Tag: படக்கவிதைப் போட்டி

  • படக்கவிதைப் போட்டி – 71

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13599462_1042198989167633_571495808_n

    107291507@N03_rசாந்தி வீஜே  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 69 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி:

    13493059_1033652313355634_1587480765_n

     

     

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    படக் கவிதைப் போட்டிக்கான ஒளிபடத்தில் இருப்பவர்கள் மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்கள். இவர்கள் கட்டிய வீட்டிற்கு கவிஞர்கள் தீட்டிய பா வண்ணத்தைப் பார்ப்போம். இனி,

    சிறுபிள்ளை பருவத்தில் குழந்தைகள் மனம் விரும்பியவாறு விளையாடுதற்கு பெற்றோர்கள் தடையாக இருக்கக் கூடாது. நல்ல எண்ணத்தை விளையாட்டோடு விளையாட்டாக எடுத்துக் கூறினால், அது அவர்களின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்று அறுவுறுத்துகின்றார் கவிஞர் செண்பக ஜெகதீசன்.

    விளையாட்டு உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனப்பயிற்சியும் கூட. ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவதொரு வாழ்க்கைக்கேற்ற பாடம் இருக்கும். அந்த வகையில் எவ்வளவு தான் அலைகள் வந்து அலைக்கழித்தாலும் சளைக்காமல் மணலில் வீட்டைக் கட்டும் சிறுவர்களின் விளையாட்டில் கடமையுணர்வும், விடாமுயற்சியும் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    நகரமயமான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் ஓடி விளையாடுதற்கு இடமேது? ரியல் எஸ்டேட்காரர்களைத் தாண்டி தனியாக வீடு கட்டும் விருப்பமுடையவரின் எண்ணம், சிறுவர்கள் கட்டும் மணல் வீடு போல், அலை வந்து அலைக்கழிக்க கலைந்து போகும் நிலையாகும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார் முனைவர். பத்ம பிரியா.

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கை வளங்களைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது இக்கவிதை.

    குருவிகளின் கூடு மரத்தினிலே-இந்த‌
    குழந்தைகளின் வீடு ஈர மணலிலே

    மணல் மாயமாய் மறையும் முன்னே
    மணல் வீடு கட்டி மகிழட்டுமே

    காற்று வீசி கலைக்கும் முன்னே
    கோட்டைகள் மணலில் பல கட்டட்டுமே

    மாடி வீடு கட்டி அங்கே-நம்
    கொடியினை நட்டு வணங்கட்டுமே

    ஈரமண்ணில் ஆடிய ஆட்டம் என்றும்
    இதயத்தில் உலரா வண்ணம் இருக்கட்டுமே

    காடுகள் யாவும் ஆயின வீடுகளே
    காணாமல் போனது ஆற்று மணலுமே

    மார்பிள் வீடு கட்டி வாழ்ந்தாலுமே
    மணல் வீடு போல்தான் வந்திடுமா

    மண் வாசனை போனது எங்கே
    மரஙகளும் போனது எங்கே

    குருவிகளுக்கும் கூடு கட்ட மரமில்லை
    குழ்ந்தைகள் வீடு கட்ட மண்ணில்லை

    காற்றும் கடலும் வந்து அழிதாலும்-இவரின்
    கனவினை மட்டும் அழிக்காது காத்திடுவீர் (ராதா விஸ்வநாதன்)

    வீட்டிற்காகவும், மாளிகைக்காகவும்  காடுகள் அழிக்கப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் கவிஞர்.மழை இன்மையையும், மணற் கொள்ளையையும் சுட்ட, மண்வாசனை போனது எங்கே மரங்களும் போனது எங்கே என்று கவிஞர் எடுத்தாண்டிருப்பது அருமை. எளிமையான வரிகளில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தினை வெளியிட்டிருக்கும் ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி … (70)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13563176_1038235166230682_1340979644_n

    கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. 69

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13493059_1033652313355634_1587480765_n
    95475568@N05_rவெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 68 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13444181_1029839340403598_905366858_n

     

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் புதுவை சரவணன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    மலைப் பாதையில் மழை வரும் முன்பே குடை பிடித்துச் செல்லும் இச்சிறுவன் தான் யாரோ?

     

    
    

    விளையாடும் பருவம் இது

    விளையாட நேரம் ஏது

    சின்னத் திரையில் சிறு பிள்ளைப் பருவமும்

    வெள்ளித் திரையில் விடலைப் பருவமும்

    களி கொள்ளும் காலம் இது.

    திரைக்குள் காணும் உலகை விடுத்து

    திரைக்குள் அப்பால் உள்ள

    வசந்த உலகைக் காண

    எண்ணச் சிறகை விரித்து

    வண்ணக் கனவுகளை

    வகையுற அமைத்து

    வாகை சூடும்

    நாள் இது !

    என்று வானவில் குடை விரித்து ஒய்யாரமாய் அடி எடுத்து வைக்கும் இச்சிறுவனுக்கு கவிஞர்கள் எழுதிய பாக்களைப் பார்ப்போம். இனி,

    இளைய தலைமுறைக்கு பெற்றோர்களே வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது இக்கவிதை,

    வெயிலும் மழையும் இலையெனிலும்
    வேடிக்கைக் காகக் குடைபிடிப்பான்,
    பயிலும் பள்ளி விடுமுறையில்
    பறக்கச் சிறகுகள் வந்துவிடும்,
    துயிலும் பொழுதைத் தவிரதினம்
    துடிப்பா யிருக்கும் பருவமிது,
    இயல்பிதை வளர்த்தே நல்வழியில்
    இவனைச் செதுக்குவீர் பெற்றோரே…! – செண்பக ஜெகதீசன்…

    சின்னஞ் சிறு வயதில் துடிப்பாய் இருக்கும் சிறுவர்களின் இயல்பினை உணர்ந்து அவர்களை அரவணைப்பதும், நிலைப் பிறழாமல் நடக்க நல்வழி காட்டுவதும், பெற்றோரின் கடமை என்கிறார் கவிஞர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (68)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13444181_1029839340403598_905366858_n

    95494202@N04_rபுதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 67 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13315611_1025713060816226_4364786465585856721_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஆதித்ய நாகராஜ். இதனைப் போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். இங்கு படக்கவிதைப் போட்டிக்கான படத்தில் இருப்பவர் குரங்காட்டி. கோல் கொண்டு குரங்கை ஆட்டுவிக்கும் இவருக்கு, எழுதுகோலால் கவிஞர்கள் ஆக்கிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,

    வயிற்றுப் பசிக்காக குரங்கை வைத்து வித்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் குரங்காட்டி தன் பசியை மறந்து மக்களின் கவலையை மறக்கச் செய்வதாகப் பாடியுள்ளார நாமக்கல் முருகேசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    குரங்காய் குனிந்தே வாழாமல் வாய்ப்புக் கிடைத்ததும் மனிதன் தோள்மீதமர்ந்து தன் வித்தையைக் காட்டும் குரங்கின் திறம் கூட மனிதனுக்கு இல்லையே என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    குரங்கின் உழைப்பே

    குரங்காட்டியின் பிழைப்பு

    குரங்கை விட்டால்

    அவனுக்குபிழைப்பில்லை

    அவனை விட்டால்

    குரங்கிற்கிற்கும் கதியில்லை

    அடிக்குப்பயந்தும்

    ஆகாரத்திற்காகவும்

    அவன்

    ஆணைப்படி ஆடும்

    அந்தரத்திலும் தொங்கும்

    வித்தைகாட்டியின் விரலசைவுக்கு

    இன்றைய பெற்றோர்களுமே

    வித்தை காட்டிகள்தான்

    பிள்ளைகளை

    அதைப்படி இதைப்படி

    டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு

    கோலில்லாமல்

    ஆட்டி வைக்கின்றனர்

    குரங்கு எப்படி குரங்காட்டியின்

    சொல்லுக்கு உடன் படுகிறதோ

    அதேபோல் பிள்ளைகளும்

    பெற்றோரின் செயலாக

    வெளிப்படுமேயன்றி

    தானாக எதுவும் செய்வதில்லை

    என்பதே தெளிவு

    சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்

    மக்களையும் குரங்காட்டியாகத்தான்

    காட்டுகின்றன இன்றைய

    அரசியலுக்கும் இது பொருந்தும்

    எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்

    எல்லாருமே குரங்காட்டித்தான் – சரஸ்வதி இராசேந்திரன்

    குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதால் என்னவோ குரங்கின் செயலுடன் மனிதன் செயலை ஒப்பிட்டுக் கூறும் மரபு உள்ளது. மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் செயல், எதிலிலும் நிலையில்லாத மனமுடைய மனிதனுக்கு உவமையாக வந்துள்ளது. மனம் ஒரு குரங்கு என்று கூறும் வழக்கமும் உண்டு. இங்கு குச்சியை எடுத்து குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டியை, பிள்ளையைத் தன் விருப்பத்திற்கேற்ப கோலில்லாமல் ஆட்டிவைக்கும் பெற்றோர்களுக்கு உவமையாக சுட்டிக் காட்டியுள்ளார் கவிஞர். `கோலில்லாமல்’ என்று கூறுவதன் மூலம் பெற்றோர் குறிக்கோளில்லாமல் செயல்படுவதையும் எளிய வரிகளில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ள சரஸ்வதி இராசேந்திரனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு என்  பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள்!

    காயத்ரி பூபதி

    13318513_1022161434504722_554123272_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் இராமலெஷ்மி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

    மலர்கள் என்றுமே கவிஞர்களின் எண்ண ஊற்றுகளின் பிறப்பிடமாகும். இலக்கியத்தில் மலர்கள் நிலத்தை, காலத்தைக் குறிக்கும் குறியீடாகவும், கருத்துச் செறிவான செய்திகளைச் சுட்டும் உவமையாகவும் சூழலைக் குறிக்கும் பின்னணியாகவும் இடம் பெற்றுள்ளன.

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.

    என்று விருந்து பற்றிய கருத்துச் செறிவான செய்தியைச் சுட்ட(,) அனிச்ச மலர் உவமையாக வந்துள்ளது.

    பூக்களிலே நானும் ஓர்
    பூவாய்(த்)தான் பிறப்பெடுத்தேன்
    பொன் விரல்கள் தீண்டலையே
    நான் பூமாலை ஆகலையே

    என்ற புதுக் கவிதை வரிகளில் முதிர் கன்னிக்கு(ப்) பின்னணியாகிறது பூமாலை. இங்கு படக் கவிதைப் போட்டிக்கானப் படத்தில் இருக்கும் பெண்மணி, பூ விற்கும் தொழிலாளி. இவள்,

    கொளுத்தும் வெயிலில் வாடும் பூவை
    வறுமை வாட்ட விற்க வந்தாள்
    வாடா மலரை, வாடும் முன்னே!

    இப்பூவைத் தொடுத்த பூமாலைக்குக் கவிஞர்கள் தொடுத்த பாமாலைகளைப் பார்ப்போம்.

    படக் கவிதைப் போட்டிக்கு வெளிவந்திருக்கும் கவிதைகள் பொதுவாக(,) பொறுப்பில்லாத குடும்பத் தலைவனையும், குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டு போராடும் குடும்பத் தலைவியையும் எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளன.

    பூவைத் தொடுப்பவள் தலையினிலே
    பாரமாய் வறுமை வதைக்கையிலே,
    சாவைத் தேடிடக் கணவன்தான்
    சாரா யத்தைத் நாடுகிறான்,
    தேவைக் கான பொருள்சேர்க்கத்
    தேடிப் பிள்ளைகள் வெளிநாட்டில்,
    பூவைத் தலையில் தக்கவைக்க
    பூவை தொடுக்கிறாள் பூக்களையே… (செண்பக ஜெகதீசன்)

    மதுவுக்கு அடிமையான கணவனால் வறுமையில் வாடும் குடும்பத்தையும், அதைச் சீர்தூக்கப் போராடும் மனைவியையும் எடுத்துக் காட்டியுள்ளார். மதுவினால் பெண்கள் அடையும் துயர நிலையை சுட்டிக் காட்டியுள்ள கவிஞருக்குப் பாராட்டுகள்.

    இயற்கை அளித்த பூவை
    இடையில் வந்த கணவன்
    இறப்பில் பறிகொடுக்கும் நிலை…..
    பூத்தொடுக்கும் நேர்த்தியில்
    உள்ள அழகைக் கூட
    இறைவன உனக்களித்த
    படைப்பில் மறந்தானோ….
    விதவை விற்றாலே.
    வீணெனப் பூவை
    வாங்க,மறுக்கும்
    வாழ்க்கை உலகமிது.
    பூவிழந்ததை மறைத்துப்
    பூவைத்துக் கொண்டு
    பூவையர்க்குப்
    பூவை விற்கப்
    பொய்வேடம் புனைகதையை
    என் சொல்ல..என் சொல்ல… (இளவல் ஹரிஹரன்)

    பூவைச் சூடா பூவையின் நிலைக் குறித்த தன் வருத்தத்தை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். பூவைத் தொடுத்த மல்லிகைப் பூமாலையின் வாசனையைவிட அவளிடமிருந்து வரும் உழைப்பின் வாசனையைப் பார்க்கின்றது வல்லமை. தொழிலைப் போற்றுவோம், தொழிலாளிகளைப் போற்றுவோம்.

    உழைப்பால் வந்த ஊதியத்தை
    கவர்ந்து கொண்டு
    உல்லாசமாய் வாழும்
    கணவன்மார்கள்
    இருக்கும் வரை
    ஜான் ஏறனால்
    முழம் சறுக்கும்
    என்பதை உணர்த்தியது
    இந்த பூவின் வாசம் ! (ஹிஷாலி)

    என்னதான் உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலனை அடைய முடியாமல் தவிக்கும் பூக்காரியின் நிலையைக் காட்டுகின்றன, ஹிஷாலியின் கவிதை வரிகள்.

    நாளை மறுநாள் திருநாள்.
    மூத்தவளின் பிள்ளை
    பெரிசாகி நாளாச்சு
    முந்தானை நீளமாய் தாவணி.
    நடுவிலி பெத்தது
    முளைக்கு முன்னர் தனக்குமாம்.
    இளையவளின் கடைக்குட்டி
    கேளான் எதுவும்
    நீளக்கை சேட் கட்டைக் களிசான்
    புத்தகம் சுமக்க முதுகுப்பை.
    கட்டம் போட்ட நீலக்கைத்தறி
    அம்மாவுக்கு
    மாமிக்கொரு நல்ல வொயில்
    இயலாமல் படுக்கும் கண்ணாளனுக்கு
    கதர் வேட்டியும் கம்பளியும்.
    நாதன் கடைக்கணக்கு
    சந்திக்கடை பாக்கி
    கிழமைச் சீட்டுக்காசு
    கோயில் உண்டியல்
    இருமல் மருந்தும் தடவும் தயிலமும்.
    கொய்த மல்லிகையை
    குந்தியிருந்து கோர்க்கும் நாருடன்
    வியர்த்த முகத்தில்
    இளையோடும் எண்ணங்கள்
    சரப் பின்னலில்
    நாளைய நம்பிக்கையாய்
    முடிச்சுக்களுடன். (களப்பூரான் தங்கா)

    குடும்பச் சுமையையும் குடும்பத்திலுள்ளோரின் தேவைகளையும் வரவுக்கு அதிகமான செலவுகளையும் நாளைய கனவுகள் குறித்த எண்ணங்களையும் முடிச்சுகளாக்கி, முடிச்சுகளை அவிழ்க்கும் நாளை எண்ணி(க்) காத்திருக்கும் பூக்காரியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது களப்பூரான் தங்கா அவர்களின் கவிதை.

    வறுமை பெண்களிற்குத் தன்னம்பிக்கை
    திறமை தருகிறதென்பது உண்மை.
    பொறுமையான சுய சம்பாத்தியம்.
    பொறுப்பான குடும்பக் கவனிப்பு.
    நிறம் மாறி வாடுவதாய்
    நிலை மாறாத பூக்காரியிவள்.
    தான் சூடி விரயமாக்காது
    தாரளமாய் கூவிக்கூவி விற்பவள்.
    மன்மதக் கணையாம் பூமாலை.
    புன்னகைத் திரையில் வேதனை.
    மாலைக்குள் விற்றுத் தீராவிடில்
    பாலையாய் வயிறு காயும்.
    மருக்கொழுந்தாள் முல்லைச் சிரிப்பழகி
    தாமரை இதழ் செண்பகமே
    மல்லிகையே சம்பங்கிப் பூவையே (பூக்காரியே)
    தமிழ் பூவின் கதம்பமே! (வேதா. இலங்காதிலகம்)

    வெயிலில் நிறம் மாறி வாடினாலும் நிலைப் பிறழாது உழைக்கும் பூக்காரியின் தன்னம்பிக்கையும் உழைப்பையும் வெகுவாகப் பாராட்டுகின்றது வேதா. இலங்கா திலகம் அவர்களின் கவிதை. கவிஞருக்குப் பாராட்டுகள்.

    குடிகார கணவன்
    ஒரு புறம்
    படிக்கும் பிள்ளைகள்
    ஒரு புறம்
    வீட்டு வருமானம்
    போதாத குறை
    ஒருபுறம்
    வறுமையை ஓட்ட
    வகையாய்தேர்ந்தெடுத்த
    வளமான தொழில் இந்த
    தொழிலுக்கு
    மூலதனம் தேவையில்லை
    வேண்டியது உழைப்பே
    லட்சியங்கள் எல்லாம்
    உயிர்பெறுவது
    நடுத்தர வர்க்கத்து
    மக்களால்தான்
    வீடெல்லாம் பூவாசம்
    வறுமைபோக்க
    வீட்டு வேலை முடிந்து
    பூக்கட்டும் வேலை
    தினமும் நூறு ரூபாய்
    தினக்கூலி தீர்ந்திடும்
    தினப்படி கவலை
    ஆனால் பூகட்டும்
    பொன்னமாவின் கவலையெல்லாம்
    பெண்கள் இன்று
    அவிழ்த்த கூந்தலை
    முடித்தால்தானே பூவைக்கமுடியும்
    பூவைப்பது அநாகரீகமாய்
    கருதும் காலமாகிவிட்டது
    பூகட்டி வறுமைதீர்த்தகாலமும்
    போய் விடும் போலிருக்கிறது
    ரிலையன்ஸ் நிறுவனமும்
    பூக்களுக்கு வேர்ஹவுஸ்
    அமைச்சுட்டால் எங்க பிழைப்பிலே
    மண்தான் போங்க (சரஸ்வதிராசேந்திரன்)

    பூத் தொழில் புரிவோரின் குடும்பச் சூழலையும் பூத்தொழில் முறையையும் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் அவிழ்த்த கூந்தலை முடிந்தால் தானே பூ வைக்க முடியும் என்று, இன்று பெண்களிடம் குறைந்து வரும் பூச் சூடும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள்(,) கூந்தலில் முல்லை மலர்ச் சரத்திற்கு நடுவில் கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு சென்றது ஒரு காலம். இன்று கனகாம்பரம் என்ற மலரைப் பெண்கள் கூந்தலில் பார்ப்பது அரிதாகிவிட்டது. பூத் தொழிலின் இன்றைய நிலை(,) எதிர்கால நிலைக் குறித்த சிந்தனையையும் எழுப்பி நம் எண்ண அலைகளைக் கீறிவிட்டிருக்கும் சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறோம். கவிஞருக்குப் பாராட்டுகள்.

    பி.கு. மேகலா இராமமூர்த்தி விடுமுறையில் இருப்பதால் சில வாரங்களுக்கு காயத்ரி பூபதி போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள். புதிய கவிஞர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம். நன்றி நண்பர்களே.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • படக்கவிதைப் போட்டி … (66)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13318513_1022161434504722_554123272_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    27182698@N05_rராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 65-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திருமிகு. சாந்தி வீஜே. இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு ’சாந்தி’யருக்கும் வல்லமை இதழின் நனிநன்றி!

    crow with a paper

    காகமும் அதன் அலகில் வீற்றிருக்கும் வண்ணக் காகிதமும் நம் கண்ணைக் கவர்கின்றன.

    இப்படம் நம் கவிஞர்களுக்கு எத்தகைய உணர்வலைகளை எழுப்பியிருக்கின்றன எனக் காண்போம்!

    ***

    உரக்கக் கரைந்து, உறவினர் வருகையை அறிவிக்கும் காக்கையே! சிறுவர் கைப்பண்டத்தை நீ பறித்துவந்தது முறையோ? என வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உறவாய் எண்ணிய காக்கையாரே
    உமது குணமது மாறியதே,
    சிறுவர் கையில் பண்டமதைச்
    சேர்த்தே பிடுங்கி வந்தீரே,
    உறவினர் வரவை உரைப்பதினால்
    உயர்வாய் எண்ணி யிருந்தோமே,
    பிறப்பில் எமது முன்னோராய்ப்
    போற்றிய பெருமையும் பொய்யாச்சே…!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அறிந்துகொள்ளும் நேரமிது!

    ”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள” என்பது வள்ளுவம்.

    கூடிவாழ்வதிலே, தேடியதைக் கரவாது தம் உறவுகளோடு பங்கிட்டு உண்பதிலே மாந்தர்களுக்கே வழிகாட்டியாய்த் திகழ்பவை காக்கைகள்.

    பகுத்துண்பது உயர்குணந்தான் என்றாலும் மற்றவரின் பொருளைத் திருடிவந்தா அதனைச் செய்வது? என்று காக்கையைக் கண்டிக்கிறது ஒரு கவிதை! 

    காகமே உன்
    தாகம் தீர்க்க
    தண்ணீரும்
    பசிக்கு அன்னமும் இட்டேன்
    நீ சனீஸ்வரரின் வாகனமாம்
    முன்னோர்களின் சின்னமாம்
    நீ கரைந்தால்
    விருந்தினர் வருவதாகவும்
    நீ வலமாகப் போனால்
    காரிய சித்தியாகவும்
    உன்னைப்புகழ்ந்து
    பாடியிருக்காராம்
    காக்கைப்பாடினியார்
    இதெல்லாம் எனக்கு
    செவிவழி வந்த செய்திதான்
    ஒற்றுமைக்கும்
    பகிர்ந்துணவுக்கும்
    கூடி வாழ்தலுக்கும்
    உவமையாகச் சொன்ன
    உண்மைத்தகவலுக்காகவும்
    உயிர்களுக்கு உதவணும்னுதான்
    தண்ணீரும்
    அன்னமும் இட்டேன்
    அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
    கடையிலிருந்தோ சிறுவர்
    கையிலிருந்தோ
    இதை பறித்து வந்திருக்கிறாயோ?
    வேண்டாம் காகமே!
    பறித்து வருவதும்
    கவர்ந்து வருவதும் கூட
    ஒரு வகையில் திருட்டுத்தானே?
    எனக்கு இது வேண்டாம்!
    அம்மா திட்டுவாள்
    உன் அன்புக்கு நன்றி!

    காக்கை குறித்த பல செவிவழிச் செய்திகளைத் தன் கவிதை வாயிலாய் நமக்கு அறியத்தந்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (65)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13292903_1018041728250026_133259711_n
    107291507@N03_rசாந்தி வீஜே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 64-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    kids with eatable

     

    ஈத்துவக்கும் இன்பத்தை இவ்விள வயதிலேயே அறிந்து, அதனை நடைமுறைப்படுத்திவரும் இக்குழந்தைகள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வரிய புகைப்படத்தை எடுத்திருக்கும் திருமிகு. ஷாமினி, இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பன் ஆகியோர் வல்லமையின் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

    போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துக் களிப்போம் இனி!

    ***

    பசியைத் தேடிக் கண்டடைந்து தான்மட்டும் புசிப்பதினும், பிறரின் பசிக்கு உணவளித்து, அவருடலை ஓம்பினாலன்றோ சமூகம் செழிக்கும் என்கிறார் நாமக்கல் திரு. முருகேசன்.

    பசியொன்றைக் கண்டெடுத்து
    புசிப்பதனால்
    என்ன பயன்?
    என் பசியை உணவாக்கி
    உன் குருதி மெருகேற,
    காத்திருக்கிறேன்!
    குளிர்ந்தது என் மனம் அன்றி,
    இச்சமூகம் செழித்தோங்கவே!
    என் அன்புச்சகோதரனே!

    ***

    எப்படி வாழக்கூடாது என்று உற்றாரும் உறவினரும் எனக்குக் கற்பித்தார்களேயன்றி, எப்படி வாழவேண்டும் என்று சொல்லித்தரவில்லை. ஆயினும், வையகத்தைக் கையகத்துள் கொண்டுவரும் உயர்குணமாம் ’ஈகை’ என்னுள் வந்ததெப்படி? எனத் தன்னை வியக்கும் குழந்தையைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. ஹிஷாலி.

    தகப்பனாட்டம்
    உதவாக்கரையாக
    வளர்ந்து விடாதே
    என்றாள் அம்மா! 

    தாத்தாவாட்டம்
    தண்டமாக
    வாழ்ந்து விடாதே
    என்றாள் பாட்டி! 

    தாயும் தந்தையும் தவிர்த்துத்
    தாய் மாமனாட்டம்
    சோம்பேறியாக
    இருந்து விடாதே
    என்றார்கள்
    அக்கம் பக்கத்தினர்!  

    கடைசி பெஞ்சாட்டம்
    அறிவை இழந்து
    முட்டாளாகி விடாதே
    என்றார் ஆசிரியர்! 

    ஆனால்
    யாருமே சொல்லாமல்
    எனக்குள் எப்படி
    வந்தது இந்த ஈகைத் திறன்?

    ஒருவேளை
    இந்த உலகமே
    நம்
    கைக்குள்  இருப்பதற்குப்
    பெயர்தான்
    நட்பின் சுவாசமோ !

    ***

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வகையறியாப் பெரியவர்களுக்கு இந்தப் புகைப்படம் ஒரு பாடம் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன். 

    இருப்பதைக் கொடுத்திடும் பழக்கமது
    இளமை முதலே வரவேண்டும்,
    உருப்படும் வழியிதை உணர்ந்தேதான்
    உள்ளதைப் பகிர்ந்தே உண்ணுவதின்
    பெருமை தெரிந்தோ தெரியாமலோ
    பிள்ளைகள் பிறர்க்குக் கொடுக்குமிந்த
    அருமை யான பாடமதை
    அறிந்து கொள்வீர் பெரியோர்களே…!

    ***

    பத்து வயதுவரை அண்ணன் தம்பியாய் அன்புகாட்டி வந்தோர், இருபது வயதில் எதிரிகளாய், வெறும் பங்காளிகளாய் மாறும் அவலம் என்று ஒழியும்? என வேதனையோடு வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன். 

    பாசமும் அன்பும்
    பகிர்ந்துண்ணும்
    பழக்கமும்
    பத்து பதினந்துவயதுவரை
    அண்ணனுக்கும் தம்பிக்கும்
    இருபது வயதானால்
    இருப்பதை இருகூறாக
    உருக்குலைக்க போராட்டம்
    பங்காளிகளுக்குள்
    ஒருவனை ஒருவன்
    கருவறுக்க கத்தித்தேடுவதும்
    புத்தியைத்தீட்டுவதும் வாடிக்கைதான்
    ஒற்றுமையே உயர்வு தரும்
    பெற்றோர் சொல் கேட்பீரோ ?
    உற்ற உறவையும்
    கற்ற கல்வியையும் காற்றில் பறக்க விடுவீரோ? யாரறிவார்?

    ***

    சிறப்பான கருத்துக்களைக் கவி முத்துக்களாய்க் கோத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் காண்போம்!

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்ட லரிது
    என்பது வள்ளுவம்.

    இள வயதிலேயே பகுத்துண்ணும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் பெற்றோர் பழக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் நயனுடையோராய், பயன்மரமாய்ப் பின்னாளில் திகழ்வர்.

    ’கொடுப்போர்க்கும் இன்பம்; கொள்வோர்க்கும் இன்பம் என்பது அன்பில் மட்டுமே சாத்தியம்; கொடுக்கக் கொடுக்கக் குறையாது, மேலதிகமாய்க் கிடைப்பதும் அன்பு ஒன்றிலேயே நிகழும் அதிசயம்’ என அன்பெனும் அருங்குணத்தை நாவாரப் புகழும் பாவொன்று!

    அன்பின் கோப்பையை
    ஏந்தும் முகமும்
    அன்பின் பகிர்வை
    ஏற்கும் முகமும்
    எத்தனை கூடுதல் அழகு…!

