Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180716 Vyasa composes the Mahabharata 9×12 strathmore 160gsm lr

    ’’ஆரணர்(ஆரணம் -வேதம்….வேத வ்யாஸர்) சொன்னது, வாரணர் வாக்கிது,
    நாரணர்பூ பார நிவிருத்தி -பாரதம்:
    வேதர் உரைத்தது, வேழர் வடித்தது
    கீதையாம் பாரதக் குட்டு”(மகாபாரதக் குட்டு-WRITERS BLOCK)….கிரேசி மோகன்….!

    முனிவன் உரைத்த மகாபா ரதத்தை
    பணிவும் குறும்பும் பெருகும் -வினய
    முகத்துடன் மூஷிக வாகனன் தந்த
    நகத்தால் வடித்தல் நயம்….!

    வேறு
    ————
    பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
    பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
    தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
    பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….கிரேசி மோகன்….!

    Share
  • படமும், பாடலும்….!

     

    திருச்சிராப்பள்ளி மக்கள் பலர் கண்டிராத அழகிய மலைகோட்டை தெப்பக்குளம். நம் அரசர்கள் செதுக்கி வைத்த வரலாற்று பதிவு.

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….கிரேசி மோகன்….!

    திருச்சி என்றால் ‘’ஸ்வாமி ஒங்கரந்தாஜி’’ அடியேன் நினைவுக்கு வருவார்….அவருடைய தாயுமானவர் ப்ரவசனம் கேட்டு அன்று இரவே அடியேன் எழுதியது உங்களது மேலான் பார்வைக்கு….!

    தாயுமானவன் திருப்புகழ்
    ——————————

    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….!

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….!

    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….!

     

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….!

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….!

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….!

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….!

     

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….!

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….!

     

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….!

     

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….!

    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….!

     

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….!

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….!

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….!

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….!

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)….!

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….!

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..!

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….!

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….!

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….!

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180715 Goverdhan 9×12 strathmore 160gsm tinted paper -Krishnapremi lr

    குன்று மவர்தான்காண்!! காத்திடும் மந்தியவர்!
    என்றுமவர் ஏரார்ந்த கண்ணியின் -அன்பினைத்
    தட்டாது கட்டுண்ட தாமோ தரனவர்
    கொட்டாயில் ஆவதன் கன்று….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180714 Udupi Krishna A4 Canson 300gsm lr

    கோஹம் விசாரித்து, சோஹத்தின் சன்னிதியில்
    நாஹமித் தேஹமில்லை நன்குணர்ந்து -மோஹமாம்
    பிண்ணனியில் மேயும் பசுபாசம் ஓட்டிட
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180713 – Vraj Diary – Strathmore tinted paper 160gsm 9×12” mixed media (Wa.c pastel and charcoal) wm

    ”மனமந்தி தோழர், மணிகட்டப் பூனை
    இனத்திற்கும் காவல் இவரே, -சினம்கொள்
    ரஜஸ்மாம்ஸை(கம்ஸன்) வெல்ல, ரங்கனின் சத்வ,வ்
    ரஜடயரி தன்னில் ரமிப்பு’’(பாக வதத்தில் அடுத்த வதம் யார்….!டயரி பார்க்கிறார்….!)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180712 -Vatsalya 9×12” Strathmore tinted paper 160gsm mixedmedia -lr

    ”உச்சிமுக ரும்முன் உலகளந்தோன், கோமாதா
    மச்சினர் மாலவர் மாடுதழுவல்: -கொச்சுமவள்
    ராதையின், சக்களத்தி ராப்பகலாய், வாத்ஸல்ய
    போதைக்குப் பட்டமளிப் பு (பட்டாபிஷேகம்)’’….கிரேசி மோகன்….!

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180711 Yashoda and Putana -mixed media watercolour, pastel, and charcoal – Strathmore 160gsm tinted paper 9”x12”-lr

    பூதனை தான்யசோதை பூமிக்குத் தாய்ப்பாலை
    போதனை செய்யப் பிறந்தபிரான்: -தீதான
    நஞ்சுண்ண பேய்ச்சி நகிலுண்ட கண்ணபிரான்
    அஞ்சலென்று மோக்‌ஷம் அளிப்பு….!

    பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
    கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
    புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாய்க்குள்
    முகுந்தனுக்கு முப்பத்தி மூணூ(நமக்கெல்லாம் 32)….!

    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்….!

    ’’தூங்க வருகவே’’….!
    ———————————————————-

    பூதனை நச்சுப் பாலொடு அவளின்
    வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
    சீதரன், கோமளன், ஸ்யாமளன், என்னுளத்
    தீதினை விரட்டித் தூங்க வருகவே….!

    Share
  • கிரேசி மோகனின் “சங்கர லிங்காஷ்டகம்”

     

    பாடல்: கிரேசி மோகனின் “சங்கர லிங்காஷ்டகம்”
    இசை: குரு கல்யாண்

     

    சங்கர லிங்காஷ்டகம்
    —————————-

    சத்சிவ சித் தானந்தன லிங்கம்
    சகுண உபாசக நிர்குண லிங்கம்
    புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
    சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)

    தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
    தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
    சின்மயமான சிதம்பர லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)

    ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
    அண்ட சராசர மாயா லிங்கம்
    ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)

    முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
    மன்மத தகன மகாதவ லிங்கம்
    அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)

    அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
    அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
    நயன நுதலிடை நீறணி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)

    ”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
    குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
    அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)

    ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
    சத்திய சிவமய சுந்தர லிங்கம்
    உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)

    இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
    இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
    பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)

    பலஸ்ருதி
    ————-
    ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
    ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
    தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
    தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….

    Share
  • படமும், பாடலும்!

     

    குறும் பா….!
    ———————

    மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
    நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
    மானானான் மாரீசன்
    மண்ணானான் லங்கேசன்
    காகுத்தன்(ராமர்) கதை இதிகாசம்….கிரேசி மோகன்….!

     

    மாலை மயக்கம்….!
    ———————————

    சூரி நாகம்மாளின் “ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு”….

    “வேந்தன் இராமனே வேதாந்தி உன்னுள்ளே,
    சாந்தியே சீதையாம், சோகவன-மாந்தரே,
    மானார்வம் மாரீசம், நானார்வம் கொள்வோம்நாம்,
    சோணா சலராமன் சொல்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    KRISHNA FOR TODAY….!
    ——————————————————

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கீதா உபதேசா காப்பு….!

    கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
    ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதனுக்காய் -தாலத்தில்
    பக்ஷணத்தை ஏந்திநின்றால் பக்தராதைக்(கு) ஈடாக
    தக்ஷிணையாய் கேட்டான் தபஸ்….!

    காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
    நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
    பார்க்கும் மலர்வண்டின் போக்கில், இனப்பெருக்கம்
    கோர்க்கும் குயுக்தியின் கண்….!

    ‘’அர்ஜுன விஷாத யோகம்’’….
    ——————————————————–

    எப்போது பார்த்தாலும் பசுவோடு வனவிஹாரியாய் விளையாடும்
    இந்தப் பையனால் புரவிகள் பூட்டிய போர்த் தேரை
    ஓட்ட முடியுமா….!இது அர்ஜுன சந்தேகம்….!

    ’’மாடோடு மாடாக மன்னார் குடிமைனர்
    கூடோடு(கூட ஓடு) கின்றானே கன்றிருக்கும் -காடதனில்,
    சோர்ந்தான் அருச்சுனன், சீராயர் சேய்க்குண்டோ
    தேர்க்குதிரை ஓட்டும் திறன்’’….கிரேசி மோகன்….!

    அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
    உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக(ETERNAL CUSTOMER) வா….!

    Share
  • ’’காய நிர்மலேசர்’’….!

    ஆத்தூர் சிவன் கோயில் சொத்து ‘’காய நிர்மலேசர்’’…ஏனோ அருணாசலம் நினைவுக்கு வந்தார்….ஆத்தூர் மோகனுடன்(நிர்வாகி) பேசியபோது சேலத்தை சுற்றியுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் ‘’காய நிர்மலேசர்’’ கோயில் அருணை போன்று அக்கினி ஸ்தலம் என்று குறிப்பிட்டார்…அம்பாள் அகிலாண்ட வல்லி(அருணை உண்ணா முலை அம்மைக்கு சமானம்) சமேத காய நிர்மலேசரைத் துதித்தோம்….!கோயில் குருக்கள் நாடகத்திற்கு வந்து, காய நிமலேசர் ரக்‌ஷையைத் தாமே கட்டிவிட்டு பிரசாதம் கொடுத்தார்….!

    ”காய(மேனி) நிருமலேசா காய மிதைவெங்
    காயம்(உரித்தால் உள்ளே ஒன்றும் இலாது)ஆக் காது கருணைகொள் :-தூயத்தீ-
    ஜோதி வடிவான சம்புவே, சங்கரா
    ஆதிஅகி லாண்டோய் அருள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180709 Bee of Brindavan A4 Canson 300 gsm lr

     

    உண்டாகி உண்டுமிழுந்து குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு(காலதேசவர்த்தமானம் கடந்த வஸ்து கண்ணனே)….

    வண்டரி(வண்டு அரி) யென்றரி யாமலே வந்திரு
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
    விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து….கிரேசி மோகன்….!

    ‘பிருந்தா வனத்து கருந்தா மரை(றை)யே
    பறந்த தினமென்றும் போற்றி -அருந்திட
    மாலை அழைக்கும். மகரந்த பூக்களெலாம்
    வேலை(கடல்) படுத்தவண்டே வா’’….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180707 Yashoda Krishna 10×14 (26x36cms) white and white charcoal on black paper (Arches front) lr

    ”கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
    கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
    உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
    இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180708 Vishwaroopa -DWA A4 Canson 300gsm 600dpi lr

    ’’நானளித்த ஞானக்கண் ணால்நன்கு பார்பார்த்தா
    ஊனக்கண் வாய்த்த(து)உன் ஊழ்வினையே -பூனக்கண்
    பொத்தினால் பூலோகம் போகுமோ பார்த்தனே
    இத்தரைபா ரம்நாம் இணைப்பு’’….கிரேசி மோகன்….!

    Share