தமிழா என்று மாறுமோ இந்த நிலைப்பாடு…..
தமிழ்நேசன் த.நாகராஜ்
அவமானம் அவமானம்
தமிழுக்கும் தமிழனுக்கும்
அவமானம்!
பரிகாசம் பரிகாசம்
வந்தேரிகள் வந்திங்கே
பரிகாசம்!
அன்று
நம் மாமன்னர்கள் ஆட்சியிலே
தமிழ் மரபு காத்த நாடு..!
இன்று
வந்தேரிகள்ஆட்சியினால்
தமிழ் அடங்கியிருக்கும் நாடு..!
பார் புகழும் வண்ணம்
நம் தமிழர் வாழ்ந்த
அருந்தமிழ்நாடு..!
வஞ்சகர்களின் வஞ்சகத்தால்
வாய்ப்பிழந்தும் வாழ்விழந்தும்
தவிக்கும் தமிழர்நாடு..!
தூயத்தமிழை இழந்த நாடு
தூய்மை தமிழனையும்
இழந்த நாடு..!
வீரத்தமிழ் சிங்கங்கள் வளர்ந்த நாடு
முத்தாக முத்தமிழ் சங்கத்தினை வளர்த்த நாடு..!
வரைப்படத்தில் மட்டுமினி தமிழ்நாடு
வழக்கத்தில் ஏனோ மாற்றம்
அயல்நாடு..!
ஒடுங்கியிங்கே போனதே
நம் பண்பாடு
மாறுவதென்றோ
இந்த நிலைப்பாடு..!
தமிழா ! மாறுவதென்றோ
இந்த நிலைப்பாடு..!
– தமிழ்நேசன்”