Blog

  • முசுட்டுத் தாத்தா …

    விசாலம்

    அந்தப் பாழடைந்த பங்களா முன் அமைந்திருந்தது ஒரு பெரிய மைதானம் அதில் சின்னஞ் சிறு சிட்டுக்கள் பாண்டியும், கபடி விளையாட்டும் விளையாடுவார்கள். கிரிக்கெட் குரூப் வேறு வந்து விடும். “ராமு அப்படி அடி சிக்ஸர் என்று “மகிழ்ச்சியுடன் ஆராவரிப்பார்கள் பசங்கள். நடுவில் சண்டையும் வரும் நீ அவுட்டுடா , நான் பார்த்தேன்”என்பான் சங்கர் . அட போடா , எங்க அவுட்… பந்து பேட்டில் படவேயில்லைடா”. “சீட்டிங் சீட்டிங் பேட்டை எங்கிட்ட கொடு இப்ப என் சான்ஸ் “

    “போடா அழுகுண்ணி “மட்டையைத்தூக்கிப்போடுவான் ராமு. பின் திரும்ப எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். சில சமயம் பட்டங்கள் அங்கு பறக்கும் “ஓ போ காட்டே” என்றபடி ஒரு ஹிந்திக்காரன் கத்துவான்.பட்டத்தை அறுத்துவிட்ட மகிழ்ச்சியில் குதிப்பான . கண்மண் தெரியாமல் அந்தப்பட்டத்தைப் பிடிக்க ஓடும் ஒரு கூட்டம் . கார் வருவதும் தெரியாமல் ஓடும் . பீம் பீம் என்று ஓட்டுபவன் அலறுவான். இது போன்ற காட்சிகளுக்கு வந்தது ஒரு நாள் ஒரு முத்தாய்ப்பு .

    அந்த நாள்…..ஒரு டிரக் வந்து நின்றது .அதிலிருந்து ஒரு வயதானவர் இறங்கினார் முகம் கடுகு போட்டால் வெடிக்கும் போல் இருந்தது .அவருடன் மேஜை நாற்காலி ஒரு பீரோவும் கூட இறங்கின .இரண்டு பெரிய பெட்டிகள் இறங்கின .ஹிட்லர் போல் சாமான்கள் இறங்கும்போதே சாமான்களை இறக்கிய ஆட்களைத்திட்டினார்முகத்தில் சிரிப்போ,புன்னைகையோ கடுகளவு கூட காணோம் .இதையெல்லாம் கவனிக்காமல் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன .இதைப்பார்த்த அவர் வேகமாக முறைத்தபடி அவர்களை நோக்கி வந்தார் . “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஒய் ஸோ மச் ஆப் ..நாய்ஸ்?”என்று ஆங்கிலத்தில் கூச்சல் போட்டார் , இதை எதிர்ப்பார்க்காத சிறுவர்கள் ஓட்டம் பிடித்தனர் . ஓடும் போது பயத்தில் கிரிக்கெட் பேட் கீழே விழ…அதை அவர் எடுத்து காம்பவுண்டு வெளியில் வீசினார்.அந்த மட்டை விரிந்து போயிற்று ராமு பரிதாபமாகமுகம் வைத்தபடி அதை எடுத்தான் .கூட கமலா,கண்ணன் ,ரமேஷ்.சங்கர்,லீலாஎன்றுபலர் கூடினர்.முசுடு முதியவர் வந்தார் .தனது வாசலைப்பூட்டிக்கொண்டு உள்ளே சென்றார் குழந்தைகள் முகத்தில் ஈயாடவில்லை “.நல்ல விளையாட்டுக்கு வினை வைத்துவிட்டாரே இந்த முசுட்டு தாத்தா”{என்றாள் சாந்தி “கொஞ்சம் நாளில் எல்லாம் சரியாகி விடும் தாத்தா சாந்தமாகி விடுவார்” என்றாள் நீலா . “அங்கன பறையு “என்றான் உன்னி “சப் டீக் ஹோஜாயகா” என்றான் கரண்சிங் .எல்லோரும் நம்பிக்கையுடன் கலைந்தனர் .

    மறுநாள் கேட் திறக்கவில்லை.ஆனால் தாத்தாவின் உருவம் தெரிந்தது ஒரு ஈசிசாரில் அமர்ந்திருந்தார்.கையில் ஒரு புத்தகம் இருந்தது சிறுமிகள் வந்தனர் பூட்டிய கேட்டைப் பரிதாபமாகப் பார்த்தனர்.பின் காப்டன் வந்தான் பின் அவர்கள் இருக்கும் தெருவிலேயே கிரிக்கெட் மாட்ச் ஆரம்பமானது.வழக்கம் போல் சேகர் ஆரம்பித்தான்.பந்தைச்சுழற்றிப்போட்டான் .ரமேஷ்.முதல் இரண்டு பால் சுமாராகத்தட்டினான் சேகர் .பின் நாலாவது பந்தில் தன் சக்தியெல்லாம் சேர்த்து ஒரு சுழட்டு சுழட்டினான் .அது வேகமாகப்பறந்து அந்தமுசுட்டுத்தாத்தாவீட்டுபங்களா சன்னலில் மோதியது.சன்னல் கண்ணாடி விரிந்தது .பயத்தில் எல்லோரும் ஓடத்தொடங்கினர்.சேகர் மட்டும் ஓடவில்லை .தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே போனான்.

    “தாத்தா தாத்தா”…. தாத்தா பேசவில்லை .முறைத்தார்
    “தாத்தா உங்களுக்கு காது கேட்காதா?என் பால் உள்ளே விழுந்துடுத்து அதை எடுத்தக்கட்டுமா?” தாத்தா பதில் பேசாமல் பந்தை எடுத்தார் .உள்ளே சென்று ஒரு கூர்மையான கத்தி ஒன்றைக்கொண்டு வந்தார். சேகர் பார்த்துக்கொண்டு இருக்கையில் அதை இரண்டு பாகமாக கிழித்தார் . பின் சேகர் மேல் வீசினார் .சேகரின் மனம் இரண்டாக உடைந்தது . அழ ஆரம்பித்தான். தன் வீட்டிற்குச்சென்று கதவை அடைத்துக்கொண்டான்

    இந்தக்கிழவருக்கு ஏன் இத்தனைக்கோபம் .வெறுப்பு ……………… அவர் பெயர் சண்முகம் அனாதையாக இருந்து பின் ஒரு சங்கத்தில் சேர்ந்து படித்தார் குடும்பச்சூழ்நிலை இல்லாததாலும் தனெக்கென்று ஒருவரும் இல்லை என்பதாலும் மனதில் எப்போதும் ஒரு ஏக்கம். தனிமையிலேயே சிறுவயதைக்கழித்தார்.நல்லவேளையாக படிப்பு நன்கு வந்ததால் சில சமூக சேவை உதவியினால் காலேஜை முடித்தார் .ஆனால் முசுடு சுபாவம் ஆனதால் ஒருவரும் அவரை நெருங்கவில்லை அவருக்கு இதனால் அன்பையும்,பாசத்தையும் உணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது .

    ஒருநாள் …….தன் ஆபீசிலிருருந்து வரும் வேளை .ஒரு ஓரமாகத்தான் நடந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று ஒரு ஆட்டோஅவர் மேல் மோதியது .அவர் மயக்கமடைந்து கீழே சாய்ந்தார்.கூட்டம் கூடியது .ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை அந்த நேரம் ஒரு பெண்மணி தன் காரிலிருந்து இறங்கி இவரைத்தூக்க வைத்து தன் காரில் தக்கதருணத்தில் ஆஸ்பத்திரி அழைத்தும் சென்றார்.அத்தோடு நிற்காமல் தினமும் வந்து விசாரித்து சேவையும் செய்தாள்.அவளும் ஒண்டிக்கட்டைதான் குப்பைத்தொட்டியிலிருந்து கண்டெடுத்து சமூக இயக்கத்தினால் வளர்க்கப்பட்டவள் . இன்று அவளே அந்த இல்லத்தில் முக்கிய நிர்வாகி

    இருவர் மனமும் ஒன்றியது முசுடுக்குக்கொஞ்சம் கொஞ்சமாக பாசம் என்பதைப்புரிய வைத்தாள் வள்ளி.அவர் முகத்தில் இருந்த கடுகடுப்பை மாற்றி புன்சிரிப்பை வரவழைத்தாள் அவரது அனாவசிய கோபத்தைக்குறைத்தாள்.அவர் மேல் காதலும் கொண்டாள், ஆயிற்று வள்ளி சண்முகம் திருமணம் .ரெஜிஸ்டர் மேரேஜ் தான் .சண்முகத்தின் வயது நாற்பது வள்ளிக்கு முப்பத்தெட்டு.இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு வாழ்க்கையில் மகிழ்ச்சியைக்கண்டார் சண்முகம்

    “என்ன வள்ளி நமக்குப்பிறக்க போகும் குழந்தை உன்னைப்போல் சாந்தமாக இருக்கணும் உன்னைப்பொல் அழகாக இருக்கணும் “

    “ஆமாம் பெண் குழந்தை தான் பெத்துக்கப்போறேன் உங்க போல அவ இருப்பா பேரு சண்முகப்பிரியா..எப்படி இருக்கு இந்த பேரு!”

    “ரொம்ப அழகா இருக்கு”என்றபடிஅவள் வயிற்றில் தன் காதை வைத்துப்பார்த்து பரவசமடைந்தார்.எல்லாமே புதுமையாக இருந்தது அவருக்கு.

    வந்தது அந்த சனிப்பிடித்த நாள் .அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர் ஆட்டம் மிக மும்முரமாக இருந்தது. மட்டை பிடித்த பேட்ஸ்மென் மோஹனுக்கு ஐம்பதைப்பிடிக்க இன்னும் இரண்டு ரன்கள் வேண்டும் .அந்த ஆசையால் வெறிப்பிடிதாற்போல் இழுத்து ஒரு அடி அடித்தான் தன் வீட்டு வாசலிலிருந்து வேடிக்கைப்பார்த்த வள்ளியின் வயிற்றில் அந்தப்பந்து வந்து தாக்கியது .அந்தப்பந்தே யமனாக வந்தது போலும் .அடிவயிற்றைப்பிடித்தபடி “அம்மா”என்று அலறினாள்.ஷ்ண்முகம் ஒடோடி வந்தார். அலறிப் புடைத்தபடி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார் வயிற்றினுள்லேயே சிசு மரித்துவிட்டது பின் தாயைப்பிழைக்கவைக்க முடியவில்லை அவ்வளவுதான் சண்முகம் வாழ்க்கையில் ஒரு பேரிடி.கிரிக்கெட்டை வெறுத்தார் அதை விளையாடும் எல்லோரையும் எதிரியாகப்பார்த்தார் விளையாட்டு சிறுவர்களை வெறுத்தார் நடந்த சம்பவம் அவர் ஆழ்மனதில் பதிந்துமிகவும் தொந்தரவு செய்தது.வந்த புன்னகை மறைந்து பழைய சிடுசிடு திரும்பியது.பைத்தியம் பிடித்தாற்போல் ஆனார்.

    ஒருநாள் அவருக்குத்திடீரென்று ஒரு ரெஜிஸ்டர்ட் போஸ்டு வந்தது அதில் அவரது தாத்தா வழி வந்த சொத்தான ஒரு வீடு இவர் பேருக்கு எழுதப்பட்டிருந்தது.இவரது தூரத்து உற்வான ஒருவர் இவர் இருப்பதைக்கண்டுப்பிடித்து மிகவும் முயற்சி செய்து இவரிடம் அந்த வீட்டை ஒப்படைத்தார்.அந்த வீடுதான் தற்போது சண்முகம் இருக்கும் வீடு.தில்லியில் பாலம் விஹார் என்ற இடத்தில் இருந்தது. அவருக்கு வயதாக வயதாக தனிமையை உணர்ந்தார்.கோபமும் சிடுசிடுப்பும் கூடியது.இயலாமை வேறு அவரை மிகவும் வெறுப்படைய செய்தது.இதனால் தான் அவர் அந்தக்கிரிக்கெட் பந்தைக் கிழித்துப்போட்டாரோ?தன்னை மாற்றிய தனக்கு உயிர்க்கொடுத்த தேவதை வள்ளியைக்கொன்ற பந்தல்லவா என்ற பழைய ஞாபகமும் வர கத்த ஆரம்பித்து விடுவார்.

    ஒரு நாலு நாட்களாக அந்தக்காம்பவுண்டில் ஒரு சத்தமுமில்லை.ஐந்தாவது நாள் மெள்ள ராஜி அந்த மைதானத்தை எட்டிப்பார்த்தாள்.பின் தைரியமாக மேலே நடந்தாள்.வீட்டினுள் கதவு அடைக்க்ப்பட்டிருந்தது .”ஹையா மஜா தாத்தா வீட்டினுள் இல்லை “என்று குதித்தபடி வெளிவந்தாள்.பின் என்ன 1தோழிகள் கூட்டம் சேர்ந்தது.”வா கமலா மீனா ,நீலா ஓட்டம் பிடிச்சு விளையாடலாம்” என்றபடி ராஜி ஓட அந்ததோட்டப்பூக்களும் சிரித்தன.கடைக்குட்டி சுசீ மண்ணை அளைந்து கனகாம்பர விதைகளை விதைத்தாள்.பின் ரப்பர் குழாய் வழியாக நீர் பாய்ச்சினாள்.வேறு சிலர் அங்கிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர் ஒரு வாரம் ஆயிற்று முசுடுதாத்தா வரவில்லை. “ஹையா ஜாலி” என்றபடி சிறுவர், சிறுமிகள் ஆனந்தமாக பொழுதைப்போக்கினர் அடுத்த நாள் ஒரு அம்புலனஸ் அந்தக்காம்பவுண்டுக்குள் வந்தது அதிலிருந்து இரண்டு பேர்கள் இறங்கி தாத்தாவைத் தூக்கியபடி சென்றனர்.உள்ளே ஒரு கட்டிலில் அவரைக்கிடத்திவிட்டு அருகிலிருந்த மேஜையில் சில மருந்துகளை வைத்துவிட்டு சென்றனர்.எட்டி நின்று பார்த்த குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்
    “பாவம்டி தாத்தா என்ன உடம்போ தெரிலை “என்றாள் மீனுக்குட்டி

    “ஆமாண்டி ஒரு வாரமா ஆஸ்பிடல்ல இருந்திருக்கார் போல இருக்கு “என்றாள் வாணி
    “நான் ஓடிப்போய் எங்கம்மாட்ட சொல்லபோறேன் ஓட்ஸ் கஞ்சி எங்கம்மா வச்சுக்கொடுப்பா அத தாத்தாட்ட தரப்போறேன்”என்றாள் மீனுக்குட்டி மதியம் ஆனது ராஜி ஆப்பிள் பழத்தை வெட்டி எடுத்துக்கொண்டாள் மதியம் ஒரு மணி ராஜியுடன் மீனு, வாணி,சங்கர் சேகர் ரமேஷ் சிங் எல்லோரும் சேர்ந்துகொண்டனர்

    “நான் உள்ளே வரலை என் பந்தை முசுடு தாத்தா கிழித்துப்போட்டுட்டார் “என்று முகத்தை உம் என்று வைத்துக்கொண்டான் மோகன்

    ” பாவண்டா அப்படி சொல்லாதே தனியா சுரமா படுத்திண்டிருக்கார் போலிருக்கு பிளட்பிரஷர் போலேருக்கு வாடா உள்ளே அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்ன்னு நினைக்கறேன் “

    ” தாத்தா நான் தான் ராஜி …என்ன தாத்தா சுரமா ஐயோ பாவம் டோன்ட் வொர்ரி உங்கள பாத்துக்க நாங்க இருக்கோம் :

    ” தாத்தா தாத்தா நான் தான் மீனு உங்களுக்கு கஞ்சி கொண்டுவந்திருக்கேன் என் அம்மா ஆசையா வச்சு தந்தா குடிங்கோ தாத்தா ஸ்பூனில் தரேன் ஆன்னு வாயைக்காட்டுங்கோ “என்றபடி கஞ்சி கொடுக்க தயரானாள் தாத்தா கண்களிலிருந்து நீர் வழிந்தது தன்க்குப்பிற்க்காத குழந்தையா இவள் என்று நினைத்தபடி மீனு கையைப்பிடித்துக்கொண்டார் தன் மனைவியின் ஞாபகம் வந்தது “தாத்தா மருந்தெல்லாம் நான் கரெக்டா கரெக்டா உங்களுக்கு தரேன் கவல படாதீங்கோ “என்றான் மோஹன் தாத்தா குழந்தையைப்போல் அழ ஆரம்பித்தார் அவர் அழுவதைப்பார்த்து சிறுவர்கள் மனம் கலங்கினர் .தைரியமாக அவர் கட்டிலில் அமர்ந்தனர்.அவர் காலைப்பிடித்து விட்டனர்.நேரம் தவறாமல் மருந்தையும் புகட்டிவிட்டனர்.தங்கள் அன்பால் முசுட்டுத்தாத்தாவையும் மாற்றினர்

    ஒரு வாரத்தில் அங்கிருந்த சூழ்நிலையே மாறியது.வரட்டு மைதானமாக இருந்த இடம் அழகான நந்தவனமாய் மாறியது.செடிகள் பூத்துக்குலுங்கின.பல வகை பறவைகள் அங்கு வந்து தங்கின.வண்டின் ரீங்காரம் காதுக்கு ரஞ்சகமாக இருந்தது . முசுடு ஹிட்லர் கதை சொல்லும் தாத்தாவாக மாறினார் அவரைச்சுற்றி பல குழந்தைகள்.அவர் எந்த நேரமும் உல்கை விட்டுப்போகலாம் அப்படிப்பட்ட வியாதிதான் அவருக்கு வந்துள்ளது குழந்தைகளுக்கு அது தெரியாது .அவர் எழுதிய உயில் வக்கீலிடம் இருக்கிறது “எனக்குப்பிறகு இந்த வீடும் மைதானமும் குழந்தைகள் விளையாடும் இடமாக ஆக வேண்டும் உள்ளே கேரம் ,செஸ், ஜிம் போன்றவைகள் நடக்க வேண்டும் வெளி மைதானத்தில் கிரிக்கெட் ,டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இது நான் என் சுயபுத்தியுடன் எழுதுகிறேன் “

    இதோ அவர் ஆனந்தமாக மரணபயமின்றி கிரிக்கெட் மாட்ச்சைப்பார்க்கிறார். “சபாஷ் அப்படி அடி .இன்னொரு ரன எடு “என்று குரல் கொடுக்கிறார் குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பதைப்புரிந்து கொண்டுவிட்டார் . .

    Share
  • அன்பே அழகானது. – பகுதி 6.

    – ராஜ்ப்ரியன்

     

    ஏண்டா ஐஸ்கிரிம் வாங்க போறவன் கூட யாரையாவது அழைச்சி போகலாம்மில்ல.

    இல்ல டாடி.

    நீ வர வர ரொம்ப மோசமா நடந்துக்கற ரஞ்சித் என கோபமாக சொன்னதும் அமைதியாக வந்தான்.

    பாஸ் தப்பு ரேவதி மேல. நீங்க ஏன் குட்டி பையனை திட்டறிங்க.

    ரேவதிக்கிட்ட ஒப்படைச்சிட்டு போனா நீங்க யாரும் அவனை பாத்துக்கமாட்டிங்களா என கேட்டதும் அதில்ல சார் என ஸ்ரீதர் தலை குனிந்தான். மஞ்சு சோகமாக அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

    கிடைச்சிட்டான்யில்ல விடுடா என்ற பிரபு, ரஞ்சித்தை அழைத்து புதுயிடத்துக்கு வந்தா தனியா போக கூடாது. யாராவது பெரியவங்க ஒருத்தர் துணையோடத்தான் போகனும். இங்கயெல்லாம் நீ தொலைஞ்சி போய்ட்டின்னா உன்ன கண்டு பிடிக்கவே முடியாது. அதனால ஜாக்கிரதையா இருக்கனும் சரியா என்றான்.

    சரி அங்கிள்.

    ஆமாம் ஐஸ்கிரிம் வாங்க உனக்கேது காசு என நான் கேட்டதும்

    அமைதியாக இருந்தான்

    கேட்கரன்யில்ல பதில் சொல்லு என கோபமாக கேட்டதும் ட்ரஸ் எடுக்க போனப்ப ஐஸ்கிரிம் வாங்க பணம் தந்திங்களேப்பா அதல மீதி காசு எங்கிட்ட இருந்துச்சி அதலதான் வாங்கனன்.

    உனக்கு காசு தர்றது தப்பா போச்சி.

    சின்னப்பையன் சொன்னா புரிஞ்சிக்கபோறான். அதவிட்டுட்டு திட்டிக்கிட்டே இருக்கற என பிரபு மீண்டும் சொல்ல அமைதியாக வந்தேன். இரவு 8 மணியளவில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தோம்.

    வீட்டுக்கு வந்து உள் நுழைந்ததும் என்னடா கோபமா என கேட்டேன்.

    அமைதியாக இருந்த ரஞ்சித் எதுவும் சொல்லமால் நி;ன்றான். இந்த வயசுல உங்க பையன் பிர்லியன்டா இருக்கான்னு மத்தவங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா நீ பண்ற வாலு தனத்த தான் பொருத்துக்க முடியல என்றதும். அதற்கும் அமைதியாக இருந்தான். சரி ட்ரஸ் மாத்திக்க டிபன் செய்யறன் சாப்பிடலாம் என்றதும் அமைதியாக பெட்ரூம்குள் நுழைந்தான். நானும் சென்று உடை மாற்றிக்கொண்டு டிபன் செய்ய தொடங்கினேன். தோசை ஊத்தி சட்னி வைத்து தந்ததும் சாப்பிட்டுவிட்டு ரூம்குள் சென்றுவிட்டான். நான் பெட்ரூம்குள் நுழைந்த போது அவன் தூங்கியிருந்தான். அவன் தலையை தடவி தந்தபடி நானும் தூங்கியிருந்தேன்.

    காலையில் எழுந்தவன் அவனே குளிக்க சென்றான். என்ன சார் இன்னும் கோபம் போகலயா ?

    அதெல்லாம் ஒன்னும்மில்ல.

    உன் முகத்த பாரு குரங்கு மாதிரியிருக்கு.

    உன் மூஞ்சிதான் எங்கிட்டயிருக்கு என பதில் சொல்ல அவனை முறைப்பது போல பார்த்ததும் பாத்ரூம்குள் ஓடிவிட்டான். குளித்துவிட்டு வெளியே வந்து பள்ளிக்கு கிளம்பியவனின் கழுத்தில் டை கட்டியபடி மெல்லிய குரலில் நீ அவுங்க கூட இல்லன்னதும் நான் எப்படி துடிச்சன் தெரியுமா. அந்த கோபத்தல திட்டிட்டன்டா ஸாரி.

    நீங்க சென்னை அழைச்சிம் போகும்போது என்ன சொன்னிங்க.

    என்ன சொன்னன்.

    பொம்மையெல்லாம் வாங்கி தர்றன்னு சொன்னீங்க. எதுவும் வாங்கி தரல.

    மஞ்சுக்கிட்ட நான் தான் வாங்கி தரச்சொன்னனே.

    எதுவும் வாங்கி தரலப்பா.

    நானும் டென்ஷன்ல மறந்துட்டன். அடுத்தமுறை போறப்ப நிறைய வாங்கி தர்றன்.

    ஓ.கே டாடி என தலையாட்டியவன் சந்தோஷத்தில் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தான். தட்டில் போட்டு வைத்திருந்த மூன்று இட்லியை சாப்பிட்டபோது வெளியே வீட்டு வாசலில் வந்து நின்று ஹாரன் அடித்தது ஆட்டோ. இரு ரஞ்சித் உன்ன நான் ட்ராப் பண்றன்.

    வேணாம் டாடி. நான் ஆட்டோவுல போறன். மதியம் லஞ்ச் டாடி. மறந்துட்டன் இரு என சமையல் அறைக்கு சென்று அவனுக்காக வைத்திருந்த டிபன் பாக்ஸ் எடுத்து வந்து தந்தபடி ஐந்து இட்லி வச்சியிருக்கன். மிச்சம் வைக்காம சாப்பிடு என டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டிலை தந்ததும் வாங்கிக்கொண்டு வெளியே நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு சிரித்தபடி டாடா காட்டினான்.

    நானும் குளித்துவிட்டு முடித்து சாப்பிட்டுவிட்டு அலுவலம் சென்ற போது வேலைகள் நடந்துக்கொண்டு இருந்தன. ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து பிரபு டிசைன் செய்துக்கொண்டு இருந்தவனை உள்ள வாடா என்றதும் வந்தவன் வீட்ல போயும் அவனை திட்டனியா ?.

    இல்லடா. காலையில வரைக்கும் கோபமா இருந்தான். ஸ்கூல் போகும்போது தான் கொஞ்சம் சிரிச்சான்.

    அவனுக்கு அம்மா பாசமும், அரவணைப்பும் தேவைடா. ஒரு அப்பா எவ்ளோ பாசத்த காட்டனாலும், அம்மா மாதிரி வராது. அதனால கோபப்படாம நாங்க சொல்றத கொஞ்சம் கேளுடா என்னும் போதே ஃபோன் மணி அடித்தது. மதன் ஃபோனை எடுத்து ஹலோ என்றான்.

    எதிர் தரப்பு குரலை கேட்டதும் வணக்கம் சார். நல்லாயிருக்கிங்களா ?

    நல்லாயிருக்கனப்பா. நீ எப்படியிருக்கற ?.

    நான் நல்லாயிருக்கன் சார்.

    செல்போன்க்கு கூப்பிட்டன் எடுக்கல.

    பைக்ல ஆபிஸ் வந்துக்கிட்டு இருந்தன் சத்தத்தல கேட்கல சார்.

    தலைவர் அடுத்த மாசம் இங்க வர்றாரு.

    என்ன சார் திடீர்ன்னு.

    மாவட்ட தலைவர் பையன்க்கு கல்யாணம். அதுக்காக வர்றாரு. நாம நல்லா விளம்பரம் செய்யனும்.

    செய்துடலாம் சார்.

    வாசகம் சொல்றன் குறிச்சிக்கப்பா.

    சொல்லுங்க சார் என ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அவர் சொன்னதை குறிக்க தொடங்கினான். பத்து நிமிடம்மானது. டிசைன் பண்ணி நாளைக்கு ஆபிஸ்க்கு 11 மணிக்கு தந்து அனுப்பறன் சார். கரெக்ஷன் ஏதாவது இருந்து சொன்னிங்கன்னா மாத்தி நாளைக்கு ஈவ்னிங் பைனல் பண்ணிடலாம் சார் என முடித்து ஃபோனை வைக்க 15 நிமிடமானது.

    பிரபுவிடம் எல்லாரையும் உள்ள வரச்சொல்லு.

    எதுக்கு.

    வரச்சொல்லு சொல்றன்.

    கண்ணாடி டோரை திறந்த பிரபு, ஆல் ஆபிசர்ஸ் ப்ளீஸ் கம் என்றதும் அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லோரும் மதன் முன் அமர்ந்திருந்தனர்.

    அடுத்த மாசம் மக்கள் முன்னேற்ற முன்னணி கட்சியோட தலைவர் முக்கிய கட்சிக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு இங்க வர்றாறாம். இப்பத்தான் டேட் கன்பார்ம்மாச்சாம். அந்த கட்சி மா.செவாயிருக்கற வேலாயுதம் எம்.எல்.ஏ இப்பத்தான் போன் பண்ணி சொன்னாரு. நியூஷ் பேப்பர், பேனர், போஸ்டர்க்கு டிசைன் கேட்டுயிருக்காரு. ரொம்ப நல்லாயிருக்கன்னு தலைவர் நின்னு ரசிக்கற மாதிரி இருக்கனம்ன்னு சொல்றாரு.

    செய்து தந்துடலாம் சார் என்றான் பாண்டியன்.

    ஆனா நாளைக்கே வேணும்ன்னு கேட்கறாரு.

    நாளைக்கா என ரேவதி அதிர்ச்சியாக.

    ஆமாம்.

    ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டைம் சார். வாராவாரம் புது டிசைன்ங்க தந்துக்கிட்டே இருக்கனம்ன்னு சொல்லியிருக்காங்க. நம்மோட ரெகுலர் கஸ்டமர்களோடதே நிறைய பென்டிங் இருக்கு. அதனால இத நாளைக்கே செய்து தர முடியாது சார் இரண்டு நாளாவது ஆகும் சார் என்றாள் ரேவதி.

    இவரும் நம்ம ரெகுலர் கஸ்டமர் தான் ரேவதி என்ற நான் கொஞ்சம் யோசித்துவிட்டு

    எம்.எல்.ஏவத பாண்டியனும், ரேவதியும் செய்யட்டும். காலேஜ், ஸ்கூல் ஓர்க்குகள பிரபு செய்யட்டும். மஞ்சு நீ கொஞ்சம் அப்படியே இந்த வேலைகளையும் கவனி.

    சரியென தலையாட்டிய மஞ்சு. சார் அந்த எம்.எல்.ஏ போனமுறையே ஐந்தாயிரம் பென்டிங் வச்சியிருக்காரு என்றாள் மஞ்சு.

    இந்தமுறை வாங்கிடலாம் மஞ்சு. ஸ்ரீதர் எங்க?.

    இன்னும் வரல சார்.

    பேங்க்ல ஏதாவது ஓர்க் இருக்கா.

    செக்குங்க இருக்கு சார் அத அக்கவுண்ட்ல போடனும்.

    அத எங்கிட்ட குடு நான் பாத்துக்கறன். ஸ்ரீதர் வந்ததும் எம்.எல்.ஏ விளம்பரத்த டிசைன் பண்ணச்சொல்லு.

    சரி சார்.

    பாண்டியன் வேலைய பிரிச்சி பாருங்க. நீங்க பேனர் வேலைகள பாருங்க, ரேவதி பேப்பர் விளம்பரத்த டிசைன் பண்ணட்டும், போஸ்டர் விளம்பரத்த ஸ்ரீதர்க்கிட்ட தந்துவிடுங்க. தேதியும், வாசகமும் சொல்லியிருக்காரு. எல்லாத்தலயும் அவர் படமும், கட்சி தலைவர் படமும் தான் போடனுமாம். தம்பதிங்க படத்த தந்துவிட்டுயிருக்காறாம். அதுக்கு இடத்த விட்டுட்டு டிசைன் பண்ணுங்க. சி.டி வந்ததும் படத்த எடுத்து வச்சி ஃபில் பண்ணுங்க.

    சரி சார்.

    சரி எல்லோரும் போய் வேலைய பாருங்க என்றதும் அனைவரும் எழுந்து சென்றனர்.

    பிரபு எனக்கொரு ஐடியா, நாம இதுவரைக்கும் டிசைன் மட்டும் தான் செய்து தந்துக்கிட்டு இருந்தோம். இந்தமுறை அதை பிரிண்ட் செய்து தர ஆர்டரை எடுத்த எப்படியிருக்கும் ?.

    என்னடாயிது புதுசா.

    ஆமாம் புதுசு தான். வளருனும்டா. எத்தனை வருஷத்துக்கு தான் அப்படியே இருக்கறது. கொஞ்சம் வளருவோம்;டா. நீ ஒருவேளை செய். நல்லா பிரிண்ட் போடறவங்க எங்க எங்க இருக்காங்கன்னு பாரு. ரேட் எவ்ளோன்னு விசாரி நான் இதோ வந்துடறன்.

    ஏத்தனை வேலைடா நான் செய்யறது.

    சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்த வச்சிக்கிட்டு வேலையப்பாரு. நான் வரும் போது பட்டியல் ரெடியா இருக்கட்டும்.

    ம்.

    ஃபைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மதன்.

    மதியம் 2 மணிக்கு திரும்பி வரும்போது ரிஷப்சனில் அமர்ந்து அனைவரும் அரட்டையடித்துக்கொண்டு இருந்தனர்.

    ஏய் என்னப்பாயிது, நிறைய ஓர்க் பென்டிங் இருக்குன்னு காலையில தான் சொன்னிங்க. இப்ப என்னடான்னா எல்லாரும் உக்காந்து கதையடிச்சிக்கிட்டு இருக்கிங்க.

    கரண்ட் இல்ல சார்.

    நாம தான் யூ.பி.எஸ் போட்டுயிருக்கோம்மே?.

    நாம போட்ட யூ.பி.எஸ் நாலு மணி நேரம் தான் வருது. காலையில 9 மணிக்கு போன கரண்ட் இப்பவரை வரல. மதியம்மே பேக்கப் காலியாகி ஒரே ஒரு சிஸ்டம் தான் ஒர்க்காகுது. அதலத்தான் பாண்டியன் சார் வேலை பாத்துக்கிட்டு இருக்காரு என்றான் ஸ்ரீதர்.

    காலையில நீ எங்க போன ?

    ஓர்க் பாஸ்.

    என்ன வேலை பாத்த.

    ஃபில் வராம சிலது இருந்தது அத வாங்கிவர போனன் பாஸ்.

    வாங்கிட்டியா

    நாளைக்கு வரச்சொல்லிட்டாங்க.

    ஊர் சுத்த நிறைய காரணத்த வச்சியிருக்க

    இல்ல பாஸ்.

    பிரபு எங்க ?.

    லஞ்ச்க்கு போயிருக்கார் சார்.

    அவனை மொபைல் லைனில் பிடித்து சாப்பிட்டியா ?.

    ம் என்றவனிடம் வேலை முடிஞ்சதா.

    உன் லேப்டாப்ல ஸ்டோர் பண்ணி வச்சியிருக்கன் பாரு.

    சரி சீக்கிரம் வா எனச்சொல்லிவிட்டு மதன் தன் அறைக்குள் சென்றான். லேப்டாப்பை ஆன் செய்து பிரபு ஸ்டோர் செய்த ஃபைலை ஓப்பன் செய்து பார்த்தபோது விதவிதமான ரேட்களில் பிரிண்ட் போடப்படுவது தெரிந்தது. தன்னிடம்மிருந்த சில குறிப்புகளை பார்த்தான் அவன் சொன்னதை விட விலை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. பிரபு உள்ளே நுழைந்தவன் கரண்ட் வந்துடுச்சிடா என சொன்னபடி ஃபேனை சுழல விட்டவன் பாத்துட்டியா ?

    பாத்துக்கிட்டு தான் இருக்கன். இத நீயும் பாரு என நான் குறித்து வந்திருந்த சில தகவல்களை அவனிடம் தந்தேன். கொஞ்சம் நேரம் பார்த்தவன் எனக்கு குழப்பமாயிருக்கு என்ன பண்றதா ஐடியா என கேட்டான்.

    விதவிதமான ரேட்களா இருக்கு. இதல கொஞ்சம் டீப்பா போனாதான் குவாலிட்டி தர முடியும், நாமளும் லாபம் பாக்க முடியும் அதனால இப்போதைக்கு பெருசா வேணாம். இத படிப்படியா செய்வோம். அவசரப்பட்டு இறங்கி சிக்கிட்டோம் இருக்கறதும் போயிடும்.

    இந்த கம்பெனி ஆரம்பிச்ச இந்த எட்டு வருஷத்தல இப்பத்தாண்டா ஒழுங்க யோசிச்சியிருக்கற என்றான் பிரபு.

    பாஸ் என அழைத்தபடி வேகவேகமாக அறைக்குள் வந்த ஸ்ரீதர், பாஸ் ஆல் இன்டியா முழுக்க பிராஞ்ச் வச்சியிருக்கற தேவ் கம்பெனியோட பெங்களுரூ பிராஞ்ச் மேனேஜர் பேசனாரு. அவுங்களோட கிளையண்ட் ஒருத்தர் நம்மவூர்ல பெரிய ஜிவல்லரி திறக்கறாறாம். அதை மக்கள்க்கிட்ட புரமோட் பண்ணனுமாம், ஜிவல்லரி ஓனர் பிரஸ்ச மீட் பண்ணனும்மாம் அரேஞ்ச் பண்ணி தர முடியுமான்னு கேட்கறாரு.

    ஓ.கே சொல்லு. அவுங்க நம்மள ஓவர் லுக் பண்ணக்கூடாது. பிடி நம்மக்கிட்ட இருக்கட்டும் ஸ்ரீதர்.

    நீங்க பேசறிங்களா பாஸ்.

    இல்ல மேனேஜர் பேசுவாருன்னு சொல்லு.

    ஓ.கே பாஸ் என்றபடி வெளியே சென்றான்.

    ஓபி அடிச்சாலும் நல்ல கான்டக்ட் வச்சியிருக்கனேடா.

    அவன் கேடி. ஒரு நாள் நமக்கு அல்வா தரப்போறான் பாரு என்றவனிடம்

    தரும்போது பாத்துக்கலாம். இங்க அந்த கம்பெனி எது பண்றதாயிருந்தாலும் அது நம்ம ஏஜென்சி வழியாத்தான் பண்ணனும் அந்தளவுக்கு பேசி அவனை நம்ம கண்ட்ரோல்ல வச்சிக்க. நமக்கு தர்ற ரேட் விஷயத்தல தயங்குவாங்க. எங்க ரேட் இதுதான்னு கட்டன்ரைட்ட பேசிடு.

    பெரிய கம்பெனிடா விட்டு பிடிப்பமே ?.

    ஒன்னும் வேணாம். நம்மக்கிட்ட வர்றது அந்த ஜிவல்லரி கிடையாது. ஜிவல்லரி நியமிச்சியிருக்கற அட்வர்டைசிங் கம்பெனி. நியூஸ் பேப்பர், மீடியா விளம்பரத்த அவுங்களே தயாரிப்பாங்க. வெளியிடப்போறதும் அந்த கம்பெனி தான். இங்க லோக்கல்ல தெருவுல, வினையல் போர்டு, பிட் நோட்டீஸ் தர்ற சின்ன சின்ன விஷயத்துக்கு தான் நம்மள பயன்படுத்துவாங்க. அவனால அவ்வளவா வருமானம் கிடையாது. அதனால அவன் சொல்ற வேலைய கேட்டுக்க செஞ்சிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பில் போட்டு அனுப்பிடு.

    நாம ஏன் அந்த ஜிவல்லரி ஓனரை அப்ரோச் பண்ணி இங்கத்தி அட்வர்டைசிங்க நாங்க பாத்துக்கறன்னு கேட்டா பிரபுவை முறைத்தேன்.

     

    தொடரும்……………

     

    Share
  • வாழ்விலே…

     

    செண்பக ஜெகதீசன்

     

    உறக்கம்-

    ஓய்வின் மொழி,

    உய்வின் வழி..

     

    கனவின் களம்,

    கனிந்திடும் உளம்..

     

    வாழ்வின் பகுதி,

    வாழ்வே அதுவல்ல..

     

    அதுவானால்,

    இல்லை வாழ்வே…!

     

     

    Share
  • என் இல்லாள்.

     

    தனுசு

     

    என் இல்லாளிடம் சொன்னேன்
    சிக்கனமாய் இருக்க
    மறுக்கிறாள்
    அதை எக்கணமும் கேட்க.

    பெண்ணுக்குப் பகை
    ஊதாரித்தனம்.
    அது இந்த மண்ணுக்கும் தெரியும்
    எடுத்து சொன்னால் கேட்பதில்லை
    எதிர்த்து நிற்க முடியவில்லை.

    சிறுகச் சிறுக சேர்த்தால்
    சேமிப்பு.
    அது பெருகப் பெருக
    தரும் பூரிப்பு.

    இவள்
    பெரிது பெரிதாய்
    செலவாக்கி
    வீட்டை நிறைக்கும்
    பைத்தியக்காரி.
    இந்தக் குணத்தை
    தாய்வீட்டுச் சீதனமாய்
    தன்னோடு கொண்டு வந்த
    கொடுமைக்காரி.

    மிச்சம் பிடித்து
    வாழ்வது
    மெச்சத்தகுந்த வாழ்க்கை
    அதை
    துச்சமாய் நினைப்பது
    இவளின் வாடிக்கை.

    கொஞ்சம் கொஞ்சமாய்
    கொடுப்பது
    குடும்பத்துக்கு அழகு
    கொட்டிக்கொடுப்பது
    என்ன வழக்கு?

    அள்ளிக்கொடுக்கும்
    இந்த
    அன்னபூரணியை
    தள்ளிவைக்க முடியவில்லை
    சொல்லிதர வாருங்கள்
    சொந்தமுள்ள அண்ணன்மாரே அக்காமாரே….
    குறைக்கச் சொல்லி கூறுங்கள்
    அவளின்
    அன்பில் தேவை சிக்கனம்!
    யாரையும்
    அரவணைப்பதிலும்
    தேவை சிக்கனம்!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 79 (08.07.13)

     

    மலர் சபா
    மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

    madhavi and friend

    “உலகில் உள்ள நிலைபெற்ற
    உயிர்கள் எல்லாம்
    தம் மனதை மகிழ்விக்கும் துணையோடு
    புணர வைக்க வல்லவன் மன்மதன்.

    இனிய இளவேனில் இளவரசன் என்பதனால்
    அரசன் போல் எதையும்
    நெறிப்படச் செய்வான் அல்லன்.

    அந்த இளவலுக்குத் துணையாய்
    மாலையாம் பொழுததனில்
    யானையின் பிடரியில் ஏறி வருகின்ற
    திங்கள் செல்வனும்
    நடுநிலைமை உடையவன் அல்லன்.

    புணர்ந்து மகிழ்ந்த காதலர் ஊடல் கொண்டு
    சற்றே தம்முள் இடைவெளி கொண்டிருப்பினும்,
    தகுந்த காரணம் கொண்டு
    பிரிந்து சென்ற காதலர்
    தம் துணைதான் மறந்து வாராதிருப்பினும்,
    நறும்பூக்களால் செய்த அம்புகள் கொண்டு
    தனித்து வாழ்பவரைத் தாக்கி நிற்பது
    மன்மதனுக்கு வாடிக்கையான செயலேயன்றிப்
    புதுமையான செயல் ஆகாது.
    இதனைத் தாங்கள் அறிந்து
    எமக்கு அருள்வீரே” என்றேதான் எழுதினள் மாதவி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 56 – 63
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி

    http://tamilarivom.blogspot.in/

    Share
  • நன்றி

    பி.தமிழ்முகில் நீலமேகம்

    பார்கவி  அந்த அடுக்குமாடிக்   குடியிருப்பிற்கு  வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அவர்களது அடுக்குமாடித் தொகுதியில் மூன்று தளங்கள் இருந்தன. இவர்களது  வீடு முதல் மாடியில் இருந்தது. தரை தளத்தைத் தாண்டி முதல் தளத்துக்கு வருமுன் உயிரை கையில் பிடித்துக் கொண்டே தான் வருவாள் பார்கவி. அவளது மகள் மகி குட்டிக்கோ, அதைவிட பெரும் பயம். எப்போதும் அந்த தரை தளத்தினைத் தாண்டும் வரை அம்மாவை ஒண்டிக் கொண்டே தான் செல்வாள். இவர்களது பயத்திற்கான காரணம், தரைதளத்தில் இருக்கும் மூன்றாம் எண்  வீட்டிலிருக்கும் திரு. ரோஜர்  அவர்களது  செல்லப் பிராணியே அதற்குக்  காரணம்.

    சீசர், கிட்டத்தட்ட அறுபத்தைந்து  பவுண்டு எடையும்,  முப்பது இன்ச் உயரமும் கொண்ட கம்பீர உயரம். காண்பவர் எவரும் சட்டென்று  பயந்துவிடக் கூடிய அளவுக்கு இருக்கும். ஆனால், திரு.ரோஜரோ , ” டோன்ட் ஒர்ரி. ஹீ  இஸ்  ஜஸ்ட் எ லிட்டில் பாய். ஹீ  வில் நாட் ஹார்ம்  எனிஒன்” (Don’t worry. He is just a little boy. He will not harm anyone)  என்று கூறுவார். அது மெல்ல உர்ரென்று  உருமினாலே, ஏதோ  ” பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஜாக்கிரதை ! ” என்று எச்சரிக்கை விடுப்பது போல் இருக்கும். பூட்டிய வீ ட்டினுள் தான் இருக்கும்.ஆனாலும் வெளியில் எவரும் நடக்கும் அரவம் கேட்டால் போதும், பயங்கரமாக குரைத்து, கதவைப் பிராண்டி, வெளியில் போய், வருபவர் மேல் பாய்ந்துவிட மாட்டோமா எனும்படியாகத் தான் இருக்கும் அதன் செய்கைகள்.

    ஒரு மாதம் சென்றிருக்கும். சில நாட்களாகவே ஏனோ சீசரின் சப்தம் கேட்பதே இல்லை. ஏனென்று சில வேளைகளில் பார்கவி எண்ணினாலும், “அப்பாடா. சில நாட்களாக நாயின் சப்தமோ, அரவமோ இல்லாததால் நிம்மதியாக நடமாட முடிகிறதே”  என்றெண்ணி  அமைதியானாள்.

    ஓர்நாள், துணிகளைத் துவைப்பதற்காக லாண்டரிக்குச்  சென்று  துணிகளை எல்லாம் மெஷினில் போட்டுவிட்டு, அங்கிருந்த சிறிய தகவல் பலகையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, அவளது கண்ணில் அந்த அறிக்கை பட்டது.

    சீசரைப் பற்றிய விபரங்கள்…. அதன் நிறம், உயரம், எடை, பெயர், வகை, அதன் புகைப்படம் போன்றவற்றை  குறிப்பிட்டிருந்தனர். ” இதனால் தான் சில நாட்களாக சீசரின் சப்தம் கேட்பதில்லை போலும் ” என்று மனதினுள் எண்ணிக் கொண்டு, தன வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் . அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய  மஹி குட்டியிடம்  “சீசர் காணாம போயிடிச்சாம் மஹி மா…. லாண்டரில நோட்டீஸ் போட்டிருக்காங்க ” என்றாள் .

    ” அச்சச்சோ ! காணாம போயிடுச்சா ? பாவம் மா … அது சாப்பிட எல்லாம் என்ன  பண்ணுதோ ! ” என்று  மஹி  பாவமான குரலில் கூறினாள். சில நாட்களில் சீசர் பற்றி மறந்தே போயினர்.

    ஒரு நாள் மாலை, அதிகப்படியான குளிரும் இல்லாமல், மிகுதியான வெயிலும் இல்லாமல், சற்று இதமான சீதோஷணம்  நிலவியது. சற்று தூரம் காலாற நடந்து வரலாம் என தாயும் மகளும் கிளம்பினர். அவர்கள் இருந்த இடம், மரங்களடர்ந்த காட்டுப் பகுதி. சில காட்டுப் பகுதிகளை அழித்தே  அங்கு குடியிருப்புகளாகவும், அடுக்குமாடி  வீடுகளாகவும் கட்டி இருந்தனர். சற்று தூரம் நடந்து வந்தவர்கள், ” சரி , வீட்டுக்கு திரும்பி  போகலாம் ” என்றவாறு வீட்டிற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தனர். அவர்களது குடியிருப்பிற்கு அருகில் வந்ததும்  மஹி, ” ஏதோ முனகுற மாதிரி சத்தம் கேக்கல ? ” என்றாள்.

    ” இல்லையே ! ”  என்ற பார்கவியை  அங்கு அருகிலிருந்த பள்ளத்தாக்கினை  எட்டிப் பார்க்கச் சொன்னாள்  மஹி . எட்டிப் பார்த்தவளுக்கு  ஆச்சர்யம். அங்கு சீசர்  நின்று கொண்டு மேட்டின் மேல் ஏற முயற்சிப்பதும், சறுக்கி கீழே விழுவதுமாய் இருந்தது. அதைக் கண்டதும் பார்கவி, மேட்டின் மீது அமர்ந்து கொண்டு, கையை நீட்ட, சீசரும் சற்று முயன்று, பார்கவியின் கைகளை தொட, அப்படியே  அதைத் தூக்கி வெளியில் விட்டாள் பார்கவி. நடுங்கிக் கொண்டிருந்த சீசரை மெல்ல தடவிக் கொடுத்ததும், வாலாட்டி விட்டு, வேக வேகமாய் தன்  எஜமானனை தேடி ஓட  ஆரம்பித்தது.

    வீட்டிற்கு  தாயும் மகளும் வந்து சேர்ந்தனர். அப்போது, இவர்களின் வருகைக்காக காத்திருப்பது போல,  வாசலில் சீசர் தனது எஜமானர் ரோஜருடன் நின்று கொண்டிருந்தது. இவர்களைக் கண்டதும் வாலாட்டிக் கொண்டே, சுற்றிச் சுற்றி வந்தது. ” வீ   ஃபௌண்ட்  ஹிம் இன் தி வூட்ஸ். ஹீ  வாஸ் மோனிங் ஃபார் ஹெல்ப். வீ  ரெஸ்கியூட் ஹிம்.” ( We found him in the woods. He was moaning for help. We rescued him) என்றதும், ” தேங்க்ஸ்  எ லாட். ஐ  வில் பே  யூ  தி ரிவார்ட் ” (  Thanks a lot, I will pay you the reward) என்றார் திரு.ரோஜர். ” நோ…நோ… வீ  டோன்ட்  வான்ட்  தி ரிவார்ட். இட்ஸ்  ஜஸ்ட் எ ஸ்மால் ஹெல்ப் ” ( No…No… We don’t want the reward. It’s just a small help) என்று  மறுத்து விட்டார் பார்கவி. நன்றியுடன் தாயையும் மகளையும் பார்த்து வாலாட்டியது சீசர். பின் தன் எஜமானனை சுற்றி வந்து அவரது காலடியில் படுத்தது.

    அதன் பின், ஓர் நாளும் சீசர், இவர்களைப் பார்த்து குறைப்பதில்லை. மாறாக, நன்றியுடன் வாலாட்டியது .

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

    Sanathkumarகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறிய கிராமம் காக்கங்கரை,  தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.  கல்வி வசதிகள் ஏதுமற்ற இந்தக் கிராமத்தில் இப்போது மிக அற்புதமான கல்விப் புரட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.  மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி விரட்டும் பந்தயக் குதிரைகளாக மாற்றாமல் அவர்களுடைய உண்மையான திறமைகளைக் கண்டறிந்து அவர்களை நல்ல தன்மையுள்ள மானிடர்களாக மாற்றும் கல்வித் திட்டம் முயற்சிக்கப்படுகிறது.  ஓரளவு வெற்றியும் கிடைத்து வருகிறது.

    நம்முடைய இளைய தலைமுறை, வேளாண்மை பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கிளைத்து, ஓரிரு ஏக்கர் நிலங்கள் ஒதுக்கி அங்கு வேளாண்மை குறித்த பல அடிப்படை ஞானம் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.  வேளாண்மை இப்போது பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குடை பணியை, சனத்குமார் இந்த வாரத்தில் தொடங்கியுள்ளார்.

    தேசிய அளவில் சிறந்த பள்ளிகளில் ஒன்று என்று மதிப்பிடத் தகுந்த அளவில் இந்த கேட்பிரிட்ஜ் பள்ளி இன்று முன்னேறி வருகிறது.

    இந்தச் சாதனைகளை தன்னுடைய சக்கர நாற்காலியின் வேகமான சுழற்சியினால் சாத்தியப்படுத்தி வருகிறார் திரு.சி.டி.சனத் குமார்.

    சிறு வயதில் தவறான சிகிச்சையால் போலியோ நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டு,  சொந்த ஆர்வத்திலும் உழைப்பிலும் வீட்டிலேயே படித்துத் தேறியிருக்கிறார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன் அளிக்கும் பெட்ரோல் வழங்கும் நிலையம் இவருக்கு சில ஆண்டுகள் முன்பு அளிக்கப்பட்டது.  சிறிது காலம் அதனை நடத்தி விட்டு, ஒரு பள்ளியைத் துவங்குவது என்னுடைய கனவு. அதற்காக இந்த பெட்ரோல் நிலையத்தைத் திருப்பித் தர முடியுமா என்று கேட்டு, அதில் கிடைத்த தொகையை வைத்து, கிருஷ்ணகிரியில் கேம்பிரிட்ஜ் பள்ளியைத் துவக்கினார்.  பல சாதனைகளைப் படைத்தது கேம்பிரிட்ஜ் பள்ளி.  அதனைத் தொடர்ந்து இப்போது காக்கங்ரையில் உள்ள பள்ளி.  மதிப்பெண்களை வற்புறுத்துவது இல்லை இப்பள்ளி.  மாணவர்களின் தனித்த ஆளுமையைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.  கல்வி மட்டும் அல்லாது, மாணவர்களின் உடல்நலம் குறித்தும் அக்கறை கொண்டு அன்றாடம் பல வகையான முறைகளைக் கையாளுகிறது.  கட்டாய யோகப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி அவற்றில் ஒன்று.  அனைத்து  மாணவர்களும் ஏதாவது ஒரு பழம் கண்டிப்பாக மதிய உணவுக்குக் கொண்டு வர வேண்டும்.  இது ஆசிரிய ஆசிரியைககளால் அன்றாடம் கண்காணிக்கப்படுகிறது.  செய்தித்தாள்களில் வரும் முக்கியமான செய்திகள் பற்றிய குறிப்புக்களைப் பள்ளியில் ஆசிரிய ஆசிரியைகள் முன்பு மாணவ மாணவியர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    இவையெல்லாம் இந்தப் பள்ளி கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களில் ஓரிரண்டு உதாரணங்கள்.

    டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்.  மொரீஷியஸ் அரசு இவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறது.   பல கல்வி நிறுவனங்களில், கல்வி அமைப்பில் இன்று தேவைப்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.  வடக்கு வாசல் இதழில் இவர் தொடர்ந்து எழுதிய கல்வித் தொடர் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அக்கறைகளைக் கொண்டு பல அடிப்படையான கேள்விகளை எழுப்பின.  வேர்களாகும் விருட்சங்கள் என்னும் பெயரில் வடக்கு வாசல் வெளியீடாக வந்த அந்த நூலை டாக்டர் அப்துல் கலாம் டெல்லியில் வெளியிட்டார்.

    இப்போது ‘வித்யா தான்’ என்னும் புதிய ஆக்கபூர்வமான கல்வித் திட்டத்தை வடிவமைத்து வருகிறார்.

    சீரிய கல்வித் தொண்டினை நோக்கி இவருடைய சக்கர நாற்காலி அல்லும் பகலும் சுழன்றுகொண்டிருக்கிறது.

