Blog

  • தாம்பரத்தில் ஓர் இளம் குதிரை

    தாம்பரத்தில் ஓர் இளம் குதிரை

    தாம்பரம் வீதிகளில் குதிரைகளைக் காண முடிகிறது. நம் வீட்டருகே திரிந்த குதிரைக் குட்டியையும் அதன் குடும்பத்தையும் இங்கே காணலாம். இந்தக் குதிரைக் குட்டி, தலையைச் சிலுப்புவதையும் கனைப்பதையும் தாயிடம் பால் குடிப்பதையும் ஓடி விளையாடுவதையும் இந்தப் பதிவில் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்

    மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்

    https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/map

    https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/executive

    During the past 7 days, Mexico was shaken by 1 quake of magnitude 7.1, 3 quakes between 5.0 and 6.0, 44 quakes between 4.0 and 5.0, 172 quakes between 3.0 and 4.0, and 47 quakes between 2.0 and 3.0. There were also 50 quakes below magnitude 2.0 which people don’t normally feel.

    Damages in Acapulco, Mexico September 7, 2021

    Biggest quake: 7.1 quake North Pacific Ocean, 8 km south of Acapulco de Juarez, Guerrero, Mexico, Sep 7, 2021 8:47 pm (GMT -5) 4 days ago
    Biggest quake today: 4.4 quake North Pacific Ocean, 156 km southwest of Mapastepec, Chiapas, Mexico, Sep 12, 2021 3:32 am (GMT -6) 2 hours 22 minutes ago

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++++

    பூமகள் சற்று தோளசைத்தாள் !
    தாமாக வீழ்ந்தன
    மாளிகைகள் !
    மாந்தர் மரித்தார்
    சிதைவு களில்
    சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் !
    கடற்தட்டு
    தடம்மாறிக் கால் உதைத்தால்
    உடனே சுனாமி எழும் !
    பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும்
    பூகோள அச்சை !
    காலம் மாறும் ! பருவம் மாறும் !
    நாளின் நீட்சி குன்றும் !
    கனல் திரவம் அழுத்தமாகிக்
    குப்பெனப் பொங்கும் எரிமலைகள் !
    சூழ்வெளி
    பாழாய்ப் போக
    ஆழ்ந்த பூமிக் குள்ளும்
    ஊழல் தட்டுகள்
    சூழ்ந்துள்ள தப்பா !
    எங்கெங்கு வாழினும்
    இன்ன லப்பா !
    ஏழு பிறப்பிலும் மானிடர்க்கு
    தொல்லை யப்பா !
    ஊழிக் கூத்தின்
    பிரளய அழிவு அடுத்தடுத்து
    அரங்கே றுதப்பா !
    முடுக்கி விட்ட  பூகோளம்
    நடுக்கம் தரும் !
    ஊழியின் மேளம் !

    +++++++++++++++++++

    2021 செப்டம்பர் 7 இல் மெக்சிக்கோ நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம் பேரளவு கோரச் சிதைவுகளை உண்டாக்க வில்லை. அது நடுமைத் தர விளைவுகள் தரும் ஒரு பூகம்பமாய்க் கருதப்படுகிறது. அந்த நில நடுக்கம் அமெரிக்கத் தட்டுகளும், கோகாஸ் தட்டுகளும், [American and Cocos Tectonic Plates] ஆண்டுக்கு 65 மில்லி மீடர் நகர்ச்சி வீதத்தில் மோதியதால் உண்டானது.

    கடந்த நூறாண்டில் மெக்சிக்கோ தென்மேற்குப் பகுதியில் பல்வேறு ஆற்றல் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன. அவற்றில் 17 எண்ணிக்கை M 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆற்றல் உள்ளவை.

    2017 Central Mexico earthquake in México City.webm
    https://youtu.be/Z8JF2PthRkg

    2021 செப்டம்பர் 7

    https://www.msn.com/en-ca/news/other/dogs-used-in-quake-search-in-mexico-city/vp-AAsmEfJ

    2017 செப்டம்பர் மாதத்தில் மெக்சிக்கோ நாட்டில் அடுத்தடுத்து இருபெரும் பூகம்பங்கள் நேர்ந்து, மெக்சிக்கோ நகரிலும், சுற்றியுள்ள மற்ற நகரங்களில் உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் பேரளவில் விளைந்துள்ளன.  முதலில் செப்டம்பர் 7 ஆம் தேதியில் 8.1 M அளவு அசுரப் பூகம்பம் சியாபாஸ் கடற் பகுதியைத் தாக்கியுள்ளது.  100 பேர் மாண்டனர்.  பன்மாடி அடுக்கு மாளிகைகள், வீடுகள் பற்பல நொறுங்கித் துண்டாக்கப் பட்டன. அது நேர்ந்து இரண்டு வாரத்திற்குள் [செப்டம்பர் 19 இல்] 400 மைல்  தூரத்தில் [650 கி.மீ.] 7.1 M அளவில் அடுத்த பூகம்பம் தாக்கி 342 பேர் மாண்டனர். 6000 பேர் காயமுற்றனர்.

    1985 ஆண்டில் மெக்சிக்கோவில் முன்பு நேர்ந்த பூதப்பெரும் பூகம்பத்தில் 10,000 பேர் உயிரிழந்தார்.  அது முதல் மெக்சிக்கோ அரசாங்கம் பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சி பொது மக்களுக்கு அளித்து வருகிறது. 2017 செப்டம்பர் 19 தேதிப் பூகம்ப எழுச்சிக்கு 2 மணிநேரத்துக்கு முன்னர்தான் விந்தையாக எச்சரிக்கைப் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறது.

    தீக்கனல் வளையத்தில் [Ring of Fire] சிக்கியுள்ள உலக நாடுகளில், ஜப்பான், பெரு, மெக்சிக்கோ, இந்தோனேஷியா ஆகிய நான்கு நாடுகளிலே அடிக்கடி பூகம்ப நடுக்கங்கள் நேர்ந்து, உயிர்ச் சேதமும், பொருட் சேதங்களும் பேரளவு விளைந்து வருகின்றன. இவற்றில் மெக்சிக்கோ நாடு மட்டும் குறுக்கிடும்  மிகவும் சிக்கலான பல்வேறு பிறழ்ச்சித் தட்டுகள் [Tectonic Plates] மீது அடிக்கடி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

    Earthquake 5 km ENE of Raboso, Mexico, 2017.jpgImage result for North American and Pacific Tectonic Plates

    பசிபிக் தட்டு, கோகோஸ் தட்டு, ரிவேரா தட்டு, கரீபியன் தட்டு, வட அமெரிக்கன் தட்டு ஆகிய ஐந்து பிறழ்ச்சித் தட்டுகள் அடிக்கடித் தாலாட்டும் மிதப்புப் பகுதியாக மெக்சிக்கோ நாடு பள்ளி கொண்டுள்ளது.  இந்த ஐந்து கரத் தட்டுகள், வெவ்வேறு திசைகளில் இயங்கி, நில நடுக்கம் உண்டாக்கி நாள் ஒன்றுக்குச் சராசரி 40 பூகம்பங்கள் நேர்கின்றன !

    மெக்சிக்கோ நகரம் மெதுமணல் [Soft Soil with Sand] கொண்ட காய்ந்த ஏரிப்படுகை மீது  வீடுகள் நிறுவப்பட்டுள்ளது. ஆதலால் நில நடுக்க சமயங்களில் சேதாரம் பேரளவு உண்டாகிறது.   பூகம்பம் ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு [செப்டம்பர் 28 இல்] குறைந்தது 333 பேர் உயிர் இழந்ததாகத் தெரிகிறது.  சுமார் 5400  பேர் காயப் பட்டனர்.  ஆயினும் 38 நபர் இன்னும் காணப்பட வில்லை.

    Image result for mexico tectonic platesImage result for mexico earthquake damage

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 32

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 32

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகியல் வாழ்க்கைக் கூறே உவமம்

    முன்னுரை

    ‘முகத்தைப் பாரு! இஞ்சித் தின்ன கொரங்காட்டும்!’, ‘முழிக்கிறத பாரு! திருடன தேள் கொட்டுன மாதிரி!’, ‘அசைஞ்சு வர்றதப் பாரு எருமை மாடு மாதிரி’, ‘எப்படிப் பேசறா பாரு? தேன் ஒழுகிற மாதிரி’ என்னுமாறு அமைந்த பேச்சுக்களைக் கேட்காதவர்கள் இதுவரைப் பிறக்காதவர்களே!. ‘முகம் குரங்கு மாதிரி இருக்கிறது’ என்றால் முகம் என்ன கவிதையா? ‘திருடன தேள்கொட்டுன மாதிரி’ என்றால் தவறு செய்தவன் கீர்த்தனையா? ‘எருமை மாதிரி அசைந்து வருகிறான்’ என்றால் வருகிறவன் செய்யுளா? ‘தேன் மாதிரி பேசுகிறாள்’ என்றால் அவள் என்ன பாடலா? அவர்களெல்லாம் மனிதர்கள். இந்தப் பேச்செல்லாம், இந்த உவமங்கள் எல்லாம் வாழ்வியலில் நாளும் காண்பன. நாளும் கேட்பன. ‘வாழ்க்கையின் எதிரொளியே இலக்கியம்’ என்பது உண்மையாயின் உவமங்கள் வாழ்வியல் விளக்கங்களாகவே இருக்க முடியுமேயன்றிக் கவிதைக்கு அழகு சேர்க்கிற ஒன்றாகவோ செய்யுளுக்கு அணியாகவோ ஆகவே முடியாது. இது தமிழ் மரபு. தமிழ்க்கவிதை மரபு. தமிழ்க்கவிதைகளின் உவமக்கோட்பாட்டின் தலையாய கொள்கை.

    மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்

    தமிழ்க்கவிதைகளில் உவமக்கோட்பாடுகள் என்பது தொல்காப்பியம் சார்ந்ததும் அதனையொட்டிய காலமுறை வளர்ச்சியுமாகும். இதிலிருந்து ஓர் ஆய்வுண்மையை நம்மால் பெற முடியும். அதாவது ‘தொல்காப்பியத்தில் இவ்வாறு இருந்து வந்த இவ்வுவமநெறி பிற்காலத்தில் இன்னின்னவாறு மாறியிருக்கின்றன’ என்று கண்டறிவதுதான் அந்த உண்மை. அதாவது ஆய்வு என்பது மேலிருந்து கீழாக வரவேண்டுமேயன்றிக் கீழிருந்து மேலாகச் செல்லுதல் அல்நெறி.  அதுதான் ஆய்வு நெறி.

    அண்மையில் ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் பெயருடைய ஒரு நூலினைக் கற்கும் வாய்ப்பு கிட்டியது, அந்த ஆய்வு நூல் உவமம் பற்றியது. அந்த ஆய்வறிஞர் என்ன சொல்லுகிறார்? சங்க இலக்கியத்தில் நிரல் நிரை அணி இருந்தது என்கிறார். தொல்காப்பிய உவமக் கோட்பாடுகள் அனைத்தும் அகத்திணை மரபினைச் சார்ந்தவை என்பது இக்கட்டுரைத் தொடரின் தொடக்கப் பதிவுகளில் வலிமையான சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளன. அந்த அறிஞர் சொல்லுவதில் உள்ள முரண்களைப் பின்வரும் பகுதியில் காணலாம்.

    தொல்காப்பிய உவமக் கொள்கையும் அணிகளும்

    மெத்த படித்த மேதைகள் எல்லா அணிகளையும் உள்ளடக்கித்தான் தொல்காப்பியம் உவம அணியைச் சொல்கிறது என்கின்றனர். எனவே “உவமை ஏனைய அணிகளுக்குத் தாய்” எவ்வளவு பொருத்தமில்லாத கருத்தியல் இது? திருமணம் ஆகிய பெண்ணொருத்திக்குத் தனக்கு நாற்பத்து மூன்று பிள்ளைகள் பிறக்கும் என்று அவ்வளவு துல்லியமாகத் தெரியுமா என்ன? தொல்காப்பியர் அணியிலக்கண கருத்துடையார் அல்லர். உரையாசிரியர்கள் சிலர் அந்தக் கருத்தினை உடையவர் என்பது அவர்தம் உரைகளால் பெறப்படும். காரணம் மூலத்திற்கும் உரைகளுக்குமான காலம் 1500 ஆண்டுகள் இடைவெளி என்பதை மறக்கக் கூடாது. இந்த இடைவெளியில் அணியிலக்கணக் கொள்கை தோன்றி வளர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அதனைத் தனியாகச் சொல்லி விளக்கும் தனித்தமிழ் இலக்கண நூல் தமிழில் இல்லை. பிறமொழிக் கலப்பின் காரணமாக அமைந்தது தண்டியலங்காரம். அது வடமொழியின் ‘காவ்ய தரிசனம்’ என்பதன் தழுவல். இலக்கியத் திறனாய்வில் மேல்நாட்டுத் திறனாய்வுக் கொள்கையை வைத்துக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்ததும் மதிப்பீடு செய்ததும் எவ்வாறு அல்நெறியோ அதுபோன்றதுதான் இதுவும்.

    தமிழில் துறை பகுப்பு

    தொல்காப்பியத்திற்குப் பின்னால் வந்தவை சங்கத் தமிழ் இலக்கியங்கள் என்றால் தொல்காப்பிய நெறிப்படித்தான் துறை வகுத்திருக்க வேண்டும். அகநூல்களுக்குத் தொல்காப்பியத்தையும் புறப்பாடல்களுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையும் கொண்டு துறைவகுத்தது அடிமுரண். பிந்தைய இலக்கியப் பாடல்களுக்குத் துறை பொருத்தமில்லை என்றால் ‘துறை கண்டிலது’ என்று விட்டுவிடுவதுதான் செந்நெறி. எதனையும் எதிலும் திணிக்க எத்தனிப்பதும் தடுமாறுவதும் தமிழ் இலக்கிய உலகம் கண்டுவரும் அவலநிலையே. பல இலக்கண நூற்பாக்களுக்கு உரையாசிரியப் பெருமக்கள் எடுத்துக்காட்டுக்கள் கிட்டாது ‘வந்துழி கண்டு கொள்க’ என்று கூறியிருப்பதுதான் சரியான நெறி.

    “நிரல் நிறை உவமை “உவமைகள் ஒன்றன்பின் ஒன்று அடுக்கிக் கூறப்படுகின்றன. அவற்றை அடுத்து அதே முறைவைப்பில் பொருள்களும் அடுக்கிக் கூறப்படுகின்றன. இதனை நிரல் நிறை உவமை என்று தொல்காப்பியம் கூறும்.

    நிரல் நிறுத்தமைத்தல் நிரல் நிறை –(தொல். சூ.309) ஒழுங்காக முறை பிறழாமல் அமையும் உவமை அடுக்கினை நிரல் நிறை எனவும், மாறி மயங்கி வருவனவற்றை மயக்க நிரல் நிறை எனவும் கூறுவர்.’ சங்க இலக்கியத்தில் முன்னதே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.’

    இந்தப் பகுதியில் நிரல் நிறை அணி என்று தொல்காப்பியம் கூறும் என்பது தொல்காப்பியத்தில் எங்கும் காணாதது. ஒரு கருத்தினை நிரல் நிறையாகக் கூறுவது வேறு. அதனை அணியாக்கி அழகு பார்ப்பது வேறு. முன்னது தானாக அமைவது. பின்னது திட்டமிட்டுக் கட்டமைப்பது. அது மட்டுமன்று ‘மயக்க நிரல் நிறை என்றும் கூறுவர்’ என்று யாரோ ஒருவர் மேல் பழிபோடுவதையும் காணமுடிகிறது. ‘நிரல் நிறுத்து அமைத்தல்’ என்பது தனி நூற்பாவன்று. ஒரு நூற்பாவின் பகுதி. உவமங்களை அடுக்கிக் கூறுவது ஏற்புடையது அன்று எனக் கூறும் தொல்காப்பியர் மூன்றனுக்கு விதிவிலக்கு தருகிறார். அடுக்கிக் கூறுவது என்றால் ஒரு பொருளை மற்றொரு பொருளோடு உவமித்து உவமித்த அதனையே மீளவும் இன்னொன்றோடு உவமிப்பது ‘காக்கை குயில் போல இருக்கும்., குயில் கரிபோல் இருக்கும்., கரி கரடிபோல் இருக்கும் என்று அடுக்கிக் கொண்டே போவது உவமத்தின் பொருளுணர்த்தும் ஆற்றலை சிதைத்துவிடுமாதலின் இவ்வாறு கூறுவது ஏற்புடைத்தன்று என்பதுதான் தொல்காப்பியம் கூறவரும் கருத்து.

    “வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம், வெண்சங்கின் வண்டிலங்கு தாழை வளர்கோடு”

    என்னும் பேராசிரியர் தரும் எடுத்துக்காட்டும் இதனை விளக்கும். எனினும் இதற்கான விதிவிலக்கைத் தொல்காப்பியம் அனுமதிக்கிறது. நிரல்நிறுத்து அமைத்தல், நிரல்நிறை, சுண்ணம் ஆகிய மூன்றும் அல்லாதவிடத்து அடுக்கிவருதல் ஏற்புடைத்தன்று (இம்மூன்றில் மட்டும் அடுக்கி வரலாம்) என்பது தான் நூற்பாவின் கருத்து. இனி இந்த நூற்பாவை இரண்டு நூற்பாக்களாகக் கொண்டும் உரை வகுத்திருக்கின்றனர். இந்த நூற்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பேராசிரியர்,

    “இனி அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது, அணியென்ப வாயிற் சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் வேறுகண்டாற்போல அவ்வணியும் செய்யுளின் வேறாகல் வேண்டும் என்பது”.

    என்னும் விளக்கம் உவமத்தைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளுதல் ஆகாது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலே சில பத்திகளில் செய்யப்பட்ட ஆய்வு, பொதுவாக உவமங்களைச் சுவைக்கும் நெறியையும் குறிப்பாகச் சங்க இலக்கிய உவமங்களைச் சுவைக்கும் நெறியையும் வரன்முறை செய்வதற்கே. உவமம் என்பது செய்யுளுக்கானது அன்று. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் போலச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று அன்று. கவிதை படர்க்கையில் அமைந்தால் கவிஞனுக்கானது. கவிதை பாத்திரங்களினால் அமைந்தால் தொடர்புடைய பாத்திரத்திற்கானது. அதனால்தான்,

    “கிழவி சொல்லின் அவளறி கிளவி
    தோழிக்காயின் நிலம் பெயர்ந்து உறையாது” (தொல். உவம. 26)

    “கிழவோட் காயின் ஈரிடத்து உரித்தே” (தொல். உவம. 29)

    எனத் தொல்காப்பியம், உவமத்திற்கான மாந்தர்களை அடையாளப்படுகிறது. இனி ஆய்வு என்பது மேலிருந்து கீழாக வருதலன்றிக் கீழிருந்து மேலாகச் செல்வதன்று. பல நூற்றாண்டுகளுக்குப் பின் பல காரணங்களால் தோன்றியதொரு  பிறமொழி சார்ந்த அணியிலக்கண நூலில் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்ட இலக்கியத்தைச் சுவைப்பதற்கான வழிமுறைகளைத் தேடுவது ஆய்வு நெறியன்று.

    வேறுபாடு தெரியாத வேழம்

    வரலாறுக்கு முந்தையது தொன்மம். ஆனால் வரலாற்றுக் காலத்தில் கண்டறியப்பட்டது. வாழ்வோடும் வாழ்வின் நம்பிக்கையோடும் கலந்தது. இரவுக்குறிக்கு அல்லற்படும் தலைவனை வரைவு கடாவி, அவன் ஒப்புதலைத் தலைவிக்குத் தோழி சொல்லுகிறாள். தலைவனுடைய நாட்டைப் பற்றிய வண்ணனையை உவமத்தால் கூறும் தோழி, கையிலாய மலை எடுக்கலாற்றாது உழன்ற இராவணனைப்போல  மரவேங்கையை மறவேங்கையெனக் கருதிக் குத்திய தன்னிரு தந்தங்களை எடுக்கலாற்றாது மலையதிரும் வண்ணம் உழற்றிய யானைகள் நிரம்பிய நாட்டுக்குத் தலைவன் என்கிறாள்.

    “இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
    உமை அமர்ந்து உயர் மலை இருந்தன்ன ஆக
    ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
    தொடிப் புலி தடக்கையின் கீழ்புகுந்து அம்மலை
    உழக்கல் செல்லாது உழப்பவன் போல
    உறுபுலி ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
    கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மதயானை
    நீடு இரு விடர் அகல் சிலம்பக் கூய் தன்
    கோடு புக்கல்லது உழக்கும் நாட!” (குறி. கலி. 2)

    இராமகாதை கம்பனால் பாடப்பெற்றிருந்தாலும் அவருக்கு முன்பே உலகம் தழுவிய அளவில் இராமகாதை புழக்கத்தில் இருந்ததும் சங்க இலக்கியங்கள் உட்பட்ட தமிழிலக்கியங்கள் பலவற்றிலும் அது பற்றிய குறிப்புக்கள் பரவலாகக் காணக்கிடக்கிறது என்பதும் இலக்கிய வரலாறு எடுத்துக்காட்டும் உண்மை. இந்த உண்மையைத்தான் கபிலர் படைத்த தோழி தலைவிக்குக் கூறுகிறாள். அதாவது தானறிந்த உலக வழக்கை உவமமாக்குகிறாள்.

    “ஆர் இடை என்னாய் நீ அரவஞ்சாய் வந்தக்கால்
    நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
    கார் பெற்ற புலமே போல் கவின் பெறும்
    இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்
    பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை
    அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்
    மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்
    அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள் வைகறை
    திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்” (குறி.கலி. 2)

    என்னும் தாழிசைகளில் தலா இரண்டு வீதம் ஆறு உவமங்களைக் கூறுகிறாள். எதிர்மறையில் மூன்று உடன்பாட்டில் மூன்று என்று. பல்வகையான இடர்ப்பாடுகளுக்கிடையே தலைவன் வந்து தலைவியைக் காண்பதை நிரல்படுத்திய தோழி, அவன் வருகையால் தலைவியிடம் ஏற்படும் மாற்றங்களை உவம அளவையால் விளக்கிக்காட்டுகிறாள். தலைவன் வராவிடின் அவள் படும் வேதனைக்கும், வந்தால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கும் தனித்தனியாக மூன்று உவமங்களைக் கூறுகிறாள். தலைவன் வராவிடின்,

    1. நீரற்ற புலமாகிறாள் தலைவி
    2. பொருளில்லான் இளமைபோல் கழிகிறது அவள் பருவம்
    3. அறம் செய்யாது அகவையால் மூத்தவனின் மூப்பாகிறது அவள் வாழ்வு.

    இதற்கு மறுதலையாக அவன் வருகையினால்,

    1. கார் பெற்ற புலமாகிறாள் தலைவி
    2. அருள் வல்லான் ஆக்கம் போல் மேனி செழிக்கிறாள்
    3. திறம் சேர்ந்தான் செல்வம்போல் பொலிகிறது அவள் அழகு.

    தலைவி தலைவனால் புரக்கப்பட வேண்டியவள். அன்றி இல்லறம் கடைபோகாது. தலைவன் இல்வழி நீரற்ற புலமானவள் அவன் உள்வழிக் கார் பெற்ற புலமாகிறாள். ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’. இளமைப் பருவத்தை விதந்தோதியதற்குக் காரணம், அதன் காலம் மிகக் குறைவு என்பதே. தலைவனால் ஆளப்படவேண்டிய தலைவியின் இளமை நலம் அவன் இல்வழி வறுமையில் சிக்கிய இளமையாக வீணாகக் கழிய, அவன் உள்வழி ஒப்புரவு அறிந்தவன் செல்வம் போல் வளர்கிறது என்பதாம். ‘செல்வத்துப் பயனே ஈதலாதலின்’ தலைவன் இல்வழி மனம் மொழிய காயங்களால் அறம் செய்யாதவன் அடையும் மூப்பைப் போலப் பயனற்று வீணாகிய அவள் வாழ்வு தலைவன் உள்வழி, அறம் செய்தான் செல்வம் போல் பொலிவு பெற்று வளர்ந்ததாம். இந்த வரிகளில் வாழ்வியலில் செய்யக் கூடாத நெறிகளும் செய்ய வேண்டிய அறங்களும் உவமங்களாக அமைந்துத் தலைவனின் காதல் சார்ந்த கடமையுணர்வினைக் குறிப்பாக உணர்த்தினமை காண்க.

    வண்ணனையில் காட்டும் வாழ்வியல் உவமங்கள்

    தலைவன் தலைவியோடு உடன்போக்கு மேற்கொள்கிறான்.   அவர் சென்றதை அறியாத செவிலி நடுக்குற்று நடந்த உண்மைகளை நற்றாயிடம் கூறுகிறாள். சுரம்போகிய செவிலி வழிச்செல்வாரிடம் தலைவன் தலைவி பற்றி வினவ, அவர்கள் தலைமக்களைக் கண்டதாகக் கூறும் பகுதி. தலைமக்கள் சென்ற பாலை நிலம் இப்படி இருக்கிறதாம்,

    “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்
    சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
    யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல்
    வேரோடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்
    அலவுற்றுக் குடி கூவ ஆறு இன்றிப் பொருள் வெஃகி
    கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
    உலகுபோல் உலறிய உரம் வெஞ்சுரம்”  ( பாலை. கலி. 9)

    முந்தைய பாட்டில் கபிலர் குறிஞ்சியிலிருந்து பாலையைச் சிந்தித்தார். இந்தப் பாட்டில் கடுங்கோ பாலையிலிருந்தே பாலையைச் சிந்திக்கிறார். அவர்கள் இருவர் மனத்திலும் பாலையின் கொடுமையைவிட வறுமையில் இளமைதான் முன்னிற்கிறது. இளமையிலேயே வறுமையுற்றவன் போலத் தளிர்கள் வாடிய கொம்புகளை உடையனவாக மரங்கள் நின்றன. கொடுத்தற்கு மனம் இல்லாதவனுடைய (சிறுமனம் கொண்ட கருமி) செல்வம், தன்னைச் சேர்ந்தார்க்குப் பயன்படாதவாறு போலத் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நிழலின்றி இருந்தன. யாவரிடத்தும் ஒழுக்கத்தைக் கடந்துத் தீங்கு செய்பவனின் புகழ்கெட்டு, இறுதிக் காலத்தே அவன் சுற்றத்தார் மட்டுமன்றி அவனும் கெடுவான். அதுபோல் கதிரவனின் கதிர்கள் சுடுதலினால் கிளைகள் மட்டுமன்றி, மரங்கள் வேரொடு வெம்பி நின்றன. இவையெல்லாம் புறக்காட்சிகள். நெறிமுறை இன்றி வரி தண்ட, அது கொடுக்க வழியில்லாத அரற்றிய மக்களைக் கொலையால் தண்டிக்கும் கொடியவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் கொடுங்கோலன் காலத்தில் அருள் நிழல் அறியா நாடு போல உலர்ந்து போன பாலையாம்.

    வைரமுத்து பாடலும் வழிவழி மரபும்

    இத்தகைய பாலைவழிச் சென்று விட்ட மகளை எண்ணி மருகும் செவிலிக்குக் கண்டோர் ஆறுதல் கூறுகின்றனர். அந்த ஆறுதலில் ஆறுதல் இருக்கிறது. தேறுதலும் இருக்கிறது. நடப்பியல் உண்மையும் இருக்கிறது. அவை உவமங்களாகவும் இருக்கின்றன. பொதுமக்கள் கவனத்திற்கு ஆளான வைரமுத்தின் திரையிசைப் பாடல்களில் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருப்பதைக் கண்டிருக்கலாம்.

    ‘சிப்பிக்குள் முத்து வந்தாலும் சிப்பிக்குச் சொந்தம் ஆகாது!’

    வைரமுத்து நகலெடுத்தார் என்பதல்ல கருத்து. இந்தச் சிந்தனையின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உண்மை. வைரமுத்து கையாண்டிருக்கும் இந்த உவமத்திற்கும் திரைக்கதையில் பாடல் இடம்பெறும் சூழலுக்கும் என்ன பொருத்தம் என்பது தனி விவாதத்திற்கு உரியது. ஆனால் தோன்றிய இடம் என்பதாலேயே தோன்றிய பொருள் அவ்விடத்திற்கு உரிமையானதன்று என்பது ஒரு நடப்பியல் உண்மை. இந்தக் கருத்தியல் மரபுவழிச் சார்ந்தது.

    ‘பலவுறு நறுங்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்கவைதான் என் செய்யும்?

    சீர் கெழு வெண்முத்தம் அணிபவர்க்கல்லதை
    நீருளே பிறப்பினும் நீர்க்கவைதான் என் செய்யும்?

    ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
    யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதான் என்செய்யும்” (பாலை.கலி. 8)

    மகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் செவிலிக்குக் கண்டோர் கூறும் ஆறுதல் மொழியில் மலையில் தோன்றியும் மலைக்குப் பயன்படாத சந்தனம், நீருள் தோன்றி நீருக்குப் பயன்படாத முத்து, யாழுள் தோன்றி யாழுக்குப் பயன்படாத யாழிசை என்னும் நடப்பியல் சார்ந்த வாழ்வியல் உண்மைகளை உவமங்களாகக் கூறுகின்றனர். பெண்ணுக்குப் பிறந்த வீடு நிலையானதன்று. அது அவள் வந்து போகும் நந்தவனம். புகுந்த வீடே நிலையானது. ஒரு மரபினின்றும் மற்றொரு மரபிற்கு வேராகும் விந்தையை வித்தையாகச் செய்து காட்டுபவள் பெண். அந்த உண்மையை விளக்க, கண்டோர் கூறும் மூன்று உவமங்களும் தலைவியின் உடன்போக்கை நியாயப்படுத்துவது மட்டுமன்று, செவிலியின் மனச் சங்கடத்தையும் போக்கும் மருந்தாக அமைந்துவிடுவதைக் காணலாம்.

    நிறைவுரை

    இதுகாறும் செய்யப்பட்ட இவ்வாய்வுச் சுருக்கம் உவமம் பற்றிய சில  உண்மைகளை முன்னெடுக்கிறது. முன்பே கூறிய வண்ணம் இலக்கியம் என்பது வாழ்வின் எதிரொளியாக இருந்தால் வாழ்வியலின் அத்தனைக் கூறுகளும் அதனுள் இடம்பெற்றிருக்க வேண்டும். உவமம் செய்யுளுறுப்பு அல்ல. தமிழ் மக்களின் இந்த மண்ணின் வாழ்வியல் கூறு. எனவே தமிழ்க்கவிதைகளின் பெரும்பாலான உவமங்கள் இந்த அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. இனி, எல்லாப் படைப்புக்களுக்கும் படைப்பாளர்களுக்கும் இக்கோட்பாடு பொருந்துமா எனின் நிச்சயம் பொருந்தாது. சுரதா உள்ளிட்ட மரபுக்கவிஞர்களும் அப்துல் ரகுமான் உள்ளிட்ட புதுக்கவிதை எழுதுவோரும் அழகியலுக்காகவே சில இடங்களில் உவமங்களைப்  பயன்படுத்தியுள்ளனர். இது தனி ஆய்வுக்கு உரியது.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(367)

    குறளின் கதிர்களாய்…(367)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(367)

    உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தாற் கள்வே மெனல்.

    – திருக்குறள் – 282(கள்ளாமை)

    புதுக் கவிதையில்…

    குற்றங்களைத் தம்
    நெஞ்சால் நினைத்தல் கூடத்
    துறந்தோர்க்குத்
    தீராத பாவமாகும்..

    அதனால்
    அடுத்தவன் பொருளை
    அவன் அறியாமல்
    கள்ளமாய்க்
    கவர்ந்திடலாம் என்று
    கருதற்க…!

    குறும்பாவில்…

    துறவியர் குற்றங்களை நெஞ்சில்
    நினைப்பது கூடப் பாவச்செயல் என்பதால்,
    பிறர்பொருளைக் கவர்ந்திடக் கருதவேண்டாம்…!

    மரபுக் கவிதையில்…

    முற்றும் துறந்த முனிவோரும்
    முறையைத் தவறிச் செயல்படாதே
    குற்ற மதனை நெஞ்சினிலே
    கொண்டே நினைத்தல் பாவமாமே,
    மற்றோ ரறியா வகையினிலே
    மறைந்தே யவர்தம் பொருட்களையே
    முற்றாய்க் கவர்ந்து கொண்டிடவே
    முயற்சி கொள்ள வேண்டாமே…!

    லிமரைக்கூ…

    குற்றமதை நினைக்கும் உள்ளம்
    கூடாது துறந்தோர் கென்பதால் வேண்டாமே
    பிறர்பொருள் அபகரிக்கும் கள்ளம்…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் கள்ளத்தனம்
    வாழ்க்கயில வேண்டாம் கள்ளத்தனம்,
    அடுத்தவன் பொருள
    அபகரிக்கிற கள்ளத்தனம்
    வேண்டவே வேண்டாம்..

    தவறியும் தவறுகள
    மனசால நெனச்சாலே
    பெரும்பாவம் தொறவிகளுக்கே..

