படமும், பாடலும்!
குறும் பா….!
———————
மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
மானானான் மாரீசன்
மண்ணானான் லங்கேசன்
காகுத்தன்(ராமர்) கதை இதிகாசம்….கிரேசி மோகன்….!
மாலை மயக்கம்….!
———————————
சூரி நாகம்மாளின் “ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு”….
“வேந்தன் இராமனே வேதாந்தி உன்னுள்ளே,
சாந்தியே சீதையாம், சோகவன-மாந்தரே,
மானார்வம் மாரீசம், நானார்வம் கொள்வோம்நாம்,
சோணா சலராமன் சொல்”….கிரேசி மோகன்….
படமும் பாடலும் மிகவும் அருமை,,
மன்னிக்கவும்,
இருப்பினும் வால்மீகி இராமாயணத்தின் அடிப்படையில் படம் அமைந்துள்ளது என்று எண்ணுகிறேன்.
கம்பர் தமிழர் தம் பண்பாட்டை மனதில் கொண்டு இராவணன் சீதையை பர்ணசாலையோடு கொண்டு சென்றதாகவே கூறியுள்ளார்,, அந்த அடிப்படையில் அமைந்திருந்தால் நலமாக இருந்திருக்கும்,