நெளிவு சுழிவு…..

சச்சிதானந்தம்

 

நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன், வாழ்க்கையின்

நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன்,

தெளிவை மனதில் உணர்ந்து விட்டேன், புதுப்

பொலிவை கண்களில் அடைந்து விட்டேன்,

கொலுவில் வைத்த பொம்மையைப் போல்,

குறட்டை விட்டுத் தூங்கியதால்,

கனவில் கூட தோல்வியையே,

காட்சியாகக் கண்டு வந்தேன்,

கடவுள் வந்து இடை இடையே ,

என்னைத் தட்டி எழுப்பி விட்டான்,

எழுந்து அவனை அனுப்பிவிட்டு

மீண்டும் படுத்துத் தூங்கி விட்டேன்!

மருந்தைப் போல் வாழ்க்கையையே,

விருப்பமின்றி வாழ்ந்து வந்தேன்,

மறந்தும் கூட உழைப்பதற்கு,

முயற்சி செய்ய மறந்து விட்டேன்!

இருந்த இடத்தில் எல்லாம் வந்து

சேரும் என்று இருந்து விட்டேன்!

அப்படி இருந்ததாலே, இருந்ததையும்

இழந்துவிட்டுத் தவித்து நின்றேன்!

இழந்த போது இதயத்திற்குள்

இறைவனைக் கண்டேன்!

கண்டவுடன் வாழ்க்கையின்,

நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன்!

தெளிவை மனதில் உணர்ந்து கொண்டேன்! புதுப்

பொலிவைக் கண்களில் அடைந்து விட்டேன்!

Share

Comments

One response to “நெளிவு சுழிவு…..”

  1. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

    மனதில் தெளிவு கண்களில் பொலிவு
    நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *