கிரேசி மோகன்

Mylapore-Sri-Adhikesava-Perumal-Theppotsavam-day-2-2014-00
தனத்த தனத்தன தனத்த தனத்தன
தனத்த தனத்தன -தனதான….

————————————————————————sri-ramar-sabari

“வனத்தில் குறத்தியை துரத்தும் விருத்தனின்
கருத்த நிறத்தொளிர் -முறைமாம,
வலத்தில் சுடர்ப்பொறி, இடத்தில் உரத்தொலி
எழுப்பு வலச்சுழி -கடலாழி,
வனத்து தளத்தினை பருத்த புயத்தினில்
பரத்தி, இலக்குமி -மணிமார்பில்
இருத்தி, பறப்பன விரட்டி முகட்டினில்
உதித்து, வரத்தினை -உனைநாடும்
மனத்து குணத்தவர் துதிக்க இறைத்திட,
இமைக்கும் கணத்தினில்-வருவோயே
கடித்த பழத்தினை கொடுத்த கிழத்தினை
பரத்தில் இணைத்திடும் -ரகுநாத
சினத்தில் ,இருப்பினை பழித்த அரக்கனை
இடுப்பு இருப்பினில் -இரையாக
கிடத்தி நகத்தினை புதைத்(து)உ திரத்தினை
குடிக்க குதித்திடும் -பெருமாளே”
———————————————————————————————

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *