Tag: அண்ணாகண்ணன்

  • கலை விமர்சகர் தேனுகா உரை

    கலை விமர்சகர் தேனுகா உரை

    அண்ணாகண்ணன்

    30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வையுடன் இயங்கியவர், தேனுகா. இத்துறைக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை – குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

    வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997), பியாத் மோந்த்ரியான்(2007) உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்.

    மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது… உள்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குக்கு மயங்காத நடுநிலைமையுமே ஆகும்.

    “கலைகளைப் பற்றிய கருத்துகளைக் குறைவின்றி வெளியிடும் வகையில் இது வரையில் வளர்ந்துள்ள தமிழ்ச் சொற்களின் எல்லையை விரிவுபடுத்துகிறார் தேனுகா. கலை விமர்சனத்திற்கான புதிய சொற்களைக் கையாள்வதன் வாயிலாகத் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் அவர் வளம் சேர்க்கிறார். இவருடைய அறிவும் மனோதர்மமும் நுண்உணர்வும் கருத்து வெளியீடும் மிகவும் அபூர்வமானவை. தன் சம காலத்தைப் பற்றிய உணர்வுடன் அமரத்தன்மை பற்றிய பார்வையும் பெற்றுள்ளார் தேனுகா. இது போன்ற எழுத்துகள் அரிதானவை என்பது மட்டுமல்ல; ஆஷாட பூதித்தனமும் ஜம்பங்களும் பாசாங்கும் கூத்தடிக்கும் இந்த வேளையில் தன் ஆளுமை காட்டும் வழியில் தேனுகா தன் பணியினைத் தொடரவேண்டும்” என்று இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமணியம் பாராட்டியிருக்கிறார்.

    மேலும் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ்…. எனப் பலரின் உயரிய பாராட்டுகளைப் பெற்றவர் தேனுகா.

    கும்பகோணத்தில் வசித்த கலை விமர்சகர் தேனுகா, இங்கே தன் புதிய நூலான பியாத் மோந்த்ரியான் பற்றியும் அதன் உள்ளடக்கம் குறித்தும் நம்மிடம் உரையாடுகிறார். உரையினூடாகக் கலை, கட்டடவியல், ஓவியம், வாழ்வியல்… எனப் பலவற்றையும் விவரித்துச் செல்கிறார்.

    என் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த ஒலிப்பதிவைத் தேனுகா அனுப்பியிருந்தார். 2007 தமிழ் சிஃபி சுதந்திர தினச் சிறப்பிதழில் முதலில் இந்தப் பதிவு வெளியானது. இயல்பான, ஆழமான அந்த உரையை இப்போது கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கில், ‘வலை ஊடக வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய கருத்துரை. 

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பத்திரப் பதிவுத் துறையினர், இப்போது செய்ய வேண்டியது என்ன?

    பத்திரப் பதிவுத் துறையினர், இப்போது செய்ய வேண்டியது என்ன?

    அண்ணாகண்ணன்

    பத்திரப் பதிவுக்கான நேரத்தை மாலை 5 மணி வரை தமிழக அரசு  நீட்டித்துள்ளது. ஆனால்,  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்கள் எப்படி வெளியே வருவார்கள்? ஓர் இடத்தை வாங்குவது என்றால், பலமுறை சென்று பார்த்து, வில்லங்கம் இருக்கிறதா என்று சோதித்து, கடன், பாகப் பிரிவினை, உயில் எனப் பல கோணங்களிலும் சரிபார்த்துத்தானே வாங்குவார்கள்? இதற்கு வழக்கறிஞர்கள், வங்கித் துறையினர், பத்திரப் பதிவுத் துறையினர் எனப் பலரையும் சந்தித்துப் பேச வேண்டியிருக்கும். இடையில் தரகர் வேறு இருப்பார். இவர்கள் அனைவரிடமும் தொலைபேசியில் அல்லது இணையத்தில் பேசிவிட முடியுமா? பல இலட்சம் கைமாறுகிற ஒரு விற்பனைக்கு எத்தனை முறை மக்கள் சிந்திப்பார்கள் என அரசு யோசிக்கவில்லையா?

    ஏற்கனவே பேசிமுடித்து, பதிவு மட்டும் நிலுவையில் இருப்பவற்றை  முடிக்கலாம் என்றும் சொல்ல இயலாது.   ஏனெனில், அது மிகச் சிறிய எண்ணிக்கை. மேலும், தொற்று பரவி வரும் நிலையில், இத்தகைய பரிமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். இவர் வாங்குகிற இடத்தில் அல்லது அதற்கு அருகில் தொற்று இருந்தால், அந்த இடத்தின் மதிப்புக் குறையும். வாங்கவும் அஞ்சுவார்கள். மேலும் பத்திரப் பதிவு முடிந்து, பட்டாப் பெயர் மாற்றம், பொறுப்பினைக் கைமாற்றுதல், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, நில வரி, வீட்டு வரி செலுத்துகை ஆகிய அனைத்துக்கும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அவர் வெளியே செல்ல முடியாது. மேலும், போலி ஆவணங்களைக் காட்டி, மோசடி செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவசரமாகப் பணம் தேவை, அதனால்தான் பாதி விலைக்கு விற்கிறேன் என அளந்துவிட்டால், யார் இவற்றை எல்லாம் சரிபார்ப்பது? கொரோனா காலத்திற்குப் பிறகு, நில வழிகாட்டி மதிப்பை அரசு மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும். எனவே பழைய வழிகாட்டி மதிப்பில், இப்போது விற்பனை செய்வதோ, அதற்குப் பத்திரம் வாங்குவதோ பொருந்தாது. அப்படிச் செய்தால், வாங்குபவருக்கே நட்டம் ஏற்படும்.

    மேலும், இது பத்திரப் பதிவுக்கான நேரமே இல்லை. மாறாக, இதற்கு முந்தைய பத்திரப் பதிவு ஆவணங்கள் அனைத்தையும் மின்னாக்கம் செய்வதில் பத்திரப் பதிவுத் துறையினர் இப்போது முழுமையாக ஈடுபட வேண்டும். மின்னாக்கப் பணிகளை வெளியாரிடம் ஒப்படைத்திருந்தால், அவற்றை வலையேற்றிச் சரிபார்க்க வேண்டும். ஆயிரம் ஆவணங்களுக்கு ஒன்றையாவது சரிபார்த்து, வெவ்வேறு சாதனங்கள், உலாவிகளின் வெவ்வேறு பதிப்புகள் வழியாகச் சரிபார்த்து, சேவையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும், பத்திரப் பதிவுத் துறையினர் அனைவருக்கும் மின்னாக்கத்திற்கும் இணையவழிச் சேவைக்கும் இதில் ஏற்பட வாய்ப்புள்ள தொழில்நுட்ப இடர்களை, சவால்களை எதிர்கொள்வதற்கும்  இது தொடர்பான மக்களின் விசாரணைகளுக்குப் பதில் அளிப்பதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.

    இந்த மின்னாக்கம், மின்னாளுகை மற்றும் பயிற்சிகளைப் பத்திரப் பதிவுத் துறைக்கு மட்டுமில்லாமல், இதர துறைகள் அனைத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதை ஓய்வுக் காலமாகக் கருதாமல், பயிற்சிக் காலமாக மாற்றினால், எதிர்காலத்தில் உரிய பயன் கிட்டும்.

    Share
  • பூலோக சொர்க்கம் மொரீசியஸ் – தெ.ஈசுவரன் உரை

    பூலோக சொர்க்கம் மொரீசியஸ் – தெ.ஈசுவரன் உரை

    அண்ணாகண்ணன்

    இலங்கைத் தொழிலதிபர், அமரர் தெ.ஈசுவரன், இலங்கைக்கான மொரீசியஸ் நாட்டின் கௌரவத் தூதராக இருந்தவர். இயல்பிலேயே அமைதியும் நிதானமும் பொறுமையும் கொண்ட அவரது பேச்சும் தெளிந்த நீரோடை போல் இருக்கும். ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை ஏற்றுமதி நிறுவனம், மொரீசியஸ் தூதரகப் பணி, கம்பன் கழகத் தலைவர், பிள்ளையார் கோவில் அறங்காவலர், ஆஞ்சநேயர் கோவில் கட்டுமானப் பணி, இலங்கையின் மிக உயரமான புத்தர் சிலை எழுப்புதல், சாயிபாபா அறக்கட்டளை, பல்வேறு பொது நிகழ்ச்சிகள்… எனப் பற்பல பணிகளுக்கு இடையில், உட்கார்ந்து எழுதுவதற்கு அவருக்கு நேரமில்லாமல் இருந்தது.

    2010 காலக்கட்டத்தில், அவருடைய அர்த்தமுள்ள அனுபவங்கள் நூலை அவர் சொல்லச் சொல்ல, நான் எழுதினேன். அதன் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினேன். இதற்காகக் கொழும்பு மாநகரில் இரு மாதங்கள், அவருடன் இணைந்திருந்தேன். சென்னைக்குத் திரும்பிய பிறகு, நேரில் சந்திக்க இயலாதபோது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, அப்படியே பேசி, ஒலிக்கோப்பாக அனுப்பிவிடுங்கள். நான் தட்டச்சு செய்து அனுப்புகிறேன் என்று கூறினேன். அந்தக் காலத்தில் இன்றுபோல், ஒலியை எழுத்தாக்கும் மென்பொருள் கருவிகள், தமிழில் நடைமுறைக்கு வரவில்லை.

    அப்படி ஒரு முறை 2011இல் மொரீசியஸ் நாட்டைப் பற்றிய இந்தக் கட்டுரையை அவருடைய குரலில் பதிந்து அனுப்பியிருந்தார். பேச்சையே மென்மையாக, ஒரு தியானம் போல அவர் நிகழ்த்தியுள்ளதை இந்த உரையில் நீங்கள் கேட்கலாம்.

     

    Share
  • கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

    கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

    அண்ணாகண்ணன்
     
    கணித மேதை சீனிவாச ராமானுஜனின் கும்பகோணம் வீட்டை, சாஸ்திரா பல்கலைக்கழகம், நினைவில்லமாகப் பரமாரித்து வருகிறது. கும்பகோணம் சென்று வந்த பலரும் கூட, இந்த வீட்டை நாங்கள் பார்க்கவில்லையே என்று வருந்தினார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்க ஆவலிருந்தும் முடியாமல் போய்விட்டது என்று நண்பர் முத்துக்குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். ரேழியும் முற்றமும் கொல்லையும் கொண்ட இந்த வீட்டுக்குள் சென்று வருவது, அந்தக் காலத்திற்கே பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
     
    29.12.2019 அன்று இந்த இல்லத்தைப் பார்த்து, அங்கிருந்த குறிப்பேட்டில், உடனுக்குடன் நான் எழுதிய வெண்பா இது.
     
    கனவில் உதித்த கணிதப் புதிர்கள்
    மனத்தில் விழித்த மனிதன் – தனித்துவ
    ராமா னுஜனின் ரகசியப் புள்ளிகள்
    சாமான்யன் வாழும் சபை.
     
    இராமானுஜனுக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரித் தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்குக் கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம். அவர் பயன்படுத்திய கட்டிலையும் கட்டிலிலிருந்து மேலே பார்க்கும்போது காட்சி தரும் உத்திரத்தையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.
     
     
    Share
  • தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை

    தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, ‘கையடக்கப் பேசியில் தமிழ்’ என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், ‘தமிழில் செல்லிட ஆளுகை’ என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள். உரையைத் தொடர்ந்து கேள்வி – பதில் பகுதியும் இடம்பெற்றது. எனது முழு உரையையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • இங்கா இங்கா

    இங்கா இங்கா

    அண்ணாகண்ணன்
     
    (குழந்தையின் ங்கா ங்கா  என்ற ஓசைக்கு எழுதியது)
     
    இதை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்
     
     
     
    நான் பிறந்தது இங்கா  இங்கா
    நலம் விளைந்தது  இங்கா இங்கா
    வான் கனிந்தது இங்கா  இங்கா
    வளம் கொழிப்பது இங்கா  இங்கா
    தேன் இனிப்பது இங்கா  இங்கா
    திசை களிப்பது இங்கா  இங்கா
    தான் வளர்வது இங்கா இங்கா
    தாகம் வளர்ப்பது இங்கா இங்கா.
     
    கண் மலர்ந்தது இங்கா  இங்கா
    கனவு மெய்த்தது இங்கா இங்கா
    மண் குளிர்ந்தது இங்கா இங்கா
    மனம் விழித்தது இங்கா இங்கா
    பண் இசைப்பது இங்கா இங்கா
    பந்தடிப்பது இங்கா இங்கா
    விண் சுரந்தது இங்கா இங்கா
    வெற்றிகள் சூழ்வது இங்கா இங்கா.
     
    பொழுது புலர்ந்தது இங்கா  இங்கா
    புதுமை விரிந்தது இங்கா  இங்கா
    அழுது சிரிப்பது இங்கா  இங்கா
    அமுது சுவைப்பது இங்கா  இங்கா
    எழுந்து நடப்பது இங்கா  இங்கா
    எழுத்து படிப்பது இங்கா  இங்கா
    மழலை குழைவது இங்கா  இங்கா
    மனசு திறப்பது இங்கா  இங்கா.
     
