Author: ரா. பார்த்த சாரதி

  • மனிதனுக்கு ஒரு தினம்

     

     ரா.பார்த்தசாரதி

     

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் சுப தினம்

    தினந்தோறும் சிறப்பு தினங்கள் நமக்கு  உண்டு

    அன்னையை முதியோர் இல்லத்தில் விட்டு வைத்தோம்

    அன்னையர் தினம் என்று கொண்டாடுகின்றோம்

     

    நண்பர்களுக்கு மோசம் செய்து வேடிக்கை பார்க்கின்றோம்

    நண்பர்கள் தினத்தை  வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

    ஒருதலை காதலால் காதலியை கொன்றுவிடுகின்றோம்

    காதலர் தினத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்

     

    பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள்

    மகளிர் தினத்தையும் மறக்காமல் கொண்டாடுகிறார்கள்

    விவசாய நிலங்களை மனைகளாக்கி விற்றுவிடுகின்றோம்

    விவசாய தினத்தையும்  மனசாட்சியின்றி கொண்டாடுகின்றோம்!

     

    குடிநீரையும், நதிநீரையும், கழிவு நீரால் மாசுபடுத்துகின்றோம்

    மாசுக்கட்டுப்பாடு தினத்தையும் ஒப்புக்காக கொண்டாடுகின்றோம்

    புகை நமக்கு பகை என தெரிந்தும் அதனை  கட்டுப்படுத்தமுடியவில்லை

    சுற்றுப்புற சூழ்நிலை தினத்தையும் நாம் கொண்டாடுகின்றோம்

     

    போராட்டம் என்றால் பேருந்துகளை  எரிக்கின்றோம்

    பேருந்து  தினத்தையும் வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

    வஞ்சகமாய் உணவு பொருளை மறைப்பவர்கள் வணிகர்களே

    வணிகர் தினம்  என்று  பெருமையுடன் கொண்டாடுகிறார்களே !

     

    இன்னும் எத்தனையோ தினங்கள்  நமக்கு உண்டு

    மனிதனே தன்னலத்துடனே இருக்கின்றது உனது தொண்டு

    சற்றே  பொதுநலனை கருத்தில் கொண்டு செயலாற்று

    மனித நேயம் கொண்டு, மனித தினம் கொண்டாடலாமா ?

     

     

    Share
  • குழந்தைகள் தினம்

    ரா.பார்த்தசாரதி

     

    கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே

    சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே

    எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே

    அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!

     

    குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழலையும் விடச் சிறந்தது

    மழலைச் சொல் கேளாதவர் பெருஞ்செல்வம் பெற்றிடினும் வீணே 

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவர் .

    குற்றங்களை மறந்து, பகைமை கொள்ளாது ஒன்று சேர்ந்திடுமே !

     

    இந்திய பிரதமர் நேருவிற்கு குழந்தைகள் என்றால் விருப்பம் அதிகம் 

    தன் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாட விரும்பினார் 

    அன்று முதல் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாயிற்றே 

    குழந்தைகள் தினம் என்றாலே நேருவின் பிறந்த நாளாயிற்றே !

    Share
  • கறுப்பு பணம்

    ரா.பார்த்தசாரதி

     

    இந்திய பிரதமர் கறுப்பு பணம்  நீக்க அதிரடி வழி கண்டார் 

    அதிகம் புழங்கும் ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட் டுக்களே

    கறுப்பு  பணம் வைத்திருப்பவர்களுக்கே திண்டாட்டம் 

    ஏழை, நடுத்தர மக்களுக்கோர் சில நாட்களே திண்டாட்டம் !

     

    பணவீக்கமும், கறுப்பு பணத்தினால் ஏற்படுகின்றதே 

    விலைவாசிகள் அதிகமாகி மக்களை தடுமாற செய்கின்றதே

    அதிக பணம் கொடுத்து குறைந்த பொருள் வாங்கப்படுகின்றதே 

    பல ஆண்டுகள் கறுப்பு பணத்தால் வளர்ச்சி தடை பட்டதே !

     

    பல கோடி ரூபாய்கள் குவியலாக்கி எரிக்கப்படுகின்றதே 

    நல்ல உள்ளம் கொண்டவர்களால் இலவச உணவு அளிக்கப்படுகின்றதே

    மக்கள் படும் துன்பத்தை கண்டு அரசும் ஆவண செய்கின்றதே 

    பணம்  பதுக்குபவர்களுக்கு இது ஒரு  சாட்டையடியானதே !

     

    கறுப்பு பண ஒழிப்பால் லஞ்சமும் சற்றே கட்டுப்படுமே 

    உண்மை விலை நிர்ணயித்து பொய்யான விலை தவிர்க்கப்படுமே, 

    பொருள்களின் விலைகள் சற்றே கட்டுப்பாட்டிற்குள் வருமே 

    நல்லவை நடக்க சில துன்பங்களை எதிர்கொள்ள வேண்டுமே !

     

    கறுப்பு பண ஒழிப்புக்கு மக்களும் உதவ முன் வரவேண்டும் 

    இவைகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு என எண்ணவேண்டும் 

    நாட்டில் கறுப்பு பண முதலைகளை அடையாளம் காட்டவேண்டும் 

    அரசுடன் ஒத்துழைத்து நாமும் உதவிக்கரம் நீட்டவேண்டும் !

    Share
  • தீபாவளி

    ரா. பார்த்தசாரதி

     

    மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,

    எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை

    வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,

    சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

     

    விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,

    மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,

    பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று

    ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

     

    நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி

    வடக்கே விளக்கு பூஜை, துர்கா பூஜை என் கொண்டாடும் தீபாவளி,

    முதியோர் இல்லத்திற்கும், அநாதை இல்லங்களுக்குச் செல்வோம்

    இல்லாதவர்களுக்கு  இருப்பதை  கொடுத்து உதவி கரம் நீட்டுவோம் !

     

    அசுரன்  மரணித்த  நன்னாளை   தீபாவளியாக கொண்டாடுகின்றோம்

    வெடிகளும், பட்டாசுகளும்  வெடித்தால் மட்டும் போதுமா?

    மதவெறி, இனவெறி, தீவிரவாதம்  இம்மூன்றும்  தவிர்த்தே

    இணக்கமான மொழி பேசி   வாழ்ந்திடுவோம் !

     

    Share
  • மனம் எனும் பேய்

     

         ரா.பார்த்தசாரதி

     

    மனம் ஒரு கண்ணாடி ,

    நமது எண்ணங்களை பிரதிபலிக்கும்,

     

    மனம்  ஒரு குரங்கு

    அது எண்ணங்களை தாவ வைக்கும்

     

    மனம் ஒரு  நீர்க்குமிழி

    அது  எண்ணங்களை உருவாக்கி அழிக்கும்

     

    மனம்  ஒரு கடல் அலை

    அது  மாறி, மாறி  எண்ணங்களை மோத விடும்

     

    மனம் ஒரு அணையா நெருப்பு

    அதில் பொறாமை என்பது கொழுந்துவிட்டு எரியும்

     

    மனம் ஒரு குப்பைத்தொட்டி

    அதில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களை சேர்த்துவைக்கும்

     

    மனம் ஒரு  கடிவாளம் இல்லா குதிரை

    அது தன்  விருப்பப்படியே  பறந்தோடும்

     

    மனம்  ஒரு கனவு உலகம்

    கனவு உலகத்தில் அடிக்கடி சஞ்சரிக்கும்

     

    மனம்   ஒரு அழகின்  அடிமை

    அழகான காட்சிகளுக்கு சரணடையும்

     

    மனம்  எனும் பேய்

    மனிதனை  சுயநலமாய், தீயவற்றிற்கு அடிமையாக்கும்

     

     

    Share
  • நிலையாமை!

    ரா.பார்த்தசாரதி

     

     

    சொந்த, பந்தங்கள் யாவும் ,நன்மைக்காக  ஏற்பட்ட உறவுகள்

    அந்தந்த நேரத்தில் முகம் காட்டும் அடையாளங்கள்

    உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை!

    துன்பப்படும் போது, உறவும், நட்பும்  கண்டுகொள்வதில்லை

     

     

    நேற்று இருந்தவன்  இன்று இல்லை

    என்ற பெருமைதான் மனித வாழ்க்கை

    நிலையாய் வாழ்ந்து அனுபவிக்க பேராசை படுபவன்

    வள்ளுவனின் நிலையாமை நினைக்க தவறலாமா ?

     

    பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும்

    சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும்

    கட்டிக்காதவன் போகும்போது கொண்டு செல்ல முடியுமா

    யார்  அனுபவிக்கிறார்கள்  என பார்க்க முடியுமா?

     

    வளர்பிறை காலமும், தேய்பிறை காலமும் உண்டு,

    உயர்வு,தாழ்வு  பகலிரவு போல் இருப்பதுண்டு

    .தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமல்  ஆனதே

    தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழி போல் ஆனதே

     

    பழமையும், சிறப்பும் வாய்ந்த அரண்மனைகள், கோட்டைகள்

    இவை எல்லாம்  காலம் தின்று  அழித்த  இடங்கள்

    மிஞ்சியவைகள்  இன்று சுற்றுலா  தலங்களே

    நமது சிறப்பைக்  காக்கும் அடையாள ஏடுகளே !

     

    இறைவா புகழ்  பெற்று வாழ்பவர்கள்  உண்டு

    செருக்கடைந்தவர்கள்  சேற்றில் புதைந்தவர்களுண்டு

    மாற்றங்கள் நிகழ்வதில்லை  என்றும் மாற்றமேயில்லை

    நிலையானது எதுவெனில், நிலையாமையை என்றறிக

     

    Share
  • மகாத்மாவே மன்னியுங்கள்

     

    ரா.பார்த்தசாரதி

     

    கண்ணியம், ஒழுக்கமற்ற கனவான்களின்  விமர்சனமும்,

    தங்கள் கொள்கைகளை  மறந்து பின்பற்றுவது போன்ற நடிப்பும்

    உங்கள் பிறந்த நாளை விடுமுறைக்காக  ஏற்படுத்தினாலும்,

    உங்கள் புகழும் மாண்பும் மங்க போவதில்லை !

     

    அரிச்சந்திரன் நாடகத்தைப்  பார்த்து உண்மையை  கடைபிடித்தவரே

    உங்களிடம்  உண்மையே உன் விலை என்ன கேட்கும் கனவான்கள்  உள்ளனரே

    சத்ய சோதனை என்பது காட்சி பொருளாய்  இருப்பது புத்தகத்தில் மட்டுமே

    இன்றைய காலகட்டத்தில்   இது சோதனையாய் இருப்பது மட்டுமே !

     

    கைராட்டை சுற்றி ஆடை நெய்த காலம் மறைந்து விட்டது

    அயல்நாட்டு பொருட்கள் மனம் நாட்டம் கொண்டுவிட்டது

    ஆடம்பரத்தில் எங்களை நாங்கள் இழந்து விட்டோம்

    தங்கள் எளிய பாதையினை நாங்கள் மறந்துவிட்டோம் !

     

    அன்று சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தினீர்கள்

    இன்று மாநில பிரிவினை போறே நடத்துகிறார்கள்

    அன்று தொடர்ந்த காஷ்மீர் பிரச்னை இன்றும் தீர்ந்தபாடில்லை

    என்று தீருமோ, போரில் முடியுமோ எனத் தெரியவில்லை !

     

    நீருக்கு சண்டை போட்டாலும், மது அருந்த சண்டை போடமாட்டோம்,

    தீண்டாமையை ஒழித்தாலும் , இனம், ஜாதியை,மறக்காத  மக்கள் மனம்

    விளம்பரத்திற்காக, சிலை வைத்தோம், கடற்கரையில் நிற்கவைத்தோம்,

    உங்கள் அருமை அறியாத எங்களை மன்னிக்க வேண்டுகின்றோம் !

    Share
  • தண்ணீரும் இரத்தமும்

    ரா.பார்த்தசாரதி

     

    உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதே

    ஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே ,

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே,

    தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே !

     

    சுதந்திரம் அடைந்தது முதல் நதிநீர் இணைப்பு

    இன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு,

    நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதே

    விவசாயிகளின் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நியாயமானதே !

     

    வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை

    இது மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லை

    நீதி கேட்டும், சமரசம் செய்தாலும், பிரச்சனை தீர்ந்தபாடில்லை

    வன்முறையால் எதையும் தீர்க்க முடியாது என தெரியாமலில்லை !

     

    நடுவர் சொல்லுக்கும், நீதிபதி தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவேண்டும்,

    நீதியை நிராகரித்தால் எந்த மாநிலமும் துன்பப்படவேண்டும்

    இருவர் கூடி சமரசத்தால்  ஓர்   சமாதானம் ஏற்படவேண்டும்

    இதனால் இருவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் !

     

    மக்களின் பொதுநலம் கருதியே நதிநீர் தீட்டப்படவேண்டும்

    ஜாதி, அரசியல் போன்றவை கலவாமல் இருக்கவேண்டும்

    மாநிலங்களிடையே இனவெறி நீங்கி, ஒற்றுமை நிலவ வேண்டும்

    ஜாதி, இனம் இவற்றிற்கு  ஊறு விளையாமல் இருக்கவேண்டும் !

     

    நதிநீர் பங்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்கவேண்டும்

    மாநிலங்களின் பிரச்சனைகளை ஒன்றுகூடி  தீர்மானிக்கவேண்டும்

    நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர் மொழியாகும்

    நீரே மக்களின் தேவைக்கும், உணவிற்கும் இன்றியமையாததாகும் !

     

    Share
  •  எங்கே நிம்மதி ?

     

    ரா.   பார்த்தசாரதி 

    தனிமையையும், நிம்மதியையும் தேடாத மனிதன் இல்லை?

    எங்கே என்று பலரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை,

    ஒவ்வொருவரும்  வாழ்க்கையில் நினைக்காத நாள் இல்லை

    துறவிகள் காட்டிற்கு சென்றது தவத்திற்கா,தனிமைக்கா என்றறியவில்லை!

     

    நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்குமென மனிதன் எண்ணினான் ,

    அங்கே ஓர் இடம் தனக்கு வேண்டும்  என்றான் ,

    இருந்த இடத்தினிலே நிம்மதியும்,தனிமையும் கிடைக்குமா?

    இவை இரண்டும் மனம் மௌனமாய் இருந்தால் ஈடேறுமா ?

     

    நிம்மதியும், தனிமையும் அமைதியான இடத்தில்தான் தோன்றுமா ?

    இதனை நாளும் தேடித்தேடி  அலைவது வீண் என்று தோன்றுமா ?

    யோகிகளையும்  முனிவர்களையும்,கேட்டால் பதில் கிடைக்குமா ?

    அவர்களும்  அதை தேடித்தான் செல்கின்றனர் என கூறமுடியுமா ?

     

    தனிமையிலே இனிமை இல்லை,நடு இரவில் பகலவன் தெரிவதில்லை ,

    நிம்மதி என்பது    நம்   மனதிற்கு உட்பட்டதே என்று அறிவதில்லை ,

    தனிமையும், நிம்மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ,

    இவ்வுலகில் எதுவுமே தனிமையில்லை,அமைதிகொண்ட மனமே நிம்மதி!

     

     

    Share
  • வாழநினைத்தால் வாழலாம்

    ரா.பார்த்தசாரதி

     

    வாழ்க்கையில்  ஏற்படும்  எதிர்பாராத  திருப்பங்கள் ,

    மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்

    ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு   மன வருத்தம்

    மனதினில் சத்தம்  போடாமல் எழும்   ஆசைகள் !

     

    எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம்

    கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் ,

    யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத  கோபம் !

    வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி !

     

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்,

    வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத உறவுகள்

    மனிதனின் மனதினில்  அலைபாயும் நிலையில்லாக் காதல்

    அவன் முன்னேற்றத்திற்காக செய்யும் செயல்கள்!

     

    மனித வாழ்க்கையில், விட முடியாத  தொடர்புகள்

    வாழ்க்கையில் விட்டொழிக்க முடியாத தொல்லைகள்

    வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும்   அவமானங்கள்

    உறங்கும்போது கலைய மறுக்கும் கனவுகள் !

     

    நிலையில்லாத வாழ்க்கையில் நிரந்தரத்தை நினைப்பதும்,

    வாழ்க்கையில், இன்ப, துன்பங்களை  சமமாக நோக்காமலிருப்பதும்  ,

    ஆறடி நிலமே சொந்தம் என அறியாமல் இருப்பதும்,

    உன்னுடன் வருவதோ நீ செய்த பாவ புண்ணியங்கள் என தெரிந்தும் !

     

    இன்றைய ஆடம்பரமும்,கலாசாரமும், மனிதனை வாழ விடுவதில்லை

    ஆண், பெண்  இருவர் சம்பாதித்தாலும்,  நிம்மதி என்பது இல்லை ,

    ஒருவக்கொருவர்  புரிதலுடன் , விட்டுக்கொடுத்தால் துன்பம்மில்லை

    மனிதனே, வாழ நினைத்தால் வாழலாம், வழியாய்  இல்லை !

     

     

     

    Share
  • கண் தானம் 

    ரா.பார்த்தசாரதி

     

    தானத்திலே  சிறந்தது அன்னதானம்

    தானத்திலே சிறந்தது ரத்ததானம்

    தானத்திலே  சிறந்தது  கண் தானம்

    இம்மூன்று  தானங்களும் சிறந்ததே

    இவ்வுலகில்  இன்றும் நடக்கின்றதே !

    அன்னதானம் பசியினைப் போக்கும்,

    இரத்ததானம்  உயிரினை   காக்கும் ,

    கண்தானம்   பார்வையை  அளிக்கும் !

    கண்ணாலே  காதல் மலரும்

    கண்ணே இரக்கத்தை உண்டாக்கும்

    இயற்கையின் எழிலை  ரசிக்கும்

    இறந்தபின்னும்  புகழ் சேர்க்கும்

    மனித வாழ்வினை ஒளிபெறச் செய்யும்

    கண் தானமே மனிதனுக்கு பெருமை சேர்க்கும்!

    கண் தானம் செய்வீர் ! அவனியில் சிறப்படைவீர் !

     

    Share
  • வெற்றி விநாயகனே

     

    ரா.பார்த்தசாரதி

     

                              பிரணவ  மந்திரத்தின்  முதலோனே 

                               வீனைதீர்க்கும் விநாயகப் பெருமானே ,

                               சங்கடங்கள்  தீர்க்கும்  இறைவனே 

                               வேழ முகத்தோடு  காட்சியளிப்பவனே 

                               அரக்கனை அழித்து மக்களை காப்பாற்றியவனே ,

                               மஹாபாரதத்தை வியாசருடன்  எழுதியவனே,

                               திருமாலின் மூத்த மருமகனே 

                               முருகனின்  மூத்த சகோதரனே 

                               அவ்வை பிராட்டிக்கு அருள் புரிந்தவனே

                               கடவுள்  எல்லாவற்றிலும் மிக எளியவனே

                               வீதியெங்கும்  எளிமையாய் காட்சியளிப்பவனே 

                               சதுர்த்தியில் பிறந்து, சங்கடங்களை போக்குபவனே,

                               உன் அருளை வேண்டுகின்றோம் வெற்றி விநாயகனே !

    Share
  • அவனவன் வாழ்க்கை

    ரா.பார்த்தசாரதி

     

    மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ?

    வீழ்ந்தபின்தான்  அதன்  விதி என்னவென்று  தெரிகிறது,

    ஆற்றில் விழுந்தால்  அனைவரது தேவையை தீர்க்கும்,

    சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்!

     

    பூக்கும் மலருக்கு தெரியுமா,  சேருவது மணமாலையா, மரணமாலையா?

    அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது,

    மணமாலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது

    மரணமாலையானால் மிதிபட்டு மக்கி நாசமாய்  போகின்றது !

     

    மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான்

    மாபெரும் புகழுடன் சான்றோர்  போற்ற வாழ்கின்றான்

    மிதிக்கும் பாதையில் செல்பவன் மீளா தீமை அடைகின்றான்

    மிகுந்த வேதனைக்கு  ஆளாகி அனலிலிட்ட புழுவென துடிக்கின்றான் !

     

    மனிதனின் பிறப்பை  கணிக்கப்படுவது விதியின் தலை எழுத்தா?

    மனிதனின் குடிப்பிறப்பையும், சேரின்னத்தைச்  சேர்ந்ததா ?

    அவன் பிறந்த ஜாதகத்தினால் விதி  கணிக்கப்படுகிறதா ?

    அவனவன் வாழ்க்கை, அவனவன் கையில்தான் எனக் கூறுவதா?

     

     

    Share
  • மகனும் தாயும்

    ரா.பார்த்தசாரதி

     

    பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்

    உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்

    எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்

    உன் குருதியை எனக்கு பாலாகப் பொழிந்தாய்

    தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்

    கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

    உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்

    என்னை கட்டியணைப்பதில் தான் ஆனந்தம் இருக்கும் !

    உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்

    உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !

    நான் தவறு செய்தாலும் என்னிடம் அன்புடன் நேசிக்கும்

    நீயே  எனது கண்கண்ட தெய்வமாகும் !

     

     

     

    Share
  • கண்ணன் பிறந்தான்

     
    ரா.பார்த்தசாரதி

     
    இராமன் பிறந்தது நவமி தினத்திலே
    கண்ணன் பிறந்தது அஷ்டமி தினத்திலே,

    இராமனும், கிருஷ்ணனும் இரு அவதாரங்களே
    உலகில் அநீதியை அழித்த தெய்வங்களே

    ஒருத்தி மகனாய் சிறையில் பிறந்தான்
    ஓர் இரவில் மாறி கோகுலத்தில் வளர்ந்தான்

    சிறு வயதில் பல லீலைகள் புரிந்தான்
    சிறு விரலால் மலையை குடையாகப் பிடித்தான்

    ஆநிரை மேய்த்து கோபாலகிருஷ்ணன் என பெயர்பெற்றான்
    மலையை குடையாக பிடித்ததால் கிரிதரன் என அழைக்கப்பட்டான்

    மஹாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டினான்
    கீதை என்னும் வேதத்தை உபதேசித்தான்

    இராமன் தன்னுடன் பலரை சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்றான்
    கண்ணனோ வேடன் அம்பு பட்டு தனியே சொர்க்கத்திற்கு சென்றான் 

    Share