    அதுனால
    அடுத்துவன் பொருள
    அவனுக்குத் தெரியாமக்
    களவாடுற வேலயே வேண்டாம்..

    தெரிஞ்சிக்கோ,
    வேண்டாம் வேண்டாம் கள்ளத்தனம்
    வாழ்க்கயில வேண்டாம் கள்ளத்தனம்,
    அடுத்தவன் பொருள
    அபகரிக்கிற கள்ளத்தனம்
    வேண்டவே வேண்டாம்…!

    Share
  • பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள்!

    பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள்  தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    புதுமைக்கவிஞர், புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான்  பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய் பாடிநின்றார். பொறுக்கும் இடத்தில் பொறுத்தார். பொங்கும் இடங்களில் பொங்கிப் பிரவாகித்தார். தலைகுனிந்து வாழுவதை தரக்குறைவாய் நினைத்தார். தலை நிமிர்ந்துவாழ தான் எழுதி நின்றார். காலத்தின் குரலாக அவரின் கருத்துகள் எழுந்தன. வீரமும், மானமும், ரோஷமும், உணர்ச்சியும், அவரின் சொத்துக்களாய் அமைந்தன. சிறுமை கண்டு சீறினார். வறுமைகண்டு பொங்கினார். அடிமையென்னும் சொல்லை வாழ்வில் அகற்றிவிட எண்ணினார். சுதந்திரமாய் மூச்சுவிட துணிந்து பல கூறினார். பக்தியைப் பேசினார். பண்பினைப் பேசினார். புத்தியைத் தீட்டிட புகட்டினார் பலவற்றை. வையத்துள் வாழ்வாங்கு வாழுவதை விரும்பினார். தெய்வத்தை நம்பினார். நல்ல நம்பிக்கைகளுக்கு வரவேற்பளித்த பாரதி மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணியடிக்கவும் தவறவில்லை. திருந்திய வாழ்வும் சிறப்பான சமூகமும் அமைய வேண்டும் என்னும் பேரவா பாரதியின் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் அதை நோக்கிய அவரின் செயற் பாடுகளும்  அவரின் சிந்தனையால் வந்த பல படைப்புகளும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    எந்த நாடென்றாலும் எந்த மொழியென்றாலும் காலத்தின் போக்குக்கு இணங்கவே இலக்கியம் அமைகிறது எனலாம். 19-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியத்துக்கும் 20-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியக்கியத்துக்கும் பல நிலைகளில் வேறுபாடுகளைக் கண்டுகொள்ள முடிகிறது எனலாம். முந்தைய நூற்றாண்டு இலக்கியம் வரட்சியைக் காட்ட பின்னர்வந்த நூற்றாண்டு இலக்கியப் போக்கு வளமுள்ளதாக அமைந்ததற்கு காலமே காரணமெனலாம். இலக்கியம் என்பது காலத்தின் கருத்தாகாவே மலர்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அமிசம் ஆகும்.

    அரசர்களும், பிரபுக்களும் பெற்றிருந்த செல்வாக்கை பொதுமக்கள் பெறும் நிலை இந்தநூற்றாண்டில் ஏற்பட்ட காரணத்தால் இலக்கியமும் அதன் படைப்புகளும் பொதுமக்களை மையப்படுத்தியே அமைவதைக் கண்டு கொள்ளுகிறோம். பொதுமக்களின் வாழ்க்கை, குறிக்கோள், இன்ப துன்பங்கள், அவர்களது முன்னேற்றத்துக்கு குறுக்காக நிற்கும் சாதிக் கொடுமை, சமுதாயக் கட்டுப்பாடு, என்பவற்றை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு புதுப்பாதையில் பயணிக்கும் இலக்கியம் பழைய இலக்கிய மரபுகளைவிட்டு விடுதலை பெறவேண்டியதாயிற்று.அந்த விடுதலையை இக்கால இலக்கியத்துக்கு அளித்தவராக பாரதியார் விளங்குகிறார் எனலாம். பழைய இலக்கிய மரபுகளை விடுதலை அடையச் செய்த பாரதி பழமையின் சிறப்பினை விட்டுக் கொடுத்தாரில்லை என்பது முக்கியமாகும். பழமையின் சிறப்பினை பாரதியார் எடுத்துப்பாடிய அளவு வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் – இந்தியரின் – பழைமைச் சிறப்பை எடுத்துப்பாடவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    பாரதநாட்டு பழைய நாகரிகமும் மேனாட்டு புதிய நாகரிகமும் இந்தியாவில் சங்கமித்துக் கொண்டிருந்த காலத்தில் பிறந்தவர்தான் பாரதியார். இதனால் மேல்நாட்டு நாகரிகத்தில் காணப்பட்ட நல்ல அம்சங்களை தமிழ் மக்களும் ஏற்பது நல்லது என்னும் கருத்து பாராதியார் உள்ளத்தில் ஏற்படலாயிற்று. அதேவேளை மொழி, தமிழ் இனம், பாரதநாடு, பெண்ணுரிமை, சாதிபற்றிய ஏற்றத்தாழ்வு, முரண்பாடுகள், வறுமையின் நிலை, இவை பற்றிய கருத்துக்கள் அவரின் உள்ளத்தில் உரம்பெற்றும் இருந்தன எனலாம். இந்த நிலையில் பாரதியாரிடம் இருந்து வெளிவந்த படைப்புகளும் பன்முக நோக்குடையன வாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத்தக்கதே.

    பாரதியார் ஒருபக்கம் பார்த்தவர் அல்ல. அவரின் நோக்கு பரந்து விரிந்தது. அவரின் படைப்புகளும் பலதிறப்பட்டன.தெய்வத்தைப் பாடுவார். தேயத்தைப் பாடுவார். சாதியைப் பாடுவார். சன்மார்க்கத்தைப் பாடுவார்.பெண்மையைப் பாடுவார். மனிதர்க்குத் தேவையான உண்மையை பாடுவார்.முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தைப் பாடுவார்.பாப்பாவுக்கும் பாடினார். படித்தவர்க்கும் பாடினார். பாமரர்க்கும் பாடினார். கவிபாடி ஓயாத பாரதியார் கதைகளும் எழுதினார். கட்டுரைகளும் எழுதினார். புதுக்கவிதை என்னும் வழியிலும் பயணம் செய்தார்.அத்தோடு நிற்காமல் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதித்தார்.இப்படிப் பார்க்கையில் பாரதியையும் அவரின் படைப்புக்களையும் பன்முக நோக்கில்த்தான் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது எனலாம்.

    தேசிய கீதங்கள், பக்திப் பாடல்கள், ஞானப்பாடல்கள், பல்வகைப் பாடல்கள், தனிப் பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலிசபதம், குயில்ப் பாட்டு, வசன கவிதை , புதிய பாடல்கள், யாவும் பாரதியார் எமக்களித்த சொத்துக்கள் எனலாம். இவைகள் ஒவ்வொன்றுமே பாரதியாரை யாரென்று அடையாளப் படுத்தி நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம். பாரதியார் பழமையைப் போற்றினார். முன்னோர்களை மதித்தார். கம்பனை , வள்ளுவனை , இளங்கோவை , உயரிடத்தில் வைத்துப் பார்க்கிறார்.  வள்ளுவன் தன்னை உலகினிக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவை போற்றுகிறார். கம்பனைப் போற்றுகிறார். ஆனால் அவர்கள் போல் பாடாமல் அவர்கள் போல் நில்லாமல் அதேவேளை அவர்களை மனமிருத்தி அவர்களை வழிகாட்டி என எண்ணி தன்னிலையை வகுத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ப தனது படைப்புக்களை அளித்திருப்பதால் பாரதியார் பெரும்புலவராய் மதிக்கப் படுகிறார் எனலாம். பாடுவதில் புதுமை. கையாளும் சொற்களில் புதுமை. எடுத்தாளும் உவமைகளில் புதுமை. சொல்லும் பாவடிவங்களில் புதுமை.இவைகள் பாரதியின் படைப்புகளின் சிறப்புகள் எனலாம்.

    பாரதியின் படைப்புகள் பலதிறப்பட்டனவாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொருவகையில் சிறப்பினை உள்ளடக்கி காட்டுகின்றன.ஒவ்வொரு படைப்பினையும் பன்முக நோக்கில் நோக்கினால் இக்கட்டுரை பெருநூலாகி விடும் என்பதனால் எடுத்துக் கூறக்கூடிய விடயங்களை மட்டும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.பாரதியின் படைப்புகளை நோக்குவதற்கு முன்னர் அவருக்கு முன்னிருந்த தமிழ்க் கவிதைகளை படைப்புக்களை நோக்குதல் வேண்டும். பாரதியின் படைப்புக்களை நோக்கும்வேளை பாரதிக்குமுன் பாரதிக்குப் பின் என்று வகுத்தல் சிறப்பாகும்.பாரதிக்கு முன் ஆசிரியப்பாக்கள், வெண்பாக்கள், செல்வாக்குற்று இருந்தன.பின் விருத்தம் வந்து நின்றது.இவை பாரதியின் முன் இருந்த நிலை. பாரதிகாலத்தில் கண்ணிவகைகள் கரைபுரண்டோடிய காலம் எனலாம். சிந்தும் பாரதியின் சொந்தமாகிக்கிடந்தது.பாரதியின் பின் பல கவிஞர்கள் பாரதியைப் பின்பற்றி பாரதிவழி சென்றார்கள். பாரதி தொடக்கிய புதுக்கவிதை , வசன கவிதை , இன்று பலராலும் பின்பற்றப் படுகிறது என்பதும் பாரதியின் படைப்புத் திறனின் விளைவு எனலாம்.

    பாரதியாரின் ஆளுமையால் பலபடைப்புகள் வெளிவந்தாலும் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு , குயில்ப்பாட்டு , பாரதி அறுபத்தாறு , விநாயகர் நான்மணிமாலை , வேதாந்தப் பாடல்கள் , தோத்திரப்பாடல்கள் , ஆத்திசூடி , முரசு , பாப்பாப்பாட்டு , சமூகம் , வசனகவிதை  யாவராலும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்த படைப்புகளாகி நிற்கின்றன. இப்படைப்புகள் வழியே இதுவரை தமிழில் இல்லாத வடிவிலும் பொருளிலும் பல புதிய இலக்கிய வகைகளைப் பாரதி பெற்றெடுத்து வழங்குகிறார் எனலாம்.பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் ஏக்கம், கோபம், ஆக்ரோஷம்,கேலி , கிண்டல், அறிவுரை ஆவேசம் அனைத்தையும் காணுகிறோம். ” என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் – என்றெம தன்னைகை விலங்குகள் போகும் ” என்று ஏங்கிய ஏக்கம் தீர அடிமைத் தளையிலே வீழ்ந்து கிடக்கின்ற பாரதத்தாயினை விடுவிக்க மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற ஏக்கமே பாஞ்சாலி சபதமாய் பாரதியாரால் படைக்கப்பட்டது.பாரதியின் உணர்ச்சியின் வடிவமாய் அமைந்த படைப்பே பாஞ்சாலி சபதமாகும். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பக் கூடிய மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருபவர் நம் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவபவர் ஆகின்றார். ஓரிரண்டு வருஷம் நூல் பழக்கம் உடைய தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காப்பியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமல் எழுதுதல் வேண்டும்.தமிழ் சாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே இத்தொழிலில் என்னைத் தூண்டினாள்” என்று பாரதியாரே கூறுவதிலிருந்து அவரின் பாஞ்சாலி சபதம் என்னும் படைப்பின் உன்னதம் புலப்பட்டு நிற்கிறதல்லவா?

    தமிழரின் அரசியல்- பொருளியல்- நோக்கிலும் இந்த நூற்றாண்டின் வரலாற்று நோக்கிலும் சிறப்பான இடம்பெறும் கவிதைகள் பாரதியின் தேசீய கீதத்தினுள்ளும் சுயசரிதையுள்ளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். கவிதாதேவி அருள் வேண்டல், காலனுக்குரைத்தல், க தற்பாட்டுக்கள், அந்திப்பொழுது, வேய்ங்குழல், வள்ளிப்பாட்டு, அம்மாக்கண்ணு பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, என்று பல படைப்புகள் பல்சுவைதரும் வகையில் பாரதியின் சிந்தனையாக வந்தமைகின்றன.

    பாரதியின் படைப்புகளை நோக்கும்பொழுது புரட்சிவழிப் பொதுமையை வரவேற்றமையும், வடிவத்தில் புதுக்கவிதை என்னும் இலக்கிய வகைக்கு வித்திட்டமையையும் காணமுடிகிறது.பாரதியார் படைப்புகளில் சமதர்மவாதக் கருத்துகளும் கம்யூனிஸ வாதிகளும் வரவேற்கப்படும் அதே வேளை கடவுள் பற்றியும் பாடுகிறார். தெய்வத்தை முழுசாகவே நம்புகின்றார். இவை இரண்டும் முரண்பட்டு இருந்தாலும் இப்படிப் பாரதியாரின் படைப்புகள் பல நோக்கில் அமைந்தமைக்கு அக்கால சூழலும் அக்கால அரசியல் தலைவர் களுமே பாரதியாரின் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் எனலாம். விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் தெய்வபக்தியில் திளைத்தவர் களாக விளங்கியதால் பாரதியாரின் சிந்தனையின் அவரின் நோக்காய் படைப்புகள் மூலமாய் வெளிப்பட்டது எனலாம்.

    பாரதியால் படைக்கப்பட்ட உரைநடைப் படைப்புகளை நோக்கும் பொழுது தருக்க முறை, திறனாய்வு முறை, வருணனை முறை, விளக்கமுறை, எடுத்துரை முறை, சொற்பொழுவு முறை, தத்துவ முறை, எள்ளல் முறை, என்னும் பன்னோக்கினைக் கண்டு தெளியலாம். பாரதி என்னும் கவிஞன் முரண்பாடுகள் உள்ளவனாய் படைப்புகள் மூலம் பார்க்க முடிகிறது. ஆங்கிலக் கல்வியை வெறுக்கிறான். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கிறான். ஆனால் ஆங்கிலக்கவி ஷெல்லியை மனமிருத்தி “ஷெல்லிதாசன்” என்ன்னும் புனை பெயரில் பாப்புனைகிறான்.

    தெய்வத்தை நம்புகிறார். பராசக்தியிடம் வேண்டுகிறார். சரஸ்வதியிடம் வேண்டுகிறார். ஆனால் சாத்திரங்கள் எனக்கூறி சமூகநீதிக்கு எதிராய் வருவதை மூர்க்கமாய் எதிர்க்கிறார். “சாத்திரங்கள் ஒன்றுங்காணார் – பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே” என்றும், “உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்” “பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்” என்றும் “சூத்திரனுக்கொரு நீதி – தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லுமாயின் – அது சாத்திரம் மன்று சதியென்று கண்டோம்” என்று பாரதியார் நிற்கும் நிலை அவரின் படைப்புகளின் பன்முகமாய் தெரிகிறது அல்லவா?

    பாரதியாரின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து நோக்கினால் அங்கு பன்முகங்கள் தென்படுவதைக் கண்டுதெளியலாம். அவரின் படைப்புகள் பன்முக நோக்கினையே பறைசாற்றி நிற்கின்றன என்பதை நுணுகிப் பார்க்கும் வேளை கண்டு கொள்ளலாம். கடவுளரைப் பாடுகிறார். பராசக்தியின் உபாசனா தெய்வமாகவே தெரிகிறது. பாரதியாருக்கு முன்னர்வந்த பக்திப்பாடல்கள் சிவலோகம் பற்றியும் வைகுந்தம் பற்றியும் காட்டி நிற்க பாரதியார் படைப்பின் நோக்கு வேறுவிதமாய் அமைகிறது. தானும் நலமுற வாழவேண்டும் நாட்டு மக்களும் நலமுற வாழவேண்டும். அதற்காகவே தெய்வத்திடம் முறையிடும் புதுமை நோக்கு இப்படைப்பின் பால் வெளிப்பட்டு நிற்கிறது. “எண்ணில்லாத பொருட்குவைதானும் ஏற்றமும் புவியாட்சியும் தருவன் இன்றென தன்னையென் காளி மண்ணில் யார்க்குந் துயரின்றிச் செய்வேன், வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்று பாரதியாரின் வேண்டுகோளைக் காட்டி நிற்கும் இப்படைப்பின் நோக்கு பரந்து பட்டதாய் சுயநலம் அற்றதாய் விளங்குவது புலப்பட்டு நிற்கிறதல்லவா?

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்னும் நம்பிக்கை பாரதியாரின் படைப்புகள் வாயிலாக வெளிப்பட்டு நிற்பதைக் கண்டு பெருமிதம் கொள்ள வேண்டும். “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சம் இல்லை” இது நம்பிக்கையின் உச்சம்! “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா – தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு தீங்கும் வரமாட்டாது பாப்பா” உற்சாகமூட்டும் உரம்! “ரெளத்திரம் பழகு” , “தையலை உயர்வு செய்”, “தொன்மைக்கு அஞ்சேல் , “போர்த்தொழில் பழகு”, நேர்படப்பேசு” , “வெடிப்புறப்புறப் பேசு”, இவை ஊக்க மருந்தாகும். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா” இவ்வாழ்வினை அனுபவித்துவிடு என்று காட்டும் பெருவெளிச்சம்.

    பாட்டுப்பாடியதும் கட்டுரை கதை எழுதியதும் ஊடகத்துறையில் இருந்ததும் என்றெல்லாம் பாரதியின் படைப்பின் பன்முகம் வெளிப்பட்டாலும் அத்துடன் அச்சிந்தனை நின்றுவிடவில்லை. தமிழ் அறிவியலுடன் இணைதல் வேண்டும் என்னும் பன்முக நோக்கும் புலப்பட்டு நிற்கிறது. “புத்தம் புதிய கலைகள் பஞ்சப் பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் – மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”, இங்கு பாரதியின் படைப்பின் வாயிலாக தெரிகின்ற பன்முகங்கள்தான் பாரதியாரையும் அவரது படைப்புகளையும் இன்றுவரை உயர்வுடன் பார்க்க வைக்கிறது எனலாம்.

    Share
  • தென்பழனி ஆண்டவா – பிரேமா நாராயணஸ்வாமி

    தென்பழனி ஆண்டவா – பிரேமா நாராயணஸ்வாமி

    ‘வேல்பிடித்த கையிலே கோல்பிடித்து நின்றவா, தென்பழனி ஆண்டவா’ எனத் தண்டாயுதபாணியை, திருக்குமரனை மனமுருகப் பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. 77 வயதிலும் தானே இயற்றி, இசையமைத்து, கணீரெனப் பாடும் இவரது கானத்தைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓர் எளிய யோசனை – 11

    ஓர் எளிய யோசனை – 11

    பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் பாதையை நீங்களே அமைத்துக்கொள்ளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ கணேஷா சரணம்

    பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ கணேஷா சரணம்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 4

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘ஸ்ரீ கணேஷா சரணம்’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். நான்மறை போற்றும் பிரணவ ரூபனை வணங்கி, அருள்பெற வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூலாதார மூர்த்தி | பாபநாசம் சிவன்

    மூலாதார மூர்த்தி | பாபநாசம் சிவன்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 3

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘மூலாதார மூர்த்தி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். துன்பம் துடைத்துப் பேரின்பம் தரும் வரதனை வணங்கிப் போற்றுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருணகிரிநாதரின் ‘கைத்தல நிறைகனி’

    அருணகிரிநாதரின் ‘கைத்தல நிறைகனி’

    அருணகிரிநாதர் அருளிய, திக்கெட்டும் புகழும் திருப்புகழை அலங்கரிக்கும், ‘கைத்தல நிறைகனி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனை வணங்கி, அருள்பெறுங்கள். 4K தரத்தில் அமைந்த இந்தப் பதிவைக் கண்டு, பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு  ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

    எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

    தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’களை வெல்லும் நூல்கள் பற்றிய விபரங்களை தற்போது இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

    அவற்றுள் ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம்’ எனும் பிரிவில் இலங்கை ஊடகவியலாளரும், எழுத்தாளருமான  எம். ரிஷான் ஷெரீபின் ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

    வம்சி பதிப்பக வெளியீடான ‘அயல் பெண்களின் கதைகள்’ நூலில், சிங்கள மொழியில் எழுதி வரும் இலங்கையின் முக்கியமான பெண் எழுத்தாளர்களான சுநேத்ரா ராஜகருணாநாயக, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, கத்யானா அமரசிங்ஹ,  மனுஷா பிரபானி திஸாநாயக்க, சந்தனி ப்ரார்த்தனா ஆகியோரின் சிறுகதைகள் எம். ரிஷான் ஷெரீபால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்தன. ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் இந்த நூலுக்கு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான ‘இந்திய வாசகசாலை விருது’ம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

    Share
  • உளவியல் வாசிப்பு நோக்கில் ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள்

    உளவியல் வாசிப்பு நோக்கில் ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள்

    முனைவர் சு. செல்வகுமாரன்
    இணைப்பேராசிரியர்,
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
    E. mail- mugadu.kumaran@gmail.com
    Cell – 9442365680

    ஜெயந்திசங்கர் தமிழகத்தில் மதுரையில் பிறந்து தந்தையின் பணி காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து இன்று சிங்கப்பூரில் வசித்து வருபவர். நாவல், சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என ஏராளமான படைப்புகளை தமிழுலகிற்கு தந்தவர். இவரின் படைப்புகளைப் போலவே சீனத்து இலக்கிய மொழிபெயர்ப்பான மிதந்திடும் சுய பிரதிமைகள் என்னைக் கவர்ந்த ஒரு அற்புதமான நூலாகும்.  இவரின் ஐந்தாவது நாவலான திரிந்தலையும் திணைகள் ஒரு சமூகத்திற்குள்ளாக அல்லது ஒரு குடும்பத்திற்குள்ளாக, தனிமனிதன் ஒருவன் திருமணம், பாலியல், வேலை, பண்பாடு, அயலகக் குடிபெயர்வு, காதல், மொழி, உறவு, நட்பு, ஆண், பெண், குழந்தை, முதுமை, இளமை, எனும் வேறுபாடுகளின் அடிப்படையில் சந்திக்கும் அடுக்கடுக்கான நெருக்கடிகளை எடுத்துரைக்கின்றன.

    பத்மா, பத்மாவின் அப்பா, கதிர், சரவணன், சரவணனின் தந்தை சுப்பையா, ரேணு, ரேணுவின் முதல் கணவன் ரவி, இரண்டாவது கணவன் மாதவன், ரேணுவின் மகன் நவீன், ரேவதி, ரேவதியின் அம்மா, அப்பா, செந்தில், கவிதா, கதிரின் மனைவி மீனா, மீனாவின் காதலன், கவிதா, கவிதாவின் கணவன், பாலா, கவிதாவின் அம்மா, அருள், டேவிட், அமட், அர்ச்சனா, லீலிங், தர்ஷினி, உள்ளிட்ட பாத்திரங்களின் மூலம் பிரச்சனைகளை அவர் மிக நுட்பமாக வெளிப்படுத்து கின்றார். இயல்பான கதாபாத்திரங்கள் என்பன இதில் ஒன்றிரண்டேயாகும். மற்றபடி யாவும் ஜெயந்திசங்கர் அவர்களால் தீவிரமான மனநலம் (உளவியல்) பிரச்சனைக்குரிய பாத்திரங்களாகவே திட்டமிட்டு தேர்வுசெய்து படைக்கப் பட்டிருப்பதை உணரமுடிகிறது. இது ஒருவகையில் எல்லா மனிதனும் ஏதோ ஒரு நிலையில் மனச்சிக்கலுக்கு உள்ளாகக் கூடியவன்தான் என்பதை குறிப்பாக உணர்த்துவதாகக் கூட இருக்கலாம்.

    தமிழில் தொடர்ச்சியாக குறிப்பாக ஈழத்து, புலம்பெயர் நாவல்களை அதிகம் வாசித்து வருபவன் என்ற நிலையில் ஒப்பிட்டு நோக்கும் போது, அவைகளில் கூட ஒரே நாவலில் இத்தகைய தனிநபர் மனநெருக்கடிசார் பாத்திரங்களை யாரும் படைத்த்தாகத் தெரியவில்லை. ஆக அந்த வகையில் இது உளவியல் நோக்கில் முற்றிலும் பிற நாவல்களில் இருந்து வேறுபட்ட ஒரு நாவல் என்பதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

    புதினத்தின் கதைக்களம் சிங்கப்பூர், புனே, மும்பை, சென்னை, தில்லி என பல பெருநகரங்களை மையமிட்டு விரிகிறது. சில கதாபாத்திரங்களின் மூலம் வாழ்வியலின் பல நெருக்கடியான புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் நாவலின் இறுதிப்பகுதியில் கவிதா ஏற்படுத்திய சலனத்தினால் தூண்டப்பட்ட சரவணனின் நினைவுகள், அவனிடையேயும் ஒரு பேராசைவை ஏற்படுத்தி விடுகின்றது. நாவலின் இறுதிப்பகுதியில் சரவணன் தன் மாமி மகளான கவிதா வீட்டிற்கு செல்கிறான். கவிதாவோ தன் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞன் அவனுக்கு நிகழ்ந்த ஒரு பயண விபத்தில் கேமராவை உடைத்துவிட்டதின் காரணமாக திருமண புகைப்படங்களை பார்க்க முடியாத நிலையில் அதனால் மனப் பிறழ்வுக்கு உள்ளானவள். வீட்டிற்கு சென்ற சரவணனிடம் கவிதா ஓடி வந்து,

    “பினாங் போனப்ப நாம ரெண்டு பேரு மட்டும் எடுத்துக்கிட்ட அந்தப்படம் உன்கிட்ட இருக்கா சரவணா” (திரிந்தலையும் திணைகள், ப – 269)

    என அவள் எழுப்பும் ஒரு கேள்வி அவளது மன எண்ணங்களை எவ்வளவு குழந்தமைத் தன்மைக்கு கொண்டு போய் உள்ளது என்பதை எண்ணி சரவணனை பெரிதும் வருத்தமடையச் செய்கிறது. அத்தருணத்திலேயே கவிதாவின் கணவன் பாலா, சரவணனிடம் அவளது மகள் அர்ச்சனாவை மூன்று நான்கு முறை ஒரு பையனோடு நெருக்கமாக கை கோர்த்துக் கொண்டு போனதைப் பார்த்தேன் என்று சொல்கிறான். ஆனால் தன் ஒரே மகளின் செயல் கூட அவனை பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் கவிதாவை அவர்கள் வீட்டு பிள்ளைகளில் ஒருவராக ஒரு காலத்தில் அவர்கள் பார்த்திருந்ததும், மட்டு மல்லாது கவிதாவைப் போலவே சரவணனும் தன் பாலிய கால நினைவுக்குள் மூழ்கிப் போவதும் இங்கு கவனப்படுத்தப்படுகிறது.

    “கவிதா வீட்டில் செலவிட்ட அந்த ஓரிரு மணி நேர ஞாபகங்கள் வேலை நேரத்திற்கிடையிலும் சரவணனுக்குள் அடிக்கடி வந்தபடியிருந்தன. பாலா அர்ச்சனாவைக் குறித்து சொன்னதெல்லாம் பொருளற்றுப் போனது போல, கவிதாவின் நிலை குறித்து வருத்தங்களே முக்கியத்துடன் மேலே வந்தன. மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றது உள்ளிட்ட சிறுவயது நினைவுகள் என்றைக்கும் இல்லாமல் மிகுந்தபடியிருந்தன.

    தனக்குப் பிறக்காத பெண்குழந்தையாகத்தான் அப்பா அவளை நினைத்திருந்தார். தொடர்ந்து அப்பாவின் நினைவுகளும் அதையடுத்து வழக்கம் போலவே முருகன் கோவில் பற்றிய எண்ணங்களுமாக மனம் கண்டபடி அலைந்தது”  (திரிந்தலையும் திணைகள், ப – 272)

    சரவணனின் தந்தை சுப்பையா வாயெடுத்தால் அப்பனே முருகா என்று அழைப்பவர். முருகனின் கோயிலே பழியென்று கிடப்பவர். ஆனால் மகன் சரவணனோ தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு முருகன் கோயிலுக்கு பெரிதும் செல்லாமலே இருந்துவிடுகிறான். அங்கு சென்றால் தந்தை மீதான எண்ணம் அவனை வந்து அலைக்கழிப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். ஆனால் கவிதாவின் இந்த கேள்விக்குப் பிறகு இன்று அவன் மனம் மீள கோயிலுக்குச் செல்ல தூண்டப்படுகின்றது. மனைவி பத்மாவிடம் இன்று தாமதமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவதாக தொலைபேசியில் அழைத்து பேசிவிட்டு யீஷீன் இண்டஸ்ட்ரியல் பார்க் அருகே புதிதாக கட்டப்பட்டிருந்த முருகன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏதுவாக அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்குகிறான். அங்கு அவன் பார்க்கும் காட்சியினை கோயில், திருமணமண்டபம், உயரே செம்பவாங் நோக்கிப் பயணிக்கும் விரைவு ரயில், ஹீவாட் லீ ஈடிங்ஹெனஸ், டொஸ் ஸியேன் வெஜிடேரியன்ஃபுட், தொழிற்பேட்டையிலிருந்து வேலை முடிந்து நடந்தும், பைக், கார்களிலும் போவோர்கள், கோவில் அமைப்பு என்பதாக ஜெயந்திசங்கர் அருமையாக காட்சிப்படுத்துகிறார்.

    “யீஷீன் சென்ட்ரலில் ஏராளமான பேருந்துகள் போவதும் வருவதுமாக இருக்க, சாலை விளக்கருகில் பச்சை விளக்குக்குக் காத்து நின்றிருந்த பாதசாரிகளின் கூட்டம் முன்பைவிட அதிகரித்திருந்தது. எல்லா வயதினரும் எல்லோரும் எங்கேதான் போவார்களோ ரயிலில் இறங்கி வீடுகளுக்குப் போவோரும், பேருந்தைப் பிடிக்கவென்று விரைவோரும் இருப்பார்கள். ஆனால் மனதிற்கு விருப்பமானவரைப் பார்க்கவும், சந்திக்கவும், பேசவும்தான் இளையோர் எல்லோரிலும் பரபரப்பு தொற்றியுள்ளது. நள்ளிரவுக்கு முன்னால் கூடடைவதே பெருந்தவறென்று கருதும் உல்லாசப் பறவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரப்புகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்டதில், “ஒவ்வொரு தனிமனிதனும் தனியொரு திணையாகித் திரிவதைப் போல” உணர்ந்தான். சதா மாற்றங்கள் கண்டபடியிருந்த மனிதனுக்குள் விரிந்த அந்தப் பரப்பின் விரிவை அளந்தறிவது தான் எப்படி?” (திரிந்தலையும் திணைகள், ப– 276)

    என்பதாக மனித மனங்களின் ஆழ அகலங்கள் சார்ந்ததான ஒரு கேள்வியை முன்வைப்பதோடு, ஊடாக புதினத்தின் தலைப்பான திரிந்தலையும் திணகள் என்பதற்கான விளக்கத்தையும் தந்து விடுகின்றார்.

    மேலும் சிங்கப்பூர் வெளியுலக மக்களால் நிறைந்து காணப்படுவதையும் இது புலப்படுத்துகிறது. புதினத்தில் பல்வேறு மனச்சிக்கல் சார் பாத்திரங்களை உலவவிட்ட ஜெயந்திசங்கர் புதினம் நிறைவடையும் சூழலில் அர்ச்சனாவை மைய களத்திற்குள் கொண்டு வந்து அவள் ஒரு பையனோடு சுற்றுவதாக பாலா மூலம் சரவணனிடம் தெரிவிக்கும் அவர், அதனை ஒரு பிரச்சனையாக கருதி விரிவாக ஆராயமல், அவை தொடர்பான ஆரோக்யமான சில கருத்துக்களை மட்டும் சரணவன் மூலம் அசை போட வைப்பதோடு நிறுத்திவிடுகிறார். இது தேவையற்ற நிலையில் அர்ச்சனாவை மன உழைச்சலுக்கு உள்ளாக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அமைகிறது. இதுவே புதினத்தின் வெற்றியாகவும், நோக்கமாகவும் பார்க்கத்தக்கதாகிறது.

    தொடர்ந்து மனநலப் பிரச்சனைசார் விசயங்களை பேசும் இந்த புதினத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்று தொழில் சார்ந்து மக்கள் அதிகம் குடியேறும் நாடுகளில் தொழில் நிமித்தமாக மகனோ, மகளோ, முதலில் குடியேற பின்னர் அவர்களைச் சார்ந்து குழந்தைகளை பராமரிக்க தாய், தந்தை, மாமனார், மாமியார் போன்ற முதியவர்களை ஊரிலிருந்து அழைத்து உடன் வைத்துக் கொள்ள முதியவர்களின் குடியேற்றங்கள் நிகழ்கிறது. இந்த முதியவர்கள் தம் சொந்த ஊர்களில் பட்டாம்பூச்சிகளாக எங்கும் உலாவி திரிகிறவர்கள். ஆனால் மாறாக அயலக மண்ணிற்கு தம் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பராமரிக்க வந்திருக்கும் இவ்முதியவர்களுக்கு வெளிஉலக உலாவுதல் என்பது பெரிதும் தடைபட்டுப் போகின்றன. அதுவே சிங்கப்பூரிலும் நிகழ்கின்றன. ஆக அந்த முதியவர்களின் மனங்கள் வந்த இடத்தில் தரிக்க முடியாமலும் தாயகத்தில் வேர்களை படரவிட இயலாமலும் பெரும் சலனத்துக்கு உள்ளாகின்றனர். இதனை ஒரு படைப்பாளி என்ற நிலையில் ஜெயந்தி சங்கர் அவர்கள் கண்டடைந்து ஒரிடத்தில் சரவணனின் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.

