Tag: தமிழ்நேசன் த. நாகராஜ்

  • தமிழா என்று மாறுமோ இந்த நிலைப்பாடு…..

    தமிழ்நேசன் த.நாகராஜ்

    05d125a3-aa99-4bc7-ade1-bb3e5203368d

    அவமானம் அவமானம்
    தமிழுக்கும் தமிழனுக்கும்
    அவமானம்!

    பரிகாசம் பரிகாசம்
    வந்தேரிகள் வந்திங்கே
    பரிகாசம்!

    அன்று
    நம் மாமன்னர்கள் ஆட்சியிலே
    தமிழ் மரபு காத்த நாடு..!

    இன்று
    வந்தேரிகள்ஆட்சியினால்
    தமிழ் அடங்கியிருக்கும் நாடு..!

    பார் புகழும் வண்ணம்
    நம் தமிழர் வாழ்ந்த
    அருந்தமிழ்நாடு..!

    வஞ்சகர்களின் வஞ்சகத்தால்
    வாய்ப்பிழந்தும் வாழ்விழந்தும்
    தவிக்கும் தமிழர்நாடு..!

    தூயத்தமிழை இழந்த நாடு
    தூய்மை தமிழனையும்
    இழந்த நாடு..!

    வீரத்தமிழ் சிங்கங்கள் வளர்ந்த நாடு
    முத்தாக முத்தமிழ் சங்கத்தினை வளர்த்த நாடு..!

    வரைப்படத்தில் மட்டுமினி தமிழ்நாடு
    வழக்கத்தில் ஏனோ மாற்றம்
    அயல்நாடு..!

    ஒடுங்கியிங்கே போனதே
    நம் பண்பாடு
    மாறுவதென்றோ
    இந்த நிலைப்பாடு..!

    தமிழா ! மாறுவதென்றோ
    இந்த நிலைப்பாடு..!

    – தமிழ்நேசன்”

    Share
  • தமிழா தமிழா…தமிழ் பேசு!

    -தமிழ்நேசன் த.நாகராஜ்

    தமிழா தமிழா…தமிழ் பேசு!
    அழகாய்க் கனிவாய்த் தமிழ் பேசு
    அரும்பெரும் ஊற்றாய்த் தமிழ் பேசு
    அழிவில்லாத் தமிழில் நீ பேசு
    அறிவொளியாக மிளிரத் தமிழ் பேசு    tamila tamila

    உணர்வாய் உயிராய் தமிழ் பேசு
    உண்மைத் தன்மையில் தமிழ் பேசு
    ஊழிவெல்லத் தமிழில் நீ பேசு
    உன் திறமைகள் வளர்த்திடும் தமிழ் பேசு

    பாரதி எழுச்சியுடன் தமிழ் பேசு
    பாவலர் எழுதியளித்த தமிழ் பேசு
    பழியில்லாத் தமிழில் நீ பேசு
    பலசிறப்பு உனக்களிக்கும் தமிழ் பேசு

    வள்ளுவன் குறளாய்த் தமிழ் பேசு
    வற்றாத நேசிப்புடன் தமிழ் பேசு
    வழி தந்த தமிழில் நீ பேசு
    வண்ணமாய் ஒளிரவே தமிழ் பேசு

    தீண்டாமையை ஒழித்த தமிழ் பேசு
    தீவாய் நீவாய்த் தமிழ் பேசு
    தீக்கதிராய்த் தமிழில் நீ பேசு
    தீங்கனியின் இனிமையாய்த் தமிழ் பேசு

    தமிழா தமிழா…தமிழ் பேசு!!

     

    Share
  • துளி பா!

    – தமிழ்நேசன் த. நாகராஜ்

    வாக்குச் சீட்டு
    தவணை முறையில்
    நாட்டைக் கொள்ளையடிக்கத்
    தன்மானத்தை இழந்து
    மக்கள் எழுதித் தந்த
    அனுமதி சாசனம்!

    ***

    வாக்குச் சேகரிப்பு
    கோடிகளைச் சுருட்டுவதற்கு
    முன்னோட்டமாக
    உன் கோவணத்தையும்
    கேட்கிறான் பிச்சையாக!

    ***

    சாதீ
    நம்மைப் பிரிக்கும் முன்
    தீயிட்டு எரிக்கப்பட
    வேண்டிய தீ!

    ***

    மீசை
    ஆடவனின் கம்பீரம்
    வீரத்தின் அடையாளம்!

    ***

    பணம்
    கருவறையில் துவங்கிக்
    கல்லறை வரையிலும்!

