Month: July 2014

  • எப்படி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (7)

     

    எப்படி?

    {கேட்டு மகிழ} 

    images (1)

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க

    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க

    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி

    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே

    போதுமென்று புன்னகைக்கிறாயா?

    கன்னம் மேவும் மின்னலினாலே

    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

     

    எப்படி? ம்…எப்படி?

    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்

    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு

    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க

    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

     

    எப்படி? வேறெப்படி? ம்..?

    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்

    காலைப் பிடித்து சாதித்தாயா?

    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?

    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

     

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?

    ஊஹூம்…

    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?

    சாவகாசமாக அமர்ந்து

    சாகடித்த கதைகளை வரிவரியாய்

    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?

    ஓ!

    முற்றும் என்னை முடித்துவிட்டு

    முகத்தில் அதென்ன கோணல்?

    ஆ!

    வந்திருக்கிறார்களாம்!

    வரவேற்கவில்லையாமாம்!!

     

    அழைத்தோ அழைக்காமலோ

    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்

    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்

    அத்துமீறி வந்தவர்களுக்கு

    ஆரத்தி கேட்கிறதா?

    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு

    திவ்யப் பிரபந்தமா?!

     

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்

    நெஞ்சைப் பிசைகிறது…

     

    சரி சரி

    அந்த அறையில்

    மேசையில் இருக்கும் என்

    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    டியர் கேசவ் ,உம்மை ஒப்பேற்ற வேண்டாம்….கண்ணனால் நீங்கள் Already ஒப்பில்லா ஏற்றத்தில் உள்ளீர்கள் ….வாழ்க உம் பணி &பாணி….

    பின் குறிப்பு -There is a proverb in tamil ….”ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் ….பாடற மாட்டை பாடிக் கறக்கணும்” ….அருச்சுனனை உமது ஓவியத்தால் கதகளி ஆடிக் கறந்தான்….பின் கீதையைப் பாடிக் கறந்தான் ஆடாது அசங்காது அந்த ஆயன் ….அருச்சுனன் என்ன நாம் எல்லோருமே அந்த மேய்ப்பவனுக்கு முன் கால் நடை ஜீவ ராசிகள்தானே….!

    அபாரம் கேசவ்….இது புதிய பாணி “கேளிச் சித்திரம் “….

    crazy

    “கேரள கேளி கிருஷ்ணன் அருச்சுனனை
    ஓரளவு ஒப்பேற்றும் உத்தியுடன் , -தேரலகில்
    தைதை கதகளி தாண்டவம் செய்தனன்
    கீதைக்(கு) இதுஒத்தி கை”….கிரேசி மோகன் ….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 28, 2014

     

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கவிஞர் குட்டி ரேவதி அவர்கள்
    Kutti Revathy

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவுக் குரலை எழுப்பி வருபவர்.  இவர் தனது சமுதாய அக்கறை கொண்ட இடைவிடாத தொடர்முயற்சியின் ஓர் அங்கமாக இந்த மாதம் குறிப்பிடத்தக்க இரு செயல்களை ஆற்றி மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியுள்ளார். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய உரைக்காகவும், இம்மாத கணையாழி இதழில் இவர்  எழுதிய கட்டுரைக்காகவும்  இவர் பாராட்டப்படுகிறார். கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் இயற்பெயர் ரேவதி சுயம்புலிங்கம்.  சென்னையில் வசிக்கும் சித்த மருத்துவரான இவர்தம் முற்போக்கு சிந்தனைகளைத்  தொடர்ந்து தனது எழுத்துக்களின் மூலம்  வெளிப்படுத்துவதில் முனைப்பு மிகக் கொண்டவர். தற்கால பெண்ணெழுத்தாளர்களில் பெண்ணிய எண்ணம் நிறைந்த குட்டி ரேவதி “பனிக்குடம்” என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இப்பதிப்பகம் வெளியிடும்  பனிக்குடம் என்ற  தமிழ் இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருக்கிறார். “பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வது என்பது  இந்தக் காலாண்டிதழின் நோக்கம்.

    அத்துடன் பனிக்குடம் பதிப்பகம்   பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளை மட்டுமே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதே இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர் குட்டி ரேவதி. சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருகிறார்.

    ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் பங்காற்றியுள்ள  குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000), முலைகள் (2002), தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003), உடலின் கதவு (2006) ஆகிய கவிதை நூல்களையும், காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார்.

    இந்த மாதம் (2014 ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில்) அமெரிக்க செயின்ட் லூயி, மிசௌரி நகரில் நடந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று இவ்வாண்டில் தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கியுள்ளார்.   மேலும் விழாவில்  “கிளம்பிற்றுக்காண் தமிழர் படை ” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமையேற்று  இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற, தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு ஊடகக் கல்விக்கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

    “பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை” என்ற தலைப்பில் இந்த மாதம் ஜூலை 2014 இல்  வெளியான “கணையாழி” இதழில் இவர் எழுதிய கட்டுரையில், தமிழ் பெண்எழுத்தாளர்களின் மீது  தமிழ்ச் சமுதாயம் கொண்டிருக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டத்தைக் கண்டித்து எழுதியுள்ளார்.  தமிழ் இந்துவில் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் இலக்கியவாதிகளை அவர்கள் பாலினம் சார்ந்து வெறுப்புக் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருப்பதாக* எழுந்த சர்ச்சையின் எதிரொலியாக அவருக்கு பெண் எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகள் சிலரும் விடுத்த கண்டன அறிக்கையின் எதிரொலிகளில்  ஒன்றாக இக்கட்டுரையைக் கணையாழி இதழில் குட்டி ரேவதி எழுதியிருந்தார். கட்டுரை  முழுவதையும் இச்சுட்டிவழி சென்று படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு, கட்டுரையின் முக்கியக் கருத்துகள் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

     

    பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை

    kutty raevathi 2

    இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது………….

    பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அதுவரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான்………….

    இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் “பாதுகாப்பின்மை உணர்வு” ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது………….

    அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது………….

    தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி ‘ஊடகப்பிம்பங்களாக’ ஆகிவிட முடிவது இல்லை. ‘உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!’ என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்………….

    இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அல்லது புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காததுதான். மனித இனமாகப் போற்றியதுதான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண் படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்…………

    ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அறிந்திராத  அல்லது அவர்களால் இயலாத சூழ்நிலையில் குட்டி ரேவதி போன்ற சமூகப் பொறுப்புள்ளவர் செய்யும் சேவையை சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பாக அங்கீகரித்துப் போற்ற வேண்டியது நமது கடமை.

     

    இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: kuttirevathi@gmail.com

    இவரைப் பற்றி மேலும் தகவல்களை கீழ்காணும் சுட்டிகளின் வழி அறியலாம்:
    Facebook.com: https://www.facebook.com/pages/Kutti-Revathi/191482800885454
    Twitter.com: https://twitter.com/kuttirevathi
    Blogspot: http://www.kuttyrevathy.blogspot.com
    Wiki: https://ta.wikipedia.org/s/cqa

     

    சான்றுகளும் குறிப்புகளும்:

    பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் – தி இந்து
    http://tamil.thehindu.com/general/literature/article6136159.ece

    எழுத்தாளர் ஜெயமோகன் மீது பெண் எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் தாக்கு! – தி இந்து
    http://tamil.thehindu.com/tamilnadu/article6132852.ece

    பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை
    http://kuttyrevathy.blogspot.com/2014/07/blog-post.html

    * தனது இணையதளத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டை  ஜெயமோகன் மறுத்துள்ளார்

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 129

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல்

    சாலினி மொழி கேட்ட கண்ணகி நாணமுற்று
    “மூதறிவுடைய இவள் மயக்கத்தால்                          mahisasuramardini for silambu 28th july
    இவ்வாறு கூறுகிறாள்” என்றே கூறி,
    பெறுதற்கரிய கணவனாம் கோவலன்
    முதுகின் பின்னே ஒளிந்து கொண்டு
    புதிய புன்முறுவல் பூத்து நின்றனள்.

    பிறை என வெள்ளைத் தாமரை இதழைச்
    சூடி நிற்கும் நெற்றியும்
    நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்கும்
    இமையாத விழிகளையும்
    பவளம் போன்ற வாயினையும்,
    வெள்ளி போல் ஒளிபொருந்திய சிரிப்பினையும்,
    நஞ்சினை உண்டதால் கறுத்த கழுத்தினையும் உடையவள்.

    கொடிய சினத்தை உடைய
    வாசுகி என்னும் பாம்பை நாணாகப் பூட்டி
    மேருவாகிய மலையை வில்லாய் வளைத்தவள்.

    நஞ்சுகொண்ட துளைகள் பொருந்திய
    பற்களை உடைய பாம்பினைக்
    கச்சாக அணிந்த முலைகளை உடையவள்.
    வளையணிந்த கைகளில் சூலம் ஏந்தியவள்.
    யானையின் தோலைப் போர்த்திக் கொண்டு
    அதன் மீது, பிறரை வருத்தும் தன்மையுடைய
    சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள்.

    இடது காலில் சிலம்பும் வலது காலில் கழலும்
    ஒலித்திடும் சிறிய அடிகளையும்
    மேலான வெற்றியைப் பெற்றுத் தரும்
    ஒளி பொருந்திய வாளையும் உடையவள்.

    தலை எருமையாகவும் உடல் அசுரனாகவும்
    இருவேறு வடிவங்கள் பொருந்திய
    திரண்ட தோளினியுடைய
    மகிடாசுரன் தலையின் மீது நின்றவள்.

    தேவரும் முனிவரும் மற்ற யாவரும் வணங்கும்
    அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி
    எனும் பெயர்களைப் பெற்றவள்.
    யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள்.
    திருமாலுக்கு இளையோள்.

    தெய்வங்களுக்கெல்லாம் தலைவியாய் நிற்பவள்.
    திருமகள் ஆனவள்.
    கொடிய வாளினைத் தன் கைகளில் தாங்கியவள்.
    கலைமான் ஊர்தி உடையவள்.
    பச்சை வீர வளை அணிந்தவள்.

    ஆய்கலைப் பாவை, அருங்கலப்பாவை எனப்
    பலராலும் புகழ்ந்து போற்றப் படுபவள்.

    திருமாலும் நான்முகனும் போற்றி வணங்கும் சிறப்புடைய
    கொற்றவை கோலம் தரித்துக்
    கலைமான் மீது அமர்ந்திருந்த
    சாலினியைக் கண்ட அம்மறக்குடிமக்கள்
    “நம் குலத்தில் தோன்றிய குமரிக்கு
    மிகவும் பொருத்தமாக இருக்கிறது இக்கோலம்;
    அவள் வாயிலாக ஐயை அருள் புரிந்தனள்”
    எனக் கூறிக் கொற்றவையை வாழ்த்தி
    வரிப்பாடல்கள் பாடினர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  51 –  74
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://srilasridurgaswamigal.wordpress.com/2012/03/07/mahisasuramardhini-stotram/mahisasuramardini/

     

    Share
  • அறிவியலாளர் கெப்ளர்

    -முனைவர் சேஷா சீனிவாசன்

    தற்போதைய 21ஆம் நூற்றாண்டில் இயற்பியலையும், மற்றும் விண்வெளி Johannes_Kepler_1610ஆராய்ச்சியையும் பிரிக்கமுடியாத ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக நாம் கருத்தில் கொள்கிறோம். இந்தப் பரந்த நோக்கு, 16ஆம் நூற்றாண்டில் நிலவியதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 16ஆம் நூற்றாண்டில், இயற்பியல் இயற்கைத்தத்துவ ஆராய்ச்சியாகவும் விண்வெளி ஆராய்ச்சி பெருவாரியாகக் கணிதம் சார்ந்ததாகவும் பின்பற்றப்பட்டு வந்தது என்பதை ஆராய்ச்சி நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த வேறுபட்ட சிந்தனைக்கூறுகளை மாற்றி இயற்பியலையும் வான்வெளி ஆராய்ச்சியையும் ஒன்றாக இணைத்த பெருமைக்குரியவர் அறிவியலாளர் திரு. ஜோஹனேஸ் கெப்ளர் (Johannes Kepler) ஆவார். அவரைக் குறித்து சற்று சிந்திப்போமா!

    திரு கெப்ளர், டிசம்பர் மாதம் 1571இல் ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் எனும் மாகாணத்தில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே பெரியம்மை நோயினால் தாக்குற்றுத் தன் கைகள் மற்றும் கண்கள் பாதிப்பிற்குள்ளானாபோதிலும், கணிதத் திறமையில் இயற்கையிலேயே மிகவும் வல்லவராகத் திகழ்ந்தார். தனது ஆறாம் வயதிலிருந்தே வான்வெளி ஆராய்ச்சியின்பால் மிகுந்த காதல் கொண்டிருந்ததன் காரணமாக அவருடைய தாயார் அவரைத் தினமும் வெளியில் அழைத்துச் சென்று இரவு நேரத்தில் வானில் சுடர்விடும் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்மீன்களை அவருக்குக் காண்பிக்கலானார். சில வருடங்களுக்குப்பின் முதன் முதலாய்க் கெப்ளர், சந்திர கிரகணத்தைக் கண்ணுற்றார்.

    டியுபிங்கன் (Tubingen University) பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் தியாலஜி (theology) பயின்று அதே பல்கலைக்கழகத்தில் வான்வெளி ஆராய்ச்சியாளராகவும், பிறகு கிரேஸ் பல்கலைக்கழகத்தில் (Graz) வான்வெளிக் கணித ஆசிரியராகவும் பணியாற்றினார்.

    சூலை 19, 1595இல் ஜூபிடர் மற்றும் சனிக்கோள்களைப் பற்றியும் அவற்றின் பாதை ஒழுங்கமைப்பைப் பற்றியும் விரிவுரை நடத்திக் கொண்டிருந்த தருணத்தில், கெப்ளருக்கு ஓர் உள்நோக்குச் சிந்தனை தோன்றியது; அது யாதெனில், நம் அண்டம் (Universe) ஐந்து வடிவமைப்புக்களை உள்ளடக்கியது என்பதாகும். தனது கணிதப் புலமையின் வாயிலாக அவ்வைந்து திட (solid) வடிவமைப்புக்களையும் (Octahedron, icosahedron, dodecahedron, tetrahedron and cube) எனப் பட்டியலிட்டுள்ளார் அவர். அவ்வைந்து வடிவங்களும் நம் அண்டமாகிய கோளத்தில் பின்னிப் பிணைந்து ஆறு தளங்களாக (layer) தோன்றியமையைக் கெப்ளர் ஆறு கோள்களுக்கு (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், ஜுபிடர், சனி) ஒப்பாக உருவகம் செய்தார். இவற்றோடல்லாமல் அக்கோள்களின் அளவு, அவை சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் பாதையின் நேரம் போன்றவற்றைத் தன் கணிதச் சூத்திரத்தின் (Mathematical Formulae) வாயிலாக நமக்குத் தெளிவு படுத்தியுள்ளார்.

    மேற்கூறிய இந்தச் செயல்முறை விளக்கங்களே கெப்ளரின் “Mysterium Cosmographicum” என்ற அறிவியல் ஆராய்ச்சி நூலுக்கு வித்தாக அமைந்தன என்றால் அது மிகையாகாது. மேலும், கோபர்நிகஸின் கோள்களின் சுழற்சி பற்றிய அடிப்படைத் தத்துவத்தினை (Helio Centric System) பறைசாற்றுவதாகவும் அமைந்தன. Mysterium Cosmographicum treatise (MCT (அ) மசட) என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

    ”மசட” என்ற கெப்ளரின் ஆராய்ச்சி நூலில் ஓர் அத்தியாயத்தில், அவர் கிறித்துவர்களின் பைபிளுக்கும் (Holy Bible) கோபர்நிகஸின் கோள் சுற்றுப்பாதை ஆராய்ச்சிக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துரைத்திருந்தார். ஆனால் அந்த அத்தியாயம் பின்னாளில் (1596) துரதிர்ஷ்டவசமாக நூல் பதிப்பிற்கு முன்னரே நீக்கப்பட்டது. அத்தகைய செயல் கெப்ளரின் புகழிற்குத் தடையாய் ஆனது. கெப்ளர் தன்னூலின் மேற்கூறிய அத்தியாயத்தைத் தனது நண்பர்கள் மற்றும் Danish வான்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற டைகோ ப்ராகி (Tycho Brahe) ஆகியோர்க்கு அனுப்பியிருந்தார். டைகோ ப்ராகி அதனைப் படித்துச் சற்று கடுமையான வார்த்தைகளால் கெப்ளரின் ஆராய்ச்சியை விமரிசித்துப் பல திருத்தங்கள் அதில் செய்யப்பட வேண்டும் என்ற தமது சிந்தனைகளையும் எழுதியிருந்தார்.