    “வயதானவர்களில் பெரும்பாலோர் கோவிலுக்குள் இருக்கும் இயல்போடு வெளியில் இல்லாதது போலப்பட்டது.  அவனுக்கு எல்லா இனத்தவரும் ஏறியிருக்கும் பேருந்துக்குள் நுழைந்ததுமே நுண்மையாகக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணரக்கூடிய லேசான அசௌகரியம். அவர்களில் குறிப்பாக முதியவர்களின் முக பாவனையிலும், அணுகு முறையிலும், மெய்ப்பாடுகளிலும் பார்வையிலும், ஏன் இதற்கென்ன காரணம் எத்தனையோ தடவை யோசித்தாகி விட்டது.

    பெரும்பாலான பொழுதை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் கடத்துவது, கோவில்களுக்கு அல்லது சிரெஸ்டன் வட்டாரத்துக்குச் செல்வது. அதிகம் போனால் தமிழர்களின் விழாக்கூட்டம் மற்றும் திருமண மையங்களுக்கு மட்டுமே சென்று பழக்கப்பட்டு வாழ்க்கையை ஓட்டி விடுவார்களோ என்றெண்ணத் தோன்றியது. ஆழ அடி மனதில் இருக்கக் கூடிய ஏதோவொன்று என்னதான் அது, இத்தனைக்கும் இந்தியாவிற்கோ வேறு நாட்டிற்கோ போயிருக்கக் கூடிய சாத்தியங்களே இல்லாத எம்மக்கள் தாம் இவர்கள். சிங்கப்பூரார்கள், கல்வியும் அதுக்கடுத்த ஓரளவு நல்ல வேலையும் தனக்கு அமைந்ததென்பதை தவிர அவர்களுக்கும் தனக்கும் யாதொரு வேறுபாடும் இல்லையே என்று சிந்தித்தான். ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் அந்தக் கேள்விக்குச் சரியான விடை மட்டும் கிடைக்காமலே இருந்தது” (திரிந்தலையும் திணைகள், ப – 275)

    புதினத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களில் பத்மா, பத்மாவின் அப்பா, சரவணனின் அப்பா, பாலா, அருள் ஆகியோர் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டவர்களாக மனச்சிக்கல் அற்றவர்களாக உலாவுகின்றனர். நேர்மாறாக கவிதாவின் அம்மா, அர்ச்சனாவின் வகுப்புத் தோழன் ஸீஹாவின் அம்மா பாத்திரங்கள் எப்போதும் அடுத்தவர்களை தவறாக பார்ப்பவர்களாக, அடுத்தவர்களின் மனவலியை கண்டு கொள்ளாது அவர்களுக்கு உபத்திரவம் செய்பவர்களான குணாதிசயம் கொண்டவர்களாக படைக்கப்பட்டுள்ளனர்.

    ரவியைப் பொறுத்தமட்டில் சிறு வயது முதலே மனநலம் பாதிக்கப் பட்டவனாக இருக்கின்றான். இது அவனுக்கு மனைவியாக வருகின்ற ரேணுவின் வாழ்வை பெரிதும் பாதிப்பதோடு அவளுக்குப் பிறக்கின்ற மகன் நவீனையும் பெரிதும் பாதிப்பதாக அமைகின்றது. கவிதாவோ தனது திருமணப் புகைப்படங்கள் கிடைக்காத நிலையில் கண்முன் இருக்கின்ற நிஜவாழ்வை ரசிக்கத் தெரியாது, முரணாக காட்சிசார் நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதையே எண்ணி மனப் பிறழ்வுக்குள்ளாகி வாழ்வைத் தொலைத்தலை பார்க்க முடிகிறது. மேலும் புதினத்தில் பாலாவால் தனக்கு துணையாக வந்த கவிதாவால் வாழ்வை முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விடுகிறான். இன்னொருவனை காதலித்து வந்த மீனா பெற்றோரின் அடக்கு முறைகளால் மனம் அமுக்கப்பட்டு கதிரை திருமணம் செய்வதும் ஆனால் திருமணம் முடிந்த நிலையில் முந்தைய காதலனால் அவள் நெருக்குதலுக்குள்ளாகி மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இங்கு கதிரின் வாழ்வும் சமூகத்தில் கேள்விக்குரியதாகின்றது. ஒருவரின் சிக்கல்கள் இன்னொருவரை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்த சிக்கல்கள் நிகழாதிருக்க நாம் பிறரை சரியாகப் புரிந்துகொள்வதும், பிரச்சனைகள் வருகின்ற போது பிறரோடு திறந்த மனதோடு பேசி யாருக்கும் அஞ்சாமல், அடிபணியாமல் தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது என்றால் மிகையல்ல.

    படைப்புகளைப் பொறுத்தமட்டில் பாத்திரங்களின் உளவியலை ஆராய வேண்டியுள்ளது. அதாவது பாத்திரங்களின் பேச்சு மற்றும் செயல் போல படைப்பில் காட்சிப்படுத்தப்படும் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கும் படைப்பாளிக்கும் நேரடியான தொடர்பிருப்பதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர். இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் பற்றி பேசும் பேரா. அரங்க நலங்கிள்ளி அவர்களின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

    “உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளைப் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும் போது படைப்பாக்கத்தில் நமக்கு ஆய்வு மூலங்களாக விளங்குபவை பாத்திரத்தின் பேச்சு, படைப்பாளியின் பேச்சு (படைப்பிற்குள்) கதை சார்ந்த சூழல், படைப்பில் வெளிப்படும் படிமங்கள் படைப்பிற்கு அப்பாலுள்ள படைப்பாளியின் வாக்கு மூலங்கள், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு இன்ன பிற. இதன்வழி படைப்பின் மறைபொருளைத் துப்பறியலாம். படைப்பாக்க உளவியலைக் கணடறிதலின் பயனை இரு நிலைகளில் காட்டுவார் லைனல் டிரில்லிஸ். அவை ஆழ்பொருளைக் கண்டு விளக்குதல், படைப்பாளன் ஒரு மனிதன் என்ற நிலையில் அவனது உண்மைத்துவத்தை (Reality) விளக்குதல்” (1972,ப-284) இதிலிருந்து படைப்பாளன் படைப்பிலக்கியத்தில் இருந்து எந்நிலையிலும் தனியனாகி விடமுடியாது என்கின்ற உண்மை புரிகிறது. படைப்பின் மறைபொருள் என்பது படைப்பாளனின் நனவிலி மனவேட்கையே இந்த நனவிலி மனவேட்கையே உண்மைப் பொருள் (Reality) இவ்வகையில் படைப்பின் உண்மைப் பொருளை உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளைப் (Psycho anlitical methods) பின்பற்றி வெளிக்கொணர முடியும்” (இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், பக் 11, 12) என்கிறார்.

    மேலும் இந்த அமுக்க மனநிலையே படைப்பில் வெளிப்படுகிறது என்பதை ஃபிராய்டு சுட்டும் வேளையில், அவர் வழி வந்த லக்கான் படைப்பு வழியான உரையாடலும் மீண்டும் அமுக்கப்படுவதால் உரையாடலாக விடுபடல் தன்மை கொண்டதாகவே அமைகிறது என்பதும் நாம் எண்ணிப் பார்க்கத்தக்கதாகிறது. இந்த ஃபிராய்டிய லக்கானிய சிந்தனைகளை திரிந்தலையும் திணை புதினத்தில் பொருத்தி பார்ப்போமாயின் ஜெயந்தி சங்கர் அவர்களின் மனதின் பிரதியே இந்த படைப்பு என்பதாக அர்த்தம் கொள்ளலாம். அதுவும் கூட லக்கானின் கூற்றுப்படி முழுமையான பிரதி இதுவெனக் கொள்ள முடியாது போகிறது. ஏனெனில் இந்த கதை சொல்லலிலும் அமுக்கம் நிகழ்ந்திருப்பதாக கொள்ள வேண்டியுள்ளது என்கிறார்.  இங்கு இத்தகையதான ஓர் உளவியல் ஆய்வை மேற்கொள்கிற போது ஒரு படைப்பின் அனைத்து பாத்திரங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் படைப்பாளிக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. படைப்பாளியின் வாழ்வோடு நேரடியாக பாதிப்படைவது போக அவர் கண்டு, கேட்டு, வாசித்த, பார்த்த நிகழ்வுகளின் பாதிப்பு நினைவுகளின் வழியாகவும் படைப்பாளி ஒரு புனைவை உருவாக்கி விட முடியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். ஆக இப்போக்கு பல படைப்புகளுக்கும் பொருந்துவதாயினும், திரிந்தலையும் திணை அடிப்படையிலேயே உளவியல் கட்டுமானத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் அதற்கு முற்றிலும் ஏற்புடையதாக அமைகிறது. ஆக புதினத்தை உளவியல் நோக்கில் வாசிப்புக்கு உட்படுத்துகிற போது பாத்திரங்களின் வழி மானுடத்தின் மனச்சிக்கல்களை அறிந்து கொள்ளவும், அதனை நம் வாழ்விலும், சமூகத்திலும் நிவர்த்தி செய்யவும் திரிந்தலையும் திணை உதவியாக அமைகிறது.

    Share
  • வையக வடிவே

    வையக வடிவே

    சரஸ்வதி ராசேந்திரன்

    அன்னை   பராசக்தி   அருள்மகனே
    முன்னை வினைகளைக்  களையவா
    வல்வினை   எல்லாம்  வலுவிழந்தே
    வாடிடச்   செய்வாய்  வல்லபைநாதா
    அஞ்சிடும்  அன்பருக்  கபயமளித்திடு
    நஞ்சுள்ளம் கொண்டோரை  நசுக்கிவிடு
    அனுதினம்  பணிவோம்  உன்னை
    அடைக்கலம்  நீயே  அன்னைகுமரா
    அவலும் பொரியும் நான்படைப்பேன்
    அல்லல்   தீர்ப்பது    உன்கடனே
    சங்கரன்    புதல்வா   சக்திமகனே
    சஞ்சலம்   தீர்த்திடச்   சீக்கிரம்வா
    வையகம்  யாவும்    உன்வடிவே
    மானிடம்  வாழ்ந்திட  மனதுவையே

    Share
  • பழகத்தெரிய வேணும் – 83

    பழகத்தெரிய வேணும் – 83

    நிர்மலா ராகவன்

    சுதந்திரம் என்பது

    ஒரு குழந்தை, புதிய விளையாட்டில் ஈடுபடும்போது, “எனக்கு முடியும்!” என்று, தன் உதவிக்கு வரும் தாயை விலக்கிவிடும், இரண்டு வயதிலேயே.

    சுயமாக ஒரு காரியத்தைச் செய்து, அதில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று மனமகிழ்ந்து சிரிக்கும் குழந்தைக்குப் பிறரது பாராட்டோ, பரிசுப்பொருட்களோ தேவையில்லை. தன் திறமையால் கிடைக்கும் திருப்திதான் பெரிதாகப்படும்.

    சுதந்திரத்தை நாடும் மனிதனின் அடிப்படை குணம் இது.

    அதே குழந்தை நாய் துரத்தும்போதோ, இன்னொரு குழந்தை மிரட்டும்போதோ, ஓடிவந்து தாயைக் கட்டிக்கொள்ளும். சுதந்திரத்திற்கு எதிர்மாறான பாதுகாப்பை நாடும் இத்தன்மையும் இயற்கைதான்.

    வயது ஏற, ஏற, சுதந்திரத்தைச் சிறிது சிறிதாக இழக்க நேரிடுகிறது. அது இயற்கைக்கு விரோதமானதாக இருப்பதால், மகிழ்ச்சியும் குறைந்துகொண்டே வரும்.

    பாலர் பள்ளியிலோ, அதன்பின்னரோ, முதன்முறையாக கல்வி கற்கப்போகும் குழந்தைகள் எவராவது சிரித்த முகத்துடன் போவதைப் பார்த்திருக்கிறீர்களா?

    சில குழந்தைகள் தமக்கே தெரிந்த விதத்தில் எதிர்ப்பார்கள்.

    அன்றைய மதராஸில், என்னை முதல் வகுப்பில் சேர்த்ததும், என் ஓயாத, உரத்த அழுகையைக் கண்டு பயந்த பள்ளி நிர்வாகம், “இனி உங்கள் பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! இவளைப் பார்த்து, மற்ற குழந்தைகளும் அழுகிறார்கள்!” என்றுவிட்டதால் நான் பிழைத்தேன். வீட்டில் சுதந்திரமாக, சுவற்றுடன் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.

    ஆரம்பப்பள்ளியில், ஆசிரியைகள் பெற்றோரின் புரிந்துணர்வுடன் நடத்தமாட்டார்கள். `கட்டொழுங்கு’ என்ற பெயரில் அநாவசியமாக மிரட்டுவார்கள், தண்டிப்பார்கள்.

    அவர்களுக்குப் பயந்து, `ஆசிரியை என்ன சொல்வார்கள்?’ என்று யோசித்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயலும்போது, சுயமாகச் சிந்திப்பது குறைந்துவிடுகிறது. பெரியவர்களானபோதும் இதே பழக்கம் தொடர்கிறது.

    உன்னையே அறிந்துகொள்!

    நமக்குப் பிடித்தது-பிடிக்காதது, பலம்-பலவீனம், கனவுகள் போன்றவைகளைப் புரிந்து நடந்தால் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வு எழுவதைத் தடுக்கலாம்.

    சுதந்திரமாகச் சிந்திப்பதற்குத் துணிச்சல் வேண்டும். சொந்த நாட்டில் `பொறுக்கமுடியாதவை’ என்று இருப்பவைகளைப் பகிரங்கமாகச் சொன்னாலோ, எழுதினாலோ தண்டிக்கப்பட்டவர் எத்தனை பேர்! நெல்சன் மண்டேலா ஒரு தகுந்த உதாரணம்.

    தம் துறையில் சாதித்தவர்கள், சாதிப்பவர்கள், எவரை எடுத்துக்கொண்டாலும், பிறரது பழிச்சொற்களை ஏற்காது, தம் சுதந்திரமான எண்ணங்களையும், போக்கையும் விட்டுக்கொடுக்காது இருந்ததைக் காணலாம்.

    `இந்தக் காரியத்தை எப்படித்தான் செய்து முடிக்கப்போகிறோமோ!’ என்ற சலிப்பு அவர்களுக்குக் கிடையாது. ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை முடிக்கும் தைரியமின்றி, பாதியில் பிறர் விட்டுப்போனவற்றை எடுத்துச் செய்வார்கள். அதனால் வரக்கூடிய பாதிப்புகளைப் பொருட்படுத்தாது, இறுதிவரை போராடுவார்கள்.

    தவறு செய்ய சுதந்திரம்

    புதிதாக எதையாவது செய்ய முயலும்போது பிழைகளைத் தவிர்க்கமுடியாது. கண்டனத்திற்கும் கேலிக்கும் அஞ்சினால், புதிய முயற்சிகளில் இறங்குவது ஏது!

    பிறர் நம்மைக் கட்டுப்படுத்த விடாது நடப்பதுதான் சுதந்திரம். பிறருக்காகப் பயந்தோ, அல்லது கடமை உணர்ச்சியாலோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிறவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் பறிபோய்விடுகிறது. அதன் விளைவாக, கற்பனைத்திறன் காணாமல் போய்விடும்.

    கதை

    மலேசிய ஈப்போ மாநிலத்தில், தவசகாயம் (64 வயது) ஒரு காண்டோமினியத்தின் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொற்றுநோய் பரவாதிருக்க நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    அங்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரது மகன் அதை மீறி, அந்த வளாகத்திலிருந்து நீச்சல் குளத்தில் இறங்கப்போனபோது, தவசகாயம் தடுத்தார்.

    ஆத்திரமடைந்த தந்தை ஒரு மேசையால் அவர் தலையில் கடுமையாகப் பலமுறை தாக்க, கிட்டத்தட்ட கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தவசகாயம். விருந்தினருக்கு `வேண்டுமென்றே கடுமையாகத் தாக்கிய’ குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டது.

    எட்டு மாதங்கள் நிலைமை மாறாது இருந்த காவலர் அண்மையில் மரணமடைந்தார்.

    மலேசிய மக்கள் கொதித்தெழுந்தனர். அநியாயமாக ஓர் உயிரைப் போக்கியவர் செய்தது கொலைக்குற்றம் என்று கையெழுத்து மனு ஒன்று பரவியது. சட்டம் அதை ஏற்றால், மரண தண்டனை.

    `எங்கள் சுதந்திரத்தை ஒருவன் பறிப்பதா!’ என்று எண்ணியதுபோல் நடந்தவர் மற்றவரது சுதந்திரம், கடமை இவற்றையெல்லாம் மதிக்காதது ஏன்?

    `என்னை ஏழைத் தொழிலாளி ஒருவன் தடுப்பதா!’ என்று, தன்னை மிக உயர்வாக மதித்ததாலோ?

    குழந்தைகளுக்குச் சுதந்திரம்

    தம் குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் முறை அவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் பாதுகாப்பது என்றுதான் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்த நோக்கத்துடன், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள்.

    குழந்தைகள் எத்தகைய நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்று தெரிந்திருக்கவேண்டியது அவசியம்தான். ஆனால், `நம் அதிகாரம் பறிபோய்விடுமே!’ என்ற கவலையுடன், எத்தனை வயதானாலும், தம் சொற்படியே அவர்கள் எப்போதும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அக்குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்காதா?

    தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எது என்றே சிலருக்குப் புரியாது போய்விடுவது இத்தகைய பெற்றோரால்தான்.

    அண்மையில் சீனாவில் நடந்த கதை

    ஏழிலிருந்து பதினோரு வயதான ஏழு சிறுவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றில் பெரும் வெற்றி பெற்றனர். இசை மட்டுமின்றி, பல்வித வாத்தியங்கள் வாசிப்பதிலும், வண்ணம் பூசுவதிலும் தங்கள் திறமையைக் காட்ட, Panda Boys புகழேணியின் உச்சாணிக்கொம்பிற்கே போய்விட்டனர்.

    அவர்களுடைய புகழ் நான்கு நாட்களே நிலைத்தது.

    “இந்த வயதில் குழந்தைகள் தம் வயதினருடன் கலந்து பழக வேண்டும், விளையாடவேண்டும், கல்வி பயிலவேண்டும். இதைவிட்டு, முகவரும் (agent), பெற்றோரும் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக அவர்களை ஆட்டிப்படைக்கலாமா? அவர்கள் செய்வது சிறார்வதை!” என்று, சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இவர்களுக்குமுன் பல சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதையும் எடுத்துக்காட்ட, அவர்களைப்பற்றிய எல்லா விவரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

    நிறைவேறாமல்போன தமது கனவுகளைப் பிள்ளைகள்மூலம் சாதிக்க எண்ணியவர்களுக்குத் தகுந்த பாடம் இது.

    எது சுதந்திரம்?

    `என் பெற்றோர் சுதந்திரம் என்பது என்னவென்றே அறியாது வாழ்ந்துவிட்டார்கள். நான் அப்படி இருக்கப்போவதில்லை!’ என்று, இளம்வயதினர் பலர் மனம்போனபடி நடப்பார்கள். தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலி செய்து, அவர்களையும் மாற்ற முயல்வார்கள்.

    தீய பழக்கங்களில் ஈடுபடுவதும், சட்டத்தில் பிடிபடுவதும் சுதந்திரமில்லை.

    தனக்கோ, பிறருக்கோ எந்தவிதத் தீங்கும் இழைக்காது, தன் திறமைகளை மேலும் வெளிக்கொணர நடப்பதுதான் ஒருவர் தனக்குத் தானே செய்துகொள்ளும் உதவி.

    வெளிநாட்டில்

    சூழ்நிலைக்கு ஏற்றவாறு தமக்குப் பிடித்ததைச் செய்யும் சுதந்திரமோ, அதற்கான துணிச்சலோ, எத்தனைபேருக்கு இருக்கிறது?

    வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர், தம்மைச் சிறுமையாக உணர்வார்கள். நிறையப் பணம் சம்பாதித்தாலும், ஏதோ வெறுமை இருக்கும். பொறாமை, வலுச்சண்டை — இதெல்லாம் வலுத்துவிடுகிறது.

    தம் சுதந்திரத்தைப் பிறருக்காக விட்டுக்கொடுத்துவிடுகிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    அந்நிய நாடு பொருளாதாரத்தில் உயர்ந்ததாக இருக்கலாம். கலாசாரத்தால் வேறுபடலாம். அதனால் அந்நாட்டவர்கள் உயர்ந்தவர்களாகிவிட மாட்டார்கள்.

    அவர்கள் நம்மை மட்டம்தட்டிப் பேசினால், அவர்களது கருத்தை ஒத்துக்கொள்வதைப்போல் அசட்டுச்சிரிப்புச் சிரிக்காது, எதிர்க்கவேண்டும்.

    அதாவது, `என்னைப் பொறுத்தவரை, நானும், என்னைச் சேர்ந்தவர்களும் உயர்ந்தவர்கள்தாம்!’ என்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், சிறுமை உணர்ச்சியும், மன இறுக்கமும் தாக்காது நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். ஒரேயடியாக மாற வேண்டிய அவசியமுமில்லை.

    அத்தகைய மனஉறுதியைச் சிலர் மறுக்கிறார்களா?

    அவர்கள் நண்பர்களே அல்ல.

    Share
  • பிரபோ கணபதே | கிருஷ்ணகுமார்

    பிரபோ கணபதே | கிருஷ்ணகுமார்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 1

    ‘பிரபோ கணபதே’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். வினைதீர்க்கும் விநாயகப் பெருமான் அருளைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share