மீ.விசுவநாதன்
“என்னுள் சும்மா இரு”
பாற்கடலில் வந்ததென்னவோ
கொஞ்சம் விஷம்தான்
போதுமே ஒரு துளி
அந்தத் துளியை
நீ குடித்து
உலகைக் காத்தாய் சிவனே
நீ
விஷத்தை உண்டு
அமுதத்தை உலகுக்கு அளித்தவன்
பொதுவாழ்வில்
தீமையைத் தான்கொண்டு
நன்மையை மற்றவர்க்குத் தரவேண்டும்
அதைச் செய்து காட்டியதால்
நீ
மகாதேவனாய்த் துதிக்கப் பட்டாய்
உன்னை
என் நெஞ்சில் சுமப்பதால்
நச்சு எண்ணங்கள் வருவதே இல்லை
சிவனே
நீ என்றும் என்னுள் சும்மா இரு.
(இன்று (14.01.2018) பிரதோஷம் )


Leave a Reply