    கெப்ளர் அவ்வறிவுரைகளைச் சிரமேற்கொண்டு ப்ராகியின் யோசனைப்படி பல மாற்றங்களைச் செய்தார். கெப்ளரிடம் போதிய ஆராய்ச்சிச் சாதனங்கள் இல்லாததாலும், மற்றும் ப்ராகியின் தனி வான்வெளி ஆராய்ச்சிக்கூட மையத்தின் (Astronomical laboratory) செவ்வாய் கோளின் புள்ளிவிவரத் தரவுகளைச் சோதனை செய்யும் நோக்கத்திற்காகவும், தனது “மசட” பற்றிய ஆராய்ச்சிக்காகவும் கெப்ளர் 1600இல் ப்ரேகில் (Prague) உள்ள ப்ராகியின் ஆராய்ச்சிக் கூடத்திற்குச் சென்றார்.  கத்தோலிக்கக் கிறித்துவராக மாறாததனால், அவர் வசித்துக் கொண்டிருந்த Graz (in Germany) நகரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, பின் தன் குடும்பத்துடன் ப்ராகியின் வான்வெளி மையத்திற்குக் குடி பெயர்ந்தார்.

    டைகோ ப்ராகியின் மறைவிற்குப்பின் கெப்ளர் அரசாங்கக் கணித வல்லுநராக நியமிக்கப்பட்டார். Prague அரசு அவருடைய லூதரன் (Lutheran Faith) கொள்கையை மதித்தது. அரசின் ஜாதக ஆலோசகராகப் (Horoscopes – Astrologer) பணிபுரிந்துவந்த கெப்ளர் அப்பணியை மட்டுமே தொடர்வதை விரும்பவில்லை. அறிவியல் வாயிலாக உண்மை அறிதலையே ஜாதகங்களிற்கு மாற்றாக அவர் எண்ணினார். ப்ராகியின் வான்வெளி ஆராய்ச்சித் தரவுகள் (Data) கெப்ளரின் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததோடல்லாமல் அவருடைய ஆய்வுக்கூட விரிவாக்கத்திற்கும், ஒளி விதிகள் கண்டுபிடிப்பிற்கும் காரணமாக இருந்தன. 1604ஆம் ஆண்டில், வெளிவந்த கெப்ளரின் நூல் “Astronomiae Pars Optica” நவீன ஒளியியல் (Modern Optics) எனும் புதிய துறை உருவாகக் காரணமாக அமைந்தது எனில் அது மிகையில்லை.

    மேற்கூறிய அத்தனை ஆராய்ச்சி வழிமுறைகளும், கெப்ளர் தன் புதிய கண்டுபிடிப்பான தொலைநோக்குக் கருவி (Telescope) உருவாக்கத்திற்கும், மற்றும் இரண்டு குழி லென்ஸ்கள்  (ஆடிகள்) (convex lenses) கொண்ட கெப்ளேரியன் தத்துவத் தோற்றத்திற்கும் வித்தாக அமைந்தன. கலிலியோவின் ஒரு குழி மற்றும் ஒரு குவி ஆடிகள் கொண்ட தொலைநோக்குக் கருவியை விடவும் கெப்ளரின் மேலே சொல்லப்பட்ட இரு குழியாடிகள் கொண்ட கருவி 1604ஆம் ஆண்டில் supernova என்ற நட்சத்திரச் சிதையல் முறைகளைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது என்பதை அவரின் ’De Stella Nova’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது.

    ஆராய்ச்சியாளர், சிந்தனையாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராகக் கெப்ளர் திகழ்ந்ததோடல்லாமல், மிகச்சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் என்பதை 1611இல் வெளிவந்த அவருடைய “கனவு” (Sonium அதாவது “The Dream”) என்ற அறிவியல் புத்தகம் (Science Fiction) வாயிலாக உணரமுடிகிறது. 1611லேயே மற்ற கிரகங்களில் (கோள்களில்) வான்வெளி ஆராய்ச்சி எப்படி இருக்கும் என்பதையும், சந்திரனுக்குப் பயணம் செய்வதையும் விளக்கியுள்ளார் கெப்ளர் தன்னுடைய “கனவு” எனும் புத்தகத்தில். இது அப்போதிருந்த சூழ்நிலையில் மிகக் குறுகிய மனம் படைத்த அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் விளைவு, கெப்ளரின் தாயாருக்கு 14 மாத சிறைத் தண்டனையைப் பெற்றுத்தந்தது என்று நினைக்கும்போது இன்றைய மனிதனின் சந்திரனில் பயணமும், செவ்வாயில் ஆராய்ச்சியும் எப்படி சாத்தியம் என்ற வினாவை எழுப்புகிறது.

    இப்போது கெப்ளரின் புகழிற்குக் காரணமாக அமைந்த “கோள்கள் சூரியனைச் சுற்றும் விதிகளைப்” (Kepler’s Laws of Planetary Motion) பற்றிப் பார்ப்போம்.

    முதலாவதாக, அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்டப் பாதையில் (Elliptical Orbit) சுற்றுகின்றன என்பது அவரின் “நீள்வட்ட விதி (Law of Ellipses)” ஆகும். இரண்டாவது விதியானது, நாம் சூரியனின் மையத்திற்கும் மற்றும் எடுத்துக்கொண்ட ஒரு கோளின் மையத்திற்கும் ஓர் கற்பனைக் கோடு (Imaginary Line) வரைந்தால், அக்கோடு சம நேரத்தில், சம அளவு கொண்டதாய், (“equal areas in equal amount of time”) தோற்றமளிக்கும் (the Law of Equal Areas) என்பதேயாம். மூன்றாவது விதி “the Law of Harmonies” என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், ஒரு கோளின் இரண்டு சுழலும் நேரத்தின் விகிதங்களின் இரண்டு மடங்காக எடுத்துக்கொண்டால், அவற்றின் சம தொலைவின்  விகிதங்கள் சூரியனிலிருந்து மூன்று மடங்காக இருக்கும். இதைத்தான் ஆங்கிலத்தில் “The ratio of the squares of any two planetary periods is equal to ratio of the cubes their average distances from the sun என்கின்றனர். இம்மூன்று விதிகளுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், இவ்விதிகள் “Epitome Astronomiae Copernicanae” என்ற ஆராய்ச்சி நூலில் பதிவாகி உலகம் முழுவதும் மக்களால் படிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டும் வருகின்றன.

    கெப்ளர், நவம்பர் 15, 1630இல் காலமானார். அவருடைய இறப்புச் செய்தியை (Epitaph) அவரே எழுதியதை, இன்றும் அவருடைய கல்லறையில் காணமுடிகிறது. அவருடைய அந்த வாசகங்கள் அவருடைய தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன; பின்பு அவை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க:

    “Mensus eram coelos, nunc terra metior umbras; Mens coelestis erat, corporis umbra jacet”.

    “I measured the skies, now the shadows I measure; Skybound was the mind, earthbound the body rests”

    “நான் வான்வெளியை அளந்தேன், இப்பொழுது என் நிழலை அளக்கிறேன்; வான வரையறை என்பது மனதளவு; உலக வரையறை என்பது நம்முடைய உடல் அமைதியுறும் இடம்.”

    இவ்வாறு பல்வேறு வான்வெளி ஆராய்ச்சிகளையும், கணிதம் மற்றும் இயற்பியல் விதிகளையும் நமக்களித்த கெப்ளரின் புகழ் அறிவியல் வானில் என்றும் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஆதாரங்கள்:

    1. American Physical Society news, Vol. 23, No. 7, July 2014
    2. www.nasa.gov
    3. http://en.wikipedia.org/wiki/Platonic_solid
    Share
  • ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    ramadan

    இறையருளின் இயக்கமதே இவ்வுலகம்              
    என்பதனை உணர்ந்தவர்கள்- தினம்
    தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்!          Ramadan-Greetings-
    மறைபொருளை மனதாலே நினைந்தபடி
    நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து
    அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ?

    இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும்
    குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை
    ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ?
    இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல்
    இறைவனடி சேருதலே என்றும் நன்றாம்!!                      ramadan-greetings

    பசியதுவும் எப்படியிருக்கும் என்பதனை                              
    பசித்துணரும் மாதம்தான் ரமலான்…அதை
    பண்போடு அணுகிநிதம் நோன்புற்று
    ஒருமாத காலமும் உணர்ந்திடும் மார்க்கத்தை
    உள்மனதில் கொண்டு நடைபோடுகின்றார்!

    அன்பென்ற சொல்லின் பொருள் விரிவாக்கி
    அனைவரும் நலம்காணும் உலகைக்காண்கின்றார்!
    உயிரனைத்தும் படைத்த பெருநாயகனின் திருப்புகழ்
    ஓதிதினம் வாழுகின்ற மாந்தெரல்லாம் வாழியவே!!

    ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

    Share
  • நேயத்தைக் கொண்டாட வைக்கும் நூல் வாசிப்பு

    புத்தகமும் மனிதநேயமும்

    எஸ் வி வேணுகோபாலன்

    வாசிப்பு என்பதே நேயத்தின் ஒரு வெளிப்பாடுதான். மகாகவி பாரதியின் கவிதை வரிகளில், “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று வருகிறது. என்ன கருவி அது? காசியில் இருப்பவர் பேசும் மொழி காஞ்சியில் இருப்பவர்க்கு எப்படி விளங்கும்…ஒன்று இவர் அந்த மொழியைக் கற்றிருக்கவேண்டும். அல்லது அவர் தமிழில் பேச வேண்டும். அல்லது பொதுவான மொழியொன்றில் பரஸ்பரம் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் சொல்வதை இவர் கேட்பதற்கோர் இதயம் வேண்டும். அந்த உள்ளம் – அந்த மனம்தான் பாரதி சொல்லும் கருவி.

    கதையோ, கவிதையோ, சிறுகதையோ, நாவலோ – ஒரு புத்தகம் நமக்குள் எத்தனையோ வித சிந்தனையைத் தூண்டிவிடுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் குறித்து யோசிக்க வைக்கிறது. சிந்தி மொழி கவிஞர் மோதிலால் ஜத்வானி எழுதி இருக்கும் செலவழித்த புன்னகைகள் என்ற கவிதை, “மளிகைக் கடைக்காரனிடம் சிறிது புன்னகை செய்கிறேன்/ பொருள்களைத் தராசில் வைத்து நிறுத்தும்போது/ என் பக்கம் சிறிய சாய்வு செய்யக் கூடாதா என்று! எனது அன்றாடத் தேவைகளின் விலை/ கூடிக் கொண்டே செல்கிறது, காய்கறிக்கடைக்காரனிடமும் புன்னகை செய்கிறேன்/ என்னுடையதைப் போன்ற குறைந்த தேவைக்கு/ அவன் அதிகவிலை வைத்துவிடக் கூடாதே என்று/ இப்படி கடைத் தெரு முழுக்க செலவாகிறது என் புன்னகை/ வீடு திரும்புகிறேன்/ மனைவி பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்க/ புன்னகை கைவசம் இல்லை” என்று முடிகிறது.

    டாக்டர் பி எம் ஹெக்டே அவர்களின் “உள்ளங்கையில் உடல் நலம்” (விகடன் பிரசுரம்)நூலின் முதல் கட்டுரை சிரிப்பு மருத்துவம் பற்றிப் பேசுகிறது. சிரிப்பைப் பற்றிய கலைவாணரின் பாடலில், ‘வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு’ என்று வருகிறது. ஹெக்டே அவர்கள், நாய் போன்ற சில விலங்குகள் சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றின் முகம் நீண்டிருப்பதால் நமக்கு அது தென்படுவதில்லை என்று சொல்கிறார். நாமோ சிரிக்கத் தெரிந்தும் சிரிக்க மறுக்கிறோம். ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று நமது மோவாயைத் தொட்டுப் புகைப்படக் கலைஞர் என்ன கெஞ்சினாலும் நாம் இறுக்கமாகவே நிற்பதை புகைப்பட ஆல்பங்கள் நிரூபிக்கும். இலேசாகும் மனத்தால் வஞ்சனையின்றி சிரிக்க முடியும். அதற்கும் புத்தகம் மிகப் பெரிய வாசல் திறந்து கொடுக்கிறது. வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த வாசிப்பு. நாம் ஏன் அதை மறுத்துக் கொள்ள வேண்டும்?

    அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தொண்ணூறுகளுக்குப் பின் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. உலகமயம் நமது போக்கில் எத்தனையோ மாற்றங்களைத் திணித்துவிட்டது. கூடி வாழ்ந்த ஜனத் திரளை ஒற்றை ஒற்றை மனிதர்களாகப் பிரிக்கும் வேலையில் உலகமயம் வெற்றி பெற்று வருகிறது என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார் பிரபல பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக். நேயத்திற்கு எதிரான கோட்பாடு இந்த உலகமயம்.

    “இந்தத் தெருவில் குரைப்பதற்கு நாய் கூட இல்லை…”என்று தொடங்கும் த.வாசுதேவன் என்பவரின் வீடு என்கிற கவிதை (தீராநதி: மார்ச் 2012),

    வீடுகளின் குழந்தைகள்
    ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்
    பெரியவர்கள்
    முதியோர் இல்லங்களில்
    இறப்பதற்குக் காத்திருக்கின்றனர்
    ……………
    ………..

    தங்கத்தை பேங்க் லாக்கரில் வைத்திருப்பதால்
    திருடர்களும் வர மாட்டார்கள்
    மிச்சமிருக்கும் உணவை
    வைப்பதற்கு ஃபிரிட்ஜ் இருப்பதால்
    பிச்சைக்காரன் கூட இங்கு வரமாட்டான்
    ……..
    ……..
    நாங்கள் அனேகமாக அலுவலகத்தில்தான் இருக்கிறோம்
    வாடிக்கையாளரும் எஜமானனும்
    வெளிநாட்டில் இருக்கிறார்கள்
    …….
    ……
    வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது
    மனசும்தான்
    இந்த வீட்டில்
    டிவி மட்டுமே பேசவும் பாடவும் செய்யும்
    இந்த வீட்டில் தான்
    கதவுகளை நன்கு சாத்தியபடி
    நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”

    என்கிறது. மறைந்த மார்க்சிய தத்துவார்த்த மேதை பி ராமமூர்த்தி அவர்களது ‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ (அண்ணா அவர்களது ஆரிய மாயை நூலுக்கு எதிர்வினையாக ஆரிய மாயையா, திராவிட மாயையா என்ற தலைப்பில் பி ஆர் எழுதிய நூல் அது) என்ற புத்தகத்தில், புராதன பொதுவுடைமை காலத்தில் மக்களது கீதங்களாகப் பிறந்த ரிக் வேதத்தில், ‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து’ என்று வரும் பாடலின் பொருள், நாம் கூட்டாக வாழ்வோம், கூட்டாக விளையாடுவோம், கூட்டாக அனைத்து இன்பங்களும் அடைவோம் என்பதாக வருவதை பி ஆர் விளக்கினார்.

    ‘உன்னைப் பற்றி மட்டுமே யோசி, உனக்குள் ஒடுங்கிக் கொள், உன்னைப் பற்றிமட்டுமே கவலை கொள்’ என்கிறது உலகமயம். சேர்ந்து வாழும் மனிதகுல பண்பாட்டுக்கு வேட்டு வைக்கிறது உலகமயம். அதைத் தகர்த்து எறிந்து மனித குல இருப்பிற்கும், மற்றவர்களுக்கு உதவுவதற்கும் சிந்திக்க வைக்கும் வேலையை ஒரு புத்தகம் சிறப்பாகச் செய்யமுடியும்.

    அறிவை விரிவு செய், அகண்டமாக்கு
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
    அணைந்து கொள், உன்னைச் சங்கமம் ஆக்கு
    மானிட சமுத்திரம் நானென்று கூவு

    என்ற பாவேந்தர் வரிகள் இதைத் தான் செய்கின்றன. ஒரு நல்ல புத்தகம் உள்ளத்தைத் தீண்டி இம்மாதிரியான சிந்தனைகளைத் தூண்ட முடிகிறது. நேயத்தை ஊட்டமுடிகிறது.

    எல்லாவற்றையும் பண்டமாக, பணமாக, லாபத்தின் கூறாகப் பார்க்கப் பழக்கும் தாராளமய காலத்தில் நாம் அனைத்து உறவுகளையும் ஈவிரக்கமின்றி மிதித்து நடக்கிறோம். குழந்தைகளை வாட்டி எடுக்கிறோம். வயது மூத்தவர்களைப் புறக்கணிக்கிறோம். முதுமை அடையும் நிராகரிப்பின் கசப்பைப் பேசும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்று, “எண்ணைக்கு என் மனைவி/என்னைவிட்டுப் போனாளோ/ அண்ணைக்கே என் படுக்கை/ திண்ணைக்கு வந்திருச்சு/ நாய் தின்னும் சொத்தில் நாலஞ்சு கவளத்த/ எனக்கும் போட்டுவப்பான் இரக்கமுள்ள எம்புள்ள..” என்கிறது.

    குழந்தைகள், முதியவர்கள், பெண்களையும் சமூகம் மிக மோசமாக நடத்துகிறது. ஒடுக்கப்பட்டோரை மிகவும் கீழ்மைப்படுத்தி வதைக்கிறது. ஆதிக்க உளவியல் இருக்கும் இடத்தில் அன்பு மறுக்கப்பட்டுவிடுகிறது. தருமபுரி மாவட்டத்தில் கிராமங்கள் மூன்று சூறையாடப்பட்ட சாதிய தாக்குதல்களை விவாதிக்கும் யாரும், அதற்கு ஒரு மாதமுன்பே தொடர் நிகழ்வுகளின் தாக்கத்தில் இமையம் அவர்கள் எழுதிய ‘பெத்தவன்’ (உயிர்மை:ஜூன் 2012; பின்னர் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்திருப்பது) கதையைப் பேசாது தவிர்க்க முடியாது.

    உரத்த சத்தம் எழுப்புவதாலேயே ஒன்றின் நியாயம் தீர்மானிக்கப்பட்டுவிட முடியாது என்று சொல்லும் குட் பை மிஸ்டர் சிப்ஸ் கதையை, பேரா ச மாடசாமி அவர்களது மொழியில் “போயிட்டு வாங்க சார்” (பாரதி புத்தகாலயம்) நூலகா வாசிக்கிறோம். ஆசிரியர்கள் மாணவர் உறவின் மேன்மையைக் கொண்டாட்டமாகப் பேசும் இந்த நூலை ஆசிரியர்கள் வாங்கிப் படிப்பது அவசியமாகிறது.

    இலங்கை எழுத்தாளர் அ முத்துலிங்கம் (கனடா) எழுதியிருக்கும் ‘புவி ஈர்ப்புக் கட்டணம்’ சிறுகதை, இயற்கையின் வரங்களுக்கும் கட்டணம் போட்டுச் சுரண்டும் எதிர்கால அரசியலைப் பகடி செய்து எழுதப்பட்டதாகும். சுஜாதாவின் ‘நகரம்’ சிறுகதை, குழந்தையின் சிகிச்சைக்காக மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வரும் ஏழைத் தாய் எதுவும் புரியாமல் குழந்தையோடு வெளியேறியபிறகு, அடடா அது ஒரு தீவிர நோய் ஆயிற்றே எங்கே அவர்கள் என்று அலைமோதும் மருத்துவரையும் பேசுகிறது.

    வகுப்பறை குறித்துக் கேள்வி எழுப்பும் ஆயிஷாவும், குழந்தை-பெற்றோர் உணர்வுகள் குறித்தப் பேசும் ரோஜாவும் (இரா நடராசன் நூல்கள்:பாரதி புத்தகாலயம்) கல்வி குறித்து நிறைய சிந்தனைகளை எழுப்புகின்றன. வர்த்தகமாகும் கல்வி பற்றியும், மருத்துவம் பற்றியும் பேசும் நூல்கள் சம கால அராஜக வாழ்வுச் சூழலுக்கு எதிரான கலகத்தை விதைக்கின்றன.

    காஸா பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் மருத்துவமனைகளில் நிறையும் இரத்தம், வெட்டப்பட்ட உறுப்புகள், உயிரிழக்கும் மனிதர்களைப் பார்த்தாவது போர்களை நிறுத்துவீர்களா என்று ஒபாமாவை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரை ஒன்றை அங்கே பணியாற்றும் மருத்துவர் எழுதியிருக்கிறார் (தமிழ் இந்து:ஜூலை 25). சம காலத்தில் வேட்டையாடப்படும் உணர்வுகளை, உளவியலை, வாழ்க்கையை மீட்டெடுக்க புத்தகங்கள் ஏராளமான சாத்தியங்களை முன்வைக்கின்றன. ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குரலை நூல்கள் எழுப்பமுடியும்.

    வாசிப்பு பகிர்தலைக் கற்பிக்கிறது; மனித வாழ்வை மேன்மைப் படுத்துகிறது; நேயம் கொண்டாடும் நெஞ்சத்தை வழங்குகிறது.

    (ஓசூர் புத்தக் கண்காட்சியில் ஜூலை 25 அன்று நடந்த கூட்டத்தில் பேசியதிலிருந்து)

    நன்றி: தீக்கதிர் – இலக்கிய சோலை (ஜூலை 28, 2014)

    Share
  • கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (6)

     

    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    (பாடல்)

    images (1)
    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    நெஞ்சைத் தொட்டுக் கிள்ளாதே
    கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறேன் சற்றும் விலகிச் செல்லாதே! இந்த
    பிஞ்சு நெஞ்சை இன்னமும் நீ கலங்க விடாதே!

    அஞ்சுப் பத்துவிரல்கள் எந்தன் கன்னத்தைத் தாங்க
    அருகில், மிக அருகில் என்னுயிர் ஏங்க
    நெஞ்சில் உந்தன் சுவாசம் படும் நெற்றிப் பொட்டின் வாசம் வரும்
    தஞ்சமென்று வெள்ளம்வந்து நாணலைக் கெஞ்சும், இந்தத்
    தருணத்தில் தமிழும் நிலவும் தள்ளாடி மயங்கும் (கொஞ்சி)

    சந்திக்கும் போது காலம் மணலாய்க் கரையும்
    சந்திக்க ஏங்கும்போது மலையாய் கனக்கும்
    சந்திப்பும் தேவையில்லை பிரிவுக்கும் வாய்ப்புமில்லை
    இந்த உயிர் அந்த உயிர் என்பதில்லையே, இந்த
    சொந்தம் எந்த ஜென்மபந்தம் தெரியவில்லையே
    தத்தைக்கிளி கொத்திச் சிவந்து கனிந்த பழங்கள்போல், உன்
    பட்டு இதழ் தொட்டுவரும் பவழ வார்த்தைகள்!
    கள்ளெடுத்த மொழியோ அன்பின் வழியோ உந்தன்
    காதல் மொழி?
    முள்ளெடுத்த முனையில்நின்று தவம்புரிவது எந்தன் விதி (கொஞ்சி)

    நாணத்துக்கும் வெட்கத்துக்கும் விடுதலை நாளா?
    வண்ணத்துக்கும் ராகத்துக்கும் திருமண நாளா?
    வானத்துக்கு என்னவந்தது தேனில் விழுந்ததா? என்
    வார்த்தையில் அமிழ்தம்நுழைந்து மயங்கித் துவண்டதா?
    காலத்துக்கும் இருக்கும் இந்த நெருக்கம் என்று
    கவிதை சொல்ல
    கண்விளிம்பில் மட்டும் ஒரு
    கண்ணீர்த்துளி தயங்கித் ததும்ப (கொஞ்சி)

     

     

    Share
  • ஆலமரம் நிற்கிறது!

    -எம்.ஜெயராமசர்மாமெல்பேண்

    அழகான ஆலமரம்                                             banyan tree
    கிளைவிட்டு
    நின்றதங்கே
    விழுதெல்லாம்
    விட்டுஅது
    வேரோடி
    நின்றதங்கே

    ஆலமர நிழல்தேடி
    அனைவருமே
    வருவார்கள்
    வேலையில்லா
    நிற்போரும்
    விரும்பி
    வந்திருப்பார்கள்

    காலைமாலை என்றின்றி
    காளையரும்
    வருவார்கள்
    சேலையுடன்
    பெண்கள்வந்து
    சிரித்து
    விளையாடிடுவர்

    நாலுமணி ஆனவுடன்
    ஆளரவம்
    கூடிவிடும்
    ஓடிடுவார்
    ஆடிடுவார்
    உல்லாசம்
    கூடிவிடும்

    பந்து விளையாடிடுவர்
    சிந்து
    கவிபாடிடுவர்
    கெந்தி
    அடித்துநிற்பர்
    கிட்டிப்
    புள்ளும்ஆடிடுவர்

    பெரியவரும் வருவார்கள்
    சிறியவரும்
    வருவார்கள்
    பேசாமல்
    ஆலமரம்
    பெருமையுடன்
    வரவேற்கும்

     விழுது பற்றியாடிடுவர்
    மேல்மரத்தில்
    ஏறிடுவார்
    அழுங்குழந்தை
    ஆடுதற்கு
    அங்கூஞ்சல்
    கட்டிடுவார்

    சீட்டு விளையாடிடுவர்
    சிரித்து
    விளையாடிடுவர்
    ஆர்ப்பரித்துச்
    சிறுவரெலாம்
    அங்கங்கே
    ஓடிநிற்பர்

    வேர்க்கடலை கொறிப்பாரும்
    வெற்றிலையை
    மெல்வாரும்
    பாற்பொருளை
    உண்பாரும்
    பார்த்திடலாம்
    மரநிழலில்

    ஆயிரம் பேரமர
    ஆலமரம்
    நிழலைத்தரும்
    அனைவருமே
    இளைப்பாறி
    அகமகிழ்வு
    பெற்றிடுவர்

     சித்திரை பிறந்துவிட்டால்
    எத்தனையோ
    கொண்டாட்டம்
    நித்திரையே
    கொள்ளாது
    நீண்டகூத்து
    நடக்குமங்கே

    வடமோடி தென்மோடி
    வகைவகையாய்க்
    கூத்தங்கே
    பாய்விரித்துப்
    பார்த்தபடி
    பார்த்திடுவார்
    ஊரார்கள்

    தேனீர்க்கடையும் வரும்
    தித்திப்புக்கடையும்
    வரும்
    அப்பம்சுட்டு
    விற்கின்ற
    ஆச்சியும்
    வந்திடுவார்

    கடலையும் வறுப்பார்கள்
    கச்சானும்
    வறுப்பார்கள்
    கமகமக்கும்
    வாசனையால்
    களைகட்டும்
    ஆலையடி

    குடும்பமெலாம் ஒன்றாக
    குதூகலமாய்
    இருப்பார்கள்
    குழந்தைகளும்
    குறும்புசெய்து
    குதூகலத்தில்
    மிதப்பார்கள்

    அமைதியாய்ப் பார்த்துநிற்கும்
    அதையெல்லாம்
    ஆலமரம்
    ஆர்வந்து
    போனாலும்
    ஆலமரம்
    அகமகிழும்

    போரொன்று வந்ததனால்
    ஊரெல்லாம்
    ஓடிற்று
    யாருமே
    ஊரிலில்லை
    ஊரிப்போ
    உறங்குகிறது

    களைகட்டி நின்றவிடம்
    நிலையிழந்து
    நிற்கிறது
    ஆருமே
    வருவதில்லை
    ஆலமரம்
    நிற்கிறது

     ஆலமரம் மட்டுமிப்போ
    அப்படியே
    இருக்கிறது
    ஆலடியைப்
    பார்ப்பதற்கு
    அழுகைதான்
    வருகிறது

    மரம்மட்டும் பேசிவிடின்
    வக்கிரங்கள்
    தெரிந்துவிடும்
    மரமாக
    இருப்பதனால்
    வக்கிரங்கள்
    தொடர்கிறது

    ஆலமரம் அழுதுவிடின்
    ஆறாக
    ஆகிவிடும்
    அதுமரமாய்
    நிற்பதனால்
    நாமழுது
    நிற்கின்றோம்!

    Share
  • கேசவ் எண்ணம் – கிரேசி வண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “பசுபதி பாசம் பிணைப்பை விளக்கும்
    வசுகுல கண்ணன் வடிவில் -ஒசிபிசா
    COW -BOY கிருஷ்ணணில் கண்டேனே, ஸ்ரீகிருஷ்ண
    த்வைபா யனர்சொன்ன தேசு”….கிரேசி மோகன்….

    கிருஷ்ண த்வைபாயனர் -வியாசர்….தேசு-தேஜஸ்….

    Share
  • எனக்குள்….

     

    சு.ரவி

    C34A4ABF-599A-4D23-ADB6-D2FF3BCC2728

    உள்ளக் காட்டில் உலவும் விலங்கின்
    உறுமல் கேட்கிறது-கோபப்
    பொருமல் கேட்கிறது!

    அன்பால் வசியம் செய்தேன் அதனால்
    அடங்கி ஒடுங்கியது- பிறரை
    வணங்கி ஒதுங்கியது. – அந்த
    அன்பின் வலிமை அறியா மாந்தர்
    அதட்டி மிரட்டியதால் – விழியை
    உருட்டி வெருட்டியதால் – என் (உள்ளக்)

    அறிவுத் தீயை மூட்டி வளர்த்தேன்
    அஞ்சி நடுங்கியது – உள்ளே
    சென்று பதுங்கியது – எரியும்
    அறிவுத் தீயை அணைக்கும் மாந்தர்
    அறியாச் செய்கையினால் -அவர்தம்
    புரியாக் கொள்கையினால் – என் (உள்ளக்)

    தூங்கும் விலங்கைத் துணிப் பந்தாம் என
    எட்டி உதைப்பவரே – காலால்
    தட்டி மிதிப்பவரே – மிருகம்
    ஓங்கும் பழிவெறி விழிகளில் மின்னிட
    எழுமென்றறியீரோ – உமதுடல்
    விழுமென் றுணரீரோ! – இதோ என் ( உள்ளக்)

    Share
  • அல்லா அல்லா .. நீயில்லாத இடமே இல்லை..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    ரம்ஜான் வாழ்த்துகள்!!!

    ramzan

    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உயிருக்கு உயிராய்க் காணும்
    ஒரு வாசல் பள்ளிவாசல்

    கடவுள் அமைத்த மேடை இவ்வுலக வாழ்க்கை என ஒரு மதம் சொல்கிறது.  இறைவனின் படைப்பில்தான் எத்தனை எத்தனை உயிரினங்கள்..
    தோன்றியது.. ஆதாம் ஏவாளில் என இன்னொரு மதம் சொல்கிறது.. இன்னும் எத்தனை எத்தனை விதமான மதங்கள் இங்கே படைத்தவனை அடையாளம் காட்டி முன் மொழிந்தாலும் அனைவரும் வழிமொழிவது ஏக இறைவனைத்தான்!

    வாழ்க்கைக்கு நெறிவகுக்க.. மனித மனத்தைக் கட்டுக்குள் வைக்க.. சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதை நடைமுறையில் செயலாக்கம் செய்ய உருவாக்கப்பட் சம்பிரதாய சடங்குகளை சற்றே விடுத்து உற்றே நோக்கினால் அந்த உண்மை புலப்படும்!  அகக் கண்களில் ஆண்டவன் காட்சியளிப்பான்!  ‘கடவுள்’ என்கிற சொல்லின் பொருளே உள்ளத்தில் உள்ளவன் என்பதைக் குறித்திடவே.. பகுக்கப்பட்ட சொல்லிலும் படைத்தவனின் காட்சி!

