
மத்தினால் மாதாவால் மொத்துண்ட மைந்தனை
பத்திலோர் பாகவதப் பிள்ளையை -ஒத்தனாய்
மண்ணினைக் காக்க மகாபா ரதம்செய்த
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
கல்லகலிகைக்கு காலடி மோக்ஷம்
புள்ளகன்(ஜடாயு) ஏகிட புல்லிட்டு(தர்ப்பை) மோக்ஷம்
அல்லகல் வித்திடும் ஆதித்ய ரூபம்
வில்லகல் மார்பில் வேய்ந்திடும் ராமம்….!(எழுதித் தந்தேன் ‘’கிரிதரிடம்’’….அதற்கு இசையமைத்து எனது எழுத்துக்கு ஊட்டம் கொடுத்தவர் பாடினார் ‘’கிரிதர்’’…..!)
”கல்ராம் அகலிகைக்கு, இல்ராம்வை தேஹிக்கு,
கொள்ராம் விபீஷணன் காப்புக்கு, -தொல்ராம்
அவதார விஷ்ணு, அனுமான் தனக்கு
சிவராம க்ருஷ்ணா சரண்’’….கிரேசி மோகன்…!
. விசாரிக்காமல் சபித்து விட்டீரே என்ற அகலிகையின் வார்த்தை கவுதம முனியை சாபமாக வாட்ட….அதற்கு விமோசனமாக தில்லை சென்று ”சிவதாண்டவ தரிசனம்” செய்தாராம்….!பசவான் ஸ்ரீ ரமண வசனாம்ருதம்…..!
”ஆண்டவன் ஈசன் அழகுமை யாளோடு,
தாண்டவக் கோலம் தரிசிக்க, -வேண்டிவந்தார்,
கல்ல கலிகைக் கணவர் கவுதமர்,
தில்லைக்குப் போய்சாபத் தீர்வு”….கிரேசி மோகன்.
தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat….
”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள்
ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)
‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)
‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)
’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)
‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)
‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)
‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)
‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)
‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)
’’தானாய் வருவது வெற்றி
முயன்று பெறுவது தோல்வி’’….(10)
‘’முக்கால்வாசி வெற்றி
மயிரிழையில் தோல்வியிடமிருந்து
தப்புவதுதான்’’….(11)
’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)
’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
ஆண்டியாகலாம்’’….(13)
‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
ஈர மரணம்’’….(14)
‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)
‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)
‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
கந்தையாக்காதே’’….(17)
‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)
‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)
‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)
‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)
’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)
‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)
‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
————————————————————————————————————————-

அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
வேகமாய் நித்ரை விழிப்பு….!
அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!

‘நானகங் காரத்தூண் நைந்திடச் சுக்குநூறாய்
கானக சிங்கமுச்சி, கட்டுடல் ,-மானுடமாய்,
பான கநரசிம்மம் பாயும் பிரகலாதன்,
பூணக பக்திக்குப் பால்’’….!
கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
குளிர்ந்தவரின் உச்சியைக் கோதிய சிங்கம்
வலிந்தூட்டல் சங்குப்பால் வாய்….!
ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து….கிரேசி மோகன்….!
பாதாதி கேசத்தைப் பார்த்திடல் வேண்டுமே!
வேதாந்த தேசிகர் விண்ணப்பம் -போதந்த
வேடன்(காலன்) வருகையில், சூடிக் கொடுத்தோள்,ஆ(பசு):
தேடல்கோ பாலவிம்ச தி….கிரேசி மோகன்….!
அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
காதுகளில் காத்திருப்பே னென்று….!
கீழ்கொவள வீடில் குடியேறப் போகின்ற
ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா -கூழ்கவலை
போக்கதனைப் போக்க பிராட்டியுடன் ஏளினோய்
காப்பெனக்கு உந்தன் குளம்பு….!
ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
பெண்பால் பாரதியே பார்….!
சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
வருவாய் அருகே குருவாகிக் காட்டு
பரிமேல் அழகா பரிவு….!
அரிமுகம் கண்டேன் அறிமுகம் கொண்டேன்
பரிமுகப் பெம்மான் பெயரால் -திருமகள்
செய்யாள் மடியிருக்க அய்யா அயக்ரீவா
கையால் அனுக்கிரஹம் காட்டு…..!
புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
பலனெட்டெட் ஆயகலை போடு….
ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
பெண்பால் பாரதியே பார்….கிரேசி மோகன்….!
சிரமதில் கொள்ளை முறமதில் ஏந்தி
பரிமுகன் உண்ண புரவிதன் குளம்பை
இருபுஜம் வைக்க இருக்கையாய்த் தந்து
உறவினில் தோழன் ஆனஞான தேசிகா….(கோபுலு சார் ஓவியம்….ஒரு தீபாவளி மலரில் பார்த்த ஞாபகம் பரியே….!)
இந்தத் தொடரில் நான் பதில் சொல்ல மிகவும் கஷ்டப்பட்டக் கேள்வி….முதல் கேள்வி….கேட்டது கல்கி ஆசிரியர் சீதா ரவி….”வாராவாரம் கல்கியில் வாசகர்கள் கேள்விக்கு
பதில் சொல்ல முடியுமா….?”….அன்றிரவு கனவில் நான் மகாபாரத ”நச்சுப்-பொய்கை” கரையில் நின்று கொண்டிருக்கிறேன்….கீழே தரையில் தருமன் உட்பட பாண்டவர்
ஐவரும் மயங்கி மாண்டுக் கிடக்கின்றனர்….அப்போது ஒரு அசரீரி குரல் ”கிரேஸி….”யக்ஷ ப்ரச்னம்” என்றால் என்ன….?”….” அது ஒரு தீபாவளி பட்சணம்” என்று நான் உளற
அப்போது பாண்டவர்கள் சார்பாக என்றும் எதற்கும் மயங்காத பொதிகை வேளுக்குடி கிருஷ்ணன் தோன்றி ”அட! சமத்தே ”என்பது போல என்னைப் பார்த்து சிரித்து விட்டு
”யக்ஷன் என்றால் யக்ஷன்….ப்ரச்னம் என்றால் கேள்வி” என்று சொல்லிவிட்டு வேய்ங்குழல் கிருஷ்ணனாக மாறி மறைந்து விட்டார்….அதேசமயம் விக்கிரமாதித்தியன் தோன்றி
” கிரேசி….கம்ப-ராமாயணத்தை எழுதியது யார்….?”என்று கேட்க….நான் அதற்கு ” யக்ஷன்” என்று சொல்ல, விக்கிரமாதித்தன்” பட்டி மவனே….கேள்வியிலேயே பதில் இருப்பது
தெரியவில்லையா….கம்ப-ராமாயணத்தை எழுதியது கம்பர்” என்று பகர்ந்து விட்டு ”அந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டதா நினச்சுக்கறேன்….மணிமேகலையை எழுதியது யார்”
என்று கேட்டு வேதாளம் போல என் தோளில் குந்தினார்….பளு தாங்காமல் நான் ”மணி” என்று பதில் சொல்ல என் தலை ரெண்டாயிரம் சுக்கல்களாக வெடித்தது….
கனவும் கலைந்தது….என் மனைவி என்னை எழுப்பி அந்த வாரக் கல்கியைக் காட்டினாள்….அதில் அடுத்த வாரத்திலிருந்து ”கிரேசியைக்-கேளுங்கள்” தொடர் ஆரம்பிப்பதாக
விளம்பரம்….அன்று ”எல்லாம் நல்லபடியாக நடக்க” நான் கபாலி கோவிலுக்குச் சென்றேன்….அங்கு தனது அமெரிக்க பேரனுடன் வந்த எனது எதிர் வீட்டு அங்கிள்
பேரனின் கேள்வியால் பட்டபாட்டைப் பார்த்தேன்….ஸ்வாமிக்கு அபிஷேகம்….பேரன் தாத்தாவைப் பார்த்து ”தாத்தா….வாட் ஈஸ் கோயிங் ஆன்”
என்று கேட்க, எ.வீ.தாத்தா ”காட் ஈஸ் டேகிங் பாத்” என்று அபிஷேகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்….அடுத்ததாக ஸ்வாமிக்கு அலங்காரம் செய்ய திரை போட்டார்கள்
….சஸ்பென்ஸ் தாங்காத சிறுவன் ”தாத்தா….இப்ப வாட் ஈஸ் கோயிங் ஆன்…?” என்று கேட்க, எ.வீ.தாத்தா”உம்மாச்சிக்கு டிரஸ் பன்ணறாங்க…” என்று அலங்காரத்தை அரைகுரை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்….”என்ன தாத்தா….உம்மாச்சி குளிக்கறதை(அபிஷேகம்) பாக்க அலவ் பண்ணவங்க டிரஸ்(அலங்காரம்) பண்ணிக்கறதை மட்டும் ஏன்
பாக்க அலவ் பண்ணல….” என்று கேட்க, மொழி பெயர்த்த எ.வீ.தாத்தா பதில் சொல்ல முடியாமல் என்னைப் பார்த்து முழி பெயர்த்தார்….விளையாட்டுப் பையன் கேள்விக்கே
பதில் சொல்ல முடியாதபோது வாசகர் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்லப் போறேங்கறதை நினைத்த எனக்கு அன்று கர்பக்கிருகத்தில் கர்பம் கலங்கியது….ஆழம்
தெரியாமல் காலை விட்ட நான் முடவன்….இருந்தாலும் கல்கி என்ற கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டேன்….
