களான இராம இலக்குவரிடத்து அன்பு பூண்டேன்; நற்புகழைப் பெறுதல் அல்லாமல் உயிர்வாழவும் நான் விரும்பமாட்டேன்; எனக்கு நன்மையானவற்றை நீ செய்யவில்லை என்று அண்ணன் இராவணன் சொன்னதால் அவனை நீங்கிவிட்டேன். இனி நான் செய்யவேண்டியது என்னவென்று கூறுங்கள்!” என்று தன் துணைவர்களிடம் கேட்டான்.

    புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
    உலகுடன் பெறினும்  கொள்ளலர்”  (புறநா.182)” எனும் புறநானூற்று அடிகளை ”நற்புகழைப் பெறுதல் அல்லாமல் உயிர்வாழவும் விரும்ப மாட்டேன்” எனும் வீடணனின் கருத்தோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

    கல்வியிலும் ஆலோசனை சொல்வதிலும் வல்லவர்களான அவ் அமைச்சர்கள் வீடணனிடம், ”தாழ்ச்சியில்லாத ஞானத்தைத் தரும் அறமே வடிவான இராமபிரானைக் கண்டு தரிசிப்பதே இனி நம் கடன். அதனினும் மாண்பு பொருந்தியது வேறெதுவுமில்லை” என்றனர்.

    மாட்சியின் அமைந்தது வேறு மற்றுஇலை
    தாட்சிஇல் பொருள்தரும் தரும மூர்த்தியைக்
    காட்சியே இனிக்கடன் என்று கல்விசால்
    சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6382)

    அமைச்சர்கள் சொன்னதைக் கேட்ட வீடணன், ”நமக்கு நன்மையானதையே நீர் சொல்லினீர்; இராமபிரானைச் சேர்வதல்லாது வேறு செய்வோமாயின் நாமும் அரக்கத் தன்மையினர் ஆவோம். ஆதலால், எல்லையில்லாப் பெருங்குணங்களைக் கொண்ட இராமனைச் சேர்வோம்” என்று அக்கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டான். 

    ஆக, தம் அமைச்சர்களின் ஆலோசனைப்படியே இராமனோடு சேரும் முடிவை, தமையன் இராவணன் தன்னை நிந்தித்து விரட்டிய நிலையில், எடுக்கின்றான் வீடணன். எனவே, இராமன் அக்கரைக்கு வந்ததிலிருந்தே எப்படியாவது இராவணனைப் பிரிந்து இராமனோடு சேர்ந்துவிட வேண்டும் என்று வீடணன் சூழ்ச்சியாய்த் திட்டமிட்டான் என்று அவன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்பதற்கு இப்பாடல் தெளிவான சான்று பகர்கின்றது.

    வீடணனும் அவன் அமைச்சர்களும் இராமனோடு சேர்வது என்ற முடிவுக்கு வந்தபோது இரவாகிவிட்டிருந்தது. எனவே, அந்த நேரம் இராமனைச் சந்திப்பதற்கு ஏற்றதன்று; மறுநாள் காலை சந்திக்கலாம் எனும் எண்ணத்தோடு அருகிலிருந்த ஒரு சோலையில் அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தார்கள் அவர்கள். மறுநாள் காலை வானர சேனை குழுமியிருந்த இடத்தருகே வீடணன் தன் துணைவர்களோடு வந்துநின்றான். அரக்கர்களை அருகில் கண்ட வானரர்கள், ”இவர்களை அடியுங்கள்; பிடியுங்கள்; ஆயுதங்களால் தாக்குங்கள்” என்று கூச்சலிட்ட வண்ணம் வீடணனையும் அவன் துணைவர்களையும் சூழ்ந்துகொண்டனர்.

    ”இவன் இராவணனோ?” என்று சிலர் ஐயத்தைக் கிளப்ப, ”அவனுக்குப் பத்துத் தலைகளும் இருபது கைகளும் உண்டென்பார்களே; அவையெல்லாம் சிதைந்து போயினவோ?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.

    இவ்வாறு வானரர்கள் தோன்றியபடியெல்லாம் பேசிக்கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருப்பதைச் சற்றுத் தூரத்திலிருந்த அனுமன் கவனித்தான். மயிந்தன், துமிந்தன் எனும் இரு வானரர்களை கூச்சலிட்டுக்கொண்டிருந்த வானரர்கள் இருந்தவிடத்துக்கு அனுப்பி அங்கு நடப்பதனை அறிந்துவரச் சொன்னான்.

    வீடணனும் அவன் துணைவர்களும் நின்றிருந்த இடத்துக்கு வந்த மயிந்தனும் துமிந்தனும் ”நீங்கள் யார்? இங்கு வந்த நோக்கமென்ன?” என்று கேட்க, வீடணனின் துணைவனான அனலன் வீடணனைப் பற்றியும் அவன் தன் தமையனான இராவணன் சீதையைச் சிறைவைத்திருப்பதைக் கண்டித்து நல்லுரைகள் சொன்னபோது அதனை ஏற்க மறுத்த இராவணன் வீடணனைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி விரட்டவே அவனை விட்டுநீங்கி இங்கு வந்துள்ளான் என்றும் நிகழ்ந்தவற்றை விளக்கியுரைத்தான்.

    அதனைச் செவிமடுத்த மயிந்தன், ”நீவிர் கூறியவற்றை இராமபிரானிடம் சொல்லி அவர் முடிவினை அறிந்துவருவேன்” எனச் சொல்லிவிட்டு, ”அதுவரை இவர்களைக் காவல் காத்துக்கொண்டிருங்கள்” என்று துமிந்தனையும் ஏனைய வானரர்களையும் பணித்துவிட்டு இராமனை அணுகினான்.

    வீடணனுக்கும் இராவணனுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டையும் இராவணனால் விரட்டப்பட்ட வீடணன் தற்போது இராமனிடம் அடைக்கலம் நாடிவந்திருப்பதையும் எடுத்துரைத்தான் மயிந்தன்.

    அதனைக் கேட்ட இராமன், ”வீடணனை நாம் நம்மோடு சேர்த்துக்கொள்வதா? விலக்கி வைப்பதா? உம் கருத்து என்ன?” என்று தன்னருகிலிருந்த நண்பர்களைக் கேட்கவே, சுக்கிரீவன் முதலில் ஆரம்பித்தான்…

    ”அனைத்து அறநூல்களையும் பழுதறக் கற்ற நீ எம்மைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது எதுவுமில்லை. எனினும், எம் கருத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் கேட்கின்றாய்; ஆதலால் என் கருத்தைச் சொல்கின்றேன் எனும் பீடிகையோடு தொடங்கி,

    ”தகைமை உடைய தன் முன்னோனையும் (தமையன்), தாய் தந்தையையும், சிறப்புடைய சான்றோரையும், உலகாளும் மன்னனையும் பகைத்துக்கொண்டு வருவதும், பிரிந்து நீங்குவதும் நகைப்புக்கு இடமாவதே அன்றி விரும்பத்தக்க செயலோ?” என்று கேட்டான்.

    தகைஉறு தம்முனை தாயை தந்தையை
    மிகைஉறு குரவரை உலகின் வேந்தனை
    பகைஉற வருதலும் துறந்த பண்புஇது
    நகையுறல் அன்றியும் நயக்கற்பாலதோ.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6424)

    தொடர்ந்தவன், ”அண்ணனோடு வாழ்ந்த நாளெல்லாம் அவன் செல்வத்தை அனுபவித்துவிட்டு இடையில் பகைவர் சினந்து எழுந்தபோது அந்த அண்ணனுக்கு உறவாக இல்லாமல் அண்ணனின் பகைவர்களோடு சேரவருகின்ற இவன் யார்க்கு உறவாவான்?” என்றும் வினாவெழுப்பி வீடணனுக்கு அடைக்கலம் தருதல் தீங்காய் முடியும் எனும் தன் கருத்தை வெளிப்படுத்தினான்.

    இதில் நகைமுரண் யாதெனின், அரசாட்சியைத் தான் பெறுவதற்காகச் சொந்த அண்ணனான வாலியையே இராமனின் துணையோடு கொன்றவன் இந்தச் சுக்கிரீவன். இவன், வீடணன் அண்ணனைப் பகைத்துக் கொண்டு மாற்றானோடு கூட்டுச் சேர்வது முறையற்றது; நகைப்புக்கு இடமாவது என்று அறமுரைக்கின்றான்.

    ”தனக்கொரு நீதி; அடுத்தவனுக்கொரு நீதி” என்றிருப்பதுதான் இராமாயணக் காலத்திலிருந்தே உலக வழக்கம் போலிருக்கின்றது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 163 (அருமறை)

    சேக்கிழார் பாடல் நயம் – 163 (அருமறை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு:

    திருத்தலையூரில் வாழ்ந்த  சிவனடியார்  தம் குல வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் உருத்திரனாகிய  சிவபெருமானைத் துதிக்கும் உருத்திர மந்திரத்தை ஓதி வந்தார். அவ்வகையில் இவர் ஓதிய மந்திரத்தைச்  செவியுற்ற  சிவபெருமான்  மகிழ்ந்தார், அதனைச் சேக்கிழார்,

    அருமறைப்  பயன் ஆகிய உருத்திரம் அதனை
    வரும் முறைப் பெரும்  பகலும் எல்லியும் வழாமே
    திருமலர்ப்  பொகுட்டு  இருந்தவன்  அனையவர் சிலநாள்
    ஒருமை உய்த்திட  உமையிடம்  மகிழ்ந்தவர் உவந்தார்

    என்று பாடினார். இப்பாடலின் பொருள், அரிய மறைகளின் பயனாகிய உருத்திரத்தை வருமுறையில் பெரும்பகலிலும் மாலையிலும் தவிராமல் தாமரையினது பொகுட்டில் இருக்கும் பிரமதேவனைப் போன்ற பசுபதியார் சிலநாள் ஒன்றுபட்ட வுணர்வுடன் இவ்வாறு கணித்தபோது, உமையம்மையாரை இடப்பாகத்தில் மகிழ்ந்து வைத்த சிவபெருமான் உவந்தனர்.

    விளக்கம்:  அருமறைப்பயன் ஆகிய உருத்திரம்-  உருத்திரனே பரமன் என்று காட்டும் சிவமந்திரத்தைத் தன் னடுவுட்கொண்டு விளங்குதலால் மறைப்பயனாகிய உருத்திரம் என்றார். அருமறை என்றது ஞானத்துக்கு முதலாயிருக்கும் தன்மைபற்றி. ஞானத்தின் முடிந்தநிலை திருவுருத்திரத்திற் பெறப்படுவதனால் அதனை மறைப்பயன் என்றார்.

    மறைகள், மந்திரம் – பிராமணம் -உபநிடதம் என்று மூன்று பாகுபாடுபெறும். சாமானிய காமியாதிகளைப் பயக்கும் யாக முதலியவற்றுக்கு உதவுவன மந்திரம் என்ற பாகம் எனவும்,இந்த யாகாதிகளுக்குரிய சடங்குகளை வகுப்பன பிராமணம் எனவும், இறைவனது இலக்கணங்களை எடுத்துச்சொல்வன உபநிடதங்கள் எனவும் கூறுவர்.

    உருத்திரமானது மந்திரமாகியும், வேள்வித்தீயைத் தன்னுளடக்கிக் கொண்டதாயும் உள்ளதோடு, சிவனே “தனிமுதலாம் பரன்” என்று சிவனது முழுமுதற்றன்மையும் கூறுவதனால் அது வேதங்களின் மூன்று தன்மைகளையும். தன்னுட்கொண்டு விளங்குதல்பற்றி அதனை அருமறைப்பயன் என்றார் என்பதுமாம். அன்றியும், ஆன்மாக்கள் பக்குவபேதத்திற்கேற்பப் பலபல தெய்வங்களை வழிபடுவர்; அவ்வாறு வழிபடப்படும் இந்திரன், அக்கினி, யமன், பிரமன் முதலிய பிற எல்லாத் தேவர்களையும் எடுத்து ஓதி, முகமனால் அவர்களுக்கு வழிபாடு வேதத்தினுட் கூறப்படும்; ஆயினும், இம்மந்திரத்தினை இதயத்தில் வைத்துப் போற்று முகத்தால் முழுமுதல்வன் சிவனேயாம் என்ற உண்மையைத் தேற்றம்பெறவேதம் எடுத்துக் காட்டுவதனாலே இது மறைப்பயனாயிற்று என்றலும் பொருந்தும்.

    அருமறைப்பயனாகிய உருத்திரம் – 1. ஸ்ரீருத்ரம் அல்லது திருவுருத்திரம் எனத் தமிழில் வழங்கப்படும். ஸ்ரீருத்ர ப்ரச்னம், ஸ்ரீருத்ரசூக்தம், ஸ்ரீருத்ராநுவாகம் என்பன முதலிய பெயர்களால் ஆரிய மொழியில் இது வழங்கப்படும்.

    ஸ்ரீ அல்லதுதிரு என்பதற்குப் பார்வதிதேவி, சம்பத்து, காந்தி என்பன பொருளாம். இம் மூன்றனோடும் என்றும் கூடியிருத்தலின் சிவபெருமானுக்கு ஸ்ரீருத்ரன் எனப் பெயர் போந்தது.

    2. துன்பக் கடலினுட்பட்ட தொண்டரை எடுத்து இன்பக்கரைக்கண் ஏற்றுவதனால் சிவபெருமானுக்கு உருத்திரன் என்னும் திருநாமம் எய்திற்று, அப்பெருமான் தந்த திருக்குமாரர்களுக்கும், அவனடி யடைந்தோர்க்கும், அவனுடைய கணங்கட்கும், அவனுருவந் தாங்கினோர்க்கும் அவன் சார்பு பற்றி உருத்திரப் பெயர் வழங்கும்.

    3. முழுமுதற்கடவுளாகிய அவ்வுருத்திர மூர்த்தியின் எல்லா வடிவங்களும் கோரவடிவம், சாந்தவடிவம் என்னும் இரண்டனுள் அடங்கும். அவற்றுள் கோரவடிவம் பிறவிப் பெரும் பிணிக்கு மருந்தாக உள்ளது. சாந்தவடிவம் சிவத்துவ விளக்கந் தருவது. முன்னது திருவுருத்திர நமக மந்திரங்களால் துதிக்கப்படுவது. பின்னது சமக மந்திரங்களால் துதிக்கப்படுவது.

    4. வேதம் மூன்றனுள் நடுவிலுள்ள யசுர் வேதத்தின் ஏழு காண்டங்களுள் நடுக்காண்டத்துள்ளது திருவுருத்திரம். இது பதினோரு அநுவாகங்களாகிய உட்பிரிவுகளை யுடைமையால் ‘’உருத்திரை காதசநீ’’ என்றும் பெயர்பெறும். இப் பதினொரு அநுவாகங்களிலும், இருக்கு, யஜுஸ் ஆகிய மந்திரங்கள் கூறப்படும்.

    அவற்றுள் 1 – வது அநுவாகத்தில் 15 இருக்கும், 2 முதல் 9 வரை  அநுவாகங்களில் முறையே, 13, 17, 17, 15, 15, 16, 17, 19 யசுசும், 10 – வது அநுவாகத்தில் 12 இருக்கும், 11 – வது அநுவாகத்தில் 10 இருக்கும் 3 யஜுஸும் ஆக இருக்கு 37 – ம், யசுசு 132 – ம் ஆக மந்திரங்கள் 169 கூறுப்பட்டுள்ளன. இம்மந்திரங்களை நியமமாக ஓதும் முறை, தியானம், பயன் முதலிய எல்லாம் உருத்திர கற்பத்துள்ளும், ஏனைய கற்ப சூத்திரங்களிலும் விரிவாகக் காணலாம்.

    இவ்வுருத்திரப் பிரசினத்தின் பாடியம் இரண்டனுள் பட்டபாஸ்கரர் பாடியத்தும் அவை கூறப்படுதல் காணலாம்.

    5. பிரளயாகலராகிய ஆன்மாக்களுள் மலபரிபாக மெய்திச்,சிவபெருமானால் நிரதிகரணமாகத் தீக்கை செய்யப்பெற்று, முத்தராகிப், பல்லாயிரங்கணங்களுடன் கூடிய நூற்றுப் பதினெட்டு உருத்திரருள், நிவிர்த்திகலையின் பிருதிவிதத்துவ அண்டங்கள் ஆயிரகோடியினும் அமைந்த நூற்றெட்டுப் புவனங்களுள், புறத்தேம் கிழக்கு முதலிய பத்துத் திசையினும் ஒவ்வொரு திசைக்கும் பதின்மராக வைகும் புவன பதிகளாகிய உருத்திரர் நூற்றுவர்க்கும் அவர் கணங்கட்கும் வணக்கங்கூறி, இவர் அனைவரையும் பரிசனங்களாகவுடைய முழுமுதலாய்ச் சாந்தியதீத கலாபுவனாந்தம் முழுதும் யாவையும் இறுதியுறச் சங்கரிக்கும் மகாருத் திரனாகிய சிவபிரானுக்கு வணக்கங்கூறிப், பிறவிப் பெரும்பிணித் துன்பவெள்ளக் கடல் நீந்துங் கருத்தே மிக்குச் சாந்தி வேண்டிக்கோடலின் அருமறைப் பயனாகிய திருவுருத்திரம் ‘’சதருத்திரீயம்’’ எனவும் பெயர்பெறும். இங்குக்கூறிய உருத்திரர் பெயர் முதலியனவும் பிறவும் ஸ்ரீ பவுட்கராகம விருத்தியில் பசுபடலத்தின் அத்துவப் பிரகரணத்திற் காண்க.

    “தைத்திரீய சாகையின் உருத்திரப் பிரசின முடிவிலே அவ்வத்திக்கி னிருப்போராகிய இவ்வுருத்திரர்கள் பப்பத்து எண்ணிக்கையோடும் நமஸ்காரத்தோடும் சுருக்கமகக் குறிக்கப்பட்டனர்” என அப்பிரகரண முடிவில் கூறியதும் இங்கே சிந்திக்கற்பாலது.

    6. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய திருவைந்தெழுத்து இத்திரு வுருத்திரத்துள் இருத்தலின், இதனை வேத புருடனுக்குக் கண்ணாகவும், திருவைந்தெழுத்தைக் கண்மணியாகவும் பெரியோர் கூறுப. நிற்பனவும் நடப்பனவுமாகிய உலகப்பொருள் அனைத்தினும் இறைவன் பகுப்பின்றி அவையேயாய்க் கலந்துநிற்றல் பற்றி, இறைவனை விசுவரூபனாகவும் விசுவேசனாகவும் புகழ்ந்து வணக்கங் கூறும்.

    இத்திருவுருத்திரம்.1 வருமுறை – முன்சொன்ன அம்முறையாகிய நியதியிலே. பெரும்பகல் – உச்சி வேளை வரையுள்ள சிறுபொழுது என்ற  காலப்பகுதி, எல்லி- மாலை. “அல்லும் பகலும்” என்றது வகை நூல்.

    “அந்தியு நண்பகலு மஞ்சு பதஞ்சொல்லி” என்ற நம்பிகள் தேவாரங் காண்க.

    வழுவாமே என்ற சொல்  அன்பாலும், சொல்லாலும், செயலாலும் தவிர்தலிலராகி. என்பதைக் குறித்தது.

    திருமலர்….அனையவர் – திருமலர் – தாமரை –  “பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை” “பூவெனப் படுவது பொறிவாழ் பூவே”. பொகுட்டு – கொட்டை. மலரில் இருந்தவன் – பிரமன். செங்கமலப் பொய்கையுள் மேவியிருத்தலாலும், வேத மோதுதலாலும் பிரமனைப் போன்றவர் என்றார்.

    சிலநாள் என்ற தொடர்  இந்தக் கடுந்தவத்தை அவர் நீண்டகாலம் செய்யவிட்டுத் தாழ்க்காதபடி இறையவர் சில நாட்களிலே மகிழ்ந்து அருள் புரிந்தனர் என்பதைக்க குறித்தது.

    ஒருமையுய்த்திட – மனவொருமைப் பாட்டுடன் செலுத்த. வழுவாமே – உய்த்திட என்று கூட்டுக. உய்த்தல் – செலுத்துதல்.

    உமை இடம் மகிழ்ந்தவர் – இடம் – இடப்பாகம். உமை – சிவனருள்.

    உவந்தார் – மகிழ்ந்து ஏற்று அருள் புரிந்தனர்.

    1இவை ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான்சுவாமிகள் அன்புடன் எழுதிய குறிப்புக்கள்.

    இப்பாடலால் வேதத்தின்  பகுதியாகிய  உருத்திர மந்திரத்தின் பொருளும், வகையும், இதனை ஓதுதலால்  உண்டாகும் பயனாகிய  ‘’சிவதரிசனம், சிவலோகப்பிராப்தி’’  ஆகியவற்றை  நாம் உணர்ந்து கொள்கிறோம்!

    Share
  • திருச்செந்தூர் முருகன் கோவில்

    திருச்செந்தூர் முருகன் கோவில்

    திருச்செந்தூருக்குச் சென்றோம். மகனுக்கு மொட்டை போட்டு, முடி காணிக்கை செலுத்தினோம். கடலில் குளித்தோம். நாழிக்கிணற்றில் குளித்தோம். அருள்மிகு சுப்பிரமணியசுவாமியைத் தரிசித்தோம். கடற்கரையில் புதையல் தேடுவோரையும் கண்டோம். இதோ ஒரு சிறு தொகுப்பு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை என்றால்?

    பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை என்றால்?

    சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தும் இடத்திற்கு வந்துவிட்டீர்கள். உங்கள் பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை என்றால் அல்லது பணம் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? தூத்துக்குடி எல்லையில் உள்ள சுங்கச் சாவடியில் என்ன நடந்தது என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆடும் அழகே அழகு

    ஆடும் அழகே அழகு

    சி. ஜெயபாரதன், கனடா

    ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ
    ஆடும் அழகே அழகு.

    ஏடும், பாரத நாடும், பாட நீ
    ஆடும் அழகே அழகு, தமிழ்
    நாடும்,ஏடும், பாடும், தேடும்
    ஆடல் அரசே,கூடல்இறையே நீ
    ஆடும் அழகே அழகு.

    அணு உடைப்பு ஆய்வக வாசலில்
    சூடி வரவேற்கும் பிரஞ்ச் எல்லையில் நீ
    ஆடும் அழகே அழகு, அங்குனைத்
    தேடும் விஞ்ஞான உலகு.

    ஆதி மூலன் நீ !  அகிலம் படைத்தது நீ
    அணுவுக்குள் நீ ! அகிலத்தில் நீ !
    அண்ட சராசரம் அனைத்திலும் நீ
    ஆடும் அழகே அழகு.

    ஓங்கார நாதத்தில் ஆங்கார மோடு
    தீங்கிழைத்த அசுரன் மேல் கால்வைத்து
    ஆடும் அழகே அழகு – கம்பீர மாய் நீ
    ஆடும் அழகே அழகு.