    ***

    நட்பூ
    உள்ளங்கையில்
    உறவான வாசனை
    பூக்களின் உன்னதம்!

    ***

    அம்மா
    அன்பின் விலாசம்
    மூன்றெழுத்தில்!

    ***

    நகைக்கடைப் பணிப்பெண்
    ஏழை விட்டில்
    பிறந்தாலும் கையில்
    விதவிதமான நகைகள்!

    ***

    இடி மின்னல்
    நீலவானத்தையே
    முட்டிப் பிளக்கும்
    இரட்டைக் குழல் துப்பாக்கி!

     

    Share
  • யார் நாளைய கலாம்…?

    -தமிழ்நேசன் த.நாகராஜ்

    பாருங்கள் மாணவர்களே!
    இங்கேதான்
    மாணவராய் விதையானவர்
    விஞ்ஞானியாய் விருட்சமானார்!    kalaam

    பாருங்கள் சிந்தனையார்களே!
    இங்கேதான்
    சீர்மிகு சிந்தனைவாதி
    சிந்திக்கிறார்!

    பாருங்கள்  சாதிப்பவர்களே!
    இங்கேதான்
    சாலச்சிறந்த சாதனையாளர்
    சாதிக்கிறார்!

    பாருங்கள் அறிவியலார்களே
    இங்கேதான்
    அறிவுமிகு ஆராய்ச்சியாளர்
    ஆராய்ந்து கொண்டிருக்கிறார்!

    பாருங்கள் கல்வியாளர்களே!
    இங்கேதான்
    கனம்பொருந்திய கற்பிப்பாளர்
    கற்பிக்கிறார்!

    பாருங்கள் தமிழர்களே!
    இங்கேதான்
    தாய்மொழி நேசர்
    தமிழை நேசிக்கிறார்!

    பாருங்கள் தாயகப் பற்றாளர்களே!
    இங்கேதான்
    மேதகு அய்யா ஆ.பா.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்
    தன்னைத் தாய்நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்!

    வாருங்கள் நாமும் அவர் வழியில் கனவுகள் காண்போம்
    கூறுங்கள் இளைஞர்களே உங்களில்
    யார் நாளைய கலாம்…?

     

    Share
  • தாயின் மனமும் தமிழும் ஒன்றே!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    தமிழா நீ…
    தமிழோடு நிமிர்ந்து நின்றாலே
    தமிழ் இமயத்தைத் தாண்டி நின்றிடுமே
    பிறமொழி வேடம் அணிந்தாலே                            tamil mella sagathu
    உன்மொழித் திறனே அழிந்திடுமே!

    சிறுதுளியல்லவே நீ உடனே உலர்ந்துவிட
    விடாமல் பொழியும் அடைமழை நீ…!
    சிறுஏணியல்லவே நீ  ஏறிமிதிபட
    ஏறவே தயங்கும் எரிமலை நீ…!

    வெற்று ஓசையல்லவே நீ ஓய்ந்துவிட
    பற்றி வானத்தையே பிளந்திடும் பேரிடி நீ…!
    சுடரல்லவே நீ அணைந்துவிட
    சுட்டெரிக்கும் சூரியன் நீ…!

    தமிழ் மெல்லச் சாகாது
    நீ அன்னிய மொழியை நினைந்து
    அன்னைத் தமிழை மெல்லமறந்தாலே
    அமைதியாய்ச் சாகும்!

    தாயின் மனமும் தமிழும் ஒன்றே
    தரம் பாராமல் நீ கண்ணாய்ப் பார்த்தாலே
    உன்னைப் பொன்னாய்க் காத்திடுமே!

    வாழ்க தமிழ்!

     

    Share
  • மரு-மகள்!

    – தமிழ்நேசன் த.நாகராஜ்

    திரு – மழலையாகப் பிறந்து
    திரு – செல்வியாக வளர்ந்து
    திரு – மதியாக வீடு புகுந்த
    குல – மகள் என் தாய் கண்ட
    மரு – மகள்!

    Share
  • என் அருமை மனைவி!

    -தமிழ்நேசன் த.நாகராஜ்

    என் அருமை மனைவி!
    அன்பின் ஆழம் நீ
    ஆவலின் ஆதிக்கம் நீ
    இதயத்தின் இயல் இசை நீ
    ஈடில்லா இயக்குநர் நீ
    உண்மையில் வியப்பு நீ
    ஊடலின் வார்ப்பு நீ
    எரிகின்ற தீபம்  நீ
    ஏற்றிவிடும் ஏணி நீ
    ஐயத்திற்கு இடம் தரா(த) பெண்மை நீ
    ஒப்பனைகள் எதுவும் இல்லா அசல் நீ
    ஓசையில் ஒளிந்திருக்கும் ஓவியம் நீ
    ஒளடதத்தின் சுய நிர்ணயம் நீ
    அக்கறையில் ஆணிற்கு இன்னுமோர் அன்னை நீ
    என் அருமை மனைவி!

     

    Share
  • சுதந்திரக் கொடிபிடித்த தமிழ்ச் சிறுவனின் மனதுக்குள்!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    அன்று பார் புகழ வாழ்ந்த இனம்
    இன்று வஞ்சகத்தால் சூழ்ந்த இனம்!
    அன்று பார் ஆண்ட மன்னன் இனம்
    இன்று  நாதியற்று போன இனம்!
    எந்த இனமும் தந்திராத
    பல சொந்த உயிர்கள் தந்த இனம்!

    இந்திய நாட்டுக்குள் வாழ்ந்தாலும்
    சிறு மாநிலத்தில் சுருங்கிய இனம்!
    அணு உலையேனும் ராட்சசனைச்
    சிறு சலனத்தோடு ஏற்ற இனம்
    ஆழ்துளையிடும் மீத்தேனைப் பற்றி
    அறியாமல் அனுமதித்த இனம்!

    ஒரு பசுவைக் கொன்றால்கூடப் பதறியெழும் நாட்டில்
    இருபது  உயிர்களைச் சுட்டுக்கொன்ற வஞ்சகத்தை
    வாய்மூடிப் பார்த்த  இனம்!
    தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்லை
    நமக்கு முல்லைப் பெரியாறில் பங்கும் இல்லை!

    எம் மாநிலத்தில் ஆங்காங்கே வெளிச்சம் இல்லை!
    தயாரித்த எங்களுக்கே போதிய மின்சாரம் இல்லை!
    தமிழகத்தில் காவிரி நதியின் ஓட்டம் இல்லை!
    அதைக் கேட்க இந்தியாவிற்குத் தமிழன் மேல் நாட்டம் இல்லை!

    கடல் கடந்து தமிழ் இனம் அழிந்த போது
    அதை நிறுத்தவோ தடுக்கவோ முயலவில்லை!
    கடல் நடுவே சுடப்பட்டு உயிர் இழக்கும்
    நமது தமிழ் மீனவரைக் காக்கவும் முன்வரவில்லை!

    நம்முடைய கச்சத்தீவை எவர் வசமோ தந்து விட்டு
    அதை காக்க நீர்முழ்கிக் கப்பல்களைத் தந்த தேசம்!
    சொந்த நாட்டுத் தமிழ்மக்களைக் கொன்று ஒழிக்க
    அண்டை நாட்டுக்கு ராணுவத்தைத் தந்த தேசம்! சர்வதேச மாமன்றத்தின் போர்க்குற்றத் தீர்மானத்தில் கூடத்
    தமிழர்களுக்கு ஆதரவு தராமல் மவுனம் காத்த தேசம்!!

    இப்படித் தமிழனை அழித்த இந்த தேசத்தின்
    இந்தச் சுதந்திரக் கொடியினை நாம் தீண்டலாமா?
    என்று எண்ணுகிறானோ அந்தத் தமிழ்நாட்டுச் சிறுவன்?

     

    Share
  • அம்மா…!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    பத்து மாதம்  சுமந்தவளே
    பத்தியம் இருந்து காத்தவளே
    உதிரத்தை உணவாகக் கொடுத்தவளே   amma
    பார்த்துப்  பார்த்து வளர்த்தவளே
    அன்பையும் பண்பையும் தந்தவளே!

    உயராத செல்வத்தால் எனைக் காக்க
    அயராது உழைத்தவளே
    ஆதிசக்தியாய் எனக்குக்
    காட்சியளித்தவளே
    அம்மா! என்றும் நீ என்னவளே!

    அன்று உனது முந்தானை
    தந்த – நிம்மதி…
    இன்று அந்தச் சிந்தனையும்
    தருகிறதே – அம்மா!

     

    Share
  • நம்பிக்கை

    தமிழ்நேசன் த.நாகராஜ்

    பெற்றெடுத்துப் பெயரிட்டு
    அறிவும் அழகும் அடையாளமாக்கிப்
    பெருவாழ்வு தந்த
    தாய் தந்தையை
    உதறி விட்டு…
    உனது கடைக்கண் பார்வையில்
    தனது கடைநிலையை இழந்து காதலில் விழுந்து…
    உன் ஆண்மையில் தஞ்சம்
    அடையும் பெண்மையும்…
    உன் பெண்மையில் தஞ்சம்
    அடையும் ஆண்மையுமே…
    ’நம்பிக்கை!’

