திருமால் திருப்புகழ் (40)
கிரேசி மோகன்
தானந்த தான தானந்த தான
தானந்த தான -தனதான….
———————————————————————————————–
யாரென்ற கேள்வி யாலந்த நானின்
வேரொன்றி மூலம் -தனிலேகம்
பாரென்ற சோணை யாரன்பு சீடன்
பேரின்பம் நானும் -பெறவேணும்
ஓரங்கை சேணம் ஓரங்கை ஆழி
ஓரைந்து கேள -புவிவாதை
பாரங்கள் தீர போரங்கு மூள
தேர்நின்று கீதை -அருள்வோனே
பேரன்பு ஓடன் மாரன்பில் கூடும்
கோதண்ட ராமன் -பரிசாக
ஈரைந்து கேசன் ஊர்லங்கை ஏள
ஓர்தம்பி தோளில் -வரும்வேளை
ஓர்தந்த வேழன் சூதொன்று ஆட
சூழ்கின்ற ஆறின் -கரையோரம்
சீர்மங்கை தாயி மார்தங்க சாயும்
சீரங்க நாத -பெருமாளே
——————————————————————————————————-