    நெற்றிக் கண்ணன் ஒற்றைக் காலில்,
    ஆடும் அழகே அழகு.
    வெற்றி மாலை சூடி முற்றும் அதிர நீ
    ஆடும் அழகே அழகு.

    ஒரு கையில் அக்கினி ஏந்தி
    மறு கையில் உடுக்க டிக்கும் கூத்தாடி நீ
    ஆடும் அழகே அழகு. உ்னைப்
    பாடும் சீடரை ஆசீர்வதி நீ.

    ஆதி முதல்வன் நீ !  அண்டக் குயவன் நீ !
    ஓதி உணரும் உன்னதம் நீ ! உத்தமன் நீ !
    நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்பவன் நீ !
    வேத ஞானி நீ ! மேதினி செழிக்கநீ

    ஆடும் அழகே அழகு,  அவனியில்
    நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு !
    நீ நின்றால் பூமியே நின்று விடும்
    பூகோளம் அழிந்து விடும், தொடர்ந்து
    ஆதி சக்தி நீ ஆட வேண்டும், நாம் தினம்
    ஓதி உன்னைப் பாட வேண்டும்.

    ஆடும் அழகே அழகு. உனைப்
    பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
    தேடும் மாந்தரைக் காப்பாய் நீ
    சாடும் மனிதரை மீட்பாய் நீ

    Share
  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

    மூலம்: எமிலி டிக்கின்சன் 
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29:புல்லில் போகும் பாம்பு 

    ஒடுங்கிய பாம்பு ஒன்று புல்தரையில்
    ஊர்ந்து செல்லும் எப்போ தாவது
    எதிர்வரக் காண்பாய் நீ, இல்லையா ?
    நடுக்கம் தரும் ஓர் திடீர் காட்சி அது !

    A narrow fellow in the grass
    Occasionally rides;
    You may have met him—did you not
    His notice sudden is,

    புல்தரையைப் பிரிக்கும் சீப்புபோல்
    புள்ளித் தண்டு நெளிவது தெரியும்
    பிறகு காலைப் பின்னிக் கொண்டு
    உதறினால் அவிழ்ந்து முன் நழுவும்.

    The grass divides as with a comb,
    A spotted shaft is seen,
    And then it closes at your feet,
    And opens further on.

    ஈரமுள்ள தளம் அதற்குப் பிடிக்கும்
    பேரளவு குளிர்த் தரையும் பிடிக்கும்
    சிறுவன் என் வெறுங் காலைப் பன்முறை
    தொட்டுச் செல்லும்  பட்டப் பகலில்.

    He likes a boggy acre,
    A floor too cool for corn,
    But when a boy and barefoot,
    I more than once at noon

    விலகிப் போன தென நினைத்தேன்
    வெய்யிலில் அது மெதுவாக நகரும்.
    காத்திட அதைப் பிடிக்கக் குனிந்தேன்
    சுருண்டு கொண்டு பிறகு போனது.

    Have passed, I thought, a whip lash,
    Unbraiding in the sun,
    When stooping to secure it,
    It wrinkled and was gone.

    இயற்கை ஜீவன் பற்பல அறிவேன்
    என்னையும் நன்கு  அறியும் அவை.
    கவலை கொள்வேன் மெது நகர்ச்சிக்கு
    கனிவுடன் அவற்றை நான் விலக்குவேன்

    Several of nature’s people
    I know, and they know me;
    I feel for them a transport
    Of cordiality.

    அதன்பின் பார்க்க வில்லை அதனை
    சேர்ந்தோ அல்லது தனியா கவோ
    அச்ச மின்றி, பெருமூச் சின்றி,
    நச்சு ஜீவனை  உணர்வு எலும்பின்றி.

    But never met this fellow,
    Attended or alone,
    Without a tighter breathing,
    And zero at the bone.

    Share
  • ஆச்சரியத்தில் அசத்திய சலூன்காரர்

    ஆச்சரியத்தில் அசத்திய சலூன்காரர்

    எம்.எஸ். லெட்சுமணன்
    காரைக்குடி

    ஒரு நாளைக்கு  எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன்? எவ்வளவு மணி நேரம் ஓய்வில் இருக்கின்றேன்? கணக்கிட்டு தன்னை சரிப்படுத்தி கொள்ளும் பணியாளரின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்திய அனுபவம்.

    காரைக்குடி – ஒரு வேலைக்கும், அடுத்த வேலைக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம்? ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என கணக்கிட்டு வேலைபார்க்கும் சலூன்காரர் சிதம்பரம் என்னை ஆச்சரியத்தில்அசத்தினார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் சலூன் கடையில் வேலை பார்ப்பவர் சிதம்பரம். சமீபகாலமாக அந்த கடைக்கு வாடிக்கையாளராக சென்று வருகின்றேன். இந்த முறை செல்லும் பொழுது வரும் வாடிக்கையாளர்கள் நோட்டில் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என்பதை எழுதினார். பணம் தானே எழுதுகிறார் என்று நான் நினைத்தேன்.

    பிறகு கேட்டேன் நீங்கள் தானே கடை நடத்துகிறீர்கள்? பின்பு ஏன் பணத்தை நோட்டு போட்டு எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு சிதம்பரம் சொன்ன பதில்தான் என்னை ஆச்சரியத்தில் அசத்தியது:

    “நான் சம்பளத்திற்கு தான் இந்த கடையில் வேலை பார்க்கிறேன்.  எனது முதலாளி இரண்டு கடைகள் வைத்துள்ளார். ஆனால் என்னை இந்த கடையில் என்னை தொழிலாளி போல் நடத்தாமல், சக நண்பராக நடத்தும் அவருக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என்கிற நோக்கில் எத்தனை நபர்கள் வந்தாலும் அந்தக் கணக்கை நோட்டில் குறித்து விடுவேன். அது போக ஒரு வேலை முடிந்து அடுத்த வேலை ஆரம்பித்து அந்த வேலை முடிவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் நானே நோட்டில் குறித்து கொள்வேன். என்னுடைய கை சரியான வேகத்தில் செயல்படுகிறதா அல்லது ஒருவேலை பார்த்தவுடன் மெதுவாக ஆகிவிடுகிறது என்பது போன்று நானே அறிந்து கொள்வேன். சில நபர்கள் வரும் பொழுது மிக எளிதாக பாதி முடியை கட் செய்தால் போதும் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள். அது போக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நான் வாங்கும் சம்பளத்திற்கு ஓய்வாக இருக்கிறேன்?  எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன் என்கிற தகவலையும் நோட்டில் குறிப்பதன் மூலம் நான் அறிந்து கொள்வேன். எனது முதலாளியும் என்னை முழுவதுமாக நம்பி இந்த கடையை ஒப்படைத்திருக்கிறார். 14 வயது முதல் சவரத் தொழில் ஈடுபட்டு வருகின்றேன். இப்பொழுது எனக்கு வயது 34. எனது அனுபவத்தில் எனது பணியை நானே நேசிக்கின்றேன். என்று கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.”

    நண்பர்களே எத்தனையோ இடங்களுக்கு நாம் செல்கின்றோம். நம்முடைய பணி எவ்வளவு நேரம் வேலை பார்த்தோம் என்பதை  சலூன் கடையில் பணியாற்றுபவர் குறித்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்கிற நோக்கில் தான் இந்த தகவலை இங்கே குறிப்பிடுகின்றேன். தனது முதலாளிக்கு நேர்மையானவராகவும், தனது மனசாட்சிக்கு நேர்மையானவராகவும் செயல்பட வேண்டும் என்கிற நோக்கில் செயல்படும் சிதம்பரத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

    அன்னாருக்கு வாழ்த்து தெரிவிக்க மொபைல் எண்: 99412 24289

    Share
  • Sastra – A million dollar question

    Sastra – A million dollar question

    Baskar Seshadri

    The Court had given time to Sastra college, Thanjavur till 24th March and on the last leg the institution had approached the High court asking the Govt to sell the land to them.

    State government had clearly told that the said Place is already earmarked for various projects and it cannot give it to the concerned institution.

    First of all it is daring that the said institution which had committed this fraud has the guts to ask the govt and court to give the land to them. Secondly there was no regret in any form by them for all the poaching all these years and in fact they have to pay the Govt for having enjoyed the benefits all these years. Instead now they are asking the stakeholders to give the land.

    How a educational institution can be behave like is a million dollar question and please be aware that they are running a Law College. I wish the court Pounce on this corrupt act of the college and admonish them for what they have done all these days as Highly Illegal. if the court still finds its own ways and plug the leak in favour of the college and against the Govt there is no point further in talking about the justice and the so called phrase ever winning truth etal .

    Share
  • எங்கே சென்றாய்?

    எங்கே சென்றாய்?

    சரவிபி ரோசிசந்திரா
    சென்னை

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய்
    என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்

    தினந்தோறும் பணந்தேடி
    எங்கே சென்றாய்
    திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய்
    உடலுக்குள் உயிர் காணாமல்
    எங்கே சென்றாய்
    உடலைத் தினம் பேணாமல்
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    எதிலும் நான் தெரிகின்றேன்
    எங்கே சென்றாய்
    எல்லாம் நான் அறிகின்றேன்
    எங்கே சென்றாய்

    பேதமின்றி அள்ளித் தந்தேன்
    எங்கே சென்றாய்
    பேரிடரிலும் துணை வந்தேன்
    எங்கே சென்றாய்
    மும்மலம் நீ அறியாமல்
    எங்கே சென்றாய்
    முற்பிறவி நீ தெரியாமல்
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    உயிர்தோறும் என்னைக் காணாமல்  நீ எங்கே சென்றாய்
    உள்ளத்தில்  என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய்

    சிற்றின்பத்தை ரசித்த  நீ
    எங்கே சென்றாய்
    சிந்தையை வெறுத்த நீ
    எங்கே சென்றாய்
    நான் அக்கத்தில்
    இருக்கின்றேன்  நீ
    எங்கே சென்றாய்
    நான் பக்கத்தில்
    பார்க்கின்றேன் நீ
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    நிம்மதியாய்  தினம் வருகின்றேன்
    எங்கே சென்றாய்
    நிம்(ம)தியை மறந்து நீ
    எங்கே சென்றாய்

    Share
  • The Rise and Fall of  Ram Samajam

    The Rise and Fall of Ram Samajam

    Baskar Seshadri

    When Ayodhya Mandapam was inaugurated it was called initial as Ram samajam and many in west mambalam and T Nagar found the place as more convenient to commute as a place of worship and it had many big signatories on the board. In the beginning only Iyers were permitted inside the same and later some objections were raised that facilitated all were permitted inside years later.

    It was only registered as a trust. The face of the mandapam changed as many new comers who became the office bearers had interesting ideas to develop the institution and they also wanted to make the samajam commercially viable.

    In the course of the time a kalyana mandapam was raised and a school had started functioning on the lines of a perfect social service link to a specific community. In fact even a Gnanavaapi was raised by them amid some objections those days.

    It was once considered to be the best religious hall cum Kalyana Mandapam in chennai at an affordable rate since it also had the facility of a sath Sangh team with more members getting added every year.

    The society had some issues with the state Government and after jaya Govt sworn in in 2011, many thought the snow balling issue would come to an end but it went other wise Yes. HRCE Made its first attempt and wanted to bring the samajam into the fold of HRCE and after a legal battle for few years the samaj and the society got a stay order from the court. But it was a short lived one since the court had given the judgement in favour of the HRCE and now the whole of the samajam is in the control of HRCE. Exactly on its golden Jubilee year the society lost its clout and Hold on this Religious centre.

    Share
  • குறளின் கதிர்களாய்…(395)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(395)

    எவ்வ துறைவ துலக முலகத்தோ
    டவ்வ துறைவ தறிவு.

    -திருக்குறள் -426 (அறிவுடைமை)

    புதுக் கவிதையில்

    உலகில் சான்றோர்
    ஒழுகும் வழியைக் கண்டறிந்தே
    அவ்வாறே
    உயர்ந்தோர் அவருடன்
    பொருந்தி வாழ்தலே
    மன்னர்க்கும் மற்றவர்க்கும்
    உண்மை அறிவாமே…!

    குறும்பாவில்

    பெரியோர் வாழ்வைப் பின்பற்றி
    புவியில் அவரோடு பொருந்தி வாழ்வதே
    பெரிதாம் அறிவென்பதே…!

    மரபுக் கவிதையில்

    தரணி வாழ்வின் தரமுணர்ந்தே
    தங்கள் வாழ்வை மேம்படுத்தத்
    தெரிந்தே சான்றோர் பல்லோரும்
    தரத்தில் உயர்ந்தே வாழ்வாரே,
    கருத்தில் கொண்டே யவரோடு
    கண்ணிய மாகச் சேர்ந்தேதான்
    தரமாய் வாழ்வை நடத்துதலே
    தக்க அறிவாய்ச் சொல்வாரே…!

    லிமரைக்கூ..

    உயர்ந்தோர் ஒழுக்கச் செறிவு
    உணர்ந்ததுபோ லவருடன் ஒன்றி வாழ்தலே
    உண்மையி லுயர்ந்த அறிவு…!

    கிராமிய பாணியில்

    அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
    நல்ல அறிவிருக்கணும்,
    நெறவோட வாழணுண்ணா
    நல்ல அறிவிருக்கணும்..

    கொணத்தில ஒசந்த பெரியவங்க
    ஒலகத்தில வாழுற
    மொறயப் பாத்து
    அதுபோலவே
    அவங்களோட சேந்து
    ஒண்ணா வாழுறதே
    உண்மயிலே
    ஒயர்ந்த அறிவு..

    தெரிஞ்சிக்கோ
    அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
    நல்ல அறிவிருக்கணும்,
    நெறவோட வாழணுண்ணா
    நல்ல அறிவிருக்கணும்…!

    Share
  • பாலியல் கல்வி – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எப்படி?

    பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எப்படி? நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share