கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

உண்டாகி உண்டுமிழுந்து குண்டாகி, வேதக்கற்
கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
ரெண்டாகி வந்துபோகும் பண்டு(காலதேசவர்த்தமானம் கடந்த வஸ்து கண்ணனே)….
வண்டரி(வண்டு அரி) யென்றரி யாமலே வந்திரு
புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
கொட்டுதே தேளாய்க் கடுத்து….கிரேசி மோகன்….!
‘‘பிருந்தா வனத்து கருந்தா மரை(றை)யே
பறந்த தினமென்றும் போற்றி -அருந்திட
மாலை அழைக்கும். மகரந்த பூக்களெலாம்
வேலை(கடல்) படுத்தவண்டே வா’’….!