ரா.பார்த்தசாரதி

 

கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே

சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே

எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே

அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!

 

குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழலையும் விடச் சிறந்தது

மழலைச் சொல் கேளாதவர் பெருஞ்செல்வம் பெற்றிடினும் வீணே 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவர் .

குற்றங்களை மறந்து, பகைமை கொள்ளாது ஒன்று சேர்ந்திடுமே !

 

இந்திய பிரதமர் நேருவிற்கு குழந்தைகள் என்றால் விருப்பம் அதிகம் 

தன் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாட விரும்பினார் 

அன்று முதல் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாயிற்றே 

குழந்தைகள் தினம் என்றாலே நேருவின் பிறந்த நாளாயிற்றே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *