Tag: எம். ஜெயராம சர்மா

  • விடிவிளக்காய் இருக்குதன்றோ!

     -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    கண்ணபிரான் யேசுபிரான்
    கஷ்டமதில் அவதரித்தார்
    எண்ணரிய சிந்தனைகள்
    எமக்களித்து நின்றார்கள்
    மண்ணுலகில் உள்ளவர்கள்
    மனந்திருந்த வேண்டுமென்று
    உண்மைநிறை சேதிகளை
    உவந்தளித்து நின்றாரே!

    ஆடுமாடு கொட்டிலவர்
    அண்டிநின்ற இடமாகும்
    அன்னையது நிழலிருந்து
    அனைத்துமவர் ஆற்றினரே
    அன்புநிறை உள்ளமொடு
    அவர்தொண்டு அமைந்ததுவே
    அண்டிவந்தோர் அனைவருக்கும்
    அடைக்கலமும் ஆகினரே!

    உலகுய்ய வந்தஅந்த
    உத்தமரை மனங்கொண்டு
    உலகத்தார் உன்மத்தம்
    உடைந்துவிடல் வேண்டாமோ?
    மலம்நிறைய மனங்களிலே
    வைத்திருக்கும் மாந்தரெலாம்
    புலன்சிறந்து விளங்குதற்குப்
    புனிதரெமக் குதவிடுவார்!

    நாத்திகம் பேசிநின்ற
    நம்கவிஞர் கண்ணதாசன்
    ஆத்திக வழிசெல்ல
    அவர்துணையாய் அமைந்தாரே
    கீதைக்கு உரைசெய்த
    கீர்த்தியுடைக் கண்ணதாசன்
    யேசுபிரான் காவியத்தை
    நேயமுடன் அளித்துநின்றார்!

    மதமென்னும் வெறிவந்தால்
    மனமெல்லாம் மாசாகும்
    விதம்விதமாய்க் கற்பனைகள்
    விளைத்துவிடும் விவரீதம்
    வதம்செய்யும் அரக்ககுணம்
    மனதைவிட்டு மறைந்துவிட
    வையமதில் உதித்தவரே
    மாண்புநிறை மாபுருஷர்!

    மதவெறியை  ஊட்டுவதை
    வையகத்தில் ஒழித்திடுவோம்
    விதம்விதமாய் நற்பணிகள்
    விரும்பிநின்று செய்திடுவோம்
    உளம்முழுக்க சமதர்மம்
    ஓங்கிவிடச் செய்துநிற்போம்
    ஒற்றுமையே உயர்வுதரும்
    எனவுரத்துச் சொல்லிடுவோம்!

    கீதைபைபிள் இரண்டிலுமே
    நல்பாதைபற்றி  அறிந்திடலாம்
    போதைகொண்டு பார்ப்பதைநாம்
    புறந்தள்ளி விட்டிடலாம்
    சோதனைகள் விளைவாக
    வந்தஇந்த கீதைபைபிள்
    வேதனைகள் போவதற்கு
    விடிவிளக்காய் இருக்குதன்றோ!

    மதநூல்கள் என்றுநாம்
    மறுபெயரை வைக்காமல்
    வாழ்வுக்கு உகந்ததென
    மனங்களிலே வைத்திடுவோம்
    உதவாத குணத்தையெலாம்
    உடைத்தெறிய வந்ததனால்
    உயர்நிலையில் நிற்கின்றார்
    எனவுணர்ந்து போற்றிடுவோம்!

     

    Share
  • எல்லோர்க்கும் உதவிடுவோம்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    உட்கட்சிப்  பூசல்களை உடனடியாய் நிறுத்திவிட்டு
    எக்கட்சி ஆயிடினும் எல்லோர்க்கும் உதவிடுங்கள்!
    எக்கவுண்டன்ட் என்ஜினியர் ஏழைபணக் காரரென்று
    எல்லோரும் வெள்ளத்தில் இடர்ப்பட்டே நிற்கின்றார்!

    வில்லனொடு கதாநாயகன் வீட்டிலேயும் வெள்ளம்தான்!
    அல்லல் பட்டுநிற்கின்றார் அனைவருமே மனிதர்தாம்!
    நல்லிதயம் கொண்டபலர் நாடிவந்து உதவுகின்றார்
    வெள்ளமது விரைந்தகல வேண்டிடுவோம் யாவருமே!

    உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் ஒன்றானார் வெள்ளத்தால்
    ஓலைக் குடிசையொடு  ஓட்டுவீடும் ஒன்றாச்சு!
    மதமுள்ள மனிதரெல்லாம் மழைவெள்ளம் நீந்துகின்றார்
    மதம்கடந்த சேவைதனை மழைவெள்ளம் உணர்த்தியது!

    ஓடுகின்ற உதிரத்திலே ஒழுகிநிற்கும் கண்ணீரிலே
    தேடிநின்று பார்த்தாலும் தெரிவதில்லை சாதியென்பர்!
    வீதிதோறும் வெள்ளம்வந்து விபரீதம் பெருகியதால்
    சாதியெலாம் வெள்ளமதில் சாய்ந்துவிட்ட நிலைகண்டோம்!

    குறைசொல்லல் தவிர்த்துவிட்டு குறையகற்ற   முனைந்திடுங்கள்!
    துறைதோறும் உள்ளவர்கள் தூய்மையுடன் செயற்படுங்கள்!
    இறைவனது சோதனையே இதுவென்று எண்ணிநின்று
    எங்களால் இயன்றவரை எல்லோர்க்கும் உதவிடுவோம்!

     

     

     

     

     

    Share
  • நெடுந்துயர் அகன்றேயோடும்!

      
      -எம். ஜெயராமசர்மா –  மெல்பேண், அவுஸ்திரேலியா

        வான்முகில் வழாது பெய்கவென
        வாயார வாழ்த்துப் பாடி
        வையத்தில் விழாக்கள் தோறும்
        மனமாரப் பாடி நிற்போம்!

         வாழ்த்தினைக் கேட்டுவிட்டு
         வானுறை தேவர் எல்லாம்
         வையகம் வாழ்க எண்ணி
         மாமழை பொழியச் செய்வர்!                rain

        வறண்டு நிற்கும் பூமியெல்லாம்
        வான் மழையக் கண்டுவிட்டால்
        மகிழ்வு கொண்டு வானோக்கி
        மனதார நன்றி சொல்லும்!

        வயல்நிறையும் குளம் நிறையும்
        வயலுழுவார் மனம் மகிழும்
        தினமும் மழை பெய்கவெனத்
        தீர்மானம் எடுத்தும் நிற்பார்!

       அகமகிழ வைக்கும் மழை
       ஆபத்தைத் தந்த திப்போ
       அனைவருமே மழை பார்த்து
       அலமந்தே நின்று விட்டார்!

       பார்க்கு இடம் எல்லாம்
       பாய்ந்தோடும் வெள்ள மதால்
       பரி தவித்து நிற்கின்றார்
       பல இடத்தில் மக்களெலாம்!

      நீர் பெருகி நிற்பதனால்
      நிவாரணப் பணிகள் எல்லாம்
      யார் செய்வார் எனவேங்கி
      நாளும் அவர் அழுகின்றார்!

      மேடைகளில் ஏறி நின்று
      வாய் கிழியப் பேசியவர்கள்
      அறிக்கைகளை விட்டுவிட்டு
      அவர் பாட்டில் இருக்கின்றார்!

      ஆளுகின்ற கட்சி தனை
      அனுதினமும் திட்டி நிற்கும்
      எதிர்க் கட்சிக் காரரெலாம்
      இதை வைத்தே திட்டுகின்றார்!

      எதிர்க் கட்சித் திட்டினுக்கு
      ஏற்ற பதில் சொல்வதிலே
      இதைச் சாட்டாய் கொண்டுள்ளார்
      ஏறி நிற்கும் அரியணையார்!

      வாதங்கள் புரிவதிலும் வழக்குகள் இடுவதிலும்
      பேதங்கள் யாதுமின்றிப் பேயாட்டம் போடுகின்ற
      சாதனைச் செம்மல்கள் சராசரி மக்களது
      வேதனைகள் புரியாது விடுகின்றார் அறிக்கைமழை!

      வடிகால்கள் அமைக்கவென வந்திருக்கும் பணமெல்லாம்
      வட்டாட்சி மாவட்டம் மந்திரிகள் வசமாகும்
      மழைவந்த பின்னாலே மழைவெள்ளம் தனைப்பார்த்து
      மந்திரிகள் மற்றவர்கள் மாடிநின்று படமெடுப்பார்!

      அவர்களது தொலைக்காட்சி அதைக்காட்டிப் பணமாக்கும்
      அவதிப்படும் மக்கள்தமை ஆருமே பார்க்கார்கள்
      அவர்நிலையைப் பெரிதாக்கி அனுதாபம் தேடியவர்
      அவர்பொருட்டு வரும்நிதியை அமைதியாய் சுருட்டிநிற்பார்!

      வெள்ளப் பெருக்குக்குக்காய் வேதனையாய் இருப்பதுபோல்
      வெள்ளை வேட்டிசட்டையுடன் விதம்விதமாய் கதைவிடுவார்
      உள்ளமெலாம் அழுதபடி ஓர்வழியும் புரியாமல்
      வெள்ளத்தில் அகப்பட்டார் விழிபிதுங்கி நிற்பார்கள்!

      மாடிவீட்டில் வசதியுடன் மனைவி மக்களோ டிருப்பார்
      மாவெள்ளப் பாதிப்பால் மகிழ்வையெல்லாம் இழந்துநிற்கும்
      மக்கள்தமை மனங்கொள்ளா மாமனிதராய் இருப்பர்
      மக்களெலாம் வெள்ளத்தில் மரணத்தை அணைத்துநிற்பார்!

      பொறியியல் படித்தவர்கள் பொறுப்புதனை அறிந்தவர்கள்
      நெறிமுறையில் செயல்பட்டால் நீரழிவு  வந்திடுமா?
      அறநெறியைக் கடைப்பிடித்து ஆட்சிதனை ஆற்றிவிடின்
      அநியாய வெள்ளமது அனைவரையும் அழிக்காதே!

      குடிகளைக் காக்கவேண்டும் குறையெலாம் போக்கவேண்டும்
      நடித்திடும் செய்கைதன்னை நாட்டிலே அகற்றவேண்டும்
      அரசியல் செய்கின்றாரும் அதிகாரம் செய்கின்றாரும்
      நினைவெலாம் தூய்மைபெற்றால் நெடுந்துயர் அகன்றேயோடும்!

     

     

    Share
  • நல்கிவிடு அடியவர்க்கு!

     -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    வேலா என அழைத்தால்
    வினை அகற்றி நின்றிடுவாய்
    கந்தா என அழைத்தால்
    காலனை நீ ஓட்டிடுவாய்
    அரக்க குணம் அழித்துவிட்ட                     Lord Murugan
    அரனுடைய அருட் குமரா
    அடியவரின் வேண்டு தலை
    அய்யா நீ கேட்டிடுவாய்!

    குன்றுதோறும் நின்று கொண்டு
    குறை கேட்கும் குமரையா
    நன்று செய்வார் வாழ்வெல்லாம்
    நஷ்டம் வரல் ஏனையா?
    கொன்று நின்று குவிக்கின்றார்
    குதூகலத்தில் குலவு கின்றார்
    குணக் குன்றே குருபரனே
    கொதிக்கிறதே உள்ளம் எலாம்!

    பிரண வத்தை  அறியாத
    பிரமனை நீ சிறையிலிட்டாய்
    பேர் ஆசை அசுரது
    பெருங்கனவை உடைத் தெறிந்தாய்
    கலி யுகத்தின் கடவுளென
    வந்துதித்த கந்தா நீ
    காணாமல் இருப் பதற்குக்
    காரணத்தைச் சொல்லி விடு !

    ஆணவத்தில் இருப் பவரோ
    ஆட்சிதனைச் செய் கின்றார்
    அறம் பற்றி எண்ணுதற்கு
    அவர் மனமோ மறுக்கிறது
    மதம் கொண்டு எல்லோரும்
    மற்றவரை வதைக் கின்றார்
    மகாதேவன் மைந்தனே நீ
    மெளனமதைக் கலைத்து விடு!

    ஈராறு முகம் உடையாய்
    எங்கள் தமிழ் கடவுளையா
    ஊர்தோறும் உன் கோவில்
    உச்சமாய் இருக்கு தையா
    பேராறாய் உன் கிருபை
    பெருக்கெடுத்து வந்து விடின்
    வேரோடி நிற்கும் இந்த
    விஷமெல்லாம் அகன்று விடும்!

    குவலயத்தில் உள்ள மக்கள்
    குறையின்றி வாழ வேண்டும்
    குணங்கெட்ட மனம் உடையார்
    குமரனடி தொழ வேண்டும்
    நலம் சிறந்த வாழ்க்கையினை
    நாடெல்லாம் பெற வேண்டும்
    நாதனது தவப் புதல்வா
    நல்கி விடு அடியவர்க்கு!

     

    Share
  • இருக்கின்றார் உள்ளமெல்லாம்!

    -எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்த்திரேலியா   

     ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் , சிறந்த கல்வியிலாளருமான சிற்பி
    என அழைக்கப்படும் சரவணபவன் அவர்கள் 09 / 11 / 2015 அன்று
    தனது 82-வது அகவையில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
    இந்திய எழுத்தாளர்களுக்கும் இலங்கை எழுத்தாளர்களுக்கும்
    நல்லதோர் இலக்கியப் பாலமாக விளங்கிய நல்ல இனிய சுபாவம்
    உடையமனிதர் அவர். அன்னாருக்கு அஞ்சலி இக்கவிதை!

       காரைநகர் ஈன்றெடுத்த
       கலைமகளின் தவப்புதல்வா
       காதலுடன் கலைச்செல்வி
       கைப்பிடித்த தமிழ்மகனே!

        சாதனைகள் பலசெய்தாய்
        சோதனையும் பலகண்டாய்
        வேதனையில் எமைவிட்டு
        வித்தகனே சென்றதேனோ?

        தமிழ்நாட்டில் கல்விகற்றுத்
        தங்கம்வென்ற நாயகனே
        தமிழோடு உனையிணைத்துத்
        தளராமல் பணிசெய்தாய்

        துணிவாகப் பலபேரும்
        எழுதிநிற்கத் துணையானாய்
        கனிவான உன்முகத்தைக்
        காண்பதினி எப்போது?

        இலக்கியப் பாலமாய்
        இருந்தவெங்கள் சிற்பியையா
        இல்லையெனும் சேதிகேட்க
        இதயமெல்லாம் அழுகிறதே!