கல்கி ஒரு போஜ ராஜ சிம்மாசனம்….அதில் உட்கார்ந்தவர்கள் கட்டுத் தறியாக இருந்தாலும் கம்பன், காளிதாசன் போல கவி பாட ஆரம்பித்து விடுவார்கள்….வழக்கமாக
பேட்டிகளிலும், நேருக்கு நேர் நிகழ்ச்சிகளிலும் ”கிரேசி….உங்கள் மறுபக்கம் என்னவோ ”….என்று கேட்பார்கள்….நான் பரிதாபமாக ”புற முதுகைக்” காட்டுவேன்….நான்
கற்றது கையளவு (அதுவும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள் கையளவு)….கல்லாத உலகளவைக் இந்த கேள்வி-பதிலுக்காகக் கற்று, முதுகைக் காட்டாமல் முதன்முறையாக
என் ஓரளவு மூளையைக்(ஈசான்ய-மூளையில் ஈஷிக்கொண்டிருந்ததை) காட்டினேன்…. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்த கேள்வி-பதில், வேள்வி-பதிலாக வெற்றிகரமாக
நடந்தது என்றால் அதற்கு பிரசுரரித்த கல்கியும் கேள்விகளைப் பிரசவித்த வாசகர்களும்தான் காரணம்….மற்ற காரணங்கள்….
சரித்திரத்தில் நான் தருமி அளவு தரித்திரம்….ஹாய்-மதன் ஆக முடியாது….ஜலதோஷ சயனஸ் தெரிந்த அளவு சயன்ஸ் தெரியாது…ஆக சுஜாதா லெவலுக்கு ”ஏன்? எதற்கு? எப்படி?”
பாடறியேன் படிப்பறியேன்….காமெடி கலக்கியம் தெரிந்த அளவுக்கு கருத்தாழமான இலக்கியம் இம்மியும் தெரியாது….சிரிப்பூர் சாக்லேட் கிருஷ்ணனான என்னால் அமுதசுரபி
திருப்பூர் கிருஷ்ணனாக ஆவது துர்லபம்….அந்துமணி எதார்த்தம், துக்ளக் சோவின் துல்லியம் இப்படி எந்தப் பக்கம் போனாலும் இடி….எதேச்சையாக என் நண்பன் சு.ரவி சொல்ல ”கண்டேன் கி.வா.ஜவை” ….அவரது கலைமகளில் வெளியான ”விடையவன்-பதில்களை” காலையும் மாலையும் நாக்கில் வேல் குத்திக் கொண்டு பாராயணம் செய்தேன்….அவரது
வார்த்தை ஜாலத்தைக் கையாண்டு, நானும் கி.வா.ஜ (கிரேசி வார்த்தை ஜாலம்) ஆக நப்பாசைப் பட்டேன்….கி.வா.ஜவின் மகன் முருகன் என் பால்ய நண்பன் என்பதால், வேறு
வழி இல்லாமல் கி.வா.ஜவின் ஆன்மா ”தொலையறது போ” ரீதியில் எனக்கு வழி காட்டியது….
தமிழ், ஆங்கிலம்,இந்தி,லத்தீன்,இத்தாலி ஏன் மெளனம் இப்படி எல்லா மொழிகளுமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்….உற்றுப் பார்த்தால் ஜாடை தெரியும்….உரசிப் பார்த்தால்
சிலேடை புரியும்….உதாரணம்….சமர்ப்பணம்….SOMEONEக்கு அர்ப்பணமே சமர்ப்பணம்….இந்தக் கேள்வி பதில் வெற்றிக்குக் காரணமான SOMEONEகள் அன்றிலிருந்து இன்று
வரை SAMEONEஆக இருக்கும் , எனது புனே நண்பன் சு.ரவியும், திந(தி.நகர்) நண்பன் ”என்னைப் போல் ஒருவனாகிய” இரா.முருகன்….சுடச்சுட நான் ஸெல்லில் அனுப்பும்
கேள்விக்கான பதில்களை ஆற அமர படித்து அபிபிராயமும் தருவார்கள்….அழகு படுத்தியும் இருக்கிறார்கள்….இந்தக் கேள்வி பதில்களில் நிறைய வெண்பாக்களைப் பார்க்கலாம்….
புனேவிலிருந்து CELL வழியாக எனக்கு வெண்பா இலக்கணத்தை ஸெல்லிக் கொடுத்தவன் சு.ரவி….”நட்புக்கும் உண்டோ அடைக்கும் நாதாங்கி”….நன்றி நண்பர்களே….
எனக்கு வந்த கேள்விகளிலேயே அதிகமாக வந்த கேள்வி ”கிரேசி….உங்களுக்குப் பின் நகைச்சுவையில் உங்கள் வாரிசு யார்….?”இந்தக் கேள்விக்கு விடை காண, எனது
இரண்டாவது மகன்பத்பனாபனிடம், சில கேள்விகளைக் கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன்….”காட்டுக்கு போன ராமரை கொசு கடிக்காதா….?” என்ற வாசகரின் விபரீதக்
கேள்விக்கு ”கடித்துமலேரியா பரப்பும் கொசு பெண்-கொசு….பெண்-கொசு ராமரைக் கடிக்காது….ஏனென்றால் அவ்ர் ஏக-பத்தினி விரதன் ”என்ற பதிலைக் கூறி ஜாலிம்-லோஷன் தடவிக்கொள்ளும் அளவுக்கு என் மகன் புல்லரிக்க வைத்தான்….”பெத்தபொழுதில் பெரிதுவக்கும் தந்தைதன் பிள்ளையை-இத்தரைக்கு வாரிசெனும் போது”….குறள் கூறி மகிழும் அளவுக்கு எனக்குக்கிடைத்த போனஸ் இது….”உன் நன்றி வேண்டாம்….சொத்தில் பாதியை சன்மானமாகக் கொடு” என்கிறான்….வாயுள்ள பிள்ளை….
முகம் தெரியாத ஆனால் முகவரி தெரிந்த, கேள்வி கேட்டு என்னைக் குடைந்த கல்கி வாசகர்கள் ,போஜ ராஜ சிம்மசனத்தில் ஏறும் போது இருபுறமும் இருந்து வினாக்கள்
தொடுத்து விழி பிதுங்க வைக்கும் பதுமைகள்…..”கேள்வி கேட்பது கஷ்டமா ?….பதில் சொல்வது கஷ்டமா ?” என்ற கேள்விக்கு ”யாமறிந்த பதில்களிலே கேள்வி கேட்பது போல
கஷ்டமானது எங்கும் காணோம்” என்பதுதான் என் பதிலாக இருக்கும்….”சார் என் வயது இருபத்தியெட்டு” என்ற என் நாடகக் கதாநாயகன் மாதுவின் பதிலுக்கு ஏற்ற
கேள்வியை நான் ஒரு இரவு முழுக்க முழித்தேன்….” மாது உனக்கேன்ன ஒரு இருவத்தியேழு வயசு இருக்குமா….?” என்று மாதுவின் வீட்டுக்காரர் கேட்க, அதற்கு மாது” கூட
ஒண்ணு சேத்துக்குங்க சார்” என்று சொல்ல ,பதிலுக்கு வீட்டுக்காரர் ”இருணூத்தியெழுவத்தி ஒண்ணா ” என்று கேட்க, அரங்கம் ஜோக்கால் அதிரும்….தோல்Vயில்
”V FOR VICTORY” இருப்பது போல கேள்’வி’யில் ”வி” FOR விடை இருக்கிறது….கல்கி வாசகர்கள் கேள்வி வீசகர்கள்….”கிரேசி நீ பெண்ணாக மாறினால்….கிரேசி நீ
காணாமல் போனால்….கிரேசி நீ கடவுளானால் ” என்று கேள்விகள் கேட்டு, அதற்கு சமயோசிதமான பதிலை யோசிக்க இல்லாத கந்தை மூளையை கசக்க வைத்து
கட்டிக் கொள்ள வைத்து கெட்டிக்காரனாக்கிய கல்கி வாசகர்களுக்கு வடிவேலுவாக ஒரு கேள்வி ”என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே….!”….
வாசகர் தபாலில் வாராவாரம் வழக்கமாக ஒருவராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள்….”உங்கள் நகைச்சுவைக்கு யார் காரணம்…?”….”யார்” என்பதை பொருத்தமாக
இந்த முன்னுரையில் முழங்க விரும்புகிறேன்….நான் கும்பிடும் சாமி, நகைச்சுவைக்காக பிரத்தியேகமாக அவதரித்து, அப்புசாமியைப் பெத்த சாமி திரு.பாக்கியம் ராம’சாமி’….
கடவுள் உண்டு என்று சொல்லும் ஆஸ்திகனையும், இல்லை என்று சொல்லும் நாஸ்திகனையும் நகைச்சுவையால் ”உண்டு-இல்லையென்று” ஆக்கும் ஹாஸ்திகன் இவர்….
ஆள் பாதியான எனக்கு அணிந்துரையைக் கட்டிவிட்டு ஆடை பாதி தந்த அந்த ஆயிரங்காலத்து பயிருக்கு இந்த நேற்று முளைத்த நகைச்சுவைப் புல்லின் நன்றி…
பாதி ஆடை தந்தது பாக்கியம் என்றால் அணிந்துரையாக மீதி ஆடை தந்து இந்த புத்தகத்தை மேம்படுத்தியவர் அமுதசுரபி ஆசிரியர் ” திருப்பூர் கிருஷ்ணன் ” சார்….
அமுதசுரபியில் வெண்பாக்களில் ”ரமணாயணத்தை” எழுதவைத்து, என்னுள் இருக்கும் கவிஞனை எனக்கே கண்டு பிடித்து காட்டிக் கொடுத்த ” இலக்கிய கொலம்பஸ்”
திருப்பூரார் எனக்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்தும் பொறுப்பூரார்….அவருக்கும் அடியேனின் நன்றி….
கடைசி கடைசியாக என்னை கணினியில் எழுத கற்றுக் கொடுத்த ச.ந.கண்ணனுக்கு நன்றி….போன வாரத்திற்கு அடுத்த வாரம் பதில் அனுப்பும் இந்த லேஸி-மோகனை
தலையெழுத்தே என்று தாங்கிக் கொண்ட கல்கி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கதிர் ”பாரதி, சூர்யாக்களுக்கு”, அடுத்த ஜென்மத்தில் ஆழ்வாராகப் பிறந்து ”பல்லாண்டு பாடி”
வாழ்த்துகிறேன்….ஒவ்வொரு வாரமும் கல்கியைச் சேர்ந்த ”கண்ணப்பனும்-தாமுவும்” அடுத்தவார விடைகளுக்கான வினாக்களைக் கொண்டு வருவார்கள்….விடைகளுக்காக நான்
இல்லாத முடியை பிய்த்துக் கொள்வதை வக்கிரமாக ரசிக்கும் என் வீட்டார் அப்போது ”வினா வேங்கடேசம் வராரே! வராரே!….விடை வேங்கடேசம் தராயோ! தராயோ!” என்று என்னை எழுப்பி சுப்ரபாதம் பாடுவார்கள்….சிரமத்தைப் பார்க்காமல் சீன யாத்திரிகர்கள் ”யுவாங்-சுவாங்” போல வாசகர் கேள்விகளை ஏந்தி வந்த ”கண்ணப்பன்-தாமு”வுக்கு நன்றி….
முடிவாக….கல்கி வாசகர்களுக்கு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் ”நான் யார்” கேள்வியை வைக்கிறேன்….திருப்திகரமான விடை சொல்லும் வாசகருக்கு குருவாயூர் துலாபாரத்
தராசில் குந்த வைத்து எடைக்கு எடை என்னையே தருகிறேன் போறுமா….!
——————————————————————————————————————————————————————————————————————————-
முன்னுரை by கிரேசி மோகன்….!
———————————————————————
கல்கி ”க்ரேஸியைக் கேளுங்களில்” கேட்டு நான் இன்னமும் பதிலளிக்காத கேள்வி….” உங்களுக்குப் பிடித்த வசனம் எது?(நீங்கள் எழுதிய சினிமா வசனமாகவும் இருக்கலாம்)….நான் பார்த்த சினிமா, நாடகங்களில் தேடியதில் சந்துஷ்டியாக ஏதும் அகப்படவில்லை….சினிமா வெண்ணெய்யை விட்டு சிறுகதை-நாவல் நெய்யில் அலைய ஆரம்பித்தேன்….”கண்டேன் வசன சீதையை”…. ”சாமி….இந்த தராசு எளுதின காயிதத்துக்கும் எளுதாத காயிதத்துக்கும் உள்ள எடை வித்யாசம் காட்டும்”-தி.ஜானகிராமனின் சிறு கதையில் வரும் இந்த வசனம் ”எதுக்கு நீயெல்லாம் வசனம் எழுதறே?” என்ற ரீதியில் என்னை விசனமாகப் பார்த்தது….” இனிமே வசனம் எழுதினே….உடைஞ்ச கைக்கும் உடையாத கைக்கும் உள்ள வித்யாசத்தை தராசு காட்டும்” என்ற தோரணையில் அச்சுறுத்தியது நான் அடுத்ததாகப் படித்த வசனம்….அது, அசந்தர்ப்பமாக நிகழ்ந்து விட்ட கர்பத்தைக் கலைக்க வந்த பெண்ணிடம் மருத்துவச்சி கூறுகிறாள் ” நாளைக்கு காலீல ஒண்ணும் சாப்பிடாம வெறும் வயத்தோட வாம்மா…வெறும் வயத்தோட அனுப்பிடறேன்”-இரா.முருகனின் ”நாள்” சிறுகதையில் வரும் இந்த வசனத்தை நான் சொல்லாத ”நாள்” கிடையாது , சொல்லாத ”ஆள்” கிடையாது, கமலஹாசன் உட்பட….சிறு-கதை தொகுப்புக்கள், அரசூர்-வம்சம் நாவல் என்று பாராயணம் செய்ததில், இந்த சீதக்காதிக்கு நான் சீத்தலைச் சாத்தனாராகி விட்டேன்….
ஹாஸ்யம் அளவுக்கு எனக்கு ஓரளவு ஜோஸ்யமும் தெரியும்….கையைப் பார்த்தல்ல….கை-எழுத்தைப் பார்த்து….வாத்தியார் சுஜாதா அமரராகவில்லை….சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார்….ஸ்ரீரங்கத்தனமாகட்டும், சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும்-முருகனுக்கும் குறைந்த பட்ச ஒற்றுமை குமுதம் பாஷையில் ஆறு உண்டு….எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரை நடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் முற்றும் போடும் தைரியம், விஞ்ஞான பரிபாஷைகள், சாதுர்யமான சம்பாஷனைகள், மரபு PLUS அமரபு கவித்துவம்….இப்படி சுஜாதா போல இந்த முருகனுக்கு ஆறு முகம் உண்டு….பூ கட்டிப் பார்த்தேன், ரெண்டு விரலை நீட்டி என் பேரனைத் தொடச் சொன்னேன், கிளிக்கு தானியம் கொடுத்து CARDஐ எடுக்கச் சொன்னேன்….எல்லா ஜோஸ்யத்திலும் ”வருங்கால சுஜாதா- இரா.முருகன்” என்றுதான் வந்தது….பலிக்கவைக்க வேண்டியது முருகனின் கணினிக் கையில்தான் இருக்கிறது….
இவரோ இலக்கியவாதி….நானோ காமெடி கலக்கியவாதி….பிரபந்தத்திற்கு ”பெரிய-வாச்சான் பிள்ளையைப்” போல நான் வாஞ்சையான நட்பால் முருகனுக்கு ”வந்து-வாச்சான் பிள்ளை”….முன்னுரை எழுத இந்த தகுதி போதுமா என்று யோசித்துப் பார்த்தபோது ”ஸாரி கொஞ்சம் ஓவராகப் பட்டது….சரித்திரக் கதைகளில் மன்னர் வருவதற்க்கு முன்பு, கட்டியங்காரன் வருவதில்லையா?….அவனிடம் என்ன பாண்டித்தியமா எதிர் பார்க்கிறோம்….”பராக் பராக்” சொல்லத் தெரிந்தால் போதாதா, என்று என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்….
மறுபடியும் சுஜாதா….அசப்புல பாத்தா, ஸ்ரீரங்கத்து தேவதையும், ரெட்டைத் தெருவும் ஜாடைல ஒண்ணுதான்….தாயைப் போல பிள்ளை….என்னைக் கேட்டா முருகன் , இதுக்கு ”ரெட்டைத் தெரு ராட்சசர்கள்” என்று கூட நாமகரணம் சூட்டியிருக்கலாம்….இது முருகனின் பால்ய-BIOGRAPHY….”YOUTH IS WASTED ON YOUNG PEOPLE” என்பார் OSCAR-WILDE….இதையே ”கிளரொளி இளமை கெடுவதன் முன்னர்” என்பார் நம்மாழ்வார்….முருகன் முதிர்ச்சியோடு இளமையில் இருந்திருக்கிறார்….எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்யாசம்….எழுத்தாளன் பார்க்கிறான்….மற்றவர்கள் பராக்கு பார்க்கிறார்கள்….பால்யத்தில் பராக்குப் பார்த்ததை, எழுத்தாள எதிர்பார்ப்பில் த்ருண மாத்திரம் விடாது பதிவு செய்தது இவரது தீவீரத்தைக் காட்டுகிறது….EMOTIONS RECOLLECTED IN TRANQUILITY என்று WORDS-WORTH சொன்னது போல தான் ”கற்றதை, பெற்றதை, விற்றதை அப்புறம் மற்றதையெல்லாம்” ஆற அமர அசைபோட்டு ரெட்டை(தெரு) இலையில் பறிமாறியிருக்கிறார் இந்த டிஜிடெல் கேண்டீன்காரர்….தான் OBSERVE செய்ததை அறுசுவையோடு SERVE செய்திருக்கிறார்….என் மைலாப்பூரிலும் ரெட்டைத் தெரு ரகளைகள், ரகசியங்கள் உண்டு….அம்பது வருடங்கள் மைலாப்பூரில் நானும் மாணிக்கங்களைப் பார்க்காமல் வெறும குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்….எழுதலாமென்றால் ”என் பெயரைத்” தவிர வேறு எதுவும் எழவு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது….நான் அதிசயமாக எழுத வந்தவன்….ஆனால் முருகன் அவசியமாக எழுத வந்தவர்….
சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு….நாம் ஒரு நல்ல புத்தகத்தை படிக்கலாம் என்று ஆரம்பிக்கும் போது, எசகேடாக எதிரில் வந்து, ” இது பிரமாதமான புக்….நான் ஏற்கனவே படிச்சாச்சு” என்று, அதில் ஒரு வரி விடாமல் ஒப்பித்து விட்டு, நம்மை செவிடனாக பாவித்து ”நான் சொன்னதை காதுல போட்டுக்காதீங்க….நீங்களும் படிச்சு பாருங்க”என்பார்கள்….நாம் அதற்கு பிறகு அந்த புத்தகத்தைப் படிக்கும் போது , நமக்கு என்னவோ ”ரெண்டாம் தாரம்” கல்யாணம் செய்து கொண்டது போல இருக்கும்….அதனாலேயே இந்த தொகுப்பில் வரும் சம்பவங்களை, அது தொடர்பான ஹாஸ்யங்களை, முந்திரி கொட்டை போல சொல்லாமல், உள்ளங்கை நெல்லிக் கனி போல, நீங்களே அனுபவிக்க விட்டு விடுகிறேன்…. ஹாஸ்யப் புத்தகத்தைப் படிப்பது முதலிரவைப் போல….”சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை”….
சமீப காலத்தில் முருகனால் நான் பெற்ற பேறுகளைச் சொல்லப் போனால், இந்த முன்னுரை எனது சுய-சரிதையின் 56வது அத்தியாயமாகி விடும்….கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி இரவில் எழுதியபடி சொல்கிறேன்….இவரது கற்பனை ஞானமும், சொற்களின் சாகித்யமும், பீடம் ஏறப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை….சொல்லிக் கொண்டே போகலாம் கிழக்கு வெளுக்கும் வரை….கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது….” சொல்லச் சொல்ல இனிக்குதடா இரா.முருகா….”
——————————————————————————————————————————————————————————————————————————–

ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
ஆவேச நானை அழிப்பு….!
உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
அக்கணம் வாமனன் அங்கு….கிரேசி மோகன்….!

அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
வேகமாய் நித்ரை விழிப்பு….!
அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!