மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
மழை வந்தால் ஓடி ஒளிகிறார்
தலை காக்க குடை தேடுறார்.
மழை வந்து விட்டால், இங்கே
மழை வந்து விட்டால்
மரணம் வருவது மேலானது !
வெய்யில் அடித்தால் மனிதர்
மர நிழல் தேடுவார்.
குளிர்பானம் குடிப்பார் !
வெய்யிலில் காய்ந்தால், நான்
வெய்யிலில் சாய்ந்தால்
பெய்யும் மழை பொறுப்பேன் !
கதிரோன் பொழியும் வெய்யிலா,
காலநிலை இனியது !
எப்போது மழை பெய்யுமென
தப்பாது காட்டுவேன் !
எல்லாம் ஒரு மாதிரி யாக
இருப்பது தெரியுது.
மழைக்குக் கவலைப் படேன்.
கதிரோன் கடும் வெய்யிலா
காலநிலை இனிதே !
கேட்குதா நான் சொல்வது ?
மழை பொழியுதோ, வெய்யில் எரிக்குதோ
மன உணர்வு தான் அது !
சொல்வது புரியுதா ?
+++++++++++++++++++++


Leave a Reply