திருமால் திருப்புகழ் (41)
கிரேசி மோகன்
தனதான தத்தன தனதான தத்தன
தனதான தத்தன -தனதான….
———————————————————————————————————————-
“கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும்,
தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை
சபைகூச வைத்திடும் சனிவாய்அ சுத்தமும்
உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
செரிமானம் அற்றிட வலியால்து டித்தலும்,
சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக
அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
அணுகாது சத்துவ மனமேனி உற்றிட
அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா
மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
தரைசாய இத்தரை அவதார முற்றனை,
அருளாய்யெ னக்கரி -பெருமாளே”
————————————————————————————————–