வெங்கட் சாமிநாதன்
புதியவர்கள் அறிமுகமாகின்றனர். இருப்பினும் கதைகளும் குறைந்துவிட்டன. இருப்பினும் மகிழ்ச்சி தருவது தன்னையும் தன் துறையையும் நகைச் சுவையுடன் பார்க்கும் பாங்கு. அதிலும் ஒரு கேலிச் சித்திரமாகவே எழுதியுள்ளது. இம்மாதிரி கேலியைப் படிப்பது இது தான் முதல் தடவை.
இம்முறை பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார். மிகவும் இருண்ட உலகம், படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வாழ்பவர்களுக்கு எப்படி இருக்குமோ! இம்மாதமும் அவரது தான் சிறந்த கதை. அவருக்கு என் வாழ்த்துகள். அந்தியூரான் அங்கு உட்கார்ந்துகொண்டு எப்படி இவ்வளவு நெருக்கமாக அன்னிய உலகைப் பற்றி எழுத முடிகிறது? மணவாளன் தான் எனது தேர்வு.
2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்ற சிறுகதைகள்:
(பழமைபேசிக்குப் பாராட்டுகள்; பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னும் ஒரு மாதத்துடன் இந்தப் போட்டி நிறைவு பெறுகிறது; எனவே, விருப்பமுள்ளோர் விரைந்து பங்கேற்றிட அழைக்கிறோம். – ஆசிரியர்)

Leave a Reply