மலர் சபா
மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

madhavi and friend

“உலகில் உள்ள நிலைபெற்ற
உயிர்கள் எல்லாம்
தம் மனதை மகிழ்விக்கும் துணையோடு
புணர வைக்க வல்லவன் மன்மதன்.

இனிய இளவேனில் இளவரசன் என்பதனால்
அரசன் போல் எதையும்
நெறிப்படச் செய்வான் அல்லன்.

அந்த இளவலுக்குத் துணையாய்
மாலையாம் பொழுததனில்
யானையின் பிடரியில் ஏறி வருகின்ற
திங்கள் செல்வனும்
நடுநிலைமை உடையவன் அல்லன்.

புணர்ந்து மகிழ்ந்த காதலர் ஊடல் கொண்டு
சற்றே தம்முள் இடைவெளி கொண்டிருப்பினும்,
தகுந்த காரணம் கொண்டு
பிரிந்து சென்ற காதலர்
தம் துணைதான் மறந்து வாராதிருப்பினும்,
நறும்பூக்களால் செய்த அம்புகள் கொண்டு
தனித்து வாழ்பவரைத் தாக்கி நிற்பது
மன்மதனுக்கு வாடிக்கையான செயலேயன்றிப்
புதுமையான செயல் ஆகாது.
இதனைத் தாங்கள் அறிந்து
எமக்கு அருள்வீரே” என்றேதான் எழுதினள் மாதவி.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 56 – 63
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

படத்துக்கு நன்றி

http://tamilarivom.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.