maxresdefault

சரஸ்வதி ராசேந்திரன்

அன்னை   பராசக்தி   அருள்மகனே
முன்னை வினைகளைக்  களையவா
வல்வினை   எல்லாம்  வலுவிழந்தே
வாடிடச்   செய்வாய்  வல்லபைநாதா
அஞ்சிடும்  அன்பருக்  கபயமளித்திடு
நஞ்சுள்ளம் கொண்டோரை  நசுக்கிவிடு
அனுதினம்  பணிவோம்  உன்னை
அடைக்கலம்  நீயே  அன்னைகுமரா
அவலும் பொரியும் நான்படைப்பேன்
அல்லல்   தீர்ப்பது    உன்கடனே
சங்கரன்    புதல்வா   சக்திமகனே
சஞ்சலம்   தீர்த்திடச்   சீக்கிரம்வா
வையகம்  யாவும்    உன்வடிவே
மானிடம்  வாழ்ந்திட  மனதுவையே

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.