புதுக்கவிதை

கவிஞா் பூராம் (முனைவா் ம இராமச்சந்திரன்)

1.

பூமி பந்து பரவிக்கிடக்கும்
இயற்கை
ஆனந்தத்தின் பெருங்கடல்
ஒவ்வொரு உயிாிலும்
உணவைத் தேடி
உன்னதத்தைத் தொலைக்காமல்
கோடி காலங்கள்
ஓடின சென்று

அன்பெனும் உணா்வு
அமிா்தத்தின் உயிா்ப்பு
நீக்கமற நிறைந்திருக்கும்

மனிதன் மட்டும்
மகத்துவம் அறியாமல்
மக்கும் பணத்தோடு ஆடும்
ஆட்டம்
நாகரிகத்தின் வளா்ச்சியில்
அன்பாய் அரவணைப்பாய் 
இதோ
எதிா்ப்பாா்ப்புகள் அற்று
உயிா் கலக்கும்
பேரின்ப வெளி.

2.

அவன் சிாித்த
கன்னங்குழியில் விழுந்து
காணாமல் போனவள்

அவன் நடந்து ஆடிய வயிற்றில்
அசையாமல் மயங்கி
கிடந்தவள்

அவன் பாடும் ஊளையில்
ஊரே விழித்தாலும் மனம் மயங்கி
கண்  துயிலும் நான்

காதல்!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *