கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
போடுநீ ஆமாம்சா மி….
பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
தாங்கிய தோள்வா தபுரீசா -சாங்கிய
யோகமகள் பாதாதி கேசமதை நீயுரைக்க
வாகனமாம் புள்ளேறி வா….
கள்ளா குருவாயூர் பிள்ளாய் வருவாயே
உள்ளம் நிறைவாக என்முன்னே – தெள்ளிய
மாமுனிக்கு மாதவா, காமினிக்கு காதலா
யாமினிக்க வாயாத வா….கிரேசி மோகன்….!
நாரணச் சாற்றினை நன்கு பிழிந்தெடுத்த
கேரளக் கோயில் குருவாயூர் -பூரணத்தை
ஓவியத்தில் கொண்டுவந்தாய், ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்
காவியத்தில் கேசவ் கவி….!
”சந்தன வண்ணதில், சங்கு சுதர்ஸனம்,
தெண்டா யுதம்,தாங்கு தாமரை -செங்கண்மால்
விட்டனர் நீலநிறம் ,விட்டலன் நிர்மால்யம்,
தொட்டதுன் தூரிகை டாப்(brush நுனி)….!
புதைபா கவத விதைநா ரணராம்
அதன்வேர் பிரமன் அடிநா -ரதனாம்
முனிவியாசன் அம்மரம் மூண்ட கிளைகள்
கனிவாசு தேவன் கதை….!
தீரநோய் பட்டத் திரியன்று ஏற்றிய
நாரா யணீயத்தை நாள்தோறும் -பாரா
யணம்செய்ய, வந்த யமன்பைய(மெள்ள ஒதுங்க), பொல்லாத்
தனம்செய்வான் பாகவதத் தார்….!