வேறு ———— பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில் தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ் பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….கிரேசி மோகன்….!
திருச்சிராப்பள்ளி மக்கள் பலர் கண்டிராத அழகிய மலைகோட்டை தெப்பக்குளம். நம் அரசர்கள் செதுக்கி வைத்த வரலாற்று பதிவு.
களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில் மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய் கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின் பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….கிரேசி மோகன்….!
திருச்சி என்றால் ‘’ஸ்வாமி ஒங்கரந்தாஜி’’ அடியேன் நினைவுக்கு வருவார்….அவருடைய தாயுமானவர் ப்ரவசனம் கேட்டு அன்று இரவே அடியேன் எழுதியது உங்களது மேலான் பார்வைக்கு….!
தாயுமானவன் திருப்புகழ் ——————————
மகப்பேறு காண மருத்துவச்சி ஆக அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய் பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு) எல்லைதனை யாரறிவா ரே….!
காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில் நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு பார்க்கும் மலர்வண்டின் போக்கில், இனப்பெருக்கம் கோர்க்கும் குயுக்தியின் கண்….!
‘’அர்ஜுன விஷாத யோகம்’’…. ——————————————————–
எப்போது பார்த்தாலும் பசுவோடு வனவிஹாரியாய் விளையாடும் இந்தப் பையனால் புரவிகள் பூட்டிய போர்த் தேரை ஓட்ட முடியுமா….!இது அர்ஜுன சந்தேகம்….!
ஆத்தூர் சிவன் கோயில் சொத்து ‘’காய நிர்மலேசர்’’…ஏனோ அருணாசலம் நினைவுக்கு வந்தார்….ஆத்தூர் மோகனுடன்(நிர்வாகி) பேசியபோது சேலத்தை சுற்றியுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் ‘’காய நிர்மலேசர்’’ கோயில் அருணை போன்று அக்கினி ஸ்தலம் என்று குறிப்பிட்டார்…அம்பாள் அகிலாண்ட வல்லி(அருணை உண்ணா முலை அம்மைக்கு சமானம்) சமேத காய நிர்மலேசரைத் துதித்தோம்….!கோயில் குருக்கள் நாடகத்திற்கு வந்து, காய நிமலேசர் ரக்ஷையைத் தாமே கட்டிவிட்டு பிரசாதம் கொடுத்தார்….!
”காய(மேனி) நிருமலேசா காய மிதைவெங் காயம்(உரித்தால் உள்ளே ஒன்றும் இலாது)ஆக் காது கருணைகொள் :-தூயத்தீ- ஜோதி வடிவான சம்புவே, சங்கரா ஆதிஅகி லாண்டோய் அருள்’’….கிரேசி மோகன்….!