    கல்வியாளர் சி.டி.சனத் குமார் அவர்களை இந்த வார வல்லமையாளராக அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    இன்றைய கல்வியில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து இவருடன் உரையாடலாம். சனத் குமாரின் மின்னஞ்சல் – sanathkumar5252@gmail.com | தொலைபேசி- 9443207061 | வலைப்பூ- http://sanathkumarkrish.blogspot.in/

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11

    தேமொழி

    மணிப்புரி நடனம்

    manipuri

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10 >>

     

     

     

     

    Share
  • வம்சம்

    தேமொழி

    அரசி ஆன் என்ற பெயரில் ஐரோப்பிய வரலாற்றில் பல அரசிகள் இருந்தனர்.  ஆனால் இங்கிலாந்தின் பேரரசி ஆன் என்பவர்தான் பொதுவாக பலருக்கும் நினைவிற்கு வருபவர்.  அதிலும் இங்கிலாந்தின் பேரரசி ஆன் (Anne, The Queen of Great Britain – 6 February 1665 – 1 August 1714) அம்மையாரின் பெயர் சொன்னால் பெரும்பாலானோருக்கு அவரைப் பற்றிய பலப் பலவிதமான செய்திகள் நினைவுக்கு வரும்.

    – இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் இணைந்து முதன் முதலாக உருவாகிய கிரேட் பிரிட்டனின் முதல் பேரரசி

    – இங்கிலாந்தில் இரு கட்சிகள் நடத்தும் அரசியலுக்கு வழி வகுத்தவர்

    – இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சட்டத்தை தடை செய்த கடைசி அரசி.  இவருக்கு பிறகு அரச குடும்பத்தினர் பாராளுமன்றத்தின் முடிவை எதிர்க்கும் அதிகாரம் இழந்துவிட்டனர்

    – இவர் காலத்தில்தான் லண்டனின் செயின்ட் பால் தேவாலயம் (St Paul’s Cathedral, London) கட்டி முடிக்கப் பட்டது

    – அரசி இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் ஆட்சி செய்தார்; உள்நாட்டு அரசியலில் முகியத்துவம் வாய்ந்தது: இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒரே பாராளுமன்றமாக இணைந்து இயங்க ஆரம்பித்தது; உலக வரலாற்றில்: ஸ்பெயினின் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டு ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டின் வாரிசுரிமைப் போரை ( War of the Spanish Succession) முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலக அளவில் இங்கிலாந்தை ஒரு வல்லரசாக உருவகப் படுத்திக் காண்பித்தார், இவர் காலத்தில் திறமை வாய்ந்த தளபதியின் கீழ் பல போர்களில் இங்கிலாந்து தொடர்ந்து வெற்றி பெற்றது

    – கட்டிடக் கலையில், கட்டிடத்தின் மேல் முகப்பில் முக்கோண முகப்பும், சுவர்களில் தொடர்ந்து வரிசையான ஜன்னல்களும் உள்ள கட்டிடங்களினால் “குயீன் ஆன் ஸ்டைல் ஆர்கிடெக்ட்சர் ” (Queen Anne style architecture) என்று அவர் கால கட்டிடக்கலை பெயர் பெற்றது

    – வளைந்த கால்களையுடைய, மென்மையான திண்டுகள் வைத்து தைத்த, வசதியான, எடை குறைந்த, மெல்லிய, கலை அழகுள்ள வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கைகளும், படுக்கைகளும், பஞ்சனைகளும், ஆசனங்களும்  “குயீன் ஆன் ஸ்டைல் ஃபர்னிசச்சர் ” (Queen Anne style furniture) என்று பெயர் பெற்றன

    – ஸ்பெயினின் வாரிசுரிமைப்போர் அமரிக்காவிலும் நடந்தது.  அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள், செவ்விந்தியர்கள் உதவியுடன் அமெரிக்க மண்ணில் இருந்த ஃப்ரான்ஸ் படையுடன் போரிட்டு வெற்றி பெற்றனர்.  அப்போரை அமெரிக்க வரலாறு “குயீன் ஆன்னின் போர்” என்றுதான் குறிப்பிடுகிறது.  அரசியின் நினைவாக “மேரிலாண்ட்” மாநிலத்தில் “குயீன் ஆன் கவுண்டி” (Queen Anne County) என்ற ஒரு மாவட்டமும், மற்றும் அந்நாட்டில் ஆங்காங்கே அவர் பெயரில் சில ஊர்களும் வீதிகளும் கட்டிடங்களும் உள்ளன

    – இவர் நட்பின் கதையும் மிகவும் பிரபலமானது.  சிறு வயது முதல் “ஸாரா”  என்னும் பெண் இவரது உற்ற தோழியாய் விளங்கினார்.  அரச பரம்பரையில் பிறக்காத தோழியின் குலப் பின்னணியை அவர் ஒரு பொருட்டாக ஒருநாளும் கருதியதேயில்லை.  அந்தத் தோழியிடம் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார் என்ற நிலையில் இருந்தார்.  அரசியான பின் தன் தோழியின் கணவரை ராணுவத் தளபதியாக்கினார்.  தளபதியும் மிகத் திறமையானவர். பலபோர்களில் வெற்றி பெற்று அரசியின் அரசாட்சியை உறுதியாக்கி அரசிக்குப் பெருமை பல சேர்த்தார்.  அரசியும் மனமகிழ்ந்து தோழிக்கும் அவர் கணவருக்கும் பரிசுகளாகக் குவித்தார்.  பட்டங்களாக அள்ளி வழங்கினார்.  தோழி ஸாராவின் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த நட்பினால் பயனடைந்தார்கள்.  பல நல்ல பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  ஆனால் தோழி ஸாராவிற்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம்.  அரசிக்கு கிடைத்த மற்றொரு தோழியிடம் அரசி அன்பு காட்டுவதினால் பொறாமை கொண்டார்.  பொது இடத்தில் அரசி என்றும் பாராமல் வாயாடினார்.  அரசியை அவமதித்துப் பேசினார்.  அரசிக்கு வந்தது கோபம்.  ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார்.  சாராவின் கணவர் நாட்டிற்காகவும் தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார்.  அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)

    – Cricket is not illegal, for it is a manly game – என்ற பொன்மொழியை உதிர்த்தவர்

    – பிற்காலத்தில் கடல் கொள்ளைக்காரனாக மாறிய அரசியின் கடற்படை மாலுமி கருந்தாடி (Blackbeard) அரசியின் மீது கொண்ட அபிமானத்தினால் தன் கப்பலுக்கு “குயீன் ஆன்னின் சபதம்”  (Queen Anne’s Revenge) என்று பெயர் சூட்டினான்.

    – ஏன் ஒரு பூவிற்கு (Queen Anne’s lace) கூட அரசியின் பெயர் உண்டு

    எது எப்படியானாலும் எல்லாவற்றிக்கும் மேலாக அரசி ஆன் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது இவர் ஸ்டூவர்ட்” வம்சத்தின் கடைசி அரச வாரிசு என்பதே.  14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்காட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து நாடுகளை ஆண்ட ஸ்டூவர்ட் வம்சத்தின் அரசாட்சி இவருடன் முடிந்தது என்பது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வரும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது.

    அரசி ஆன் தனது 37 ஆவது வயதில் (1702) இங்கிலாந்தின் அரசியானார், இவர் தன் 49 வயதில் நோயுற்று இறக்கும் வரை 12 ஆண்டுகள் அரசாட்சி செய்தார். ஆனால் இவருக்கு அரசபரம்பரை வாரிசுரிமைப்படி அரசியாகும் வாய்ப்பு இருந்ததோ மிக மிக சொற்பம்.  ஆனாலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆளும் அரசியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

    அரசி ஆன், ஸ்டூவர்ட் “Stuarts” of England and “Stewarts” of Scotland பரம்பரையில் பிறந்த இளவரசர் ஜேம்ஸ்க்கும், அவர் மனைவி ஆன் ஹைடுக்கும் பிறந்தார்.  பிறந்தது முதலே கண்களில் நீர் தொடர்ந்து வழியும் ஒரு கண் நோயில் ஆரம்பித்து, அம்மை, கீல்வாதம், வாழ்நாள் முழுவதும் இரத்த சம்பந்தப் பட்ட நோய் (porphyria)  என தொடர்ந்து நோயினால் பாதிக்கப் பட்டவண்ணமே இருந்தார்.  பிறந்தவுடன் கண் நோயைக் குணப்படுத்த ஃப்ரான்ஸ்ஸில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  ஆனால் பாட்டி இறந்தவுடன் 6 வயதில் நாடு திரும்புவதற்குள் தாயும் இறந்து விட்டிருந்தார்.  இவர் பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் ஆறு குழந்தைகள் ஆறு வயது தாண்டுவதற்குள் இறந்துவிட மிஞ்சியது ஆனும் அவர் தமக்கை மேரி மட்டுமே.

    அரசுரிமை ஏற்கப் போகும் இளவரசர்களுக்கு வழங்கப்படும் படை, போர் பயிற்சி, சட்டக் கல்வி போன்ற கல்விகள் கற்று கொடுக்கப் படாமல் மற்ற பிரபுக்களின் பிள்ளைகள் போல் இசை, இலக்கியம், மதம் போன்ற கல்வி கற்று வளர்ந்தார்.  இவர் வளர்ந்த காலத்தில் இவர் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.  நாடும் அரச குடும்பமும் புராட்டஸ்ட்டண்ட் கிறிஸ்துவ மதப் பிரிவை தீவிரமாக தழுவி வந்தனர். அத்துடன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவினரை வெறுத்து எதிர்த்து வந்தனர்.

    அரச குல வழக்கப்படி நாட்டின் அரசியல், அயல் நாட்டின் நட்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இவர் அக்கா மேரி நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமிற்கும், இளவரசி ஆன் டென்மார்க் இளவரசர் ஜார்ஜிற்கும் திருமணம் செய்து கொடுக்கப் பட்டனர்.  ஜார்ஜும் ஆனும் இறுதிவரை மிக அன்புடன் குடும்பம் நடத்தினர்.  ஜார்ஜ் அறிவும் திறமையும் குறைந்தவர், பெரிய குடிகாரர் எனப் பெயர் வாங்கினாலும் அன்பான, அழகான, மனைவிக்கு துரோகம் நினைக்காத நம்பிக்கைக்குரிய கணவர் எனப் போற்றப் பட்டார்.   பிற்காலத்தில் கணவர் மறைந்தவுடன் ஆன் மிக மனமுடைந்து போனார்.

    இதற்கிடையில் நாட்டிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசராக இருந்த ஆனின் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் இறந்தார்.  அவரது பட்டதரசிக்கு குழந்தையில்லை.  ஆனால் ஒரு குத்துமதிப்பாக அரசருக்கு இருந்த 14 ஆசை நாயகிகளும் (வரலாற்று அறிஞர்களின் கணக்குப்படி) அவர்கள் மூலம் முறைதவறிய வழியில் பிறந்த (illegitimate) 14 பிள்ளைகளும் அரசாளும் தகுதி இல்லாததால் ஆட்சியுரிமையை இழந்தார்கள். இதனால் ஆனின் அப்பா ஜேம்ஸ் அரசரானார்.  இவர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதுடன் நில்லாமல் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணையும் மறுமணம் செய்திருந்தார்.

    புதிதாக பதவியற்ற அரசருக்கு ஒரு மகனும் பிறந்தான்.  இங்கிலாந்து மக்களும், பாராளுமன்றமும் ஒரு கத்தோலிக்க அரச குடும்பத்திற்கு அரசுரிமை போனதை விரும்பவில்லை.

    நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமை மணந்து சென்றுவிட்ட ஆனின் அக்கா மேரியை படையெடுத்து வரும்படி அழைத்தனர். பெரியமகளும் மருமகனும் படையுடன் வந்து இங்கிலாந்து மன்னரை நாட்டிலிருந்து துரத்தினர் (Glorious Revolution of 1688).  அரசி ஆன் தன் அக்காவிற்கு துணை போனதுடன் நிராதரவான தந்தைக்கும் உதவவில்லை.  மீண்டும் நாட்டில் புராட்டஸ்ட்டண்ட் மன்னராட்சியாக வில்லியமும் மேரியும் இணைந்து அரசாண்டனர்.  மேரிக்கு மூன்று கருச் சிதைவிற்குபின் குழந்தையே பிறக்காமல் போனது.  வாரிசற்ற அக்காவிற்குப் பிறகு தனக்கும் தன் சந்ததியினருக்கும் அரசுரிமை கிடைக்கக் கூடும் என்ற திட்டத்தினாலும் ஆன் தன் தந்தைக்கு உதவாமல் இருதிருக்கக் கூடும்.  எப்படியோ மகள்களின் துரோகத்தினால் அப்பா ஜேமேஸ் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து போனார்.   அம்மை நோய் தாக்கி தன் 32 ஆவது வயதில் அக்கா மேரி இறந்தார்.  அவர் கணவர் அரசர் வில்லியமிற்கு மறுமணத்தில் ஆர்வம் இல்லை.  எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் மனைவியைத் தொடர்ந்து அவரும் மறைந்தார்.  அவருக்குப் பின் ஆன் இங்கிலாந்தின் அரசியானார்.

    220px-Queen_Anne_and_William,_Duke_of_Gloucester_by_studio_of_Sir_Godfrey_Knellerஅரசி ஆன் ஒரு முறை இருமுறையல்ல பலமுறை கர்ப்பமுற்றார்.  சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 17 முறை கருத்தரித்தார். இவற்றில் 6 குழந்தைகள் இறந்தே பிறந்தன. அரசிக்கு 6 முறை கருச்சிதைவும் ஏற்பட்டது, அவற்றில் இரண்டு கருச்சிதைவுகள் இரட்டையர்களாகப் பிறக்க வேண்டிய கர்ப்பம். எனவே 8 குழந்தைகள் இவ்வாறு கருச்சிதைவு மூலம் உலகைப் பார்க்காமலே போய் சேர்ந்தனர். அரசியின் பிரசவங்களிலும் சில குறைப் பிரசவங்களாகப் போயின. அதனால் உயிருடன் உலகிற்கு வந்த குழந்தைகளில் 2 குழந்தைகள் பிறந்த இரண்டுமணி நேரத்திற்குள் இறந்து போயினர். மற்றும் 2 சிறுமிகள் அரசியின் கணவருக்கு அம்மை நோய் வந்தபொழுது, அந்நோய் அவர்களுக்கும் தொற்றி தங்களது இரண்டாவது பிறந்தநாளைப் பார்க்கமலே இறந்தனர்.

