ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!
-கவிஞர் காவிரிமைந்தன்
இறையருளின் இயக்கமதே இவ்வுலகம்
என்பதனை உணர்ந்தவர்கள்- தினம்
தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்!
மறைபொருளை மனதாலே நினைந்தபடி
நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து
அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ?
இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும்
குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை
ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ?
இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல்
இறைவனடி சேருதலே என்றும் நன்றாம்!!
பசியதுவும் எப்படியிருக்கும் என்பதனை
பசித்துணரும் மாதம்தான் ரமலான்…அதை
பண்போடு அணுகிநிதம் நோன்புற்று
ஒருமாத காலமும் உணர்ந்திடும் மார்க்கத்தை
உள்மனதில் கொண்டு நடைபோடுகின்றார்!
அன்பென்ற சொல்லின் பொருள் விரிவாக்கி
அனைவரும் நலம்காணும் உலகைக்காண்கின்றார்!
உயிரனைத்தும் படைத்த பெருநாயகனின் திருப்புகழ்
ஓதிதினம் வாழுகின்ற மாந்தெரல்லாம் வாழியவே!!
ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!
ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!