ரா.பார்த்தசாரதி

 

இந்திய பிரதமர் கறுப்பு பணம்  நீக்க அதிரடி வழி கண்டார் 

அதிகம் புழங்கும் ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட் டுக்களே

கறுப்பு  பணம் வைத்திருப்பவர்களுக்கே திண்டாட்டம் 

ஏழை, நடுத்தர மக்களுக்கோர் சில நாட்களே திண்டாட்டம் !

 

பணவீக்கமும், கறுப்பு பணத்தினால் ஏற்படுகின்றதே 

விலைவாசிகள் அதிகமாகி மக்களை தடுமாற செய்கின்றதே

அதிக பணம் கொடுத்து குறைந்த பொருள் வாங்கப்படுகின்றதே 

பல ஆண்டுகள் கறுப்பு பணத்தால் வளர்ச்சி தடை பட்டதே !

 

பல கோடி ரூபாய்கள் குவியலாக்கி எரிக்கப்படுகின்றதே 

நல்ல உள்ளம் கொண்டவர்களால் இலவச உணவு அளிக்கப்படுகின்றதே

மக்கள் படும் துன்பத்தை கண்டு அரசும் ஆவண செய்கின்றதே 

பணம்  பதுக்குபவர்களுக்கு இது ஒரு  சாட்டையடியானதே !

 

கறுப்பு பண ஒழிப்பால் லஞ்சமும் சற்றே கட்டுப்படுமே 

உண்மை விலை நிர்ணயித்து பொய்யான விலை தவிர்க்கப்படுமே, 

பொருள்களின் விலைகள் சற்றே கட்டுப்பாட்டிற்குள் வருமே 

நல்லவை நடக்க சில துன்பங்களை எதிர்கொள்ள வேண்டுமே !

 

கறுப்பு பண ஒழிப்புக்கு மக்களும் உதவ முன் வரவேண்டும் 

இவைகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு என எண்ணவேண்டும் 

நாட்டில் கறுப்பு பண முதலைகளை அடையாளம் காட்டவேண்டும் 

அரசுடன் ஒத்துழைத்து நாமும் உதவிக்கரம் நீட்டவேண்டும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.