    மிஞ்சிய ஒரே ஒரு மகன் வில்லியமும் நாளொரு மேனியும் பொழுதொரு நோயுமாக, நோஞ்சானாக தீவிர மருத்துவ கவனிப்பில் வளர்ந்து வந்தான். அவனுக்கு உடல் நலக்குறைவுள்ள தோற்றமும் இருந்தது.  1700 ஆம் ஆண்டு தனது பதினொன்றாம் வயது பிறந்தநாளை கோலாகலமாய் ஆடிப் பாடி கொண்டாடினான்.  உடனே நோய்ப்படுக்கையில் விழுந்த இளவரசன் சிலநாட்களில் உயிரை விட்டான்.  சவப்பரிசோதனையில் அவன் மூளையில் நீர்கோர்த்திருந்தது (hydrocephalus)  தெரிய வந்தது.

    தன் 18 வயதில் திருமணம் செய்து கொண்ட அரசி ஆன் தன் 35 ஆவது வயதில் தனது வாரிசாக வந்திருக்க வேண்டிய 19 மக்கட் செல்வங்களையும் இழந்தார்.  முயற்சி திருவினையாக்கும் என்பது அரசியைப் பொறுத்தவரை குழந்தை பெறுவதில் பொய்த்துப் போனது.

    ஆனால் வில்லியமும் அரசி ஆனும், பாராளுமன்றத்தின் உதவியுடன் புராட்டஸ்ட்டண்ட் குல மன்னராட்சி மட்டுமே இங்கிலாந்தில் தொடரும்படி சட்டம் (Act of Settlement 1701) இயற்றினார்கள்.  இதனால் வாரிசற்ற அரசி ஆனுக்குப்பின் அவரது மாற்றாந்தாயின் மகன், கத்தோலிக்க கிறிஸ்துவரான அவரது சகோதரனுக்கு ஆட்சியுரிமை கிடைக்கவில்லை.  அரசாட்சியை மீட்க அந்த சகோதரன் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.   அவர்களின் தந்தை வழிப் பாட்டியின் வழிவந்த மற்றுமொரு ஒன்றுவிட்ட “ஹேநோவர்”  வம்ச (Hanover) புராட்டஸ்ட்டண்ட் சகோதரன் ஜார்ஜிற்கு அரசாட்சி கிடைத்தது.  அத்துடன் ஸ்டூவர்ட் வம்ச ஆட்சியும் இங்கிலாந்தில் முடிந்தது.

    முப்பத்துஏழாவது வயதில் பதவிக்கு வந்த பொழுதே அரசி ஆன் தன் குழந்தைகள் அனைவரையம் இழந்திருந்தார்.  பிறகு அடுத்த சில ஆண்டுகளில் கணவரும் நோயுற்று மறைந்தார்.  பன்னிரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்தாலும் அரசி ஆன் பதவியேற்ற அன்றே சீரழிந்த உடல் நலத்தினால் நடக்க முடியாமல் பல்லகில் தூக்கி வரப் பட்டார்.  இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளுக்கு நாள் அவர் உடல் நலம் மேலும் கெட்டு “கவுட்” (gout) நோய் முற்றி, அதனால் உடல் மிகவும் பெருத்துப் போய் நடக்கவே இயலாமல் போனார்.  சூடான இரும்பினால் சுடப்படுவது, உடலை ரத்தம் சிந்த செய்வது போன்ற சில குரூர மருத்துவத்திற்கும் ஆளானார்.  அவர் இறந்த பொழுது ஊதிப்போன உடலை அடக்கம் செய்ய சதுர வடிவ சவப்பெட்டி தேவைப் பட்டது.

    இங்கிலாந்து அரசிகளான விக்டோரியா, மேரி, எலிசபெத் போன்றோர் போற்றப் படுவது போல ஏனோ இவரது அரசாட்சிக்காகப் இவர் போற்றப் படவில்லை என்று கருதுபவர் உண்டு.  ஆனால் இவர் உடல் நலக்குறை வினால் அமைச்சர்களின் தாக்கம் ஆட்சியில் அதிகம் இருந்ததும் பாராட்டு கிடைக்காமல் போனதற்கு  ஒரு காரணம்.  அனைவரையும் இழந்தபின், உடல் உபாதையில் வருந்திய அரசி ஆன் கடைசிக் காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக மாறி கடவுளிடம் கவனத்தை மிகவும் திருப்பினார்.  தனது சந்ததிகள் அனைவரும் தனக்கு முன்னமே அழிந்து போனதற்கு காரணம் தான் தன் தந்தைக்கு செய்த துரோகமும், அதனால் தந்தை தனக்கிட்ட சாபத்தின் விளைவு என்றும் எண்ணினார்.

    அறிவியலும் மருத்துவமும் சொல்லும் காரணங்கள்; அரசி ஆனின் ரத்தம் Rh நெகடிவ் (Rhesus factor negative) வகை, அவரது கணவருக்கு Rh பாசிடிவ் வகை (Rhesus factor positive) என இருந்திருக்கக் கூடும்.   இதனால் நோயினை எதிர்ப்பது போல் அரசியின் உடலின் எதிர்ப்பு சக்தி Rh positive கொண்ட கருக்களை அழித்துவிட்டது.  இதே காரணம் இவர் அக்காவின் கருச் சிதைவுகளுக்கும் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

    ஆனால் இந்தக் காரணம் சரியல்ல என்பவரும் உண்டு.  இந்த எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு பிரசவத்திற்கு பிறகும் மோசமாகவே வாய்ப்புள்ளது.  ஆனால் அரசிக்கு ஏழாவதாக பிறந்த மகன் உயிருடன் இருத்திருக்கிறான்.  அதனால் இது சரியான காரணமாக இருக்கமுடியாது என்பது மறுப்பவர்களின் வாதம். மற்றொரு காரணமாகக் கூறப்படுவது, அரசிக்கு இருந்த தோலை சீரழிக்கும் “லூப்பஸ்” என்னும் தோல் சம்பந்தப் பட்ட நோயும் ( lupus erythematosus) அதன் விளைவாக தவறாக செயல் பட ஆரம்பித்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் (auto-immune disease).  இதன் விளைவாக அரசியின் கருக்கள் உடலுக்கு அன்னியம்மாக, சம்பந்தமில்லாதவைகளாகக் கருதப்பட்டுத் தாக்கி அழிக்கப் பட்டிருக்கக் கூடும் என்றும் “பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்” (British Medical Journal) ஆராய்சிக் கட்டுரை ஒன்று கருதுகிறது.

    அரச குலத்திற்கு கிடைக்காத மருத்துவ வசதியா?  இருந்தும் எதுவும் அரசிக்கும் அவர் குழந்தைகளுக்கும் பயன் படவில்லை.  தான் தந்தைக்கு இழைத்த பாவத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை என நம்பிய அரசியின் ஆன்மீக விளக்கமோ, அறிவியலின் ஆராய்ச்சி விளக்கமோ விதம் விதமாக பல காரணங்களைக் காட்டக் கூடும், ஆனால் வாரிசு இன்றி அவர் அல்லலுட்று மனம்  நொந்து உயிர் விட்டது மட்டும் உண்மை.

     

    வேண்டும் என்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பான்
    வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளி தருவான்
    ஆண்டவனார் திருஉள்ளதை யார் அறிந்தார் கண்ணே
    யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
    யார் அறிவார் கண்ணே …….
    — கண்ணதாசன்

     

     

    படம் உதவி:  விக்கிபீடியா

    நன்றி: வகுப்பறை

    Share
  • புரியாத புதிர்

     

    நடராஜன் கல்பட்டு

     

    “சாந்தா நாழியாச்சு.  நான் கெளம்பணும் ஆபீசுக்கு.  கார் ஷெட் கதெவெத் தெற.”

    “இதோ தெறக்கறேன்.”

    ஷெட் கதவு திறக்கிற சத்தம் கேட்கிறது.  கூடவே சாந்தாவின் அலறலும்.  “அய்யய்யோ….. இங்கெ பாருங்க.”

    “என்ன?”

    “ஒரு பையன் நம்ம விட்டு வாசலுலெ கெடெக்கறான்.  யாரு பெத்த புள்ளையோ பாவம்.  உடனே இவனுக்கு வைத்தியம் பாத்துக் காப்பாத்தணுங்க.”

    “கொஞ்சம் தண்ணி கொண்டா.”

    செம்பில் தண்ணி கொண்டு வருகிறாள் சாந்தா.  பையன் முகத்தில் சிறிது தண்ணீர் தெளிக்க அவன் மெல்ல கண்ணைத் திறக்கிறான்.  எனக்கு போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது.  கைத் தாங்கலாக அவனைப் பிடித்துத் தூக்கி வீட்டிற்குள் அழைத்துச் சென்று மடக்குக் கட்டிலில் படுக்க வைத்தேன்.  சாந்தா ஒரு டம்ப்ளரில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள்.  அதை அவனுக்குக் கொடுத்து குடிக்கச் சொன்னேன்.

    குடும்ப வைத்தியருக்கு போன் செய்து அவரை அவசரமாக வீட்டிற்கு வரச் சொன்னேன்.

    “என்ன விஷயம்?  யாருக்கு என்ன ஆச்சு?” கேட்டார் டாக்டர்.

    “நீங்க சட்டுனு வாங்க சொல்றேன்” என்றேன்.

    நல்லவர் அவர்.  உடனே வந்தார்.  விஷயத்தைச் சொல்லி கட்டிலில் படுத்திருந்த பையனைக் காட்டினேன்.  அவனை பரிசோதித்த டாக்டர் சொன்னார், “பட்டினி மயக்கம் தான் இது.  பையன் சாப்பிட்டு இரண்டு நாளாகி இருக்கும்.  சத்தான ஆகாரம் கொடுங்க.  சரியாயிடும்.  சார் கொஞ்சம் நீங்க எங்கூட வாங்க” என்றபடி என்னை வாசலுக்கு அழைத்துச் சென்றார்.

    “நீங்க என்ன காரியம் செஞ்சிருக்கீங்க?”

    “ஏன்?  நல்ல காரியந்தானே செஞ்சிருக்கேன்?  ஒரு சாக இருந்த உயிரெக் காப்பாத்தி இருக்கேன்.’

    “அப்பிடீன்னு நீங்க நினைக்கிறீங்க.  ஆனா போலீசு அப்பிடி நெனெக்காது அவன் ஒங்க வீட்டுள்ளெ வந்து மண்டெயெப் போட்டிருந்தான்னா அடுத்த ஆறு மாசத்துக்கு போலீசு ஸ்டேஷன், கோர்ட்டு, கேசுன்னு அலையணும் நீங்க.

    நீங்க என்ன பண்ணி இருக்கணும்?  அவன் மூஞ்சிலெ தண்ணி தெளிச்சு அவன் கண்ணெத் தொறந்ததும் போலீசுக்கு போனு போட்டிருக்கணும்.  இல்லே சர்க்கார் ஆசுபத்திரி ஏம்புலன்சுக்கு போனு போட்டிருக்கணும்.  சரி நடந்தது நடந்திடிச்சு.  அவனுக்கு ரெண்டு மூணு நாளு சத்தான ஆகாரம் கொடுத்து அவன் ஒடம்பு தேறினதும் அவன் எங்கெ போகணுமோ அங்க அனுப்ச்சி வையுங்க.”

    டாக்டர் போனதும் அவசர அவசரமாக கடைக்கு ஓடி ஹார்லிக்ஸ், பிஸ்கெட், ஆப்பிள், சாத்துக்குடி இவை எல்லாம் வாங்கி வந்தேன்.  சாந்தாவிடம் சொன்னேன் அவனுக்கு அப்பொப்பொ ஹார்லிக்ஸ் கரைச்சுக் குடு.  சாத்துக்குடி ஜூஸ் பிழிஞ்சு குடுன்னு.

    மறு நாள் காலை அவனுக்கு ஒரு டவலும், மாற்று உடையாக எனது ஒரு அரை நிஜார், டீ ஷர்ட், புதிய பனியன், புதிய உள் டிராயர் இவைகளையும், ஒரு சோப்பும் கொடுத்து குளிக்கச் செய்தேன்.

    மதிய உணவுக்கு வந்த போது பையனை விசாரித்தேன் என்ன ஏது என்று.

    “எனக்கு ஊரு மதுரைங்க.  எட்டங் கிளாசு பரீட்சையிலெ ஃபெயிலாயிட்டேன்.  அப்பாருக்குத் தெரிஞ்சா அடி பின்னீடுவாருன்னு பயந்து கிட்டு நானும் இன்னும் ரெண்டு பசங்களுமா வீட்டெ விட்டு ஓடி வந்துட்டோங்க.

    மெட்ராசுக்கு வந்ததும் ஒருத்தன் சொன்னான், ‘வாடா நாம விஜய வாடா போயிடலாம்.  அங்கெ எதுனா வேலெ பாத்துக்கலாம்’ னு.  சரீன்னு சென்ட்ரலு போயி விஜயவாடா வண்டிலெ தொத்திக் கிட்டோம்.  வித்தவுட்டு டிக்கெட்டுதான்.  எங்கெளெப் புடிச்ச டீடீஆரு விஜயவாடாலெ எறக்கி உட்டூட்டாரு.  டேசனுலெ பன்னெ வாங்கி சாப்டூட்டு ப்ளேட்பாரத்துலெ படுத்திருந்தோம்.

    காலேலெ முளிச்சுப் பாத்தா ரெண்டு பசங்களையும் காணும்.  கூடவே என்னோட பையுந்தான்.  அதுலெதான் வெச்சிருந்தேன் ஊட்டுலெந்து யாருக்கும் தெரியாமெ எடுத்துக் கிட்டு வந்த நூத்தம்பது ரூவாயும்.