        தமிழுலகில் உங்கள்பெயர்
        தலைநிமிர்ந்தே நிற்குமையா
        எமதருமைச் சிற்பியையா
        இருக்கின்றார் உள்ளமெல்லாம்!

    Share
  • தீபாவளி வாழ்த்துகள்!

     

    எம் . ஜெயராமசர்மா

    large

    வல்லமையின் வல்லமையே நல்லதையே தருபவரே
    உள்ளமெலாம் தமிழுணர்வு ஊற்றெடுத்து நிற்பவரே
    எல்லையிலா ஆனந்தம் என்றுமுமை சேர்ந்தணைய
    இனியதீபாவளி வாழ்த்தை இதயத்தால் ஈய்ந்தேனம்மா !

     

     

    Share
  • மண்ணைவிட்டே ஒழித்திடுவோம்!

     – எம் . ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    மங்கையவள் இல்லை எனில்
    மாநிலமே இல்லை என்பார்
    சங்கெடுத்து முழங்கி நிற்பார்
    சகலதுமே மங்கை என்பார்

    எங்களது வாழ்க்கை  எலாம்
    மங்கலமே மங்கை என்பார்
    பொங்கி வரும் புத்துணர்வே
    மங்கை அவள் தானென்பார்

    கங்கை முதல் காவிரியை
    மங்கை என விளித்திடுவார்
    எங்கள் குலம் விளங்குதற்கு
    வந்தவளே மங்கை என்பார்

    பூமிதனை மங்கை என்பார்
    பொறுமையையும் மங்கை என்பார்
    சாமிகூட மங்கை என்று
    சபையேறி முழங்கி நிற்பார்

    என்றெல்லாம் சொல்லும் மங்கை
    எங்கு சென்று நின்றாலும்
    அங்கெல்லாம் அவள் நிலையை
    ஆருக்குச் சொல்லி நிற்போம்

    தேசப்பிதா காந்தி மகான்
    சிலை எங்கும் இருக்கிறது
    சீலநிறை மங்கை அவள்
    தெருவில் வர அஞ்சுகின்றாள்

    சீதை கதை படிக்கின்றார்
    கீதை தனைக் கேட்கின்றார்
    பாதை மட்டும் மாறாமல்
    படு குழியை வெட்டுகின்றார்

    பாதகங்கள் செய்து நிற்பார்
    பல்கி எங்கும் பரவுகிறார்
    கோவில் என்றும் பாராமல்
    கோரத் தனம் செய்கின்றார்

    வீதி தனில் போவோரும்
    விலத்தியே  நிற்கும் நிலை
    சாதகமே எனக் கருதி
    சமூக நீதி குலைக்கின்றார்

    சமயங்கள் பல இருந்தும்
    சாத்திரங்கள் பல இருந்தும்
    சன்மார்க்கம் ஏன் தானோ
    தலை குனியப் பார்க்கிறது

    மங்கை அவள் எங்களது
    மாநிலத்தில் தெய்வம் என
    மனம் எல்லாம் எண்ணுதற்கு
    வழி சமைப்போம் வாருங்கள்

    மங்கை அவள் தனைக்காக்க
    மா எழுச்சி வரவேண்டும்
    மங்கை நலம் கெடுப்பாரை
    மண்ணை விட்டே ஒழித்திடுவோம்!

     

    Share
  • திருவெம்பாவையின் முக்கியத்துவம்

    எம் . ஜெயராமசர்மா -அவுஸ்திரேலியா 

    மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி –

    சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது.” ஒப்பிலி அப்பன்” என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி – அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்.” பீடுடைய மாதம்” என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதிவரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும்.இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்பதால் அக்காலங்களில் காலை யில் எழுந்து குளித்து, அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம்பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.

    இந்தக் காலத்தில்த்தான் மார்கழி நோன்பும் வருகிறது. மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் பாடப்படுகிறது.ஆண்டாளின் திருப்பாவையும் பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.தேவர்களுக்கு மட்டுமே உரிய மாதத்தில் வேறு எந்தவிதச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கும் வண்ணம் ஏனைய விஷயங்களைச் செய்தல் தவிக்கப்பட்டதே அன்றி மார்கழி கூடாதது என்பதற்காகவோ மார்கழி பீடை பிடித்தது என்பதற்காகவே அல்ல என்பதை நாங்கள் யாவரும் நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

    ” மாதங்களிலே நான் மார்கழி ” என கண்ணன் பகவத்கீதையில் சொல்லு வதை மனத்தில் கொண்டால் மார்கழியின் மகத்துவம் யாவருக்கும் விளங்கி விடும்.வடமொழியில் ” மார்கசீர்ஷம் ” என்று மார்கழி மாதம் அழைக்கப் படுகிறது.” மார்க்கம் ” என்றால் வழி என்பது பொருள். ” சீர்ஷம் ” என்றால் உயர்ந்த என்பது பொருள்.எனவே மார்கழி என்பது உயர்வுடையது என்பதை வடமொழியும் கூட எடுத்துக் காட்டுகிறது அல்லவா?

    திருவண்ணாமலையில் மணிவாசகரால் பாடப்பட்டதுதான்’திருவெம்பாவை”. திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்துமே கன்னிப் பெண்களால் பாடப்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாகப் பாடும் பாடல் வகைகள் சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது.

    பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்ககால நூல்களில் மார்கழி நோன்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இங்கு பாவை நோன்பு பற்றிய செய்திகளையும் காண்கின்றோம்.எனவே மணி வாசகப் பெருமானின் பாவையர் பற்றிய இந்தவகையானது முந்தியும் இருக்கலாம் அல்லது பிந்தியதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் இலக்கிய ஆராய்ச்சியாளரிடம் காணப்படுகின்றது. எது எப்படி இருப்பினும் – மார்கழி நோன்பு என்பது திருவெம்பாவையுடன் இணைகின்றது என்பதே முக்கிய செய்தி எனலாம்.

    ” திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ” என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.மேல்நாட்டிலிருந்து இந்தியா வந்த டாக்டர் ஜி.யூ. போப் என்னும் ஆங்கிலேயரின் மனத்தைத் தொட்டதே இந்தத் திருவாசம்தான். தனது மனத்தைப் பறிகொடுத்த திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்தார் என்பதை யாவரும் அறிகின்றோம்.அந்த அளவுக்கு ஆத்மாவையே உருக்கி ஆண்டவனின் நினைப்பை ஊட்டவல்லது திருவாசகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது எல்லோரதும் அவிப்பிராயமாகும்.

    அந்தத்திருவாசகத்துக்குள் அமைந்திருப்பதுதான் ” திருவெம்பாவை ” ஆகும்.விடியற்காலையிலே எழுந்த கன்னிப்பெண்கள் வீடுதோறும் சென்று இறைவனது பெருமையினை எடுத்துச் சொல்லி இன்னும் ஏன் நித்திரை செய்கின்றாய் விரைவாக எழுந்துவா எல்லோரும் நீராடி இறைவனது புகழை ஏத்திப் பாடுவோம் என்று பக்தி ததும்ப அழைக்கும் விதத்தில் அமைந்ததுதான் ” திருவெம்பாவை ” என்பது குறிப்பிடத்தக்கது.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும்.தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ” ஏலோர் எம்பாவா ” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம்.இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள்.

    இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக்கருதி மார்கழிமாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம்.இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது ” திருவெம்பாவை ” பாடல்களைப் பாடிச்சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.இதற்கு ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் சான்றாகி நிற்கிறதெனலாம்.

    இதனால்த்தான் சைவத்தலங்களில் ” திருவெம்பாவையும் ” வைஷ்ணவத் தலங்களில் ” திருப்பாவையும் ” மார்கழிமாதத்தில் பாடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக , அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.

    ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரை விட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன.
    ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    ” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ” ” மாலறியா நான்முகனும் காணா மலையினை ” ” என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள் ” கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    ” முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே ” “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    ” வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து “

    ” விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான் ” என்று திருவெம்பாவைப் பாடல்கள் – எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப் பெண்கள் பாடிப் பரவுவதாக எமக்கொல்லாம் விளக்கி நிற்கின்றது எனலாம்.

    திருவெம்பாவையும் திருப்பாவையும் மார்கழியில் அதிகாலை நேரத்திலே பாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே முதலில் சுட்டிக் காட்டப்பட்ட படி தேவர்களின் காலைப்பொழுதாக இருப்பது ஒருமுக்கிய காரணம் என்பதை நம்பிக்கை எனக்கொள்வோம். அதற்குப் பின்னும் பல காரணங்களும் இருக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

    அதிகாலையில் துயில் எழுவது என்பதே ஆரோக்கியத்துக் அடிப்படை அல்லவா? அதுவும் மார்கழியில் அதிகாலை துயில் எழுந்து நீராடுவது என்பது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். மார்கழியில் ஏற்படும் காலநிலை மாற்றமானது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று எமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதனை அறிவுரை ஆக்கினால் யாவரும் புறந்தள்ளியும் விடக்கூடும் என்பதால் அதனை திருவெம்பாவையுடன் இணை த்துவிட்டனர் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

    அதிகாலையில் விழித்தால் புத்தி தெளியும்.உடம்பில் இரத்தத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் நரம்புகழ் உற்சாகம் பெறும்.பித்தம் தணியும்.வாத, பித்தம் சமனிலை அடையும்.இவையெல்லாம் ஆரோக்கியம் சம்பந்தமானவை. இவையாயுமே திருவெம்பாவையினுள் அடங்கி இருக்கிறது என்பதே இங்கு மிகவும் இன்றியமையாத விஷயமாகும் என்பதை அறிதல் வேண்டும்.

    தமிழ்ப் பண்பு, அன்புணர்வு, ஒழுக்க நிலை, சமயமரபு,ஆத்மஞானம் அத்தனையும் திருவெம்பாவால் எமக்குக் கிடைக்கின்றது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    வெறுமனவே திருவெம்பாவைப் பாடாமல் அதனூடாக எங்களுக்குக் கிடக்கும் அரிய பெரிய விஷயங்களை அறிந்து கொண்டு கோவிலில் பாடுவோமேயானால் நிச்சயம் திருவெம்பா எமக்கெல்லாம் பெரும் பயன் உடையாதாகவே இருக்கும்.

    வைகறைப் பொழுதை ” பிரம்ம முகூர்த்தம் ” என்று குறிப்பிடுவதையும் நாம் நோக்குதல் வேண்டும்.

    மார்கழியை பகவத்கீதை போற்றுகின்றது. மார்கழியில்த்தான் “ஆருர்த்தா” தரிசனம் நடக்கின்றது. மார்கழியில்த்தான் ” சுவர்க்க வாசல் ஏகாதசி ” உற்சவமும் இடம்பெறுகிறது.சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த தெய்வீக மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதையும் மனத்தில் கொள்ளுதல் முக்கியமானதே.திருவெம்பாவையும்,திருப்பாவையும், இறைவன் புகழ் சேர்ப் பதற்கு மார்கழியில்த்தான் கோவில்கள் தோறும் பக்தியுடன் பாடப்படுகின்றன என்பதும் மிகவும் முக்கிய கருத்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.எனவே மார்கழியில் இறைவன் புகழ்பாடி எங்களின் வாழ்வு வளம்பெறப் பிரார்த்திப்போம்.

    Share
  • திருவெம்பாவையும் மார்கழியும் !

     எம் . ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி –

    சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது.” ஒப்பிலி அப்பன்” என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி – அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்.” பீடுடைய மாதம்” என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.

    திருவாதிரை நட்சத்திரம் ” ஆருத்ரா ” என சமஸ்கிருதத்தில் வழங்கப்ப டுகின்றது.சிவனையும் ஆதிரையான் எனக் குறிப்பிடும் வழமையும் எமது சமயத்தில் இருக்கிறது.மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரதுக்கு முந்திய பத்து நாட்களும் திருவெம்பாவையாகக் கருதி திருவாதிரை இடம்பெறும் பத்தாம் நாளை ” ஆருர்த்தா ” தரிசனம் எனப் போற்றி சிவனை வழிபடும் வழக்கமும் இந்த மார்கழிக்கே உரியது என்பதும் முக்கியமானதாகும்.அதுமட்டுமல்ல சம்பந்தப் பெருமான் அவதாரம் செய்ததுகூட மார்கழித்திருவாதிரை என்றும், சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி அசையாத தேரை அசையச் செய்து சிவனது தேரினை வலம்வரச் செய்ததும் மார்கழித்திருவாதிரை என்றும், வியாக்கிரபாதர்.. பதஞ்சலி ஆகிய சிவனருள் பெற்ற முனிவர்களுக்குச் சிவன் தனது அருட் கூத்தினை நிகழ்த்திக் காட்டியதும் கூட மார்கழித் திருவாதிரையில்த்தான் என்றும் அறியக் கிடக்கின்றது. இந்த வகையிலும் மார்கழி மாதம் முக்கியத்துவம் மிக்கதாகவும் கொள்ளப் படுகின்றது.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதிவரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும்.இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்பதால் அக்காலங்களில் காலை யில் எழுந்து குளித்து,அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம்பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.

    இந்தக் காலத்தில்த்தான் மார்கழி நோன்பும் வருகிறது. மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் பாடப்படுகிறது.ஆண்டாளின் திருப்பாவையும் பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.தேவர்களுக்கு மட்டுமே உரிய மாதத்தில் வேறு எந்தவிதச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கும் வண்ணம் ஏனைய விஷயங்களைச் செய்தல் தவிக்கப்பட்டதே அன்றி மார்கழி கூடாதது என்பதற்காகவோ மார்கழி பீடை பிடித்தது என்பதற்காகவே அல்ல என்பதை நாங்கள் யாவரும் நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

    ” மாதங்களிலே நான் மார்கழி ” என கண்ணன் பகவத்கீதையில் சொல்லு வதை மனத்தில் கொண்டால் மார்கழியின் மகத்துவம் யாவருக்கும் விளங்கி விடும்.வடமொழியில் ” மார்கசீர்ஷம் ” என்று மார்கழி மாதம் அழைக்கப் படுகிறது.” மார்க்கம் ” என்றால் வழி என்பது பொருள். ” சீர்ஷம் ” என்றால் உயர்ந்த என்பது பொருள்.எனவே மார்கழி என்பது உயர்வுடையது என்பதை வடமொழியும் கூட எடுத்துக் காட்டுகிறது அல்லவா?

