கண்ணன் காப்பு
—————————

b0b326a5-e2e5-4f6f-9e44-9bb4b51d41f8
அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….(INFINITY)….

கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
ஏகிட எல்லாம் எளிது….(0)
தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
அப்பயலுக்(கு) அன்பே அமுது (or) அறம்….(1)

மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
தாகிநீ தேஹியென்றோ தி….(2)
நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
குப்பம் நுழைந்தவனே காப்பு….(3)

கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
களிமிகு கண்ணனே காப்பு….(4)

பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
காயாம்பூ வண்ணனே காப்பு….(5)

காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
கண்ணனே வேண்டினேன் காப்பு….(6)

பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
கூட்டம் பிணைந்தவா காப்பு….(7)

தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
கீதா உபதேசா காப்பு….(8)

எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….(9)

தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
கழுகில் வரும்நேரம் காப்பு….(10)

குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
கவலையால் பீடிக்கக் கொன்றோன் – அவலையா
தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வத்தால்
கந்தையைக் கட்டென்றான் காப்பு….(11)

கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
காகவத காகுத்தா காப்பு….(12)

ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
கருத்தில் கலந்துவளைக் காப்பு….(13)

உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
மாமா அனுப்பிய மல்லர் களையன்று
கோமாளி ஆக்கியவா காப்பு….(14)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *