கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”உச்சிமுக ரும்முன் உலகளந்தோன், கோமாதா
மச்சினர் மாலவர் மாடுதழுவல்: -கொச்சுமவள்
ராதையின், சக்களத்தி ராப்பகலாய், வாத்ஸல்ய
போதைக்குப் பட்டமளிப் பு (பட்டாபிஷேகம்)’’….கிரேசி மோகன்….!
“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….கிரேசி மோகன்….!