    Share
  • யார் சொல்வது? தமிழா யார் சொல்வது?

    -தமிழ்நேசன் த.நாகராஜ்

    பார் புகழும் பல தமிழர் வாழ்ந்த மண் இது!
    அதை நீ அறியாமலே இருந்துவிட்டால்
    யார் சொல்வது ?
    உன் குழந்தைக்கு                                                                tamil kid
    யார் சொல்வது ?

    மனித மேம்பாடும் பண்பாடும் கொண்ட மொழி இது!
    அதை நீ உணராமலே இருந்துவிட்டால்
    யார் சொல்வது ?
    உன் குழந்தைக்கு
    யார் சொல்வது ?

    பல்வேறு திட உணவு முறையைக் கண்டு தந்த இனம் இது!
    அதை நீ ருசிக்கவே மறந்துவிட்டால்
    யார் சொல்வது ?
    உன் குழந்தைக்கு
    யார் சொல்வது ?

    இன்று கற்பனையும் காணாத கட்டுமானத்தை அன்றே
    நமது பாட்டன் பூட்டன் கட்டியதை
    யார் சொல்வது ?
    உன் குழந்தைக்கு
    யார் சொல்வது ?

    வீரத் தீரக் கலை அறிவைக் கற்றுத்தந்த இனம் இது!
    அதை நீ பதம் பார்க்கவே நினைக்கா விட்டால்
    யார் சொல்வது ?
    உன் குழந்தைக்கு
    யார் சொல்வது ?

    யார் சொல்வது ?
    தமிழா
    யார் சொல்வது ?

    இன்பத் தமிழ்மொழி  நமது உயிர் மூச்சாகும்
    அதை அறியாமல் மடியாதே என
    நான் சொல்கிறேன்
    தமிழா
    நான் சொல்கிறேன்!
    வாழ்க தமிழ்!

     

    Share
  • முயன்றால் தொட்டுவிடலாம்!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    வானத்தை எட்டிப்பிடிக்க முயன்றால்
    மேகத்தைத்  தொட்டுவிடலாம்
    ஆம்! தொட்டதால்தான்                                        tamilnesan
    வெயில் மழையின் முன்அறிவிப்பு!

    சூரியனை எட்டிப்பிடிக்க முயன்றால்
    சந்திரனைத் தொட்டுவிடலாம்
    ஆம்! தொட்டதால்தான்
    சந்திரனில் மனிதன் கால்தடம்! (more…)

    Share
  • நீயே தமிழ்த் தாயே!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    உன்னை நினைத்து
    நான் கடக்க…

    சிலர் என்னையும்                                              Tamizh Annai
    நினைத்தார்
    அந்த நினைப்பில் நீயே – தாயே!

    உன்னை  பற்றிப் பேச
    நான் தகிக்க…

    பலர் என்னையும்
    பற்றிப் பேசினார்
    அந்தப் பேச்சு நீயே – தாயே!

    உன்னைச் சிறப்பு என்று
    நான் துதிக்க…

    சிலர் என்னையும்
    சிறப்பு என்றார்
    அந்தச் சிறப்பு நீயே – தாயே!

    நீ தந்த வழித் தடத்தில்
    நான் நடக்க…

    எனது வாழ்க்கைத்
    தடமேல்லாம் நீயே – தமிழ்த் தாயே!

     

    Share
  • தமிழா… நீ!!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    விழிப்பதற்கே உறக்கம்
    மது குடித்துத் குடித்து உறங்கியே கிடக்கிறாயே..?

    வெல்வதற்கே தோல்வி
    மது மயக்கத்தில் இருந்தால் தோல்வியே நிலைத்துவிடாதா..?

    எழுவதற்கே வீழ்ச்சி
    நடைபாதையிலே விழுந்து எழுந்து வீழ்ச்சியே விருப்பமென்றாயே..?

    மது உறக்கத்தினை உதறி…
    மயக்கத் தோல்விதனைத் துரத்தி…
    விழும் வீழ்ச்சிதனை விரட்டி…
    விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!
    விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!

    உன் வாக்கால் வென்றது பல கட்சி
    ஆனால்…
    உனது வீட்டிலோ துடித்து அழுகிறாளே தமிழச்சி!
    மதுவிலக்கு மது-விலக்கு
    உன் வீட்டில் இருப்பாள் அழகாய் உன் குலவிளக்கு!

     

    Share