( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

நிலவினிலே காலை வைத்தான்
நீள்கடலை சுற்றி வந்தான்
வளம் கொழிக்க வைப்பதற்கு
வகுத்து நின்றான் பலவழியை
அளவில்லா ஆசை கொண்டு
ஆற்றி நின்றான் ஆராய்ச்சி
ஆனாலும் அவன் மனமோ
அமைதி நிலை அடையவில்லை !

ஆண்டவனைப் பழித்து நின்றான்
அவதூறாய்ப் பேசி நின்றான்
அறம்பற்றி நியாயம் பற்றி
அதிகமாய் கிண்டல் செய்தான்
இறப்போடு பிறப்பு எல்லாம்
ஏன் இங்கே வருகுதென
இன்றுவரை குழப்பி நின்று
இவன் தெரியா உலைகின்றான் !

வாதம் பல செய்கின்றான்
வழக்கு பல காணுகிறான்
ஆதாயம் தேடித் தேடி
அறம் தொலைத்து நிற்கின்றான்
அன்னை தந்தை பாசம்கூட
அவன் மனதில் காணவில்லை
அவன் மனமோ என்னாளும்
அல்லலில் தான் உழல்கிறது !

ஆண்டவனின் படைப்பு அதனில்
அவன் படைப்பே உயர்வாகும்
அவனுக்கே ஆற்றல் பல
ஆண்டவனே வழங்கி உள்ளான்
ஆனாலும் அவன் போக்கோ
ஆண்டவர்க்கே புரிய வில்லை
அவன் மட்டும் இவ்வுலகில்
அதையெண்ணா வாழுகிறான் இவ்வுலகில் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *