எனக்குள்….
சு.ரவி
உள்ளக் காட்டில் உலவும் விலங்கின்
உறுமல் கேட்கிறது-கோபப்
பொருமல் கேட்கிறது!
அன்பால் வசியம் செய்தேன் அதனால்
அடங்கி ஒடுங்கியது- பிறரை
வணங்கி ஒதுங்கியது. – அந்த
அன்பின் வலிமை அறியா மாந்தர்
அதட்டி மிரட்டியதால் – விழியை
உருட்டி வெருட்டியதால் – என் (உள்ளக்)
அறிவுத் தீயை மூட்டி வளர்த்தேன்
அஞ்சி நடுங்கியது – உள்ளே
சென்று பதுங்கியது – எரியும்
அறிவுத் தீயை அணைக்கும் மாந்தர்
அறியாச் செய்கையினால் -அவர்தம்
புரியாக் கொள்கையினால் – என் (உள்ளக்)
தூங்கும் விலங்கைத் துணிப் பந்தாம் என
எட்டி உதைப்பவரே – காலால்
தட்டி மிதிப்பவரே – மிருகம்
ஓங்கும் பழிவெறி விழிகளில் மின்னிட
எழுமென்றறியீரோ – உமதுடல்
விழுமென் றுணரீரோ! – இதோ என் ( உள்ளக்)


அண்ணா .நன்றி .அதில் ஒரு பாரா விடுபட்டு போயிருக்கிறதோ ?
What a sharp memory! Yes.. Here it goes..the stanza that follows the pallavi…
……………………………………………………..- உலகின்
கள்ளத் தனமொரு பிள்ளைத் தனமாய்ச்
சீண்டி எழுப்பியதால் – அதனைத்
தூண்டி உலுக்கியதல் – என் (உள்ளக்)
Thanks for pointing out
Su.Ra
அண்ணா , மன்னிக்கவும் . இன்னும் ஒரு பாரா ?
The tiger roars, my heart soars to the dizzy heights of poetry
The force of love shines above and thats the greatest mystery
Thank you Bhaskar thanks a lot and thank you Su.Ravi
Poetry is my wine divine your loving brother k.Ravi