    திருவண்ணாமலையில் மணிவாசகரால் பாடப்பட்டதுதான்’திருவெம்பாவை”. திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்துமே கன்னிப் பெண்களால் பாடப்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாகப் பாடும் பாடல் வகைகள் சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது.

    பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்ககால நூல்களில் மார்கழி நோன்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இங்கு பாவை நோன்பு பற்றிய செய்திகளையும் காண்கின்றோம்.எனவே மணி வாசகப் பெருமானின் பாவையர் பற்றிய இந்தவகையானது முந்தியும் இருக்கலாம் அல்லது பிந்தியதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் இலக்கிய ஆராய்ச்சியாளரிடம் காணப்படுகின்றது. எது எப்படி இருப்பினும் – மார்கழி நோன்பு என்பது திருவெம்பாவையுடன் இணைகின்றது என்பதே முக்கிய செய்தி எனலாம்.

    ” திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ” என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.மேல்நாட்டிலிருந்து இந்தியா வந்த டாக்டர் ஜி.யூ. போப் என்னும் ஆங்கிலேயரின் மனத்தைத் தொட்டதே இந்தத் திருவாசம்தான். தனது மனத்தைப் பறிகொடுத்த திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்தார் என்பதை யாவரும் அறிகின்றோம்.அந்த அளவுக்கு ஆத்மாவையே உருக்கி ஆண்டவனின் நினைப்பை ஊட்டவல்லது திருவாசகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது எல்லோரதும் அவிப்பிராயமாகும்.

    அந்தத்திருவாசகத்துக்குள் அமைந்திருப்பதுதான் ” திருவெம்பாவை ” ஆகும்.விடியற்காலையிலே எழுந்த கன்னிப்பெண்கள் வீடுதோறும் சென்று இறைவனது பெருமையினை எடுத்துச் சொல்லி இன்னும் ஏன் நித்திரை செய்கின்றாய் விரைவாக எழுந்துவா எல்லோரும் நீராடி இறைவனது புகழை ஏத்திப் பாடுவோம் என்று பக்தி ததும்ப அழைக்கும் விதத்தில் அமைந்ததுதான் ” திருவெம்பாவை ” என்பது குறிப்பிடத்தக்கது.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும்.தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ” ஏலோர் எம்பாவா ” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம்.இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள்.

    இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக்கருதி மார்கழிமாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம்.இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது ” திருவெம்பாவை ” பாடல்களைப் பாடிச்சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.இதற்கு ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் சான்றாகி நிற்கிறதெனலாம்.

    இதனால்த்தான் சைவத்தலங்களில் ” திருவெம்பாவையும் ” வைஷ்ணவத் தலங்களில் ” திருப்பாவையும் ” மார்கழிமாதத்தில் பாடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக , அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.

    ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரை விட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன.
    ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    ” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ” ” மாலறியா நான்முகனும் காணா மலையினை ” ” என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள் ” கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    ” முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே ” “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    ” வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து “

    ” விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான் ” என்று திருவெம்பாவைப் பாடல்கள் – எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப் பெண்கள் பாடிப் பரவுவதாக எமக்கொல்லாம் விளக்கி நிற்கின்றது எனலாம்.

    திருவெம்பாவையும் திருப்பாவையும் மார்கழியில் அதிகாலை நேரத்திலே பாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே முதலில் சுட்டிக் காட்டப்பட்ட படி தேவர்களின் காலைப்பொழுதாக இருப்பது ஒருமுக்கிய காரணம் என்பதை நம்பிக்கை எனக்கொள்வோம். அதற்குப் பின்னும் பல காரணங்களும் இருக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

    அதிகாலையில் துயில் எழுவது என்பதே ஆரோக்கியத்துக் அடிப்படை அல்லவா? அதுவும் மார்கழியில் அதிகாலை துயில் எழுந்து நீராடுவது என்பது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். மார்கழியில் ஏற்படும் காலநிலை மாற்றமானது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று எமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதனை அறிவுரை ஆக்கினால் யாவரும் புறந்தள்ளியும் விடக்கூடும் என்பதால் அதனை திருவெம்பாவையுடன் இணை த்துவிட்டனர் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

    அதிகாலையில் விழித்தால் புத்தி தெளியும்.உடம்பில் இரத்தத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் நரம்புகழ் உற்சாகம் பெறும்.பித்தம் தணியும்.வாத, பித்தம் சமனிலை அடையும்.இவையெல்லாம் ஆரோக்கியம் சம்பந்தமானவை. இவையாயுமே திருவெம்பாவையினுள் அடங்கி இருக்கிறது என்பதே இங்கு மிகவும் இன்றியமையாத விஷயமாகும் என்பதை அறிதல் வேண்டும்.

    தமிழ்ப் பண்பு, அன்புணர்வு, ஒழுக்க நிலை, சமயமரபு, ஆத்மஞானம் அத்தனையும் திருவெம்பாவால் எமக்குக் கிடைக்கின்றது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    வெறுமனவே திருவெம்பாவைப் பாடாமல் அதனூடாக எங்களுக்குக் கிடக்கும் அரிய பெரிய விஷயங்களை அறிந்து கொண்டு கோவிலில் பாடுவோமேயானால் நிச்சயம் திருவெம்பா எமக்கெல்லாம் பெரும் பயன் உடையாதாகவே இருக்கும்.

    வைகறைப் பொழுதை ” பிரம்ம முகூர்த்தம் ” என்று குறிப்பிடுவதையும் நாம் நோக்குதல் வேண்டும்.

    மார்கழியை பகவத்கீதை போற்றுகின்றது. மார்கழியில்த்தான் “ஆருர்த்தா” தரிசனம் நடக்கின்றது. மார்கழியில்த்தான் ” சுவர்க்க வாசல் ஏகாதசி ” உற்சவமும் இடம்பெறுகிறது.சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த தெய்வீக மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதையும் மனத்தில் கொள்ளுதல் முக்கியமானதே.திருவெம்பாவையும்,திருப்பாவையும், இறைவன் புகழ் சேர்ப் பதற்கு மார்கழியில்த்தான் கோவில்கள் தோறும் பக்தியுடன் பாடப்படுகின்றன என்பதும் மிகவும் முக்கிய கருத்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.எனவே மார்கழியில் இறைவன் புகழ்பாடி எங்களின் வாழ்வு வளம்பெறப் பிரார்த்திப்போம்.

    Share
  • சுதந்திரத்தைப் பேணுவோம் !

       -எம். ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா )

         அண்ணல் காந்தி
         அஹிம்சை கொண்டு
         அரவணைத்த சுதந்திரம்
         மண்ணிலிருக்கும் நிலையைப்பார்க்க
         மனசுஒடிஞ்சு போகுதே !

         காந்திமகான் படத்தைமட்டும்
         காசில்போட்டு வைத்துளோம்
         காந்திநினைத்த அத்தனையும்
         காற்றில்கரைந்து போயிற்றே !

         காந்திமகான் உள்ளகாசை
         கட்டுக்கட்டாய் பதுக்கிறார்
         காந்திகூட கைதியாகி
         கயவர்கையில் நிற்கிறார் !

         மதுவையொழிக்க வேண்டுமென்று
         மகான்காந்தி முழங்கிட்டார்
         மதுபெருகி இந்தியாவை
         மதிமயக்கி கெடுக்குது !

         தெரிவில்பெண்கள் போவதற்கே
         தினமுமச்சப் படுகின்றார்
         திசைக்குத்திசை கயவர்கூட்டம்
         தினமும்கற்பைப் பறிக்கிறார் !

         காவல்நிலையம் போவதற்கே
         கலக்கமாக இருக்குது
         காவல்துறை கூடயிப்போ
         கண்ணியத்தை மிதிக்குதே !

          நீதிமன்று கூடயிப்போ
          நெஞ்சைநிமிர்த முடியல
          நீதிகூட காசைப்பார்த்து
          நிலைகுலைந்து நிற்குது !

          சாதிபேரைச் சொல்லிசொல்லி
          பேதிகொடுத்து நிற்கிறார்
          நாதியற்ற கூட்டமாக
          நாட்டில்பலர் இருக்கிறார் !

          ஓடிவரும் நீரைக்கூட
          ஓரங்கட்டப் பார்க்கிறார்
          உழவர்கூட்டம் நீருக்காக
          உயிரைவிடப் பார்க்கிறார் !

          உணவில்மருந்தில் கலப்படத்தை
          உடனுக்குடன் செய்கிறார்
          உடல்நலத்தைப் பற்றியெல்லாம்
          உள்ளமேற்க மறுக்கிறார் !

         காசுகாசு என்றுவெண்ணி
         கண்ணியத்தைத் துறக்கிறார்
         கடவுள்சிலையை திருடிவிற்று
         காசைக்கணக்குப் பார்க்கிறார் !

        வெள்ளையரை நாட்டைவிட்டு
        விரட்டியடித்து விட்டாலும்
        கொள்ளையரின் கையிலிப்போ
        கொடுத்துவிட்டோம் நாட்டையே !

         ஊழல்செய்யும் கூட்டத்தாரால்
         நாளும்தீமை விளையுது
         ஆளைமாத்தி ஆளைமாத்தி
         அரசில்கொள்ளை நடக்குது !

        நல்லவரை நாட்டில்காண
        நமக்குளாசை இருப்பினும்
        நல்லவரும் நம்மைவிட்டு
        நாளும்வெளி செல்கிறார் !

        எத்தனையோ தியாகம்செய்து
        எடுத்தவெங்கள் சுதந்திரம்
        ஏற்கவொண்ணா இன்னல்பட்டு
        இந்தியாவில் இருக்குது !

        சுத்தமான சுதந்திரத்தை
        சுவைத்துச் சுவைத்துநின்றிட
        அத்தனபேர் உள்ளங்களும்
        அஹிம்சைபோற்ற வேண்டுமே !

        காந்திநேரு காமராசர்
        வந்தபாதை சென்றுநாம்
        கலாமையா நினைவில்வைத்து
        காத்துநிற்போம் சுதந்திரம் !

        சுதந்திரத்தை அனுபவிக்க
        சுதந்திரத்தை தேடுறோம்
        சுதந்திரமாய் வாழநாங்கள்
        சுதந்திரத்தைப் பேணுவோம் !

    Share
  • உதவிடலாம் !

          -எம் .  ஜெயராம சர்மா – அவுஸ்த்திரேலியா

           பார்வையை இழந்தவர்கள்
           பலபேர்கள் இருக்கின்றார்
           பார்வையுடன் இருப்பவர்நாம்
           பலவழியில் உதவிடலாம் !

           கல்விதனைக் காணாமல்
           கணக்கற்றோர் நாட்டிலுள்ளார்
           கற்றுநிற்கும் நாமவர்க்குக்
           கற்பதற்கு உதவிடலாம் !

           அன்னைதந்தை தெரியாது
           அலமந்து நிற்பார்க்கு
           ஆதரவுக் கரங்கொடுத்து
           அரவணைத்து உதவிடலாம் !

            ஓலைக் குடிசைதனில்
            ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு
            ஒழுங்கான வாழ்வுவர
            உள்ளத்தால் உதவிடலாம் !

            நீர்கூடக் கிடைக்காமல்
            நிம்மதியைத் தொலைத்துநிற்கும்
            ஊரெல்லாம் தனையெண்ணி
            உணர்வோடு உதவிடலாம் !

           மருத்துவ வசதியின்றி
           மனம்நொந்து நிற்பார்க்கு
           மருத்துவத்தைத் தெரிந்தவர்கள்
           மனதார உதவிடலாம் !

          ஏமாற்றிப் பிழைப்பவரின்
          இடருக்குள் புகுந்தவர்கள்
          இன்னலின்றி வெளியில்வர
          இயன்றவரை உதவிடலாம் !

          மூடத்தனம் என்னும்
          மூட்டைக்குள் இருப்பவர்கள்
          முன்னேறி வருவதற்கு
          முயற்சியுடன் உதவிடலாம் !

          அன்புதனைக் காணாமல்
          அநேகரிங்கு இருக்கின்றார்
          அவரிடத்து நாம்சென்று
          அன்புகாட்டி உதவிடலாம்!

     

    Share
  • நீங்கவந்து பிறந்திடுங்க !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    ஏவுகணை தந்தவரே
    இரக்ககுணம் மிக்கவரே
    இந்தியாவின் புகழ்தன்னை
    இமயமெனச் செய்தவரே!

    ஓய்வொழிச்சல் இல்லாமல்
    உண்மையாய் உழைத்தவரே
    உயர்ச்சிபெறும் மந்திரத்தை
    உலகினுக்கே உரைத்தவரே!

    உயர்ச்சிபெற்ற போதெல்லாம்
    உணர்விழக்கா நின்றவரே
    அயர்ச்சியெனும் சொல்தன்னை
    அதிர்ச்சியுடன் பார்த்தவரே!

    தளர்ச்சியுறும் மனத்தையெல்லாம்
    தானெழுப்பி நின்றவரே
    முயற்சிதனை முதலாக்கி
    முன்வந்து நின்றவரே!

    இல்லறத்தைத் துறந்தாலும்
    நல்லறத்தைத் துறவாமல்
    வள்ளுவரின் குறள்வழியே
    வாழ்ந்துநின்ற மாமணியே!

    சொந்தபந்தம் பாராமல்
    சுகதுக்கம் நோக்காமல்
    சொந்தமண்ணின் சுகத்துக்காய்த்
    தூங்காமல் உழைத்தவரே!

    செந்தமிழை நேசித்தச்
    சிறந்த விஞ்ஞானியையா
    நந்தமிழில் கல்விகற்று
    நாடுபோற்ற நின்றாயே!

    பட்டம்பல வந்தாலும்
    பதவிக்காய் அலையாமல்
    திட்டமிட்டு இந்தியாவைத்
    திரும்பிப்பார்க்கச் செய்தவரே!

    பணத்துக்காய் அலைந்துநிற்கும்
    பாதகரின் மத்தியிலே
    குணத்தாலே இடம்பிடித்துக்
    குவலயத்தில் உயர்ந்தவரே!

    காந்தி வந்தபின்னாலே
    காமராசர் வந்துநின்றார்
    கலாமையா போனதனால்
    கண்ணியத்தைத் தேடுகிறோம்!

    ஏழ்மையிலே பிறந்ததனால்
    எளிமைதனை ஏந்திநின்றார்
    எல்லோரின் மனங்களிலும்
    இங்கிதமாய் அமர்ந்துவிட்டார்!

    சிந்தனையில் உயர்ந்தாலும்
    சிறுவர்தமை நேசித்தார்
    வந்துநிற்கும் கூட்டமெல்லாம்
    வழியவர்க்கு உரைத்துநின்றார்!

    விஞ்ஞானி மெய்ஞ்ஞானி
    மேலான அவதானி
    கண்ணாலே பார்த்துவிடின்
    கருத்தாகப் பதித்திடுவார்!

    எந்நாளும் புன்சிரிப்பை
    இதழோரம் கொண்டுநிற்பார்
    எங்கள் கலாமையாவை
    இந்தியாவின் சொத்தென்போம்!

    அமெரிக்கத் தேசமதில்
    அரைக்கம்பம் கொடிபறக்க
    அப்துல்கலாம் உயர்வடைந்து
    அனைவரையும் அணைத்துவிட்டார்!
    இதழோரம் முடிபுரள
    இமைதன்னில் நரைதெரிய
    எங்கள் கலாமையாவை
    எப்போது நாம்காண்போம்?

    கலாமையா உங்களுக்குக்
    கனமான சலாமுங்க
    நிலவுலகில் மறுபடியும்
    நீங்கவந்து பிறந்திடுங்க!

    தலைவரெலாம் வந்தாலும்
    தானாட்சி செய்தாலும்
    நிலையான தலைவரென
    நீங்களன்றோ நிற்கின்றீர்!

    அரசியலில் இல்லாமல்
    ஆட்சியிலே அமர்ந்தீர்கள்
    அப்துல்கலாம் அய்யாநீர்
    ஆண்டவனின் அன்பளிப்பே !

     

     

    Share
  • எம்மோடே வாழுகின்றார் !

    – எம். ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

            மண்ணிலே உள்ளவர்கள்
            மனம்மகிழ இசையமைத்த
            மெல்லிசையின் மன்னனே
            விரைவாகப் போனதேனோ?

            விண்ணிலே உள்ளவரும்
            மெல்லிசையைக் கேட்பதற்கு
            விரும்பியுனை அழைத்ததனால்                 msviswa
            விண்ணோக்கிச் சென்றனையோ?

            கண்ணதாசன் வாலிபாடல்
            காலமெலாம் நினைப்பதற்கு
            உன்னுடைய இசையன்றோ
            உரமாக விளங்கியது!

            ஏழ்மைதனில் இருந்தாலும்
            இன்னல்பல பட்டாலும்
            வாழ்வெல்லாம் இசையுண்டு
            மாயிசையைத் தந்துவிட்டாய்

           நோய்வந்து படுத்தாலும்
           நுடங்கிநாம் நின்றாலும்
           மன்னவனே உன்னிசையே
           மாமருந்தாய் இருந்ததன்றோ!

           ’பா’வரிசைப் படங்களிலே
           பலபாடல் எம்மனத்தைப்
           பதமாக்கி இதமாக்கி
           பக்குவத்தைக் ஊட்டியதே!

           கவியரசர் பாட்டெழுத
           எம்எஸ்வி இசையமைக்க
           டிஎம்எஸ் பாடிவிடின்
           தேவருமே வந்துநிற்பார்!

           எத்தனையோ மெட்டுக்கள்
           எப்படித்தான் வந்தனவோ?
           இன்றுவுன் ஆர்மோனியம்
           இயம்பிடுமா இரசியத்தை?

           ஆர்மோனியம் இப்போ
           அநாதையாய் நிற்கிறது
           அதுவுன்னை நினைத்தபடி
           அழுதழுது நிற்கிறது!

            விஸ்வநாதன் எனும்பெரியோன்
            விண்ணோக்கிச் சென்றசெய்தி
            மண்ணிலுள்ள இசைக்கெல்லாம்
            மாறாத இழப்பன்றோ!

            இசைமன்னன் தனைப்பறித்த
            இரக்கமிலா அரக்கர்களே
            இசைமன்னன் இசையினைநாம்
            எப்பொழுதும் தரமாட்டோம்!

            எம்எஸ்வி இசையிலேநாம்
            எந்நாளும் இணைந்திருப்போம்
            எம்எஸ்வி இசையாக
            எம்மோடே வாழுகின்றார் !

     

    Share
  • அனைவருமே தடுத்திடுவோம் !

    – எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      விஞ்ஞானம் தானிப்போ
      விண்ணோக்கிச் செல்கிறது
      நல்ஞானம் எனப்பலரும்
      நாட்டிலிப்போ சொல்லுகிறார்

     கல்ஞானம் எனவெண்ணிக்
     கட்டளையும் இடுகின்றார்
     உள்ளமெலாம் விஞ்ஞானம்
     உட்புகுந்தே நிற்கிறது

     தொழிநுட்ப விஞ்ஞானம்
     தொகையாக வந்துளது
    துறைதோறும் அதுசென்று
    சூடாக்கி நிற்கிறது

     கிராமத்தார் கூடவிப்போ
     ’கிறுகிறுத்து’ நிற்கின்றார்
    அங்கெல்லாம் தொழிநுட்பம்
    அரங்கேறி நிற்கிறது

     மொழிபற்றிக் கவலையின்றி
    முறுவலுடன் ஏற்கின்றார்
    முகம்பார்த்துக் கதைத்துவிட்டு
    அகங்குளிர்ந்தும் நிற்கின்றார்

     அழகான படம்பார்த்து
    அவர்மகிழ்வு கொள்ளுகிறார்
     அயல்நாட்டில் மருமகளின்
     சுகம்கேட்டும் நிற்கின்றார்

     குறுஞ்செய்தி பலர்பார்த்து
    குதூகலத்தில் மிதக்கின்றார்
    முகநூலால் திருமணங்கள்
    சபையேறி  நிற்கிறது

     வியாபாரம் பெருகுதற்கும்
    விளம்பரங்கள் செய்வதற்கும்
    நலமான நண்பனென
      நாட்டிலுள்ளோர் நினைக்கின்றார்

      தகவல் பரிமாற்றம்
      தான்பெருகி நிற்பதற்கும்
      சரியான வழியெனவே
      சகலருமே எண்ணுகிறார்

     அரசியல் தலைவரையும்
    ஆன்மீகத் தலைவரையும்
    ஆட்டிவைக்கும் சக்தியென
    அதுவிப்போ திகழ்கிறது

     கற்பழிப்பு நடப்பதற்கும்
    காடைத்தனம் செய்வதற்கும்
    கண்போன்ற தொழிநுட்பம்
    கருவியென நிற்கிறது

      மண்ணிலுள்ளோர் பயனடைய
      வந்ததொழில் நுட்பமதை
      மனிதகுல மாண்பழிக்க
      மாற்றுவது முறைதானா?

     விஞ்ஞானத் தொழில்நுட்பம்
     எஞ்ஞான்றும் உதவுவதை
     வீணடிக்கும் கூட்டமதை
     வீதிக்குக்  கொணர்ந்திடுவோம்

      நல்லபக்கம் பார்த்திட்டால்
    நமக்கெல்லாம் நன்மையன்றோ?
    நம்மனதில் நல்லவெண்ணம்
    நாளும்நாம் வளர்த்துநிற்போம்

      உள்ளமதில் நல்லவெண்ணம்
    ஊற்றெடுக்கச் செய்துவிடின்
    பள்ளமதில் வீழ்ந்திருக்கும்
    பாதகரும் மாறுவரே

      தொழில்நுட்பச் சேவையினைத்
    துஷ்டத்தனம் செய்யாமல்
    அழிவுநாடிச் செல்வதனை
    அனைவருமே தடுத்திடுவோம் !

