சித்ரப்ரியங்கா ராஜா
அடே மனிதா நினைவில் நிறுத்து
ஆபத்தான புகையை குறைத்து
இதயத்தை நீ தான் காத்திடுவாயே
ஈடில்லா வாழ்வு வாழ்ந்திடுவாயே
உள்ளம் என்பது கோயில் ஆகும்
ஊறு தான் வரின் இதயமே வாடும்
எல்லா நாளும் கவலையை குறைத்து
ஏறு போல் வலிமை இதயத்தே நிறுத்து
ஐயம் தவிர்த்து இதயம் பல வெல்வாய்
ஒற்றுமை பேணியே நல்வழி செல்வாய்
ஓய்வெடுத்து நீயும் இதயத்தை காத்து
கோவிலாய் அதில் நீ சுடரேற்றிடுவாய்


Leave a Reply