    நிலவு பார்ப்பது இங்கா  இங்கா
    நிலம் தவழ்வது இங்கா  இங்கா
    பால் மணப்பது இங்கா  இங்கா
    பாட்டில் தோய்வது இங்கா  இங்கா
    கொஞ்சி அணைப்பது இங்கா  இங்கா
    குறும்பு விளைப்பது இங்கா  இங்கா
    வாழ வந்தது இங்கா  இங்கா – நீ
    வாழ்த்த வந்தது இங்கா இங்கா.
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • கனவென்னும் கட்டெறும்பு

    கனவென்னும் கட்டெறும்பு

    கவிதை: அண்ணாகண்ணன்
    வாசிப்பு: அண்ணாகண்ணன், ஷைலஜா

    இந்தக் கவிதையை ஒலி வடிவில்  இங்கே கேட் கலாம்.

     

    காய்ச்சலா என்று கேட்டு
    நெற்றியில் கையை வைத்தாய்.
    இல்லாத காய்ச்சல் சூடு
    ஜிவ்வென ஏறக் கண்டேன்.

    வேர்க்குதா என்று கேட்டு
    மேலாக்கால் துடைத்து விட்டாய்.
    இல்லாத வேர்வை பொங்கி
    என்மேனி மூழ்கக் கண்டேன்.

    தூசியா என்று கேட்டு
    இதழ்குவித்து ஊதி விட்டாய்.
    உலகமே தூசியாச்சு
    உன்னிதழ் உலக மாச்சு.

    கோணலா வகிடு என்று
    சீப்பினால் சிலை வடித்தாய்.
    மேகமாய் மிதந்து சென்று
    காற்றுக்குத் தலை கொடுத்தேன்.

    பசிக்குதா என்று கேட்டு
    ஒற்றைவாய் ஊட்டிவிட்டாய்.
    உறுபசி தன்னைத் தின்று
    உயிர்ப்பசி ஊறக் கண்டேன்.

    தூங்கென்று சொல்லிவிட்டுத்
    தூரத்தில் புள்ளி யானாய்.
    கனவென்னும் கட்டெறும்பு – என்
    காலத்தைக் கடிக்குதேடி.

    http://annakannan-kavithaigal.blogspot.com/2006/03/blog-post.html
    ——————————————
    Pic courtesy: https://www.maxpixels.net

    ——————————————

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இணையத்தில் நேர மேலாண்மை

    இணையத்தில் நேர மேலாண்மை

    அண்ணாகண்ணன்

    இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஒரு பயிலரங்கை இந்திய நேரப்படி இன்று (10.04.2020) மதியம் 2 மணிக்கு Zoom தளத்தின் வழியாக நடத்துகிறேன். வாய்ப்புள்ளோர் இணைக.

    Share
  • உலகம் பெரிது

    உலகம் பெரிது

    அண்ணாகண்ணன்

    இந்தப் பாடலை   ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில் இங்கே கேட்கலாம்:

     

    உலகம் பெரிது உலகம் பெரிது
    எதற்கும் அஞ்சாதே – நீ
    திலகம் உறுதி. எந்த நெற்றியில்
    என்பது பிற்பாடே!

    ஒருவர் மறுத்தால் ஒருவர் ஏற்பார்
    கவலை கொள்ளாதே
    ஒன்றில் குறைந்தால் ஒன்றில் கூடும்
    எதற்கு கண்ணீரே?

    ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும்
    உத்திர வாதம்இது.
    ஒருவிதை பிழைத்தால் மறுவிதை முளைக்கும்
    வாழ்வின் விளக்கம்இது.

    உழைப்பில் உண்மை; இலக்கில் மேன்மை
    உனக்குள் இருக்கிறதா?
    கனவு மெய்ப்படும்; கைவசம் ஆகும்
    காலம் இருக்கிறது.

    விழியே உறங்கு; உடலே உறங்கு
    மனமே விழித்திருப்பாய்
    வழியும் வாய்ப்பும் தோன்றும் கணத்தை
    வாகாய் வளைத்திருப்பாய்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்பா அம்பா

    அம்பா அம்பா

    அண்ணாகண்ணன்

    இந்தப் பாடலை ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில்  இங்கே கேட்கலாம்

     

    அம்பா அம்பா கமலாம்பா
    அம்பா அம்பா லலிதாம்பா
    அம்பா அம்பா ஜகதாம்பா
    அம்பா அம்பா வடிவாம்பா  

    அம்பா அம்பா ஞானாம்பா 
    அம்பா அம்பா யோகாம்பா
    அம்பா அம்பா வேதாம்பா    
    அம்பா அம்பா லோகாம்பா

    அம்பா அம்பா மதுராம்பா
    அம்பா அம்பா கருணாம்பா  
    அம்பா அம்பா கனகாம்பா  
    அம்பா அம்பா அபயாம்பா    

    அம்பா அம்பா நீலாம்பா
    அம்பா அம்பா லீலாம்பா
    அம்பா அம்பா பாலாம்பா
    அம்பா அம்பா வாலாம்பா

    அம்பா அம்பா மீனாம்பா
    அம்பா அம்பா தேனாம்பா
    அம்பா அம்பா ரத்னாம்பா
    அம்பா அம்பா பத்மாம்பா

    அம்பா அம்பா காளிகாம்பா
    அம்பா அம்பா ரேணுகாம்பா  
    அம்பா அம்பா கற்பகாம்பா  
    அம்பா அம்பா மங்களாம்பா

    அம்பா அம்பா மூகாம்பா      
    அம்பா அம்பா நாகாம்பா
    அம்பா அம்பா ஜ்வாலாம்பா 
    அம்பா அம்பா பூர்ணாம்பா 

    அம்பா அம்பா கண்ணாம்பா 
    அம்பா அம்பா சுந்தராம்பா   
    அம்பா அம்பா மோகனாம்பா 
    அம்பா அம்பா தர்மாம்பா 

    அம்பா அம்பா சௌடாம்பா  
    அம்பா அம்பா சைலாம்பா
    அம்பா அம்பா பிருஹதாம்பா
    அம்பா அம்பா பிரம்மாம்பா  

    அம்பா அம்பா விருதாம்பா  
    அம்பா அம்பா திலகாம்பா
    அம்பா அம்பா உமையாம்பா
    அம்பா அம்பா குசலாம்பா

    அம்பா அம்பா சாரதாம்பா
    அம்பா அம்பா கோகிலாம்பா
    அம்பா அம்பா புஷ்கலாம்பா
    அம்பா அம்பா மரகதாம்பா   

    அம்பா அம்பா கிருஷ்ணாம்பா   
    அம்பா அம்பா ருத்ராம்பா
    அம்பா அம்பா சித்ராம்பா
    அம்பா அம்பா முக்தாம்பா  

    அம்பா அம்பா புஷ்பாம்பா
    அம்பா அம்பா வேலாம்பா    
    அம்பா அம்பா அழகாம்பா
    அம்பா அம்பா அகிலாம்பா

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

    எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

    அண்ணாகண்ணன்

    சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். கணித் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகம், நிகழ்வைச் சிறப்புற ஒருங்கிணைத்தார்.

    சமூகச் சிக்கல்களுக்குத் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தீர்வுகளைக் கண்டறியுங்கள். உங்கள் தாய்மொழியில் புத்தாக்கம் படையுங்கள் என்பதை என் முதன்மைச் செய்தியாக முன்வைத்தேன்.

    எனது உரையின் ஒரு பகுதி இங்கே.

     

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா & பயிலரங்கில், 16.03.2020 அன்று, நிறைவுப் பேருரை ஆற்றுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்

    எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்

    அண்ணாகண்ணன்

    சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.  மேலும் பலரும் பங்கேற்கின்றனர். அழைப்பிதழ் காண்க, வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை

    குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை

    அண்ணாகண்ணன்
     
    கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல், இந்தத் தலைமுறையில் பிறந்த நீங்கள் ஒவ்வொருவரும் அறிவியலுடனும் தொழில்நுட்பத்துடனும் பிறந்துள்ளீர்கள் என்று என் உரையைத் தொடங்கினேன்.
     
    சென்னை, வேப்பேரியில் உள்ள குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சார்பில் 20.02.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். இணையமும் தமிழ்ப் பயன்பாடும் என்ற தலைப்பில் ஓர் அமர்வை நடத்தினேன். கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன், நிகழ்வைத் திட்டமிட்டு நடத்தினார். பேரவையின் செயலாளர் பூஜா எனக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
     
     
    அரங்கில் மாணவியர் இருவரை அழைத்து, அவர்களின் செல்பேசியில் குரல்வழியே தட்டச்சு செய்ய வைத்தேன். இணையத்தை அவரவர் தாய்மொழியில் அணுக வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். இணையத்தில் தமிழுக்கு உள்ள வாய்ப்புகளை விளக்கினேன்.
     
     
    கணித்தமிழ்ப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குச் சான்றிதழ்களை வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்த பிறகும் மாணவியர் தங்கள் கேள்விகளைத் தொடுத்து உரையாடினர்.
    Share