கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
டியர் கேசவ் ,உம்மை ஒப்பேற்ற வேண்டாம்….கண்ணனால் நீங்கள் Already ஒப்பில்லா ஏற்றத்தில் உள்ளீர்கள் ….வாழ்க உம் பணி &பாணி….
பின் குறிப்பு -There is a proverb in tamil ….”ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் ….பாடற மாட்டை பாடிக் கறக்கணும்” ….அருச்சுனனை உமது ஓவியத்தால் கதகளி ஆடிக் கறந்தான்….பின் கீதையைப் பாடிக் கறந்தான் ஆடாது அசங்காது அந்த ஆயன் ….அருச்சுனன் என்ன நாம் எல்லோருமே அந்த மேய்ப்பவனுக்கு முன் கால் நடை ஜீவ ராசிகள்தானே….!
அபாரம் கேசவ்….இது புதிய பாணி “கேளிச் சித்திரம் “….
“கேரள கேளி கிருஷ்ணன் அருச்சுனனை
ஓரளவு ஒப்பேற்றும் உத்தியுடன் , -தேரலகில்
தைதை கதகளி தாண்டவம் செய்தனன்
கீதைக்(கு) இதுஒத்தி கை”….கிரேசி மோகன் ….