-எம் .  ஜெயராம சர்மா – அவுஸ்த்திரேலியா

       பார்வையை இழந்தவர்கள்
       பலபேர்கள் இருக்கின்றார்
       பார்வையுடன் இருப்பவர்நாம்
       பலவழியில் உதவிடலாம் !

       கல்விதனைக் காணாமல்
       கணக்கற்றோர் நாட்டிலுள்ளார்
       கற்றுநிற்கும் நாமவர்க்குக்
       கற்பதற்கு உதவிடலாம் !

       அன்னைதந்தை தெரியாது
       அலமந்து நிற்பார்க்கு
       ஆதரவுக் கரங்கொடுத்து
       அரவணைத்து உதவிடலாம் !

        ஓலைக் குடிசைதனில்
        ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு
        ஒழுங்கான வாழ்வுவர
        உள்ளத்தால் உதவிடலாம் !

        நீர்கூடக் கிடைக்காமல்
        நிம்மதியைத் தொலைத்துநிற்கும்
        ஊரெல்லாம் தனையெண்ணி
        உணர்வோடு உதவிடலாம் !

       மருத்துவ வசதியின்றி
       மனம்நொந்து நிற்பார்க்கு
       மருத்துவத்தைத் தெரிந்தவர்கள்
       மனதார உதவிடலாம் !

      ஏமாற்றிப் பிழைப்பவரின்
      இடருக்குள் புகுந்தவர்கள்
      இன்னலின்றி வெளியில்வர
      இயன்றவரை உதவிடலாம் !

      மூடத்தனம் என்னும்
      மூட்டைக்குள் இருப்பவர்கள்
      முன்னேறி வருவதற்கு
      முயற்சியுடன் உதவிடலாம் !

      அன்புதனைக் காணாமல்
      அநேகரிங்கு இருக்கின்றார்
      அவரிடத்து நாம்சென்று
      அன்புகாட்டி உதவிடலாம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.