’’காய நிர்மலேசர்’’….!
ஆத்தூர் சிவன் கோயில் சொத்து ‘’காய நிர்மலேசர்’’…ஏனோ அருணாசலம் நினைவுக்கு வந்தார்….ஆத்தூர் மோகனுடன்(நிர்வாகி) பேசியபோது சேலத்தை சுற்றியுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் ‘’காய நிர்மலேசர்’’ கோயில் அருணை போன்று அக்கினி ஸ்தலம் என்று குறிப்பிட்டார்…அம்பாள் அகிலாண்ட வல்லி(அருணை உண்ணா முலை அம்மைக்கு சமானம்) சமேத காய நிர்மலேசரைத் துதித்தோம்….!கோயில் குருக்கள் நாடகத்திற்கு வந்து, காய நிமலேசர் ரக்ஷையைத் தாமே கட்டிவிட்டு பிரசாதம் கொடுத்தார்….!
”காய(மேனி) நிருமலேசா காய மிதைவெங்
காயம்(உரித்தால் உள்ளே ஒன்றும் இலாது)ஆக் காது கருணைகொள் :-தூயத்தீ-
ஜோதி வடிவான சம்புவே, சங்கரா
ஆதிஅகி லாண்டோய் அருள்’’….கிரேசி மோகன்….!