    ரெண்டு நாளா சுத்தி அலயுறேன், சோறும் தின்னாமெ, எதுனா வேலெ கெடெய்க்குமான்னு.  இங்கெ இருக்குறவங்க பேசுறது எனக்குப் புரியலெ.  நான் பேசுறது அவங்களுக்குப் புரியலெ.”.

    எனக்கு உள்ளூர ஒரு ஆசை.  எனக்குதான் மகன் இல்லையே.  இவனை வீட்டோடு வைத்துக் கொண்டு படிக்க வைத்தால் என்ன என்று.

    “என்ன வேலையானாலும் செய்வெயா?”

    “செய்வேங்க.”

    “சரி அப்பொ நீ இங்கேயே இரு,  என் காரெத் தொடெ.  தோட்டத்துலெ இருக்குற புல்லெப் புடுங்கு.  செடிங்களுக்கு தண்ணி ஊத்து.”  (விட்டின் முன் புறம் 12 அடிக்கு 12 அடி அளவிலான நிலத்தில் ஒரு முசுக்கொட்டைச் செடி.  ஒரு மல்லிகை மற்றும் ஒரு அரளிச் செடி.  பின் புறம் அதே அளவிலான இடத்தில் ஒரு அவரைப் பந்தல்!)

    இரண்டு நாள் கழிந்தது.  பையன் நல்ல தெம்பானான் சாந்தாவின் கவனிப்பில்.

    “சார் நான் ஊருக்கே திரும்பப் போயிடலாம்னு முடிவு செஞ்சிருக்கேங்க.  ஒரு நூறு ரூவாக் குடுத்தீங்கன்னா……….”

    என்னது என் மனக் கோட்டை மணல் கோட்டையாயிடிச்சா?  ஒரு நல்ல காரியம் செய்யப் போறதா நெனெச்சேனே.  சரி.  எது எப்படி நடக்கணுமோ அது அப்படி நடக்கும்.  என்னைத் தேற்றிக் கொண்டேன்.

    “ஒன் கைச் செலவுக்கு முப்பது ரூவா தறேன்.  நாக்பூருலேந்து ஆரெஞ்சு எடுத்துக் கிட்டு மெட்ராஸ் போற லாரிங்க எங்க கம்பெனி பெட்ரோலு பம்புலெதான் டீசல் போட்டுக் கிட்டு கொஞ்ச நாழி தங்கீட்டுப் போவாங்க.  அவுங்க கிட்டெ ஏற்பாடு பண்ணி ஒன்னெ அனுப்பறேன்.  மெட்ராசுலேந்து மதுரைக்கு அவுங்க ஏற்பாடு பண்ணி அனுப்புவாங்க.  சரியா?”

    “சரி சார்.”

    இரவு சாப்பாடு முடிந்தது.  பையனுக்கு மறு நாள் வழியில் சாப்பிட நாலைந்து சப்பாத்தி செய்து நெய்யும் சர்க்கரையுமாகக் கலந்து சுருட்டி ஒரு பொட்டலம் தயார் செய்தாள் சாந்தா.

    இரவு பத்தரை மணிக்கு வீட்டருகில் இருந்த பெட்ரோல் பம்புக்கு அழைத்துச் சென்று மேனேஜர் மல்லா ரெட்டியிடம் விவரத்தைச் சொல்லி பையனை ஜாக்கிரதையாக லாரியில் ஏற்றி விடச் சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பினேன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டபடி.

    இரவு பன்னிரெண்டு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது.  அவசர அவசரமாகப் போய் அதை எடுத்தேன்.  ஊருலெ அம்மாவுக்கோ, இல்லே வேறெ யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போயிருக்குமோ?  கவலையோடு போனை எடுத்தால்………….

    போனில் மல்லா ரெட்டி.  “சார் லாரி பதினோரு மணிக்கு வந்துது.  நான் லாரி ட்ரைவரிடம் ஏற்பாடு செஞ்சிட்டு பையனை ஒப்படைச்சீட்டு பம்புக்கு வந்தேன்.  ட்ரைவரும் பையனை லாரியிலே உகாத்தீட்டு சாப்பிட்டு வரப் போனாரு.

    ட்ரைவரு பதினொண்ணரை மணிக்கு வந்தாரு.  அப்போலேந்து இங்கே பையனெத் தேடறோம்.  காணூம்.  ஒருக்கால் ஒங்க வீட்டுக்கே வந்திருக்கானோன்னு தான் போனு போட்டேன்.”

    “இங்கெ வரலியே.”

    “சார், பையன் பட்டினிலெ ஒங்க ஊட்டு வாசலுலெ உளுந்தது உண்மையா இருக்கும்.  அப்பால அவன் சொன்னதெல்லாம் கதெயா இருக்கும்.  வீட்டுலெ வெலெ ஒசந்த சாமானுங்க பத்திரமா இருக்கான்னு பாத்துக் கோங்க சார்.”

    இன்று வரை எனக்கு அந்தப் பையன் ஓடிப் போனது ஒரு புரியாத புதிர்தான்.

     

    பி.கு.  கதையல்ல இது.  நிஜம்.

     

     

    Share
  • மலை பெய்கிறது!

    அண்ணாகண்ணன்

     

     

     

     

    மலை பெய்கிறது என்றாய்.
    வெளியே எட்டிப் பார்த்தேன்.
    மேலே கருமலையென நின்றிருந்தது மேகம்.
    சிறு சிறு கற்களென
    மலை பெய்துகொண்டிருந்தது.
    அந்த அடியிலிருந்து தப்பிக்க,
    ஓடி ஒளிகிறார்கள் மக்கள்.

    =================================

    படத்திற்கு நன்றி: http://wallpaperdreams.com

    Share
  • வார ராசி பலன்: 08.07.2013 – 14.07.2013

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: அவ்வப்போது சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து மகிழ்வார்கள். கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டாரத் தொடர்பு லாபகரமாக இருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பிரயாணங்களில் சற்று கவனமாய் இருத்தல் நலம். வீண் செலவைக் குறைத்தால், பெண்கள் வேண்டிய காரியங்களுக்கு பணம் ஒதுக்கலாம். ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோ பாவம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய்த் திகழும். மேலும் வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை இதமாகச் சுட்டிக் காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள்.

    ரிஷபம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக்கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க, சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றிக் கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் உங்கள் பிரச்சினைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றியமைப்பதற்காக அதிகத் தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது. ஆசிரியர்கள் தரும் ஊக்கம், மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதால், ஆர்வத்துடன் பாடங்களைப் பயில்வர். குடும்பத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே பெண்கள் கோப தாபங்களைக் குறைத்துப் பொறுமையாய் இருங்கள். பணியில் இருப்பவர்கள் ஏனோதானோவென்று பணிகளைச் செய்யாமல், தகுந்த திட்டப்படி செய்தால், வீண் குழப்பங்களைத் தவிர்த்து விடலாம். வியாபாரிகள், வழக்குகள் தொடர்பாக அலைச்சல், மன உளைச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நெருக்கமான நட்பில் சிறு விரிசல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, கலைஞர்கள் இதமாக நடப்பது நல்லது.

    மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் வழிகாட்டுதலால், பெண்கள் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பர். பணியில் இருப்பவர்களின் அமைதியைத் தேவையற்ற இடமாற்றம் கெடுக்கலாம். மாணவர்கள் தங்களின் நட்பு கெடாமலிருக்க, நண்பர்களுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருங்கள். ஏற்ற இறக்கமான பொருளாதாரம் இருந்தாலும் கடும் முயற்சியால் வியாபாரிகள் நிலைமையைச் சமாளித்து விடுவர். சுய தொழில் புரிபவர்கள் முக்கியமான வேலையில் உங்கள் முழு கவனம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம். கலைஞர்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவான கால நேரம் வரும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது.

    கடகம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், தங்கள் நம்பிக்கைக்கு மேல் மற்றவரின் சந்தேகப் பார்வை விழாமல் பார்த்துக்கொண்டால், எந்தப் பணியும் சுமையாய்த் தோன்றாது.வியாபாரிகள் பண இருப்புக்கேற்றவாறு சரக்குகளை வாங்கிக்கொள்ளுதல் அவசியம். மாணவர்கள் குறுக்கு வழிகளில் சிந்தனையை அலைய விடாதிருந்தால், நாடி வரும் நன்மைகளைத் தக்க வைத்துக்கொள்ள இயலும். பெண்கள் உடல் நலத்தை நன்றாகப் பராமரித்தால், உற்சாகம் குறையாமல் பணிகளில் ஈடுபட முடியும். மற்றவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருப்பது அவசியம்.

    சிம்மம்: மாணவர்கள் உடனிருந்து தொல்லை தருபவர்களிடம், எச்சரிக்கையாய் நடந் துகொண்டால், எந்தத் தொந்தரவும் புதிதாய் முளைக்காமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்து வந்தால், அனைத்தும் சீராகவே நடக்கும். நினைவாற்றல் பெருகுவதால், மாணவர்களுக்கு தங்கள் வேலைகளை முடிப்பது சுலபமாக இருக்கும். பெண்கள் தேவையில்லாமல் அக்கம்பக்கம் பக்கத்தாரின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைஞர்கள் தீயவ ரை ஒதுக்கினால்,வளமான வாழ்க்கை அமையும். சக பணியாளர்களிடமிருந்து வேண்டிய ஒத்துழைப்பை பெற இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்.

    கன்னி: முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாகச் செயலாற்றி வந்தால், உறவுகள் உங்கள் அருகிலேயே இருக்கும். கல்வி தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாய் அமைவதால், மாணவர்கள் சுறுசுறுப்புடன் பாடங்களைப் பயில்வார்கள். வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்கள் வாகனம், தொடர்பான ஆவணங்களைக் கையிலேயே வைத்திருந்தால், வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அவ்வப்போது தோன்றும் சிறிய நெருக்கடிகளைத் தெளிவுடனும் திறமையுடனும் கையாள்வீர்கள். இந்த வாரம் சொத்துப் பிரச்சினைகளைச் சற்று ஆறப் போடுங்கள். உங்களுக்குச் சாதகமான நிலை மலரும்.

    துலாம்: வேலை செய்யும் இடத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள். வியாபாரிகள், வேலையாட்களை அரவணைத்துச் சென்றால், எடுத்துக்கொண்ட பணிகள் முழுமையாக நிறைவடையும். தொழில் ரீதியாகச் சில சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், கலைஞர்கள் தங்கள் உழைப்பால் வெற்றி பெற்று, தங்கள் பெயரைத் தக்க வைத்துக் கொள்வர். மாணவர்கள் புதிய இடங்களில், அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாய்ப் பழகவும். பெண்களின் விடா முயற்சியாலும், பொறுமையாலும், உறவுகளிடையே இருந்த பிணக்கும் சண்டையும் விலகி, சமரசம் மலரும்.

    விருச்சிகம்: பெண்கள் , பொருளாதார ரீதியாக, வாக்குறுதிகளை அளிக்கும் முன் யோசனை செய்வது நல்லது. ஒவ்வாமை தோன்றும் வாய்ப்பிருப்பதால், வயதானவர்கள் உணவு மற்றும் மருந்து விஷயங்களில் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அலுவலகத்தில் எவ்வளவுதான் பாடுபட்டாலும், சில நேரம் உங்களுக்கு வரும் நல்ல பெயரை மற்றவர் தட்டிக்கொண்டு போவார். வியாபாரிகள் இந்த வாரம் புதிய செலவுகளையும் முதலீடுகளையும் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. கலைஞர்கள் வங்கிக்கான கடன் தொகைகளை, குறித்த கெடுவுக்குள் செலுத்திவிட்டால், அபராதம் கட்டுதல், வீண் மன உளைச்சல் ஆகிய இரண்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

    தனுசு: இந்த வாரம் உறவுகளால் ஏற்படும் சிக்கல்களை பெண்கள் சாமர்த்தியமாகக் கையாள வேண்டிய சூழல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய வழக்கு விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும் வாய்ப்பு உள்ளதால், அமைதியாய் உங்கள் பணியில் கவனம் செலுத்தி வருவது புத்திசாலித்தனம். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளும், அதற்கேற்ற வரவுகளும் தாராளமாக இருக்கும். வியாபாரிகள் வெளியூர்ப் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கண்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தி வாருங்கள். தேர்வு நேரங்களில் படிப்பதில் எந்தச் சுணக்கமும் ஏற்படாது.

    மகரம்: மாணவர்கள் எந்தச் சூழலிலும், கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தால், அடுத்தவரின் சகாயம் குறையாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்கள் விருப்பு, வெறுப்புக்களைத் தேவையற்ற இடங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து விடவும். விடாமுயற்சி மூலமே விரும்பியதை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ளும் கலைஞர்களுக்கு வெற்றியோடு, வாய்ப்புகளும் பல வந்து சேரும். இந்த வாரம் பெண்கள் முழங்கால் வலி, பல் உபாதைகளுக்காக மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். எனவே அதிக அலைச்சல், குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்- இரண்டையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

    கும்பம்: பெண்கள் உறவுகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாமல் அளவாகப் பழகுவது பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். வியாபாரிகள் பணப் பரிமாற்றம், ஒப்பந்தங்கள் ஆகிவற்றில் எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். தனியார் துறையில் பணி புரிபவர்கள் நல்ல பெயரைப் பெறுவதற்கு கூடுதல் கவனமும், கூடுதல் உழைப்பும் தேவை. பிள்ளைகளின் விஷயத்தில் அதிகாரத்தை விட அன்பான வழிகாட்டல் அவர்களை நல்வழிப்படுத்த உதவும். பங்குகளை வாங்கி விற்பவர்கள் அதிக ஆசைப்பட்டால், பங்குச் சந்தையில் அதிகப் பணம் முடங்கி விடும். பயணங்களில் அறிமுகம் இல்லாதவரிடம் உங்கள் சொந்த விஷயங்களைப் பரிமாற வேண்டாம் .

    மீனம்: உங்கள் செல்லப் பிராணிகளால் அக்கம் பக்கத்தாருக்கு சில தொல்லைகள் உண்டாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். மாணவர்கள் பதற்றம், மறதி – இரண்டையும் தவிர்த்துவிட்டால், படிப்புல் உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற முடியும். பெண்கள் இல்லத்தில் தோன்றும் சிறிய உரசல்களை பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாய் நடந்துகொண்டால், அனைவரும் உங்கள் பக்கமே! கலைஞர்கள் தரமறிந்து நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தொல்லை ஏதும் தோன்றாது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் உங்கள் அக்கறை அவசியம்.

    Share
  • மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?

    சித்திரை சிங்கர்

    தமிழக மின்வாரியம் இப்போது ஒழுங்காக தங்கள் வாடிக்கையாளர்களின் (மக்கள்) நலனில் அக்கறையுடன் செயல் படுகிறதா என்றால் இல்லை என்ற குரல்தான் தமிழகம் எங்கும் ஒலிக்கும்..! கடந்த திடீரென இத்தனை வருடங்கள் அரசியல்வாதிகள் தங்களின் ஒட்டு வங்கி குறையகூடாது என்பதற்காக இதுவரையில் உயர்த்தப்படாத மின்கட்டணங்களை ஒரேயடியாக உயர்த்தி தங்கள் வாடிக்கையாளர்களை  வேதனைபடுத்தி மின்வாரியம் தனது வசூலை மேம்படுத்தியது. அனால் அடிக்கடி பவர் கட் ஆவதற்க்கு மின் உற்பத்தி முறையாக மேம்படுத்தப்படவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் ஒவ்வொரு ட்ரான்ஸ்பார்மர்களையும்  சரிவர பராமரிக்கதேவையான மாற்று உபகரணங்ககளும் இல்லை.  புதிய இணைப்புக்களுக்கு தகுந்தவாறு இப்போதுள்ள ட்ரான்ஸ்பார்மர்களை  மேம்படுத்தும் அக்கறை மின்வாரிய நிர்வாகத்துக்கு இல்லை.வெளிநாட்டு அலுவலகங்கள் புதியதாக திறக்க வைத்து புதிய இணைப்புக்களை சத்தமில்லாமல் பல இடங்களில் சலுகை கட்டணத்தில்  கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு உண்டான கட்டணங்கள் கூட சமீபத்தில் கூட தொலைக்காட்சி செய்தியில் மீண்டும் ஒரு யூனிட்டுக்கு 17 பைசா உயர்த்த போவதாக செய்தி வந்துள்ளது. விலைஉயர்வு தடுக்கப்பட முடியாது என்றாலும் இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரேயடியாக முட்டாள்கள் ஆக்குவதுதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாதாமாதம் நாம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு உரிய கட்டணத்தை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது 15ந்தேதிக்குள்  வசூலிக்கும் விதமாக செயல்படாமல் இரண்டு மாதத்துக்கு
    EB MEETER

    ஒரு முறை வசூலிப்பதால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிக கட்டணங்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. கேட்டால் மாதாமாதம் ரீடிங் எடுக்க மின் வாரியத்தில் தேவையான பணியாளர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இதற்க்கு பொதுமக்கள் பலியாவது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை.  மாத சம்பளம் வாங்கும் பொதுமக்கள்  எப்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களை செலுத்த முடியும்…?   அதுவும் அவ்வப்போது “டெபொசிட் கட்டணம்” என்று ஒரு கணிசமான தொகையினை சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள்..ஏற்கெனவே   கோடை வெயிலின் காரணமாக மின் உபயோகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தமாதமும் அடுத்தமாதமும் சம்பளம் முழுவதையும் மின்கட்டன்மாக செலுத்தவேண்டிய நிலையில் பொதுமக்களில் பலர் உள்ளனர். இத்தகு நிலைமை மாற வேண்டும்….!  இப்போதும், பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் மாதாமாதம் மின் கட்டணங்களை வசூலிப்பது போல தமிழகத்திலும், முன்னம் வசூலித்தது போலவே மீண்டும்  மாதாமாதம்  மின் கட்டணங்களை வசூலிக்க  மின்வாரியம் முன் வரவேண்டும். மாதாமாதம் சென்று மீட்டர் ரீடிங் எடுக்க தேவையான பணியாளர்கள் இல்லை என்றால் ரீடிங் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என்றாலும் பொதுமக்கள் வீடுகளில் மாதமாதம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கே கணக்கீடு செய்து இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வசூலிக்க மின்வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமா…? இப்போது புதியதாக பொருத்தபடும் புதிய “டிஜிட்டல் மீட்டர்கள்” துல்லியமாக மின் அளவை கணக்கிடும் என்று பார்த்தால், அவைகள் முந்தய அளவில் வீடுகளில் மின்சாரத்தை உபயோகித்தாலும் இந்த புதிய
    டிஜிட்டல் மீட்டர்கள் தனது கணக்கீடுகளை சுமார் 10 முதல்  20% அதிகமாகவே காட்டுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே….!பொதுமக்களின் நியாயமான உரிமைகளை மின்வாரியம் மதிக்க வேண்டும் அவர்கள் வசதிக்காக மக்களை “பலி கடா” ஆக்குவது நல்ல இல்லை….! மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(64)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிமையான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சியுறுகிறேன்.

    சின்னச் சின்ன சில்லறை விடயங்கள் பல எம் வாழ்வில் நாளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றைச் சில்லறை விடயங்களாக ஒதுக்கி விட்டு விட்டுப் போவோரும் இருக்கிறார்கள், மிகவும் பிரதானப்படுத்தி அல்லொகல்லோபப் படுவோரும் இருக்கிறார்கள், அவற்றிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையானவற்றை தெரிந்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

    இதுவே மனித வாழ்க்கையின் யதார்த்தம்.

    பண்பு என்பது மனித வாழ்க்கையில் மாபெரும் பங்கெடுக்கிறது. அப்பண்பு பலவிதமான வடிவங்களில் நம்மிடையே பரிணமிக்கின்றது.

    அப்பரிமாணங்களின் விளைவுகள் பலவிதமான வித்தியாசமான முடிவுகளுக்குள் எம்மைத் தள்ளுகின்றன.

    இங்கிலாந்திலே “ஸ்யின்பறீஸ் (Sainsburys)” எனும் சூப்பர் மார்க்கெட் பிரபல்யமானது. இங்கே நடந் ஒரு சுவாரச்ய சம்பவத்தை இன்று ஒரு பத்திரிகையில் படித்த போது இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

    அது என்ன என்கிறீர்களா? இதோ ,

    லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள “கிறேவோர்ட்(Crayford)” எனும் இடத்திலுள்ள இப்பிரபல்யமான சூப்பர் மார்க்கெட்டில் காஷியராகப் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணுக்கு வந்ததாம் கோபம் பாருங்கள் . . . .

    அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்கள் ?

    இவரது செக் அவுட் கவுண்டரில் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க வந்த ” ஜோ கிளார்க்” எனும் பெண் வாடிக்கையாளர் செல் போனில் யாரோடு உரையாடிக் கொண்டே இவரது செக் அவுட்டில் நின்றாராம் .

    செக் அவுட் கண்ணகி மதுரையை எரிக்கவில்லை இவ்வாடிக்கையாளரையே எரித்து விடுவதைப் போல பார்த்து ,

    செல்போன் தொடர்பைத் துண்டித்தால் தான் அவருக்கு தான் சேர்வ் பண்ணுவேன் என்று சொல்லி விட்டாராம் போங்கள் !

    வந்ததே ஆத்திரம் அந்த வாடிக்கையாளருக்கு சாதாரண செக் அவுட் பணியாளரான உனக்கு எனது தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கச் சொல்ல என்ன அருகதையிருக்கிறது என்று வெடித்து, பாய்ந்து சென்று அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினரிடம் முறையிட்டாராம் !

    பண்பாவது , மண்ணாங்கட்டியாவது எமக்கு எமது வாடிக்கையாளரின் பணமே முக்கியம் என்று எண்ணிய நிர்வாகத்தினர் அப்பெண் பணியாளருக்காக அவ்வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கோரினார்களாம்.

    ஆனால் விடயம் அத்தோடு நின்று விடவில்லை , அவ்வாடிக்கையாளரின் பண்பற்ற முறையைக் கண்டித்தும், அப்பெண் பணியாளரின் வைராக்கியத்தைப் பாராட்டியும் , அச் சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகிகளின் நடவடிக்கையைக் கண்டித்தும் இணையத்தளம் மூலமான கண்டங்கள் குவிந்து கொண்டிருக்கின்றனவாம்.

    இந்த செல்போன் தொடர்புகள் பற்றி நீங்களும் பல இடங்களில் அனுபவப்பட்டிருப்பீர்கள். எங்கு பார்த்தாலும் அனைவர் கைகளிலும் ஒரு செல்போன் ! அனைவரும் அதில் குறுஞ்செய்தி அனுப்புவதும், இணையத்தளங்களை வலம் வருவதும், சமூக வலைத்தளங்களில் சம்பாஷிப்பதும், பேசுவதும் என எப்போதும் குனிந்த தலை நிமிராமல் ( ஓ ! அது கூட பண்புதானோ ?) நடப்பதையே பார்க்கிறோம்.

    ஏறுபோல் பீடுநடை என்றவர் இன்றிருந்தால் அவரும் குனிந்த படிதான் நடப்பாரோ ?

    அது மட்டுமா? அன்று நான் காரில் போய்க் கொண்டிருக்கும் போது நடப்பவர் சாலையைக் கடப்பதற்கான ஒரு குரொசிங் ப்க்கத்தில் ஒரு நடுத்தர வயதான பெண்மணி அச்சாலையைக் கடப்பதற்குக் காத்திருக்கும் பாணியில் காதோடு பொருந்திக் கொண்ட செல்போனுடன் நின்றிருக்க , இங்கிலாந்து சாலை விதிகளுக்கமைய நானும் அவர் கடப்பதற்காக காரை நிறுத்தினேன். அப்பெண்மணிக்கு வந்ததே ஆத்திரம் பாருங்கள் . . . . .

    என்னைப் பார்த்துச் சீறும் பாணியில் கையைத் தூக்கி ” ஏன் நிற்கிறாய் ? போ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு . . . . . “ எனும் பாணியில் கையால் எனைப்பார்த்துச் சைகை காட்டினார்.

    சாலை விதிகளை நோவதா? செல்போனை நோவதா ? அப்பெண்ணை நோவதா ? இல்லை என்னத்தான் நோவதா ? என்று தெரியாமல் அசடு வழிய காரை நகர்த்தினேன்.

    புகையிரதங்கள் அல்லது பேரூந்துகளில் பயணம் செய்யும் போது முன்னும் பின்னும் உட்கார்ந்திருப்பவர்கள் சிலர் ஆங்கிலத்திலும், வேறு சில வெளிநாட்டுக்காரர் தமது மொழியிலும் ஏதோ தாம் தமது வீடுகளில் இருப்பது போல மிகவும் சத்தமாக சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பார்கள்.

    எனது அருகிருந்தவர் சூள் கொட்டவும் அடடா ! என்னைப் போல எண்ணும் மற்றுமொருவர் எனும் நப்பாசையில் நாம் அருகே திரும்பினேன் . . . ஜயகோ ! அவரது சூள் கொட்டலின் காரணம் என்ன தெரியுமா ? தான் குருஞ் செய்தி அனுப்பும் போது இவர்களின் பலத்த சம்பாஷணை தனக்கு இடையூரு செய்கிறதாம் . . . . . .

    மற்றொரு பக்கத்தில் அமர்ந்திருக்கும் மற்றொருவரோ தனது காதுகளுக்குள் செல்போனைப் பொருத்தி படல்களைக் கேட்டு ரசிக்கும் பாணியில் கண்களை மூடிக் கொண்டே தலையாட்டிக் கொண்டிருந்தார்.

    அனைத்தையும் பார்க்கும் போது எது பண்பு எனும் குழப்பம் என்னையே சூழ்ந்து கொண்டது. ஓ! நாம் தான் இடம் மாறி உட்கார்ந்து விட்டோம் இல்லைக் காலம் மாறி பிரந்து விட்டோம் என்று எனக்கு நானே சமாதானம் கூறிக் கொண்டேன்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

     

    Share
  • அறுமுகநூறு (20)

     

    சச்சிதானந்தம்

    murugaimages

    பாடிப் பணிந்து தொழுதிட மனமின்றி,

    ஊடித் துணிந்து உன்னை மறந்தவன்,

    தேடித் தொடர்ந்து மலரென உன்னை,

    சூடிக் கனிந்த மனங் கொண்டேனே!                                                                                  96

     

    மூடிய மனதுக்குள் முடிவற்று மலர்ந்து,

    ஓடிய மனதினை ஒருநிலைப் படுத்தித்

    தேடிய அமைதியைத் தெளிவுறக் கொடுத்துப்

    பாடிய எனக்குள் பரவசம் கொடுத்தான்!                                                                           97

     

    ஓரிச்சை பேரிச்சை உள்ளத்தில் ஆடும்,

    மூவிச்சை கடக்கும்முன் முருகனில் கலக்கும்,

    சீரிச்சை செவ்விச்சை ஆறாக ஓடும்

    பேரின்பப் பெருவிச்சை நிறைவேற்று வேலா!                                                               98

     

    நாவடியில் நாதன் பாவைச் சுமந்து,

    காவடியில் மயிலின் தோகை சுமந்து,

    ஈரடிகள் சிவக்கும் படியாய் நடந்து,

    இறைவனடி நாடி இன்பம் அடைவோம்!                                                                          99

     

    அசைவற்றுக் கிடக்கும் முதலை போல,

    ஆடிச் சலனம்கொள்ளா இதயம் கொண்டு,

    அகமும் அங்கமும் குகனில் ஒடுங்கி,

    அறுமுக ஒளியில் ஐக்கிய மாவோம்!                                                                              100

     

    (நிறைவுற்றது)

     

    Share