    விரியும் கைகளைக்
    காணும்
    கண்களும் விரிய
    எல்லையற்று விரிகிறது
    அன்பின் பசும்புல் வெளி! 

    கொட்டிவிடக் கூடாதென்ற
    கவனமும் எச்சரிக்கையும்
    கைகளில் ஏந்தும் தின்பண்டத்திற்கு மட்டும்தான்
    நட்புறவில் தழைக்கும் இன்பத்தில்
    கொட்டோ கொட்டென்று
    கொட்டிக் கொண்டிருக்கிறது அன்பு! 

    ஏனெனில்,
    செலுத்தினால் மேலதிகம்
    திரும்பப் பெறும் இடம்
    அன்பின் அகம்!

    ஈகையின் சிறப்பை, அன்பின் அருமையை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் திரு. எஸ். வி. வேணுகோபாலன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (64)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13250479_1014287985292067_1958466254_n

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 63-இன் முடிவுகள்!

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. போட்டிக்கான படமாக இதனைத் தெரிவுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

    monkeys

    குரங்குகளின் இயல்பை கவனித்தால், தாய்க்குரங்கு குட்டியைச் சுமந்து செல்லும் வழக்கமில்லை. மாறாகக் குட்டிதான் தானாக முயன்று தாய்க்குரங்கைக் கட்டிக்கொள்ளும். குரங்குகளின் இவ்வியல்பை ஒட்டி எழுந்ததே வைணவத்தின் (வடகலையார் பின்பற்றும்) ’மர்க்கட நியாயம்.’ இதன் பொருளாவது: இறைவனை அடைய (மானுட) ஆன்மாக்கள்தாம் முயலவேண்டும்; இறைவனே நம்மை வலிய ஆட்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

    இதோ இந்தப் புகைப்படத்தில் தாய்க்குரங்கும் அதனை அணைத்துக்கொண்டிருக்கும் குட்டிக்குரங்கும் ஆவலோடு எதையோ உற்றுநோக்கிக்கொண்டிருப்பதுபோல் காண்கிறதே! (ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் யாரையேனும் விந்தையோடு நோக்கிக்கொண்டிருக்கின்றனவோ?!)

    சரி…போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைச் சற்று கவனித்துவருவோம்!

    ***

    மரங்களை அழித்து இயற்கையை முடமாக்கும் மானுடனைக் குறிப்பாய்ச் சாடுகின்றது திருமிகு. ஹிஷாலியின் கவிதையில் குரல்கொடுக்கும் குரங்குக்குட்டி! 

    அனுதினமும் நேசிக்கும்
    என் தாயிக்கு
    எப்படித் தெரியும்
    அடுத்த தலைமுறைக்கு
    இந்த மரக்கிளை
    சொந்தமில்லை என்று!

    ***

    இனி நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    மரத்தின் உச்சிக்கிளையில் அச்சத்தோடு அமர்ந்தபடி மருண்டுநோக்கும் மந்தியும், அதனை அணைத்தபடி அமர்ந்திருக்கும் கல்லா வன்பறழும் (குரங்குக்குட்டி), மனிதர்களின் தொடர்பே வேண்டாமென்றுதான் அவ்வாறு அமர்ந்திருக்கின்றன என்று இந்த மர்க்கடங்களின் செய்கைக்கு நியாயம் கற்பிக்கின்றது ஒரு கவிதை!

    தாய்மை யென்பது தலைமைவரம்,
    தலையது அதனைக் குனியவைக்கும்
    வாய்மையைக் காட்டிட வந்ததுவோ
    வழியி லுள்ள குப்பையுடன்
    வாய்மெய் விறைத்த பிள்ளையுடல்,
    வேண்டாம் மனிதன் தொடர்பென்றே
    தாய்சேய் குரங்குகள் தனியேதான்
    தாவி அமர்ந்ததோ மரத்தினிலே…! 

    மரத்தினில் அமர்ந்திருக்கும் கவிகளுக்கென (குரங்குகளுக்கு) இந்தக் கவியை வடித்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். படக்கவிதைப் போட்டியில் வாராவாரம்  பேரார்வத்தோடு பங்களிப்பு செய்துவரும் அவருக்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (63)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13140725_1010192735701592_721942733_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share