     

    Share
  • அனைவரும் செய்திடுவோம் !

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

     

    பல்லில்லா வாயாலே பலகதைகள் நீசொல்வாய்
    கேட்டபடி நானிருருந்து கிறுகிறுத்துப் போய்விடுவேன்

    ஓரடிநீ வைத்தவுடன் உலப்பில்லா மகிழ்வுடனே
    உன்கையைப் பிடித்தபடி உன்னுடனே நான்நடப்பேன்

    பல்முளைத்த பின்னாலே பலதடவை நீகடித்தாய்
    தொல்லையென நினைக்காமல் சுகமாக நானினைத்தேன்

    மடிமீது கிடந்திருந்து மார்பினிலே உதைத்திடுவாய்
    மனமெல்லாம் இன்பவெள்ளம் பெருகெடுத்து நிற்குமப்போ

    முடிமீது கையைவைத்து முறுக்கிநீ இழுத்திடுவாய்
    முகஞ்சுழியா உனைப்பார்த்து முறுவலுடன் நானிற்பேன்

    மார்பினிலே படுத்திருந்து மழலையிலே பேசிடுவாய்
    ஊர்முழுக்க ஓடிவந்து உன்பேச்சைக் கேட்குமப்போ

    வேரிலே பழுத்தபலா என்றுமே வியந்துமவர்
    மாரியென முத்தமழை மாறிமாறிக் கொடுத்திடுவார்

    ஊர்போற்ற வந்தவுனை உயர்செல்வ மாநினைந்து
    உச்சியெலாம் முத்தமிட்டு உவகையிலே நான்மிதப்பேன்

    கண்ணுக்குள் மணியெனவே காலமெலாம் உனைநினைத்து
    எண்ணற்ற கனவுகளை எனக்குள்ளே நான்சுமந்தேன்

    நீவளர்ந்து உரமாகி நெடுந்தூரம் எனைத்தாங்கி
    வானளவு புகழ்பெறவே மனத்துள்ளே நினைத்திருந்தேன்

    சுரமுனக்கு வந்துவிடின் துடிதுடித்துப் போய்விடுவேன்
    நடுஇரவு ஆனாலும் நாடிநிற்பேன் வைத்தியரை

    நீசிரித்தால் நான்சிரிப்பேன் நீயழுதால் நானழுவேன்
    மேதினியில் நீதானே மேலான செல்வமென்பேன்

    தோழ்மீது ஏறிநின்று துஷ்டத்தனம் செய்திடுவாய்
    ஆள்பாதி ஆக்கிடுவாய் அத்தனையும் ஆனந்தம்

    நாள்முழுக்க உன்னுடனே நானிருக்க வேண்டுமென்று
    தோழணைத்துப் பிடித்திடுவாய் சுகமங்கே பெருக்கெடுக்கும்

    பள்ளிக்கூடம் விட்டுவிட்டு பாதிவழி வந்துநிற்பேன்
    துள்ளிவந்து எனைப்பற்றி அள்ளிமுத்தம் தந்துநிற்பாய்

    வெள்ளை உள்ளத்தோடென்னை விட்டுவிடா உன்விருப்பால்
    உள்ளமெலாம் இன்பமெனும் உணர்வாக ஓடிநிற்கும்

    சொல்லசொல்ல கதைகேட்பாய் சுற்றிவந்தும் கதைகேட்பாய்
    நல்லகதை சொல்லுவென நயமுடனே நாடிநிற்பாய்

    ஆராதகாதலுடன் அணைத்தபடி சொல்லி நிற்பேன்
    பேராவல் கொண்டுநீயும் பிரமிப்பாய் கேட்டிடுவாய்

    இப்போது போன்செய்தால் எடுக்கநீ தயங்குகிறாய்
    அப்போது என்பேச்சை ஆனந்தமாய் கேட்டாயே
    முப்போதும் உன்நினைப்பாய் முழுவதுமாய் இருந்தேனே
    இப்போது அழைப்பதற்கு எனக்கிப்போ யாருள்ளார்

    நான்நடக்க முடியாமல் நர்சிங்ஹோம் இருக்கின்றேன்
    நீநடந்த நடையினைநான் நினைவினிலே மீட்கின்றேன்
    என்மகனே என்நடையை இங்குவந்து பார்த்துவிடு
    உன்மனத்தில் பழையநடை ஓடிவந்து நின்றுவிடும்

    பார்ப்பதற்கு வருவாயா எனப்பார்த்து நிற்கிற்றேன்
    பார்வையிப்போ எனைப்பார்த்து பரிகசித்து நிற்கிறது
    பள்ளிக்கூடம் விட்டபின்பு பாதிவழி வந்தவனே
    பார்த்தபடி நிற்கின்றேன் பார்த்துவிட வருவாயா

    நடு இரவில் நீவிழித்தால் நானணைத்துக் கொஞ்சிடுவேன்
    நானெழுந்து விழித்தாலும் எனையணைக்க யாருமிலை
    தனிமையிலே வாடுகிறேன் தயவைநான் நாடுகிறேன்
    எனதருமை தவப்புதல்வா எனையணைக்க வருவாயா

    முதுமை வந்தகாரணத்தால் மூச்சுவிட முடியவில்லை
    தனிமையிலே தவிக்கின்றேன் தாகமெலாம் உன்னிடத்தில்
    புவிமீது உன்னையேநான் புதுமருந்தாய் உணருகிறேன்
    மடிமீது எனைவைத்து வருடிவிட வருவாயா

    உன்குடும்பம் உன்பிள்ளை உனக்கு அதுதேவைதான்
    என்றாலும் உன்னம்மா என்றுமுனக் கம்மாதான்
    இளமையிலும் முதுமையிலும் உனக்குநான் அம்மாதான்
    ஏக்கமுடன் இருப்பவளை பார்ப்பதற்கு வருவாயா

    நேர்சிங்ஹோம் வாழ்க்கை நிம்மதியாய் இல்லையப்பா
    யாரிடம்நான் சொல்லுவது நான்நொந்து போய்விட்டேன்
    வேரற்றமரமாக விழும்நிலையில் நான் உள்ளேன்
    யாருள்ளார் எனையணைக்க நானழுது தொலைகின்றேன்

    பிள்ளைகளே தயவுசெய்து பெற்றவரை பேணுங்கள்
    உள்ளமதில் பெற்றவரை உயர்த்திவைத்துப் பாருங்கள்
    கள்ளமிலா அன்புடைய வெள்ளமனம் உடையவரே
    கடவுளென திகழுமெங்கள் கண்நிறைந்த பெற்றவரே

    கண்ணிரில் அப்பாவும் கதறலுடன் அம்மாவும்
    மண்மீது இருந்துவிடின் மனிதருக்கே மதிப்புண்டா
    எண்ணிநாம் பார்க்காமல் இருந்துமே விட்டுவிட்டால்
    மண்ணிலே வாழ்வதிலே வாழ்வினுக்கே பயனுண்டா !

    அன்னையும்பிதாவும் முன்னறிதெய்வம்
    என்பதை அனைவரும்
    அறமெனக் கொண்டிடுவோம்
    அவர் அகமும்முகமும்
    ஆனந்தம் அடைய
    அனைவரும் செய்திடுவோம் !

    Share