உலக இதய நாள்

சித்ரப்ரியங்கா ராஜா
itayam

அடே மனிதா நினைவில் நிறுத்து

ஆபத்தான புகையை குறைத்து

இதயத்தை நீ தான் காத்திடுவாயே

ஈடில்லா வாழ்வு வாழ்ந்திடுவாயே

உள்ளம் என்பது கோயில் ஆகும்

ஊறு தான் வரின் இதயமே வாடும்

எல்லா நாளும் கவலையை குறைத்து

ஏறு போல் வலிமை இதயத்தே நிறுத்து

ஐயம் தவிர்த்து இதயம் பல வெல்வாய்

ஒற்றுமை பேணியே நல்வழி செல்வாய்

ஓய்வெடுத்து நீயும் இதயத்தை காத்து

கோவிலாய் அதில் நீ சுடரேற்றிடுவாய்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *