தருமசாத்திரநூல்களில் கூறப்பட்டிருக்கும் எட்டுவகை விவாகங்கள்

0

பவள சங்கரி

மண வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் , வாழ்நாள் நம்பிக்கை, அந்நியோன்யம் மற்றும் கணவன் மனைவிக்கிடையேயான ஒருமித்த அன்பு போன்றவற்றின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதை ரிக் சமிதா குறிப்பிடுகிறது

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவது. ரிக் வேத காலங்களில், இந்து சாத்திரங்கள் எட்டு வகையான திருமண முறைகள் பற்றி கூறுகின்றன. அவைகளாவன :

1. பிரம்ம முறை திருமணம்:

வேத ஆகமங்களை கற்றுத்தேர்ந்து, நல்லொழுக்கமுள்ள ஒரு ஆண் மகனை, பெண்ணின் தந்தை வரவழைத்து, தனது மகளுக்கு விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிவித்து அவளை மணமுடித்து வைப்பது.

2. தெய்வ முறை திருமணம்:

கோவில்களில் கடவுளருக்கு பூசைகளை நிறைவேற்றும் அர்ச்சகருக்கு, பெண்ணின் தந்தை தனது மகளை, ஆடை ஆபரணங்களுடன் தானமாக அளிப்பது.

3. அர்ஷா முறை திருமணம்:

புனித கடமையை நிறைவேற்றும் பொருட்டு மணமகனிடமிருந்து பெண்ணின் தந்தை தானமாக இரண்டு ஜோடி பசுக்கள் மற்றும் காளைகளைப் பெற்று தனது மகளை மணமகனுக்கு அளிப்பது.

4. பிராஜாபத்ய முறை திருமணம்:

பெண்ணின் தந்தை மணமகனுக்கு மரியாதை செலுத்தி, ‘நீங்கள் இருவரும் இனி உங்கள் கட மைகளை இணைந்தே நிறைவேற்றுவீர்களாக’ என்று வாழ்த்தி தனது மகளை தானமாக அளிப்பது.

5. அசுர முறை திருமணம்:

மணமகன் தன்னால் இயன்ற அளவிற்கு செல்வங்களை கன்னிப் பெண்ணின் உறவினர்களுக்கு பரிசாக அளித்து மணமகளை அடைவது

6. காந்தர்வ முறை திருமணம்:

மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் பாலுணர்வால் உந்தப்பட்டு தாமாகவே இணைந்து வாழ்வது.

7. ராட்சச முறை திருமணம்:

ஒரு பெண்ணின் உறவினர்களை கொன்று அல்லது துன்புறுத்தி, அவள் விருப்பத்திற்கு மாறாக கவர்ந்து செய்து மணமுடிப்பது.

8. பைசாச முறை திருமணம்:

ஒரு பெண் மயக்கமுற்று அல்லது உறக்கத்தில் இருக்கும்போதோ அல்லது சுயநினைவில் இல்லாத நிலையிலோ அவளை நயவஞ்சகமாக அடையும் பாவகரமான திருமண முறை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *