குழந்தைகள் தினம்
ரா.பார்த்தசாரதி
கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே
சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே
எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே
அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!
குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழலையும் விடச் சிறந்தது
மழலைச் சொல் கேளாதவர் பெருஞ்செல்வம் பெற்றிடினும் வீணே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவர் .
குற்றங்களை மறந்து, பகைமை கொள்ளாது ஒன்று சேர்ந்திடுமே !
இந்திய பிரதமர் நேருவிற்கு குழந்தைகள் என்றால் விருப்பம் அதிகம்
தன் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாட விரும்பினார்
அன்று முதல் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாயிற்றே
குழந்தைகள் தினம் என்றாலே நேருவின் பிறந்த நாளாயிற்றே !