    கவிஞர்களும் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து உணர்ந்து எடுத்தியம்பும் சிறப்பைப் பெற்றவர்களாய் திகழ்கிறார்கள்!  அவ்வரிசையில் கவிஞர் வாலியின் உள்ளம் அல்லாவை தரிசிக்கும் அழகைப் பாருங்கள்!  இசை அமைத்துப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ‘முகமது பின் துக்ளக்’ என்னும் திரைப்படத்திற்காக!!

    http://youtu.be/r5F0CfsMgBY
    காணொளி: -http://youtu.be/r5F0CfsMgBY

    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடல்: அல்லா அல்லா
    திரைப்படம்: முகம்மது பின் துக்ளக்
    பாடியவர்: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1971

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு
    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு
    மனம் வெளுக்க எது தான் உண்டு?
    நபியே உன் வேதம் உண்டு

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உயிருக்கு உயிராய்க் காணும்
    ஒரு வாசல் பள்ளிவாசல்

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகமே நீயே சொந்தம்

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

     

    தெய்வ சன்னிதானங்கள் – எங்கும் எப்போதும் புனிதமானவை!  பவித்ரமானவை!  அந்தச் சன்னிதியில் ஆண்டவன் அருள் எல்லோர்க்கும் நிச்சயம்! இது தெய்வ சத்தியம்!!
     

     

     

    படம் உதவிக்கு நன்றி: www.nagoredargha.com

    Share
  • அர்ச்சனை -1

    –சு.கோதண்டராமன்.

    ram_worship_god_shiva

    பரம் பொருளுக்கு உருவமில்லை, பெயரில்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படையும் அது தான். இறைவன் என்று ஆண்பால் பெயரால் சுட்டுகிறோம். ஆனால் அவன் ஆணும் பெண்ணும் அலியுமல்லாததோர் தாணு என்கிறார் தாயுமானவர்.  அது இருளன்று ஒளியன்று என நின்றதுவே என்கிறார் அருணகிரி.

    மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
    எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை
    இரவல்லை பகலல்லை யாவு மல்லை
    பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
    உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

    என்கிறார் திருநாவுக்கரசர். இப்படி எல்லா வகையிலும் இல்லை இல்லை என்று எதிர்மறையாகவே வர்ணிக்கப்படும் பொருளை துவக்க நிலைச் சாதகர்கள் எப்படி மனதில் இருத்த முடியும்? அதற்காகத் தான் இறைவனுக்குப் பல உருவங்களை உருவாக்கி வணங்குகிறோம்.

    ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

    என்று மணிவாசகர் கூறியபடி, பல பெயர்களால் அவனது தோற்றச் சிறப்பையும் அருஞ் செயல்களையும் போற்றிப் புகழ்ந்து பாடுவதும் இந்து சமயத்துக்கே உள்ள தனிச் சிறப்பு.

    இறைவனுக்குள்ள பல பெயர்களை நிரல் பட அமைத்து திருநாம மாலையாகத் தொடுப்பது ஒரு வகை. ஒவ்வொரு பெயருக்குப் பின்னரும் போற்றி அல்லது அது போன்ற ஒரு சொல்லை இணைத்துப் போற்றுவது மற்றொரு வகை. பின்னது மட்டுமே தற்போது அருச்சனை எனப்படுகிறது.  திருநாம மாலையிலும் அருச்சனையிலும் வரும் பெயர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
    1 இறைவனின் தோற்றச் சிறப்புகளைக் கூறும் பெயர்கள்
    2 பண்புச் சிறப்புகளைப் போற்றுபவை
    3 இறைவன் செய்த அருஞ்செயல்களை வியந்து பாராட்டுபவை
    4 இருப்பிடத்தை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்

    தாளி அறுகின் தாராய் போற்றி
    நீளொளி யாகிய நிருத்தா போற்றி
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி  
    இவை இறைவனின் தோற்றத்தை வருணிக்கின்றன.

    நித்தா போற்றி நிமலா போற்றி
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    இவை பரமனின் பண்புகளைப் போற்றுபவை.

    புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
    கருங்குரு விக்கன் றருளினை போற்றி  
    இவை ஈசனின் திருவிளையாடல்களை நம் நினைவுக்குக் கொணர்கின்றன.

    ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவை யாறா போற்றி
    அண்ணா மலையெம் அண்ணா போற்றி
    இவை தேவதேவன் உவந்து வாழும் திருத்தலங்களை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்.

    மேலே கண்டவை மணிவாசகரின் போற்றித் திருவகவலிலிருந்து எடுக்கப்பட்டவை. இது 154 திருநாமங்கள் கொண்ட ஒரு அற்புதமான அருச்சனை. இதில் தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற புகழ்பெற்ற வரிகள் வருகின்றன.

    அப்பரடிகளின் தேவாரத்தின் பெரும்பகுதி திருநாம மாலை தான். அவரது திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகத்திலும், கயிலை மலைப் போற்றித் திருத்தாண்டகத்திலும் இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் போற்றி என்ற சொல் இணைந்து வரும். இவை தவிர திருநாமங்களுடன் கண்டாய், காண், நீயே, போலும், கண்டேன் நானே என்ற சொல் இணைந்து வரும் பதிகங்கள் பல உண்டு. சில எடுத்துக் காட்டுகள் மட்டும் காண்போம்.

    தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
    காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்

    விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
    வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
    மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்

    ஓசை ஒலியெலா மானாய் நீயே
    உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
    வாச மலரெலா மானாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே

    மடந்தை பாகத்தர் போலும்
    மான்மறிக் கையர் போலும்
    குடந்தையிற் குழகர் போலுங்
    கொல்புலித் தோலர் போலும்

    அப்பரடிகளின் பிற பாடல்களும் சம்பந்தர், சுந்தரர் பாடல்களும் இது போன்ற போற்றிச் சொற்கள் இல்லாமல் திருப்பெயர் மாலையாக உள்ளன.
    எடுத்துக் காட்டாக சம்பந்தர் தேவாரத்தில் முதல் பாடலில்,
    தோடுடைய செவியன்
    விடையேறி
    தூவெண்மதிசூடி
    காடுடைய சுடலைப் பொடி பூசி
    உள்ளம் கவர் கள்வன்
    ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த, அருள் செய்தவன்
    பிரமாபுரம் மேவிய பெம்மான்
    என்று இறைவனின் சிறப்புப் பெயர்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழின் மிகப் பழமையான திருநாம மாலையை பரிபாடலில் பல இடங்களில் காணலாம். எடுத்துக்காட்டுக்கு ஒன்று-
    தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;  
    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

    நீண்ட தொடராக வரும் திருநாம மாலை ஒன்று திருமுருகாற்றுப்படையில் காணப்படுகிறது.
    நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை
    ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
    அறுவர் பயந்த ஆறமர் செல்வ,
    ஆல்கெழு கடவுள் புதல்வ, மால்வரை
    மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே,
    வெற்றி வேல் போர் கொற்றவை சிறுவ,
    இழையணி சிறப்பிற் பழையோள் குழவி,
    வானோர் வணங்கு வில் தானைத் தலைவ,
    மாலை மார்ப, நூலறி புலவ,
    செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள
    அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை,
    மங்கையர் கணவ, மைந்தரேறே,
    வேல் கெழு தடக்கைச் சால் பெரும் செல்வ,
    குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
    விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,
    பலர் புகழ் நன்மொழிப் புலவரேறே,
    அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக,
    நசையுநர்க்கு ஆர்த்தும் மிசை பேராள,
    வலந்தோர்க்களிக்கும் பொலம்பூட் சேஎய்,
    மண்டமர் கடந்த நின் வென்றாடகலத்து
    பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்,
    பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்,
    சூர் மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி,
    போர் மிகு பொருந, குரிசல்.

    படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

    Share
  • Chithi

    Bhuvaneshwar

    I was a little girl those days. We lived in a village near Nagarkovil, in the extreme south of Tamil Nadu. My father worked as a supervisor in the rice mill in Nagarkovil. He was a good man, but a rather strict father with stern features. I do not remember having seen him laugh or joke in the home, as far as I can remember. The slightest infraction in discipline invited application of the dreaded cane. He was a figure of authority, more respected and feared than loved.

    Mother stayed at home and took care of us. She was a house wife. She was a sweet woman and my favourite at that age. She would make my favourite coconut burfi during festivals and my birthday. Father’s income must have been meagre, for we hardly ever visited the thatched theatre to watch movies. Father must have been an austere man; he would use the same set of clothes and sandals till they were no longer fit to be used. Same rule applied to mother.

    She had a day full of domestic labour and I am sure she slept light, as I remember whenever I woke up in the night for water or to visit the bathroom, she would be up too. I always slept in her arms, and she would pat me to sleep. I knew no fears while she was around. I hardly ever remember her beating me, I doubt if she ever did.

    I went to the local government school. Leela was my best friend. She was 2 years older than I was and lived in one of the houses in our street. We used to play paandi and pallaankuzhi in the evenings and holidays. I always wished I had the long luscious shiny straight black hair like she did. I had curly hair and it was short. Every morning her mother would spend half an hour to oil her hair and plait it into a braid.

    I and Leela would go to the Isakki Amman temple every day, on our way home, from School. It was no big temple. Just a small shrine under a Banyan tree with an idol of Isakki Amman installed. On Fridays and Tuesdays a Poojaari with a big moustache and pot belly would come and do Poojas and give us lemon fruit as prasadham. We once made lemon juice from the fruits to drink, and got scolded by our parents.

    We had heard that Isakki was a girl like us a long time ago and that her father married another lady after the death of her mother. The second wife of her father – Chithi – was a cruel lady who beat Isakki for everything and did not feed her properly. One day, she saw Isakki giving water to a thirsty cowherd boy and talking to him. She made up a story that there was an affair between them and spread the same in the town. The whole town abused Isakki and the poor Isakki hung herself. From then on, she is believed to haunt the banyan tree and they built a temple for her. She was believed to be a powerful goddess and we all believed she would make us pass in the exams and protect us by preventing maths miss from beating us when we scored low.

    The unending labour at home and the rice-husk-ash from the husk-stove took its toll on my mother’s health. She fell ill and remained ill for 4 months. I do not know what father felt about it, but I could not see any grief in him. But he did not scold mother like before, when she could not do all the chores in time.

    My mother, towards the end of her life, was closer to me than ever. She would talk to me about my future and the dreams she had about me, many nights, as father was in office, doing over-time, to meet mother’s medical expenses. She wanted me to study well, and become a doctor so that I could help people.

    One night, she had severe coughs, and the cough syrup we had had little effect. Father was in office and I was afraid. I asked her if I should run and bring father so that we could go to hospital. She said that was of no use. She asked for some warm water and held me close to her bosom and asked me to study well and take care of my father. She said he was a very good man who loved both of us. She said the God she prayed to will be with me and protect me always, when she is not with me. I asked her if she was going anywhere. She looked into my eyes, kissed me and gave a wry smile… She said she was going to see her mother. She blessed me again and we slept. Her eyes were moist and I remember that expression on her face like today. I slept with my arms around her neck. She sung her favourite lullaby softly and patted me to sleep. I do not know when I dozed off.

    Next morning, she did not respond to my calls – she was no more. I had never seen father shed a tear, till that day. It did not matter to me then, the only person who loved me was carried away and burnt. All I had of my mother were her saree and her ashes in a little copper urn.

    Father’s mother – my grandmother came to live with us, after my mother’s death. A term later, my grandmother told me that I would have a new mother. A chithi. She told me that my father should not be alone, raising a young girl and that I must have a mother.

    Leela was more terrified of the prospect than was I. She chided me “You foolish girl, did you agree to your father’s marriage?” as if my permission was sought.

    I said “What do you think I should do?”…

    She did not answer my question but asked me to be careful – “I don’t know. But be prepared to get more beatings if your chithi comes. We know from movies and stories, how chithies are”.

    And to top it all, when we went to Isakki’s temple, she reminded me of Isakki’s history and how she died. Now I was terrified. Leela had to tell me a way out.

    She said “Atleast pray to Isakki that your chithi should not have Children”. And I prayed like that every day for 2 years.

    So, the wedding happened we had a good feast, and a well-dressed and decorated chithi came home, much against my muffled wishes.

    My initial resentment towards her was twofold – I could not brook anyone taking my mother’s place in the home, and I was also afraid that she will be cruel. It did not help that she did not make my favourite coconut burfis like my mother.

    My father was his usual self. One night when chithi had gone to visit her brother’s new baby, I saw him holding my mother’s photo on his chest when sleeping. I silently cried.

    But as I grew up, things changed. I could see a bit beyond the veil of my prejudices. Chithi was not what I expected. I did not know her age, but she must have been younger than my mother. I inferred that as I grew up, because many strangers we met used to ask if I was her younger sister.

    Chithi never beat me or scolded as I expected. This was a peculiar lady, to me. How could a chithi be good? I even thought if she had some silent evil plan! Three years rolled by. We got along well, but nothing special was there between us.

    One day, I broke the wall-lamp while pouring oil and my grandmother was livid – “You broke the 20 year old lamp! A girl child with such carelessness….” – My chithi intervened and prevented her from beating me.

    When I became a ‘big-girl’ in 9th standard, chithi prepared black ulundhu (urad dal) halwa and also my favourite coconut burfi. I started liking her when she presented a photo of my mother, newly framed, after the function. I thought I could be her friend. We began to be friendlier, gradually. It helped that Leela’s father got a transfer and they moved to Madurai.

    One day, when I was in 10th standard, my father saw me talking to my class mate Ravi, in the street corner. I was asking him to give me his maths notes, as he was very good at maths. Once I came home, Father gave me a tight slap and unleashed a long sermon about how good girls had to behave. Grandmother said if I studied any more, I would run away with a boy surely. Chithi intervened and bore their ire, arguing strongly for me and took my father to task for not trusting his own daughter. And the dust settled. I had started to like her. She taught me Trigonometry. I did not know she was good at Maths and had a BSc in maths!

    I passed 10th with distinction and a 100 in Maths, and I passed 12th with 3 200s – one each in Maths, Physics and Biology. Chithi was happy and proud. My father and chithi wanted me to join BSc maths like Chithi, but I wanted to do medicine. I told chithi what I had never told anyone – I wanted to do medicine because of what my mother had told me on her last day. She won the argument with father, speaking for me, and also made sure father agreed to let me stay in Hostel, in Nagarkovil.

    She was happy every year, as I came out with great marks. And when I had the degree, and thanked her for her support, she asked me to thank my mother for inspiring me.

    For the second time in my life, I had to see someone in my family on their last legs. My grandmother was on her death bed now. While I was about to enter the room as I returned from hospital, I heard grandmother speak, and I waited outside for some strange reason. She lamented to my father “The first one gave a girl and this one is barren. I could not see a grandson before I die”.

    My father could not control his outburst. Despite protests from chithi, he said “Amma, please….. do not be so heartless to call her barren. On the very day I married her, she told me ‘Your daughter is my daughter, I do not want a child myself’, you will not go to a good heaven if you call her a barren lady”……….

    And, the rest is history. We are the best of friends now. I went on to become a gynaecologist. I am married to another doctor, a neurosurgeon from Tuticorin. And my chithi with father visits me once a month. We have a great time together, on the beach and shopping together. Father is retired and gets his pension but I and my husband send money to father. Chithi wanted to do MSc in maths, and I supported her case to father. She finished her MSc in Maths recently and is doing her MPhil.

    Six years have passed by since that day my veil of prejudice and resentment died with my grandmother and my chithi placed in my heart’s pedestal alongside my mother.  I still visit the Isakki temple. I hold my daughter who bears my mother’s name. I pray to Isakki that I get another daughter, so I could name her after my chithi………. Of course, chithi just told me in the temple that she’d rather have a boy named after father! That’s my chithi for you!

    ——

    All characters in this story are fictional.

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 14

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 14

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 53Mukkonakkilikal - 54Mukkonakkilikal - 55Mukkonakkilikal - 56

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

     

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

     

    ***********************************************************************************************************************

    Share