மனிதனுக்கு ஒரு தினம்

 

 ரா.பார்த்தசாரதி

 

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் சுப தினம்

தினந்தோறும் சிறப்பு தினங்கள் நமக்கு  உண்டு

அன்னையை முதியோர் இல்லத்தில் விட்டு வைத்தோம்

அன்னையர் தினம் என்று கொண்டாடுகின்றோம்

 

நண்பர்களுக்கு மோசம் செய்து வேடிக்கை பார்க்கின்றோம்

நண்பர்கள் தினத்தை  வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

ஒருதலை காதலால் காதலியை கொன்றுவிடுகின்றோம்

காதலர் தினத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்

 

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள்

மகளிர் தினத்தையும் மறக்காமல் கொண்டாடுகிறார்கள்

விவசாய நிலங்களை மனைகளாக்கி விற்றுவிடுகின்றோம்

விவசாய தினத்தையும்  மனசாட்சியின்றி கொண்டாடுகின்றோம்!

 

குடிநீரையும், நதிநீரையும், கழிவு நீரால் மாசுபடுத்துகின்றோம்

மாசுக்கட்டுப்பாடு தினத்தையும் ஒப்புக்காக கொண்டாடுகின்றோம்

புகை நமக்கு பகை என தெரிந்தும் அதனை  கட்டுப்படுத்தமுடியவில்லை

சுற்றுப்புற சூழ்நிலை தினத்தையும் நாம் கொண்டாடுகின்றோம்

 

போராட்டம் என்றால் பேருந்துகளை  எரிக்கின்றோம்

பேருந்து  தினத்தையும் வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

வஞ்சகமாய் உணவு பொருளை மறைப்பவர்கள் வணிகர்களே

வணிகர் தினம்  என்று  பெருமையுடன் கொண்டாடுகிறார்களே !

 

இன்னும் எத்தனையோ தினங்கள்  நமக்கு உண்டு

மனிதனே தன்னலத்துடனே இருக்கின்றது உனது தொண்டு

சற்றே  பொதுநலனை கருத்தில் கொண்டு செயலாற்று

மனித நேயம் கொண்டு, மனித தினம் கொண்டாடலாமா ?

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *