Author: கிரேசி மோகன்

  • திருமால் திருப்புகழ்…. (46)

    கிரேசி மோகன்
    திருப்புல்லாணி தர்ப சயன பெருமாள் ராமர்….
    ——————————————————————————

    Thiruppullani
    ——————————————–
    தனத்தய் தான தான தனத்தய் தான தான
    தனத்தய் தான தான -தனதான….

    ———————————————————————————————————–

    athjaganatharkovil01

    விருப்பில்லாது வாழ்வில் ,வெறுப்பில்லாது தாழ்வில்267670_165775183491627_150863698316109_390197_6242566_n
    இருப்பில்தோயும் சோணை -ரமணேசர்
    உரைப்பில்கூறும் நானை, மறைப்பில்லாது காண,
    உறுப்பில்லாத பார்வை -அருள்வாயே

    செருப்பில்தேசம் ஆள பிறப்பில்நாலில் ஆழ்வார்,
    வனத்துள்காலம் ஈரேழ் -பொழுதாள
    ஒருச்சொல் தாரம் பாணம் எனச்செல் ,வேடர் கூறும்
    கதைக்குள் வாழும் நாத -அருள்வாயே

    ஒருப்புள் காகம் சீதை, உறுப்பில் கீற, வீசும்
    ஒருப்புல் வாளி கோப -சிவராம
    கடித்தவ்ஆயி போடும், கனிக்குள் பாசம் ஊற
    படைப்பில் ஜாதி மீறும் -தவராமா

    குரக்கர் சேனை யோடு அரக்கர் சேனை சாய,
    களைப்பில் தேக வாதை -அதுதீர
    தவப்புல் மீது ஏளும், கருப்பில் நீல மேனி
    திருப்புல் லாணி ராம -பெருமாளே

    ———————————————————————————————————————-

    DSCN0045_thumb

    DSCN0047_thumb[1]P1010216

     

     

     

     

     

    படங்களுக்கு நன்றி:

    http://thiruppul.blogspot.in/2010/03/blog-post_21.html

    நக்கீரன்

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (45)

    கிரேசி மோகன்

    ஒருவனைப் புகழ்வதை விட அவனது BETTER-HALF மனைவியைப் புகழ்ந்தால் அவன் அருள் இன்னும் வேகமாகக் கிட்டும்….அந்த BETTER-HALF , BUTTER-HALFகண்ணனின் மனம் கவர்ந்த மனைவியாய் இருந்தால் ,கேட்கவே வேண்டாம் அருள் கொட்டும்….மேலும் இந்த BETTER-HALF, வில்லிபுதூர் பட்டர் பிரான் பெண் ஆண்டாள்….மாதங்களில் நான் மார்கழி என்று மாலை கீதையில் மார்தட்டிக் கொள்ள வைத்த, முப்பது(திருப்பாவை) செப்பிய மங்கை….ஆக இன்று ‘’ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று’’ அருணகிரி சந்தத்தில் ஆண்டாள் திருப்புகழ்….

     Tamil-Daily-News-Paper_52750360966

    “ஆடிவரும் பூரமதில் பூத்தமுகம் ஒன்றுAndal
    ஆசுகவி பட்டர்மகள் ஆனமுகம் ஒன்று
    காடுவன மாலிதனில் கண்டமுகம் ஒன்று
    மாடமதில் ரங்கனிடம் காதல்முகம் ஒன்று
    சூடும்மலர் மாலைதனை சூடும்முகம் ஒன்று
    ஸ்ரீவிலிபு தூரில்கவி செப்புமுகம் ஒன்று
    கூடலுடன் ஊடலையும் கூறுமுகம் ஒன்று
    கீதையுடன் பாசுரமி ணைத்ததமிழ் தாயே”

    Share
  • திருமால் திருப்புகழ் (44)

     

    கிரேசி மோகன்

    15032009072

    தானன தானன தானன தானன
    தானன தானன -தனதான….
    ———————————————————————————————————-

    Poothana_Moksh

    பாலினில், சேடனின் பாயினில், த்வாபர 969181_504980929606941_408884359_n
    வேளையில், பூபளு -நினைவாலே,
    காவலில், தேவகி பாலனில், ராவினில்,
    தாளெழு தாவலை -யமுனாவில்,

    சீலமும் சீர்வளர் ஆயர்தம் பாடியில்,
    யாதவ பூமியில், -வசுதேவர்
    போய்விட வேறொறு தாய்மடி தாவலில்,
    மாமனின் தேதிசொல், -நவகாளி,

    பாலளி பூதனை ப்ராணனில், காளியன்
    மேல்நட மாடிடும் -இருகாலில்,
    வேணுவின் ஓசையில், பேணிடும் கோவினில்,
    ராதையின் காதலில், -நடுவோனில்,(ஐவரில் நடுவோன் அர்ச்சுனர்)

    நூலினில் கீதையில், நாணினில், மாருதி
    தேரினில், பாரதம் -புரிவோனே.
    பாரினில் நாமதை காணவு லாவரு,
    ஷீரடி சாய்குரு -பெருமாளே….கிரேசி மோகன்….

    ————————————————————————————————————————

     

    பின்-குறிப்பு- பார்க்கும் யாவற்றிலும் பெருமாளை மட்டும் பார்த்தால் திவ்ய தேசம்….பார்க்கும் யாவற்றையும் பெருமாளாகவே பார்த்தால் பாரத தேசம்….அப்படிப் பார்த்தபோது, இன்றைய சந்தத்திற்கு உட்பட்டு எழுந்தருளினார் சத்குரு ஷீரடி சாயி பெருமாள்….இந்த உலக ‘’உள்ளே வெளியே’’ விளையாட்டில் நாம் ஜெயிக்க, உள்ளிருந்து உழைப்பவர் பெருமாள்….வெளியிலிருந்து வழங்குபவர் குருநாதர்….கடவுளும்-குருவும் ஒன்றே….இருவருக்கும் குறைந்த பட்ச வேற்றுமைகள் ஆறிருந்தாலே அதிகம்….

     

    Share
  • திருமால் திருப்புகழ் (43)

    கிரேசி மோகன்

     

    திருமால் திருப்புகழ்….மந்தைவெளி மாரிச்செட்டி தெரு ஸ்ரீனிவாசப் பெருமாள்….
    ———————————————————————————————————————

    perumal mandhaveli

    தந்ததன தானத்தத்த தந்ததன தானத்தத்த
    தந்ததன தானத்தத்த -தனதான…

    ——————————————————————————————————————–

    ’’ரெண்டுவிரல் சேரக்கட்டி பஞ்சுதனை நாசிக்கிட்டுfc4343e7-934f-4b27-b37c-b2cdcf19fcc2_S_secvpf
    பிண்டமென ரேழிக்கட்டில் -சவமாக
    சங்குபறை மோளக்கொட்டு அன்புமகன் தீயைப்பற்ற
    பெண்டிரழ ஓலைக்கட்டில் -தனிலேறி

    கொண்டுசுடு காடுக்கிட்டு வெந்துதண லாகச்சுட்டு
    இந்தவுடல் போலிச்சட்டை -எனநானும்
    அந்தரம ணேசர்க்குற்ற சொந்தஅனு பூதிக்கொத்த
    உந்தனிரு தாளைப்பற்ற -அருள்வாயே

    தொண்ட(ன்)அனு மானுச்சிப்ப றந்தரத மேறிக்கற்க
    பஞ்சவிஜ யோருக்கொப்ப -மொழிகீதை,
    சந்தகிரி வாரிக்கொட்டு கந்தரனு பூதிப்பித்த
    கண்டர்விழி ஜோதிப்புத்ரர் -முறைமாம

    உண்டுலக(ம்) ஏழைத்துப்ப பண்டைஇலை ஆலத்தெப்பம்
    சென்றபலி சாயக்குட்டை -திருவோணா
    *தந்தைவழி பாட்டிக்கென்று நின்றருளும் கோமுட்டிக்கு
    மந்தைவெளி மாரிச்செட்டி -பெருமாளே

    *பின்-குறிப்பு-இந்த பெருமாளைப் பத்தி சொல்லியே ஆகணும்….உப்பிலியப்பன் எங்க குலதெய்வம்னா, இவர் எங்க காவல் தெய்வம்….25வயசு வரை எனக்கு பரிட்சை ரிஸல்ட் வந்தாலும் சரி….காலில் சிரங்கு வந்தாலும் சரி…..என்னோட தந்தை வழி பாட்டி நாலணா உண்டில போட்டுட்டு ,இந்த பெருமாளைத்தான் நம்புவோ….கோமுட்டிச் செட்டியார் கைங்கரியத்துல இந்த மந்தைவெளி மாரிச்செட்டி தெரு வெங்கடாசலபதி திருப்பணி நடக்கறது….இந்தக் கோயில் தாயார் சாக்‌ஷாத் பராசக்தி….பச்சை கலர் புடவையை இவளுக்கு சாத்திட்டு ‘’பில்-கேட்ஸ்’’ ஆகணும்னு வேண்டிண்டாலும் நிறைவேத்தி வப்பா…எதோ ஒரு சந்தத்துக்கு எழுதிண்டு போறச்சே , ஈற்றடில இவர் எழுந்தருளியபோது , ப்ரபத்தி சரணாகதியை ப்ரஸ்தாபிக்கும் வைணவ விசிஷ்டாத்வைதத்தை உணர்ந்து அனுபவித்தேன்….எல்லாம் வல்லமை வண்ணனுக்கும்,எழுதும் வல்லமைக்கு நன்றி…’’

    —————————————————————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (42)

    கிரேசி மோகன்

     

    Vishnu-Vishwaroopam

    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான….

    —————————————————————
    முனிகள் நார தாதீயர், அசுர தேவ பாதாளradhe-krishna
    உலகு ளோரும், பூலோக -உயிர்யாவும்,
    நிதமும் சூரி, ஆழ்வார்கள், யமுனை ராசலீலாவில்
    முழுகும் கோபி காமாதர்,-நவநீதம்,

    இனிய பாலும், மோர்பாகு, கனிகள், பீலி பீதாம்ப
    ரமமும், மேயும் கோமாதும்,-வனமாலை,
    சுழலும் ஆழி, கூராழி, சிலையும், கோலும், வாளோடு,
    துயிலும் சேட னார்,சேர -சிறுபாதர்

    அனுமன், ஈசர் மாகாளி, ரிடப தேவர், யாழ்வாணி,
    அயனும், வேட ஆலோலம -விளிமாது,
    அமர ஜாதி தேவானை, அழகு வேலர், ஓரானை
    முதலி லோட மேலோர்கள் -புடைசூழ,

    பணிய மேவு, பாலாழி வனிதை மூவர் யோகேச.
    நெடிய நீல மாலோல,-அவதாரம்
    மனித வாம னார்சீயம் மறைவ ராக மீனாமை
    ஹரிமு ராரி மூராம -பெருமாளே

    ——————————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (41)

    கிரேசி மோகன்

    104988487.FVDLzhV2
    தனதான தத்தன தனதான தத்தன
    தனதான தத்தன -தனதான….

    ———————————————————————————————————————-

    “கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும், f-1
    தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
    குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
    படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை

    சபைகூச வைத்திடும் சனிவாய்அ சுத்தமும்
    உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
    செரிமானம் அற்றிட வலியால்து டித்தலும்,
    சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக

    அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
    அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
    அணுகாது சத்துவ மனமேனி உற்றிட images (2)
    அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா

    மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
    சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
    தரைசாய இத்தரை அவதார முற்றனை,
    அருளாய்யெ னக்கரி -பெருமாளே”
    ————————————————————————————————–

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (40)

    கிரேசி மோகன்

    maxresdefault
    தானந்த தான தானந்த தான
    தானந்த தான -தனதான….

    ———————————————————————————————–

    யாரென்ற கேள்வி யாலந்த நானின்sri-ranganathar-temple-srirangam
    வேரொன்றி மூலம் -தனிலேகம்
    பாரென்ற சோணை யாரன்பு சீடன்
    பேரின்பம் நானும் -பெறவேணும்

    ஓரங்கை சேணம் ஓரங்கை ஆழி
    ஓரைந்து கேள -புவிவாதை
    பாரங்கள் தீர போரங்கு மூள
    தேர்நின்று கீதை -அருள்வோனே

    பேரன்பு ஓடன் மாரன்பில் கூடும்
    கோதண்ட ராமன் -பரிசாக
    ஈரைந்து கேசன் ஊர்லங்கை ஏள
    ஓர்தம்பி தோளில் -வரும்வேளை

    ஓர்தந்த வேழன் சூதொன்று ஆட
    சூழ்கின்ற ஆறின் -கரையோரம்
    சீர்மங்கை தாயி மார்தங்க சாயும்mk1
    சீரங்க நாத -பெருமாளே

    ——————————————————————————————————-

     

     

     

     

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (39)

     
    கிரேசி மோகன்

    ஸ்ரீகுருவாயூரப்பன்….
    ——————————————

    guruvayur

    தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
    தான தான தந்த தந்த -தனதான….

    ——————————————————————————————————————-

    நாலு மூணும் அஞ்சிரெண்டும் ஏழுதானி ருந்துமந்தGuruvayur Krishna santhana seva_cr1
    பாழும்நான கந்தைவந்து -வழிவேறு
    போகுமாறு மந்த்ர தந்த்ர தூபம் போட சிந்தையெந்த்ரம்
    மாறிடாது என்றுமந்தர் -முகமாக,

    மூலம்ஈசர் என்றுணர்ந்து தேகபாவம் வென்றெழுந்து
    ஆலவாய்அ கன்றகந்த -ரமணேசர்
    கூறும்பேத நெஞ்சுகந்த போலிநான்வி ழுந்தபொந்தில்
    ஞானநான்தொ டர்ந்துபொங்க -அருள்வாயே.

    மாரிநீலன் சண்டமுண்டன் மேனியாவை யும்பிளந்த
    காளிமாயி கொங்கையுண்டு -பலமாகி
    சூரனோடு சண்டைகொண்டு வீரவேலெ றிந்துகொன்ற
    பாலனார்ம னம்கவர்ந்த -முறைமாம
    ஆலிலேமி தந்துஅன்று ஏழுலோகம் உண்டுமிழ்ந்து
    சேரநாடொ துங்கியங்கு -குருவாயூர்
    பாலனாய்வ ளர்ந்துசங்கு காலநேமி கொண்டுஅங்கை
    பீலிபீத கம்புனைந்த -பெருமாளே
    ———————————————————————————————————————-

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (38)

    கிரேசி மோகன்

     Tamil-Daily-News-Paper_10669672490

    தனதனன தான தான தனதனன தான தான
    தனதனன தான தான -தனதான…..

    ——————————————————————————————————————

    “மலையருணை மேவும் ஞான ரமணமுனி கூறும் நானை images (7)
    ஒழிமனவி சார வேகம் -வரவேணும்
    ஒருநினைவி லாத மோன நிலையினில்சு கானு பாவ
    பரபிரும மாக நானும் -அருள்வாயே

    புலனசைவின் மோக தாப ஜலம்வரள காயும் பூமி
    நிலையடைய சாது வாகி -இகவாழ்வில்
    வருவதனை ஏசி டாது பெறுவதனில் கூசி டாது
    வெறுமைதனில் ஏக மாகி -மருளாது

    சலனமதி லாது கோரம் அழகுஅபி மான பேதம்
    அதுயிதுயெ னாது யாவும் -எனதாக
    சமரசசு பாவ மோடு வடஅருணை கோயில் கோபு
    ரஅமணிஅம் மாளின் வாழ்வை -உறவேணும்

    மலைபசிய மாக நீள மரகதவி ரோத மேனி
    அலைகடலில் சேடன் மீது -சொகுசாக
    வனசமகள் பாதம் நீவ வளரும்விழி யோக சீய
    மயிலைநகர் கேச வாதி -பெருமாளே”
    ————————————————————————————————————

     

    படங்களுக்கு நன்றி:

    http://narasimhar.blogspot.in/2009/08/blog-post_13.html

    Share
  • திருமால் திருப்புகழ் (37)

     

    கிரேசி மோகன்

    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான -தனதான….

    ——————————————————————–

    காஞ்சி வரதராஜ பெருமாள்….
    —————————————

    pg19

    அதல சேட னாராட ,அலையு லாவு பாலாட,Vardar
    அமுத சோத ரீயாட, -அயனாரும்
    கமலா நாபி மீதாட, விரைய நீல வானோடி
    கருட வாக னாராட, -அதனாலே,

    எதிலும் ராம னேகாண விழிகள் மூடி வாளாக
    அமரும் வாயு சேயோனும் -செவிசாயும்
    இவர்கள் ஆடும் பேரோசை விழசு பாவ வாலாட
    சிறிய பாத னாராட, -கரநாலில்,

    கதையும் வாளும் கூராழி ஒலியும் ஓசை போராழி
    சிலையும் ஆட, மீனாமை -மறையேனம்
    வளரு வாம னார்சீயம் பரசு ராம ஸ்ரீராம
    உழவு ராம கோபால -அவதார

    கதைகள் ஆட, காமாட்சி பெரிய வாளின் ஊரான
    அசலம் ஆனை மீதேறி -வளர்வோனே,
    பெரிய தேவி தாயோடு வருக நீல மாலோல,
    வரத ராஜ தேவாதி -பெருமாளே

    ————————————————————————-

     

    படங்களுக்கு நன்றி :

    http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (36)

    திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்….மூலவர் வராகர்(ஏன வடிவுற்று பூமாதேவியை ஏந்திக் காத்தவர்)….
    ————————————————————————————————————–

     

    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_25310480595
    தனனதந்த தான தனனதந்த தான
    தனனதந்த தான -தனதான
    —————————————————————-perumal
    ”புரமெறிந்த நேரம் தொழமறந்த ஈசன்
    ரதமழுந்து மாறு -புரிவேழன்
    வரமிரண்டு ஓடும் குறமடந்தை மேனி
    தழுவுகந்த வேலன் -முறைமாம

    கரமிரண்டு பானை தனிலுகந்த ஈகை
    உணவருந்தி சோணை -அடிவார
    வெளியுகந்து ஆமை வடிவிருந்த பாறை
    அணையமர்ந்து வானம் -குடையாக

    அரையிலொன்று பூண அறையிலொன்று காய
    முழமிரண்டு ஆடை -கவுபீன
    அணியணிந்து நாடும் எளியஅன்பர் தேற
    உரைபுகன்ற ‘’நானார்’(ஞான)-ரமணேசர்

    பறையுமந்த மூல உறையில்தங்கும் வாளாய்
    உடல்மறந்து வாழ -அருள்வாயே
    திருமணந்து நாளும் திருமணங்கள் காணும்
    திருவிடந்தை ஏன -பெருமாளே….கிரேசி மோகன்….

    —————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (35)

     

     

    கிரேசி மோகன்

    Mylapore-Sri-Adhikesava-Perumal-Theppotsavam-day-2-2014-00
    தனத்த தனத்தன தனத்த தனத்தன
    தனத்த தனத்தன -தனதான….

    ————————————————————————sri-ramar-sabari

    “வனத்தில் குறத்தியை துரத்தும் விருத்தனின்
    கருத்த நிறத்தொளிர் -முறைமாம,
    வலத்தில் சுடர்ப்பொறி, இடத்தில் உரத்தொலி
    எழுப்பு வலச்சுழி -கடலாழி,
    வனத்து தளத்தினை பருத்த புயத்தினில்
    பரத்தி, இலக்குமி -மணிமார்பில்
    இருத்தி, பறப்பன விரட்டி முகட்டினில்
    உதித்து, வரத்தினை -உனைநாடும்
    மனத்து குணத்தவர் துதிக்க இறைத்திட,
    இமைக்கும் கணத்தினில்-வருவோயே
    கடித்த பழத்தினை கொடுத்த கிழத்தினை
    பரத்தில் இணைத்திடும் -ரகுநாத
    சினத்தில் ,இருப்பினை பழித்த அரக்கனை
    இடுப்பு இருப்பினில் -இரையாக
    கிடத்தி நகத்தினை புதைத்(து)உ திரத்தினை
    குடிக்க குதித்திடும் -பெருமாளே”
    ———————————————————————————————

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (34)

    கிரேசி மோகன்

     
    தனந்த தானனத்த தனந்த தானனத்த
    தனந்த தானனத்த-தனதான….

     

    100_8808

     மாசி மகத் திருவிழா - குடந்தை மகாமகக் குளம்
    மாசி மகத் திருவிழா – குடந்தை மகாமகக் குளம்

    “அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்

    கும்பகோணம் தெப்ப உற்சவர்
    கும்பகோணம் தெப்ப உற்சவர்

    கிருந்த வாறிருக்க -ரமணேசர்
    புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
    நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
    அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
    அமைந்த யோகநித்ரை, -வனமாலி
    சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
    இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
    தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
    இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
    தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
    முகுந்த வாவகத்துள் -குடியேற
    புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்
    பறந்து வாயெனக்கு -துணையாக
    உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
    குடந்தை மாநிலத்து -பெருமாளே”

    பின்-குறிப்பு… அல்ல அல்ல எனது பின்-கோட்-குறிப்பு ‘’குடந்தை’’ எனப்படும் கும்பகோணம்…. என் சொந்த ஊர்….

     

    படங்களுக்கு நன்றி

    http://enthamizh.blogspot.in/2013/03/blog-post_5203.html

    http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2137&Cat=3

     

    Share
  • திருமால் திருப்புகழ் (33)

     

    கிரேசி மோகன்

    Tamil-daily-news-paper_31147402525
    ‘’ஏறு மயிலேறு விளையாடும் முகமொன்று’’ அருணகிரியார் சந்தத்தில்….
    ———————————————————————————————————–blogger-image-1144768691

    இராமன் திருப்புகழ்….

    “கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
    தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
    கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
    கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
    ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
    வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
    ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
    ஆதிகவி ஓதுமிதி காசபெரு மாளே”
    ———————————————————————————————————-

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (32)

     

     

    கிரேசி மோகன்

    Sri-Krishna-is-seen-as-the-searing-fire-of-destruction-by-the-demons-the-supreme-object-of-filial-love-by-His-parents-and-the-dark-worshipable-Lord-of-Srimati-Radharanis-heart
    தனத்தன தனத்தன
    தனத்தன தனத்தன-தனதான….

    ———————————————————————————————————————–
    “மரத்தடி குளக்கரை இந்திரன்
    படித்துறை தவத்தினில் -கழியாது
    வலப்புற மனத்திரு
    விரற்கடை புறத்தினில் -நிலையான

    இருப்பினை நெருக்கிட
    மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
    உரைத்ததை தினப்படி
    உளத்தினில் உறைத்திட -அருள்வாயே

    விரற்கடை பொருப்பினை
    உயர்த்திட இடைக்குடி -மழையாலே
    தவிப்பினை விரட்டிவ
    யிரத்தினை மிரட்டிய -கருநீல

    நிறத்தவ ,விடத்தலை
    நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
    அரக்கியை அழித்தவ
    இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”

    ——————————————————————————————————————

    பின்குறிப்பு-ஆன்மீக இதயம் இரண்டு விரற்கடை தள்ளி வலதுபுறம் இருப்பதாக பகவான் ரமணர் அனுபவம்….’’விரட்டி வயிரத்தினை’’-வஜ்ஜிராயுதம் ஏந்தும் இந்திரனைக் குறிப்பது….

     

    படங்களுக்கு நன்றி:

    http://sdgonline.org/viraha/satsvarupa_goswami/poem-for-february-12-2

    Share