கிரேசி மோகன்

Sri-Krishna-is-seen-as-the-searing-fire-of-destruction-by-the-demons-the-supreme-object-of-filial-love-by-His-parents-and-the-dark-worshipable-Lord-of-Srimati-Radharanis-heart
தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன-தனதான….

———————————————————————————————————————–
“மரத்தடி குளக்கரை இந்திரன்
படித்துறை தவத்தினில் -கழியாது
வலப்புற மனத்திரு
விரற்கடை புறத்தினில் -நிலையான

இருப்பினை நெருக்கிட
மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
உரைத்ததை தினப்படி
உளத்தினில் உறைத்திட -அருள்வாயே

விரற்கடை பொருப்பினை
உயர்த்திட இடைக்குடி -மழையாலே
தவிப்பினை விரட்டிவ
யிரத்தினை மிரட்டிய -கருநீல

நிறத்தவ ,விடத்தலை
நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
அரக்கியை அழித்தவ
இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”

——————————————————————————————————————

பின்குறிப்பு-ஆன்மீக இதயம் இரண்டு விரற்கடை தள்ளி வலதுபுறம் இருப்பதாக பகவான் ரமணர் அனுபவம்….’’விரட்டி வயிரத்தினை’’-வஜ்ஜிராயுதம் ஏந்தும் இந்திரனைக் குறிப்பது….

 

படங்களுக்கு நன்றி:

http://sdgonline.org/viraha/satsvarupa_goswami/poem-for-february-12-2

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.